மச்சக்கார மைனர்

5
(2)

அத்தியாயம்-05

இளவேலனுடைய வீட்டிற்குள் வந்தவள் அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் மாடனாக டிரஸ் அணிந்து கொண்டு கண்ணாடி முன்பே அவனோடு பேசுவது போல் பேசிக் கொண்டிருந்தவள் அவளுடைய ஃபோன் அடிக்கவும் அதை எடுத்து காதில் வைத்தவள். “மிஷின் சக்சஸ்..” என்றாள் புன்னகையுடன்.

அதைக் கேட்டு அந்தப் பக்கத்தில் இருந்தவரோ “பேட்டி உன் மாமன கண்டுபிடிச்சிட்டியா..?” என்றார் அதே புன்னகையோடு.

அவளோ “பின்ன உன் பேத்திய பத்தி என்ன நெனச்ச..? நான் ஒரு விஷயத்துல இறங்கினா கரெக்டா முடிச்சுருவேன் நானி.. ஆமா மாமாவுக்கு அந்த இடத்துல மச்சம் இருக்குன்னு சொன்னியே அது உண்மையிலேயே இருக்கா..?” “அடியே என் பேரன் பிறக்கும் போது முதல்ல வாங்கினதே நான் தான் எனக்கு தெரியாதா.. அவனுக்கு அந்த இடத்தில ஒத்தரூபா சைஸ்ல ஒரு மச்சம் உண்டு டி..” என்றார் அவளின் பாட்டி.

“சரி நானி இப்பதான் நான் வீட்டுக்குள்ள நுழைஞ்சு இருக்கேன்.. பாரு கூடிய சீக்கிரம் உன் பேரன எப்படி என் கைக்குள்ள போடுறேன்னு..” என்றாள்.

அதற்கு அவரும் “என்னவோ பண்ணு பேட்டி.. என் பேரன் வாழ்க்கை நல்லா இருந்தா எனக்கு அதுவே போதும்.. அவன் அப்பன மாதிரி அவனும் அப்படி மாறிடக்கூடாது..” என்றார். “கவலைப்படாத நானி நான் இருக்கேன் இல்ல நான் பாத்துக்குறேன்..” என்று போனை வைத்துவிட்டு தன்னுடைய ஃபோனில் உள்ள இளவேலனின் தற்போது உள்ள போட்டோவை பார்த்து “என் மச்சக்கார மாமா உன்னை எப்படி தூக்குறேன்னு பாரு..” என்று அவனுடைய போட்டோவுக்கு முத்தம் பதித்தவள் தூங்கிவிட்டாள்.

மறுநாள் விடிந்ததும் தூக்கம் கலைந்து எழுந்த அந்த மலபார் பெண்ணோ தன் அருகே படுத்திருந்த இளவேலனை பார்த்தாள். பின்பு தன்னையும் பார்த்தாள். அவளுடைய உடலில் ஒட்டு துணி இல்லை போர்வையால் அவள் மேனி மூடப்பட்டிருந்தது. பக்கத்தில் அவனோ இடுப்பு வரை மட்டும் போர்வை போர்த்தி இருந்தான். அந்த கட்டிலை சுற்றியும் அவன் கையில் வைத்திருந்த மல்லிகை பூவோ சுற்றிலும் சிதறி கிடந்தது.

தன்னுடைய உடலை முறுக்கி எழுந்தவள் தன்னுடன் பூ போல் இருப்பதை நினைத்து ‘என்ன நம்ம உடம்பில ஒரு வலியும் இல்லை.. இத்தனை நாளா இப்படி இருந்ததே கிடையாதே.. நானும் எத்தனையோ பேர் கூட மேட்டர் பண்ணி இருக்கேன்.. அப்ப எல்லாம் சக்கையா பிழிஞ்சு போடுவாங்க.. நாலு நாளைக்கு எழுந்திரிக்கவே முடியாது.. இன்னிக்கு என்ன இப்படி ஒரு புத்துணர்ச்சியா இருக்கு.. இவரு நேத்து நைட்டு மேட்டர் பண்ணாரா இல்லையா.. அதுக்கான ஒரு தடயமும் இல்லையே..” என்று போர்வையை விலக்கி தன் உடலை ஆராய்ந்தாள்.

அவள் உடலில் எந்த ஒரு தழும்பும் இருக்கவில்லை. சிந்தனையோடு எழுந்தவள் தன்னுடைய ஆடையை மாற்றிக் கொண்டு வெளியே வர அங்கே நண்டு யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.

அவனை அழைத்தவள் “யோவ் என்னையா உங்க அண்ணன் பெரிய சூரப் புலி அப்படி இப்படின்னு ஏதேதோ வசனம் பேசி என்னை ராத்திரி அனுப்பி வச்ச.. சரி நானும் நீ சொன்னத நம்பி அப்படியே என் மேல வந்து பாய்வாருன்னு நினைச்சா.. இப்படி எனக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வச்சு பண்ண போறதா சொன்னீங்க.. நானும் ஒத்துக்கிட்டேன் ஆனா என் உடம்புல ஒரு காயமும் இல்லை.. ஒரு சின்ன வலி கூட இல்ல.. என்னய்யா நடக்குது இங்க..?” என்று அவளுக்கு தோன்றிய சந்தேகத்தை அவனிடம் கேட்க.

அவனோ “இங்க பாரு எங்க அண்ண பொண்ணுங்கள மதிக்கிறவர்.. பொண்ணுங்கள பூவா நடத்துவாரு.. அதனாலதான் உனக்கு ஒரு வலியும் இல்லாம நடந்திருக்காரு.. ஞாயமா பார்த்தா நீ சந்தோஷம் தான படனும் ஆனா நீ கேள்வி மேல கேள்வி கேட்டு கிட்டு இருக்க..” என்று அவன் சொல்ல, அவளோ ‘என்னை இது புதுசா இருக்கு எப்படி பார்த்தாலும் ஆச்சரியமா இருக்கே.. அப்போ ஒரு வேளை இவர் பார்த்தாலே பொண்ணுங்க மாசமாயிடுவார்களோ.. இருக்கும் இருக்கும்..’ என்று யோசித்துக் கொண்டிருக்க அவள் முன் சொடக்கு போட்ட நண்டு “ரொம்ப யோசிக்காத கெளம்பு..” என்று அவள் கையில் பணத்தை கொடுத்து அனுப்பினான். காலையில் தூக்கம் கலைந்து எழுந்து வந்த வினிதாவோ இவர்கள் இருவரும் பேசுவதை கேட்டுவிட்டாள். அவளுக்கு வந்ததே கோபம்.

தான் இவனுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இங்கு வந்திருக்கிறோம் இவன் என்னடான்னா தன்னுடைய நானி பயந்தபடி அவனுடைய தந்தை போலவே இருக்கிறானே.. என்றவளுக்கு கோபம் எரிமலையாக வந்தது.

உடனே தன்னுடைய அறைக்கு திரும்பியவள் தன்னுடைய நானிக்கு ஃபோன் போட்டாள்.

மறுமுனையில் அவர் போனை ஆன் பண்ணியதும் “நானிஇஇ..” என்று கத்தினாள்.

அவரோ “க்யா பேட்டி இப்படி காலங் கார்த்தாலேயே போன் பண்ணி இப்படி கத்துற..?” என்று கேட்டார். “நான் கத்துறேனா நானி உன் பேரன் நீ நினைச்ச மாதிரியே அவங்க அப்பா மாதிரி தான் சுத்திக்கிட்டு இருக்காரு.. பொண்ணுங்களோட சகவாசம் இருக்கு நானி..” என்க. அவருக்கோ தான் நினைத்தது போல் நடந்து விட்டதே என்று நினைத்தவருக்கு கண்கள் கசிந்தது. அதை உணர்ந்து கொண்டவளோ “டீகே நானி இங்க பாரு நீ அழாதே.. அதான் நான் வந்துட்டேன் இல்ல இதுக்கு முன்னாடி அவரு எப்படி இருந்தாரோ பரவால்ல.. இனி அவரு எனக்கு மட்டும்தான் இதுக்கப்புறம் அவரோட வாழ்க்கையில என்ன தவிர வேற எந்த பொண்ணுக்கும் இடம் கிடையாது.. அதுக்கு நான் அனுமதிக்கவும் மாட்டேன்.. சரி நானி பப்பா எதுவும் உன்கிட்ட கேட்டாரா..?” என்றாள்.

அவருக்கோ தன்னுடைய பேத்தி இப்படி சொன்னதும் அவருடைய மனமும் குளிர்ந்து போனது.

“ஆமா பேட்டி உன் அப்பா என்கிட்ட கேட்டான்‌.. நானும் நீ சொன்ன மாதிரியே சொல்லிட்டேன் அதனால இப்போதைக்கு எந்த சந்தேகமும் வராது.. நீ நினைச்ச காரியத்தை நல்லபடியாக முடிச்சிட்டு வா அதுவரைக்கும் நான் சமாளிச்சுக்கிறேன் அவனை..” என்றார்.

இவளும் “சரி நானி..” என்றவள் போனை வைத்துவிட்டு அவனை எப்படி தன் வலையில் சிக்க வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

அதற்கு முன்பு விடிந்ததும் தன்னை இங்கிருந்து கிளம்பச் சொன்னானே என்று யோசித்தவள், என்ன செய்யலாம் என்று திட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.

இது எதையும் அறியாத நம்முடைய மைனரோ ஆழ்ந்த நித்திரையில் இருந்து தூக்கம் கலைந்தான். எழுந்தவன் தன் அருகே பார்க்க யாரும் இல்லை என்றதும் எழுந்து குளியலறை சென்று குளித்து முடித்து வந்தவன் நேராக வினிதா இருக்கும் அறை நோக்கிச் சென்றான்.

அவள் தன்னைத் தேடித்தான் இங்கு வந்திருக்கிறாள் என்று தெரிந்தால் இனியும் அவள் இங்கு இருக்கக் கூடாது எப்படி ஏனும் அவளை இங்கிருந்து விரட்டி விடணும் என்று யோசித்தவன், முதல் வேலையாக அவளை இங்கிருந்து அனுப்ப எண்ணி அவளுடைய அறைக் கதவை தட்டினான்.

தன்னுடைய அறைக்கதவு தட்டப்படவும் ஆழ்ந்த யோசனையில் இருந்தவள் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

“என்ன சார் காலையிலேயே இப்படி பால்காரன் மாதிரி வந்து கதவ தட்டுறிங்க..?” என்றாள்.

அவனோ “ஏய் உன்னை என்ன சொன்னேன்.. காலையில எழுந்திரிச்சதும் முதல் வேலையா இங்க இருந்து போய்டணும் அப்படித்தானே சொல்லிக் கூட்டிட்டு வந்தேன்.. நீ என்னடான்னா இன்னும் இங்கேயே இருக்க.. இதுல என்ன பால்காரன்னு வேற நீ சொல்ற..” என்று கேட்க.

அவளோ தன்னுடைய முப்பத்திரண்டு பற்களையும் காட்டியவாறு “மன்னிச்சிடுங்க சார் தெரியாம சொல்லிட்டேன்.. இந்த வீடு எனக்கு வசதியா இருக்கு சார்.. நான் இங்கேயே இருந்து என் மாமாவை கண்டுபிடிக்கிறேன்.. எப்படியும் வெளியே போய் வாடகைக்கு ஒரு வீடு எடுக்க போறேன். அந்த வாடகையை நான் உங்களுக்கு கொடுத்துடறேன்.. என்ன இங்கிருந்து போக சொல்லாதீங்க.. நீங்க இந்த ஊருக்கே எவ்வளவு பெரிய மைனர் இப்படி ஒரு பொட்ட புள்ளைய வெளில போக சொல்லலாமா.. அது உங்களுக்கு தானே கெட்ட பேரு..’ என்றவள் தன்னுடைய அடிக் கண்ணால் அவனுடைய முகத்தை பார்க்க, அவனோ ‘என்ன இவ இப்படி சொல்றா.. சரி இருந்துட்டு போகட்டும் நம்மள மீறி எப்படி இவ நம்மள கண்டுபிடிக்க முடியும்.. அதுக்கு நாம விட்டா தானே.. ஏதோ ஒரு மூலையில இருந்துட்டு போகட்டும்..’என்று யோசித்தவன்

“சரி சரி இருந்துட்டு போ..” என்று சொல்ல, அவளோ அவன் சரி என்று சொன்னதும் சட்டென அவனுடைய கழுத்தில் கை கோர்த்து அவனை இறுக்கமாக அணைத்து கன்னத்தில் முத்தம் வைத்தவள், “ரொம்ப நன்றி சார்..” என்றாள்.

அவனும் உறைந்து போய் நின்று விட்டான். இவளுடைய இந்த அணுகுமுறையில் சில நொடிகள் கழித்து சுயம் வந்தவன் அவளை தன்னிடம் இருந்து சட்டென பிரித்து விட்டு “ஏய் இங்க பாரு நான் மைனர் தான்.. அதுக்காக என் விருப்பம் இல்லாம எந்த பெண்ணும் என் பக்கத்துல வரக்கூடாது.. இனிமே இந்த மாதிரி கட்டிப்பிடிக்கிறது முத்தம் கொடுக்குற மாதிரி வேலை எல்லாம் வச்சுக்கிட்ட தோலை உரிச்சிடுவேன்.. ஒழுங்கா உன் மாமன கண்டு பிடிக்கிற வேலைய மட்டும் பாரு..” என்று சொன்னவன் அங்கிருந்து விட்டால் போதும் என்று நண்டுவைத் தேடி போய் விட்டான்.

அவளோ தனக்குள் சிரித்துக் கொண்டு “என்ன மாமா இதுக்கே அதிர்ச்சியாகிட்ட.. இனிதான பார்க்கப் போற இந்த வினிதா ஓட ஆட்டத்தை.. என்ன மக்களே ஆட்டத்த ஆரம்பிப்போமா..” என்று ஒற்றைக் கண்ணடித்தாள் அவள்.

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!