அவனது பற்தடங்களும் அழுத்தமான பிடியும் மெல்லிய மேனியவளை தோலில் ஆங்காங்கே கன்றிச் சிவந்த காயங்கள் உண்டாக்கி இருந்தன.
விம்மி வெடித்து அழ வேண்டும் போலிருந்தது.
அடக்கிக் கொண்டாள்.
மெதுவாக எழுந்து கீழே கிடந்த தன் உடையை எடுத்து மேனியில் சுற்றிக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து இருந்தாள்.
ஷவரை திறந்து விட்டவள் மேனியில் நீர்த் திவழைகள் பட்டுத் தெறிக்க, அவளுக்கோ மேனியில் அவனால் உண்டான காயங்கள் எரிய ஆரம்பித்தது விட, பல்லைக் கடித்து தொண்டை வரை வந்த அழுகையை கட்டுப் படுத்திக் கொண்ட பெண்ணவள் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வெளியில் வந்தாள்.
இன்னும் அவன் எழவில்லை என்று தெரிந்தது.
மெதுவாகப் படிகளில் கீழிறங்கி தனது அறைக்குச் சென்றவள் கதவைத் தாழிட்டு விட்டு அதில் சாய்ந்து நின்றவள் அழுத்தம் தாழாது வெடித்து அழுதாள்.
தன் கற்பு போய் விட்டதென இன்னமும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை.
அதுவும் அவன் பேசிய வார்த்தைகளை நினைத்துப் பார்த்தவளுக்கு அவனைக் கொல்லும் ஆத்திரம் எழுந்தது.
இங்கிருந்து சென்று விடு என்று மனம் சொல்ல, தனது அன்னையின் முகம் மனக் கண்ணில் தோன்ற, தன் நிலையை அரவே வெறுத்தவள் மெதுவாக நகர்ந்து ஓர் உடையை எடுத்து அணிந்தவள் சென்று கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
இங்கோ, தூக்கத்தில் இருந்து விழித்தவனுக்கோ கொஞ்சம் கொஞ்சமாக நேற்று நடந்தவைகள் யாவும் நினைவுக்கு வர, தூக்கி வாரிப் போட எழுந்து அமர்ந்தவன் சட்டென அருகில் பார்த்தான்.
அவள் இல்லை ஆனால் அவனால் கசங்கிய அவளின் பெண்மையின் சுவடுகள் போர்வையில் இருக்க, குற்ற உணர்வில் தன் தலையை பிடித்துக் கொண்டு எழுந்து உடையை போட்டுக் கொண்டே அறையை விட்டு வெளியில் வந்தான்.
வீடே நிசப்தமாக இருந்தது.
நேரே ஹாலுக்கு வந்தவன் அவளின் அறையின் முன் நின்றுக் கொண்டு கதவை தட்ட கையை ஓங்கிய கணம், என்ன நினைத்தானோ அப்படியே திரும்பி வந்தவன் சோஃபாவில் அமர்ந்துக் கொண்டான்.
போதையில் என்ன செய்து தொலைத்து இருக்கின்றேன்?
நினைக்கவே தன் மீதே கட்டுக்குள் அடங்காத ஆத்திரம் பெருகியது.
தலை வேறு விண்விண்ணென்று வலியைக் கொடுத்தது.
முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டு சற்று நேரம் அப்படியே அமர்ந்து இருந்தவன் அலைபேசி ஒலிக்கும் சத்தத்தில் சுயம் அடைந்து அதனை எடுத்துப் பார்த்தவனுக்கு குற்ற உணர்வு நெஞ்சை அடைத்தது.
வேறு வழி இல்லை பேசி தான் ஆக வேண்டும் என்ற முடிவுடன் அழைப்பை ஏற்றவன் “ஹலோ” என்ற அடுத்த நொடி “டேய் என்னடா பண்ற ஆஹித்யாவோட ஃபோன் வேலை செய்யுது இல்லை அவகிட்ட கொஞ்சம் கொடு உன் அத்தை பேசணுமாம்” என்று சொன்னதும், தான் அவளின் அலைபேசியை தான் உடைத்து நொறுக்கியது மனக்கண் முன் தோன்றியது.
சற்றே தடுமாறிப் போனவன் “அவ குளிக்கிறா மா வந்ததும் போனை கொடுக்கிறேன்” என்று சொல்ல…
“சரிப்பா, என்றவர் சாப்பிட்டியா? “ எனக் குரல் தழுதழுக்க, தன் அன்னை கேட்டதும் தான் அவனுக்கே நிதர்சனம் உரைத்தது. நேற்றில் இருந்து அவள் ஒன்றும் சாப்பிடவே இல்லை அல்லவா!
அது அறியாமல் நான் வேறு! என்று நினைத்தவனுக்கு வார்த்தைகள் வர மறுத்தன.
“ம்ம் என்று ஒற்றை பதிலில் சொன்னவன் அவ வந்த பிறகு கால் பண்றேன் மா” என்று சொல்லி அழைப்பை துண்டித்தவன் நேரே சமையலறைக்குள் நுழைந்தான்.
அங்கோ, அவள் நேற்று அவித்த சோளம் இருக்க… அதைப் பார்த்து புருவம் சுருக்கியவன் செல்ஃபில் நூடுல்ஸ் பெக் இருக்கின்றதா என்று பார்த்தான்.
அவ்விடமோ காலியாக இருந்தது.
நெற்றியை தேய்த்துக் கொண்டே வந்தனுக்கு அவளிடம் நடந்துக் கொண்டதை நினைத்து இன்னுமே அழுத்தமாக இருக்க, அலைபேசியை எடுத்துக் கொண்டு அவள் அறைக்கு முன் நின்று கொண்டு எதனையும் யோசிக்காமல் கதவில் தட்டினான்.
கட்டிலில் படுத்து அழுகையில் கரைந்து கொண்டு இருந்தவள் அவன் கதவினை தட்டவும் அரண்டு போனாள் பெண்ணவள்.
மீண்டும் தன்னை ஆட்கொண்டு விடுவானோ என்ற அச்சம் அவளைத் தொற்றிக் கொண்டது.
மேனி நடுங்க கட்டிலின் ஓரத்தில் வெடவெடத்து போய் ஒடுங்கிக் கொண்டு இருந்தவள் வாயே திறக்கவில்லை.
மூச்சு விட கூட பயமாக இருந்தது அவளுக்கு…
அறைக்கு வெளியே கதவைத் தட்டிக் கொண்டு நின்று இருந்தவனுக்கு பொறுமை போக, “ஆஹித்யா, கதவை திற” என்று சொன்னான்.
அவளுக்கோ நெஞ்சே அடைத்து விட்டது.
அவள் எதுவும் செய்து கொண்டு இருப்பாளோ என்று ஒரு கணம் பதறி போனவன் அவளின் அழுகை சத்தத்தில் அவனே அறியாமல் ஒரு பெரு மூச்சை இழுத்து விட்டுக் கொண்டான்.
விழிகளை மூடித் திறந்து “அத்தை பேசணும்னு சொல்றாங்க சோ போனை சோபால வைக்கிறேன் எடுத்து பேசு” என்றவன் தான் இருந்தால் வெளியில் வர மாட்டாள் என அவளது நிலையை உணர்ந்து தன் அறையை நோக்கி சென்றிருந்தான்.
தன் அன்னை என்றதும் வேகமாக எழுந்துச் சென்று கதவின் தாழில் கையை வைத்து ஒரு கணம் தயங்கியவள் ‘அவன் இருக்கக் கூடாது’ மனதில் நினைத்துக் கொண்டு தாழிட்ட கதவை மெதுவாகத் திறந்தாள்.
ஹாலில் அவன் இருக்கவில்லை.
இழுத்து பெரு மூச்சை விட்டுக் கொண்டே சோபாவை நெருங்கியவள் தன் நடுங்கும் கரங்களால் அவனது அலைபேசியை எடுத்தாள்.
இருக்கும் மனநிலையில் அன்னையுடன் ஒழுங்காக பேசி விடுவோமா என்ற எண்ணம் கூட எழுந்து விட்டது.
சேயை தேடி ஓடும் பிள்ளை போல சென்று மடியில் படுத்து கதறி அழ வேண்டும் போலிருந்தது ஆனால் அடக்கிக் கொண்டாள். நடுங்கும் கரங்களால் அவனது அலைபேசியை எடுத்தவள் தன் அன்னையின் எண்ணிற்கு தொடர்பு கொண்டாள்.
ஒவ்வொரு அழைப்பிற்கும் இதயமோ படு வேகமாக துடிக்க, இடப் புற மார்பை நீவி விட்ட படி தொப்பென சோஃபாவில் அமர்ந்தவள் மறுபுறம் கேட்ட அன்னையின் குரலில் மொத்தமாக நொறுங்கி விட்டாள்.
அவள் படும்பாட்டை மாடியிலிருந்து பார்த்துக் கொண்டு நின்று இருந்த விபீஷனுக்கோ அத்துமீறி நடந்துக் கொண்ட தன்னை நினைத்தே மேலும் மேலும் ஆத்திரமாக வந்தது.
மேலும் அங்கே நிற்க முடியாமல் அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டான்.
நீண்ட நேர அமைதியின் பின் அன்னையின் பதைபதைப்பான குரலில் சுயம் அடைந்தவள் “மா சாரி, உங்களுக்கு கால் பண்ணிட்டு ட்ரெஸ் சேஞ்ச் பண்ண போய்ட்டேன்” என்று வாய்க் கூசாமல் பொய் உரைத்தாள்.
அவள் தெளிவான குரலைக் கேட்ட பின்பே அமைதியான வித்யா “விபீ ஒழுங்காக பார்த்துக்குறான் தானே மா” என்று கேட்க…
தொண்டையை அடைத்த அழுகையை வாயை பொத்தி அடக்கிக் கொண்டு எச்சிலைக் கூட்டி விழுங்கியவள் “ஹூம், சந்தோஷமா இருக்கேன் மா. அவர் நல்லா பார்த்துக்குறார் என்க…
“அதுவே போதும் மா. நீ போனை எடுக்கலைனதும் பதறி போய்ட்டேன் டி. உன் குரலை கேட்ட பிறகு தான் மனசுக்கு ஆறுதலா இருக்கு“ என்றார் வித்யா.
எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு சென்று விடலாமா என்று நினைக்கும் போதே அவளின் மனமோ ‘ வேண்டாம் ஆஹித்யா போகாதே. உன்னால் யாரும் மன வேதனை அடையக் கூடாது ‘ என்று நினைத்துக் கொண்டவள் “மா என் ஃபோன் உடைஞ்சு போச்சு சோ நானே காலேஜ் போய்ட்டு வந்து அவரோட ஃபோன்ல பேசுறேன்” என்று சற்று நேரம் கதைத்தவள் போனை துண்டித்து விட்டு மேசையில் வைத்தவள் அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டாள்.
அதனைத் தொடர்ந்து தன்னைத் திடப் படுத்திக் கொண்டு காலேஜிற்கு செல்ல கிளம்பியவள் வெளியில் வரும் போது அவளின் கையைப் பற்றி தடுத்து நிறுத்தி இருந்தான் விபீஷன்.
அவன் தன் கையைப் பற்றவும் சற்றே அமைதி அடைந்திருந்தவள் மேலும் பதறிப் போனவளாய் மேனி நடுங்க ஆரம்பித்து விட, அவளின் நடுக்கத்தை உணர்ந்து பட்டென அவளின் கையை விடுவித்தவன் “சாப்பிட்டு காலேஜ் போ” என்றவன் அவளின் முன் உணவு பார்சல் ஒன்றை நீட்டினான்.
அவள் சாப்பிடும் மனநிலையிலா இருக்கின்றாள்?
பசி என்ற உணர்வே மரத்து விட்டது போலும், அவனை வெறித்துப் பார்த்தவள் எதையும் கண்டு கொள்ளாமல் திரும்பி நடக்க, சும்மாவே குற்ற உணர்வில் தவித்துக் கொண்டு இருக்கின்றான்.
இப்போது இவள் வேறு முறுக்கிக் கொண்டு செல்ல, “சாப்பிட்டு போ” என்றான் குரல் உயர்த்தி…
பல்லைக் கடித்தவள் திரும்பி அவனின் கையில் இருந்த உணவு பார்சலை பிடுங்கி எடுத்தவள் விறு விறுவென கிளம்பி இருந்தாள்.
போகும் அவளை பார்த்துக் கொண்டு நின்று இருந்தவனுக்கு, அவள் வழமை போல கல்லூரிக்கு செல்வதைப் பார்த்து வியந்து போனான்.
நேற்றிலிருந்து அவள் துடித்த துடிப்புகள் யாவும் நினைவுக்கு வர மருகி தவித்தான்.
தான் செய்தது மாபெரும் தவறு என்று தோன்றியது.
அவள் வந்ததும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
ஆனால், அவள் பட்ட வேதனை அவனின் மன்னித்து விடு என்ற வார்த்தைகளில் இல்லாமல் போய்விடுமா என்ன?
உடைந்த கண்ணாடியை மீண்டும் ஒட்ட வைப்பது அர்த்தமற்ற செயலல்லவா!
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவளிருக்கும் நிலையில் வீட்டில் இருக்கும் எண்ணம் கொஞ்சமும் இல்லை.
மனதை வேறெங்காவது செலுத்த வேண்டும் என்ற முனைப்பில் காலேஜிற்கு வந்திருந்தாள்.
அன்று எனப் பார்த்து நேரமோ மின்னல் வேகத்தில் நகர்வதைப் போலிருந்தது.
உறங்க வேண்டும் போல கெஞ்சிய தன் விழிகளை சிமிட்டி தூக்கத்தை விரட்டியவள் முயன்று பாடத்தில் கவனம் செலுத்த, சற்று நேரத்தில் இடைவெளி நேரமும் வந்து சேர்ந்தது.
வீட்டில் இருக்கும் போது வராத பசி இப்போது வந்தது.
கல்லூரிக்கு வந்த பின் மனமோ சற்றே சமன் பட்டிருக்க, கைகளை கழுவி விட்டு அவன் கொடுத்த உணவு பொட்டலத்தை திறந்து இரண்டு வாய் தான் வைத்து இருப்பாள் அதற்குள் அவளின் வகுப்பு ஆசிரியர் அவளை அழைக்க, தன்மேல் படிந்த அவரின் பார்வையில் புருவம் சுருக்கி பார்த்தவள் அவரை நெருங்கி “மேம்” என்றாள்.
அவளின் தோளில் கையை வைத்து அவர் சொன்ன விடயத்தை கிரகிக்க முடியாமல் தலையோ தட்டாமாலை சுற்றியது.
மூளை மழுங்கி செயலிழந்து விட்டதைப் போல உணர்ந்தவள் இதயத்தின் வேகம் அதிகரிக்க, அடுத்த கணமே மயங்கி சரிந்து இருந்தாள் பெண்ணவள்.
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.7 / 5. Vote count: 54
No votes so far! Be the first to rate this post.
Post Views:850
1 thought on “நிதர்சனக் கனவோ நீ! : 17”
Latha kalai
Superb epi dr … Vibi konjam nallavan thaan pola… next 🔥 epi ku waiting …
Superb epi dr … Vibi konjam nallavan thaan pola… next 🔥 epi ku waiting …