ஆஹித்யா இடித்ததில் சமநிலையின்றி விழப் போனவள் சட்டென சுதாரித்து கண்ணாடியாலான தடுப்பு சுவரை பற்றி தன்னை நிலைப் படுத்திக் கொண்டே கோபமாகத் திரும்பினாள்.
“ஹேய் சாரிடி” என்ற ஆஹித்யாவின் சிவந்த முகத்தை பார்த்தவள் ஒரு குறுநகையுடன் “அஹான் நல்லா நடத்து நடத்து” என்றாள் படு நக்கலாக,
மார்புக்கு குறுக்காக கரங்களை கட்டிக் கொண்டவளோ “நான் நடத்திட்டு வந்தேன் ஓகே பட் நீ என்னவோ நடத்தியிருக்க போல” என கேலிக் குரலில் சீண்டியவள் பவ்யாவின் இரு கன்னங்களையும் மாற்றி மாற்றி திருப்பி பார்க்கவும், சலிப்பாக “ப்ச்ச.. கைய எடு” என்று தட்டி விட்டாள் பவ்யா.
“சரி தான், இனி நான்லாம் மேடமை தொடவே முடியாது போல” என அதற்கும் கேலியாக அடக்கப்பட்ட சிரிப்புடன் கூற, “நீ மட்டும் இல்ல சம்மபந்தபட்டவரும் என் பெர்மிஷன் இல்லாம என்னை தொட முடியாது” என்றவள் பார்வை சிரித்து பேசிக் கொண்டிருந்த விபீஷன் மீது படிந்தது.
“ம்ம், பார்க்கலாம் பார்க்கலாம்” என்று சொல்லிக் கொண்ட ஆஹித்யாவின் முகமோ சற்று முன்னர் அவன் என்னவெல்லாம் தன்னை செய்து விட்டான் என்றெண்ணி நாணத்தை பூசிக் கொண்டது.
“எனக்கு வழியை விட்டுட்டு கொஞ்சம் நகர்ந்து போய் ஓரமா நின்னு வெட்கபடுட்டு இரு” என்ற பவ்யா அவளின் தோள்களை பற்றி சற்றே விலக்கியவள் இரு புடவைகளையும் எடுத்துக் கொண்டு சிறிது தூரம் சென்று மீண்டும் திரும்பி வந்தவள் “ ஓகே ஓகே எனக்கு காட்டு” என்றாள் கண்களை சிமிட்டி,
“வாட்?” என்றாள் அதிர்ச்சியாக,
“ஆஹி காட்டேன் டி பிளீஸ் பிளீஸ்” என்று கெஞ்சியவளை சங்கடமாக பார்த்தவள் “இங்க எல்லாம் காட்ட முடியாது” என்றவள் சுற்றி முற்றி பார்த்து விட்டு அருகிலிருந்த ஆடை மாற்றும் அறைக்குள் பவ்யாவை இழுத்துக் கொண்டு நுழைந்திருந்தாள்.
தன்னையும் இழுத்துக் கொண்டு ஆடை மற்றும் அறைக்குள் வந்தவளை கேள்வியாக பார்த்தவள் “ஜஸ்ட் ஒரு புடவையை ஓபன் பண்ணி காட்டுறதுக்கு இந்த ரூம் தேவையா?” என நெற்றியை நீவிக் கொண்டவள் கலிகாலம் என்று சொல்ல,
“வாட்? புடவையை தான் காட்ட சொன்னியா?” என அதிர்ச்சியாக கேட்டு சங்கடமாக சிரித்து வைத்தவள் “வா, வெளில போயே பார்த்துடலாம்” என்று சமாளிக்க,
“வெயிட் வெயிட் மா. எங்க போறீங்க? நீங்க எதை காட்ட வந்தீங்களோ அதையே பார்த்திட்டு போகலாமே” என்றவள் சிரிப்பை அடக்க முடியாமல் சத்தமாக சிரித்து விட்டாள்.
“உஷ்ஷ்ஷ்…. ஹையோ சிரிச்சு தொலையாத வெளில கேட்டுட போகுது” என எட்டி பவ்யாவின் இதழ்களை தன் கரத்தால் பொத்தி பிடிக்கவும், இவர்களின் அட்டூழியத்தில் தாழ் போடாமலிருந்த கதவு திறந்து கொள்ளவும் சரியாக இருந்தது.
இருவரும் ஒருங்கே உச்சகட்ட அதிர்ச்சியில் விழிகள் விரிய தாங்கள் இருக்கும் கோலம் மறந்து வெளியில் பார்க்க, அங்கோ இருவரையும் கேள்வியாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தது என்னவோ ஜெய் ஆனந்த்தும் விபீஷனும் தான்.
விபீஷனின் புருவங்கள் மேலேறவும், அவனின் பார்வையை எதிர் கொள்ள முடியாத பவ்யா தான் சட்டென ஆஹித்யாவை விட்டு விலகி நகர்ந்து சென்று விட, போகும் அவளை பார்த்து விட்டு தன் அண்ணனை பார்த்த விபீஷனின் இதழ்களில் புன்னகை.
சற்றே குனிந்து “லுக் விட்டது போதும் அண்ணி இன்னும் ஷாக்ல இருந்து வெளில வர்ல. தெளியவச்சு கூட்டிட்டு வந்துடு” என்று சொன்னவன் இருவருக்கும் தனிமை கொடுத்து சென்று விட்டான்.
இப்போது அவ்விடத்தில் எஞ்சி நின்றது என்னவோ ஆஹித்யாவும் ஜெய் ஆனந்தும் தான்.
மீண்டும் அவனுடனான தனிமை.
பெண்ணவளுக்கோ மனது படபடத்து போனது.
புடவை எடுக்கும் போதே கிடைத்த தனிமையில் அவனின் நெருக்கத்தில் மனதில் தோன்றியதை பேசி விட்டு வெட்கத்தில் ஓடி வந்தவளுக்கு இப்போது மீண்டும் அவனிடம் மாட்டிக் கொண்ட உணர்வு.
மெதுவாக நகர்ந்து தலையை தாழ்த்திய படி தன்னை தாண்டி அமைதியாக செல்ல முயன்றவளின் கரத்தை பிடித்திழுத்து தன்னோடு இறுக அணைத்துக் கொண்டவன் கரம் செய்த வேலையில் அவளின் இதயமோ தாளம் தப்பித் துடித்தது.
“ஹிப் தெரியிற போலவா பப்ளிக்ல போவீங்க?” என்ற அவனது கேள்வியில் தான் அவனது கரம் தன் இடையில் படிந்ததன் அர்த்தத்தை புரிந்து கொண்டாள் பாவையவள்.
“எ…என்ன ஹிப்பா?” என்று திணறிய படி திரும்பியவள் அவனது விழுங்கும் பார்வையில் ஸ்தம்பித்து போனாள்.
“மாமா யாரும் வந்திட போறாங்க பிளீஸ்” என அவஸ்தையாக நெளிந்தாள்.
“சோ வாட்?” என்றானே பார்க்கலாம்.
சுற்றியும் விழிகளை சுழல விட்டவள் சட்டென எம்பி அவனது கன்னத்தில் இச்சென்ற சப்தத்துடன் முத்தம் கொடுத்த மறுநொடி, நம்ப முடியாத அதிர்ச்சியில் தன் கரத்தை தானாக அவளின் இடையில் இருந்து விலக்கவும், இரு புருவங்களை உயர்த்தி ஒற்றை கண் சிமிட்டியவள் அதற்கு மேல் அவள் அங்கு நிற்க பைத்தியமா என்ன?
நாணத்தில் விரைந்து ஓடியிருந்தாள்.
இப்போது என்ன செய்து விட்டு சென்றாள்?
கரமோ தானாக உயர்ந்து அவளின் உமிழ் நீர் பட்ட கன்னத்தை வருடிய அதே நேரம், அவனது இதழ்களோ வெட்கப் புன்னகையில் தாமாக விரிந்து கொண்டன.
அவனுக்கு கசக்குமா என்ன? முதல் முத்தம் உயிர் வரை பித்தம் கொள்ள வைத்திருந்தது.
அதன் பின்னர் சொல்லவும் வேண்டுமா?
அவன் விழிகளில் அகப்படாமல், இல்லை இல்லை அவன் அருகாமையை தவிர்த்த வண்ணம் கவனமாக தன் அன்னையுடன் சுற்றிக் கொண்டு போக்கு காட்டிக் கொண்டிருந்தாள் ஆஹித்யா.
அவளின் சிறுபிள்ளை செயலை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கிக் கொண்டு ரசித்த படி கண்டும் காணாதது போல முகத்தை சாதாணமாக வைத்த படி சுத்தவும் அவளுக்கு தான் அவனின் நடவடிக்கையில் குழம்பிப் போனது.
எல்லோரும் அன்று வீடு வந்து சேரவே மாலை நான்கு மணியைக் கடந்திருக்க, வரும் வழியில் ஜெய் ஆனந்த்தோ நேராக மருத்துவமனைக்கு கிளம்பி இருந்தான்.
அவன் தன்னைக் கண்டு கொள்ளவில்லை என்றதும் அவளின் மனதோ வெகுவாக சோர்ந்து போனது.
அறைக்குள் வந்து கதவில் அப்படியே சாய்ந்து நின்றவள் “மாமா நான் ரொம்பவே அதிகப்படியா கிஸ் பண்ணிட்டேனா? என கேட்டுக் கொண்டவள் நொடியில் கலங்கியவாளாய் அப்போ என்னை தப்பான பொண்ணுன்னு நினைச்சிட்டீங்களா மாமா?” என புலம்பிக் கொண்டே விழிகளை மூடி கதவில் சாய்ந்து நின்றவள் நாசியோ அவனது பிரத்தியேக நறுமணத்தை உணர்ந்தது.
குழப்பத்தில் விழிகள் மூடி இருந்தவள் சற்றே தெளிந்தவளாய் இதழ்கள் தாராளமாக புன்னகையில் விரிய சட்டென விழிகளைத் திறந்தவள் தான் அணிந்திருந்த புடவையில் வீசிய அவனது பிரத்தியேக நறுமணத்தை முகர்ந்தவளுக்கு வெட்கத்தில் கன்னங்கள் சூடேறி சிவந்தன.
“ஹையோ மாமா, நான் நினைச்சே பார்க்காத போல இருக்கீங்களே சோ கியூட் என சொல்லிக் கொண்டவள் நெற்றியை நீவி விட்ட படியே தேவையில்லாமல் கற்பனை பண்றதை முதல்ல நிறுத்தனும் ஆஹி” என்றவள் எதிர் வீட்டில் மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்த பாடலில் மனம் லயிக்க பால்கனியை நோக்கி சென்றவளின் இதழ்களோ, மன்னவன் பேரை
சொல்லி மல்லிகை சூடி கொண்டேன் மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள்
பாடி கொண்டேன்…
சொல்ல தான் எண்ணியும், இல்லயே
பாஷைகள், என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்…
மாலை சூடி ம்ம்ம்.. இம்ம்
மஞ்சம் தேடி ம்ம்ம்.. இம்ம்
காதல் தேவன் சன்னிதி காண காண
காண காண” என்று முணுமுணுத்துக் கொண்டே திரும்பியவளுக்கோ மயக்கம் வராத குறை தான்.
எங்கே விழுந்து விடுவோமோ என்று பயந்தவள் அப்படியே சாய்ந்து சுவரை பிடிமானமாக பற்றிக் கொண்டவள் “மாமா.. நீ.. நீங்க எப்போ வந்தீங்க?”
அவளின் கேள்விக்கு பதில் கூறாதவனோ எப்போது அவளை நெருங்கினான் என்று அவளுக்கே தெரியவில்லை.
தன் கரத்தில் வைத்திருந்த முல்லைப் பூக்களால் கோர்க்க்கபட்ட சரத்தை அவளின் நீண்டு விரிந்திருந்த கூந்தலில் வைத்து விட்டவன் “ நோ நீட் நானே வச்சு விட்டுட்டேன் சோ வாட் நெக்ஸ்ட்?” என அசராமல் அவன் கேட்ட கேள்வியில் சில நொடிகள் பிடித்தன அவனது வார்த்தைகளை கிரகிக்கவே,
இவன் என்ன இப்படி ஒரு நாளைக்குள் இத்தனை முறை வெட்கப் பட வைத்துக் கொண்டு இருக்கிறான்?
ஒரு நாளைக்கே இப்படி என்றால் திருமணத்திற்கு பிறகு? என்று நினைக்கும் போதே அவளின் விழிகள் அவனின் விழி வீச்சை சந்திக்க முடியாது வேறு பக்கம் திரும்பியது.
“நாட் பேட் சூப்பரா பாடுற தியா என்றவன் புருவம் உயர்த்தி பினிஷிங் லிரிக்ஸ் மைண்ட் பிளோவிங் சோ அதையும்…” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “ஐயோ அத்தை” என சொல்லிக் கொண்டே குளியலறைக்குள் நுழைந்து கதைவை அடைத்திருந்தாள்.
அவளுக்கோ, இதயம் படு வேகமாக துடித்தது.
சலிப்பாக பின்னால் திரும்பி கதவை ஒரு பார்வை பார்த்து விட்டு கேசத்தைக் கோதிக் கொண்டவனுக்கு தன்னை எதிர் கொள்ள இவளிடம் என்ன அத்தனை தயக்கமும் தடுமாற்றமும் அவளிடம்? நினைக்கவே அவன் இதழ்களில் குறும்பு புன்னகை தோன்ற “தியா வெளில வா” என்றான்.
“மாட்டேன்” என்றாள்.
“சோ…. நான் போகட்டுமா?” என்றான் மிக மிக மென்மையாக ….
“……….”
அவளிடம் மௌனம்.
“ஸ்பீக் அவுட் தியா”
“ஹையோ எனக்கு ஷையா இருக்கு” என்று சொல்லி விட்டு நாவை மெலிதாக கடித்த படி முகத்தை மூடிக் கொண்டாள்.
‘ ஹையோ விட்டா எல்லாத்தையும் உலறிடுவ போலவே மைண்ட் யுவர் டங்’ என தன்னைத் தானே வசை பாடியவள் தன் தலையில் அவன் சூட்டி விட்ட முல்லை சரத்தை தொட்டு பார்த்தவளுக்கோ வெளியில் ஓடிச் சென்று அவனை இறுக அணைத்துக் கொள்ளலாமா என்றெல்லாம் எண்ணம் தறிகெட்டு ஓட “ஷையாகலாம் தப்பில்ல” என்றவன் வார்த்தைகளில் என்ன நினைத்தாளோ சட்டென கதவைத் திறந்துக் கொண்டு வெளியில் வந்தவள் அவனைத் தன் அறையில் காணாது திகைத்து நின்றாள்.