May 2024

இதழ் – 4

இதழ் – 04 அவளின் தேகமோ இலேசான குளிரை உணரத் தொடங்கியது. ஏதோ ஓர் மெதுமையான பஞ்சின் மேலே இருப்பதைப் போல உணர்ந்தவள் தன் கண்களை மெல்லத் திறந்து கொண்டாள். நன்கு தூங்கி விழித்ததைப் போல தேகமோ இறகைப் போல இருக்க கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தவள் சுற்றிப் பார்க்கையில் அந்த இடமோ அவளுக்கு புதிதாக இருந்தது. நன்கு பரந்த விசாலமான பரப்பைக் கொண்ட அந்த அறையில் ஓர் உயர் தரப் பஞ்சு மெத்தையின் மீது தான் […]

இதழ் – 4 Read More »

இதழ் – 3

இதழ் – 03 கண்கள் சிவக்க முகமோ வீக்கத்துடனும் எப்போதும் சோர்வோடும் வெறுப்பை வெளிக்காட்டும் வகையிலேயே தன்னைப் பார்த்து பழகிய அதிரனுக்கு இன்றோ தான் வேறு வகையாக தெரிவதைப் போல தோன்றியது. இலேசாக அவனது வதனத்தில் தோன்றிய சிரிப்பானது அவனின் மனநிலையை சற்று மாற்றி சிந்திக்க வைத்தது.   சிறிது நேரத்திலேயே அவனது வேதனை குறைவடைந்ததையும் தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தையும் உணர்ந்தவனுக்கு அந்நேரம் அந்த மருத்துவர் கூறியதே ஞாபகத்தில் வந்தது. ‘கொஞ்சமாவது சிரிங்க சார் அப்போதான் உங்களோட

இதழ் – 3 Read More »

இதழ் – 2

அத்தியாயம் – 02 கண்ணாடிக் குவளைக்குள் இருப்பதைப் போல அவனது வீட்டின் மேல் தட்டு முழுவதும் அமைக்கப்பட்டிருந்தது. அதனுள் பல நிற விளக்குகள் எறிந்துக் கொண்டிருக்க வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு நட்சத்திர ஹோட்டல் போல காட்சியளிக்கக் கூடியது அதிரனின் வீடு… அதிரனோ தன் சிறுவயதிலேயே தாயை இழந்தவன். அவனது தாய் தந்தையினைப் பிரிந்து வேறொரு திருமணம் செய்து கொண்டார். மேலும் தந்தையோ தாயைப் பிரிந்து சில நாட்களிளேயே அதிரனையும் உலகையும் விட்டுப் பிரிந்தார். அன்றிலிருந்து தனிமையில் இருந்த

இதழ் – 2 Read More »

இதழ் தீண்டா பதுமையே – 1

அத்தியாயம் – 01 பல அடுக்குமாடிகளைக் கொண்ட இடமானது மக்கள் கூட்டத்தில் நிரம்பிக் காணப்பட்டது. அங்குள்ளவர்களின் தோற்றமே கூறியது அவர்களின் நிலமையை.. அது சாதாரண மக்கள் வந்து செல்லக் கூடிய இடம் இல்லை ஏனெனில் அங்கு ஒரு முறை வந்தாலே போதும் அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து இலட்சக் கணக்கில் பணம் காலியாகும். ஆம் அந்த நகரத்தின் உயர்தர வசதிகளைக் கொண்ட தனியார் மருத்துவமனையே அது. அவ்வாறான இடத்தில் கையில் ஓர் பேப்பர் வெயிட்டை வைத்து அங்குமிங்குமாக உருட்டியப்படி

இதழ் தீண்டா பதுமையே – 1 Read More »

நேச தாழ் திறவாயோ உயிரே..!! 20, 21

Episode – 20   அதிலே சிறு புன்னகை புரிந்தவன் அவளை நேராக செல்லும் வழியில் இருந்த ஆடைக் கடை ஒன்றிற்கு அழைத்துச் சென்றான்.   தூங்கும் அவளை எழுப்ப மனம் இல்லாது தானே இறங்கிச் சென்று பேபி ஃபிங்க் நிறத்தில் ரோஜாப் பூக்கள் போட்ட சுடிதார் ஒன்றை அவளுக்காக பார்த்துப் பார்த்து வாங்கியவன் மீண்டும் வந்து காரில் ஏறி தான் தங்கி இருந்த ஹோட்டலுக்கு நேரடியாக  காரைச் செலுத்தினான்.   அவளோ, சற்று அசைந்தாலும் தூக்கம்

நேச தாழ் திறவாயோ உயிரே..!! 20, 21 Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் 30   சில மாதங்களுக்கு பிறகு.. அந்த மிகப்பெரிய மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் யாராவின் அலறல் சத்தம் அதிகமாக கேட்டது. அவளுக்கு அருகில் அவளுடைய கையை பற்றியவாறு இன்னொரு கையால் அவளுடையத் தலையை அன்பாக வருடி கொண்டு அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான் ஆரோன். சில மணி நேரத்திற்கு முன்பு. அன்று இரவு தன் எதிர்கால சந்ததியை வயிற்றில் சுமக்கும் வளைகாப்பு எனும் சடங்கு நல்லபடியாக நடந்து முடிந்த பூரிப்பிலும் சிறு களைப்புடனும் கை

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

‍ஆரல் 29   போலீஸ் அங்கு வந்து நிற்க அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு சிலரோ, “எப்பவும் சினிமால தான் எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் போலீஸ் வருவாங்க அப்படின்னா நாவல்ல கூடவா எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் போலீஸ் வருவாங்க..” என்று ஒருவர் கேட்க, மற்றொருவரோ, “எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் வர்றவங்கதான் போலீஸ் அப்படி இருக்கும்போது அவங்க எப்படி சீக்கிரம் வருவாங்க..” என்று சொல்ல ஜீப்பில் இருந்து இறங்கி வந்த அந்த போலீஸ் அதிகாரியின் காதிலும் விழ

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

‏ ‎ஆரல் – 28   திடிரென நடந்த விடயத்தை கிரகிக்க முடியாமல் அனைவரும் அதிர்ந்து நிற்க, காற்றை கிழித்துக் கொண்டு மூன்று கார்கள் வந்து நின்றன. அங்கு திருவிழாவைப் பார்க்க வந்த அனைவருமே யார் என்று பார்த்துக் கொண்டிருக்க அப்பொழுது ஆடம்பரமான ஒரு காரில் இருந்து பான்பராக்கை வெளியே துப்பியவாறே இறங்கினான் லால் திவாரி. அவன் காரை விட்டு கீழே இறங்கியதும் அவனுடைய பாடி காட்ஸ் அவன் பின்னே வந்து நின்று கொண்டனர். யாரா ஆரோன்

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

இரு விழி உரசிடும்..!! ரகசியம் பேசிடும்..!!

Episode – 11 “சரிடா மச்சி. நீ கலியாணம்  பண்ணிக்கிறது எனக்கும் சந்தோஷம் தான். ஆனா, எனக்கு தெரிய வேண்டிய ஒரே ஒரு விஷயம், நீ அந்தப் பொண்ணு மேல எந்த உணர்வும் இல்லாம கலியாணம் செய்யப் போறீயா?, இல்ல, உன் மனசார விரும்பி கலியாணம் பண்ணப் போறீயா என்கிறது தான்.” “……………….” “ப்ளீஸ்டா ஒரு பதில சொல்லு.” “ஹ்ம்ம்…. பார்த்து இரண்டு நாள்ல காதல் வருமா என்ன?, அதுவும் இந்த திரயனுக்கு. இப்போதைக்கு சொல்றதுக்கு ஒண்ணுமே

இரு விழி உரசிடும்..!! ரகசியம் பேசிடும்..!! Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் – 27   ஊர் முழுக்க வாழைத் தோரணங்கள், வீடு முழுவதும் சொந்தங்கள் என அந்த ஊரே ஒரு வாரமாக ஜொலித்துக் கொண்டிருந்தன. இன்று கடைசி நாள் திருவிழா என்பதால் அணைவருமே மிகுந்த ஆனந்தத் தோடு கோவிலுக்கு மதிய பூஜையைக் காண சென்று கொண்டிருந்தனர். இங்கு பங்கஜம் பாட்டியோ தங்கள் வாரிசுகள் அனைவரையும் அழைத்துக் கொண்டிருந்தார். அவரின் குரல் கேட்டு அனைவரும் அங்கு அசம்பல் ஆக, ஆரோன் மட்டும் இன்னும் கிழே வரவில்லை. “சென்பா எங்க

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

error: Content is protected !!