அபின்ஞான் அன்று ஐந்து மணிக்கே தன் வேலைகளை முடித்துவிட்டு கரனை அழைத்தான்…
கரன் வரவும், “நான் இப்ப வீட்டுக்கு போறேன் டா… ஜுவல்ஸ் டிசைன்ஸ்ஸ மட்டும் செக் பண்ணிக்கோ… அந்த வேல மட்டும் தான் பாக்கி இருக்கு” என்று அபின்ஞான் கிளம்பப் பார்க்க… அவனை தடுத்து நிறுத்தினான் கரன்…
“கேக்க மறந்துட்டேன்டா… போன வாரம் பார்க்க போன பொண்ணு மேட்டர் என்ன? ஏதாவது விசேஷமா மச்சி… சீக்கிரமாவே கிளம்பிட்ட… என்கிட்ட சொல்லவே இல்ல” என்று கரன் பேசிக் கொண்டே போக…
“என் வாய கிளராம போடா” என்றான் அபின்ஞான் கடுப்பாக.
“என்னடா… அப்ப இந்த முறை பார்த்த பொண்ணும் உனக்கு பிடிக்கலயா” என்று சிரித்தபடி கரன் கேட்க,
“என்னடா நக்கலா?” என்று கரனை முறைத்தபடி அபின்ஞான் கேட்க,
“பின்ன என்னடா… எவ்ளோ நாளா உங்க அம்மா உனக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க… உனக்கு மட்டும் ஏன்டா எந்த பொண்ணுமே செட்டாகவே மாட்டேங்குது… உன் பேஸ் கட்டுக்கும்… உன் அழகுக்கும் பொண்ணுங்க உன் பின்னால லைன்ல சுத்தணுமே… ஏதோ இடிக்குதே” என்று தாடியை வருடியபடி யோசித்தவன்…, “உனக்கு ஏதாவது ஹெல்த் பிராப்ளமா?” என்று கேட்டானே பார்க்கலாம்…
“அரஞ்சேன்னா பாரு…” என்று அபின்ஞான் சீறி கொண்டு வர…
அவனை நிதானமாக பார்த்த கரன் “பிரச்சினய சொன்னா கோபம் வரும் தாண்டா… உன் அம்மா அப்பா கிட்ட சொல்ல சங்கடமா இருக்கலாம், ஆனா என்கிட்ட என்ன வெட்கம்… வெக்கப்படாம சொல்லு… அப்பதானே பிரச்சினைய தீர்க்கலாம்” என்று அவன் தோளில் தட்டி ஆறுதலாக கரன் கூற,
அவன் கையைத் தட்டி விட்ட அபின்ஞான் “டேய் விட்டா பேசிட்டே போற… எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல… நான் நோர்மலா தான் இருக்கேன்” என்று அவன் கத்த அவ்வறை முழுவதுமே அதிர்ந்தது…
கரனோ சட்டென்று வாயை இருக மூடிக்கொண்டான்…
“இதுக்கு மேல ஒரு வார்த்த பேசினா நான் மனுசனாவே இருக்க மாட்டேன்…” என்று அவனை முறைத்தபடி கூறிய அபின்ஞான், “எனக்கு செட் ஆகுற மாதிரி பொண்ணுதான் கிடைக்க மாட்டேங்குது” என்றான்…
“டேய் நீ என்னடா இந்த காலத்து பொண்ணயா தேடுற? அந்தக் காலத்துல வாழ்ந்த கிழவிய தான் தேடிட்டு இருக்க” என்று கரன் மீண்டும் அவனை நக்கல் செய்ய…
“டேய் நிறுத்துடா… நான் அடக்க ஒழுக்கமான பொண்ணு கேட்கிறது தப்பா என்ன…?” என்று அபின்ஞான் கேட்க…
“நீ கேட்டதுல எந்தத் தப்பும் இல்லடா… ஆனா நீ கேட்குற பொண்ணுங்களுக்கு வெச்சிருக்க டிமாண்ட் இருக்கே, ஷப்பா… அந்த மாதிரி பொண்ணு இந்த காலத்துல உனக்கு கிடைக்கவே மாட்டா” என்றான் கரன்.
“நான் கேட்டதுல என்னடா தப்பு அமைதியான பொண்ணா இருக்கணும்… நல்ல நீளமா இடுப்பு வரையாவது முடி இருக்கணும்… பார்க்க பளிச்ன்னு அழகா இருக்கணும்… முக்கியமா சாரி கட்டிக்கிற பொண்ணா இருக்கணும்… அதோட எனக்கு ஏத்த மாதிரி நல்லா படிச்சிருக்கணும்… ஆனா வேலக்கி போகக்கூடாது… என்னையும் என் குழந்தைகளையும் நல்லா பார்த்துக்கணும்… நான் கேட்கிறதே இவ்ளோ சின்ன விஷயம்… ஆனா பொண்ணுதான் கிடைக்கமாட்டா” என்று தோள்களை உலுக்கியபடி கூறினான் அபின்ஞான்.
“டேய் இவ்வளவு பெரிய லிஸ்ட் போட்டுட்டு சின்ன விஷயம்னு சொல்ற… நீ சொல்ற மாதிரி பொண்ணு இந்த காலத்துல எங்கடா இருப்பாளுங்க…
நீ கேக்குற மாதிரி பொண்ண செஞ்சு தான் எடுக்கணும்” என்று கரன் சொல்ல…
அவனைப் பார்த்து சலிப்பாக தலையாட்டியவன் பதில் எதுவும் சொல்லாமல், “ஏதாவது முக்கியமான விஷயம்னா எனக்கு கால் பண்ணு” என்றபடி வீட்டுக்கு கிளம்பி விட்டான் அபின்ஞான்.
“அம்மா…” என்றழைத்தப்படியே அபின்ஞான் வீட்டினுள் வர, அன்னபூரணி அம்மாள் தன்னறையிலிருந்து வெளியே வந்து “என்னடா…” என்று அவனைப் பார்த்து கேட்டார்.
“கோயிலுக்கு போகனும்ன்னு சொன்னீங்க… ரெடியாகவே இல்லையா?” என்று அவர் தயாராகாமல் அவனது நேரத்தை விரயமாக்குவதால் மூண்ட எரிச்சலில் சத்தமாக கேட்க…
“நீ எப்போ இவ்ளோ பாஸ்ட்டா வீட்டுக்கு வந்திருக்க…” என்று நினைத்தவர்,
“இதோ இப்ப போய் ரெடி ஆகுறேன்” என்று அன்னபூரணி அம்மாள் கூற,
சொன்னபடி பதினைந்து நிமிடங்களிலே வந்து விட்டான் அபின்ஞான்…
ஆனால் அவன் தாய் அன்னபூரணி அம்மாள் தான் தயாராகி வந்த பாடில்லை…
“எவ்வளவு நேரம் தான் ரெடியாகுறாங்க” என்று முனுமுனுத்தபடி, “அம்மா… வரலயா” என்று அவன் கத்தி கேட்கவும்,
“இதோ வந்துட்டேன் அபி” என்றவாறு மூச்சு வாங்க குடு குடு என்று ஓடி வந்தார் அன்னபூரணி அம்மாள்.
அவருடன் சஞ்சனாவும் வந்து சேர்ந்து கொண்டாள்…
அவர்களை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு புறப்பட்டவன் கோயிலின் முன்னால் காரை நிறுத்தவும், அவனைப் பார்த்து அன்னபூரணி அம்மாள், “அபி நீ வரல்லயா டா…” என்று கேட்டார்.
“இல்லம்மா நீங்க போய் வாங்க.. எனக்கு கொஞ்சம் வேல இருக்கு” என்று அலைபேசியில் பேசிக்கொண்டே அவரைப் பார்த்து கூறவும்,
அவன் ஒரு நாளும் கோயிலுக்கு வருவதில்லை என்று அறிந்ததினாலே அன்னபூரணி அம்மாளும் சஞ்சனாவும் கோயிலுக்குள் நுழைந்தனர்.
இருவரும் கடவுளை வணங்கி விட்டு அர்ச்சனையை எடுத்துக் கொண்டு வரும்போது அன்னபூரணி அம்மாளை தட்டிய சஞ்சனா, “அத்த அந்த பொண்ண பாருங்க” என்று கூற, சஞ்சனா கைகாட்டிய திசையில் திரும்பி ஆச்சர்யமாகப் பார்த்தார் அன்னபூரணி அம்மாள்.
இதழ்களில் நிரம்பிய புன்னகையுடன் சஞ்சனாவை பார்த்தவர், “அந்தப் பொண்ணு பார்க்க மகாலட்சுமி மாதிரி எவ்ளோ அழகா இருக்கா… நம்ம அபிக்கே கடவுள் பார்த்து பார்த்து செஞ்ச பொண்ணு மாதிரி இருக்கா” என்று வியந்தபடி கூற…
“ம்ம்… பொண்ணு ரொம்ப அழகாத்தான் இருக்கா” என்று சஞ்சனா கூறவும்,
“நான் போய் அந்த பொண்ணு கிட்ட பேசிப் பார்க்கவா” என்று ஆர்வமாக அன்னபூரணி அம்மாள் கேட்க… அவரை முறைத்து பார்த்த சஞ்சனா, “ஐயோ அத்த அவ ஏற்கனவே எனக்கு தெரிஞ்ச பொண்ணு தான்… எங்க கம்பெனியில் தான் வேலை செய்றா… ரொம்ப அமைதியான அப்பாவியான பொண்ணு… அத்தான்னுக்கு செட்டானால் அந்தப் பொண்ணு தான் பாவம்…” என்று சஞ்சனா கூறவும், “அது சரிதான்… அவனுக்கு அடங்கி போற பொண்ணு வந்தா… இவன் அந்தப் பொண்ண மேச்சிடுவான்…” என்ற அன்னபூரணி அம்மாள் அங்கே நின்றிருந்த தேவகன்யாவை பற்றிப் பேசியப்படியே அபின்ஞானுடைய காரில் ஏறிக்கொண்டனர்…
அவர்களைப் பார்த்தவன், “கோயிலுக்கு போய்ட்டு வர இவ்ளோ நேரமா…? சும்மா என் டைம்ம வேஸ்ட் பண்ணிட்டு” என்று கடுகடுத்தபடியே அவன் காரை எடுத்தான்…
அதைக் கேட்டு இதழ்களை சுழித்த சஞ்சனா, அன்னபூரணி அம்மாள் காதருகே குனிந்து, “நான் சொன்னேன்ல… இவனுக்கு அடங்கி போற பொண்ண விட, இவன அடக்கி ஆழுற பொண்ணு தான் இவனுக்கு சரி” என்று சஞ்சனா கேலியாக கூற…
அவள் தலையில் கொட்டிய அன்னபூரணி அம்மாள், “ஒரு மொரப்பொண்ணு மாதிரியா டி பேசுற… அந்த பொண்ணுக்கு என் பையன பிடிச்சாலும் அவகிட்ட இல்லாது பொல்லாத சொல்லி நீயே பிரிச்சிடுவ போல… சரியான பொறாம புடிச்சவ…” என்று திட்ட,
“ஒரு பொறாமயும் இல்ல… எல்லாம் நல்லெண்ணத்ல தான்…” என்றாள் சஞ்சனா கிண்டலாக சிரித்தபடி… “அவ்ளோ நல்லவளாடி நீ?” என்று அவளை மேலிருந்து கீழ் பார்த்தவர், “அப்படின்னா நீயே அவன கட்டிக்கோ” என்றார் அன்னபூரணி அம்மாள்…
“சீச்சீ… என்னால அவன கட்டிக்க முடியாது” என்று சஞ்சனா கூறிக் கொள்ள,
“கடவுளே அபிக்கு பொருத்தமான நல்ல பொண்ண சீக்கிரமா கிடைச்சிடனும்” என்று கடவுளை வேண்டியபடி வெளியே பார்த்தார் அன்னபூரணி அம்மாள்…
வீட்டுக்கு வந்ததும் அபின்ஞான் அறைக்குள் செல்ல பார்க்க, “அபி உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்” என்று அவனை தடுத்து நிறுத்தினார் அன்னபூரணி அம்மாள்.
“என்ன” என்பது போல் அவன் புருவம் சுருக்கி பார்த்தான்.
“வாய தொறந்து பேசுறான பாரு” என்று நினைத்தவர், “அபி உனக்கு பொருத்தமான ஒரு பொண்ண தரகர் கொண்டு வந்திருக்கிறார்… இந்த போட்டோவ பாரு… உனக்கு விருப்பம்னா மேல பேசிக்கலாம்” என்றவர், “அவன் என்ன சொல்வானோ” என்ற மனதின் படபடப்போடு அப்பெண்ணின் புகைப்படத்தை நீட்டினார்…
அந்தப் புகைப்படத்தில் இருந்த பெண்ணோ பார்க்க அழகாக லட்சணமாக இருந்தாள்…
“அபி பொண்ணு மகாலட்சுமி போல இருக்கா… உனக்கு பிடிச்சிருக்கா” என்று தன் பதற்றத்தை மறைத்தபடி கேட்க,
அந்தப் புகைப்படத்தை இரண்டு நிமிடங்கள் உற்றுப் பார்த்தவன், “எனக்கு இந்த பொண்ண பிடிக்கல…பொண்ண பார்க்க சொன்னா…” என்று பேச வந்த வார்த்தைகளை விழுங்கியவன், “பொண்ணு பார்க்க முடியலன்னா விட்டுட்டு சும்மா இருங்க… நானே எல்லாத்தையும் பாத்துக்கிறேன்” என்று அந்த போட்டோவை அவர் கையில் திணித்துவிட்டு சென்றான்…
“ஐயோ இவனோட முடியல…நீ நினைச்ச மாதிரி பொண்ணு செஞ்சு தான் எடுக்கணும்” என அவர் முணுமுணுக்கவும்…அது அவன் பாம்பு செவிகளில் விழுந்து விட்டது போலும்… திரும்பி அவரை முறைத்து பார்த்து விட்டே சென்றான்.
“அம்மா கிட்ட நடந்துக்கிற மாதிரியா நடக்கிறான்… ராட்சஷன்… இவனுக்கு பொண்ணு பார்த்து பார்த்தே நான் கிளவி ஆயிடுவேன் போலிருக்கே…” என்று அவனை மனதினுள் வறுத்தெடுத்தவர், யாருமே இங்கே இல்ல என்று நினைத்து பெருமூச்சு விட்ட படி திரும்பவும்… அங்கே மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிய படி சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள் சஞ்சனா…
“ஏன் அத்த, உங்களுக்கு இந்த தேவல்லாத வேல… அவனுக்கு நாம பொண்ணு பார்க்கிறது சரிப்பட்டு வருமா” என்று சஞ்சனா கேலியாக கேட்க,
அன்னபூரணி அம்மாளோ சலிப்பாக தலையாட்டியபடி அங்கிருந்து சென்றார்…
சஞ்சனா பசுபதியின் தங்கையின் மகள்…
அன்னபூரணி அம்மாள், பசுபதி தம்பதியினருக்கு கண்ணே பொன்னே என்று ஒரே மகன் அபின்ஞான்…
அவனை தங்கத் தட்டில் வளர்க்க மட்டும் தான் இல்லை…
அவன் விரும்பியது விரும்பாதது எல்லாமே அவன் கேட்க முன்பே பசுபதி வாங்கி கொடுத்து விடுவார்.
அவனை என்னதான் செல்லமாக அவர்கள் வளர்த்தாலும் அவனோ யாருடனும் பெரிதாக ஒட்டிக் கொள்ள மாட்டான்…
ஒரு இடைவெளியுடனே பழகுவான்… அதுவே அவனது சுபாவமும் கூட…
தன் பெற்றோர்களிடமும் அப்படித்தான்…
இதனால் அன்னபூரணி அம்மாளுக்கு பெண்பிள்ளை என்றால் அலாதிப் பிரியமாம்….
ஆகவே சஞ்சனாவும் பிறந்து விட சிறுவயதிலிருந்தே அவளை தூக்கிக் கொண்டு வந்து தன்னுடன் வைத்துக் கொள்வார்…
தன் மகன் அவன் தந்தையைப் போலவே தொழிலை கட்டிக்கொண்டு ஓடுவதால்… பெண் பிள்ளை இருந்தால் தன் கூடவே இருப்பாள் என்று ஒரு எண்ணம் அவருக்கு…
அதனால் சஞ்சனாவை தன்னுடன் தொடர்ந்து வைத்துக் கொள்வதற்காக அவளை அபின்ஞான்னுக்கு திருமணம் முடித்து வைக்க ஆசை அன்னபூரணி அம்மாளுக்கு…
அதில் சஞ்சனாவுக்கு துளியும் இஷ்டமில்லை… அதை அறிந்த அன்னபூரணி அம்மாள் அவளிடம் தன் மகனைப் பற்றி பேசுவதை மட்டும் நிறுத்திக் கொண்டார்…
இப்போது இளங்கலை படிப்பை முடித்துவிட்டு அபின்ஞான்னின் கம்பெனியில் ஜுவல்ஸ் டிசைனராக பணியாற்றுகிறாள்…
ஏனோ அவன் கம்பெனியில் பணியாற்ற சஞ்சனாவிற்கு பிடிக்கவே இல்லை… அவள் தாய் மீனாட்சியின் கெடுபிடியால் ஏனோ தானோ என்று வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள்….
அவர்கள் கம்பெனியில் ப்ரொஜெக்ட்டையும் சப்மிட் பண்ண வேண்டிய நாளும் வந்து சேர்ந்தது…
அனைவரும் மும்முறமாக வேலை செய்து கொண்டிருந்தனர்… இல்லை இல்லை… அபின்ஞான் கசக்கி பிழிந்து அவர்களிடமிருந்து வேலை வாங்கிக் கொண்டிருந்தான்…
ஆனால் வேலை வாங்குவதில் மட்டும் கண்டிப்பாக இருந்தான்…
ஏனென்றால் இது ஆஸ்திரேலியா நாட்டுடன் இரண்டு வருடங்களுக்கான “டைமண்ட் ஜுவல்ஸ்” ஒப்பந்தம்…
ஒவ்வொரு கம்பெனியும் இந்த டீல் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டிருந்தன…
அதனால் தான் கடுமையான முயற்சியும் உழைப்பும்…
அபின்ஞான் தன் மேசையில் கட்டு கட்டாக வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு பைலையும் சரி பார்த்து கொண்டிருந்தான்…
தரவுகளை பார்த்து, அதில் சரியானவைகளை ஒதுக்கி வைத்தவன், ஓரிரு பேரை அழைத்து பிழைகளை மாத்திரம் செய்ய சொல்லி அனுப்பி வைத்தான்…
இரண்டு பைள்களில் மாத்திரம் இருந்த அனைத்து விடயங்களுமே பிழையாக இருந்தது …
அதைப் பார்த்து தனக்கு மூண்ட கோபத்தை கட்டுப்படுத்தியவன், உடனே சஞ்சனா மற்றும் தேவகன்யாவை வருமாறு அழைத்தான்…
இருவரும் தயங்கியபடியே உள்ளே வந்தனர்….
இருவரையும் முறைத்து பார்த்தவன், “வாட்ஸ் ஹெல் ஆர் யூ டூயிங்… என்னத்த பண்ணி வெச்சி இருக்கீங்க ரெண்டுபேரும்” என்று தன் கையில் இருந்த இரு பைலையும் தூக்கி அவர்களை நோக்கி எறிந்தான்…
சரியாக இருவரும் விலகிக் கொள்ள நிலத்தில் சென்று ஃபைல்கள் இரண்டும் விழுந்தன…
ஃபைல்லில் இருந்த தாள்கள் இணைக்கப்பட்டிருந்ததால் நல்ல வேலை அவை சிதறவில்லை…
“இவ்ளோ படிச்சி இந்த சின்ன விஷயத்தை கூட பண்ண முடியலையா? ரெண்டு முட்டாள்களும் நல்லா பார்த்து செட் ஆகி இருக்கீங்க… வாங்குற சம்பளத்துக்காவது கொஞ்சமாவது வேல செய்யணும்ன்னு மைண்ட் இருக்கா… மூஞ்சி விளங்காத அளவுக்கு மேக்கப் பண்ணிட்டு மட்டும் வர தெரியும்…” என்று கோபமாக கண்டபடி அபின்ஞான் திட்ட,
“ரொம்ப ஓவரா பேசுறீங்க சார்… மைண்ட் யுவர் வேர்ட்ஸ்” என்று முனுமுனுத்தாள் சஞ்சனா.
அதுவும் அபின்ஞானின் காதில் விழுந்து விட எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல் ஆகிவிட்டது… இருக்கையில் இருந்து எழுந்தவன் அவர்கள் இருவரையும் தன் கண்ணாலே பொசுக்கியபடி, “வேல செய்ய இஷ்டம் இல்லாட்டி பேசாம நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்ட்டே இருக்கணும்… இங்க வந்து சும்மா ஏன் தலய அறுத்துட்டு” என்று வாய்க்கு வந்த வார்த்தைகளில் இருவருக்கும் ஏசி தள்ளி விட்டான்…
இருவரும் கண்களில் கண்ணீர் வடிய தலை குனிந்த படி நின்றிருந்தனர்…
கொஞ்சம் சொன்னா போதுமே டைம் பாத்துட்டு டேம்ப தொறந்திடுவீங்க…
“சஞ்சனா… உங்க டிசைன் வன் ஹவர்ல வந்து சேரனும்… மிஸ் கன்யா நீங்களும் உங்க வேலய ஹாஃப் அன் ஹவர்ல பாஸ்ட்டா முடிச்சிட்டு வரணும்” என்று கூற, “ஓகே சார்” என்றபடி இருவரும் அவன் அறையில் இருந்து ஓடி விட்டனர்…
ஒருவாரு அன்றைய நாளுக்குரிய வேலைகளை இரு பெண்களும் முடிந்து விட, அபின்ஞானும் தன் ப்ரொஜெக்டை சப்மிட் பண்ணி விட்டான்…
அலுவலக ஊழியர்களுக்கு இப்போதுதான் அப்பாடா என்று இருந்தது…
இனி அடுத்த இரண்டு நாட்களுக்கும் அனைவருக்கும் ஓய்வு… அதன் பிறகு தான் அடுத்த வேலை….
அபின்ஞான் தான் அணிந்திருந்த கோட்டை கழட்டி இருக்கையில் போட்டவன், தன் ஷேட் கையை முட்டி வரை மடித்தபடி இருக்கையில் அமரவும்… அவன் அறை கதவை தட்டி விட்டு உள்ளே வந்தாள் தேவகன்யா…
அவளை முறைத்துப் பார்த்தவன் “டோர நொக் பண்ணி பெர்மிஷன் எடுத்ததுக்கு பிறகு தான் உள்ள வரணும்ன்ற பேசிக் மெனஸ் கூட உனக்கு தெரியாதா?” என்று அவன் நக்கல் தொனியில் வினவ,
“சாரி சார் நான் வேணும்னா இப்ப போய் கதவ தட்டிட்டு வரவா?” என்று கேட்க,
“நீயும் உன் பேரும்… எங்கிருந்துதான் இப்படி ஒரு பெயரை புடிச்சாங்களோ…” என தனக்குள் நினைத்தபடி… அவளை தன் பழுப்பு நிற விழிகளால் கூர்மையாக பார்க்க அவன் முன்னாள் ஒரு கடிதத்தை வைத்தாள் தேவகன்யா…
அது அவளது இராஜநாமா கடிதம்…
அதைப் பிரித்துப் படித்தவன் அவளைப் பார்த்து, “ஆர் யு சுவர்… இங்கிருந்து விலகப் போறீங்களா?” என்று கேட்க, “எஸ் சார்…” என்றாள் தேவகன்யா…
“ஏன்னு காரணம் தெரிஞ்சுக்கலாமா?” என்று அபின்ஞான் கேட்க,
“இங்க ஒர்க் பண்றது சரியான ஹார்ட்டா இருக்கு சார்… நீங்க சொன்ன மாதிரியே ஒரு பையன கல்யாணம் பண்ணிட்டு லைஃப்ல செட்டில் ஆயிடலாம்னு முடிவெடுத்துட்டேன்” என்று கூற,
சட்டென நிமிர்ந்து அவளை பார்த்தான்… தான் கூறியதற்கு நக்கலாக பதிலடி தந்தது போலிருந்தது அவனுக்கு…
ஆனால் அவள் முகத்தில் நக்கல் செய்வதற்கான அறிகுறியே இல்லை… அப்பாவியாக நின்றிருந்தாள்…
யோசனையுடன் புருவம் சுருக்கியவன், “மிஸ் தேவகன்யா யுவர் ரெசிக்னேஷன் அக்ஸ்ப்டட்” என்று கூற,
“தேங்க்யூ சார்..” என்றவள் அங்கிருந்து தன் கேபினுக்கு சென்றாள்…
தன் பொருட்களை தேவகன்யா அடுக்கி கொண்டிருக்க அதை கண்ட சஞ்சனா, “ஏய் என்னாச்சுடி உன்ன இந்த கம்பெனியிலிருந்து துரத்திட்டாங்களா? உனக்கு இந்த நரகத்திலிருந்து விடுதலை கிடைச்சாச்சு” என்றபடி சஞ்சனா சிரிக்க…
“என்ன இந்த கம்பெனியில இருந்து துரத்தல…நானே தான் விலகிக்க போறேன்… என்னால அடிமையா எல்லாம் இங்கு இருக்க முடியாது… இதோட இந்த கம்பெனிக்கு ஒரு கும்பிடு…” என்றவாறு சஞ்சனாவை நிமிர்ந்து பார்க்க…
“நீ இப்படியெல்லாம் கூட பேசுவியா?” என்று சஞ்சனா கேட்டாள்.
“தேவைப்பட்டா இதவிட பேசுவேன்… இப்ப பேசுற நிலைல நான் இல்ல” என்றவள் தன் பொருட்களை அடுக்கி முடித்துவிட்டு, சஞ்சனாவை பார்த்து “பாய் சஞ்சனா… மறுபடியும் மீட் பண்ணலாம்” என்று அவளை அணைத்து விடுவித்தவள் அவளிடம் விடை பெற்றுக் கொண்டு அப் கம்பெனியை விட்டு வெளியே வந்தாள்…
அபி ஜெம் & ஜூவலர்ஸ் என்று ஸ்மார்ட் போர்டில் அடிக்கப்பட்டிருந்த அப் பெயரை சிரித்தபடி பார்த்தவள் “இன்னயோட எனக்கும் இந்த கம்பெனிக்குமான முதலும் கடைசியுமான அத்தியாயம் முடிஞ்சு போச்சு” என்று நினைத்தபடி அங்கிருந்து சென்றாள்…
ஆனால் இந்த அத்தியாயம் முடிந்து விடவில்லை… இனி வரும் அத்தியாயங்களை அபின்ஞானே எழுதுவான் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை… ஆனால் அவன் எழுதப்போகும் அத்தியாயமோ பனிக்கட்டி போல் குளிர்ச்சியா இருக்குமா? அல்லது எரிமலையின் வெப்பத்தை உள்ளடக்கி இருக்குமா என்பதுதான் புரியாத புதிர்……
*****
ஏசி மூலம் குளிரூட்டப்பட்ட அவ்அறையில் அனைத்து தொழிலதிபர்களும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்…
ஆஸ்திரேலியன் கம்பெனியினுடைய டீல் தம் கம்பெனிகளுக்கு கிடைக்குமா? என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தருணம் அது…
இன்னும் சில நிமிடங்களில் அந்த டீல் யாருக்கு என்று அறிவித்து விடுவர்…
அந்நேரம் அந்த மண்டபத்தின் வாயிலில் வழுக்கிக் கொண்டு வந்து நின்றது கருப்பு நிற பிஎம்டபிள்யூ கார் ஒன்று…
அந்த கருப்பு நிறக்காருடன் மோதுவது போல் வந்து நின்றது இன்னொரு பிஎம்டபிள்யூ சாம்பல் நிற கார் ஒன்று…
கருப்பு நிற காரை திறந்து, கருப்பு நிற கோட் சூட்டுடன் ஆண் அழகனாக இறங்கினான் அபின்ஞான்…
அதே நேரம் சாம்பல் நிற கோட் சூட்டுடன் திடகாத்திரமான மேனியுடன் வாட்ட சாட்டமான ஒருவன் இறங்கிக் கொண்டிருந்தான்.
தோள்பட்டை வரை வளர்ந்திருந்த தன் தலை முடியை ஒரு ஹேர் பேண்ட்’டில் அடக்கியிருந்தான்…
அவன் தான் “தேவ் ஜெம் & ஜூவலர்ஸ்” கம்பெனியின் சிஇஓ’வான மகாதேவ்…
இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்தபடியே கம்பீரமான நடையுடன் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகளில் கால் மேல் கால் போட்டு அரச தோரணையுடன் கொண்டனர்….
இவ்வளவு நேரம் அந்த மீட்டிங் அறையில் இருந்த தொழிலதிபர்களில் ஆண்களும் சரி… பெண்களும் சரி… தம்மை மறந்து அவர்களை ரசிக்க தொடங்கி விட்டனர்…
அவர்கள் இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லை…
“அபி ஜெம் & ஜூவலர்ஸ்” மற்றும் “தேவ் ஜெம் & ஜூவலர்ஸ்” இந்த இரு கம்பெனிகளுக்கும் தான், ஜெம் ஸ்டோன்ஸ் மற்றும் ஜூவலர்ஸ் துறையில் முதல் இரண்டு இடங்களுமே செல்லும்… மாறி மாறி இருவரும் அவ்விடத்தை தட்டிப் பறித்துக் கொள்வர்…
இருவரும் தொழிலில் ஆண் சிங்கங்களாக வலம் வந்தனர்…
இருவரும் என்றைக்கும் நண்பர்களாக இருந்ததாக சரித்திரமே இல்லை எப்போதும் எதிரிகளாகவே சுற்றி திரிந்தனர்…
தொழிலில் காலடி வைத்த ஆரம்ப காலங்களில் ஒருவருக்கொருவர் போட்டியாளர்களாக இருந்து… அந்தப் போட்டி சண்டையாக வளர்ந்து… இப்போது இருவரும் எதிரிகளாக அடித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டனர்…
இவர்களைக் கண்டதுமே டீலிங்கை கைப்பற்றுவதற்காக அமர்ந்திருந்த தொழிலதிபர்களுக்கோ வெறுத்தே போய் விட்டது. ஏனென்றால் இந்த டீல் செல்லப் போவது இவர்கள்களில் ஒருவருக்கே என்பது அனைவரும் அறிந்த விடியம்…
அபின்ஞான் தனக்குத்தான் இந்த டீல் கிடைக்கும் என்ற உறுதியில் மகாதேவை பார்த்து நக்கலாக சிரித்த படி இலகுவாக அமர்ந்து கொண்டிருந்தான்…
மகாதேவும் அபின்ஞானுக்கு சளைத்தவன் அல்லவே… மகாதேவோ, அபின்ஞானை நக்கல் புன்னகையுடன் பார்த்து, “டீல் யார் கைக்கு வருதுன்னு பார்த்துட்டு பேசிக்கலாம்டா” என்றபடி முன் நோக்கியவாரு அமர்ந்து கொண்டான்…
சில நிமிடங்களில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த டீல் யாருக்கு என்று கூறப்பட்டது…
அபின்ஞானின் விழிகளோ அதிர்ந்து விரிந்து கொண்டன… அதே அதிர்ச்சியுடன் தன் அருகே அமர்ந்திருந்த மகாதேவை திரும்பிப் பார்த்தான்…
மகாதேவும் அதே நக்கல் புன்னகையுடன் அபின்ஞானை நோக்கி ஒற்றை புருவம் உயர்த்தி, “வெல்… இந்த டீல் எனக்குத்தான் அபி… இப்போ என்ன பண்ண போற” என்று இகழ்ச்சியாக கேட்க,
கைகளை இறுகப் பொத்தி, கோபத்தை கட்டுப்படுத்திய அபின்ஞான் தன் பழுப்பு நிற விழிகளால் மகாதேவை எரித்துக் கொண்டிருந்தான்.
“ஓஹ்….கூல் மேன்… அடுத்த டீல்லயாவது ஜெயிக்க பாரு” என்ற மகாதேவ் அவனைப் பார்த்து ஒற்றைக்கண்ணை சிமிட்டி விட்டு தன் காரை நோக்கிச் சென்றான் …
அதன் பிறகு மின்னல் வேகத்தில் அலுவலகத்தை வந்தடைந்த அபின்ஞானுக்குத் தான் தன் கோபத்தை அடக்க வழி தெரியவில்லை…
இந்த டீல் அவனை விட்டுப் போக வாய்ப்பே இல்லை… ஏதோ குளறுபடி நடந்துள்ளது என்பது அவனுக்கு உறுதி…
அவன் இருக்கையில் அமர்ந்தவன், தன் வலது கையின் இரு விரல்களையும் சேர்த்து அழுத்தி… சொடக்கு போட்டபடி யோசித்தான்…
அபின்ஞான் போட்டிருந்த விலைவாசியை விட, மகா தேவின் விலையோ ஐம்பது சதவீதம் தான் குறைவாக இருந்தது…
தன் லேப்புடன் இணைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்க்கத் தொடங்கினான்…
சிசிடிவி காட்சிகள் ஒழுங்காகத்தான் இருந்தன ஆனால்… டீல் சப்மிட் செய்யப்பட்ட இரவுக் காட்சிகள் எதுவுமே பதிவாகி இருக்கவில்லை…
பக்காவ பிளேன் போட்டு தன்னை தோற்கடித்திருப்பது உறுதியாகவே தெரிந்து விட்டது…
இதுவரை அவன் யாரையும் எடை போடத் தவறியதே இல்லை… ஒருத்தரைப் பார்த்து இவர் இப்படித் தான் என்று கணித்து விட்டால் அது நூற்றுக்கு நூறு வீதம் சரியாக இருக்கும்…
கூட இருந்த யாரோ இளைத்த இந்த துரோகத்தை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை…
ஏமாற்றப்பட்டு இதுவரை எந்த ஒரு தோல்வியுமே அவன் சந்தித்ததில்லை… ஆனால் இந்தத் தோல்வி அவனுக்கு முதலும் கடைசியுமானதாகத்தான் இருக்கும்… நடந்ததை அப்படியே விட்டுவிட்டு கடந்து செல்ல அவன் முட்டாளோ ஏமாளியோ இல்லையே…
“பட் ரொம்ப ஸ்மார்ட்டா பிளே பண்ணி இருக்கான்” என்று சொல்லிக்கொண்டே, நிதானமாக இருந்து அனைத்து கோணங்களிலும் யோசிக்க ஆரம்பித்து விட்டான் அவன்…
இங்கு நடந்து கொண்டிருக்கும் இத்தனை பிரச்சினைகளுக்கும் குளறுபடிகளுக்கும் காரணமானவனோ… தன் வீட்டின் நீச்சல் தடாகத்தின் அருகே நின்று புகைத்துக் கொண்டிருந்தான்…
ஷார்ட்ஸ் மாத்திரம் அணிந்திருந்தான்…
அவன் வெண்மையான சிக்ஸ் பேக் தேகமோ வெயில் பட்டு பளபளத்துக் கொண்டிருந்தது…
முதுகில் “கிங் ஆப் த வேர்ல்ட்” என்று டேட்டு குத்தி இருந்தான் அவன்…