ஆவதெல்லாம் பெண்ணாலே
நாயகி: கன்னிமா
நாயகன்: ரகுவரன்
அழகான குடும்ப நாவல்… இரண்டு தலைமுறையாக பெண் வாரிசு இல்லாமல் சோர்ந்து போயிருந்த குடும்பத்திற்கு சொர்க்கத்தை காட்டியவள் கன்னிமா!… கன்னிமார்களின் வேண்டுதலால் அவளுக்கு கன்னிமா என்று பெயர் வைத்தனர்…
மூன்று சகோதரர்களின் கூட்டில் வாழ்ந்த கன்னிமாவின் வாழ்க்கை கன்னி கழிந்த பின்பு கிழிந்த நாராய் தொங்கி போகிறது… அதிலிருந்து அவள் எப்படி மீண்டெழுந்து வாழ்க்கையை வாகாய் பிடித்து பிடிமானமாய் வைத்துக்கொள்கிறாள் என்பதே கதையின் கரு…
ஹீரோவை பத்தி எதுவும் சொல்லலையேன்னு கேட்காதீங்க?… ஹீரோவை சுத்தி தான் கதையே?… பெயருக்கு தகுந்தது போல பக்கா கிரிமினல் தான் ரகுவரன்…
ஆட்டை காட்டி மாடுண்ணு விக்கிற அளவுக்கு அதீத முட்டாளுக்கு இருக்குற முப்பது பண்பும் பையன் கிட்ட பகுமானமா இருக்குது…
பின் குறிப்பு: இது சாதாரண குடும்ப நாவல் மட்டுமே… அன்பை அடக்கமாவும் பாசத்தை பதைப்பதைப்புடனும் காட்ட வருகிறாள் கன்னிமா…
- தப்பை செய்துவிட்டு கன்னிமாவிடம் கரிசனத்தை எதிர்பார்த்து கண்ணீர் விட்டு காரியம் சாதிக்க காத்துக்கொண்டிருக்கிறா ன் ரகுவரன்…
நீங்களும் காத்திருங்க!…
இன்று மதியம் முதல் அத்தியாயம் பதிவிடப்படும்