காளையனை இழுக்கும் காந்தமலரே : 20

5
(4)

காந்தம் : 20

மாணிக்கம் சொன்ன பகுதிக்கு வந்தவர்கள், அங்கே சாராயக்கடையில் பலரும் குடித்துக் கொண்டிருப்பதை பார்த்த காளையனுக்கு கோபம் எல்லை கடந்தது. சாராயத்தை அவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருப்பவனை பிடித்து இரண்டு அறை விட்டான். காளையின் அறையை தாங்க முடியாமல் சாராயம் கொடுத்துக் கொண்டிருந்தவன் கீழே விழுந்தான். 

அவனை பிடித்து இழுத்தவன், “இது யாரோட கடை? இங்க சாராயக்கடை வைக்க அனுமதி குடுத்தது?” என கேட்டான். அதற்கு அக் கடையில் இருந்தவன், “எதுவா இருந்தாலும் நீங்க எங்க முதலாளிக்கிட்ட கேளுங்க.” என்றான். 

அதற்கு கதிர், “ஏய் வந்திருக்கிறது யாருனு தெரியும்ல. கூப்பிடுடா உங்க முதலாளியை.” என்றான்.அதற்கு அவன்,” முதல்ல இவங்களுக்கு பதில் சொல்லுங்க.” என்று, கீழே விழுந்தவன் அவனது ஆட்களை கூப்பிட்டான். 

“டேய் வாங்கடா, இவனுங்களை பிடிங்கடா.” என்று சத்தம் போட்டான். அவனது சத்தத்தை கேட்டு உள்ளே இருந்து ஒரு பத்து பதினைந்து பேர் கையில் கட்டையும் கத்தியையும் வைத்துக்கொண்டு ஓடி வந்தனர். 

இவர்களைப் பார்த்து நக்கலாக சிரித்தான் காளையன். அவர்கள் ஓடி வருவதை பார்த்த கதிர்,” அண்ணே, இன்னைக்கு செம கச்சேரி போல.” என்று சொன்னான். அதற்கு காளையன், “கதிர் நீயும் வந்து இந்த ஆட்டத்துல சேர்ந்துக்கோ.” என்று சொல்ல அதற்கு கதிர், “அண்ணே நீங்க சொல்லலைனாலும் நான் வந்திருப்பேன்.” அப்படின்னு சொல்லிட்டு சண்டைக்கு தயாரானார்கள். 

காளையன் வந்தவர்களை எல்லாம் தனது அடிகளால் பந்தாடினான். கதிரும், அவனது பங்குக்கு அங்கிருந்தவர்களை அடிக்க ஆரம்பித்தான். அவனது அடிக்கு பயந்து அடிக்க வந்தவர்கள் ஓடி விட்டனர். கீழே இருந்த ஒருவனை பிடித்து இழுத்த காளையன், “டேய் யாருடா நீங்க எதுக்காக இங்க வந்து சாராயக்கடை திறந்து இருக்கீங்க? எங்களோட ஊருக்குள்ள சாராயக்கடை திறக்கிறல்லைனு உனக்கு தெரியாதா? இந்த கடையோட முதலாளி யாரு? யார் போட சொன்னா மரியாதையா சொல்லிடுங்க, இல்லனா பஞ்சாயத்து கூட்டி உங்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்துடுவேன்.” என்று சொன்னான். 

பஞ்சாயத்து, தண்டனை என்று சொன்னதைக் கேட்ட, அடி வாங்கியவன் தனது முதலாளியின் பெயரை சொல்லிவிட்டான். இதைக்கேட்ட கதிரும் காளையனும் அதிர்ச்சி அடைந்தனர். காளையன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு,” அவன் ஜெயில்லதானே இருக்கிறான், இங்க எப்படி வந்தான்?” என்று கேட்டான். 

அதற்கு அடி வாங்கியவேனோ, “இல்லை அவர் நேற்று தான் ரிலீஸ் ஆகி வந்தார். வந்ததும் முதல் வேலையாக இங்க சாராயக்கடை போடணும் என்று எங்களிடம் சொன்னாரு. அதுதான் நாங்க செஞ்சு கொடுத்தம். மத்தபடி எங்களுக்கு எதுவும் தெரியாது. இந்த ஊரைப்பற்றியும் எங்களுக்கு எதுவும் தெரியாது. இந்த பக்கத்தில போறவங்களை பிடிச்சு குடிக்க குடுக்க சொன்னாங்க. அவங்க குடிக்க மறுத்தா அவங்களோட வாயில பிடிச்சு ஊத்தி விடச் சொன்னாங்க. அவ்ளோதான் எனக்கு தெரியும். “என்றான். 

சரி என்ற காளையன்,”இப்போது அவன் எங்க இருக்கிறான்? ” என்று கேட்டான். அடி வாங்கியவன்,” காட்டுக்குள் இருக்கிற வீட்டுக்குள்ள இருக்கிறார். ” என்று சொன்னார்.” சரி நீ போ “என்று சொல்லிவிட்டு காளையன், அவன் சொன்ன அந்த காட்டு வீட்டுக்குள் சென்றான். அவனுக்கு துணையாக, கதிரும் உடன் சென்றான். 

ரைஸ் மில்க்கு வந்த ராமச்சந்திரனும் தேவச்சந்திரனும் தமது வேலைகளை செய்து கொண்டிருந்தனர். இன்று அவர்களது முகம் ஜொலித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த கணக்குப்பிள்ளை, “ஐயா என்ன இன்னைக்கு ரெண்டுபேரும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிற மாதிரி தெரியுது.” என்று கேட்டார். 

அதற்கு இவர்கள் சிரித்துக்கொண்டே, “ரொம்ப சந்தோஷமா இருக்கிறோம். இன்னைக்கு தான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. எங்களோட தங்கச்சி திரும்ப வந்துட்டா, அவ மட்டும் வரலை. அவளோட பொண்ணையும் கூட்டிட்டு வந்திருக்கிறாள். திரும்ப எங்க கிட்ட வந்துட்டா. அதுதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என்று சொன்னார் ராமச்சந்திரன். 

அதைக் கேட்ட கணக்கு பிள்ளைக்கும் மிகவும் சந்தோஷமா இருந்தது.” ரொம்ப சந்தோசங்க ஐயா. சின்னம்மா வந்தது ரொம்ப சந்தோசம். “என்று சொன்னார். அப்போதுதான் தேவச்சந்திரனுக்கு அந்த விஷயத்தை இன்னும் சபாபதியிடம் சொல்லவில்லை என்று யோசனை வந்தது. 

அதனால், “அண்ணா நம்மளோட துர்கா வந்த விஷயத்தை நாம இன்னும் சபாபதி கிட்ட சொல்லலையே.” என்று சொன்னார். அதற்கு ராமச்சந்திரன்,” ஆமா தம்பி நானும் சந்தோஷத்தில் மறந்தே போயிட்டேன்.சரி இப்ப எடுத்து சொல்லுவோம் சபாக்கு” என்று சொல்லி போனை எடுத்தார். 

மறுபக்கம் போனை எடுத்தான் சபாபதி.” அப்பா சொல்லுங்கப்பா, “என்று தயங்கித் தயங்கி பேசினான். ஒருவேளை தனது ரிஜிஸ்டர் மேரேஜ் அப்பாவுக்கு தெரிந்து தான் போன் பண்றாரோ என்று சந்தேகம் இருந்தது சபாபதிக்கு. அதனால் தயக்கமாக பேசினான்.

இந்தப் பக்கம் இருந்த ராமச்சந்திரன், “சபா எப்படி இருக்கிற? என்ன குரல் ஒரு மாதிரி இருக்கு ?”என்று கேட்டார். மறுபுறம் இருந்த சபாபதி, “அப்பாடா அப்பாக்கு எதுவும் தெரியலை.” என்று நினைத்துக் கொண்டு, “ஒண்ணுமில்லை அப்பா தலைவலியாக இருக்கு அதுதான்” என்று சொன்னான். 

அதற்கு ராமச்சந்திரன், “அப்படியா போய் மருந்து எடு சபா. இல்லைனு சொன்னா லீவு போட்டுட்டு வீட்டுக்கு வந்துரு.” என்று சொன்னார். சபாபதியும், “பரவாயில்லைப்பா, இப்ப கொஞ்சம் நல்லா இருக்கு.” என்று சொன்னான். 

ராமச்சந்திரனும் சரி என்று சொல்லிவிட்டு, “சபா உன்கிட்ட ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லணும்

என்று சொன்னார். சபாபதி, என்ன என்று கேட்க ராமச்சந்திரன், “நம்மளோட துர்கா வீட்டுக்கு வந்துட்டப்பா “என்று சொன்னார். சபாபதிக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“என்னப்பா சொல்றீங்க அத்தை வீட்டுக்கு வந்துட்டாங்க? ரொம்ப சந்தோசம் அப்பா.” என்று வெளியே எனது அப்பாவிடம் சொன்னான். ஆனால் மனதுக்குள் ” என்ன இது அத்தை வந்தால் சொத்தில அவங்கட பங்கு போயிருமே. அவங்களோட பங்கை அவங்க யாருக்கு குடுப்பாங்க? கடவுளே என்ன இது?” என்று யோசித்தான். 

அதே நேரத்தில் ராமச்சந்திரன், “ஆமா துர்க்கா மட்டும் வரலை. அவ கூட ரெண்டு பொண்ணுங்களும் வந்து இருக்காங்க.” என்று சொன்னார். இதைக்கேட்ட சபாபதிக்கு கோபம் வந்தது. கடவுளே இத்தனை நாள் இல்லாம இப்ப மட்டும் எதுக்கு வந்தாங்க, இப்போ, சொத்து மூணாக பிரியாமல் நாலு அஞ்சா பிரியும். கடவுளே இப்ப என்ன செய்றது?” என்று தெரியவில்லையே என்று நினைத்தான். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!