மச்சக்கார மைனர்

5
(1)

அத்தியாயம்-12

 

“இப்ப நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிப்பீங்களா..? மாட்டீங்களா..?” என்று அவள் விடாப்படியாக கேட்க, அவனோ இந்தப் பெண்ணிடம் தன்னைப் பற்றி அனைத்தும் சொல்லியும் கூட அதைக் கேட்காமல் ஏன் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறாள் என்று நினைத்தவன்,

“இல்லை என்னால முடியாது.. என்னால ஒரு பொண்ணோட வாழ்க்கை போறதுல எனக்கு விருப்பம் இல்லை..” என்றான். அவளோ தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த தாலியையும் இன்னொரு கையில் விஷ பாட்டிலையும் எடுத்து அவன் முன்னால் உயர்த்தியவள் “இங்க பாருங்க மாமா இந்த நிமிஷம் நீங்க என்னைக் கல்யாணம் பண்ணி ஆகணும்.. இல்ல அப்படின்னா அடுத்த நிமிஷம் இந்த விஷத்தைக் குடிச்சு என் உயிரை விட்டுவிடுவேன்..” என்றாள்.

அவனோ அவள் கையில் உள்ள விஷப்பாட்டலை பிடுங்க நினைக்க, “என்ன மாமா என்னை அவ்ளோ ஈஸியா எடை போட்டு விட்டீங்களா..? இந்த விஷ பாட்டில நீங்க பிடுங்கினாலும் என்னால வேற வழியில சாக முடியாதுன்னு யோசிச்சீங்களா..? கண்டிப்பா நான் சொன்னதைச் செய்வேன்..” என்றாள்.

அவனோ “ஏன்டி இப்படி சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்க.. என்னைக் கல்யாணம் பண்ணி உன் வாழ்க்கை தான் வேஸ்டா போகும்.. உனக்காகத்தான் நான் இவ்வளவு தூரம் கெஞ்சிகிட்டு இருக்கேன்.. ஆனா உனக்கு ஏன்டி அது புரிய மாட்டேங்குது.. சும்மா சாகப் போறேன் சாகப் போறேன்னு என்னைப் பயம் காட்டிகிட்டு இருக்க..?”

“உங்களுக்கு என்ன மாமா பிரச்சனை என்கூட உங்களால உறவு வச்சுக்க முடியாது அதானே.. எனக்கு அதெல்லாம் தேவையில்லை மாமா.. எனக்கு தேவை நீங்க என்கூட இருக்கணும்.. எனக்கு அதுவே போதும்..” என்று சொல்ல, அவனோ ‘ஏன் இந்த பெண்ணிற்கு தன் மேல் இவ்வளவு அன்பு..’ என்று யோசித்தவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.

“இங்க பாருங்க மாமா உங்களுக்கு இருக்கிறது ஒரு பிரச்சினையே கிடையாது.. அத நான் சரி பண்ணிடுவேன்..”

என்ன சரி பண்ணிடுவ..? உன்னால ஒன்னும் பண்ண முடியாது.. நானும் டாக்டர்கிட்ட பார்த்துட்டு வந்துட்டேன் எதுவுமே சரியாகல.. உன்னால மட்டும் எப்படி சரி பண்ண முடியும்..?” என்று கோபமாக அவளிடம் கத்தினான்.

“என்ன மாமா என்னால முடியாதுன்னு நினைக்கிறீங்களா.. என்னால கண்டிப்பா முடியும் அடுத்த மூணு மாசத்துக்குள்ள உங்க பிள்ளைய என் வயித்துல நான் வாங்கி காட்டுறேன்.. இது ஓபன் சேலஞ்ச் மாமா.. உங்களுக்கு தைரியம் இருந்தா இந்த தாலியை இப்பவே என் கழுத்தில கட்டுங்க..” என்றாள்.

“என்னடி என்னை சீன்டிப்பார்க்கிறியா..? இப்படி எல்லாம் பண்ணா நான் தாலி கட்டுவேன்னு நினைக்கிறியா முடியாது..” என்றான்.

“அட என்ன மாமா ஒரு பொண்ணு நானே இவ்வளவு தைரியமா உங்ககிட்ட சேலஞ்ச் பண்றேன்.. நீங்க என்னடான்னா இப்படி பயப்படுறீங்க.. அப்போ உங்கமேலயே உங்களுக்கு நம்பிக்கை இல்ல போல..” என்று அவனை உசுப்பேற்ற அது சரியாக அவனிடம் வேலை செய்ய, அவளை நெருங்கி வந்தவன் அவள் கையில் உள்ள தாலியையும் அவளையும் ஒரு முறை பார்த்தவன்,

“இப்பவும் சொல்றேன் உன்னால இந்த சேலஞ்சில் ஜெயிக்க முடியாது.. ஆனா இதுக்கு ஒரு கண்டிஷன் இருக்கு..” என்று அவன் சொல்ல அவளோ அவனை என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தினாள்.

“அப்படி நீ சொன்ன மாதிரி இந்த மூணு மாசத்துக்குள்ள நீ சொன்னது நடக்கலைன்னா.. நான் சொல்ற மாதிரி நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும் இந்த கண்டிஷனுக்கு உனக்கு சம்மதம் அப்படின்னா சொல்லு.. நான் இந்த தாலியை உன் கழுத்துல கட்றேன்..” என்றான்.

அவளுக்கோ அவள் மேல் அசாத்திய நம்பிக்கை இருந்தது.

அவனுடைய பிரச்சனையை தன்னால் எப்படியும் தீர்க்க முடியும் என்று உறுதியாக நம்பியவள் “சரி மாமா நீங்க சொல்ற கண்டிஷனுக்கு நான் ஒத்துக்கிறேன்..” என்று நிமிர்ந்து நின்றாள்.

அதன் பிறகே அவள் கையில் உள்ள அந்த தாலியை வாங்கியவன் அவள் கழுத்தில் கட்டினான்.

அவன் தாலியை கட்டியதும் தன்னுடைய கழுத்தில் உள்ள தாலியை கையில் எடுத்து பார்த்தவள் அதை தன் கண்களில் ஒற்றிக்கொண்டு “ரொம்ப நன்றி மாமா..” என்றவள் சட்டென அவனை இறுக்கி அணைத்து அவன் கன்னத்தில் ஒரு முத்தமிட்டு அவளுடைய அறை நோக்கி ஓடிவிட்டாள்.

அவனோ அவளது நெருக்கத்தில் சற்று ஆடிப் போய் நின்றவன் பின்பு தன்னுடைய கன்னத்தை துடைத்துவிட்டு “இது எங்க போய் முடியப் போகுதோ தெரியல..” என்றவன் “நேத்து அப்படி என்னதான் நடந்திருக்கும்.. இந்த நண்டு என்னைக்கும் இல்லாம அந்த பாலை எதுக்கு என்ன குடிக்க சொன்னான்..? எல்லாம் அதனால வந்தது.. எப்படியாவது அவளை இந்த ஊரை விட்டு அனுப்பிவிடலாம்னு பார்த்தா கடைசில என்னென்னமோ நடந்து போச்சு… நண்டுஊஊ..” என்று பல்லைக் கடித்தவன் நண்டுவிற்கு போனை போட, அவனுடைய தொலைபேசியோ தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்று வர, தன்னுடைய போனை தூக்கி அந்த பெட்டில் வீசியவன் குளியலறைக்குள் நுழைந்து விட்டான்.

இவன் குளித்து ரெடியாகி கீழே வர அதற்குள் அவனுடைய புது மனைவியோ அவனுக்கு முன்பாகவே குளித்து புடவை கட்டி அவன் கட்டிய தாலி அவளுடைய மார்பின் கிடந்து அவள் உரிமையைக் கூற, தலையில் மல்லிகை பூ வைத்து நெற்றி வகுட்டில் குங்குமம் சகிதம் கையில் டீக்கப்போடு அவன் எதிரி வந்தாள். அவளை அந்த மாதிரி பார்த்தவனுக்கோ அவனுடைய அன்னையே நேரில் வந்தது போல் இருந்தது.

எதுவும் சொல்லாமல் அவளுடைய கையில் உள்ள டீயை வாங்கியவன் அங்கே உள்ள சோபாவில் அமர்ந்து அவளைப் பார்த்தவாறு அந்த டீயை பருகிக் கொண்டிருந்தான்.

“மாமா மாமாஆஆ..” என்று அவள் அவனை இரு முறை அழைத்த பின்பு “ஹாஆன் என்ன..?” என்றான்.

“மாமா என்னைக் கொஞ்சம் வெளியே கூட்டிட்டு போறீங்களா கொஞ்சம் ட்ரஸ் எடுக்கணும்..” என்று கேட்க,

“எனக்கு என்ன வேற வேலை இல்லைன்னு நினைச்சியா..? என்னால எல்லாம் முடியாது.. நீ போய் எடுத்துக்கோ..” என்றான். “என்ன மாமா இது..? எனக்கு இந்த ஊர் புதுசு.. நீங்களே என்னை கூட்டிட்டு போங்களேன்..”

அவன் டீயை குடித்துவிட்டு அவளை ஏற இறங்க பார்த்தவன் “உன் பெயர் என்ன..?” என்றான்.

இப்பொழுது தான் அவளுடைய பெயரையே கேட்கிறான்.

“என்ன மாமா என் பேர் கூட உங்களுக்கு தெரியாதா..?” “தெரியாது அதான் கேட்கிறேன்..” “என் பெயர் வினிதா.. ஆனால் எல்லாரும் என்னை வினின்னு தான் கூப்பிடுவாங்க.. நீங்களும் என்னை அப்படியே கூப்பிடுங்க மாமா..” என்றாள் அவன் அருகே நெருங்கி அமர்ந்து.

“எல்லாரும் கூப்பிடுறதுனால என்னால எல்லாம் அப்படி கூப்பிட முடியாது.. எனக்கு நீ எப்பவும் வெள்ளத் தக்காளி தான்.. ஏதோ உன் பேர கேக்கணும்னு தோணுச்சு அதான் கேட்டேன் வேற ஒன்னும் இல்ல..” என்க,

அவனை முறைத்தவள் “பரவால்ல மாமா இது கூட நல்லாத்தான் இருக்கு.. உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா நீங்க கூப்பிடுற இந்த வெள்ளைத் தக்காளி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மாமா.. நீங்க அப்படியே கூப்பிடுங்க..”

“சரி நாத்து நடுவதற்கு ஆள்களை வர சொல்லி இருந்தேன் நான் கிளம்புறேன்..” என்று அவன் வெளியேறப் போக,

“மாமா மாமா என்னை வெளியே கூட்டிட்டு போக சொன்னேனே..?” என்று கேட்க,

“நீ ரெடியா இரு நான் போயிட்டு ஒரு மணி நேரத்துல வந்து உன்னை கூட்டிட்டு போறேன்..” என்றான். அவளும் சரி என்றவுடன்

அங்கிருந்து கிளம்பியவன் மீண்டும் நண்டுவிற்கு ஃபோன் போட, மறுபடியும் அவனுடைய தொலைபேசி தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்று வர,

“நண்டு எங்கடா போன எப்படியும் என் கைல சிக்காமலா போயிடுவ.. அப்புறம் இருக்கு உனக்கு..” என்றவன் வண்டியை எடுத்து கொண்டு கிளம்பினான்.

நண்டு எப்படி அவன் கையில் சிக்குவான் அவன் தான் இரண்டு நாள் இந்த பக்கமே எட்டிப் பார்க்கக் கூடாது என்று பதுங்கி விட்டானே.

 

அத்தியாயம்-13

 

இளவேலன் சொன்னது போலவே அங்கு நாற்று நடும் வேலையை முடித்துவிட்டு ஒரு மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்தான்.

அவன் வரவை எண்ணி காத்துக் கொண்டிருந்த வினிதாவோ ரெடியாகி அங்கு அமர்ந்திருந்தாள். அவன் உள்ளே வந்ததும் அவன் அருகே சென்றவள் அவன் மேல் விழாத குறையாக அவனை இடித்து நின்று கொண்டு “போலாமா மாமா நான் ரெடியாகிட்டேன்..” என்றாள். அவனோ “ஏன்டி வெள்ளைத் தக்காளி இதை கொஞ்சம் தள்ளி நின்னு சொன்னா என்னா..?” என்றான்.

“ஏன் மாமா நான் உங்க பொண்டாட்டி தானே.. இப்ப என்னவாம்..?” என்று மேலும் அவனை நெருங்கி நின்று கேட்டாள்.

“ஐயோ உன்னால இம்சடி.. கொஞ்சம் தள்ளி நில்லு..” என்றவன் “இரு நான் போய் கொஞ்சம் ரிப்ரஷ் ஆயிட்டு வரேன் அதுக்கப்புறம் போலாம்..” என்றவன் தன்னுடைய அறைக்குச் சென்று சற்று நேரத்தில் திரும்பி வந்தான்.

“சரி வா போலாம்..” என்று அவளை அழைத்துக் கொண்டு தன்னுடைய புல்லட்டின் அருகே சென்றவன் வண்டியில் ஏறிக்கொண்டு அவளை ஏறச் சொல்ல, அவளோ சந்தோஷத்துடன் அவன் பின்னே ஏறி அமர முற்பட, அதற்குள் சட்டென்று “ஏய் நில்லு..” என்றவனுக்கோ அவளை முதல் நாள் வண்டியில் ஏற்றிக் கொண்டு வந்தது நினைவில் வர, சட்டென அந்த இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கினான்.

“இல்ல இந்த வண்டி சரி வராது நாம ஜீப்ல போலாம்..” என்றவன் பக்கத்தில் நின்ற ஜீப்பில் ஏற, அவளோ “இந்த மாமா ரொம்ப உஷாரா இருக்காரே..” என்று முணுமுணுத்தவள் “எங்கே போயிடப் போறீங்க மாமா இந்த வினிகிட்ட இருந்து உங்களால இனி தப்பிக்கவே முடியாது.. சும்மாவே நான் உங்களை சீண்டிகிட்டே இருப்பேன்.. இப்போ முறையா உங்க கையால தாலி வேற வாங்கி தொங்க தொங்க போட்டுக்கிட்டு இருக்கேன்.. இதுக்கப்புறம் அந்தக் கடவுளால கூட உங்களை என்கிட்ட இருந்து காப்பாத்த முடியாது.. இதோ வரேன் இரு மாமா..” என்றவள்

ஜீப்பில் ஏறி அவன் அருகில் சமத்தாக அமர்ந்து கொண்டாள். அவர்கள் இருக்கும் ஊரில் அவ்வளவாக வசதி இருக்காது என்பதால் பக்கத்து ஊரில் உள்ள ஒரு பெரிய ஜவுளி கடைக்கு அவளை அழைத்துச் சென்றான்.

கடையின் முன்னே வண்டியை நிறுத்தியவன், “இங்க பாரு வெள்ளத் தக்காளி உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோ நான் இங்கேயே இருக்கேன் நீ போயிட்டு வா..” என்றான்.

“என்னது நான் மட்டும் தனியா போகவா.. நான் மட்டும் தனியா போறதுக்கா என்னை இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்தீங்க..? அதெல்லாம் முடியாது என்கூட நீங்களும் வரணும்..”

“இங்க பாரு நீ ட்ரஸ் எடுக்கணும்னு சொன்ன.. உன்ன கூட்டிட்டு வந்தாச்சு.. இனி நீ எடுப்பியோ எடுக்க மாட்டியோ எனக்கு தெரியாது.. என்ன ஆள விடு..”

“மாமா மாமா ப்ளீஸ் மாமா என் செல்லம் இல்ல நான் மட்டும் இவ்வளவு பெரிய கடைக்குள் தனியா போய் எப்படி மாமா எடுப்பேன்.. எனக்கு பயமா இருக்கும்ல..” என்று அவள் சினுங்க, “யாரு உனக்கு பயம் இதை நான் நம்பனும்..?” என்க,

அவளோ தன்னுடைய முப்பத்திரண்டு பற்களையும் வெளியே காட்டியவாறு “இஇஇ ஆமா மாமா ப்ளீஸ் வாங்க என் கூட..” என்று விடாப்படியாக அவனை கூட்டிக்கொண்டு கடைக்குள் சென்றாள்.

சரி அத்தோடு விட்டாளா..?

தனக்கு ஆடை தேர்ந்தெடுக்க அவனை அழைத்தாள்.

“ஏய் எனக்கு என்னடி தெரியும்.. உனக்கு என்ன புடிச்சிருக்கோ அதை நீயே எடுத்துக்கோ..”

“என்ன மாமா நீங்க கல்யாணம் பண்ணி மொத தடவையா பொண்டாட்டிக்கு எல்லாரும் ஆசையா புடவை எடுத்து கொடுப்பாங்க.. நீங்க என்னடான்னா ஒரு புடவை செலக்ட் பண்ண சொல்றேன் அது கூட பண்ண மாட்டேன்னா என்ன அர்த்தம்..?” என்க,

அவனோ “இங்க பாரு வெள்ளத் தக்காளி எனக்கு தெரிஞ்சது நாலு கலர்ல சட்டை அப்புறம் வெள்ளை வேஷ்டி இத தேர்ந்தெடுக்க சொன்னா நான் உனக்கு டக்குனு எடுத்து கொடுத்துடுவேன்.. வேணும்னா ஒரு ரெண்டு வேட்டி சட்டை எடுத்து தரவா..?” என்று அவளை நக்கல் செய்ய,

அவளோ தன்னுடைய இரு கைகளையும் இடுப்பில் வைத்தவாறு அவனை முறைத்தவள் “ஹிஹி சிரிச்சிடேன்.. மாமா இந்த விளையாட்டு எல்லாம் வேண்டாம் ஒழுங்கா எனக்கு உங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு புடவை எடுத்து குடுங்க..” என்று சண்டைக்கு நின்றாள்.

“வர வர உன்னுடைய இம்சை தாங்கலடி..” என்றவன் அங்கு உள்ள புடவைகளில் தன்னுடைய கண்களை அலைய விட்டான். அதுவோ மிகப்பெரிய கடை.

அந்த கடையில் புடவைகளுக்கு மட்டுமே ஒரு மாடி தனியாக இருந்தது.

அந்த மிகப்பெரிய புடவை செக்ஷனில் தன்னுடைய மனைவிக்காக அவனுடைய கண்கள் புடவையைத் தேடி அலைந்தது.

சுற்றி சுற்றி பார்த்தவனுக்கு அழகான பச்சை வண்ணத்தில் ஒரு புடவை தென்பட,

“அக்கா அந்த புடவையை எடுங்க..” என்றான்.

அந்த பெண்ணும் அவன் கூறிய புடவையை எடுத்துப் போட அதை பார்த்தவன் தன்னுடைய மனைவியும் ஒரு முறை பார்த்து “ஓகே சூப்பரா இருக்கும்.. ஏய் வெள்ளைத் தக்காளி இத எடுத்துக்கோ உனக்கு சூப்பரா இருக்கும்..” என்று அந்த புடவையை அவள் கையில் கொடுக்க, அவளோ முகம் மலர அந்த புடவையை வாங்கிக் கொண்டாள்.

“மாமா புடவை செலக்ட் பண்ண தெரியாது தெரியாதுன்னு எவ்வளவு அழகா செலக்ட் பண்ணி இருக்கீங்க.. எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு..” என்று அந்த புடவையை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

அதன் பிறகு மேலும் சில ஆடைகள் எடுத்தவளுக்கு அங்கு உள்ள ஒரு அனார்கலி சுடிதார் அவள் கண்ணை பறித்தது.

“மாமா அங்க பாருங்க அந்த சுடிதார் எவ்வளவு அழகா இருக்கு.. மாமா உங்களுக்கு புடிச்சிருக்கா..?” என்று கேட்டாள்.

“இங்க பாரு உடுத்தப் போறது நீதான் உனக்கு புடிச்சிருந்தா எடுத்துக்கோ.. இதுல என்கிட்ட கேட்க என்ன இருக்கு..” என்க,

“சூப்பர் மாமா என் செல்லம்..” என்று இருக்கும் இடம் அறியாமல் அவன் இரண்டு கன்னத்தையும் பிடித்து கொஞ்சி விட்டு அவள் அந்த ஆடையை எடுத்துக்கொண்டு “மாமா இருங்க நான் இப்பவே உங்களுக்கு போட்டு காட்டுறேன்..” என்று அங்கு உள்ள ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் சென்றாள்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவள் “மாமா இந்த ட்ரஸ் எனக்கு எப்படி இருக்கு..?” என்று கேட்க, அவனோ அவளுடைய ரோஜா பூ நிறத்திற்கு அந்த வெள்ளை நிற அனார்கலி சுடிதார் அவளை தேவதையாக காட்டியது. அவள் அழகில் சற்று மயங்கி தான் போனான் என்று கூட சொல்லலாம். “ரொம்ப நல்லா இருக்கு..” என்று சொன்னவன் தன் பார்வையை திருப்பிக் கொண்டான்.

“சரி இருங்க மாமா நான் டிரஸ்ஸை மாத்திட்டு வந்துடறேன்..” என்று மீண்டும் அந்த உடை மாற்றும் அறைக்குள் சென்றவள் அந்த ஆடையை கழட்ட முற்பட அந்த சுடிதாரின் பின்பக்கம் உள்ள ஜிப்பை அவளால் கழட்ட முடியவில்லை. எவ்வளவோ முயற்சித்து பார்த்தாள். அந்த ஜிப்பை அவளால் கழட்டவே முடியவில்லை.

பின்பு உள்ளே இருந்தவாறு “மாமா கொஞ்சம் இங்க வாங்களேன்..” என்று அவனை அழைக்க, அவனும் என்னமோ ஏதோ என்று உள்ளே வந்தான்.

“மாமா இந்த ஜிப்பை என்னால கழட்ட முடியல கொஞ்சம் கழட்டி விடுங்களேன்..” என்று கேட்க, அவனும் சரி என்று அந்த ஜிப்பை கழட்டி விட அவளுடைய பின்பக்கம் மேனியை கண்டவனுக்கோ உடம்பில் என்னவோ செய்தது. தன்னையும் மீறி அவனுடைய கைகள் அவளது முதுகை மெல்ல வருடியது. அவனுடைய பூ போன்ற மென்மையான வருடலை கண்ணை மூடி ரசித்தவள், “மாமா..” என்று கொஞ்சும் குரலில் அழைத்து அவன் பக்கம் திரும்பியவள் அவனுடைய முகத்தை உற்றுப் பார்த்தாள். அவனும் அவளுடைய கண்களை ஆழ்ந்து பார்க்க, சட்டென அவனுடைய உயரத்திற்கு எம்பியவள் அவனுடைய இதழில் தன்னுடைய இதழை பதித்தாள் வினிதா.

அவனோ அவள் திடீரென்று இவ்வாறு செய்வாள் என்று எதிர்பாராதவன் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றான். அவனுடைய இதழில் முத்தமிட்டவாறே அவனுடைய இரு கைகளையும் எடுத்து தன்னுடைய இடையில் வைத்து அழுத்தியவள் தன்னுடைய முத்தத்தை அழுத்தமாக்கினாள்.

அவனுடைய இதழை விட்டு பிரிய மனமில்லாமல் அவனுடைய பின்னந்தலையை இறுக்கமாக பிடித்தவள் அவனுக்கு வாகாக தன் தலையை சாய்த்து முத்தமிட்டுக் கொண்டிருந்தாள்.

அவனுடைய ஒரு கையை பிடித்து தன் இடையில் இருந்து சற்று மேலே கொண்டு போய் அவளது மென்மையில் வைக்க, சற்று நேரம் அவளுடைய முத்தத்தில் கிறங்கி நின்றவன், சடார் என அவளைத் தன்னில் இருந்து பிரித்து விட்டு அந்த அறையை விட்டு வெளியேறி விட்டான்.

அவளோ அவனுடனான முதல் இதழ் அணைப்பில் சிவந்தவள் தன்னுடைய ஆடையை மாற்றி விட்டு வெளியே வந்தாள்.

இவனோ அவள் முகத்தை பார்க்கவே இல்லை.

இருவரும் கடையை விட்டு வெளியே வர அப்போது அங்கு கூட்டமாக இருந்தது.

இவர்களோ என்ன கூட்டம் என்று அங்கு சென்று பார்க்க, ஒரு வயதான பெண்மணி மயக்கம் போட்டு விழுந்திருந்தார்.

அவரை சுற்றி அங்கு கூட்டம் கூடி இருந்தது.

எதையும் சிந்திக்காமல் தன்னுடைய கையில் உள்ள பைகளை இளவேலனின் கைகளில் திணித்துவிட்டு கூட்டத்தை நகர்த்தி விட்டு அந்த பெண்மணியின் அருகே சென்றவள் அவருக்கு முதல் உதவி செய்ய ஆரம்பித்தாள்.

“ப்ளீஸ் எல்லாரும் கொஞ்சம் தள்ளி நில்லுங்க..அவங்களுக்கு காத்து வரட்டும்..” என்றவள், cpr முறையை கையாண்டாள்.

சிறிது நேரத்தில் அந்த பெண்மணி எழுந்து அமர “அம்மா ஒன்னும் இல்ல கொஞ்சம் மூச்சை நல்லா இழுத்து விடுங்க.. ஹான் அவ்வளவுதான் சரியாகிவிடும் உங்க கூட யாருமா வந்திருக்காங்க..?” என்று கேட்டு, அவர் அருகில் வரவும் “சார் ஒரு பேப்பரும் பேனாவும் கொடுங்க..” என்று அவள் அதை வாங்கிக் கொண்டு அவருக்கு தேவையான மருந்தை கடகடவென ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்து “இந்த மருந்த இவங்களுக்கு இப்பவே வாங்கி கொடுத்து பக்கத்தில் இருக்கிற ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க..” என்றவள் தன்னுடைய கணவனின் அருகே வர, அவனோ அவளைப் பேயறைந்தாற் போல் பார்த்துக் கொண்டிருந்தான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!