மச்சக்கார மைனர்

4.5
(2)

அத்தியாயம்-18

 

தனக்கு உணர்ச்சியே வராது என்று இருந்தவனோ தன் மனைவியின் முயற்சியினால் அவனுக்கோ எக்குத் தப்பாக ஹார்மோன் சுரந்து தள்ளியது.

அவனுடைய கைகட்டை அவள் அவிழ்த்ததும் அவளை வாரிச் சுருட்டி தனக்குள் புதைத்துக் கொண்டவன் இவ்வளவு நேரமும் அவள் செய்த பணியை தான் செய்ய ஆரம்பித்தான்.

அவளைத் தனக்குக் கீழ் கொண்டு வந்தவன் அவளுடைய கண்களைப் பார்த்தவாறு “ஹேய் பொண்டாட்டி நீ எனக்கு செஞ்ச பணிவிடையை நான் உனக்கு செய்யணும்னு ஆசைப்படறேன்..” என்றவன் அவளைப் போலவே அவளுடைய நெற்றியில் முத்தமிட்டு பின் கண் காது மூக்கு என முத்தமிட்டு வந்தவன் அவளுடைய இதழை நோக்க அந்த ஆரஞ்சு சுளை இதழ்களோ அவனை மென்மேலும் கவர்ந்தன.

அவளுடைய கண்களைப் பார்த்து தன் புருவத்தை மேலே ஏற்றி இறக்கியவன் “இது நானா உனக்கு தர்ற முதல் முத்தம்.. உன்னோட ஆயிலுக்கும் மறக்காத படி இருக்கணும்னு ஆசைப்படறேன்..” என்று ஹஸ்கி குரலில் சொன்னவன் அவளுடைய அந்த ஆரஞ்சு சுளை இதழ்களை தன்னுடைய முரட்டு இதழால் மென்மையாக கவ்விக் கொண்டான்.

அவள் இதழைக் கவ்வி கொண்டவனுக்கோ அதை விட எண்ணமே இல்லை. அவள் இதழில் ஆழப் புதைந்து கொண்டான். அவளுடைய வாயைப் பிளந்து அவளுடைய நாக்கை சப்பி உறிஞ்ச ஆரம்பித்தான்.

அவளுடைய எச்சிலை அமிர்தமாக நினைத்து விடாது பருகினான். எவ்வளவு நேரம் போனதோ தெரியவில்லை.

இவ்வளவு நாளும் தீராத தாகத்தில் இருந்தவனுக்கு பண்ணீரே கிடைத்தால் அவன் விடவா செய்வான்.

அதனுடைய ஊற்று வத்தும் அளவிற்கு விடாது பருகினான். அவனுடைய கைகளோ அவளுடைய மேனியை பாரபட்சம் இன்றி தொட்டுத் தடவியது.

அவளுக்கு முத்தமிட்டவாறே அவளுடைய இடையை தன்னுடைய ஒரு கையால் இறுக்கிப் பிடித்தவன் தன் இடையோடு அழுத்திப் பிடித்தான்.

அவன் பிடித்த பிடியில் அவளது இடையே உடைந்து விடும் போல இருந்தது.

ஆனால் அவளுக்கோ அவனுடைய இந்த மாற்றம் மிகவும் பிடித்திருந்தது.

தன்னுடைய வலியை பொருட்படுத்தாமல் அவனுடன் ஒன்றினாள்.

அவனோ அவளுடைய இடையை கசக்கி பிழிந்தவன் சற்று மேலே ஏறி அவளுடைய மது குடுவைகளை தனது கைகளால் ஆராய ஆரம்பித்தான்.

அதன் மென்மையில் சொக்கித்தான் போனான் நம்ம மைனர். அவளுடைய இதழ்களில் இருந்து பிரிந்தவன் அவளுடைய கழுத்தில் முகம் புதைத்து அவளுடைய மேனியின் நறுமணத்தை ஆழ்ந்து சுவாசித்தான்.

“ஆஹா என்ன மனம்..” இதுவரை அவன் சுவாசிக்காத அவளுடைய நறுமணம் அவனை மேலும் மேலும் போதை ஏற்றியது.

“ஹேய் என்னடி போட்டு குளிக்கிற உன் மேல இப்படி வாசம் வருது.. என்ன அப்படியே சாய்க்குதுடி..” என்று போதை மீதூறிய குரலில் அவளிடம் கிசுகிசுத்தான்.

அவளோ அவனுடைய ஒவ்வொரு செய்கைகளிலும் குழைந்து கொண்டிருந்தாள்.

அவளிடமிருந்து முனங்கல் சத்தம் மட்டுமே கேட்டது.

இவ்வளவு நேரம் ஒரு ஆண் சிங்கத்தை வேட்டையாடியது அவள் தான் என்று சொன்னால் அதை யாரும் நம்ப மாட்டார்கள்.

அவள் அவனிடம் அத்துமீறும் போது அவளுக்கு இருந்த தைரியம் தன்னுடைய காதல் கணவன் தன்னை அவன் ஆளுகையில் அவளுடைய தைரியம் எங்கே போனது என்று தெரியவில்லை. முகம் முழுவதும் வெட்கத்தில் சிவந்தது.

தன்னுடைய முகத்தை தலையணைக்குள் மறைத்துக் கொண்டாள் பெண்ணவள்.

அதை பார்த்தவனுக்கோ மேலும் மேலும் அவள் மேல் ஆசை அதிகரித்தது.

அவளுடைய கழுத்தில் முகம் புதைத்திருந்தவன் அவளுடைய பதில் இல்லாது போக தன்னுடைய தலையை மெல்ல உயர்த்தி அவளது முகத்தைப் பார்க்க, அவள் முகமோ செங்கொழுந்தாக சிவந்திருந்தது. வெள்ளை மேனியாளோ அந்த நேரம் செந்நிறத்தில் காட்சியளித்தாள். அவள் முகத்தில் வரும் வெட்கத்தை பார்த்தவனுக்கோ அதற்கு தான்தான் காரணம் என்று தெரிந்ததும் அவனுக்கோ கர்வமாக இருந்தது.

இதழ்க்கடையோரம் புன்னகைத்தவன் அவளுடைய வெற்று மார்பில் தன்னுடைய முகத்தை அங்கும் இங்கும் புரட்டினான்.

அவளோ கூச்சத்தில் நெளிய அவளுடைய இரண்டு கைகளையும் தன்னுடைய இரண்டு கைகளாலும் கோர்த்துக் கொண்டவன் திசைக்கு ஒரு பக்கமாக பிடித்துக் கொண்டு அவளுடைய மாங்கனிகளை மாறி மாறி கவ்வி கொண்டான்.

கீழே அவனுக்குள் இருந்த மற்றொருவனோ தன்னுடைய இருப்பைக் காட்ட எண்ணி அவளுடைய இடையில் முட்ட, சற்று குனிந்து பார்த்தவள் வெட்கத்துடன் அவனை ஏறிட்டாள்.

அவளின் பார்வையை பார்த்தவன் தன்னை குனிந்து ஒரு முறை பார்க்க, அவனுக்குள் இருக்கும் அந்த மற்றொருவனோ தன்னை சேர்க்கும் இடத்தில் சேர்த்து விடு என்று அசைந்து காண்பிக்க, அதைப் புரிந்து கொண்டவனோ அதற்குரிய இடத்தில் அதை சேர்த்து விட்டு அவனுடைய அசைவை தொடங்கினான்.

அவனுடைய அசைவோ அசுரத்தனமாக இருந்தது.

ஆனால் அதை இன்பமாக ஏற்றுக் கொண்டாள் பெண்ணவள். தன்னுடைய இந்த வேகமான அசைவு அவளை காயப்படுத்தி விடுமோ என்று நினைத்தவன் அவளிடம் இருந்து பிரிந்து அவள் முகம் பார்த்து “ஹேய் வினு உனக்கு எங்கேயும் வலிக்குதாடி..” என்று அவள் முகம் பார்க்க, அவளோ அவனுடைய கன்னம் தாங்கி ” என் செல்ல மாமா.. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. எனக்கு வலிக்குமோன்னு நினைச்சு நீங்க கவலைப்பட வேண்டாம்.. உங்களோட வேகத்தை கட்டுப்படுத்தாதிங்க.. உங்களுக்கு என்ன தோணுதோ நீங்க பண்ணுங்க நான் தாங்கிப்பேன்..” என்றவள் அவன் நெற்றியில் இதழ் பதித்தாள். அவ்வளவுதான் அவனுக்கு வேறு என்ன வேண்டும். தன்னுடைய இத்தனை வருட தவத்தையும் இன்று ஒரே நாளில் முடித்து விட நினைத்தானோ அவன். அவளுடைய முகத்தைப் பார்த்தவாறே அவளுடைய இடை அருகே வந்தவன் அந்த சிறிய இடையில் தன்னுடைய முகத்தை ஆழப் புதைத்தான்.

சிறிது நேரம் அந்த இடையில் தன்னுடைய உதடுகளால் ஊர்வலம் நடத்தியவன் அவளுடைய நாபி பள்ளத்தை கடித்து இழுத்தவன் சற்றே இடையில் இருந்து கீழே இறங்க, அவளுடைய தொடைகளோ கிடுகிடுவென ஆட ஆரம்பித்தது. அதை தன்னுடைய கைகளால் வருடிக் கொடுத்து தன்னுடைய முகத்தை அவளுடைய தொடைகளுக்கு நடுவே புகுத்திக் கொண்டவன் தன்னுடைய லீலைகளை அங்கே அரங்கேற்றினான்.

அவளோ அவன் செய்யும் அரங்கேற்றத்தை தாங்க முடியாமல் கட்டிலின் விளிம்பை பிடித்துக் கொண்டு அலறினாள்.

இனியும் விட்டால் தன்னை சுகத்தில் கொன்று விடுவான் என்று நினைத்த பெண்ணவளோ அவனுடைய தலைமுடியை பிடித்து தன் முகமருகில் இழுத்தவள் அவனுடைய அந்த ஈர இதழில் தன்னுடைய இதழைப் பொருத்தி ஆழ்ந்த முத்தம் ஒன்று வைத்தாள்.

அவனுமே அவளை பதிலுக்கு முத்தமிட்டவாறே மீண்டும் அவளுடன் கூடல் புரிந்தான். எவ்வளவு நேரம் கடந்ததோ..? எத்தனை முறை அவளுடன் ஒன்றாக இணைந்தானோ தெரியாது. இருவரும் அந்த கட்டிலை விட்டு எழுந்திருக்கவே இல்லை.

விடிய விடிய ஒருவர் தேவையை மற்றொருவர் பூர்த்தி செய்தார்கள். நன்கு விடிந்த பிறகு அவனை விட்டு அவள் விலக எத்தனிக்க, அவனோ அவளை அப்போதும் தன்னிடம் இருந்து விலக்காமல் அவளை அள்ளி எடுத்து தன்னுடைய மார்பில் போட்டுக் கொண்டு அவளுடைய நெற்றியில் இதழ் பதித்துவிட்டு கண் அயர்ந்தான்.

இத்தனை நாட்களும் ஒரு பெண்ணுடன் இரவில் கழித்திருக்கிறான் தான். ஆனால் இப்படி ஒரு நிம்மதி அவனுக்கு இருந்ததா என்று கேட்டால் அவன் சத்தியம் செய்து சொல்வான் இல்லை என்று.

அவன் நன்கு உறங்கியப் பிறகு அவளோ அவன் முகத்தை பார்த்தவள் “என் அழகு மாமா தூங்கும் போது அப்படியே குழந்தை மாதிரி இருக்க.. ஆனாலும் உன்னோட வேகம் இருக்கே ஹப்பா.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமா.. நீ எனக்கே எனக்கு சொந்தமாகிட்ட.. இதுக்கப்புறம் நீ உன் வாழ்க்கையில் எப்பவும் சந்தோஷமா இருக்க நான் அந்த கடவுளை வேண்டிக்குவேன்..” என்றவள் அவனுடைய இதழில் பட்டும் படாமலும் ஒரு முத்தத்தை பதித்து விட்டு அவனுடைய மீசையை இரு பக்கமும் திருகி விட்டு “இந்த மீசை உனக்கு எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா மாமா.. நீ உன் முகத்தை என் மேல தேய்க்கும் போது இந்த மீசை எனக்கு குத்தும் பாரு அது வலியே கிடையாது.. அப்படியே மயில் இறகு வச்சி வருடுன மாதிரி இருக்கும்..” என்று அவனை அங்க அங்கமாக வருணித்துக் கொண்டிருந்தாள்.

ஒன்றல்ல இரண்டல்ல முழுதாக ஒரு வாரம் கடந்தது.

இருவரும் அந்த வீட்டை விட்டு வெளியவே வரவில்லை.. ஏன் அந்த அறையை விட்டு கூட வெளியே வரவில்லை.

அவளே வெளியே செல்ல நினைத்தாலும் வேலன் அவளை தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டான்.

அவனுடைய உடலின் உண்டான புது மாற்றத்தால் தன்னுடைய மனைவி தன் கைக்குள் எப்போதுமே இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நேரம் காலம் இன்றி அவளுடன் கூடலில் இணைந்தான்.

அவளுக்கும் அது பிடித்தே இருந்தது. அதனால் விரும்பியே அவனுடன் இருந்தாள்.

இதில் பாவம் நண்டு தான்.

தினமும் வீட்டுக்கு வந்து கதவு திறக்காமல் இருக்க வந்து பார்த்துவிட்டு போவான்.

இரவில் இளவேலனுக்கு போன் செய்தாலும் அவன் எடுக்க மாட்டான். “ஒரு வாரமா நான் போன் பண்ண போது நீ எடுத்தியா..? இப்ப நீ கிடடா..” என்று அவன் நண்டுவை டீலில் விட்டு விட்டான்.

சரி அண்ணன் தான் எடுக்கவில்லை. அண்ணிக்காவது அழைக்கலாம் என்று நினைத்தால் அவளோ அவனுடைய அழைப்பை ஏற்று அவன் பேச வருவதற்கு முன்னரே “நண்டு நீ நம்ம கெஸ்ட் ஹவுஸில் தங்கிக்கோ.. உனக்கு நேரத்துக்கு சாப்பாடு வந்துரும்.. நான் எல்லாம் ஏற்பாடும் பண்ணிட்டேன்.. இதுக்கப்புறம் நானா போன் பண்ற வரைக்கும் போன் பண்ணாத..” என்று சொல்லிவிட்டு போனை டக்கென்று கட் செய்து விட்டு தூக்கி வீசியே விட்டாள்.

நண்டுவோ தன் காதில் வைத்திருந்த போனை ஸ்லோ மோஷனில் எடுத்து பார்த்தவன் “சட்டை கிழிஞ்சிருந்தா தச்சி முடிச்சிடலாம்.. நெஞ்சு கிழிஞ்சி இருக்கு எங்க முறையிடலாம்..” என்று பாடிக்கொண்டே நண்டு தான் வந்த வழியே திரும்பிப் போனான்.

 

அத்தியாயம்-19

 

இளவேலனும் வினிதாவும் தங்களுடைய இல்லற வாழ்வை இனிதாக ஆரம்பித்து இன்றோடு ஒன்றரை மாதம் கடந்திருந்தது. அதிகாலையில் எழுந்த வினிதாவோ குளியலறைக்குள் சென்று தான் நேற்று வாங்கி வைத்திருந்த பிரக்னன்சி டெஸ்ட் கிட்டை எடுத்தவள் அதை டெஸ்ட் பண்ணி பார்த்தாள்.

அவளுக்கு தெரிந்திருந்தது நாட்கள் தள்ளி போயிருக்கிறது கண்டிப்பாக இது குழந்தையாகத்தான் இருக்கும் என்று ஒரு டாக்டருக்கு தெரியாதா என்ன..?

ஆனாலும் தன் கணவனுக்கு அதை ஆதாரத்தோடு அவன் முன்னே காட்டினால் அவனுடைய அந்த சந்தோஷத்தை தான் கண் கொண்டு பார்க்க வேண்டும் என்று நினைத்தவள் அந்த ப்ரக்னன்சி கிட்டை உபயோகப்படுத்தினாள். அதுவோ சிறிது நேரத்தில் அவளுடைய சந்தேகம் உறுதி என்று இரண்டு கோடுகளைக் காட்டியது. அவளுடைய மனதில் அவ்வளவு சந்தோஷம்.

அந்த சந்தோஷம் கண்களில் கண்ணீராக வந்தது.

தன்னுடைய கண்ணீரை துடைத்துக் கொண்டவள் அந்த டெஸ்டு கிட்டை தன்னுடைய கையில் மறைத்து வைத்துக் கொண்டு இளவேலனை பார்க்கப் போனாள்.

அவனோ இரவில் தன் மனைவியுடன் நடந்த கூடலின் அலுப்பில் குப்புறப் படுத்து நிம்மதியான உறக்கத்தில் இருந்தான்.

மெல்ல அவன் அருகே நெருங்கியவள் அவனுடைய கன்னத்தில் முத்தமிட்டு அவனை எழுப்பினாள்.

“மாமா மாமா எழுந்திருங்க..”

“என்னடி இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன்..”

“ஐயோ மாமா ஒரு நிமிஷம் எழுந்துக்கோங்களேன்.. இதை பாருங்க அப்புறம் உங்களுக்கு தூக்கம் பறந்து போய்விடும்..” என்று அவனை செல்லம் கொஞ்ச, அவனோ தன்னுடைய உடம்பை முறுக்கியவாறு மெல்ல எழுந்து அமர்ந்தான்.

தன்னுடைய கண்களைக் கசக்கி கொண்டே மனைவியைப் பார்த்து இதழ் விரித்தவன் “என்ன பொண்டாட்டி காலையிலேயே இவ்வளவு அழகா வந்து இந்த மாமன மூடேத்திட்டு இருக்க.. இது நல்லதுக்கு இல்லடி..” என்று அவளைப் பார்த்து சிலாகித்தான். அவளோ அவனுடைய வேஷ்ட்டியை தன்னுடைய மார்பு வரை கட்டி இருந்தாள்.

“மாமா கண்ண மூடுங்களேன் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு..” என்றாள்.

“ஏன்டி தூங்குறவனை எழுப்பி இப்படி மல்கோவா மாமி மாதிரி முன்னாடி உட்கார்ந்துகிட்டு கண்ண மூட சொல்ற.. அதெல்லாம் முடியாது நான் உன்னை பார்த்துக்கிட்டே இருப்பேனாம்.. நீ என்ன சர்ப்ரைஸ்னு சொல்லுவியாம்..” என்றான் அவளை கண்களால் கபளிகரம் செய்த படி.

அவளோ அவனுடைய பேச்சில் வெட்கி சிவந்தவள் “மாமா ப்ளீஸ் மாமா ஒரே ஒரு நிமிஷம் மட்டும் நீங்க கண்ணை மூடுங்க..” என்று செல்லமாக சிணுங்க, அவனோ “சரி டி பொண்டாட்டி..” என்று கண்ணை மூடினான்.

அவன் முன்னால் அந்த கிட்டை காண்பித்தவள் “மாமா இப்ப கண்ணைத் திறங்க..” என்றாள். அவனோ கண்ணைத் திறந்து பார்க்க தன் முன்னே இருந்த அந்த பிரகனன்ஸி கிட்டை பார்த்தவன் கண்களோ கலங்கி கண்ணீர் அருவியாக ஓடியது.

அவனுக்கா அது என்னவென்று தெரியாது.

அவனுடைய கண்ணில் கண்ணீரைக் கண்டவள் “என்னாச்சு மாமா ஏன் அழறீங்க..?” என்று பதட்டமாக கேட்டாள்.

அவளை இழுத்து அணைத்தவன் “உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலடி.. ஆனா நன்றி சொல்லி உன்ன அந்நியப்படுத்த நான் விரும்பல.. எனக்கு இந்த சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்தன்னு தெரியலடி பொண்டாட்டி..” என்றவன் கண்ணீர் அவள் தோள் மேல் சொட்டு சொட்டாக வடிந்தது.

சட்டென அவனை தன்னிடம் இருந்து பிரித்தவள் பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவனிடம் கொடுத்து “இத குடிங்க மாமா பஸ்ட்..” என்று கொடுக்க, அவனோ மறுக்காமல் வாங்கி பருகியவன் அவளிடம் “உன் மடியில படுத்துக்கவா வினு..” என்று கேட்க,

அவளோ அந்த வளர்ந்த குழந்தையின் ஆசைக்கினங்க அவனின் தாரமோ அந்த நொடி அவனுக்குத் தாயாக மாறி அவனை தன் மடியில் தாங்கினாள்.

அவள் மடியில் படுத்தவனோ அவள் வயிற்றில் இருக்கும் தன்னுடைய சிசுவை ஆசை தீர வருடியவன் அதற்கு எண்ணற்ற முத்தங்களை பரிசாக வழங்கினான்.

பின்பு அவளது முகத்தை பார்த்தவாறு “உனக்கு ஒன்னு தெரியுமா வினு.. நான் எங்க அம்மா இருக்கும்போது அந்த வயதிற்கான குழந்தை பருவத்தில் எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா.. ஆனால் என் அம்மா சாகும்போது என் உயிரே போயிடுச்சு.. அதுல இருந்து நான் ஒரு நடப்பிணமா தான் வாழ்ந்து கிட்டு இருந்தேன்.. எப்படியோ ஒருவழியா படிச்சு முடிக்கிறப்ப எங்க அப்பா இறந்ததா சொன்னாங்க.. சரின்னு ஒரு மகனா அவருக்கான இறுதி காரியங்களை செய்யத்தான் வந்தேன்.. அதுக்கப்புறம் தான் சரி இனி அவர் தான் இந்த உலகத்திலேயே இல்லையே.. இனி நம்ம அம்மா வாழ்ந்த இடத்துலயே வாழலாமேன்னு இங்கேயே இருந்தேன்..

ஆனா எனக்கு பொண்ணுங்க மேல எந்த ஒரு ஈர்ப்புமே வரல இது என்னோட தப்பா..

ஆனா இந்த ஊர்காரங்க என்னை என் காது படவே எவ்வளவு அசிங்கமா பேசுனாங்க தெரியுமா.. அப்படியே உள்ளுக்குள்ள செத்துட்டேன் வினு..

எனக்கு அந்த இடத்தில இருக்கிறதுக்கே மூச்சு முட்டும்.. வீட்டுக்கு வந்தாலும் யாரும் இருக்க மாட்டாங்க.. என்ன சாப்டியான்னு கேட்குறதுக்கு கூட ஒரு நாதி இருக்காது.. ஏன்டா உயிர் வாழ்றோம் அப்படின்னு இருக்கும்.. சாகுறதுக்கு கூட ஒரு தைரியம் வேணும்.. ஆனா எனக்கு அது கூட இல்லை வினு.. அதுக்கப்புறம் எனக்கு நானே ஒரு முகமூடி போட்டுக்கிட்டு இந்த ஊருக்குள்ள சுத்த ஆரம்பிச்சேன்.. இந்த ஊரும் நம்புச்சி.. ஆனா ஒவ்வொரு நாளும் யாருன்னே தெரியாத ஒரு பொண்ணு கூட நைட்டு நான் இருக்கும் போது என் உடம்பு கூசும்.. ஆனாலும் அந்த நைட்டு வர்ற பொண்ணுங்க யாருன்னு கூட எனக்குத் தெரியாது.. அவங்க முகத்தைக் கூட நான் பார்க்க மாட்டேன்.. இருட்டில அந்த கட்டில்ல படுத்தாலும் எனக்கு தூக்கமே வராது.. நிம்மதியா நான் தூங்கி பல வருஷம் ஆச்சு வினு.. வலியோடுதான்டி வாழ்ந்துகிட்டு இருந்தேன்…

நீ என்னைத் தேடி வந்தது தெரிஞ்சும் உன் வாழ்க்கையும் பாழாகிடக்கூடாதுன்னு தான் நான் உன்னை விலக்கி வைச்சிருந்தேன்.. ஆனால் நீ ஜெயிச்சுட்ட.. ஒரு ஆம்பள தான் ஆம்பளையே இல்ல அப்படின்னு வெளிய சொல்றது எவ்வளவு ஒரு கொடுமையான விஷயம் தெரியுமா.. நான் இந்த உண்மை எனக்குள்ளேயே மறைஞ்சு இருக்கட்டும்னு நினைச்சிதான் நான் யார்கிட்டயும் சொல்லல.. அப்படி தெரிஞ்சா நான் செத்ததுக்கு அப்புறம் தான் தெரியணும்னு இருந்தேன்.. ஆனா அன்னைக்கு நீ சாகப் போறேன்னு சொன்னதும் தான் நான் உன்கிட்ட என்னைப் பத்தின உண்மையைச் சொன்னேன்..

நீ சாகக்கூடாதுன்னு சொன்னேன். ஆனா நான் சொன்ன அந்த நிமிஷம் நான் செத்துட்டேன் டி..” என்றான். அவன் அப்படி சொல்லவும் “மாமா என்ன பேசுறீங்க..” என்று அவனுடைய வாயை தன்னுடைய கைகளால் பொத்தினாள்.

“இல்ல வினு நான் பேசணும் என்ன பேச விடு.. என் மனசுல இத்தனை வருஷமா பூட்டி வச்சிருந்தத உன்கிட்ட சொல்லனும்னு தோணுது..” என்றவன் தன்னுடைய பேச்சை தொடர்ந்தான். “அதுக்கப்புறம் உன்னை கல்யாணம் பண்ணி நீ என் கூட ஒன்னா இருக்கிறதுக்கு எவ்வளவோ முயற்சி பண்ண.. அன்னைக்கும் என்னால உன் கூட ஒன்னா இருக்க முடியல.. அப்போ இன்னும் நான் ஒடைஞ்சு போனேன்.. என்னை நானே வெறுத்தேன்.. ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குதுன்னு எனக்குள்ளேயே நான் புழுங்கியிருக்கேன்.. ஆனா நீ எப்போதும் உன்னோட முயற்சியை நீ விட்டதே இல்லை.. அதுக்கான பலன் இப்போ உன் வயித்துல என்னோட குழந்தையா உருவாகி இருக்கு.. இதை நினைக்கிறப்போ எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா.. பட்ட மரமா இருந்த என்னோட வாழ்க்கையில தேவதையா வந்த நீ..

இனி நான் ஆம்பள தான்னு நெஞ்சை நிமிர்த்தி நடப்பேன்..” என்றவன் அவள் மடியில் இருந்து எழுந்து அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

அவளோ அவனுக்குள் இத்தனை கஷ்டங்களா..? வெளியில் அவன் எவ்வளவு தைரியமாக இருந்தாலும் அவனுக்குள் இப்படி ஒரு இருட்டான பக்கமா..? என்று எண்ணியவள் அவனை தன்னிலிருந்து பிரித்து “இங்கு பாருங்க மாமா.. ஒரு மனுஷன் ஒரு பொண்ணு கூட ஒன்னா இருந்து ஒரு குழந்தையை பெத்துக்கிட்டா மட்டும் அவன் ஆம்பளைன்னு அர்த்தம் கிடையாது.. அவன் ஆம்பளைங்கறது அவனோட நற் குணத்துலையும் அவனுடைய செயல்கள்ளையும் தான் இருக்கு.. என்னைப் பொறுத்த வரைக்கும் நீங்க ஒரு நல்ல ஆண்மகன்.. இனிமே இந்த மாதிரி ஒரு தாழ்வு மனப்பான்மை உங்க மனசுல இருக்கக் கூடாது.. வெளியே ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவாங்க அதெல்லாம் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க.. உங்களுக்கு நீங்க உண்மையா இருக்கீங்களா அதுவே போதும்..” என்றவள் அவனுடைய இதழில் முத்தமிட்டாள்.

அவனுக்குமே அந்த முத்தம் அப்பொழுது தேவைப்பட்டது போல.. அவளுடைய முத்தத்தில் அவனும் ஈடுபட்டான்.

இப்படியே சிறிது நேரம் கடக்க அவர்களது வீட்டிற்குள் ஆட்களின் சத்தங்கள் அதிகமாக கேட்டது.

அந்த சத்தம் கேட்டதும் அவளை விட்டு பிரிந்தவன் “என்ன வெள்ளத் தக்காளி கீழ ரொம்ப சத்தமா கேக்குது..?” என்று அவளைக் கேட்க, அவளோ தனக்கு எதுவுமே தெரியாதது போல “தெரியலையே மாமா.. வாங்க என்னென்னு போய் பார்ப்போம்..” என்று தனக்குள் சிரித்தவள் அவனை அழைத்துக் கொண்டு கீழே போனாள்.

இவர்கள் கீழே வரவும் ஒரு பெண் இவன் அருகே ஓடி வந்து இவனை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டாள். 

அதைப் பார்த்த இவர்கள் இருவரும் அதிர்ந்து நின்றார்கள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!