January 2025

36. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 36   கோயிலுக்கு வந்திருந்தாள் நந்திதா. கண்களை மூடி மனமுருகி வேண்டியவளுக்குக் கண்களில் கண்ணீர் வழிந்தது.   “நான் பண்ணுன தப்பு மன்னிக்க முடியாதது. ஆனால் அதனால உண்டான விளைவுகளை என்னால ஏத்துக்க முடியல. கஷ்டங்களை தாங்கிக்க முடியல. அழுறதைத் தவிர வேற வழியும் இல்லை. நடந்ததை மாற்ற முடியாது, ஏத்துக்கிட்டு எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு வாழறது ஒன்னு தான் வழி.   இருந்தாலும் என் குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சு […]

36. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

35. ஜீவனின் ஜனனம் நீ

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 35   வினிதா மற்றும் அஷோக்கைப் பின்‌ தொடர்ந்து சென்ற தேவனுக்கு உள்ளம் கொதித்தது. அவள் மீது கோபம் தான், என்றாலும் வேறு ஒருவனுடன் அவளைப் பார்க்கையில் இதயத்தைப் பிடுங்கி எறியும் வலி.   “பேபிமா! பாப்கார்ன் வாங்கிட்டு வர்றேன் இரு” என்றவாறு அவளை விட்டுச் சென்றான் அஷோக்.   அவள் பார்வை தேவன் மீது படிந்தது. அவனும் அவளைத் தான் விழியகற்றாது பார்த்தான். அவளோடு கரம் கோர்த்துப்

35. ஜீவனின் ஜனனம் நீ Read More »

34. ஜீவனின் ஜனனம் நீ

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 34   தன்யா தன் மனைவியைக் காண்பிக்குமாறு வேண்டியதும், “அவ எதுக்கு?” என்று கேட்டவன் அழைப்பைத் துண்டிக்க எண்ண, அதற்குள் அலைபேசியைப் பிடுங்கி எடுத்து “ஹாய் தனு! நான் தான் உன்னோட அண்ணி. மிஸ்ஸிஸ் சத்ய ஜீவா” என்றிருந்தாள் ஜனனி.   சத்யா அவளைக் கடுமையாக முறைக்க, “ஓஓ! சூப்பர் அண்ணி. அழகா இருக்கீங்க” என்றவளுக்கு ஏற்கனவே அனுப்பிய புகைப்படத்தில் இருந்த நந்திதாவை விட இவளைப் பிடித்து விட்டது.

34. ஜீவனின் ஜனனம் நீ Read More »

எண்ணம் -10

எண்ணம் -10 “ஐயோ! இங்க என்ன நடக்குது?” என்று அதிர்ந்து தீபா வினவ. “தீபு! நீ எங்கே இங்க…” என்று ஆச்சரியமாக கேசவ் வினவ. “ஏன் நான் ஆஃபிஸுக்கு வரக் கூடாதா? வந்ததுனால தானே உங்க லட்சணம் தெரியுது.” “நான் என்ன பண்ணேன் தீபு.”என்று புரியாமல் வினவினார் கேசவ். “ஐய்யோ! ஐயையோ!ஒன்னுமே தெரியாத பச்சமண்ணு பாருங்க. ஆஃபீஸ்னு கூட பார்க்காம ஒரு பொண்ணோட சேர்ந்து குடிச்சிட்டு இருக்கீங்க? இது தான் நீங்க ஆஃபிஸை பார்த்துக்குற லட்சணமா?” என்று

எண்ணம் -10 Read More »

33. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 33   காலேஜ் சென்று விட்டு வந்தாள் மகிஷா. அவள் முகத்தில் அத்தனை மலர்வு.   “அம்மா…!!” என்றவாறு ஜெயந்தியின் கைகளைப் பிடித்து சுற்றியவளுக்கு தனது படிக்கும் கனவு  நனவானதில் ஏக மகிழ்ச்சி.   பத்திரிகை படித்துக் கொண்டிருந்த மாரிமுத்துவின் விழிகள் சின்ன மகளின் மகிழ்ச்சியைக் கவனிக்கத் தவறவில்லை. அதைப் பார்க்கும் போது அவருக்கு என்னவென்று தெரியாத உணர்வு.   ஜனனி மட்டும் இல்லை என்றால் இன்று மகிஷா

33. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

32. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 32   வீட்டு வாசலில் அடியெடுத்து வைத்த தேவனுக்கு தான் கண்ட காட்சியில் கோபம் பொங்க, “சத்யா…!!” என்றழைத்தான்.   ஜனனிக்கு அடிக்க ஓங்கிய கரத்தைக் கீழிறக்கிய சத்யா அங்கு தேவனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஜனனியின் கண்கள் கலங்கிப் போயிருந்தன.   “என்ன பண்ணிட்டு இருக்க?” தேவன் கோபமாகக் கேட்க, “இதில் நீ தலையிடாத தேவா. எனக்கும் ஜனனிக்கும் இடையில் உள்ள விஷயம் இது” அடிக்குரலில் சொன்னான் ஆடவன்.

32. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

31. ஜீவனின் ஜனனம் நீ

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 31   தேவனின் வீட்டைக் கண்களால் அளவெடுத்துக் கொண்டு நின்றாள் வினிதா.   “இங்கே தானே இருக்கப் போற. அப்பறமா வீடு முழுக்க பார்த்துக்கலாம்” அவளைத் திருமணம் செய்து வீட்டில் வைத்துக் கொள்வதை இரட்டை அர்த்தத்தில் சொல்ல, இது அறியாதவளோ சரியென தலையாட்டி வைத்தாள்.   உள்ளே சென்றதும் வீட்டில் எவரும் இல்லாமல் திகைத்துப் போனவனுக்கு சாரதி மூலம் அறியக் கிடைத்த தகவலில் உலகமே இருண்டு போனது.  

31. ஜீவனின் ஜனனம் நீ Read More »

30. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 30   அன்றைய நாள் கண் விழித்த சத்யா வழக்கம் போல் ஜனனியைத் தேட, அவளோ அங்கு இல்லாதது கண்டு திகைத்துப் போனான்.   “எங்க போனா இவ?” என்று யோசித்தவனுக்கு இருவித எண்ணங்கள்.   தான் சொன்னது போல் எங்காவது சென்று விட்டாளோ என்று ஒரு மனம் நினைக்க, அவ்வளவு உறுதியாக சொன்னவள் சென்றிருக்க மாட்டாள் என்று மறு மனம் வாதிட்டது.   பல்கோணியருகே உள்ள கதவு

30. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

29. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 29   சீட்டில் சாய்ந்தவளை அலட்சியமாய் நோக்கிய சத்யாவுக்கு அவள் தன் மடியில் மயங்கிச் சரிந்ததும் திக்கென்றது.   “ஹேய் என்னாச்சு?” அவளது கன்னம் தட்டி விட்டு, “தண்ணி இருந்தா கொடு ரூபன்” அவசரமாக தம்பியின் தோளைத் தட்டினான்.   அவளது நிலை கண்டு ரூபன் பதறிப் போய் “அண்ணி” என்க, “ஜானு! என்னாச்சு ஜானு உனக்கு?” அவளது கையைப் பிடித்து உலுக்கினான் யுகன்.   “ஹாஸ்பிடல் போகலாம்

29. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

28. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 28   தரையை நோக்கிய சத்யாவின் வழிகள் அகல விரிந்தன. தரையில் விழுந்திருந்தது ஒரு புகைப்படம். அதில் புன்னகை ஏந்தி நின்றிருந்தவன் ராஜீவ் அல்லவா?   அதனைப் பார்த்தவனுக்கு உள்ளம் எல்லாம் கொதிக்கத் துவங்கிற்று. அவன் வந்தவுடன் இந்த அறைக்கு வரும் போது மேசை மீது ஒரு டயரி இருந்ததைப் பார்த்தான். ஆனால் இப்போது அது இல்லை. அவ்வாறெனில் அதை ஜனனி தான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்பதும்,

28. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

error: Content is protected !!