7. காயமின்றி வாழும் காதல்

4.2
(6)

காயமின்றி வாழும் காதல் – 7

விடிந்தால் திருமணம். மண்டபத்தின் மொட்டை மாடியில் அமர்ந்து தீர்த்தத் திருவிழா நடத்தி கொண்டு இருந்தார்கள் ரவியின் நண்பர்கள். மூர்த்திக்கு தெரிந்தால் அவ்வளவு தான். அதனால் அவர்களை அளவாக குடிக்க சொல்லி கொண்டு இருந்தான் ரவி. அவன் கொஞ்சம் கூட குடிக்கவில்லை.

“என்ன மச்சான் நீ எருமையோ கழுதையோ எதுவா இருந்தாலும் உனக்கு வாக்கப்பட முடிவு செஞ்சுடுச்சு போல அந்த பிள்ளை?” நண்பன் ஒருவன் சீண்டினான்.

அவன் குறிஞ்சியை தான் சொல்கிறான் என்று நன்றாக தெரியும் ரவிக்கு. அதனால் “குடிச்சிட்டு உளறாம ஒரு ஓரமா படு” என்றான் கடுப்பாக.

“இல்லை மச்சி, அவன் சொல்றது ஹண்ட்ரட் பெர்ஸன்ட் கரெக்ட். என்கிட்ட காட்டினான். நானும் பார்த்தேன். என்ன ஒரு லுக்கு! நீ கிட்ட போனாலே பொண்ணு உருகுதே…. அவனவன் ஒரு பொண்ணை கரெக்ட் பண்ண என்ன என்னவோ பண்றானுங்க…. நீ முதுகில நாலு அடியை போட்டு கரெக்ட் பண்ணிட்டே மச்சான்! கிரேட் டா” என்று சிரித்தான் இன்னொருவன்.

“பேசாம தூங்குங்க டா. நான் கிளம்புறேன் எனக்கு நாளைக்கு நிறைய வேலை இருக்கு” என்று கிளம்பி விட்டான் ரவி.

நண்பனிடம் ஒத்துக்கொள்ளவிட்டாலும் ரவிக்கு இன்று அவளை புரிந்தது. புரிந்ததும் அவன் என்ன உணர்கிறான் என்றே அவனுக்கு புரியவில்லை. கோபம் எதுவும் வரவில்லை ஆனால் இவளுக்கு ஏன் இப்படி ஒரு எண்ணம் வந்தது என் மேல்? என்று வழக்கம் போல் அவள் மேல் எரிச்சல் தான் வந்தது. அவளை புரிந்து கொண்டது போல் காட்டி கொள்ளாமல் வேகமாக விலகி வந்து விட்டான் ரவி.

அன்று இரவு மண்டபத்தில், பெண் அழைப்பு முடிந்து வந்திருந்த உறவினர்களுக்கு சாப்பாடு நடந்து கொண்டு இருந்தது. அப்போது ரவியிடம், குறிஞ்சியின் வீட்டில் இருந்து சாமான் சிலவற்றை எடுத்து கொண்டு வரச்சொல்லி கூறினார் மேகலா. இவர்கள் வீட்டில் வைத்து இருந்தால் விருந்தினர்கள் வரும் சமயம் எதுவும் காணாமல் போய் விட வாய்ப்பு என்று கோகிலாவின் வீட்டில் வைத்து இருந்தார். குறிஞ்சி வீட்டில் இருப்பதாகவும் அவள் எடுத்து தருவாள் என்றும் சொன்னார். மண்டபம் வீட்டின் அருகில் தான். நடந்தே சென்று விடும் தூரம் தான்.

அவள் வீட்டிற்குள் வந்தவன், கதவு திறந்திருந்த போதும் குரல் கொடுத்தான். உள்ளே வருமாறு அழைத்தாள் அவள். உள்ளே சென்றான் அவன் அங்கே, ஆறு மாத குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் குறிஞ்சி.

“யார் குழந்தை இது? அம்மா, இந்த லிஸ்ட்ல சாமான் எல்லாம் வாங்கி வர சொன்னாங்க. எடுத்து கொடு.”

“அந்தோ அங்க தான் இருக்கு அத்தான்….ப்ளீஸ் நீங்களே எடுத்துக்கோங்க….” என்றவள் அதே அறையின் மூலையை காண்பித்தாள். பல கூடைகள், சாக்கு பைகள் இருந்தன அங்கே.

அவளை முறைத்தபடி அங்கே சென்று தேடினான் அவன். ஆனால் அவனுக்கு பல பொருள் எங்கு என்று தெரியவில்லை. அதனால்,

“குழந்தை அழுகவே இல்லை, நீ ஏன் இப்போ ஆட்டிக்கிட்டு இருக்கே? எனக்கு வந்து ஹெல்ப் பண்ணலாம்ல….” என்று அலுத்து கொண்டான் அவளிடம்.

“அய்யோ உங்களுக்கு தெரியாது அத்தான், எப்படி சத்தமா அழறா தெரியுமா? கீழே போட்டா அவளோ தான். பாப்பா தூங்கறா நீ பக்கத்தில் மட்டும் இரு மா, நான் சாப்பிட்டு வரேன் சொன்னாங்க அந்த அக்கா. தீடீர்னு முழிச்சிட்டு பாப்பா ஒரே அழுகை. கொஞ்சம் நேரம் என்ன என்னவோ பண்ணி பார்த்தேன் அத்தான், தூக்கி வைச்சுக்கிட்டா மட்டும் தான் அழுகலை. நான் என்ன பண்றது?”

“சரி நான் தூக்கி வைச்சுக்கிறேன், நீ எனக்கு தேடிக் கொடு….” என்றான் ரவி.

“அது…. அது…. ஸாரி என்னால முடியாது அத்தான்….”

“ஏன்? மேடம் ஊருக்கு எல்லாம் ஓடி ஓடி உழைப்பீங்க…. எனக்கு இதை பண்ண முடியாதா?” கோபமாக கேட்டவன் அவள் அருகில் நெருங்கி அவள் கையை பிடித்து எழுப்பினான்.

மடியில் குழந்தையுடன் இருந்தவள் எழாமல் மல்லுகட்ட, அவள் கையில் இருந்த குழந்தையை வாங்கினான் ரவி. வாங்கி அவன் தோளில் போட்டு கொண்டு,

“எழுந்திரு!” என்றான் கட்டளையாக.

அப்போதும் அவள் தலையை முடியாது என்பது போல் ஆட்ட, மிகுந்த கோபம் வந்தது அவனுக்கு. குழந்தையை மெத்தையில் படுக்க வைத்து விட்டு அவள் கையை பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தான். இப்போது ஏனோ அழாமல் இருந்தது குழந்தை.

“அய்யோ அத்தான் ப்ளீஸ் ப்ளீஸ்….” என்றவளின் கெஞ்சலை கண்டுகொள்ளாமல் அவன் பலத்தை உபயோகித்து எழுப்பி விட்டான். எழுந்து நின்றவளின் கோலம் கண்டு முதலில் கொஞ்சம் திகைத்தாலும் பின் சத்தமாக சிரித்து விட்டான் ரவி. அவள் அணிந்து இருந்த புடவை கொசுவம் அவிழ்ந்து விழுந்தது. குழந்தையால் அவிழ்ந்த புடவையை சரி செய்ய முடியாமல் சும்மா சொருகி வைத்து இருந்தாள் குறிஞ்சி. குழந்தை தான் தூங்குகிறதே என்று அவள் உடைமாற்றி விடலாம் என்று ஊக்குகளை கழட்டும் போது தான் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது. அதன் பின் குழந்தையை சமாதனம் செய்ய அவள் பட்ட பாட்டில் எல்லாம் அவிழ்ந்து விட்டது. அவள் வீட்டிலும் யாரும் இல்லை. அனைவரும் எதிர் வீட்டில் இருந்தார்கள். அங்கே சதமாக இருக்கிறது என்று தான் இங்கே வந்தார் குழந்தையின் தாய்.

அவன் சிரிப்பதை கண்ட குறிஞ்சி, “ப்ளீஸ் சிரிக்காதீங்க அத்தான்….” என்றபடி மீண்டும் மெத்தையில் அமர்ந்து கொண்டாள். அவள் சொன்னவிதத்தில் அவள் முகத்தை பார்த்தான் ரவி. சிவந்து வெட்கி கிடந்தது அது. அவளை முறைப்பெண், வயது பெண் என்ற எந்த கண்ணோட்டத்திலும் பார்க்காத ரவிக்கு அவளின் முகச்சிவப்பிலும் வெட்கத்திலும் கொஞ்சம் சுதாரித்தான். அய்யோ, என்ன இருந்தாலும் ஒரு வயது பெண் இவள் என்று உணர்ந்து,

“புடவையை சரி பண்ணிக்கோ, நான் போறேன்….” என்று வெளியே செல்ல போனான்.

அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த குழந்தை இப்போது சத்தமாக அழுதது. அடடா என்று குழந்தையை தூக்கி கொண்டு வெளியே செல்ல முயற்சித்தான் ரவி. ஆனால் இம்முறை அவன் தூக்கவும் அழுதது குழந்தை. என்ன இப்படி கத்தி அழுது? என்று வேகமாக குழந்தையை அவளிடம் கொடுத்தான் ரவி. உடனே அழுகை நின்றது. பாவமாக பார்த்தாள் குறிஞ்சி ரவியை.

“நான் போய் யாரையாவது வரசொல்றேன்….” என்று கிளம்ப போனான்.

“அய்யோ, இப்போ நீங்க போய் சொல்லி யாரவது வந்தா ஏதாவது தப்பா யோசிப்பாங்க, வேண்டாம்” என்றாள்.

“இப்படியே இருக்க போறியா? சரி நான் திங்க்ஸை எடுத்திட்டு கிளம்புறேன்….” என்று அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான் ரவி. பொருட்கள் தேடும் அவனையே பார்த்த குறிஞ்சி, அவனிடம் ஏன் அப்படி கேட்டாள் என்று அவளுக்கு தெரியாது! அவனும் ஏன் அதற்கு ஒத்துக்கொண்டான் என்று அவனுக்கும் தெரியாது. ஆனால் நடந்தது.

“அத்தான், பாப்பாவை என் தோளில் போட்டு நீங்க பிடிச்சுக்கிறீங்களா? நான் வேகமாக புடவையை சரி பண்ணிக்கிறேன் என்றாள். அவள் சொன்னதை செய்யும் போது தான் அது எவ்வளவு தவறு என்று இருவருக்கும் புரிந்தது.

முந்தானை ஊக்கும் இல்லாததால் அதையும் சொருகி தான் வைத்து இருந்தாள் குறிஞ்சி. அவள் கொசுவத்தை சரி செய்ய, இவன் பிள்ளையை பிடித்து கொண்டான். இவன் பிடித்து இருப்பதால் அசௌகரியத்தில் வேகமாக துள்ளிய பிள்ளையை அழுத்தி அணைத்து பிடித்தான் ரவி. அவளையும் சேர்த்து தான் அணைக்க வேண்டி இருந்தது. முந்தானையை கையோடு பிடித்து இழுத்து கொண்டு துள்ளியது குழந்தை. மொத்தமாக புடவை அவிழ்ந்ததில் ரவியின் முன் அரைகுறையாக நின்றாள் குறிஞ்சி. இருவரும் பதறி போயினர்.

சற்று அதிகமாக பதறிய குறிஞ்சி தன்னை மறைத்து கொள்வது போல அவனை நெருங்கி நின்றாள். “ஸாரி ஸாரி அத்தான்” என்றவள் அவர்களுக்கு இடையில் இருந்த குழந்தையை அவனிடம் இருந்து வாங்கினாள்.

இருவரும் நெருக்கமாக நிற்கும் அந்த நேரத்தில், அவள் புடவை இன்றி வெட்கத்தில் மொத்தமாக அவன் மேல் சாய்ந்து நின்றாள். அவர்களுக்கு இடையில் குழந்தை. ரவிக்கு ஒரு நிமிடம் அவர்களை பற்றிய அனைத்தும் மறந்தது. சூழ்நிலை அவனின் நிதானத்தை மறக்கடிக்க, குறிஞ்சியின் அங்கங்கள் மீது பார்வையை படர விட்டான் அவன். கைகள் அவளை பற்றி இருந்த தோள்களை அழுத்தமாக வருடியது. அவன் கட்டுப்பாட்டையும் மீறி அவன் பார்வை அவளின் இளமையிலும், இடையிலும் படர்ந்து பரவியது. கண்கள் தீண்டிய இடத்தை கைகள் தீண்ட துடித்தாலும் செய்யவில்லை ரவி. மூச்சு விடவும் மறந்தவன் போல் அவளின் நெருக்கத்தில் அவளை தழுவி கொண்டு நின்றான் ரவி. அவள் மேல் எந்த உணர்வும் இல்லாத அவனுக்கே இந்த நிலை என்றால், அத்தான் மேல் ஆசை இருக்கும் குறிஞ்சியை பற்றி சொல்லவே வேண்டாம். தவறு என்று மூளைக்கு புரிந்தாலும் அவனை விட்டு விலக முடியவில்லை அவளால்.

மேகம் மறைத்த சூரியன் மீண்டும் வானில் உதயமானது போல், அவளை ரசித்தவன் சில நிமிடத்தில் நிதானத்திற்கு வந்து விட்டான். மெதுவாக அவளை அவனிடம் இருந்து விலக்கியவன்,

“உனக்கு அஞ்சு நிமிஷம் டைம். குழந்தை எப்படி அழுதாலும் நான் பார்த்துகிறேன், வேகமா புடவையை கட்டு” என்றவன் குழந்தை அழ அழ அங்கேயே சற்று தள்ளி நின்று கொண்டான். வெளியே சென்றால் குறிஞ்சி சொன்னது போல் யாராவது பார்த்து விட்டால், இவர்கள் இருவரும் தனித்து இருந்தார்கள் என்று பேச்சு வரும் என்று தோன்றியது அவனுக்கு.

கூச்சம், வெட்கம் என கலவையான உணர்வில் அவன் முகத்தையே பார்க்காமல் புடவையை கட்டி முடித்து ஊக்கும் போட்டு கொண்டாள் குறிஞ்சி. அதன் பின் வேகமாக அவனுக்கு பொருட்கள் எடுத்து கொடுக்க, அவனும் இவளிடம் ஒன்றும் பேசாமல் கிளம்பி விட்டான்.

இருவருக்கும் நடந்த விஷயத்தில் பங்கு இருந்தாலும், நிதானத்திற்கு வந்தவன், குறிஞ்சியால் தான், அவள் கேட்டதால் தான் இப்படி ஆகிவிட்டது என்று கோபம் கொண்டான். அவனுக்கு அவன் மேலும் கோபம் இருந்தது. ஏன் அந்த தனிமையை விரும்பி அங்கேயே இருந்தான் என்று! ஆம் அப்போது அவன் மனது அவளுடனான தனிமையை விரும்பியதை உணர்ந்து இருந்தான் ரவி. அதை ஏற்று கொள்ள தான் மனமில்லை அவனுக்கு.

இப்போது நண்பர்கள் அவனை கிண்டல் செய்யவும், மற்றவர்களுக்கு புரிகிற மாதிரி இவ்வளவு வெளிப்படையாக உணர்வுகளை காட்டி கொண்டு திரிகிறாள்…. இவர்களை போல் எத்தனை பேர் அவளை கவனித்தார்கள் தெரியவில்லை என்று அவள் மேல் ஆத்திரமாக வந்தது ரவிக்கு. அவன் அப்பாவிற்கு மட்டும் தெரிந்தால் உடனே அவர்களுக்கு நிச்சயம் செய்து முடித்து விடுவார் என்று அவனுக்கு தெரியும். கொஞ்சம் நேரம் முன்பு இவனும் அவளை ரசித்து இருந்தாலும், இப்போது ஆத்திரம் மட்டும் தான் அவள் மேல்! இதற்கு ஒரு முடிவு கட்டி விடுகிறேன் என்று நினைத்து கொண்டான்.

மறுநாள் திருமணமும் சிறப்பாக முடிய, ரவியிம், குறிஞ்சியும் அவரவர் உணர்வில் மற்றவரை தேடித் தேடி பார்த்து கொண்டனர். அவள் அத்தானில் தன் மனம் நிலைத்து விட்டதை உணர்ந்து காதல் மனதை திருப்தி செய்ய அவனை தேடித் தேடி பார்த்து பார்த்து ரசித்தாள்.

தன்னைத் தான் பார்க்கிறளா இன்றும் என்று சோதிக்க எண்ணி அடிக்கடி அவளை தேடினான் ரவி. சில முறை அவள் இவனை கவனிக்காமல் வேறு வேலையில் இருந்தாலும் பலமுறை இவனை தழுவும் ரசிக்கும் அவள் விழிகள் இவனுக்கு சொல்ல முடியாத நூதனமான உணர்வுகளை அளித்தது. அதன் தாக்கத்தில் நிலைகொள்ளாமல் தடுமாறினான் ரவி. தன்னை மீறி எங்கே அவள் ஆசை நிறைவேறி விடுமோ என்ற பயம் வந்தது அவனுக்கு. அப்படி ஏதாவது முடிவனால் தன்னால் அதை தடுக்க முடியாது என்று நிச்சயமாக தோன்ற பயந்து விட்டான் அவன். வெளிப்படையாக இதை பற்றி அவளிடம் பேசவும் விருப்பம் இல்லை அவனுக்கு. அதனால் அவள் எண்ணத்தை எவ்விதம் மாற்றலாம் என்ற தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்.

திருமணம் நடந்து ஒரு வாரம் ஆகி விட, பரபரப்பு எல்லாம் ஓய்ந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருந்தனர். இன்னும் ஒரு மாதம் கழித்து ட்ரெயினிங் வந்தால் போதும் என்று ரவிக்கு அவன் அலுவலகத்தில் இருந்து சொல்லப்பட்டு இருந்தது. விரைவில் கிளம்பி விடலாம் என்று இருந்தவனுக்கு இந்த கால தாமதம் கடுப்பாக இருந்தது. அவனை காணும் நேரமெல்லாம் மலரும் குறிஞ்சியின் முகம் மனதில் கிலியை பரப்பியது. அவளாக எதுவும் சொல்லும் முன் அவன் முந்தி கொள்ள வேண்டும் என்று அதற்கான வழியை பற்றி தீவிரமாக சிந்தித்தான் ரவி. அவன் சொல்லும் விதத்தில் அவன் பக்கமே அவள் திரும்பி கூட பார்க்ககூடாது, அவனை திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே அவளுக்கு வரக் கூடாது என்று நினைத்தான்.

அதற்கான வாய்ப்பு அவனைத் தேடி வந்தது. மற்றவர்களுக்கு உதவுகிறேன் என்று வலிய போய் பிரச்சனையை வாங்கி வரும் குறிஞ்சியே ரவிக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.2 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!