வதைக்காதே என் கள்வனே

5
(8)

கள்வன்-16

அவன் மடியில் அமர்ந்தாவாறே காபி குடுக்க அவனும் சமத்தாக குடித்து முடித்தான்.

பின்பு அவன் மடியில் இருந்து அவள் எழுந்திருக்க முயல “காபி குடுத்தியே வாய உங்கப்பனா வந்து துடைச்சி விடுவான்..?” என்க, ‘இதுவேறையா..’ என்று நினைத்தவள் டேபிளில் இருந்த டிஸ்யூவை எடுக்க முயற்சிக்க..

“ஏய் ஒரு நிமிஷம் இரு நானே துடைச்சிக்கிறேன்..” என்க,

‘அப்பாடி..’ என்று அவள் பெருமூச்சு விடுவதற்துள் ஒரு நிமிடம் அவள் மூச்சே நின்று விட்டது.

இருக்காதா பின்னே மித்ரன் செய்த வேலை அப்படி.

அவள் டிஸ்யூவை எடுப்பதற்காக அவன் மடியில் இருந்து சற்று உடலை மேல் நோக்கி நகர்த்த அவளுடைய மார்பு பகுதியோ அவன் முகத்திற்கு நேராக வந்தது.

அதைப் பார்த்தவன் சட்டென தன் முடிவை மாற்றிக் கொண்டு தானே வாயை துடைத்துக் கொள்வதாக கூறியவன் அவள் சுதாரிக்கும் முன்பாகவே அவள் மார்பில் தன்னுடைய வாயை துடைத்துக் கொண்டான். அதைக் கண்டுதான் அவளுக்கு மூச்சு நின்று விட்டது. அதன் பிறகு அவன் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்ப்பவளை ஸ்கூல் ஆயாவை விட மோசமாக நடத்தினான்.

“வெண்மதி என் கோர்ட்டை கழட்டிவிடு.. அந்த தண்ணிய எடுத்துக்குடு.. ஏய் இந்த பைலை கொண்டு போய் கொடு.. பாத்ரூம்ல தண்ணி வரலை என்னனு பாரு ( டேய் அவ என்ன ப்ளம்பரா டா இதுக்கு ஒரு எண்டு காடே இல்லையா..?) என்று அவளை ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க விடாமல் அதை எடு இத குடு அத கிளின் பண்ணு என்று அவன் வந்த முதல் நாளே அவளை ட்ரில் எடுத்தான். இப்படியே அன்றைய பொழுதும் கழிந்தது.

இரவு வீட்டிற்கு வந்தவளுக்கு வழத்திற்கு மாறாக உடல் அவ்வளவு அசதியாக இருந்தது.

தன்னுடைய அறைக்கு வந்தவள் குளியலறை சென்று குளித்து விட்டு வந்தவள், இன்று வரும் போதே இரவு சாப்பாடு வாங்கி வந்து விட்டாள் தன்னால் இன்று சமைக்க முடியாது என்று.

“லியா வா சாப்பிடலாம் எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு சீக்கிரம் தூங்கனும்..” என்றாள் மதி.

லியாவும் உடனே அவள் பக்கத்தில் வந்து நின்றது.

அவள் இருப்பது சின்ன வீடு தான். ஒரு ஹால் கிச்சன் ஒரு பெட்ரூம் அட்டாச் பாத்ரூம் அவ்வளவே அவளது வீடு ஆகையால் அத்யாவசிய பொருட்கள் தவிற வேறேதும் ஆடம்பர பொருட்கள் இருக்காது.

கீழே தரையில் சம்மனம் கூட்டி அமர்ந்தவள் தான் வாங்கி வந்த சாப்பாட்டு பார்சலை பிரித்தாள்.

“லியா இன்னைக்கு இட்லி தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..” என்றாள். ஏனென்றால் லியாவிற்கு இட்லி அவ்வளவாக பிடிக்காது. லியாவோ அவளின் நிலமையை புரிந்து கொண்டு “பரவாயில்லை மதி நா சாப்பிடுறேன் நீயும் சாப்பிடு.. ரொம்ப டையர்டா இருக்குனு சொன்னியே..” என்றது.

கண்களில் கனிவோடு லியாவை பார்த்தவள் சிறு சிரிப்பை உதிர்த்து விட்டு இருவரும் சாப்பிட்டார்கள்.

படுக்கையில் வந்து படுத்தவளுக்கோ எங்கிருந்து தான் தூக்கம் வந்ததோ அடித்துப் போட்டாற் போல தூங்கினாள்.

மறுநாள் காலை லேட்டாக தான் கண் விழித்தாள்.

கண்ணை கசக்கி கொண்டு மணியை பார்க்க அதுவோ ஒன்பது என்று காட்டியது.

“என்ன ஒன்பதா லியாஆஆஆஆ..” என்று கத்தினாள் மதி.

அவள் தான் முதல் நாள் அவன் பாடாய் படுத்தியதில் அசந்து தூங்கி விட்டாள் என்றால், லியா அதற்கும் மேல் ஆறு மணிக்கு அவள் மொபைலில் அலாரம் வைத்திருக்க அதுவும் தன் பணியை சரியாக செய்தது.

அவள் மொபைலின் அருகில் படுத்திருந்த லியாவோ அலாரம் சத்தம் கேட்டு பாதி தூக்கத்தில் இருந்து சட்டென விழிப்பு வர “இது ஒன்னு இப்பதான் அடிக்கனுமா..” என்று ஆஃப் செய்து விட்டு தான் விட்ட தூக்கத்தை தொடர்ந்தது.

மதியோ லியாவை கத்தி அழைக்கவும் தான் செய்த வேலை தெரிந்து தான் மதி தன்னை கோபமாக அழைக்கிறாள் என்று தெரிந்து கொண்டு அங்கிருந்து மெதுவாக பறந்து சென்று விட்டது. இவளும் கோபத்தோடு எழுந்தவள் “இரு உன்னை அப்புறமா கவனிச்சுக்கிறேன்.. முதல்ல கிளம்பனும் இப்பவே மணி ஒன்பது ஆயிருச்சு இன்னைக்கு வசமா மாட்ட போறேன்.. ஏற்கனவே அந்த ராட்சசன் வச்சு செய்வான்.. இன்னைக்கு என்ன பண்ண காத்திருக்கானோ தெரியலை..” என்று புலம்பிக் கொண்டே குளியலறை சென்றவள் குளித்து முடித்து பச்சை கலரில் ஒரு சுடிதார் அணிந்து கொண்டு வெளியே வந்தவள் அலுவலகம் நோக்கி சென்றாள்.

அலுவலகத்திற்கு உள்ளே வந்தவள் நேராக தனது கேபினுக்கு செல்ல அவள் உள்ளே சென்ற அடுத்த கணமே இன்டர்காம் அழைத்தது. எடுத்து காதில் வைத்தவள் “ஹலோ..” என்க,

“மிஸ் வெண்மதி உடனே என் ரூமுக்கு வாங்க..” என்று மித்ரன் அழைத்தான்.

“போச்சு போச்சு இன்னைக்கு சோலி முடிஞ்சு..” என்றவள் மித்ரன் அறை நோக்கி சென்றாள்.

“மே ஐ கம் இன் சார்..?” என்க, அவனும் “எஸ் கமின்..” என்றவன் குரலே இவளை அச்சம் அடைய வைத்தது.

அவன் அனுமதி கொடுத்ததும் மனதில் கடவுளை வேண்டிக் கொண்டு மெல்ல உள்ளே நுழைந்தவள் அங்கு அவனைக் காணாது அந்த அறையைச் சுற்றி நோட்டமிட்டாள்.

“எங்க போனாரு இப்பதான் சத்தம் கேட்டுச்சு.. நம்மள உள்ளவர சொல்லிட்டு இவரு எங்க போனாரு..” என்று முணுமுணுத்த படி அந்த அறையை சுற்றி முற்றும் பார்க்க.. அவளின் பின்னால் இருந்து அவளை கட்டிப்பிடிக்க இவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

பயத்தில் கத்தப் போனவளின் வாயில் தன் கரத்தை வைத்து “உஸ்..” என்றவன் அவள் காதோரம் தன் இதழ்களை உரசியவாறு மெதுவான குரலில் “ஏன் இன்னைக்கு லேட்டு..?” என்று கேட்டான்.

தான் இன்றைக்கு தாமதமாக வந்ததற்கு அவன் தன்னிடம் கோபப்படுவான் என்று நினைத்து வந்தவள் அவன் இவ்வாறு நடந்து கொள்வான் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை.

அவனோ மேலும் முன்னேறியவாறு கழுத்தில் குட்டி குட்டி முத்தம் வைத்தவாறே “ஏன் லேட்னு கேட்டேன்..” மீண்டும் அதே தோனியில் கேட்டான்.

கோபமாக கேட்க வேண்டிய கேள்வியை மிகவும் ஹஸ்கி வாய்ஸில் கேட்டான் அவன்.

அவன் கோபமாக கேட்டிருந்தால் கூட பதில் சொல்லி இருப்பாளோ என்னவோ, அவன் இப்படி கேட்கவும் எதுவும் பேச முடியாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.

பின்பு அவளை திருப்பியவன் அவளை வித்தியாசமாக கொடுமை செய்கிறேன் என்ற விதமாக அவளுடைய மேனி எங்கும் தன் கைகளை ஊர்வலம் நடத்தியவாறு ஹஸ்கி குரலில் “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இவ்ளோ லேட்டா வருவ..?சரி லேட்டா வந்த வந்ததும் நேரா என்ன பார்க்க வராம உன்னோட கேபினுக்கு எப்படி போகலாம்..? இதுக்கான பனிஷ்மென்ட் உனக்கு கொடுக்கணும்ல..” என்றவன் அவளை இழுத்து அவள் இதழில் முத்தம் பதித்தான்.

அவன் கைகளோ அவளுடைய இடையை அழுந்த பற்றியது. மேலும் அவளை முத்தமிட்டவாறே ஒரு கையால் அவளை தன் உடலோடு நெருக்கியவன் அவளுடைய இடையில் இருந்த மறு கையால் மெல்ல மேலே ஊர்ந்து அவளுடைய மார்பு பிரதேசங்களை அளவிடத் தொடங்கினான்.

சிறிது நேரம் அங்கேயே உலா வந்தவன் பின்பு அவனுடைய கையை கீழ் நோக்கி தடவிக் கொண்டே வந்தவன் அவள் தொப்புள் குழியில் சிறிது நேரம் விளையாடி அடி வயிற்றுக்கும் கீழே கொண்டு செல்ல, அதுவரை பொறுமையாக இருந்தவள் இதற்கு மேலும் தாங்காது என்று நினைத்து முத்தத்தில் திளைத்திருந்தவனை சட்டென தன்னில் இருந்தும் தள்ளிவிட்டாள்.

பின்பு கோபமாக “ஏன் இப்படி நடந்துக்கிறீங்க இதே மாதிரி மத்த பொண்ணுங்களும் லேட்டா வந்தா இப்படித்தான் நடந்துக்குவீங்களா..?* என்று கேட்க, அவள் கேட்ட கேள்வியில் அவனுக்கோ கட்டுக்கடங்காத கோபம் வர சற்றும் தாமதிக்காமல் அவளது கழுத்தை பிடித்து தூக்கியவன் “என்னடி நெனச்சிட்டு இருக்க உன் மனசுல.. என் முன்னாடி குரல உசத்திப் பேசுற அளவுக்கு உனக்கு தைரியம் வந்திருச்சா.. இன்னொரு தடவை என் முன்னாடி குரலை உயர்த்தி பேசுவதை பார்த்தேன் கொன்னு போட்டுடுவேன்.. இங்க பாரு நான் ஒன்னும் காமவெறி பிடிச்சவன் கிடையாது. உன்ன பழி வாங்குவதற்காக உன்னை தொட்டேன். அதுவும் அதுக்கு காரணம் நீதான். அதனாலதான் தொட்டேன் இனிமே நான் தொடப்போற பொண்ணும் நீ மட்டும் தான்.. ச்சை இங்க இருந்து வெளியே போ..” எனறவன் அவளது கழுத்தில் இருந்து கையை எடுத்துவிட்டு தன்னுடைய இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான்.

அவளிடம் அவன் நடந்து கொண்டது தகாத முறைதான்‌. ஆனாலும் அவள் தன்னை காம வெறி பிடித்தவன் போல் பேசுவதை கேட்டதும் கோபம் வந்து அவளிடம் இவ்வாறு நடந்து கொண்டான். அவன் விட்டதும் இதுதான் சமயம் என்று அவன் அறையில் இருந்து ஓடிவிட்டாள்.

அங்கிருந்து வந்தவள் தனது வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள். இப்படியே மதியம் கடந்தது. “மதி பசிக்குது வா சாப்பிட போகலாம்..” என்று லியா கூப்பிட “சரி..” என்று ஒத்துக் கொண்டவள் ஃபுட் கோட் இருக்கும் இடத்திற்கு சென்றார்கள் இருவரும்‌‌.

அங்கு சாப்பாடு ஆர்டர் செய்துவிட்டு அங்குள்ள டேபிளில் அமர்ந்து கொண்டார்கள். அப்போது பின்னாடி இருந்து ஒரு குரல் கேட்டது‌.

“ஹாய் உங்க கூட நான் ஜாயின் பண்ணிக்கலாமா..?” என்ற குரல் கேட்டு இருவரும் திரும்பி பார்க்க, அங்கு நந்தா சிரித்த முகமாக நின்று கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்த மதியும் ஆச்சரியப்பட்டு எழுந்தாள். “உட்காருங்க..” என்று கூறியவன் அவர்கள் பக்கத்தில் அவனும் அமர்ந்து கொண்டான். லியாவோ “நீ ஏன் எங்க கூட சாப்பிட வந்து இருக்க உன் பாஸ் கூட சாப்பிடலையா..?” என்று கேட்டது.

“ஏன் நான் உங்க கூட சாப்பிட கூடாதா..?” என்று நந்தா கேட்க, “இல்ல புதுசா எங்க கூட சாப்பிட வந்து இருக்கியே அப்போ உங்க பாஸ் தனியா தானே சாப்பிடுவாரு அதான் கேட்டேன்..” என்றது.

அதற்கு நந்தாவும் ஒரு வெற்று புன்னகை சிந்தியவன் “எனக்கு தெரிஞ்சு நான் அவர் கூட இதுவரைக்கும் சாப்பிட்டதே கிடையாது.. சொல்லப்போனா அவர் சாப்பிடுவாரா என்னன்னு கூட எனக்கு தெரியாது.. வேலைன்னு சுத்திக்கிட்டே இருப்பாரு.. அப்பப்போ காபி இல்ல ஜூஸ் இது மட்டும் தான் குடிச்சு நான் பார்த்து இருக்கேன்.. அவர் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை.. எப்பவும் நான் தனியா தான் சாப்பிடுவேன்.. இன்னைக்கி உங்களை பார்த்தேன்.. அதனால உங்க கூட சாப்பிடலாமான்னு வந்தேன்..” என்று கூற அவன் கூறுவதை கேட்டு மதிக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அப்படி என்றால் அவன் சாப்பிடவே மாட்டானா என்று யோசிக்க தொடங்கினாள் அவள்.

 

கள்வன்-17

அப்படி என்றால் அவன் சாப்பிடவே மாட்டானா..? என்று யோசிக்கத் தொடங்கியவள் நந்தாவிடம் அதை கேட்கவும் செய்தாள்.

அதற்கு நந்தாவோ “இல்லை நான் அவர்கிட்ட வேலைக்கு ஜாயின் பண்ணி கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் ஆகுது.. அவர் அம்மா அப்பா கூட இருந்தப்போ அவர் எப்படி இருப்பாருனு தெரியுமா.. ஆபீஸ்ல அவரு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பார்.. ஆனா அவரு வீட்ட பொறுத்த வரைக்கும் அவர் ஒரு குழந்தை மாதிரி.. உங்க பிரச்சனை நடந்ததுக்கு அப்புறம் தான் அவரு முழுசா உடைஞ்சி போயிட்டாரு.. அதிலிருந்து வெளியே வரதுக்கு அவருக்கு ரொம்ப நாள் தேவைப்பட்டிச்சு.. அதுக்கப்புறம் உன்னை தேடுறதுல ரொம்ப ஆர்வமா இருந்தாரு.. மத்தபடி அவரோட உடம்ப கவனிச்சுக்கிறது கிடையாது.. அவங்க அம்மா இருக்கும்போது அவங்க ஊட்டி விட்டா தான் இவர் சாப்பிடுவாரு.. அப்படி இருக்கும்போது சாப்பாட பார்க்கும் போதெல்லாம் அவருக்கு அவங்க அம்மா ஞாபகம்தான் வரும்‌.. அதனால அவரு மேக்ஸிமம் சாப்பிடவே மாட்டாரு.. எப்பவாவது வேற வழி இல்லாம கடமைக்கு தான் சாப்பிடுவார்..” என்றான் நந்தா.

அவன் கூறக் கூற அவளுடைய கண்களோ கலங்க ஆரம்பித்தன. “அதுக்கப்புறம் அவங்க அம்மா அப்பா கூட அவர் பேசலையா..?” என்று தயக்கமாக கேட்டாள்.

அதற்கு நந்தாவும் “இல்ல அவர் பேசலை.. அவருக்கு உன் மேல பயங்கரமான கோவம் இருந்தாலும் அவரோட பெத்தவங்க மேல அதே அளவுக்கு வருத்தம் இருந்துச்சு.. ஒரு பொண்ணு வந்து தன்னைப் பத்தி தப்பாக சொல்லவும் அவங்களும் தன்னை நம்பலையேன்னு ஒரு கவலை அவருக்கு.. அதனால அவரு அதுக்கப்புறம் பார்க்க போகலை..

அவங்க அம்மாவுக்கு அன்னைக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணாங்க.. அதுக்கப்புறம் அவங்க ஹெல்த் ரொம்பவே மோசமாயிருச்சு பெட்ரஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் சொல்லிட்டாங்க.. அதனால அவங்களாலயும் மித்ரன் சார வந்து பார்க்க முடியல. மித்ரன் சார் வந்து அவங்கள போய் பார்க்க போகும் போது அவங்க அப்பா அவங்க அம்மாவோட இந்த நிலைமைக்கு அவர் தான் காரணம் என்று அவரை பார்க்கவே விடல…. அதுல அவரு ரொம்பவும் உடைஞ்சுப் போயிட்டாரு.. அதுக்கப்புறம் அவங்கள போய் இவர் சந்திக்கவே இல்லை..” என்று மித்ரனை பற்றி சொல்லி முடித்தான் நந்தா.

அவன் கூறுவதைக் கேட்ட பின்பு மித்ரனின் மேல் மதிக்கோ இனம் புரியாத ஒரு உணர்வு வந்தது. அந்த நிமிடம் அவள் தனக்குள்ளே ஒரு முடிவு எடுத்துக் கொண்டாள்.

தன்னால் குலைந்து போன அவனுடைய வாழ்க்கையை தானே சரி செய்வதாக எண்ணினாள்.

“சரி நாம இப்போ சாப்பிடலாமா..?” என்று நந்தா கேட்க மதி ஆர்டர் செய்த உணவும் வந்தது. லியாவும் நந்தாவும் நன்றாக சாப்பிட வெண்மதியோ மித்ரனைப் பற்றி யோசித்துக் கொண்டே அரைகுறையாக சாப்பிட்டாள்.

அதன் பிறகு அவர்கள் மூவரும் தங்கள் உணவை உண்டு முடித்து விட்டு தங்கள் வேலையை பார்க்க சென்று விட்டார்கள்.

மாலை வேளை நெருங்கியது. அனைவரும் வேலை முடிந்து கிளம்பிக் கொண்டிருக்கையில் மதியோ அவளுடைய கேபினில் அமர்ந்து கொண்டு எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.

“மதி, மதி ஹே மதிஇஇஇ..” என்று லியா பலமுறை அவளை அழைத்தது. ஆனால் அவள் காதில் விழவே இல்லை. பொறுத்துப் பார்த்த லியாவுக்கு பொறுமை காற்றோடு பறந்து போனது.

டேபிள் மேல் இருந்த அவள் கை மீது தன்னுடைய குட்டி அளகால் இரண்டு முறை கொத்தியது.

அதன் பிறகு சுயம் வந்தவள் “ஆஆஆ.. ஏன் லியா இப்படி கொத்துன..?” என்று மதி கேட்க, “நான் உன்னை எவ்வளவு நேரம் கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன்.. ஆனா நீ கண்ணை திறந்து வச்சுக்கிட்டு செவ்வாக்கிரகத்துக்கு போயிட்ட.. அதான் உன் கையில கொத்தி உன்ன இங்க வர வச்சேன்..” என்று சொல்லியது லியா.

லியா சொன்னதைக் கேட்டு அவளுக்கு கோபமும் சிரிப்பும் ஒரு சேர வந்தது. பின்பு லியாவிடம் “சரி எதுக்கு கூப்பிட்ட அந்த சொல்லு..” என்று சலிப்போடு கேட்க, “மணிய பாத்தியா லேட் ஆகிடுச்சு.. எல்லாரும் போய்ட்டாங்க.. வா நாமளும் போவோம்..” என்று சொல்ல, அதன்பிறகே தன் கையில் உள்ள கைக்கடிகாரத்தை பார்த்தவள் மணி ஆறைக் கடந்து போகவும் “அச்சச்சோ சாரி லியா.. ஏதோ ஞாபகத்துல அப்படியே உக்காந்துட்டேன்.. சரி வா போகலாம்..” என்று தன்னுடைய தோல் பையை எடுத்துக் கொண்டவள் அவளுடைய கேபினை விட்டு வெளியே வரவும், மித்ரன் அவனுடைய கேபினை விட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.

இருவருடைய பார்வையும் ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்தன. அவனோ அவள் காலையில் தன்னிடம் கேட்ட கேள்வியை நினைத்து உள்ளே மண்டிக்கிடந்த கோபம் மீண்டும் எழ அவளை முறைத்தவாறு அங்கிருந்து சென்று விட்டான்.

இவளுக்கோ மதியம் சாப்பிடும் போது நந்தா அவனைப் பற்றி கூறியது நினைவில் தோன்ற, அவன் தன்னிடம் காலையில் நடந்து கொண்டதைக் கூட மறந்தவள் அவன் சொன்ன வார்த்தை மட்டும் அவள் செவியில் இப்போதும் கேட்டுக் கொண்டிருந்தது.

“உன்னை பழி வாங்குவதற்காக தான் உன்னை தொட்டேன் இனிமே என் வாழ்க்கையில் நான் தொடப்போற பொண்ணு நீ மட்டும் தான்..” என்று அவன் சொன்னதை அப்போது அவள் கவனிக்கவில்லை. இப்பொழுது அதை நினைக்கும் போது அவளுடைய மனதில் சந்தோஷ சாரல் வீசியது.

அவன் மேல் உள்ள பயம் கொஞ்சமாக நீங்கியது. எப்படியாவது அவனை அவன் குடும்பத்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டவள் தன்னுடைய வீட்டை நோக்கிச் சென்றாள்.

வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக நந்தா அன்று அவளை வீட்டில் விட்டுவிட்டு போகும் போது அவனுடைய தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டு சென்றது அவளுக்கு ஞாபகம் வந்தது. அந்த கார்டை இப்போது அந்த வீடு முழுவதும் தேடினாள்.

அவள் எதையோ தேடுவதை பார்த்த லியாவோ “என்ன தேடுற மதி..?” என்று கேட்டது.

“அது வந்து லியா அன்னைக்கு நந்தா அண்ணா அவரோட போன் நம்பர் கொடுத்தாருல்ல அத எங்க வெச்சேன்னு தெரியல.. அதான் தேடிட்டு இருக்கேன்..”

“ஓஓ அதைத்தான் தேடுறியா அத முதல்லயே என் கிட்ட கேட்க வேண்டியது தானே நான் எடுத்து கொடுத்திருப்பேன்ல..” என்றது லியா.

உடனே தேடுவதை நிறுத்திவிட்டு லியாவின் பக்கம் வேகமாக வந்தவள் “உனக்கு தெரியுமா லியா.. எங்க இருக்கு..” என்று ஆர்வமாக கேட்டாள்.

“இப்ப எதுக்கு நீ இவ்ளோ ஆர்வமா கேக்குற‌..?” என்று அவளை சந்தேகமாக பார்த்தது.

“நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல.. இப்போ அந்த கார்டு எங்க எடுத்துட்டு வந்து கொடு..” என்றாள் மதி.

“உன் பேச்சை சரியில்லையே கவனிச்சுக்கிறேன்..” என்று சொல்லிக் கொண்டே அந்த ஹாலில் உள்ள ஒரு டேபிள் மீது ஒரு சின்ன ஃபிளவர் வாஷ் இருந்தது. அதன் பக்கத்தில் தான் நந்தா கொடுத்துவிட்டுப் போன அவனுடைய விசிட்டிங் கார்டு இருந்தது.

அதை தன் குட்டி வாயில் கவ்வி கொண்டு வந்து மதியிடம் கொடுத்தது. அதை பார்த்ததும் அவளது முகத்தில் அத்தனை சந்தோஷம்.

உடனே தனது மொபைலை எடுத்தவள் அந்த நம்பரை டைப் செய்து நந்தாவிற்கு கால் எடுத்தாள். நந்தாவோ மித்ரனுடைய வீட்டில் இருந்து அப்பொழுதுதான் அவன் வீட்டின் அருகில் இருக்கும் மித்ரனுடைய கெஸ்ட் ஹவுஸ் நோக்கி நடந்து கொண்டு இருந்தான். அங்கு தான் அவன் தங்கி இருக்கிறான்.

அவனுடைய போன் ரிங் ஆகவும் எடுத்துப் பார்த்தவன் “யார் இது புது நம்பரா இருக்கு..” என்றவன் ஆன் செய்து காதல் வைத்தான்.

“ஹலோ யாருங்க..?”

“ஹலோ நந்தா அண்ணா நான் வெண்மதி பேசுறேன்..” என்றாள்.

அவளுடைய குரலைக் கேட்டதும் சற்று யோசித்தவன் “ஹான் சொல்லு மதி எதுவும் பிரச்சனையா என்ன எனக்கு கால் பண்ணி இருக்க..?” என்று நந்தா கேட்க,

“இல்லண்ணா அது எனக்கு ஒரு உதவி வேணும் அதான் உங்களுக்கு போன் பண்ணேன்..” என்றாள் தயக்கமாக.

தன் புருவங்கள் இடுங்க “என்

ன உதவி வேணும் அதுவும் என்கிட்ட..?” என்று கேட்டான் நந்தா.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!