6. சிறையிடாதே கருடா

4.9
(22)

கருடா 6

“யூ… யூ ராஸ்கல்… ஐ கில் யூ” என நீருக்குள் இருந்த மீன் தவறித் தரையில் விழுந்து குதித்தது போல் குதித்துக் கொண்டிருந்தாள்.

அதைத் தாலி கட்டியவனோ, ஏதோ குரங்கு வித்தை காட்டுவது போல் பல்லை இளித்துக் கொண்டு பார்த்திருந்தான். அவன் பார்வையும், சிரிப்பும் அடிவயிற்றைக் கபகபவென்று எரிய வைத்தது. அந்த நெருப்பின் எரிச்சலைத் தாங்கிக் கொள்ள முடியாத பழங்களுக்கு நடுவில் மறைந்திருந்த கத்தியை உருவி எடுத்து,

“நாளைக் காலையில நீ செத்துட்டன்ற நியூஸ் தான்டா இந்தத் தமிழ்நாட்டையே யோசிக்க வைக்கப் போகுது.” அவன் வயிற்றில் குத்துவதற்காக ஓடினாள்.

அதுவரை சிரித்துக் கொண்டிருந்தவனுக்குக் கதி கலங்கியது. அவற்றைப் பார்வையில் காட்டினால் அவளின் ஆக்ரோஷம் அதிகமாகிவிடும் என்பதால், சுதாரிப்போடு நின்றிருந்தவன் தன் வயிற்றின் மேலிருக்கும் ஆடையை உரசிக்கொண்டு கத்தி வந்ததும் பாய்ந்து அவள் கையைப் பிடித்தான்.

“கைய விட்டின்னா ஒரே குத்துல சாவடிச்சிடுவேன். இல்ல உடம்பு முழுக்கக் குத்திக் குத்திச் சாவடிப்பேன்டா.”

“ஹேய்! இது அதுல்ல!” கேலி செய்து திசை திருப்பப் பார்த்தான்.

அவன் எண்ணத்தை அறியாதவள் குத்தும் செயலை நிறுத்திவிட்டு, “எதுடா?” எனச் சிடுமூஞ்சியைக் காட்டினாள்.

“அதான்டி! ஒரு நாளைக்கு ஒரு டிவி ஷோல ஐஸ்கிரீமைக் குத்திக் குத்திப் பார்த்துச் சாப்பிடுவன்னு உன்ன மாதிரியே ஒரு கிறுக்கி சொல்லிக்கிட்டு இருந்துச்சே, அதோட ஃபபேனா நீ”

“என்னடா பேசுற பைத்தியக்கார! உன் குடலை உருவிச் சாவடிக்கப் போறன்னு சொல்றேன், கொஞ்சம் கூடப் பயம் இல்லாம நக்கல் அடிக்கிற.”

“உன் கழுத்துல எனக்கு ஆறு முடிச்சுப் போட்டனோ, அன்னைக்கே நான் செத்துட்டேன். இந்த உடம்பு என் குடும்பத்துக்காக மட்டும் தான் இருக்கு. குத்தி என்ன பண்ணப் போற?” என்றவன் அவள் கைகள் தளறுவதை நன்கு உணர்ந்தான்.

எண்ணம் எளிதாக முடிந்தது, அவளைப் பிடித்திருந்த கையில் இறுக்கத்தைக் கூட்டிக் கத்தியை உருவும் செயலில் கண்ணும் கருத்துமாக கருடேந்திரன் இருக்க, “பரவால்ல, செத்த உடம்பா இருந்தாலும் திரும்பச் சாவு… இப்படி ஒருத்தன் பிணமாய் கூட என் வீட்ல இருக்கக் கூடாது.” எனத் தோல்வியின் பக்கம் சென்று கொண்டிருந்தாள்.

“அப்போ, குத்தத்தான் போற.”

“ஆமாடா நாயே!”

“சரிடி பேயே!”

“ஏய்! மரியாதையா பேசுடா…”

“அதை முதல்ல நீ ஃபாலோ பண்ணுடி களவாணி.”

“நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளு, உனக்கு மரியாதை ஒரு கேடு.” எனக் காரித் துப்ப முகத்தைத் திருப்பியவளின் கழுத்து சுளுக்கிக் கொண்டது.

கழுத்தை ஒரே வளையாக வளைத்தவன், “ஆம்பளை ஹேர்கட் வச்சிருந்தா, நீ பெரிய கபாலியா? மூஞ்சியும், மொகரையும் பாரு. என்னையவா குத்த வர, இருடி! நடுமண்டையில நச்சுன்னு கத்தியச் சொருகுறேன்.” என அவள் கையில் இருந்த கத்தியை லாவகமாகப் பிடுங்கினான்.

கழுத்தைத் திருப்ப முடியாது நொந்து போனவள் கத்தியை அவன் கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட, அவன் சொன்ன வார்த்தை உச்சி மண்டையில் சொருகியது பயத்தைக் கொடுத்தது. பயத்தில் விழிகளைச் சுழற்றி, அஞ்சிக் கொண்டிருக்கும் தைரியசாலி மனைவியைக் கண்டவன்,

“கொஞ்சமாச்சும் புத்தி இருந்தா தான மண்டையில மசுரு முளைக்கும். வளராத முடியை வெட்டிவிட்டு, எனக்கு திமிர் ஜாஸ்தின்னு பந்தா வேற.” என்றான் கேலியாக.

“என் கழுத்தை என்னடா பண்ண நாயே?”

“என்ன?”

“என் கழுத்தை என்னடா பண்ண நாயேன்னு கேக்குறேன்டா நாயே…” என்றதும் தான் தாமதம், சுளுக்கிப் போயிருந்த கழுத்தின் மற்றொரு புறத்தில் முள் எனும் பற்களால். கடித்தான்.

ஒரே நேரத்தில், இடதுபுறக் கழுத்தின் பக்கம் ஆயிரம் முள்கள் ஒன்றாகக் குத்தியது போல் அலறித் துடித்தவளுக்குச் சரியானது. அதைக் கூட உணராது, கடித்த பல் தடத்தின் மீது கை விரல்களை அழுத்தமாக வைத்தவள் துள்ளிக் குதித்தாள். அதையும் அவன் குரங்கு ஆடுவது போல் சாவகாசமாகப் பார்த்துக்கொண்டு மெத்தையில் அமர்ந்தான்.

“பொறுக்கி நாயே, ஏன்டா கடிச்ச?”

“நாய் கடிக்கத்தான் செய்யும்!”

“நாயே… அதுக்கு இப்படியாடா கடிச்சு வைப்ப…” என்றவளை ஒரே இழுப்பில் தன்மீது சரிய வைத்தவன், மெத்தையில் தள்ளிச் சுளுக்குப் பிடித்த கழுத்தின் பக்கம் பல். தடங்களைப் பதித்தான்.

“ஆ… ஹே… அம்மா…” என அவள் எவ்வளவு கத்தியும் பலனில்லாமல் போனது.

ஒரு கட்டத்திற்கு மேல் வலி பொறுக்க முடியவில்லை ரிதுவால். விழிகளின் விளிம்பில், ஒரு துளிக் கண்ணீர் தேங்கி நின்றது. அதை அறியாதவன் தன் ஆத்திரம் முழுவதையும் காட்டிவிட்டு,

“எதைக் கேவலம்னு சொல்லி என்னைக் குத்திக் காட்டுறியோ, அதுக்குக் கோவம் வந்தா உன் உடம்பு தாங்காது. வைக்கிறதும் உன் பாம்புநாக்கு கைல தான்டி இருக்கு.” என்றான்.

அதற்குமேல், ரிதுசதிகா என்னும் சூறாவளி அமைதி காப்பதாக இல்லை. வலி போகும் வரை தன்னைப் பொறுக்கச் செய்தவள், எழுந்து நின்று அவன் மூக்கில் ஒரு குத்து விட, மொத்த மூளையும் உருகி மூக்கு வழியாக வந்தது போல் இருந்தது. கருடேந்திரனுக்கு. சிவப்பு நிறச் சாயம் வழிவதைக் கண்டு பதறியவன் கழிவறைக்கு ஓட,

“எங்கடா போற?” என இழுத்துப் பிடித்து மெத்தையில் தள்ளினாள்.

“இந்த வயலன்ஸ் வேலையெல்லாம் இந்த ரிது கிட்ட ஆகாது. கராட்டெல்லாம் கரகாட்டம் ஆடுற மாதிரி எனக்கு. பணக்காரி தான, பஞ்சுமெத்த மாதிரி இருப்பான்னு நெருங்கிடாத. தூக்கி அடிச்சேன், ஒன்னுக்குப் போகக் கூட எந்திரிக்க முடியாது.”

விடாமல் இரத்தம் சிந்திக் கொண்டிருக்க மயக்கம் வருவது போல் இருந்தது. அதை எப்படியோ கட்டுப்படுத்தியவன், பெயருக்கென்று சிறிதாக வளர்ந்திருக்கும் அந்த முடிகளைக் கைக்குள் சுருட்டி, “பொண்ணா நீ! சரியான பஜாரிக்குப் பொறந்தான். பஜாரியா இருப்ப போல.” எனத் தலையைச் சுழற்ற,

“எங்க அம்மாவப் பத்திப் பேசாதடா” என எச்சரித்தாள்.

“அப்படித்தான்டி பேசுவேன். உன்ன உங்க அம்மா சரியா வளர்த்திருந்தா, இப்படிப் பஜாரி மாதிரி ஆடிட்டு இருக்க மாட்ட. எந்த ஹேங்கில்ல உங்கப்பனுக்கு நீ பொண்ணு. மாதிரித் தெரியுறன்னு இந்தக் கல்யாணத்தை நடத்தி வச்சிருக்காரு.”

பேசிக் கொண்டிருக்கும் பொழுதே வலது காலை அவன் இரு கால்களுக்கு நடுவில் வைத்தாள். ஒரு கையை அவன் இடையோடு சுற்றிக்கொண்டு, மறுகையால் அவன் கழுத்தை வளைத்து நடுமுதுகில் கை முட்டியால் ஓங்கிக் குத்த, சர்வமும் அடங்கிப் போனது அவளின் கணவனுக்கு. பிடித்திருந்த முடியை விட்டவன், கண்ணெல்லாம் இருந்து போய் தொப்பென்று அமர்ந்தான்.

“இதைத்தான்டா சொல்லுவாங்க, எங்கயோ போற மாரியாத்தா… இவனக் கொஞ்சம் என்னன்னு கேளாத்தான்னு. வார்னிங் கொடுத்தும் திருந்த மாட்டல்ல. நீ இன்னைக்கு எப்படித் தூங்குறன்னு பார்க்கிறேன்டா.”

அவளைப் போல் அவள் கால்களுக்கு நடுவில் இரு கால்களையும் நுழைத்தான். இடையில் கை நுழைத்து இழுத்த கருடன், அவள் பாரம் தாங்காது தரையில் விழுந்தான். அவனுடன் எந்தச் சேதாரமும் இல்லாமல் கணவன் மீது சரிந்தவள் விலகப் பார்த்தாள். சிறிதும் இடம் தராதவன் சேர்த்தணைத்துக் கொண்டு, அவளைத் தரையில் படுக்க வைத்து உரசாமல் கைகளை ஊன்றிப் படுத்திருந்தான்.

ரிதுசதிகா தரையில் படுத்துக் கொண்டு பார்வையால் எரிக்க, “ராத்திரியெல்லாம் தூங்காம நான் தூங்குற அழகைப் பார்க்கப் போறியா?” குறும்புடன் கேட்டதும்,

“இவர் பெரிய மன்மதக்குஞ்சு! தூங்குற அழகைப் பார்க்கப் போறாங்க.” என முகத்தைச் சுழித்தாள்.

“உன் முகரக் கட்டைக்கு மன்மதன் ஒரு கேடு!”

“எனக்கு என்னடா?”

கண்ணியமாக அவள் விழிகளை மட்டுமே நோக்கிக் கொண்டிருந்தவன், பார்வையைக் கீழே தாழ்த்தி மேலே கொண்டு வந்து, “ஒருத்தன் உருண்டு பிறந்து, பேண்ட்குள்ள கையை விட்டு இழுத்துப் படுக்கவச்சு இப்படிப் பேசிட்டு இருக்கான், கொஞ்சம் கூடச் சொரணை இல்லாம எருமை மாடு மாதிரிப் படுத்திருக்க. இந்த லட்சணத்துல மன்மதன் வந்து என்ன கிழிக்கப் போற? உன் இடத்துல வேற எந்த பொண்ணாவது இருந்தா, இந்நேரம் ஃபஸ்ட் நைட்ட முடிச்சிருப்பா…” எனக் கிசுகிசுத்தான்.

பொங்கி வரும் ஆத்திரத்தை அடக்க முடியாமல், வாய்க்குள் சுரந்த அனைத்து எச்சிலையும் குவித்து அப்படியே அவன் முகத்தில் இடம் மாற்றி, “எந்திரிடா…” என்றாள்.

சிறிதும் சலித்துக் கொள்ளாமல் அவள் கொடுத்த எச்சிலை அவள் முகத்திற்கே மாற்றினான் உரசி.

தன் முகத்தோடு முகம் உரசியவன் நெருக்கத்தை வெறுத்தாள். இரு முகத்திற்கும் நடுவில் உலாவிக் கொண்டிருக்கும் எச்சிலால், உச்சகட்ட அருவருப்பிற்கு ஆளானவள் தள்ளிவிட்டு, “வெளிய போடா” கத்தினாள்.

“நான் எதுக்காகப் போகணும்? உங்க அப்பாதான் என் பொண்ணுக்கு வாழ்க்கை கொடுன்னு கல்யாணம் பண்ணி வச்சாரு.’ நீதான் புடிக்கலனாலும் பரவால்ல. என்கூடவே இருன்னு இங்க கூட்டிட்டு வந்த. நான் இங்கதான் இருப்பேன். உனக்குப் பிடிக்கலைன்னா நீ வேற ரூமுக்கு…” என இழுத்தவன் அவளுக்கு நேராக விரல் நீட்டி,

“தெருவுல போய் படுடி களவாணி!” என்றான்.

“வெளிய போன்னு சொல்லிட்டேன்.”

“முடியாதுன்னு நானும் சொல்லிட்டேன்.”

“இது என்னோட வீடு, நான் சொல்றதைத் தான் நீ கேட்கணும்.”

“அது நான் வராத வரைக்கும். இனிமே இது என்னோட வீடு!” என்றவன் முழு உடலையும் மெத்தையில் ஒட்ட வைத்து, கால்களை அகலமாக வீசிச் சுதந்திரமாகப் படுத்தான்.

“சொல்லிட்டே இருக்கேன், படுக்கவா செய்யுற?”

மூக்கு விதைக்க முறைத்து, அருகில் இருக்கும் தண்ணீரை எடுத்து அவன் மீது ஊற்ற, “அய்யய்ய! பெரிய இம்சைடி நீ. இதுக்கு மேல உன்கிட்டப் பேச இந்த உடம்புல எனர்ஜி இல்லை.” என முகத்தைத் துடைத்து எழுந்தவன் அவளே அதிரும்படி ஒன்றைச் செய்தான்.

உன் போல் தனக்கு எந்த அதிர்வும் இல்லை என்று இரு கைகளால் அவளைத் தாங்கிக் கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தவன், நேராகப் பொன்வண்ணன் அறைமுன் நின்று,

“மாமனாரே… யோவ்! கேக்குதா இல்லையா? இந்த ராட்சசியைப் பெத்த என் மாமனாரே! வெளிய எழுந்து வாயா. நைசா இந்தப் பிசாசை என் தலையில கட்டிட்டு நிம்மதியாத் தூங்குற…” அறைக் கதவைக் காலால் உதைக்க ஆரம்பித்தான்.

காட்டுக் கத்தலாகக் கத்திக் கொண்டிருக்கும் மனைவியின் பேச்சைச் சிறிதும் காதில் வாங்காதவன், “யோவ்! வெளிய வாய்யா…” என்றிட கதவைத் திறந்தார்.

ஏதோ தலையணையை நீட்டுவது போல் கட்டியவளை அவருக்கு முன்பாக நீட்டியவன், “இது தொல்லை கொஞ்சம் கூடத் தாங்க முடியல. வருஷம் இது கூடக் குப்பை கொட்டுனியோ? இத்தனை வருஷம் கொட்டுன மாதிரி இன்னிக்கு ராத்திரியும் தூங்கி எந்திரிச்சுத் தோல. காலையில வந்து இந்தப் பிசாசைக் கூட்டிட்டுப் போறேன்.” என்றவன் மாமனார் பேசுவதைக் கூடக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மனைவியை உள்ளே தள்ளிவிட்டு,

“குட் நைட் டி களவாணி!” என நடையைத் திருப்பினான்.

இரவு எவ்வளவு தாமதமாகத் தூங்கினாலும், சரியாக எழும் நேரத்துக்கு எழுந்து விட்டான் கருடேந்திரன். எப்போது கண் விழித்தாலும் எதிரில் இருக்கும் குடும்பப் புகைப்படம் தான் வரவேற்கும். இன்று யார் என்று தெரியாதவள் வீட்டில், குடும்பத்தை இழந்து கண் விழித்திருக்கிறான். இயல்பை ஒத்துக் கொள்ள சிறிது நேரம் தேவைப்பட்டது அவனுக்கு. பெருமூச்சோடு எழுந்தவனுக்கு எல்லாம் புதிதாக இருந்தது.

இந்தப் புதிய சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள மனம் இல்லை என்றாலும், தன்னைப் புகுத்திக் கொண்டான் வலுக்கட்டாயமாக. அன்னையின் மனம் மாறும் வரை இங்குதான் இருக்க வேண்டும் என்ற நிலையை எண்ணி வருந்திக் கொண்டே கிளம்பியவன் கதவைத் திறக்க, நின்று கொண்டிருந்தாள் ரிது சதிகா.

மனையாளைச் சற்றும் எதிர் பார்க்காதவன், ஒரு நொடி திகைத்துப் பின் தெளிந்து, “பேய் மாதிரி வந்து நிக்கிற. காலங்காத்தால உன் மூஞ்சியப் பார்த்துட்டுப் போனா. தொழில் என்ன ஆகுறது?” என்றவன் நெஞ்சில் கை வைத்தவள்,

“ஆட்டோக்காரனுக்கு எப்படியும் அஞ்சோ பத்தோ தான் கிடைக்கப் போகுது. இதுக்கு எதுக்குடா இவ்ளோ பேச்சு?” எனத் தள்ளி விட்டு உள்ளே நுழைந்தாள்.

“எதுவா இருந்தாலும் உழைச்சுச் சாப்பிடுறேன். உன்னை மாதிரி அப்பன் காசுல வாழல.”

“எனக்கு இருக்கு, நான் சாப்பிடுறேன். உங்க அப்பா சம்பாதிச்சுப் போட்டு தான நீ படிச்ச. நீயா சுயமா முளைச்சிடலையே.”

“ஒரு வயசுக்கு மேல என் சொந்தக்கால்ல தான் நான் நிக்கிறேன்.”

“நல்லாப் பாருடா, நானும் என் சொந்தக்கால்ல தான் நிக்கிறேன்.”

“காலங்காத்தால ஏண்டி என்கிட்ட வம்பு பண்ற?”

“இன்னும் ஆரம்பிக்கவே இல்ல, அதுக்குள்ள சலிச்சுக்கிற.”

“ச்சீ ப்பே…”

வீட்டை விட்டு வெளியேறும் வரை பொறுமையாகக் கைகட்டிக் கொண்டு நின்றிருந்தவள், “எங்கடா போற?” அதிகாரமாகக் கேட்டாள்.

“தெரிஞ்சு என்ன பண்ணப் போற?”

“அட, சும்மா சொல்லு.”

“சவாரிக்குப் போறேன்.”

“சரி போ…”

“நீ என்னடி போன்னு சொல்றது?”

“எப்படியும் மூஞ்சக் கடுகடுன்னு வச்சுக்கிட்டுப் போன வேகத்துல வரப் போற. அதைத் தெரிஞ்சுதான் எதுவும் பேசாம, போயிட்டு வான்னு வழி அனுப்புது. வைக்கிறேன்.”

கட்டியவளின் வார்த்தைக்கு பின் அர்த்தம் புரியாது, முறைத்துக் கொண்டு தன் வீட்டிற்குக் கிளம்பினான். வரும் வரை இல்லாத தயக்கம் வீட்டு வாசலில் நின்றதும் உண்டாக, எப்போதும் அதிகாலை எழுந்து கிளம்பும் மகனுக்காகத் தேநீர் கோப்பையோடு நிற்பார். அன்னையின் சிரித்த முகமும், சுவையான டீயும் தான் அவனின் உற்சாகம்.

அந்த நினைவோடு எழுந்த சரளா, வாசல் தெளித்துக் கோலம் போடுவதற்காகக் கதவைத் திறக்க, அன்னைக்காக நின்று கொண்டிருந்தவன் அழகாகப் புன்னகைத்தான். மகனைப் பார்த்ததும் சடசடவென்று கண்ணீர் சுரந்தாலும்,

“இங்க எதுக்குடா வந்த?” கேட்டார்.

“நான் இங்க வரக்கூடாதாம்மா?”

“உன் பொண்டாட்டி இல்லாம வரக்கூடாது.”

“அவளுக்கும், நம்ம குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? நம்ம இந்த நிலைமையில இருக்குறதுக்கு அவ மட்டும்தான் காரணம். அவளுக்காக என்னை ஒதுக்கி வைக்கிறீங்க.”

“அவ இப்ப இந்த வீட்டோட மருமகள். புள்ள மட்டும் போதும்னு நினைக்கிற மாமியார் நான் இல்ல. சரியோ தப்போ, என் புள்ளைக்குப் பொண்டாட்டின்னு ஆகிட்டா. அவளை மையப்படுத்தி தான் நம்ம எல்லாரோட உறவும் இருக்கு. அது எனக்கும் நிலைக்கனும்னு தான் அவளோட உன்னை வரச் சொல்றேன்.”

“நீ நினைக்கிற மாதிரி அவ இல்லம்மா. அவளுக்கும் நமக்கும் ஏணி வச்சா கூட எட்டாது. அப்படிப்பட்டவ இங்க வந்து வாழ்வான்னு எப்படி நினைக்கிற?”

“எல்லாம் உன் மேல இருக்க நம்பிக்கைதான். இதுவரைக்கும், எந்தச் சூழ்நிலையிலும் உன் மேல வச்ச நம்பிக்கையை நீ தோற்கடிச்சதே இல்லை.” என்றவர் கவலை படித்த முகத்தோடு,

“வலுக்கட்டாயமா அவளுக்குத் தாலி கட்டுனதைத் தவிர.” என்றார்.

அன்னை முன் தலை குனிந்து நின்றவன், “சாரிம்மா… ஏன் அப்படிப் பண்றேன்னு இப்ப வரைக்கும் புரியல. தெரியாமல் பண்ற தப்புக்கு இவ்ளோ பெரிய தண்டனையைக் கொடுக்குறீங்களே.” என்றான்.

“தெரியாமப் பண்ணாலும் அவதான் இனி உன் வாழ்க்கை. நான் எனக்கு வேணா உன் வாழ்க்கையை விட்டுப் போகலாம் கருடா. ஆனா, அவதான் உன் கூட கடைசியா. வரைக்கும் வரப்போறா… அப்படிப்பட்ட உறவை நல்லபடியா வச்சுக்கோன்னு சொல்றேன்.”

“சரி விடும்மா. அதெல்லாம் அப்புறம் பார்த்து. நேத்துல இருந்து ஒண்ணுமே சாப்பிடல, கொஞ்சம் டீ தரியா…” என்று கேட்டேன் அந்தத் தாயின் வயிறு பிரசவ வலிக்கு. ஈடான பன்மடங்கு வலியை உணர்ந்தது.

இந்த முறை வந்த கண்ணீரை மறைக்காது, மகன் முன்பு படம் போட்டுக் காட்டியவர், “என் மகன் வாழ்க்கைக்காகத்தான் இந்தப் பிரிவு. கொஞ்ச நாள் கஷ்டப்பட்டா வாழ்க்கை. முழுக்க நல்லா இருக்கலாம். அம்மா சொல்றதை இப்பவாவது கேட்டு நடந்துக்க…” எனச் சொல்லாமல் சொன்னார்.

தன் முகம் பார்த்தால் அன்னையின் மனம் கரைந்து விடும் என்ற எதிர்பார்ப்போடு வந்தவன், முழுவதும் தோற்றுப்போய் விரக்தியான புன்னகையோடு, “எனக்காக இல்லனாலும் என் அம்மாவுக்காக அவளை இங்க கூட்டிட்டு வருவேன்.” என்று விட்டுக் கிளம்பியவன் மீண்டும் அன்னையின் முகத்தைப் பார்த்து, “ஒன்னு மட்டும் சொல்றேம்மா. இப்போ உங்க மகன் ரொம்பக் கஷ்டப்படுறான். இந்தக் கஷ்டத்துக்கு நீங்களும் ஒரு காரணம். இனி நீங்களே பேசினாலும் உங்ககிட்ட நான் பேசமாட்டேன்.” என்று விட்டு வெளியேறினான்.

கதவைச் சாற்றிய சரளா, கண்ணீரோடு அறைக்கு ஓடிவிட்டார். இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சத்தியராஜ் மனைவியின் தலை வருடி, “எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்.” என்றிட,

“என் புள்ள பசிக்குதுன்னு சொல்லிட்டுப் போறாங்க. பெத்தவளா அந்த வார்த்தையைத் தாங்க முடியல. அப்படி என்னங்க பெரிய பாவத்தைப் பண்ணிட்டேன்… பெத்த ரெண்டும் அங்கயும், இங்கயும் இருந்து கஷ்டப்படுத்துறானுங்க.” என மனம் விட்டு அழுதார்.

அவனது ஆட்டோ இரண்டு தெரு தள்ளி நின்றிருக்கும். இவன் இருக்கும் தெருவில், ஆட்டோ நிறுத்த இடமில்லை. குடும்பத்திற்கு அடுத்து நெருக்கமான ஒரு ஆள் இந்த ஆட்டோ தான். அதற்குக் கன்னியப்பன் எனப் பெயரிட்டவன், தம்பியைப் போல் நடத்திக் கொண்டிருப்பான். அந்த வாகனத்திற்குத் தெரியும், கருடனின் உழைப்பு, கஷ்டம், மன உளைச்சல், கண்ணீர் அனைத்தும்.

சில நேரம் உணவைக் கூட மறந்து ஓடிக் கொண்டிருப்பவனிடம், சிறிது நீரையாவது அருந்து எனக் கவலை கொண்டான் கன்னியப்பன். புது ஆட்டோ போல் தினந்தோறும் நேரமெடுத்து அதைத் துடைத்து, முத்தமிட்ட பின்பு தான் சவாரியை ஆரம்பிப்பான். கடந்த சில நாள் ஏற்பட்ட மனக்கசப்பால், கன்னியப்பனைச் சரியாகப் பார்க்காமல் இருந்தவன் காணச் சென்றான்.

அவனுக்காக என்றும் காத்திருக்கும் கன்னியப்பன் இன்று காத்திருக்கவில்லை. வண்டியைக் காணாது முதலில் மிரண்டவன், பின் தேடி அலைய ஆரம்பித்தான். கன்னியப்பனைத் தொலைத்துப் பெரும் அச்சத்திற்கு ஆளானவன், வீட்டிற்குச் சென்று கேட்கலாம் என்று நடந்து கொண்டிருக்க, அலைபேசியின் ஓசை காதை நிறைத்தது.

புதிய எண்ணமாக இருப்பதால் நெற்றிப் போட்டிக்கு நடுவில் கேள்விக் குறியைக் கொண்டு வந்தவன், ட்ரூ காலரில் வந்த பெயரைக் கண்டு செவியோடே ஓட்ட வைக்க,

“என்னப்பா புது மாப்பிள்ளை, உன் கன்னியப்பன் அங்க இருக்கானா?” என்ற எள்ளல் குரல் கேட்டது.

கட்டியவளின் வார்த்தையில் நடையை நிறுத்தியவன், கேள்விக் குறியைப் பெரிதாக்கி அடுத்து வரும் வார்த்தைக்காகக் காத்திருக்க, “ரொம்பத் தேடி அலையாத, நேரம் தான் வேஸ்ட். உன் கன்னியப்பனுக்கு உன்னைப் பிடிக்கலையாம். அதனால என்கிட்ட வந்துட்டான். இப்ப நீ என்ன பண்ற, போன வேகத்துலயே கிளம்பி வர… சாரி மேடம், நேத்து ராத்திரி உன்கிட்ட நடந்ததுக்காக மனப்பூர்வமா மன்னிப்புக் கேட்டுக்குறேன். தயவு செஞ்சு என் பொழப்பைக் கெடுத்துடாதீங்க. அதை வச்சுதான் நான் சோறு தின்னுட்டு இருக்கேன். கால்ல விழுறேன், என் கன்னியப்பனைக் கொடுத்துடுங்கன்னு சொல்லிக் கை எடுத்து கும்பிடு.” என்ற ரிதுவின் குரல் மிளகாய்ப் பொடியைக் கரைத்து வெறும் வயிற்றில் குடித்தது போல் இருந்தது.

நான்கு புறமும் பற்றிக் கொண்டு எரியும் எரிச்சலுக்கு நடுவில் எச்சிலை விழுங்கி, “நீ என் விஷயத்துல ரொம்ப விளையாடுற. என் குடும்பத்துக்காக ரொம்ப நாளுக்குப் பொறுமையா இருக்க மாட்டேன். பத்து நிமிஷம் டைம் தரேன், அதுக்குள்ள என் கன்னியப்பன் இங்க வந்து நிக்கணும்.” எனக் கருடேந்திரன் மிகத் தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்க,

“இல்லனா நீ வந்து எடுத்துட்டுப் போவியா?” எனக் கலகலவென்று சிரித்தாள் ரிதுசதிகா.

“வேணாம்!”

கணவன் என்ற பொறுப்பை ஏற்றுக் கொண்டவன், கடிக்கும் பல்லின் ஓசை தெள்ளத் தெளிவாகக் கேட்டது கட்டியவளுக்கு. அந்தச் சத்தத்தைக் கண்டு உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டவள் சாவகாசமாக,

“ஒரு ஆட்டோக்காரன் என் புருஷனா இருக்கக் கூடாது. வேலை வெட்டிக்கே போகாம, மூணு வேளைக்கும் இந்த வீட்டோட உட்கார்ந்து சோறு தின்னால் கூட எனக்கு. ஓகே. தாலி கட்டின பாவத்துக்கு வகை வகையா தின்னு. ஓசிக் காத்துல உட்கார்ந்து கூச்சமே இல்லாம வாழ்க்கையை அனுபவி. என்ன வேணா பண்ணிட்டுப் போ… ஆனா ஆட்டோ ஓட்டக் கூடாது.” பதில் கொடுத்தாள்.

“எந்த ஸ்டேட்டஸ்காக என்னை அவமானப்படுத்துனயோ, அதைத்தான் ஒண்ணுக்கு ரெண்டு தடவை தாலி கட்டிச் சிதைச்சிருக்கேன். இனியும் புத்தி கெட்டு மட்டமாப் பேசின, உன் சாம்ராஜ்யம் மொத்தமும் கலைஞ்சிடும்.”

“கலையுதோ, முளைக்குதோ? இனி நீ ஆட்டோ ஓட்டப் போகக்கூடாது.” என்றவள் தன் கையில் இருக்கும் கை கடிகாரத்தைப் பார்த்துவிட்டு,

“உனக்காக ஒதுக்குன இந்தப் பத்து நிமிஷத்தை என் வாழ்க்கையில ரொம்ப வேஸ்ட்டான டைமா பீல் பண்றேன். இனியும் டைம் வேஸ்ட் பண்ண என்கிட்ட டைம் இல்ல. சோ, பாய்டா வெட்டி புருஷா…” என்றவளின் நேரத்தை முழுதாகக் கெடுப்பதற்காக, இரண்டு கால் பாய்ச்சலோடு ஓடினான் கருடேந்திரன்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!