4. யாருக்கு இங்கு யாரோ?

4.2
(9)

அத்தியாயம் 4

 

என்னை பொறுத்தவரை அது ஜஸ்ட் ஒரு ஒன் நைட் ஸ்டேண்ட் அவ்வளவு தான்

அமுதினி அமைதியாகவே அமர்ந்திருக்க, அவளையும்  வாட்ச்சையும் மாறி மாறி பார்த்த தேவ் அவள் பேசுவது போல் தெரியவில்லை என்றவுடன் கோபமாக அங்கிருந்து எழுந்து செல்ல முயற்சிக்க, சட்டென்று அவன் கையை பிடித்து தடுத்த அமுதினி

 

“ப்ளீஸ் ஒரு நிமிஷம் எனக்காக…” என்று கலங்கிய கண்களோடு கேட்க, ஏனோ பெண்ணவளின் கலங்கி விழிகளை பார்த்தவனால் அங்கிருந்து செல்ல முடியவில்லை. அதனால் மீண்டும் அதே இடத்தில் அவன் அமர, தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்து கொண்ட அமுதினி தனக்குள் இருக்கும் ஒட்டுமொத்த தைரியத்தையும் ஒன்று திரட்டி, தேவ்வின் கையை இன்னும் இறுக்கமாக பற்றி கொண்டவள்.

 

“தேவ் உங்களுக்கு கல்யாணம்ன்னு சொன்னீங்க..” என்று தயக்கத்தோடு அவள் கேட்க

 

“ ஆமா… சொன்னேன் அதுக்கு இப்போ என்ன?” என்று அவன் சாதாரணமாக கேட்க

 

“என்ன தேவ் சாதரணமா உங்களுக்கு கல்யாணம்னு சொல்றிங்க? அப்போ என்னோட நிலைமை என்ன தேவ்?” என்று கண்களில் கண்ணீர் தேங்க அமுதினி கேட்க 

 

“உன் நிலைமையா?  இல்லை நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியல” என்று தேவ் கூற 

 

“தேவ் அப்போ அன்னிக்கு நமக்குள் நடந்தது எதுவும் உங்களுக்கு ஞாபகம் இல்லையா?” என்று அமுதினி சற்று பயத்தோடு கேட்க 

 

“என்னைக்கு நடந்தது?” என்று எதுவும் தெரியாதவன் போல அவன் கேட்க 

 

“தே…… தேவ்… ப்ளீஸ் விளையாடாதீங்க… அன்னைக்கு நைட் பார்ட்டி… பீச் ஹவுஸ்ல நீங்களும் நானும் ஒன்னா… இரு… இருந்தோமே.. அ.. அது… உங்களுக்கு ஞாபகம் இல்லையா?” என்று அமுதினி திக்கி திணறி கேட்க

 

“ஓஹ்…. அதுவா?” என்று தேவ் சாதாரணமாக பேச 

 

“தே… தேவ்… அப்போ அது உங்களுக்கு ஞாபகம் இருக்க?” என்று ஒரு வித சந்தோசத்தோடு அவள் கேட்க 

 

“ஓஹ்…. நல்லாவே ஞாபகம் இருக்கே, அது எப்படி மறக்க முடியும்? சொல்ல போன இட் வாஸ் குட் எக்ஸ்பீரியன்ஸ்” என்று தேவ் கூற 

 

“என்ன தேவ் நீங்க பேசுறீங்க? அன்னைக்கு நடந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்குது அப்படின்னா அப்றம் ஏன் இது?” என்று தேவ்வின் திருமண பத்திரிகையை அவன் முன் நீட்டி அமுதினி கேட்க 

 

“ஏன்னா?” என்று தேவ் கேட்க 

 

“அதை தான் நானும் கேட்குறேன் ஏன் இது? அன்னைக்கு நடந்தது எல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கு அப்றம் என்ன? நீங்க உங்க வீட்டுல பேசி இந்த கல்யாணத்தை நிறுத்தி இருக்கலாமே?” என்று அமுதினி கூற 

 

“அம்மு பர்ஸ்ட் நீ என்ன பேசுறேன்னே எனக்கு புரியல, அண்ட் நான் ஏன் மொத இந்த கல்யாணத்தை நிறுத்தணும்?” என்று தேவ் கேட்க 

 

“ஏன் நிறுத்தணுமா? தேவ் ப்ளீஸ் தயவு செஞ்சு இந்த விசயத்துல விளையாடாதீங்க எனக்கு ரொம்ப பயமா இருக்குது…” என்று ஆடவனின் கையை இருக்க பற்றிக் கொண்டு அமுதினி கூற

 

“ஏய்… அமுதினி உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சி இருக்கு? மொத நீ எது பேசுனாலும் கொஞ்சம் தெளிவா பேசு, அன்னைக்கு நான் உன் கூட இருந்ததும் இப்போ நான் என்னோட கல்யாணத்தை நிறுத்தறதுக்கும் என்ன சம்மந்தம்?” என்று தேவ் கேட்க 

 

“சம்மந்தம் இருக்கு தேவ்…. ஏன்னா நான் உங்களை லவ் பண்றேன். உங்க மேல இருந்த லவ்வாலா தான் அன்னைக்கு என்னையே உங்களுக்கு முழுசா கொடுத்தேன்…” என்று அமுதினி தன் மனதில் இருந்த அவனிடம் கூற,

 

“என்ன நீ என்னை லவ் பண்றியா?” என்று கேட்ட தேவ் சிரிக்க 

 

“இப்போ நான் என்ன சொன்னேன்னு நீங்க இப்படி சிரிக்கிறீங்க தேவ்” என்று அமுதினி மிகுந்த வலியோடு கேட்க

 

“நீ சொல்ற ஜோக் கேட்டு சிரிக்காமல் வேற என்ன அம்மு பண்ண சொல்ற?” என்று தேவ் கேட்க 

 

“தேவ் என்னோட லவ் உங்களுக்கு ஜோக் மாதிரி தெரியுதா? உங்கள் மேல இருந்த லவ்னாளையும் நம்பியாளையும் தானே அன்னைக்கு உங்களுக்கு என்னை கொடுத்தேன்.” என்றவள் திக்கி திணறி கூற அவளை புரியாமல் பார்த்தவன்.

 

“அம்மு நீ என்ன பேசுறேன்னு தெரிந்து தான் பேசுறியா? ஆர் யூ மேட்? அன்னைக்கு நடந்தது அன்னையோட முடிஞ்சிடுச்சு… என்னை பொறுத்த வரைக்கும் அது ஜஸ்ட் ஆக்சிடென்ட், உன்னையும் என்னையும் இல்ல இல்ல… அது என்னை அறியாம நடந்த ஒரு விஷயம், அன்னைக்கு நான் ஃபுல்லா ட்ரிங்ஸ் பண்ணி இருந்தேன். ஒத்துக்குறேன் நான் தான் உன்கிட்ட வந்து அப்ரோச் பண்ணுனே, ஆனா நீ நினைச்சிருந்தா இதை வேண்டாம்ன்னு சொல்லிட்டு  அப்போவே அங்கிருந்து கிளம்பி போயிருக்கலாம். ஆனா நீ போகல இன்பாக்ட் நான் உன்னை கம்பெல் கூட பண்ணல நீயே விருப்பப்பட்டு தான் வந்தா… உன் சம்மதத்தோட தான் நமக்குள்ள எல்லாம் நடந்துச்சு…” என்று தேவ் கூற 

 

“ஆமா.. அன்னைக்கு நீங்க ட்ரிங்ஸ் பண்ணி இருந்திங்க தான், நீங்களா தான் என்கிட்ட வந்து அப்ரோச் பண்ணீங்க, நானும் அதை இல்லைன்னு சொல்லவே இல்லையே, ஆனா நீங்க கேட்டதுக்கு நான் சம்மதிச்ச ஒரு காரணம் நான் உங்க மேல வெச்சு இருந்த லவ் மட்டும் தான்… உங்க மேல இருந்த கண் மூடி தனமான காதலா தான் நான் அன்னைக்கு உங்க கூட இருந்தேன்” என்று அமுதினி கூற

 

“ஆனா அது எனக்கு எப்படி தெரியும் அம்மு? நான் இது வரைக்கும் உன்னை லவ் பண்றேன் அப்படின்னு ஒரு தடவை கூட சொன்னதே இல்ல, அதோட அன்னைக்கு அந்த பார்ட்டில வெச்சு தான் நான் உன்கிட்ட மொத தடவை பேசுனேன். அதுக்கு முன்னாடி உன்கிட்ட இதுவரைக்கும் நான் பேசி இருக்கேன்னா என்ன? உன்னை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது… அன்னைக்கு நைட் நான் கொஞ்சம் ஓவரா ட்ரிங் பண்ணிட்டேன். போதையில எதோ தெரியமா உன்னை கிஸ் பண்ணிட்டேன். அதுக்கு அப்றம் என்னைய என்னால கண்ரோல் பண்ண முடியாமல் உன்கிட்ட கேட்டேன், நீயும் ஓகே சொன்னா… அவ்வளவு தான் நமக்குள்ள இருக்குற உறவே, என்னை பொறுத்தவரை அது ஜஸ்ட் ஒரு ஒன் நைட் ஸ்டேண்ட் அவ்வளவு தான்” என்று தேவ் தன் தோள்களை குலுக்கி அசால்ட்டாக கூற, அவன் கூறியது எல்லாம் கேட்டு  அதிர்ந்து போன அம்முவோ 

 

“என்ன தேவ் சொல்றீங்க ஜஸ்ட் ஒரு ஒன் நைட் ஸ்டேண்ட்டா? அப்போ நீங்க என்னை லவ் பண்ணலையா?” என்று அவள் கண்களில் கண்ணீரோடு கேட்க 

 

“உனக்கு என்ன பைத்தியமா? நான் இவ்வளவு தூரம் உனக்கு எக்ஸ்பிளான் பண்ணிட்டு இருக்கேன். நீ என்னடான்னா திரும்ப மொதலா இருந்து ஆரம்பிக்குறே?  நான் எப்ப உன்ன லவ் பண்றேன்னு சொன்னேன்? அன்னைக்கு நைட் நான் ஒன்னும் உன்னை லவ் பண்றேன், கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி உன் கூட இருந்துட்டு உன்னை கழட்டி விட்டுட்டு போகல… அன்னைக்கு உனக்கும் அது தேவைப்பட்டுச்சு எனக்கும் தேவைப்பட்டுச்சு இரண்டு பேரும் ஒண்ணா இருந்தோம்… அவ்வளவு தான்” என்று தேவ் சற்று கோபத்தோடு கூற 

 

“தேவ்…. வேண்டாம் தேவ் இப்படி பண்ணாதீங்க, என்னால நீங்க இல்லாத ஒரு வாழ்க்கையை யோசிச்சி கூட பார்க்க முடியாது.. ப்ளீஸ் தேவ் என்னை ஏத்துக்கோங்க.. நான் இப்போ உங்களை மட்டும் தான் முழுசா நம்பி இருக்கேன்” என்று அவள் அவன் காலில் விழுந்து கெஞ்ச 

 

“ஏய்… அம்மு… என்ன பண்ற? மொத எழுந்திரு… யாராவது பார்த்த என்னை என்ன நினைப்பாங்க?” என்றவன் அவளை எழுப்பி அவள் இடத்தில் அமர வைக்க, அம்முவோ மீண்டும் அவன் கைகளை பிடித்து கொண்டு கெஞ்சினாள்.

 

“இங்க பாரு அம்மு….  என்கூட இருந்த உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கனும்னா, இந்நேரம் எனக்கு எத்தனை கல்யாணம் ஆகி இருக்குன்னு எனக்கே தெரியாது, உனக்கு வேணா அது பர்ஸ்ட் டைம் இருக்கலாம்… பட் எனக்கு அது பர்ஸ்ட் டைம் கிடையாது உன்ன மாதிரி எத்தனையோ பொண்ணுங்க கூட நான் இருந்திருக்கேன். அது எதுவுமே லவ் கிடையாது. ஜஸ்ட் லாஸ்ட் என்னை பொறுத்த வரைக்கும் என்னோட ஒரே லவ் என்னோட லட்சுமி மட்டும் தான்…  அவளை இது நாள் வரை நான் என் பொண்டாட்டியா தான் நினைச்சுட்டு இருக்கேன். அப்படி இருக்கும் போது அவள விட்டுட்டு கூப்பிட்ட உடனே என் கூட படுத்த உன்ன மாதிரி ஒருத்தியா நான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு  நீ எப்படி எதிர்பார்த்த? உங்கள மாதிரி பொண்ணுங்களை எல்லாம் ஜஸ்ட் ஒரு தடவை சந்தோஷமா இருந்தோம் போனமான்னு இருக்கனும்.. அதை விட்டுட்டு காதல் கல்யாணம் எல்லாம்” என்றவன் மேலும் ஏதோ கூற வர, இவ்வளவு நேரம் கண்களில் கண்ணீரோடு அவன் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவள். இறுதியாக அவன் அவள் கேரக்டரை பற்றி தப்பா பேச ஆரம்பித்ததும் கோபத்தில் ஓங்கி அவனை ஒரு அரை விட்டவள்.

 

 “ச்சீ… போயிம் போயிம் உன்னை நம்பி என்னை நான் முழுசா உனக்கு கொடுத்தேன் பாரு.. என்னை சொல்லணும், சொல்ல போன இது எல்லாம் என்னோட தப்பு… அகல்யா அப்போவே உன்னை பத்தி சொன்னா… ஆனால், நான் தான் உன் மேல இருந்த மயக்கத்துல அவள் சொன்னதை சரியா காது கொடுத்து கேட்கல… உன்ன மாதிரி ஒரு கேவலமானவனை காதலிச்சேன்னு நினைக்கும் போதே எனக்கு என்னை நினைச்சு அருவருப்பா இருக்கு…” என்றவள் மேலும் கதறி அழ அதில் கடுப்பான தேவ்.. தன் முன் இருந்த அந்த டேபிளை ஓங்கி ஒரு தட்டு தட்டியவன்.

 

“ஜஸ்ட் ஷட் அப் யுவர் இடியட்… உன்ன மாதிரி எமோஷனல் ஃபூல்  எல்லாம் இப்படித் தான் லவ் அது இதுன்னு வந்து நிப்பீங்கன்னு நான் நெனச்சேன் அதே மாதிரி வந்து நிக்கிறே, வேணும்னா அன்னைக்கு என் கூட இருந்ததுக்கு எவ்வளவு பணம் வேணும்னு சொல்லு தரேன்…” என்று தேவ் தன் வார்த்தைகளை முடிக்க, அதில் மேலும் கோபமடைந்த அமுதினி…

 

“என்ன டா சொன்ன?என்ன சொன்ன? என்னை பார்த்த உனக்கு எப்படி இருக்குது? சொல்லு டா சொல்லு” என்று அவன் சட்டையை பிடித்து உலுக்கியவள் கண்களில் கண்ணீர் வழிய கேட்க, சுற்றி இருந்தவர்கள் அனைவரும் இவர்கள் இருவரையுமே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். அனைவரும் தங்களை தான் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர் என்பதை உணர்ந்த தேவ்.

 

“ஏய்…. அம்மு என்ன பண்ற? மொத என் மேல இருந்து கையை எடு… எல்லாரும் நம்பலை தான் பாக்குறாங்க” என்று அவன் எவ்வளவு கூறியும் கேட்காமல் அமுதினி கத்தி கொண்டு இருக்க அதில் ஒரு கட்டத்தில் தன் பொறுமையை இழந்த தேவ்.. பெண்ணவளை அறைந்து விட, அவளோ ஆடவனின் பலம் தங்க முடியாமல் கீழே விழுந்தால்.. உடனே அவளை தூக்கி அமர வைத்தவன்.

 

“ஏதோ போன போகுதே அப்படின்னு உனக்கு பேசி புரிய வைக்க ட்ரை பண்ண, நீ என் மேலையே கை வைப்பியா… இப்போ சொல்றேன் கேட்டுக்கோ டி… நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்ல…. நான் டேட் பண்ற 10 பொண்ணுங்கள நீ 11 பொண்ணு அவ்வளவு தான்… மொத உன்ன மாதிரி ஒருத்தி கூட பேசறதே வேஸ்ட் ஆப் டைம் எனக்கு உன்னை விட முக்கியமான வேலை எல்லாம் நிறைய இருக்கு… சோ நான் கிளம்புறேன். முடிஞ்சா நமக்குள்ள நடந்ததை மறந்துட்டு போய் வேலையை பாரு அப்படி இல்ல போய் சாவு” என்று கூறியவன் அவளை சற்றும் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து எழுந்து சென்று விட்டான் அவன் சென்றதும் கண்களில் கண்ணீரோடு ஏதோ நடப்பினம் போல்  நடந்தே தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தால்.

 

இனி அமுதினி என்ன செய்ய போகிறாள்? தேவ் தன் செய்த தவறை உணருவனா? அப்படி உணர்ந்து மீண்டும் அமுதினியிடம் வந்தால் அவள் அவனை ஏற்றுக்கொள்வாளா? இந்த கேள்விகளுக்கான விடையங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்க…

 

யாருக்கு இங்கு யாரோ?

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.2 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!