அத்தியாயம் 2

4.5
(13)

இனிதுழனியிடம் கூறியது போல் அடுத்த பத்து நிமிடத்தில் வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை சகிதம் நெற்றியில் சந்தனக்கீற்றுடன் முழங்கை சட்டையை மடக்கி கையில் இருக்கும் காப்பினை மேல் நோக்கி ஏற்றிவிட்ட வண்ணம் மிடுக்கான தோரணையில் கீழ் இறங்கி வந்தான் இன்னுழவன்.

இறங்கி வருபவனுக்காக காத்துக் கொண்டிருந்தனர் வீட்டின் முன் கூடத்தில் ஊர் பெரியவர்கள்.

முன் கூடம், நடு கூடம், சுற்றிலும் வாழை, தென்னை, தோட்டம், கீழே பூஜை அறை மற்றும் சமையலை  அறையுடன் கூடிய மூன்று அறைகள், மேலே நான்கு அறைகள் என அனைத்து வசதிகளுடன் தேக்கு, பர்மா என கட்டப்பட்ட அழகான அந்தகால மாளிகையே இன்னுழவனின் வீடு.

எள்ளும் கொள்ளுமாய் நடு கூடத்தில் அமர்ந்து செய்தித்தாள்களை புரட்டிக் கொண்டிருந்த சக்திவேலின் பார்வை ஒரு கணம் அவரை கடந்து செல்லும் இன்னுழவன் மீது விழ்ந்து மீண்டு மீண்டும் செய்தித்தாளில் படிந்தன.

ஆனால் சற்றும் அவரை பார்த்து திரும்பாது கைகளைக் மார்புக்கு இடையில் கூப்பியவனாய் புன் சிரிப்புடன் நடுக்கூடத்தை நோக்கி சென்றான் இன்னுழவன்.

இன்னுழவன் தந்தை தான் சக்திவேல். இன்னுழவனுக்கு சக்திவேலுக்கும் கிஞ்சித்தும் ஒத்து போகாது.

இருவரும் எப்பொழுதும் கீரியும் பாம்புமாக தான் முறைத்துக் கொண்டிருப்பர். தந்தை மகனாக பாசமாய் சீராட்டுவார்கள் என்றால் அது கேள்விக்குறியே! இவர்களுக்கு இடையில் பாலமாய் இருப்பது இன்னுழவன் தாய் கோதாவரி தான். அவருக்குமே சக்திவேல் செயல்கள் பிடிக்காது தான். எனினும் கணவன் என்பதால் சகித்து கொள்வார்.

கிருஷ்ணகிரியில் சக்திவேலின் குடும்பம் தான் அவ்வூரின்  பெரிய தலக்கட்டு குடும்பம். ஊரில் எந்த விசேஷம் நடந்தாலும், நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் சக்திவேலின் குடும்பத்திற்கு முதல் மரியாதை.

 

விவசாயம்,ரைஸ் மில்,தோப்பு துறவு என வாழையடி வாழையாக  பரம்பரை நிலத்தில் சாகுபடி செய்து வருமானத்தையிற்றி வருகின்றனர். அதில் ஒரு பங்கை ஊருக்காக்கவும் இல்லாதவர்களுக்கும் செய்ய தவறியாதே இல்லை இன்று நாள் முதல்.

சக்திவேலின் அப்பாவின் காலத்திற்கு பின்பு சக்திவேல் தான் ஊரின் பொறுப்பையும் ஊர்மக்கள் பொறுப்பையும் ஏற்றி நடத்தி வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சக்திவேலுக்கு திடீரென்று இதயத்தில் கோளாறு ஏற்பட்டதால் அனைத்து பொறுப்புகளையும் அவரால் மேற்கொள்ள முடியாத பட்சத்தால் ஊர் மக்களாக பொறுப்பை குடும்பத்தின் அடுத்த தலைமுறையான இன்னுழவன் கையில் ஒப்படைத்தனர்.

அவனும் இதுக்காக தான்  காத்துக் கொண்டிருந்தான். சக்திவேலோ ஜாதி, மதம், இனம் என பார்க்கும் பிற்போக்குவாதி. ஆனால் இன்னுழவன் அதை எதையும் துளியும் கருத்தில்  ஏற்க்காது ஆண், பெண் என்று இரு ஜாதியே… அதுவும் அவர்கள் மனதால் இணைந்தால் ஒரே ஜாதி,மதம் எனக் கொள்கை கொண்டு ஊரை நல்வழிப்படுத்திக் கொண்டிருக்கின்றான் முற்போக்குவாதியாய்.

சக்திவேல் நாட்டாமையாகவும் ஊர் அறங்காவலராகவும் இருந்த தருவாயில் ஜாதி மதத்திற்கு கொடுத்த அனைத்து முக்கியத்துவத்தைக்கும் தவிடு பொடியாக்கி, நல்வழியில் ஊரையும் ஊர் மக்களையும் செலுத்திக் கொண்டிருக்கின்றான்  இன்னுழவன். அதானாலே தனது கொள்கைக்கு எதிராய் நிற்கும் மகனையும், மகனின் செயல் யாவிலும் பிடிக்காது மனம் ஓவ்வாது போனது சக்திவேலுக்கு.

விவசாயத்தின் மீது அலாதி பிரியம் கொண்டவன் இன்னுழவன். படித்ததும் முதுகலை விவசாயம், பார்த்துக் கொண்டிருப்பதும் விவசாயம் தான். விவசாயம் படித்தவனுக்கு மற்ற துறைகள் பற்றி தெரியுமா என்று கேட்டால் அனைத்துமே அத்துபடி தான் அவனுக்கு. நடப்பு சமூகத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் நேர்த்தியாக மெய்தேர்ந்தவன்.

ஊரார் அனைவரும் வசதியாக அமர்ந்து பேசி செல்ல வெளி கூடத்தில் கதிரைகள் அமைக்கப்பட்டிருக்க, அதில் அமர்ந்திருந்த ஊர் பெரியவர்கள் கோதாவரி கொடுத்த தேனீரை, ராகி புட்டையும் இரசித்து பருகி கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு எதிர் புறத்தில் திண்டில் கால்களை நீட்டி கொட்டாம் பாக்கைய் இடித்துக் கொண்டிருந்தார் அம்பிகாமா.

அம்பிகாமாவின் பார்வை தன்  பேரனின் மீது படிந்தது. சக்திவேலின் தாயாரே அம்பிகாமாள். பேரனின் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

வந்தவர்களுக்கு வணக்கத்தை வைத்துவிட்டு அவர்கள் அருந்தி முடிக்கட்டும் என அம்பிகாமாவை நெருங்கியவன் அவர் தோள் அழுத்த பிடித்தவனாய், “என்ன அப்பத்தா அப்படி பாக்குற என்ன?” என்றவனின் புன்சிரிப்பை கண்டு விரல்கள் மடக்கி நெற்றியில் நெட்டி முடித்தவர்…

“என் ராசா அப்படியே உன் தாத்தாவ பார்க்கிற மாதிரியே இருக்குயா. குணத்திலும் சரி நடந்து வர தோரணைலையும் சரி சாட்சாத் அவரே தான்” என்றவர் சில்லாக்கிக்க…

“அது சரி நீ காலம் புல்லா இப்படியே சொல்லிட்டு இரு. உள்ள இருக்குற உன்ற மகனுக்கு எரிகிற நெருப்புல எல்லாம் பொசுங்க போகுது” என்றான் நக்கலாய் இன்னுழவன் அருகில் அமர்ந்து பாக்கை இடித்தவனாய். அந்நேரம் அவர்களுடன் வந்து சேர்ந்தான் இன்னுழவன் நண்பன் அகரன்.

(அகரன் – முதன்மையானவன்)

“வாடா” என அவங்களுடன் அவனும் சேர்ந்து கொள்ள, “அவன் கிடைக்குறான் ***யிராண்டி…” என்றவரிடம், சத்தமாக சிரித்தவன், “சரி எதுக்கு இப்படி ஒத்தைல இருக்கிற. உள்ள போய் டிவி பார்க்க வேண்டியது தானே உன்ற மகன் கூட சேர்ந்து” வம்புழுத்தான் இன்னுழவன் அசட்டு நகையுடன்.

அம்பிகாமாவோ முகத்தை அஷ்ட கோலமாக சுழித்தவர்,  “ஐய்ய… அவன் கூட உக்காந்து எவன் பாக்க. நான் என்ற லோப்பு டப்லையே (லேப்டாப்) சூரிய நமஸ்காரம் எல்லாத்தையும் பாத்துட்டேன். இப்போ இந்த சொன்னு மிக்சில, ஆத்தா அது சன் மியூசிக்” அகரன் திருத்த…

“ஹான் அதாம்ல அந்த கழுதைல தான் காலை நேர புதுப்பாட்டு போடுவான். நல்லா ஜிலுக்கு ஜிலுக்குன்னு இருக்கும். அத பார்க்கலாம்னு பார்த்தா அதுக்குள்ள கழுத அது சார்சி இல்லாமல் போயிடுச்சு.

அதான் சார்சில குத்தி போட்டு வந்து இருக்கேன். இன்னுழவனை பார்த்தவர், நீ காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை முடிச்சு பிள்ளைய பெத்து போட்டா நாங்க ரெண்டு பேரும் கிளுகிளுனு பாட்டு போட்டு டான்ஸ் ஆடுவோம். நீ என்னடா வெள்ளையுஞ் ஜொல்லையுமா சுத்துறியே தவிர ஒண்ணுத்துக்கும் தேற மாட்டேங்குற” என்றவர் அலுத்து கொள்ள…

இன்னுழவனோ பாக்கை வெத்தலையில் வைத்து மடித்தவன், “நீ தான அப்பத்தா வாய்க்கு வாய் நான் தாத்தா மாதிரின்னு சொல்லுறவ. அப்ப நான் அப்படி தானே இருப்பேன்”

“அட கோமட்டி பயலே, உன் தாத்தாவ பத்தி உனக்கு என்ன தெரியும். அவர் என்ன கண்ணாலம் பண்றதுக்கு முன்னாடி ஊர்ல ஒரு பொண்ண விட மாட்டாரு. எல்லாவளும் அவர் பின்னாடி வாலாட்டோம் திரிவாளுவ.

அப்புறம் என்ன கட்டினதுக்கு அப்புறம் அந்த மனுஷன் தலையில நாலு போடு போட்டு அவரு சண்டியர்த்தனத்த அடைக்கி என்ற பக்கத்துல உட்கார வச்சேன். அப்புறம் என் மேல மயங்கினவர் தான், முன்னாடி மேலோகத்து ரதியே வந்து நின்னாலும் திரும்ப மாட்டார்ன்னா பார்த்துகேயேன்.” என்றவறவாரு கணவரை சில்லாகித்தார் முகம் மின்ன அம்பிகாமா.

“ஆத்தா உண்மையை சொல்லு தாத்தாக்கு பாயசம் போட்டுட்டுவேன்னு சொல்லி தான உன் பின்னாடி சுத்த வச்ச” அகரன் வினவி கிளுக்க…

“அதெல்லாம் புருஷனை முந்தானைல முடிஞ்சு, பொட்டி பாம்பா அடைக்கி வைக்கிற சூட்சுமம்லே. உனக்கு என்னாலே தெரியும் அத பத்தி” என்றார் அம்பிகாமா அகரன் தலையில் கொட்டியவராய்.

“ஓ அப்போ அந்த சூச்சமத்த  கொஞ்சம் எனக்கும் சொல்லித் தர்றது ” என்றான்  இன்னுழவன் வெற்றிலையை அவரிடம் நீட்டியவனாய் புருவம் தூக்க.

அதை வாங்கி பல் இடுக்கில் அதக்கியவர், “ஹிம் அத நான் உன்ற பொண்டாட்டியா வருவாள அவகிட்ட சொல்லிக்கிறேன் போடா அங்கிட்டு” என அவர் தோள் தட்டி உள்ளே நகர எத்தனித்தவரிடம்…

“அவகிட்ட சொன்னாலும் அவ என்கிட்ட தான் வரணும் நியாபகம் வச்சிக்கோ அப்பத்தா” என்றான் இன்னுழவன்.

“பார்ப்போம்ல அவ உங்கிட்ட வரலா நீ அவ பின்னாடி சுத்துறீயான்னு” என்றவர் உள்ளே செல்ல…

இன்னுழவனின் அவ்வளவு நேரம் உதட்டில் இருந்த சிரிப்பும் முகத்தில் இருந்த இன்முகபாவனையின் பின்னோக்கி செல்ல, கூர் விழிகளுடன் முகம் சற்று கட்டமாய் மீண்டும் கைகாப்பை இழுத்து விட்டவன் அனைவரின் முன் சென்று அமர்ந்தான் தலைமையாய். அவனின் பின் நின்று கொண்டான் அகரன்.

ஊர்க்காரங்கள் மற்றும் முக்கியஸ்தர்களிடம் சில நிமிடம் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தவன்  இறுதியாய் வணக்கம் வைத்து எழும்ப, அனைவரும்  புன்னகையுடன் விடைபெற, “வாடா சாப்பிட போலாம்” என அகரன் தோளில் கையை போட்டான் இன்னுழவன்.

“இல்லடா… அப்பா…” என சக்திவேலை குறித்தவன்  தயங்கி வாசலிலேயே நிற்க, “ஏன்டா அவர் சாப்பிட்டா தான் நீ சாப்பிடுவியா?” என்றான் நக்கலாய்.

“அப்படி இல்லடா நான் உள்ள வந்தா அப்பா டென்ஷன் ஆவாரு. அதான் நான் இங்கேயே உக்காந்து இருக்கேன் நீ போய் சாப்பிட்டு வா நம்ம வெளில கிளம்பலாம்” அகரன் சாட…

இன்னுழவனோ, “அடேய் நீ என்ன புதுசாவா வர, தினமும் உன்னோட ரோதனையா போச்சுடா ஒழுங்கு மரியாதையா வா” என அகரன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்று டைனிங் டேபிளில் அமர வைத்து உடன் அமர்ந்து கொண்டான்.

அகரன் உள்ளே வரும்பொழுதே டிவி பார்த்துக் கொண்டிருந்த சக்திவேல் கையிலிருந்த ரிமோட்டை தூக்கி ஒரே போடாய் போட, அது இரண்டாய் பிளக்க கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டார்.

காரணம் அகரன் கீழ் ஜாதியாம்.

முதல் தடவை அகரனை இன்னுழவன் வீட்டிற்குள் அழைத்து வர சாமி ஆடினார் சக்திவேல் அனைவரிடமும்.

“தெருவுல நின்னு பிச்சை போட வேண்டியவன எல்லாம் வீட்டுக்குள்ள அழைச்சிட்டு வர. கொஞ்சம் கூட வரைமுறை இல்லையா இன்னுழவா உன்கிட்ட?”

இன்னுழவன் தாடை இறுக்க அவரை எதிர் கொண்டவன், “அந்த தெருவுல நின்னு பிச்சை போடுறவன் இல்லனா நீங்க இப்படி வெள்ளையும் ஜொல்லையுமா சுத்த முடியுமா?” என காரப்பார்வை அவர் மீது வீசியவன்,

“சொல்லுங்க அவனோட அப்பாவும் அம்மாவும் வெளுக்கலைன்னா நீங்க இப்படி வெள்ளை சட்டை போடுவிங்களா. இல்ல அவங்க வயல்ல இறங்கி வேலை பார்க்கலனா நீங்க மூணு வேலை ருசியா சாப்பிடுவீங்களா?

எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் அவன் உழைப்பான்னா அப்பிடி உழைப்பவனுக்கு என் வீட்டுக்குள்ள வரையும் உரிமை இருக்கு தகுதியும் இருக்கு.

அப்புறம் எல்லாத்துக்கும் மேல அவன் என் நண்பன் அதைவிட அவனுக்கு பெரிய தகுதி எதுவுமே தேவையில்லை. அந்த உரிமையை அவனுக்கு போதுமானது. இன்னொரு தடவ பிச்ச, அது இதுன்னு சொன்னிங்க நான் மனுஷனா இருக்க மாட்டேன்.” என சக்திவேல் ஆடிய சாமியை வேப்பிலை அடித்தே அடக்கி வைத்தான் இன்னுழவன்.

கோதாவரியும் இனிதுழனியும் பரிமாற, “சும்மா தினமும் ரிமோட்டை உடைச்சா மட்டும் போதாது வாங்கி வைக்கணும்.” என்றவாரு உள்ளே செல்லும் சக்திவேலுக்கு கேட்குமாரு சாப்பிட்ட வண்ணம் இன்னுழவன் சாட…

அமர்ந்திருந்த அகரன் சட்டென்று எழுந்து தனது கால் பாக்கெட்டுக்குள் இருந்த ரிமோட்டை உருவி எடுத்து நீட்டியிருந்தான் இனிதுழனியிடம்.

சிரித்துக் கொண்டே அதை பார்த்து இன்னுழவன் சாப்பிட முறைத்து வைத்தாள்  இனிதுழனி அவனை. இது இன்று நடப்பது அல்ல வருடமாக நடந்து கொண்டு தான் இருப்பது. சக்திவேல் உடைப்பதும் அகரன் வாங்கி வைப்பதும் வாடிக்கையே!

ரிமோட்டை வாங்கிக் கொண்டவள் இன்னுழவனிடம், “அண்ணா முதல்ல இவர சாத்துன்னா… இவரு தினமும் வாங்கிட்டு வாங்கிட்டு வர தான் அப்பா உடைக்கிறாரு. இல்லனா அவரு என்ன பண்ணுவாரு” என அகரனை காண்பத்தவள் கூற…

(இனிதுழனி சைகையில தான் ஃப்ரெண்ட்ஸ் பேசுவா. அத நான் டைலாக் ஆ கொடுக்குறேன் ஓகே)

“முதல்ல  உன்னைய தான் வெளுக்கணும், என்ன சட்னி வச்சிருக்க, டேஸ்ட்டாவே இல்ல இன்னும் நாலு கரண்டி இதுல ஊத்து” என்றவனாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அகரன்.

“ஊத்துறேன் ஊத்துறேன் முதல்ல உன் தலையில ஊத்துறேன்” என சட்னியை அகரன் தலை அருகினில் கொண்டு சென்றவள், தலையில் உத்தாது அவன் தட்டில் ஊற்றிவிட்டு மேலும் இரண்டு இட்லியை அதில் எடுத்து வைத்தவள் “ஒழுங்கா தின்னு” என சைகையின் மூலம் சொல்லிவிட்டு” மண்டையில் நங்கென்று ஒரு கொட்டையும் வைத்துவிட்டாள்.

“அவனோ ஆ… குடை மிளகா” என்றவாரு அகரன் கத்த, அவன் வாயில் முழு இட்லியை திணித்திருந்தாள்  இனிதுழனி.

அவ்விருவர் செல்ல சண்டையையும் பார்த்தும் பார்க்காதது போல் மன நிறைவாய் சாப்பிட்டு கொண்டிருந்தான் இன்னுழவன். இனிதுழனி இன்னுழவனுக்கு மட்டும் செல்ல தங்கை கிடையாது அகரனுக்கும் தான். ஒரு தாய் வயிற்றில் பிறக்கவில்லை என்பது மட்டுமே வித்தியாசம்.

வேகமாக ஒடிச் சென்று கை கழுவி வந்தவள், “ஈவினிங் ஃபங்ஷன் இருக்கு மறக்காம வந்துருங்கன்னா ரெண்டு பேரும்.” எனக் கூறி டாடா காண்பித்து கல்லூரிக்கு கிளம்பினாள் இனிதுழனி.

“இனி இரு நான் ட்ராப் பண்றேன்” என பாதி சாப்பாட்டில் அகரன் எழும்ப, “டேய் நீ இரு நான் விட்டுட்டு வரேன்” என சாப்பிட்டு எழுந்தான் இன்னுழவன். “டேய் நான் சாப்பிட்டேன் வா போலாம்” என எழுந்துக் கொண்டான் அகரனும்.

செங்கோதை வருவாள்…

டியர் ஃப்ரெண்ட்ஸ் comments 🤗🤗.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!