யட்சனின் போக யட்சினி – 9

5
(6)

 

போகம் – 9

 

நிலவினி சென்று இன்று நிலவன் வந்து முகில்கள் இரண்டிற்கு முதலிரவாமே என்று நம் தலைவனையும் தலைவியையும் தேடி ஆராய்ந்த அழகிய மதுரம் சிந்தும் வேளை…!

 

ரகசியா ரூபி சிவப்பு புடவையில் இந்திர லோகத்து மேனகையாக விசுவாமித்திரனின் மனதை ஆட்டிப் படைக்க போவது தெரியாமல் உள்ளே நுழைவதற்கு முன்பாகவே அறையில் ரூபி சிவப்பு சட்டை மற்றும் பட்டு வேஷ்டியில் ஹேண்ட்சம் சிம்மனாக அமரந்திருந்த ருத்ரனைப் பார்த்தாள்.

 

ரகசியாவிற்கு சற்று படபடக்க… இருந்தும் தைரியத்தை குரலில் வரவழைத்துக் கொண்டு,

“ஹேய் மேன்…இப்போ நான் உள்ள வரேன்…

என்னை நீனு டச் கூட செய்யகூடாது… ஓகேவா டீல்…!

நீ நல்லவன்தான… அப்டிதான் சொல்றாங்க… ஸோ… ஓகேதான…!

 

அதுமில்லாம இதெல்லாம் ஒரு ஸிம்பிள் ஃபார்மாலிட்டிதான… !

அன்ட் இது ஜஸ்ட் பொம்மை கல்யாணம் மாதிரிதான…!

அப்றம் நீனு என்னோட ரீல் ஹஸ்பன்ட் சும்மா போலி புருஷன்தான…!

 

ரியல் இல்ல சரியா நிஜமாவே புருஷன் இல்லை நான் நிஜமான வைஃப்பும் இல்ல…

இதெல்லாம் நாடகம் மட்டுமே…சரியா…

டீலிங் டன்…! “, என்று வாசலில் நின்று கொண்டு வசனமாக ரகசியா பேசித் தள்ளிவிட்டு உள்ளே அடி எடுத்து வைத்து வந்தவுடன் கால்கள் அந்தரத்தில் பறந்தது அவளின் கேளவனால்.

 

உள்ளே அடி எடுத்து வைத்தவளின் இடையில் இரு கையையும் கொடுத்து தூக்கிக் கொண்டு இதழை இழுத்துச் சுவையறியும் தேடலில் தலைவி மூச்சுமுட்டி திண்டாடவும்தான் விட்டான் தலைவன்.

 

அதற்குள்ளாக அவள் கையில் இருந்த வெள்ளி சொம்பில் வைத்திருந்த பாதாம் முந்திரி பிஸ்தா என இத்யாதி இத்யாதி கலந்த பால் மொத்தமும் பால் வண்ண மேனியாள் மீது ஊற்றிவிட்டு, ‘டொம்’எனும் சத்தத்துடன் தரையில் விழுந்து உருண்டது.

தலைவியின் கைகள் தலைவனின் கேசத்தை பற்றிக் கொண்டு இழுத்ததில் பிடியின்றி…!

 

இவை எல்லாம் நடப்பதற்கு முன்பாகவே ருத்ரனோ அவளை அவசரப்பட்டு எவ்விதமும் கஷ்டபடுத்தி விடக்கூடாது மனதாலும் சரி உடலாலும் சரி என்று தன் மனதினுள் ஒரு முடிவு செய்துதான் தன்னவள் வருகைக்காக காத்திருந்து அமர்ந்திருந்தான்.

 

ரகசியா வந்து கதவைத் திறந்து வாசலில் நின்றவுடன் லயித்து போயிருந்தான் தன் காந்தச் சிலையழகியின் பேரழகில்.

அவள் நிறத்திற்கும் அழகிற்கும் அங்க செழிப்பிற்கும் ஏற்ற அந்த புடவையும் நகைகளும் ‘ஹாஆ யம்மாடியோய்…’ மூச்சு முட்டியது ருத்ரனுக்கு தன் முத்துமயிலின் ஒயிலிடையால்…!

 

அவள் பேசத் தொடங்கியதும் அமைதியாக பார்த்த வண்ணம் பேசும் அந்த ரோஜா இதழ்களையும் மீனாக துள்ளி இங்குமங்கும் ஓடும் அந்த கண்மணிகளின் ஜாலத்திலும் இவன் சொக்கிப் போய் அவளை உள்ளே அழைக்க செல்ல முன்னேறி நடக்க…!

 

ரசனையுடன் தன் மனைவியின் அழகைப் பார்த்து கொண்டிருந்தவன் செவிகளில் கொடுரமாக ‘பொம்மை கல்யாணம்,சும்மா பொய் புருஷன்,நிஜ வைஃப் இல்லை… நாடகம் ‘ எனும் அவ்வார்த்தைகள் வந்து விழவும்…

விழிகள் சிவந்து கழுத்து நரம்புகள் புடைக்க கோபம் உடலெங்கும் வெடிக்கத்தான் செய்தது.

 

கையை முறுக்கி அவள் உள்ளே வரக் காத்திருந்து நின்றவன், ஒரு அடி எடுத்து வைத்ததும்…

அள்ளிக் கொண்டான் பாவையை தன் கைகளில்…!

 

கதவை காலால் உதைத்து சாற்றியவன்,அவளை ஏந்திக் கொண்டே இதழில் தேனருந்திய வண்ணம் கட்டிலின் அருகே சென்றான்.

 

தன் இதழ்களில் அவள் இதழை சிறை செய்துவிட்டு

தான் யார் என்பதை அழுத்தமான அச்சாணியாக அந்த செம்பவள இதழ்களில் பதித்துவிட்டு அவளை கீழே இறக்கிவிட்டான்.

 

“ஹாஆஆஆ…உஃப்… “,என தன் தனித்தீவுகள் ஏறி இறங்க மூச்சை இழுத்துவிட்டாள் காரிகை.

 

மன்னவனோ நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு , அவளைப் பார்த்த விழுங்கும் வண்ணம் முறைத்துக் கொண்டு நின்றான்.

 

அவள் சற்று நிதானித்து,”யூ…பொறுக்…ழிஇ”, என சீறத் தொடங்கும் போதே, அவளின் தாடையை அழுந்த பற்றியிருந்தான் ருத்ரன்.

 

“ஏம்டிஇஇ…

இன்னும் நான் கட்டுன தாலியோட ஈரம்கூட காயல, என்ன பேச்சுடிஇஇஇ பேசுற அதுக்குள்ள…

பொம்மை கல்யாணம் …?!

அப்றம் என்ன சொன்ன சும்மா புருஷனா…?!

 

அடிங்… எம் மாமன் மவளே…!

நல்லா கேட்டுக்க உன்ற புருஷன் நான்தான் இனி எத்தனை ஜென்ம எடுத்தாலும் …!

 

இதோ தொங்க தொங்க போட்டுட்டு இருக்கியே இந்த தாலி…

இதைக் கட்டும் போதே முடிவு பண்ணிட்டேன்டி அந்த ஆண்டவனால கூட இதை இனிமே பிரிக்க முடியாதுன்னு…

அப்றம் என் முத்…”, என்று இடை நிறுத்தியவன் விழி மூடிக் கொண்டு மூச்சை இழுத்து விட்டு சமன் கொள்ள முன்பட்டான்.

 

அவளாக அத்தான் என்று அழைக்க வேண்டும் அவனுக்கு இவன் அவ்வார்த்தையை கூட பயன்படுத்தாமல் வர வேண்டும் என்கிற பேராசை…!

 

அதற்குள் ரகசியாவோ தாடை வேறு வலிக்கவும் ,” கை…ய… எ…டு…மே..ன்..”, என்று அவன் கையை பிடித்திழுக்க முயல, அவனின் அழுத்தம் கூடியதே தவிர குறையவில்லை.

 

“அப்றம் எனக்கு உன்னய பிடிச்சி வேற போச்சு பார்த்துக்க…!

சும்மாவே எனக்கு பிடிக்காட்டியும் அது பொருளாவே இருந்தாளும் அது என்னோடதுனு ஆகிட்டு அப்டினாக்க சும்மா கூட தூக்கி ஓரம் கட்ட மாட்டேன்…

ஹும் அப்போ பிடிச்சுட்டா எப்டி இருப்பேன்… ?!

என்கிட்ட இருந்து அசைச்சுக் கூட பார்க்க முடியாது…!

 

பொருளுக்கே அப்படின்னா மனுஷாளுக்கு ஹும் வகுந்துடுவேன்…

நீனு என்ற பொண்ஜாதிடி,எம்பட பொண்டாட்டிஇஇ…

விடுவேனா மாமன்… ஆஹ்ன்….!”, என்று கண்ணை உருட்டி நாக்கை மடித்துக் காட்டினான்.

 

பின் மீண்டும் தொடங்கியவன் ,

“அதுலயும் பாரு கொஞ்சமா இல்ல…எனக்கு உன்னைய ரொம்ப ரொம்ப பிடிச்சுட்டு…

உன்ற ரவுசு பிடிச்சுட்டு…

உன் திமிரு பிடிச்சுட்டு….

அப்றம் இந்த கண்ணு பிடிச்சுட்டு…

இப்படி எல்லாமே பிடிச்சுட்டு என்ன செய்ய சொல்லு…!

ஆனா நீ எப்படிடி என்னையவும் நான் கட்டுன இந்த தாலிய பொய்னு சொல்ற ….?

 

நான் உன்னை உன் விருப்பம் போல விடலாம்னு கட்டாயப்படுத்த கூடாதுனு நினைச்சுதாம் உள்ளார வந்தனே…

ஆனா நீ என்ன செஞ்ச…?!

 

அது இதுனு பேசி இந்த ருத்ரன சீண்டிட்ட…

அதான் உன்ற மனசுல பதிய வைக்கறாப்ல நெசப் புருசன்தான்டினு என் வழில சொன்னேன்…

மாமன் பிடிச்சா உடும்பு பிடிதேன்…

அம்புட்டுதேன் நகரவே முடியாது…!

 

விலகிப் போகணும்னு இனி நினைச்சுடாத கனவுக்கு கூட …

உன்ற புருஷன் அங்கயும் வந்து நிப்பேன்… விளங்குதா…?!!” என்று தன் இடக்கை விரலால் தன் மீசையை நீவினான்.

 

பின் அவளிதழில் தன் உதட்டைப் பொறுத்தி இச்சென இச்சூஸிட்டுவிட்டு…

அவளின் தாடையை விட்டவன், இவன் பிடியில் சிவந்திருந்த தன்னவளின் இருக் கன்னங்களையும் தன் உதட்டால் ஒற்றி எடுத்தான் …!

 

ரகசியா அவன் விட்டவுடன் அவன் கேடய மார்ப்பிலும் கை புஜங்களிலும் தன் பூக்கரம் கொண்டு அடிக்க முயன்று அவள் கைதான் வலித்தது.

 

நிறுத்தியவள் ருத்ரனிடம்…

“ஹே… யூ… யூ…யூ…

ருத்ரன்…எனக்கு இதுலாம் சுத்தமா பிடிக்கலை…

உன்னை எனக்கு கொஞ்சம் கூடப் பிடிக்கவேயில்லை…

உன் மேல இஷ்டமில்ல…

இந்த கல்யாணம் என்னை நீ எப்படி கார்னர் செய்து பண்ண வச்ச…

 

ஆனா இப்போ யூ…யூ…

ஒன்னு மட்டும் சொல்றேன் மைண்ட் இட் எனக்கு உன்னை பிடிக்கலை…. சுத்தமா பிடிக்கலை… பிடிக்கவும் செய்யாது…

ஐ ஹேட்ஆல்வேஸ்…!”, அவளுக்கே தெரியாமல் உள்ளத்தில் துளிர்விட துவங்கியவனை முயன்று கிள்ளி எறிய முயன்றாள்.

 

அவனுக்கோ பார்வை மொத்தமும் அங்கே மேலே கொண்டு வந்த காய்ச்சிய பால் மொத்தமும் கொட்டிவிட்டதால் நனைந்து சிவந்த பன்னீர் ரோஜாவாக தெரியும் அங்கங்களில்தான்…

புடவை பவளமேடுகளில் ஓட்டிக் கொண்டு தான் இருக்கும் இடத்தை உணர்த்தி காட்ட, விழியால் விழுங்க எண்ணி தனக்குத் தானே சூனியம் வைத்து கொண்டான்.

மீண்டும் மூச்சு முட்டி தள்ளாடுவது இப்போது ருத்ரனின் வேலையாக ஆனது…!

 

ரகசியாவிற்கு அவன் முத்தத்தால் தன் இதழ்கள் காந்த…

தன் கண்மணிகளை கீழ் நோக்கி உதட்டைப் பிதுக்கி அதைப் பார்த்தவளுக்கு மீண்டும் கோபம் கொப்பளிக்க,

“யூ..யூ…

நீ…நீ…

என்னை…என்னை…

கிஸ்… எப்படி எப்படி செய்யலாம்…”, என்று காளியாக மாற தொடங்கினாள்.

 

ருத்ரனோ அவள் அருகில் வந்தவன்…

அவளின் இடையைப் பிடித்துத் தன்னை நோக்கி இழுந்து கட்டிக் கொண்டு இடையோடு இடை உரச…

அவள் கீழிதழை பிடித்திழுத்து தன் உதட்டில் உணவாய் சப்புக் கொட்டி வருடியவன்,

“இப்படித்தான்டி பொண்டாட்டிஇஇஇ…”, என்று செய்முறையை கூற…

 

அவளோ மீனாக துள்ளியவள்,

“ருத்ரன்…லீவ் மீ மேன்…

என்னை விடு…

நான் ஏதும் சொல்லல…

பொய்னு ரீல்னு சொல்லல போதுமா…

விடுடா…பொறுக்கிஇஇஇ…”,என்ற வண்ணம் அவனில் இருந்து விடுபட நெளிந்தாள்.

 

பவளக் கற்கள் உரச உரச தீ பற்றிக் கொள்ள தொடங்கியது ருத்ரனின் மோகவாளில்.

அவளை இன்னும் தன்னை நோக்கி நன்றாக நெருக்கி அணைத்தவன், “ஹாஆஆ ஆடாதடிஇஇ…

இப்படி சடுகுடு ஆடி…

இப்படி பேசி பேசியே என்ன கெட்டவனா மாத்தாத…

 

அப்றம் பொறுக்கியாவே மாறிடுவேன்டிஇஇ…

அப்றம் நானா நினைச்சாலும் தடுக்க முடியாது எதையும்…

ம்ம்ம்மாஆ…”, என்றவன் விழிகள் பட்டுக் கழுத்து தெரிந்தது.

 

அவளின் கழுத்துக்கு ஒரு இன்ச் கீழே ஆபத்து பள்ளத்திற்கு மேலாக சிறு முத்தாக ஒரு துளி வெம்பால் அவனை வந்து பருக வா வாவென அழைக்க…

ருத்ரன் தாங்க முடியாத அவஸ்தையில் குனிந்து தன் நுனி நாவால் அதை தீண்ட…

மீஹும் வரவில்லை…

மொத்த இதழையும் குவித்து ஒற்றி எடுக்க…

மீசையும் தாடியும் முள்ளாகிவிட அவனிதழ்கள் மயிலிறகாகிட…

சிலையாகிவிட்டாள் பெண் இந்த புது உணர்வுகள் தரும் அவஸ்த்தையில்…!

 

“ஸ்ஸ்ஸ்…ருத்…ரன்…

நோ…மே…ன்…”, என்று அவன் கேசத்தை அழுந்த பிடித்தவள் அவனை தள்ளி விட இழுக்க,அவனாகவே வேலையை முடித்து அதன் சுவையை அறிந்த பின் அவளை விட்டு விலகியவன் ஒரு அடி பின் நோக்கி நின்று கொண்டான்.

 

ரகசியாவோ அவன விட்டதும் பின்னாடி சென்று கட்டிலின் மேல் கொசுவின் விரிப்புக்காக உயர சென்றிக்கும் கால்தூண்களை இருகைகளாலும் பின்னால் விட்டு பிடித்துக் கொண்டாள் பிடிமானத்திற்காக.

 

“பாருஉஉ மேன்… இப்படிலாம் செய்யாத…

அட்லீஸ்ட் கிவ் மீ ஸம் டைம்…!

 

இப்படி தீடீர்னு கல்யாணம் வைஃப்னா அப்றம் இதுலாம்னா…

நான் என்னதான் செய்வன்…?!

 

அப்றம் அப்றம் எனக்கு கோபம் வந்துச்சுனா…

என்ன செய்வனு எனக்கே தெரியாது யாரைப் பத்தியும் யோசிக்கமாட்டேன்…

 

முதல்ல டோன்ச் டச் மீ என்னை தொடாத … டீலா … ப்ளீஸ்…

முடியவே முடியாது ஃபர்ஸ்ட் நைட்லாம் நோ நோ நெவர்…!

 

இல்லாட்டி நான் எப்படியாச்சும் கிளம்பிடுவேன் இப்போவே. முடியாதுன்னு நினைக்காத மேன் அப்றம் இந்த ஒன் மன்த் கூட இருக்கமாட்டேன்…

எஸ்…

 

ஸோ என்கிட்ட வரதுலாம் வேணாம்…

அப்டி வராட்டி நான் இங்கவே இருக்கேன்…

ஓகேவா ஃபைன்தான…

டீல்… டீல்…”, என்று நா படபடக்க இருந்தும் முகத்தை வீராப்பாக வைத்துக் கொண்டு கூறியவளுக்கு வேர்க்க தொடங்கி விட்டது.

 

நிச்சயமாக அவளால் அவனை உடலால் காயப்படுத்திவிட்டு சென்றுவிட முடியும்.பெண் சக்தியால் முடியாதது ஏதும் உண்டோ…!

இங்கே பெண்ணவளுக்கு அவனை காயப்படுத்த தோன்றவில்லை என்பது மட்டும் ஏனோ விந்தைதான்…!

 

ருத்ரன் அவள் முன்னே சென்று முட்டி போட்டு அமர்ந்தான்.

அவளின் மெல்லிய ஒட்டியாணத்தை கழட்டி வைத்துவிட்டு அந்த சேலையை ஒதுக்கினான்.

 

அந்த வெண்பச்சை பிறை நிலா மச்சத்தை பார்த்தவாறு,

“ஹாஹாஹா… பதறாதடி மினுக்கி…

இங்க பாருடி பாப்பாஆஆ… நீதான் என்ற பொண்டாட்டி …

எனக்கு நீதான் இனிமேன் எல்லாம்னு அந்த அக்னிக்கும் என்ற தாத்தா பாட்டிக்கும் என்ற மனசாட்சிக்கும் வாக்கு குடுத்துட்டேன்.

 

நீயா இப்படிலாம் சொல்லாட்டியும் மாமன் உன்னை ஏதும் செய்ய மாட்டேன்.

நான் உன்ற மனசுக்குள்ள முழுசா வராத வரைலும்,உனக்கு என்னைய பிடிக்கிற வரைலும்,நான் உன்னைய எதுக்கும் கட்டாயப்படுத்தலடி சந்தோஷமா…!

 

இப்போ நிம்மதியா படுத்து உறங்குடி முத்..பொண்டாட்டிஇஇஇ…!”, அவன் காதலை முழுதாக சொல்லியும் சொல்லாமலும் எதையோ உணர்த்தியவன் அந்த மச்சத்தில் முத்தமென்ற முத்திரையை பதித்துவிட்டு மேலே வந்தான்.

(பாக்கதான போகுறோம்… என்னா செல்லாஸ் நான் சொல்றது)

 

அவள் விழிகளை நோக்கி மேலும் தொடர்ந்து, “இனி பதறாம இந்த புடவை மாத்திட்டு வந்து படு…

அந்த அலமாரி பீரோ ஃபுல்லா உன்ற துணிங்க இருக்கும்.

 

அப்றம் புது துணிங்களும் இருக்கும்…

எது தேவையோ எடுத்து போட்டுட்டு வந்து உறங்குஉஉ…!”, என்றுவிட்டு கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கால்மேல் கால் போட்டுக் கொண்டு ஆப்பிளை கொறிக்க தொடங்கிவிட்டான்.

 

ரகசியா பாத்ரூம் உள்ளே சென்ற அடுத்த கணம் கதறிவிட்டான் மன்னவன் தன்னை அடக்க பெரும்பாடுபட்டு…!

 

எங்கே வாக்குறுதியை இன்னும்சற்று நேரத்திற்குள்ளாகவே பதம் பார்க்கத்தான் நேரமும் விதியும் முடிவெடுத்துவிட்டது என்பது தெரியவில்லை போல…!

 

விட்டால் போதுமென அங்கிருந்து நகர்ந்து அந்த வார்ட்ரோப் அமைப்பில் இருந்த அலமாரியை திறந்து உள்ளாடைகள்,டவல் மற்றும் பூக்கள் ப்ரண்ட் செய்திருந்த பரப்புல் லாங்க் ஃபராக் எடுத்துக் கொண்டு, அங்கே இருந்த பாத்ரூமை நோக்கி ஓடி கதவை தாழிட்டவள்…

அவசரமாக உடைகளை கலைந்து டவலைக் கட்டிக் கொண்டு ஷவரைத் திறந்துவிட்டு தண்ணீரில் நனைந்தாள்.

 

இப்போதுதான் மூச்சின் ஓட்டம் சீரானது போன்ற உணர்வு ரகசியவிற்கு….!

 

பின் ஒரு நிமிடம் நிதானமாக யோசித்தாள்…

ஏன் ஒரளவுக்கு மேல் என்னால் அவனை திட்ட முடியவில்லை…?!

அவன் தொட்டால் ஏன் என் உடல் கோபம் கொண்டு எரியாமல் லயித்து நிற்கிறது…?!

விடை தெரியாமல் முழித்தால் பேதை…!

 

இவள் யோசித்து முடித்துவிட்டு, மெதுவாக குளித்து முடித்து வேறு டவலை எடுத்துக் கட்டும் சமயம் சரியாக கரண்ட் நின்றுவிட இருட்டில் பயத்தில் அலறத் தொடங்கினாள்.

 

“ஆஆஆஆ…மம்மிஇஇ…ஹோ காட்….

ஹே…மேன்…ஹெல்ப்…பயமா இருக்குஉஉஉ…

மம்மிஇஇஇ…ம்ம்ம்”, என்று கத்தி ஊரை கூட்டுமளவிற்கு கூச்சல் போட்டவளின் சத்தம் அப்படியே அடங்கிவிட்டது ருத்ரனால்.

(என்னா பேபிஇஇ…என்னாச்சுஉஉஉ…!?)

 

 

பொய் எனக்

கூறி என்னை

எரிமலை

ஆக்குவதும்

ஏனோ…!

நீ என் உயிரென

நான் உன் உறவென

உணர்ந்து

காதலாட

வந்துவிடடி

விரைவாக

என் யட்சினியே…!

 

(என்னடா இது இருட்டுல ஒன்னும் தெரியல…!

கரண்ட் கட்டானாலும் இப்போதான் நீனு ஸுனை கரெக்டா கட் செய்வ இல்லையா தனு பேபி இல்லை இல்லை சதி பேபி…

அப்படினு நீங்க என்னை கொஞ்சல்ஸ் செய்றது கேட்குது செல்லாஸ் கிகிகி…)

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!