வதைக்காதே என் கள்வனே

4.6
(14)

கள்வன்-15

தான் யாரை இனி தன் வாழ்க்கையில் பார்க்கவே கூடாது என்று நினைத்தாளோ இனி எப்பொழுதுமே அவன் கண் பார்வையை விட்டு விலக முடியாது என்று நினைத்துக் கொண்டவள் அவன் கேட்ட காஃபியை வாங்க சென்றாள்.

ஆஷா தனது கேபினில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

மித்ரனை பார்த்ததில் இருந்து அவள் அவளாகவே இல்லை. அவனின் அழகு, தோரனை, கம்பீரம் அவளை இம்சித்தது.

‘ச்சை என்ன இது எப்படி இருந்த என்ன இப்படி ஆக்கிட்டான்.. இந்த ஆஷாவையே திரும்பி பார்க்க வைக்கிறான்னா அவன் இனிமே எனக்கு மட்டும் தான் சொந்தமா இருக்கனும்.. பட் எப்படி அவன நம்ம வழிக்கு கொண்டு வருவது..’ என்று யோசித்தவள் தன் மேனியை குனிந்து பார்த்தாள்.

வெள்ளை நிற முழுக்கை ஷர்ட் அண்ட் கருப்பு நிற ஸ்கர்ட் முட்டி வரை தொடைகளை இருக்கி பிடிக்குமாறு போட்டிருந்தாள். பார்க்க மார்டன் சிலுக்கு போல் இருந்தாள். உடனே அவள் இதழ்களில் புன்னகை விரிந்தது. எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் பொண்ணுங்க விசயத்தில கண்டிப்பா வீக்கா தான் இருப்பாங்க இவன் மட்டும் என்ன வித்தியாசமாகவா இருக்க போறான் என்று நினைத்தவள் தன்னுடைய ஷர்ட்டின் கழுத்து பகுதியில் முதல் இரண்டு பட்டனை கழற்றி விட்டவள் தன்னுடைய முன்னழகு எதிரில் இருப்பவருக்கு நன்றாக தெரியும் அளவிற்கு அட்ஜஸ் பண்ணியவள் சில பைல்களை எடுத்து கொண்டு மித்ரனின் அறைக்குச் சென்றாள்.

மித்ரனோ போனில் பேசிக் கொண்டிருக்க இவள் அவன் அறைக் கதவை தட்ட “எஸ் கமின்..” என்றான். உடனே ஆஷாவின் இதழ்களில் புன்னகை மலர தன்னை மீண்டும் ஒரு முறை பார்த்துக் கொண்டவள் திருப்தியாக உள்ளே சென்றாள்.

அவள் வந்ததும் போனில் பேசியபடியே “உட்காருங்க” என்று சைகை செய்தவன் ஜன்னலின் அருகே நின்று போன் பேசிக் கொண்டிருந்தான்.

ஆஷாவோ அவன் ஒரு கையில் போனை வைத்துக்கொண்டு மறு கையை தன் வலது புருவத்தை நீவிக்கொண்டே பேச அதை பார்த்தவளுக்கோ அவனுடைய ஆளுமையான தோற்றத்தில் கட்டுண்டவள் அவனுடைய கை வளைவுக்குள் தான் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்க அவள் உடல் சிலிர்த்தது.

அவனை தின்பது போல பார்த்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு நேரம் கடந்தது என்று தெரியவில்லை. தன் முன்னால் யாரோ சொடக்கிடும் சத்தம் கேட்க திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க அவள் முன்னே மித்ரன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு நின்றான்.

“சார்..” என்க

“ஹலோ என்ன பகல் கனவா..? லீவ் போட்டு வீட்ல கானுங்க கனவு.. இது ஆஃபிஸ்..” என்றான் தன் உரத்த குரலில்.

“சாரி சார் ஏதோ நியாபகத்துல இருந்துட்டேன்..” என்றாள்.

“ஓகே எதுக்கா வந்திங்க..?” என்று மித்ரன் கேட்டவாறே தன் இருக்கையில் வந்து அமர்ந்தான்.

தான் உட்கார்ந்திருந்த சேரில் இருந்து எழுந்தவள் தன் முன்னழகு அவனுக்கு நன்றாக தெரியும் படி குனிந்து நின்று “சார் இந்த பைல்ல எல்லாம் நீங்க சைன் பண்ணனும்..” என்றாள்.

அவனோ அவளை திரும்பிக் கூட பார்க்காது தன் முன்னே இருந்த கணினியில் பார்வையை பதித்தவாறு “சரி ஓகே நான் சைன் பண்ணி வைக்கிறேன் நீங்க போகலாம்..” என்பது போல முடித்துக் கொண்டான்.

அவளோ அவன் தன்னை திரும்பிக் கூட பார்க்கவில்லையே என்று “சார்..” என்று மீண்டும் அழைத்தாள். “அதான் சைன் பண்ணி வைக்கிறேன்னு சொல்லிட்டேனே நீங்க போகலாம்.. அண்ட் பைலை சைன் பண்ணி நான் குடுத்து விடுறேன் நீங்க திரும்பவும் இங்க வந்து டைம் வேஸ்ட் பண்ணாதிங்க.. நீங்க போகலாம்..” என்க, தன் திட்டம் இப்படி இவனிடம் அட்டர் ப்ளாப் ஆகும் என்று நினைக்காதவள் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு வேளியேற கதவுப் பக்கம் சென்று கதவை திறந்து வெளியே போக எத்தனிக்க “ஒரு நிமிஷம் மிஸ் ஆஷா..” என்றான் மித்ரன்.

அவளோ சட்டென அவன் கூப்பிட்டதும் புன்னைகையோடு திரும்பி “சார்..” என்றாள்.

“மிஸ் மிஸ்தானே..?” என்றான் அவளை கேள்வியாக, “ஆமா சார் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல..” என்றாள்.

“ஓஓ ஓகே நீங்க பண்ற செய்கை எல்லாம் பார்க்கும் போது மிஸஸ் ஆகிருப்பிங்கன்னு நினைச்சேன்..” அவன் என்ன கூற வருகிறான் என்று அவளுக்குப் புரிய வில்லை.

“சார் நீங்க சொல்றது புரியல..?” என்கவும், தன் இதழ் கடையோரம் சிறு புன்னகையை சிந்தியவன் “உங்க ஷர்ட் பட்டன முதல்ல போட்டுக்கோங்க.. ஒரு ஆம்பளைய தன்னுடைய உடம்ப காட்டி மயக்கிறலாம்னு நெனச்சி வந்துருக்கீங்க.. அதான் சர்விஸ் ரொம்ப இருக்கும்போலனு கேட்டேன்..” அவன் கேட்ட கேள்வியில் அவளுக்கு கோவம் வர “சார்..” என்று கத்தினாள்.

சட்டென தன் இருக்கையில் இருந்து எழுந்தவன் “ஜஸ்ட் ஷட்டப்..” என்று கர்ஜித்தவன் “என் முன்னாடி குரல் உயர்த்துறது இதுதான் கடைசியா இருக்கனும்.. உன் உடம்பை காட்டி என்னை மயக்கிறலாம்னு நெனச்சியா..? இனிமே இந்த என்னோத்தோட என் முன்னாடி வந்த வெட்டி போட்டுடுவேன்.. இது முதல் தடவங்கிறதால சும்மா விடுறேன் கெட்டவுட்..” என்க அவளோ அவன் தன் அழகை பார்த்து தன் காலடியில் விழுந்து கிடப்பான் என்று நினைத்தவள் அவன் இப்படி தன்னிடம் நடந்துக் கொள்வான் என்று நினைக்காதவள் அந்த அறையை விட்டு வெளியேற வாயிலில் வெண்மதி கையில் காபி கப்போடு நின்றாள்.

அவளை பார்த்ததும் இவளுக்கு பக் என்று ஆனது. இங்கு நடந்த அனைத்தையும் அவள் கேட்டு விட்டாள் என்று அவள் முகத்தை பார்த்ததும் இவளுக்கு புரிய, மேலும் அவமானத்தில் தலையை குனிந்தவள் வேகமாக தன்னுடைய கேபினுக்குள் நுழைந்து கொண்டாள்.

அவர்கள் இருவர் பேசுவதையும் கேட்ட வெண்மதிக்கோ

மித்ரனின் மொத்த வார்த்தைகளும் அவளைத் திகைக்கச் செய்தன.

அவன் எல்லா ஆண்களையும் போல பெண் உடலுக்கு முக்கியம் அளிப்பவனல்ல என்பது அவளுக்கு அக்கணம் தெளிவாகியது.

அவனுடைய அத்துமீறல்கள் தன்னிடம் மாத்திரமே என எண்ணிக் கொண்டவளின் மேனி கூட ஒரு நொடி சிலிர்த்தடங்கியது.

ஆஷா சென்றும் கூட வாயிலில் பிரம்மை பிடித்தவள் போல் மதி நிற்பதை பார்த்தவன் “உனக்கென்ன உள்ள வர வெத்தலை பாக்கு வச்சு அழைக்கனுமா..? உள்ள வாடி..” என்றவன் தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்‌.

அந்த காபியை அப்படியே அவன் தலையில் கொட்டி விடலாமா என்று ஆத்திரம் வந்தது அவளுக்கு. ஆனால் அவன் தன் அருகில் நெருங்கினால் எங்கிருந்து தான் அவளுக்குப் அப்படி ஒரு பயம் வருகிறதோ தெரியவில்லை. வேறு வழி இல்லாமல் அவன் சொல்வதை கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை. ஒரு பெருமூச்சை வெளியே விட்டவள் அவன் அருகில் வந்து முன்னால் இருந்த டேபிள் மீது காபியை வைத்து “சார் காபி..” என்றாள்.

அவனோ “காபி நான் கேட்டேனா இல்ல டேபிள் கேட்டுச்சா..?” என்க, “இல்ல சார் நீங்க தான் கேட்டிங்க..” “அப்பறம் காபிய என்கிட்ட குடுக்கமா டேபிள் மேல வைக்கிற..?”

“சாரி சார்..” என்றவள் டேபிள் மேல் வைத்த காபியை கையில் எடுத்துக் கொண்டு சுற்றி வந்து அவன் அருகில் நின்றவள் கப்பை அவனிடம் நீட்டினாள்.

அவனோ கப்பை வாங்காமல் கணினியில் வேலை பார்க்க இவளுக்கும் ஆத்திரம் தாங்கவில்லை.

போடா நீயும் வேண்டாம் உன் வேலையும் வேண்டாம்னு ஓடிவிடலாம் என்று கூட நினைத்தாள். ஆனால் முடியாதே வேலையை விட்டு போக வேண்டும் என்றால் பெனால்டி அமௌன்ட் 20 லட்சம் கொடுத்து விட்டு அல்லவா இந்த வேலையை விட்டு போக வேண்டும்‌. இந்த 20 லட்சம் சேர்ப்பதற்காகவே அவள் ஐந்து வருடம் உழைக்க வேண்டும் இதில் எங்கே இருந்து 20 லட்சம் கொடுத்து இந்த கம்பெனியில் இருந்து வெளியே செல்வது. என்று யோசித்தவள் அமைதியாக “சார் காபி எடுத்துக்கோங்க..” என்றாள்.

அவனும் இவள் பக்கம் திரும்பாமல் “உனக்கு என்ன கண்ணு பின்னாடியா இருக்கு.. பார்த்தா தெரியல நான் வேலையில் பிஸியா இருக்கேன்னு.. நீயே காபி குடிக்க வை..” என்றவன் தன் வேலையை தொடர்ந்தான்.

இவளும் அவன் கூறியதில் ஒரு நிமிடம் ஷாக் ஆனவள் பின்பு அவன் தன்னை விடமாட்டான் என்று உணர்ந்தவள் காபியை அவன் வாய் அருகே மெல்ல நீட்டினாள். பாவம் இவளால் எவ்வளவு முயற்சித்தும் அவனுக்கு காஃபியை கொடுக்க முடியவில்லை. ஏனென்றால் அவன் கணினியின் பக்கம் முழுவதுமாக திரும்பி இருந்தான். இவளால் அவன் வாய் அருகே கொண்டு செல்ல முடியவில்லை. அவனிடம் எதுவும் சொல்லாமல் பாவமாக முழித்துக் கொண்டிருக்க, அவனும் சிறிது நேரம் கழித்து இவள் பக்கம் திரும்பியவன் “உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா..? காபி குடுப்பதற்கு உனக்கு இவ்வளவு நேரமா..?” என்று கடுகடுத்தான். இவளோ மெதுவாக “சார் நீங்க அந்த பக்கம் திரும்பி இருக்கிறதால என்னால கொடுக்க முடியல..” என்று கூறினாள்.

“ஓ இதுதான் உன் பிரச்சனையா..?” என்றவன் சிறிதும் யோசிக்காமல் தனது வலது கையை அவள் இடையோடு சுற்றியவன் அப்படியே தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு “இப்ப குடு..” என்றவன் தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான். அவளோ அவன் இப்படி செய்வான் என்று துளியும் எதிர்பார்க்காதவள் உடல் உதறல் எடுக்க அவனைப் பார்த்தாள்.

“இப்படியே எவ்ளோ நேரம் பார்த்துட்டு இருக்க போற.. ஒழுங்கா காபியை கொடு..” என்று மீண்டும் அரட்டினான்.

வேறு வழி இல்லாமல் அவன் மடியில் அமர்ந்தபடியே தன் உடலை நெளித்துக் கொண்டு அவனுக்கு காபியை பருகக் கொடுத்தாள் வெண்மதி.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!