உனக்காய் சிந்திக்கும்
என்னுள்ளத்திடம் என்னவென்று
விளக்குவேன் அன்பே…
என்னுள்ளே தான்
உன்னுயிரும் வீற்றிருப்பதை…
உனக்காக உன்னைப் பிரியவா?
அல்லது
எனக்காக என்னையே பிடுங்கிடவா?
உயிர்வதை
உணர்கிறேன் என்னுயிரே!
———————