30. காயமின்றி வாழும் காதல்

4.8
(6)

காயமின்றி வாழும் காதல் – 30

எட்டு மாதங்கள் கழித்து,

சோம்பலாக கண் விழித்தாள் குறிஞ்சி. அறையே இருட்டாக இருந்தது. ட்ரெசிங் டேபிள் அருகே இருக்கும் விளக்கு மட்டும் எரிய, கடைக்கு தயாராகிக் கொண்டு இருந்தான் ரவி.

மெதுவாக ஒரு பக்கமாக திரும்பி எழுந்து அமர்ந்தாள் குறிஞ்சி. அவள் எழுந்ததை பார்த்ததும்,

“குட் மார்னிங்” என்றான் ரவி.

“குட் மார்னிங்” என்றாள் குறிஞ்சியும்.

சரி நான் கிளம்புறேன், அப்புறம் போன் பண்ணு என்றவன் கிளம்ப போக, இருங்க ப்ளீஸ் பாத்ரூம் மட்டும் போயிட்டு வரேன். ரெண்டு வார்த்தை பேசிட்டு போங்க என்று பாத்ரூம் நோக்கி வேகமாக நடந்தாள்.

“நான் இருக்கேன். நீ மெதுவா போ தாயே!” அவள் பின்னால் ஓடி வந்தான் ரவி. ஐந்து மாதம் கர்ப்பமாக இருக்கிறாள் குறிஞ்சி இப்போது. ரெப்ரெஷ் செய்து கொண்டு வந்தவள்,

“நேத்து ரொம்ப லேட்டா? நான் பதினொன்றை வரை முழிச்சிட்டு இருந்தேன்! அப்புறம் என்னையும் அறியாம தூங்கிட்டேன் போல்” என்றாள்.

“ஆமா, வர ஒரு மணி ஆய்டுச்சு” என்றான் ரவி. சரக்கு ஏற்றி வந்த லாரி இடையில் பஞ்சர் ஆகி இவர்கள் கோடவுனுக்கு வர தாமதம் ஆகி விட, சரக்கு எல்லாம் இறக்கி வைக்க மிகவும் தாமதம் ஆகி விட்டது.

உங்களை ரொம்ப மிஸ் பண்ணினேன்! என்றாள் சோகமாக.

“நான் வந்தேதே தெரியலை, அப்படி தூங்கினே! நான் பக்கத்தில படுத்தா மட்டும் உருண்டு உருண்டு என் தூக்கத்தை நல்லா கெடுக்கிறேடி” என்றான் குறையாக.

“அது நீங்க தள்ளி போவீங்க, அது தான்! என் பக்கத்திலே வேணும் நீங்க!” சிரித்தாள் குறிஞ்சி.

“எப்படி இப்படியா?” என்று காதலாக கேட்டு கொண்டே அவள் இதழ்களை முற்றுகையிட்டான் ரவி. அவன் தயாராகி விட்டதால் அவனை அணைக்காமல் அவன் கையை மட்டும் பிடித்து கொண்டாள் குறிஞ்சி. ஒரு நிமிடம் அவளை விட்டவன், “சட்டை கசங்கினா பரவாயில்லை, என்னை பிடி! என் பொண்டாட்டிக்கு அப்புறம் தான் எல்லாம்” என்றான் ரவி.

சிரித்துக் கொண்டே அவனை முடிந்த மட்டும் இறுக்கி அணைத்தாள் குறிஞ்சி. அவளுக்கு வயிறு ஒன்றும் பெரிதாக தெரியவில்லை இன்னும்.

அத்தான், கொஞ்சம் நேரம் கழிச்சு போங்களேன் என்றவளின் குரலில் அவள் ஆசையை உணர்ந்தவன், “ரொம்ப மிஸ் பண்ணிட்டியோ அத்தானை” என்று
அவளை மெத்தையில் சாய்த்தான். அவனின் மகவை மனதில் கொண்டு அவளை பூ போல் கையாண்டவன், அவள் ஆசையை நிறைவேற்றி விட்டு தான் ஓய்ந்தான். களைத்து போய் அவன் நெஞ்சில் சாய்ந்து இருந்தாள் குறிஞ்சி.

“வாக்கிங் கூப்பிட்டா மட்டும் ஆயிரம் காரணம் சொல்றே! தூங்கி எழுந்து சாப்பிடாம என்கூட ரொமான்ஸ் பண்ண மட்டும் முடியுது உனக்கு? குள்ளி சரியான ஆள்டி நீ!”

“போங்க அத்தான்! கம்பெனி ரகசியத்தை எல்லாம் வெளில சொல்ல கூடாது அத்தான்!” அவன் வாயை பொத்தி சிரித்தாள் குறிஞ்சி.

ஹாஹா, அவன் சிரிக்க,

“நீங்க தான் என் எனர்ஜியோட ரகசியம் அத்தான்! உங்க லவ் தான்” என்றாள் மனப்பூர்வமாக.

“அதே தான் எனக்கும், என் செல்ல குஞ்சம்மா!” என்றவன் அவளோடு மீண்டும் குளித்து தயாராகி கடைக்கு சென்று விட்டான்.

இப்போது மூர்த்தியின் உதவி ரொம்ப தேவைப்படுவதில்லை ரவிக்கு. ஆனாலும் எப்போது உள்ள பழக்கம் போல் காலையில் எழுந்து கடைக்கு போய் விடுவார் மூர்த்தி. ரவி பேட்மிண்டன் விளையாடி விட்டு, குளித்து டிபன் சாப்பிட்டு வரும் வரை கடையில் இருப்பார், வேண்டுமென்றால் அதற்கு முன்பும் வந்து விடுவார். அவர் சௌகரியம் தான்.

இன்று உள்ளூரில் ரவிக்கு நிறைய தோழர்கள். பெரிய லெவல் ஆட்கள், ஆபிசர்ஸ் என்று பலர் அவன் நண்பர்கள். ரவியிடம் சென்றால் ஒரு காரியம் எப்படி நடக்க வேண்டும் என்று ஐடியா கொடுப்பான் எனும் அளவிற்கு இருக்கிறான் ரவி. குறிஞ்சி காணாமல் போன போது ஆட்கள் தெரிந்திருப்பது எவ்வளவு அவசியம் என்று தெரிந்து கொண்டவன் அவன் கிளப் மூலம் மட்டுமின்றி, ரோட்டரி இன்னும் வர்த்தகர் சங்கம் என்று அவனின் தொடர்பை விரிவு படுத்தி கொண்டான். அதை நல்ல முறையிலும் செயல்படுத்துகிறான். அவனே அவன் சொந்த செலவில், மருத்துவ காம்ப் ஏற்பாடு செய்வது. பள்ளி குழந்தைகளுக்கு வேண்டிய உதவி செய்வது என்று பல நல்ல செயல்கள் செய்தபடி இருக்கிறான்.

குறிஞ்சி கூட அவனை கிண்டல் செய்வாள், “என்னை ஆக சொல்லிட்டு நீங்க கவுன்சிலர் ஆய்டுவீங்க போல அத்தான்!”

குழந்தை பிறந்து கொஞ்சம் வளர்ந்த உடனே வர்ற எலெக்ஷன்ல நீ கண்டிப்பா நிற்க போறே! கவுன்சிலர் ஆக போறே என்பான் ரவி. குறிஞ்சி நின்றால் நிச்சயம் ஜெயிப்பாள். சும்மாவே அடுத்தவர்களுக்கு உதவுபவள் இன்று ரவியின் துணையுடன் பொறுப்பாக, ஜாக்கிரதையாக செய்கிறாள்.

பெரியவர்கள் நால்வருக்கும் மிக்க சந்தோஷம்! அதுவும் மூர்த்தி ஆசைப்பட்டது போல் மகன் அவர் ஊரில் இன்று இவ்வளவு சிறப்பாக இருப்பது அவருக்கு மிக பெருமை. மூர்த்தியின் மகன் ரவி என்பது அவர் சொந்தங்கள் மத்தியில் மட்டுமே! வெளியில் சென்றால், ரவி சார் அப்பா மூர்த்தி என்பது அவருக்கு அப்படி ஒரு ஆனந்த்தை அளித்தது.

அவர் தொழில் தொழில் என்று இருந்ததில் மேகலாவுடன் பெரிதாக நேரம் செலவழித்து டூர் என்று எங்கும் சென்றதில்லை. அதனால் மூன்று மாதம் முன்பு இரு வீட்டு பெரியவர்களையும் சிங்கப்பூர், மலேசியா டூர் அனுப்பி வைத்தான் ரவி. அவனும் குறிஞ்சியுடன் தாய்லாந்து சென்று வந்ததிருந்தான்.

வாழ்க்கையின் ருசியை உணர்ந்து, சொந்தங்களுடன் மகிழ்ந்து வாழ்கிறார்கள் ரவியும், குறிஞ்சியும். வாழ்க வளமுடன்!

முற்றும்

நன்றி!

வணக்கம்!

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!