மைவிழி – 08

4.2
(17)

அவளுடைய நீளமான கூந்தல் இடை தாண்டி தொங்க, கன்னத்தில் தொட்டு இசை மீட்டிய கற்றைக் கூந்தலை தொட்டு விலக்கியவாறு மீடியாவைப் பார்த்து அவள் மருளும் தோற்றம் மிக மிக மிக அழகாக புகைப்படம் ஆக்கப்பட்டிருந்தது.

“வாவ் ஷீ லுக்ஸ் லைக் அ பிரின்ஸஸ்.” என்றவனுடைய விரல்களோ புகைப்படத்தில் இருந்த அவளுடைய முகத்தை வருடின.

அவளுடைய கண்களில் தெரிந்த உணர்வுகளை படித்தவன் அவளை வித்தைக் காரி என எண்ணிக் கொண்டான். அந்த மருண்ட பார்வை அவனுக்கு புள்ளி மானை நினைவு படுத்தியது..

கோடி கொட்டிக் கொடுத்தாலும் இவளைப் போல நளினமாக உணர்வுகளை விழியில் அப்படியே கொண்டு வர வேறு எந்த நடிகைகளாலும் முடியவே முடியாது என எண்ணிக் கொண்டவன் அவளுடைய அடுத்தடுத்த போட்டோக்களை ஒவ்வொன்றாக ரசிக்கத் தொடங்கினான்.

ட்ரீம் கேர்ள் என மைவிழிக்கு ஆர்மி ஒன்றே திறக்கப்பட்டு அதில் எக்கச்சக்கமாக ரசிகர்கள் பாலோவர்ஸ் உருவாகியிருப்பதைப் பார்த்தவனுக்கு தான் சாதித்து விட்டதைப் போல மனம் மகிழ்ந்தது.

அப்போதுதான் உள்ளே ஆடை மாற்றும் அறைக்குள் சென்றவள் இன்னும் வெளியே வராதது புரிய,

“அம்மு என்ன பண்ற.?’ எனக் கேட்டான்.

அவளோ உள்ளே இருந்து அழுகுரலில் “இந்த சட்டைல பின்னால இருக்க கயிறை கழற்ற முடியல சார்.” என்றாள் அவள்.

“என்னைக் கூப்பிட்டுருக்கலாமே.?”

“அச்சச்சோ நீங்க வேணாம்.” என பதறிய குரலில் மறுத்தாள் அவள்.

“முட்டாள் அப்போ இப்படியே அந்த ரூமுக்குள்ளேயே நிற்கப் போறியா.?” என அதட்டலாகக் கேட்டவன் எழுந்து அவள் ஆடை மாற்றிக் கொண்டிருந்த அறைக்கு அருகே வந்தவன் கதவைத் தட்ட, தாழ் இடப்படாத கதவோ சட்டென திறந்து கொண்டது.

“ஐயோ…” என அலறியே விட்டாள் அவள்.

அவனோ சலிப்போடு அவளை நெருங்கி, “இதெல்லாம் இங்க ரொம்ப சாதாரணம்டி.” என்றவாறு அவளுடைய தோள்களைப் பற்றி பின்னால் திருப்ப அவளுடைய முதுகை முழுவதும் மறைத்திருந்தது அவளுடைய கார்குழல்.

“எ… எனக்கு இது சாதாரணம் இல்லையே.”  என தடுமாறியவளின் கூந்தலை தூக்கி முன்னால் போட்டவன் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனான்.

அவளுடைய முதுகுப் பக்கம் முழுவதும் வெறும் கயிறே மறைப்பாக இருக்க, அந்த வெண்ணிற முதுகின் பளபளப்பில் அவனை மீறி அவனுடைய விழிகள் மையம் கொள்ளத் தொடங்கின.

“ரொம்ப இறுக்கமா அந்த அக்கா கட்டி விட்டுட்டாங்க. வலிக்குது சார்.” என்றாள் அவள்.

அவளோ மூச்சை இழுத்த்துப் பிடித்தவாறு நிற்க, அவனோ அவளுடைய ஆடையின் பட்டிகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கத் தொடங்கினான்.

நிலவின் முதுகை கண்டாற் போல திகைத்தவனது கரங்கள் அவளுடைய வெண்ணிற முதுகை தடவிக் கொடுத்தன.

பதறி விலகியவளை தன் அருகே இழுத்து நிறுத்தியவன் அவளுடைய ஆடையின் மொத்த முடிச்சுக்களையும் அகற்றினான்.

அடுத்த கணமே “வாட் இஸ் திஸ் அம்மு.? என்னடி இப்படி சிவந்து போயிருக்கு.” என அதிர்ந்தான் அவன்.

“அந்த அக்காதான் இறுக்கமா இருக்கணுமாம்னு இப்படி பண்ணிட்டாங்க சார். எனக்கு வலிக்குது.” என்றாள் அவள்.

இறுக்கிக் கட்டப்பட்ட இடங்கள் யாவும் கோடு கோடாக சிவந்து போயிருப்பதைக் கண்டவன் அடுத்த கணம் சினத்தில் தன்னுடைய போனை எடுத்து அந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை  திட்டத் தொடங்க, மைவிழியோ பதறிப் போனாள்.

“இடியட் உனக்கு அறிவில்லையா.? அவ்ளோ டைட்டா எதுக்கு நீ நாட் போட்டு விட்ட? ஸ்டுப்பிட். இனி நீ வேலைக்கே வரத் தேவலை.” என கர்ஜித்து விட்டு அழைப்பைத் துண்டிக்க அவளோ உறைந்து போனாள்.

அவனோ அவளுடைய கையைப் பற்றி இழுத்து வந்தவன் அவளைத் தன் படுக்கையில் அமர வைத்தான்.

“அச்சோ என்ன சார் பண்றீங்க. எனக்கு இப்படி இருக்க கூச்சமா இருக்கு.” என நெளிந்தாள் அவள்.

பின்பக்க வெற்று முதுகை ஒரு ஆடவனிடம் காட்டுவது தவறல்லவா.?

“ப்ச் கொஞ்சம் அமைதியா இருடி.” என்றவன் ஏதோ ஒரு ஆயின்மென்ட்டை எடுத்து வந்து தன் கரங்களில் எடுத்தவன் அதனைத் அவளுடைய பளிங்கு முதுகில் மென்மையாக பூசத் தொடங்கினான்.

அதிர்ந்து எழ முயன்றவளின் வயிற்றில் தன்னுடைய ஒரு கரத்தை வைத்து அழுத்தியவன் அவள் நெளிவதை பொருட்படுத்தாமல் அவளுடைய முதுகில் மருந்தை தடவினான்.

அவளுடைய மென்மை அவனுடைய கரத்திற்கு தித்திப்பை கடத்தியது.

தன்னை மறந்து அவனுடைய கரமோ அவளுடைய முதுகெங்கும் ஊர்வலம் போக,விக்கித்துப் போனாள் அவள்.

அவனுடைய செயலில் அவளுடைய ஆடை தோளில் இருந்து நழுவி சரியத் தொடங்க, முனுக்கென கண்ணீர் தோன்றியது அவளுக்கு.

அவளுடைய முதுகு அழுகையில் குலுங்குவதை உணர்ந்து சட்டென அவளை விடுவித்தவன் அரை குறை ஆடையில் நின்றவளைக் கண்டு முகம் மாறிப் போனான்.

அவளுடைய இதழ்களோ துடித்துக் கொண்டிருந்தன.

அவனுடைய பார்வை அவளுடைய இதழ்களில் பதிந்து நிலைத்தது.

“போ…” என்றான் அவன்.

அடுத்த கணம் புள்ளி மான் என ஓடி மறைந்தாள் மைவிழி.

அவளுக்கோ உடல் நடுங்கத் தொடங்கியது. இங்கே தீரனுக்கோ அவளைத் தொட்ட கரம் குறுகுறுத்தது.

இதழ்களில் அவனை அறியாது ஓர் மையல் புன்னகை தோன்ற, சட்டென அந்த அறையில் இருந்து வெளியேறினான்.

**********

அடுத்த நாள் காலையில் தாவணியில் அங்கும் இங்கும் நடந்து திரிந்தவளைக் கண்டு அவனுடைய புருவங்கள் கேள்வியாக உயர்ந்தன.

“என்னடி.?”

“இங்க வந்து சும்மாவே இருக்கேன். சோம்பலா இருக்குங்க. ஏதாவது வேலை கொடுங்களேன்.”

“இங்கே எல்லா வேலைக்கும் ஆட்கள் இருக்காங்க அம்மு.” என்றவன் தன்னுடைய போனில் கவனமாகினான்.

“ஓஹ்.. நான் தோட்டத்துக்கு போகட்டுமா.?”

“ம்ம் போ.”

என்றதும் தன் நீளப் பாவடையை சற்றே தூக்கியவள் முகம் மலர்ந்தவளாய் வெளியே ஓடத் தொடங்க, அவனுடைய முகமோ கனிந்தது.

அவனோ சில காட்சிகளுக்கு தன் கற்பனையிலேயே உருவம் கொடுத்துக் கொண்டிருந்தவன்  மைவிழி சென்றதையே மறந்து போனான்.

சற்று ரேரத்தில் மழை சோவெனப் பொழியத் தொடங்க, தன்னுடைய திட்டங்களை ஒதுக்கி வைத்தவன் தன் அறைக்குள் வந்தான் அங்கே அவள் இல்லை என்றதும் பால்கனி வந்தவன் தோட்டத்தில் நின்ற மைவிழியைக் கண்டு திகைத்தான்.

அடித்துக் கொட்டும் மழையில் நனைந்தவாறு பூக்களோடு பூக்களாக நின்றவளைக் கண்டு அவனுக்கோ உள்ளுக்குள்ளே ஏதோ ஒரு மாற்றம்.

மழை நீரோ அவளுடைய தாவணியை நனைத்து அவளுடைய அழகை வெட்ட வெளிச்சமாகக் காட்ட அவனுக்கோ மூச்சடைத்துப் போனது.

சிறு குழந்தை போல மழையில் ஆட்டம் போட்டவளைக் காணக் காண திகட்டவில்லை அவனுக்கு.

தன்னுடைய ஃபோனை எடுத்தவன் மழையில் தோகை விரித்து ஆடும் மயிலைப் போல இருந்தவளை வீடியோ எடுக்கத் தொடங்கினான்.

ஏனோ அவளுடைய அழகு திடீரென கூடியதைப் போல இருந்தது.

அதே நேரம் அவளோ குளிரில் நடுங்குவதைக் கண்டவன் சட்டென வீடியோ எடுப்பதை நிறுத்தி விட்டு கீழே விரைந்தான்.

“ஏய் அம்மு உள்ளே வா..”

“ஏன்.?”

“மழைல எதுக்கு நனையுற வாடி.”

“கொஞ்ச நேரம் சார்.” என்றவாறு வேறு பக்கம் ஓடியவளிடம் சினம் பெருக, சட்டென மழைக்குள் இறங்கித் தானும் நடக்கத் தொடங்கினான்.

“இடியட் இவளுக்கு அறிவிருக்கா இல்லையா.” என திட்டியவாறு அவளை நெருங்கியவன்,

“முட்டாள் அதான் குளிருதுல்ல. உள்ளே வராம இன்னும் எதுக்குடி இங்க நிற்கிற.,” என சீறியவனை அதிர்ந்து பார்த்தாள் அவள்.

“நீங்க ஏன் இவ்ளோ கோபப்படுறீங்க.?”

“ஹாங் வேண்டுதல்.” என்றான் அவன்.

அக்கணம் பெரும் சத்தத்தோடு இடி முழங்க, அஞ்சி நடுங்கி அலறியவள் அடுத்த நொடியே அருகே நின்ற தீரனை இறுக அணைத்துக் கொண்டாள்.

அவளுடைய அணைப்பில் உறைந்து போனான் அவன்.

அவளுடைய தேகம் சில்லிட்டுப் போயிருந்தது. சற்று நேரத்தில் பதறி விலகியவளுக்கோ உடல் நடுங்கிப் போயிற்று.

“ம… மன்னிச்சுடுங்க.” என்றவள் அங்கிருந்து ஓட முயல அவளுடைய நனைந்த தாவணியை பிடித்துக் கொண்டான் அவன்.

அவளோ அதிர்ந்து பார்க்க, அவளை மெல்ல மெல்ல நெருங்கினான் தீரன்.

குளிரில் நடுங்கிய உடல் இப்போதோ அச்சத்திலும் நடுங்கத் தொடங்கியது.

அவன் நெருங்க நெருங்க அவளோ பின்னால் சென்று கொண்டே இருந்தாள்.

ஒரு கட்டத்தில் அவளுடைய முதுகோ ஒரு மரத்தில் சாய்ந்து கொள்ள அவளால் அதற்கு மேல் பின்னால் நகர முடியாது போனது

முகத்தில் மழை நீர் வழிய மிரண்டு பார்த்தவளை ரசித்தான் அவன்.

அவனுடைய பார்வையில் லஜ்ஜை தாங்காது தன் தீழ் உதட்டை பற்களால் கடித்துக் கொண்டான் அவள்.

அவளுடைய செயலில் தன்னை இழந்தவன் அடுத்த நொடியே குனிந்து அவளுடைய இதழ்களைக் கவ்விக் கொண்டான்.

இதழ்களும் இதழ்களும் பொருந்திக் கொண்ட நேரம் இருவருடைய உடலிலும் மின்சாரம் பாய்ந்ததைப் போல இருந்தது.

அவளோ முதலில் அவனுடைய அதிரடி முத்தத்தில் உறைந்து போனவள் அடுத்த கணம் அவனைத் தள்ளி விட்டாள்.

அவளுடைய விழிகள் சிவந்து கலங்கிப் போயின.

அவள் தன்னைத் தள்ளி விட்டதும் சுயம் அடைந்தவன் தான் செய்த செயலில் தானே அதிர்ந்து போனான்.

“அ.. அம்மு சா… சாரி.” என அவன் தடுமாற அந்தக் கிராமத்து பைங்கிளியோ சீற்றத்தில் அவனுடைய கன்னத்தில் ஓங்கி  அறைந்திருந்தாள்.

அவளிடம் தன் தவறு உணர்ந்து மன்னிப்பு கேட்க முயன்றவனை பளாரென அவள் அறைய, அவனுடைய மென்மையோ அங்கே காணாமற் போனது.

தன்னை எப்படி அவள் அடிக்கலாம் என்ற ஆத்திரத்தில் அவனுள் உறங்கிக் கொண்டிருந்த மிருகம் வெளியே வர,  அழுது கொண்டு நகர முயன்றவளின் கரத்தை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்தவன் அவளுடைய உதடுகளை மீண்டும் வன்மையாக கவ்விக் கொண்டான்.

“வே.. வேணாம்.” என்றவளின் அழுகையோ அவனுடைய இதழ்களுக்கு உள்ளேயே மறைந்து போயின.

அவளுடைய மென் இடை அவனுடைய வன்மையான கரத்தின் பிசைதலால் சிவக்கத் தொடங்கியது.

கொட்டும் மழையில் பிடித்தோ பிடிக்காமலோ அங்கே முதல் முத்தம் அரங்கேறியிருந்நது.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.2 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!