காளையனை இழுக்கும் காந்தமலரே : 31

4.8
(9)

காந்தம் : 31

மலர்னிகாவிற்கு அவளது தந்தையின் நினைவு மிகவும் வாட்டியது. அதனால் அவரை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தாள். அவ் அறையைத் தாண்டிச் சென்ற காளையன், அவளின் புலம்பல் கேட்டு உள்ளே வந்தான். மலர்னிகா பேசுவதை கேட்டக் கேட்க அவனுக்கு இனம்புரியாத வலி வந்தது. 

அவள் அருகில் சென்று, குனிந்து படுத்திருந்தவளின் தலையை வருடிக் கொடுத்தான். யாரோ தன்னை தொடுவதை உணர்ந்து பதறி எழுந்தாள் மலர்னிகா. அவளுக்கு மும்பையில் நடந்தது ஞாபகம் வர, முகம் மாறியது. அதனால் அவனிடம் இருந்து பின்னால் சென்றாள். அவளுக்கு பயமாக இருந்தது. இதை அவதானித்த காளையனுக்கு மலர்னிகாவிற்கு ஏதோ பெரிய பிரச்சனை என்பதை அறிந்தான். 

ஆனால் அவளது செயலை கவனிக்காதவாறு, கட்டிலில் இருந்தான். பயந்து கால்களை கட்டிக் கொண்டு இருந்தவளின் கைகளை பிடித்து, “புள்ளை உனக்கு அப்பானா ரொம்ப பிடிக்குமா?” என்றான். தந்தை பற்றி பேச அவள் சகஜ நிலைக்கு திரும்பினாள். “ரொம்ப, ரொம்ப பிடிக்கும். எனக்கு அப்பாகூட இருக்கும் போது கவலை, சோகம் இதெல்லாம் தெரியவே தெரியாது.” என்றவள் கண்கள் கலங்கின. 

அதை தனது பெருவிரலால் துடைத்த காளையன்,” மாமா எப்பவும் உன்கூடவே தான் இருப்பாங்க. உன்னை எப்பவுமே பார்த்துக் கொண்டு இருப்பாங்க. கவலைபடாத உனக்காக நாங்க எல்லோரும் இருக்கிறம். அதுவும் நான் எப்பவும், எந்த நிலையிலும் உன்கூடவேதான் இருப்பேன்.” என்றான். அதைக் கேட்டவள் அவனது முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.” நீ ரொம்ப யோசிக்கிறனு நினைக்கிறன். இங்க வா, வந்து என்னோட மடியில படுத்துக்க, தப்பா நினைக்க வேண்டாம். உன்னோட அப்பாவை என்னை நினைச்சிக்க. “என்றான். 

கட்டிலில் அவன் சாய்ந்து அமர, அவனின் மடியில் அவள் படுத்தாள். காடு மேடு அலைந்து திரிந்து வீடு வந்து சேர்ந்த மாதிரி இருந்தது. மனதில் எந்த சிந்தனையும் வரவில்லை. மெதுவாக கண்களை மூடிக் கொண்டாள். அப்போது அவளைப் பார்க்க அறைக்குள் வந்தனர், காமாட்சியும் நிஷாவும். 

காளையன் மடியில் அவள் படுத்திருப்பதைப் பார்த்து சிரிக்க, அவர்களை நிமிர்ந்து பார்த்த காளையன் உள்ளே வருமாறு சைகை செய்ய அவர்களும் வந்தனர். “என்ன காமாட்சிமா? நிஷாமாவும் நீயும் சேர்ந்து வந்திருக்கிறீங்க? “என்றான். இவர்கள் பேச்சுக் குரலில் எழ நினைத்தாள் மலர்னிகா. அவளை உணர்ந்தவன் போல, காளையன் அவளது கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டான். அதில் எழவேண்டாம் என்று சொன்னான். அவளும் அமைதியாகி விட்டாள். 

காமாட்சி,”வேலை எல்லாம் முடிச்சுட்டோம் அண்ணா. அண்ணியை பார்த்துட்டு அப்படியே போய் தூங்கலாம்னு வந்தோம்.” என்றாள். நிஷாவிடம் திரும்பிய காமாட்சி, “நானும் இப்படித்தான் சின்னண்ணா மடியில அடிக்கடி தூங்குவன். அண்ணா மடியில தூங்கினால் எந்த கவலையும் இருக்காது.” என்றாள். அதைக் கேட்டு சிரித்த நிஷா,” எனக்கு எல்லாம் அம்மா, அப்பா, அண்ணா, அக்கானு எந்த உறவுகளோடும் வாழும் குடுப்பனை எனக்கு இல்லை. ஆனால் மேடத்தை இப்படி பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு. அவங்களை அண்ணா நல்லா பார்த்துப்பாங்கனு நல்லாவே தெரியுது. ” என்றாள். 

அதைக் கேட்ட காளையனுக்கும் காமாட்சிக்கும் அவளை நினைத்து கவலையாக இருந்தது. காமாட்சி உடனே,” அதுக்கு என்ன நிஷா, சின்னண்ணா எனக்கு மட்டும் அண்ணா இல்லை. உனக்கும் அண்ணாதான். அதனால நாம ரெண்டு பேரும் அண்ணா மடியில அண்ணியோட சேர்ந்து தூங்கலாம். “என்றாள். நிஷா தயங்க, “அட வாம்மா. நீயும் எனக்கு காமாட்சி போலத்தான். என்னோட முதல் குழந்தை காமாட்சிதான்.” என்றான். அதில் நெகிழ்ந்தனர் இருவரும். இடது புறம் மலர்னிகா படுத்திருக்க, வலது புறம் வந்து காமாட்சியும் நிஷாவும் வந்து படுத்தனர். 

ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தவர்கள், பேசியபடியே தூங்கினார்கள். காளையன் பின்னால் சாய்ந்து கொண்டு, மலர்னிகாவின் கையில் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவன் அப்பிடியே தூங்கிவிட்டான். 

மோனிஷா கேசவனிடம் சொல்லிக் கொண்டு கம்பனிக்குச் சென்றாள். அவள் சென்றதும் முகேஷை அழைத்துக் கொண்டு கேசவன், ஒரு இடத்திற்கு வந்தார். அந்த இடத்தை பார்த்து எதுவும் புரியவில்லை முகேஷ்க்கு, “அப்பா இங்க எதுக்கு என்னை கூட்டிட்டு வந்தீங்க?” என்றான். 

அவரும் பேசாமல் வா முகேஷ் என்றவர் ஒரு கல்லறையின் முன்பு வந்து நின்றார். அவர் வரும் போது வழியில் வாங்கி வந்த பூமாலையை அந்த கல்லறை மீது போட்டார். “அப்பா இங்க எதுக்கு வந்திருக்கிறம்? இது யாரோட கல்லறை?” என கேட்டுக் கொண்டு நின்றான். 

ஒரு பெருமூச்சை விட்ட கேசவன் அந்த கல்லறை யாருடையது, அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை எல்லாம் முழுவதுமாக முகேஷிடம் சொன்னார். அதைக் கேட்ட முகேஷ்க்கு கோபம் வந்தது. “ஏன் அப்பா இத்தனை நாளாக எங்கிட்ட எதையுமே சொல்லலை. இதுக்கு காரணமானவங்களை எப்பவும் நான் மன்னிக்க மாட்டேன். அவங்களை பழிவாங்காமல் விடமாட்டேன்.” என்றான். 

கேசவனும், “ஆமா முகேஷ் பழிவாங்கணும். அவங்களை மன்னிக்கவே கூடாது.” என்றார். “அப்பா இனிமேல் இந்த விசயத்தை நான் பார்த்துக்கிறன். “என்றான். அதற்கு கேசவன்,” நான் அதுக்காகத்தான் ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்திட்டு வர்றன். இனிமேல் ரெண்டு பேரும் சேர்ந்து அதை பண்ணலாம்.” என்றார். இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு வந்தனர். 

கம்பனிக்கு வந்த மோனிஷா வேலையை பார்த்துக் கொண்டு இருந்தாள். ஆனாலும் அவளது கண்கள் அடிக்கடி சபாபதி இருக்கும் இடத்தை தொட்டு வந்தது. அவனை பார்க்காமல் நாளை கடத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. போனை எடுத்தது சபாபதிக்கு போன் பண்ணலாம் என்று நினைத்தாள். ஆனால் அவன் தூங்கிக் கொண்டு இருந்தால், தொல்லை செய்வது போல இருக்குமே என்றும் யோசித்தாள். பின்னர் சரி எதற்கும் ஒரு தடவை எடுத்துப் பார்க்கலாம் என்று சபாபதிக்கு போன் பண்ணினாள். 

சபாபதி பெருந்தேவனார் சொன்னதையே யோசித்துக் கொண்டே அவனின் நண்பனைக் காண செல்ல, அவன் வேலையாக டவுனுக்கு போயிருப்பதாக வீட்டில் சொல்ல, அப்பிடியே வந்து ஆற்றங்கரையின் அருகே நின்ற, ஆலமரத்தின் கீழே வண்டியை நிறுத்தி விட்டு அதில் ஏறி இருந்தான். அவனுக்கு குழப்பமாக இருந்தது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தான்.

மிகவும் டென்ஸனாக இருந்தது. அப்போது மோனிஷாவின் கால் வர, உடனே அட்டெண்ட் பண்ணியவன், “மோனி வீடியோ கால் பண்றன்.” என்றவன் கட் பண்ணி விட்டு, அவளுக்கு வாட்ஸ்ஆப்பில் வீடியோ கால் பண்ணினான். அந்தப் பக்கம் போனை எடுத்த மோனிஷா செய்த செயலில் சிரிப்பு வந்தது. 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😀

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “காளையனை இழுக்கும் காந்தமலரே : 31”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!