நிதர்சனக் கனவோ நீ : 15

4.7
(41)

அத்தியாயம் – 15

பைக்கில் அவன் பின்னால் அமர்ந்திருந்தவளுக்கோ, இன்னுமே நிலை கொள்ள முடியவில்லை.

எந்த நம்பிக்கையில் என்னை இவனோடு அனுப்பி வைத்தனர்?

முழு நேரமும் விறைப்பாக சுற்றும் இவன் தான் என்னிடம் சிரித்து பேசி கவிதை உரைத்தானா? என்று எண்ணும் போதே தலையோ விண் விண்ணென்று வலிக்க ஆரம்பித்து விட்டது.

இவன் என் கணவன் என்று நித்தமும் மனதில் பதிய வைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று மட்டும் சிந்தித்து கொண்டவள் அறியவில்லை அவளால் மறக்க முடியாத அளவுக்கு அவள் மனதில் ஆழமாக பதியப் போகின்றான் என…

நெற்றியை அழுத்தி விட்ட படி அமைதியாக வந்தவள் அவனது குரலில் தான் சுயத்திற்கு வந்திருந்தாள்.

சுற்றிலும் விழிகளை சுழல விட்டாள்.

அழகாகவும் செழிப்பாகவும் வளர்ந்து இருந்த சோளக் காடு.

அதற்கு நடுவில் ஓர் அழகான மரத்தாலான வீடு.

அவள் இருந்த மனநிலையில் அந்த சூழல் சற்றே இதத்தை அளிப்பது போல இருந்தது.

வீட்டின் அழகைப் பார்த்துக் கொண்டே “யாரோட வீடு?” என்று தன்னையே அறியாமல் அந்த கேள்வியை அவனிடம் கேட்டு இருந்தாள்.

அவளின் கேள்வியில் முன்னே சென்றவன் நடை தடைப் பட, சட்டென “என் வீடு தான்” என்றான்.

அவனது வீடா? இது எப்படி சாத்தியம்? என்று அவள் மனதில் கேட்டுக் கொண்டது அவளின் விழிகளில் தெரிந்த வியப்பில் புரிந்துக் கொண்டவனாய் “ பிஎஸ்சி அக்ரிகல்ச்சர் படிச்சு இருக்கேன் அதாச்சும் தெரியுமா?” என்று கேட்க, அவளோ ‘ஆத்தி இவன் படிப்ஸ் ஆஹ் அப்புறம் எதுக்கு சைக்கோ போல நடந்துக்குறான்’ என்று நினைத்துக் கொண்டே அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்.

இதழ் குவித்து ஊதிக் கொண்டே “படிக்கும் போதே எனக்கு ஸ்காலர்ஷிப்ல கிடைச்ச பணத்தை எடுத்து எனக்கு பிடிச்ச போல வீடு கட்டிகிட்டேன்” என்றான்.

அவன் அமைதியாக தனக்கு பதில் கூறுவதை தான் இமைக் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தவள் “அத்தை மாமாவுக்கு தெரியுமா?” என்று அவள் கேட்க…

அந்த இதமான சூழலில் அவன் மனம் சமன் பட்டதால் என்னவோ அமைதியாக பேசிக் கொண்டு இருந்தவன் இப்போது அவள் கேட்ட கேள்வியில் அனைத்தும் ஞாபகம் வந்தவனாய் முறைத்து விட்டு உள்ளே செல்ல…

அவனின் முறைப்பிலேயே அவர்களுக்கு சொல்லாமலா இருந்திருப்பான் என்ற எண்ணம் தோன்ற ‘ஹையோ வேதாளம் மறுபடி முருங்கை மரம் ஏறிடுச்சு. அடக்கிவாசி ஆஹி’ என்று மனதில் புலம்பிக் கொண்டே அமைதியாக அவன் பின்னால் உள்ளே சென்று இருந்தாள்.

மரத்தால் வேயப்பட்ட அழகான இருதட்டு வீடு.

கீழே இரண்டு அறையும் மேலே பால்கனியுடன் கூடிய ஒரு அறையும் இருந்தது.

“மேல என் ரூம். சோ நீ கீழ இருக்க இந்த ரூம்ல எதாச்சும் ஒன்னை யூஸ் பண்ணிக்கோ” என்ற விபீஷனின் குரலில் “ம்ம்” என்ற படி கீழே இருக்கும் ஒரு அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

அவனோடு வாழ்க்கையை ஆரம்பிக்க தனக்கு இன்னும் சிறிது காலம் வேண்டும் என்று அவனிடம் எப்படி கேட்பது என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டு வந்தவள் அவனே வேறொரு அறையில் தங்க சொல்லவும் முகம் மலர்ந்து விகர்சித்தது.

முதல் முறை அவனை பற்றிய நல்லெண்ணம் மனதில் முளையிட்டது.

அறையின் உள்ளே வந்தவள் அங்கு எங்கும் நிறைந்து இருந்த பிரம்மாண்டத்தைப் பார்த்து சிலையாக நின்றாள்.

‘பரவால்ல ரசனை கூட இருக்கு’ என்று சொல்லிக் கொண்டே தன்னை சுத்தப் படுத்திக் கொள்ள குளியலறையைத் தேடினாள்.

“ஐயோ!” என்று சொல்லிக் கொண்டே அறையை விட்டு வெளியில் வந்தவள் பார்த்தது என்னவோ, போன வேகத்தில் மாடிப் படிகளில் இறங்கி வந்த விபீஷனைத் தான்.

தன்னையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தவளை பார்த்தவன் “என்ன வேணும்?” என்று கேட்டான்.

“குளிக்கணும்” என்றாள் வேறெங்கோ பார்த்துக் கொண்டே…

“என் கூட வா” என்றவன் வெளியில் செல்ல…

அவனை பின் தொடர்ந்து சென்றவள் அவன் கை காட்டிய திசையை பார்த்தவளுக்கு விழிகள் இரண்டும் பெரிதாக விரிந்துக் கொண்டன.

“இங்க யாரும் வர மாட்டாங்க சோ நீ அங்க குளிக்கலாம் என்றவன் நான் சமைக்க ஏதாச்சும் வாங்கிட்டு வரேன்” என்று சொல்லிக் கொண்டே பைக்கில் ஏறி கிளம்பி இருந்தான்.

போகும் அவனை பெரு மூச்சுடன் பார்த்தவள் தன் அறைக்குச் சென்று உடைகளை எடுத்துக் கொண்டு நேரே கிணத்தடிக்கு வந்தாள்.

கிணற்றின் அருகே இருந்த திட்டில் உடையை வைத்து விட்டு மயான அமைதியாக இருந்த கிணற்றின் உள்ளே எட்டிப் பார்த்தாள்.

ஆழமான கிணறு போலும்.

பார்க்கவே தலை சுற்றியது.

“அவனை போலவே பயங்கரமா இருக்கு” என்று சொல்லிக் கொண்டே பயத்தில் பின்னோக்கி வந்தவள் மீண்டும் எட்டி பார்த்தாள்.

“வேற வழியே இல்ல. உன் விதி இங்க தான் போல” என்று சொல்லிக் கொண்டே நீரும் சற்று குறைவாக அடி ஆழத்தில் இருக்க, சற்று சிரமப்பட்டு நீரை அள்ளி எடுத்து அருகில் உள்ள தொட்டியில் நிறைத்தவள் சுற்றும் முற்றும் பார்த்தவள் குளிக்க ஏதுவாக ஓர் உடையை அணிந்துக் கொண்டு அவன் வரும் முன்னரே வேகமாக குளிக்க ஆரம்பித்தாள்.

சற்று நேரத்தில் குளித்து விட்டு ஆடைகளை மாற்றிக் கொண்டே வீட்டின் உள் வந்தவளுக்கு பசியில் வயிறு கிள்ள, “வில்லங்கம் போய் ஒன் ஹவர் ஆச்சு. இன்னும் காணலையே” என்று சொல்லிக் கொண்டே ஹாலோடு ஒட்டிய சமையலறைக்குள் சென்று பார்த்தாள்.

அதுவோ துடைத்து வைத்தது போல சுத்தமாக இருக்க, “ஒரு ஃப்ரிட்ஜ் கூடவா இல்லை. சுத்தம்…” என்று சலித்த படி சமையலறை கட்டின் கீழே குனிந்து பார்த்தவளுக்கோ தலையை சுற்றிக் கொண்டு வந்தது.

“ஆத்தி… இவ்வளவு பாட்டில்ஸ் வச்சு இருக்கானே! சரியான குடி காரன்” என்று திட்டியவள் எழுந்து வந்து மணியைப் பார்த்தாள்.

மணியோ மாலை ஐந்தைக் கடந்து இருக்க, ‘இவன் வர்றதுகுள்ள பசில செத்துடுவேன் போல’ என்று எண்ணிக் கொண்டே வெளியில் வந்தவள் எதாவது கிடைக்குமா என்று பார்த்த மாத்திரத்திலேயே “ஆஹா.. இவ்வளவு சோளத்தை வச்சிட்டு நான் என்ன கிடைக்குமோனு யோசிச்சி இருக்கேன்” என்று தலையில் தட்டிக் கொண்டவள் அக் காட்டிற்குள் இறங்கி  சோளக்கருதுகளை சேகரித்தவள் சற்று நேரத்திலேயே அதனை சுத்தப் படுத்தி விட்டு தண்ணீரில் போட்டு ஸ்டவ்வில் வைத்து விட்டு அலைபேசியை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

நீண்ட நேரம் அலைபேசியை பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கோ, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது ஏதோ போலிருக்க, நுழைவாயிலை பார்த்தாள் இன்னும் அவன் வந்தபாடு தான் இல்லை.

ஒரு பெரு மூச்சுடன் திரும்பி மீண்டும் சமையலறைக்குள் செல்லப் போனவள் நடையோ தடை பட, அவளின் துள்ளல் மனதோ ‘மாடில அப்படி என்ன தான் இருக்குன்னு போய் பார்த்திட்டு வா’ என்று சொல்ல…

தன் மனம் கூறிய விடயத்தில் அரண்டு போனவள் “சாத்தான் வந்துடுச்சுனா?” என்று அவளே தனக்கு தானே கேட்டுக் கொள்ள, ‘வந்தா பார்த்துக்கலாம் போ… போய் என்ன தான் இருக்குனு பாரு’ என அவள் மனம் வாதிட “ஓகே ஓகே போறேன்” என்று சொன்னவள் வேகமாக சமையலறைக்குள் சென்று ஸ்டவ்வை ஆப் செய்து விட்டு அவனது அறையை நோக்கி மேலேறி சென்று இருந்தாள்.

அங்கு சென்றதால் அவளின் உயிர்ப்பே மொத்தமாக தொலையப் போகின்றது எனத் தெரிந்து இருந்தால் சென்றிருக்க மாட்டாளோ என்னவோ!

விதியின் சதியை யாரால் மாற்ற முடியும்?

அவனது அறையைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவளுக்கு ஏதோ ஆடம்பர அறைக்குள் வந்ததைப் போல தான் இருந்தது.

அறையெங்கினும் நேர்த்தியாக இருந்தது.

அவன் இல்லாத போது யார் இந்த வீட்டை பராமரிப்பது என்ற கேள்வி அவளுள்…

அறையின் மூலையில் அடுக்கடுக்காக புத்தகங்களை அடுக்கி வைத்து இருந்தான்.

அதன் அருகில் சென்று ஒவ்வொன்றையும் திறந்து வாசித்தாள்.

மனமோ சற்று அமைதியடைந்ததைப் போல இருந்தது.

“அழகா இருக்கே ஹேன்ட் ரைட்டிங்” என்று சொல்லிக் கொண்டே புத்தகத்தை எடுத்த இடத்தில் வைத்து விட்டு அருகில் இருந்த அறையை புருவம் சுருக்கி பார்த்தவள் அதைத் திறந்து பார்த்தாள்.

அதனைத் திறந்து பார்த்தவளுக்கோ அதிர்ச்சியாக இருந்தது.

வேறு என்னவாக இருக்கும்? குளியலறையைப் பார்த்து தான்.

ஆக, இவன் அறையில் குளியலறையை வைத்துக் கொண்டு தான் என்னைக் கீழே குளிக்க சொல்லியிருக்கிறானா?

என்ன மனிதன் இவன்?

அவனின் அறை நேர்த்தியும் வந்தவுடன் அவளை தனி அறையில் தங்கிவிட சொன்னது எல்லாம் வைத்து அவனைப் பற்றி ஓர் நல்லெண்ணத்தை உருவாக்கி இருந்தவளுக்கு இப்போது அனைத்தும் சுக்குநூறாக போனது.

வீட்டிற்குள் குளியலறையை வைத்துக் கொண்டு என்னை வெளியில் குளிக்க வைத்து இருக்கின்றானே என்று நினைக்கும் போதே ஆத்திரமாக வந்தது.

பல்லைக் கடித்து தன்னை சமன் செய்தவள்  கோபமாக அறையை விட்டு வெளியேறும் கணம், முழு போதையில் தள்ளாடிய படி அறைக்கு வந்தவனுக்கு அவளைக் கண்டதும் கோபம் ஏறியது.

“ஹே… உ.. உ.. உன்ன யார்டி என் ரூம்குள்ள வர சொன்னது?” என்று நா குழர சொன்னவன் கண நேரத்தில் அவளைப் பக்கவாட்டு சுவற்றில் சரித்து கழுத்தை பற்றியே விட்டான்.

அவளுக்கோ அச்சத்தில் உடலோ நடுங்க ஆரம்பித்து விட, நெஞ்சம் பதற “வலிக்குது விபீ… என்… என்னை விடுங்க” என்றவள் அவன் பிடியை தளர்த்த போராடினாள்.

அவனா விடுவான்? அவனோ முழு போதையில் “தப்பு பண்ணிட்ட ஆ…ஹித்யா” என்றான்.

“சாரி இனிமேல் வர மாட்டேன். பிளீஸ் என்னை விடுங்க விபீஷன்” என்றாள் மூச்சு திணற…

சட்டென அவனது அறைக்குள் இருந்து அவளது அலைபேசி சிணுங்க, அவளின் கழுத்தில் இருந்து கையை எடுத்தவன் தனது அலைபேசியோ என போதையில் சுற்றம் உணராமல் தன் பாக்கெட்டில் இருந்த அலைபேசியை எடுத்து ஆராய்ந்தான்.

அவனின் கவனம் தன்னிடம் இல்லையென்று உணர்ந்தவள் நொடியும் தாமதிக்காமல் இருமிக் கொண்டே அவனது அறைக்குள் ஓடியவள் புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்த மேசையில் மேலிருந்த தனது அலைபேசியை எடுத்து பார்த்தாள்.

ஜெய் ஆனந்த் தான் அழைத்துக் கொண்டு இருந்தான்.

“மாமா” என்று இதழ்கள் உச்சரிக்க விம்மி வெடித்து அழுதுக் கொண்டே வெளியில் ஓட முயன்றவள் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் “யார் டி ஃபோ… ஃபோன்ல?” என்றான் குழரலாக…

அவளுக்கோ அவன் கையை பிடித்ததும் மொத்தமாக நெஞ்சில் நீர் வற்றியே போனது.

“அம்.. அம்மா தான் நான் பேசிட்டு வரேன்” என்றவள் மறு கையில் இருந்த அலைபேசியை மறைக்க முயல….

“முடியாது. இப்…இப்போ இங்க வச்சு பேசிட்டு போ” என்றானே பார்க்கலாம்.

அவனோ முழு போதையில் ..

அவளோ மெல்லிய பெண்ணவள்.

அவனின் பலத்தின் முன் அவளால் போராட முடியாது என்ற நிதர்சனம் தெள்ளத் தெளிவாக புரிந்துப் போக,  ‘மாமா… மறுபடி எடுத்துறாதீங்க’ என்று மனதுக்குள் பேசிக் கொண்டே கரங்கள் நடுங்க “கால் கட் ஆகிருச்சு இப்போ நானே அம்மாகிட்ட எடுத்து பேசுறேன்” என்றவள் வேகமாக தன் அன்னைக்கு எண்களை அழுத்திக் கொண்டு இருக்கும் போதே மீண்டும் ஜெய் ஆனந்த்திடம் இருந்து அழைப்பு வந்து விட, எதிரே நின்றவனின் வெறித்த பார்வையில் உடலில் வியர்வை ஆறாக வழிந்தது.

“அம்மாவே மறுபடி எடுத்துட்டாங்க” என குரல் நடுங்க சொன்னவளின் அலைபேசியின் திரையை எட்டி பார்த்தவன் ‘ஜெய் மாமா’ என்று அந்த போதையில் தெளிவாக வாசித்தான்.

 

ஜெய் ஆனந்த் என்றால் சும்மாவே சலங்கை கட்டி விட்டது போல ஆடுவான்.

இப்போது அவனே அவளுக்கு எடுத்து இருக்க, அவளின் கால்களோ நகர மறுத்து நடுங்க ஆரம்பித்து விட்டன.

எச்சிலைக் கூட்டி விழுங்கியவள் திகைத்து போய் நிற்க, அவளின் அலைப்பேசியை பறித்து தரையில் விசிறி அடித்தான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 41

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “நிதர்சனக் கனவோ நீ : 15”

  1. Ppaa…. Semma twist dr…. Konjam kooda expect pannala Jai call pannuvanu…. Aahithyaa paavam…. Keep writing… Eagerly Waiting for ur next ud dr ..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!