மச்சக்கார மைனர்

5
(3)

அத்தியாயம்-20

 

இதழ் முத்தத்தில் ஆழ்ந்து இருந்தவர்கள் கீழே சத்தம் கேட்க அவர்கள் இருவரும் கீழே வந்தார்கள்.

அவர்கள் கீழே வந்ததும் ஒரு பெண் இவர்களை எதிர்நோக்கி வந்தவள் இளவேலனை சட்டென்று இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

அதைப் பார்த்த இவர்கள் இருவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

பின்பு வினி தன்னை சுதாரித்துக்கொண்டவள் தனக்குள் புன்னகைத்தவாறு அவனை முறைத்துக் கொண்டிருந்தாள். அவனோ அவளுடைய முறைப்பை பார்த்ததும் சற்று பயந்தவன் “ஏய் இது யாருன்னு தெரியாதுடி என்னை அப்படி பார்க்காதடி..” என்றவன் தன்னோடு ஒட்டி இருக்கும் அந்த பெண்ணைப் பிரித்தவன் “யார் நீ..?’ என்று கேட்க, அவளோ “என்ன மாமா பயந்துட்டீங்களா.. சும்மா உங்களுக்கு ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட.. ” என்று சிரித்தவள் “அக்கா உங்க கிட்ட ஒன்னுமே சொல்லலையா..?” என்று வினிதாவைப் பார்க்க, அவளோ சத்தமாக சிரித்தாள்.

அவனோ கண்கள் இடுங்க அவளைப் பார்த்தான்.

“ஐயோ மாமா இவ என் தங்கச்சி ரீமா.. அங்க பாருங்க..” என்று அவனை அங்கு ஹாலில் அமர்ந்திருக்கும் அவளது குடும்பத்தைக் காண்பிக்க, அங்கோ அவளது அப்பா அம்மா அவளுடைய பாட்டி என அனைவருமே அமர்ந்திருந்தனர்.

இவனுக்கோ அவர்களை யார் என்று தெரியாது.

அதனால் சற்று தயக்கத்துடனே அவர்கள் அருகில் சென்றான். அவனைப் பார்த்ததும் பாட்டியோ கண்கள் கலங்க எழுந்தவர் அவன் அருகே சென்று அவனுடைய முகத்தை வருட,

அப்பொழுதே அவனுக்கு புரிந்து விட்டது அது தன்னுடைய பாட்டி என்று.

சட்டென அவர் காலில் விழப் போனவனை தோளைப் பிடித்து தூக்கியவர் தன்னோடு அணைத்துக் கொண்டார்.

“எப்படி கண்ணா இருக்க..?” என்று பாட்டி கேட்க, அவனும்

“நான் நல்லா இருக்கேன் பாட்டி.. நீங்க எப்படி இருக்கீங்க..?” என்று கேட்டான்.

“எனக்கு என்னடா கண்ணா.. நான் நல்லா இருக்கேன்.. என்ன உன்னை என் பக்கத்துல வச்சி பார்த்துக்க முடியல என்கிற வருத்தம் மட்டும் தான் இத்தனை வருஷமா இருந்துச்சு.. இப்போ என் பேத்தியினால அதுவும் நிறைவேறிடுச்சு..” என்று தன் பேத்தியை தன் அருகே அழைத்தார். அவளோ தன்னுடைய பாட்டியின் அருகே வந்தவள் “நானி அப்பா என்ன கோபமா பார்க்கிறாரு..” என்று அவரின் காதில் சொல்ல, அவரும் சற்று புன்னகைத்தவர் “அதெல்லாம் ஒன்னும் இல்லடி சும்மா நடிக்கிறான் உங்க அப்பன்.. ஆரம்பத்துல கொஞ்சம் சீன் போட்டான்.. அதுக்கப்புறம் சரியாகி விட்டான்..” என்று சொன்னார்.

ஆமாம் இவள் தன் தந்தையிடம் பொய் சொல்லி தான் இங்கு வந்திருந்தாள்.

அதனால் அவருக்கு கோபம் இருந்தது.

அதன் பிறகு பாட்டி தன் மகனிடம் எடுத்துச் சொல்ல, அவரும் தன்னுடைய தங்கை மகனுடைய வாழ்க்கையும் நல்லா இருக்கணும் என்று நினைத்தவர் தன்னுடைய மகளின் ஆசைக்கு அனுமதி அளித்தார்.

ஒரு வாரத்திற்கு முன்பு தன்னுடைய பாட்டிக்கு அழைப்பு எடுத்தவள் இங்கு நடந்த அனைத்து விடையத்தையும் அவரிடம் கூறினாள்.

அவளுக்கு அவளுடைய நானியிடம் எதையும் கூறாமல் இருக்க முடியாது. அவர்கள் இருவருக்கும் அப்படி ஒரு பிணைப்பு.

அதைக் கேட்ட பாட்டியோ தன்னுடைய பேரனை இதற்குப் பிறகும் பிரிந்து இருக்க முடியாது என்று நினைத்தவர் தன் மகனிடம் கூறி அனைவரையும் அழைத்து வந்து விட்டார்.

இவர்கள் அருகே வந்த அவளுடைய அப்பாவோ தன்னுடைய மகளை முறைக்க, அவளோ இதுதான் சமயம் என்று தன்னுடைய அப்பாவின் காலில் விழுந்து விட்டாள்.

“அப்பா நீங்க தாத்தா ஆக போறீங்க..” என்று கூறினாள். அதைக் கேட்ட அவரோ தன்னுடைய மகளை சட்டென தூக்கியவர் “என்னமா நீ பிள்ளைத்தாச்சு பொண்ணா இருந்துட்டு இப்படி காலில் விழக்கூடாது..” என்றவர் அவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டார். இளவேலனோ அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர்களுடைய தந்தை மகள் பாசம் அவனை ஏங்கச் செய்தது.

அதை உணர்ந்த அவளுடைய தந்தையும் “என்ன மாப்ள அப்படி பாக்குறீங்க.. இங்க வாங்க..” என்று அவனை அழைத்து தன்னோடு கட்டிக் கொண்டார்.

அவனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது.

எப்படி தன்னை இவ்வளவு ஈசியாக ஏற்றுக் கொண்டார் என்று. அவனுடைய தயக்கத்தைப் புரிந்தவர் “இங்கு பாருங்க மாப்பிள்ளை நீங்க என் தங்கச்சிப் பையன்.. நான் உங்களுக்கு தாய் மாமா.. அம்மாவுக்கு அடுத்து ஸ்தானம்.. இத்தனை வருஷமா நீங்க யாரையுமே உங்க பக்கத்துல சேர்த்துக்கல.. அதனால உங்களை விட்டு விலகி இருந்தோம்.. இதுக்கு அப்புறமும் உங்களை தனியா விட முடியாது.. ஏன்னா எங்க மகளை நீங்க கல்யாணம் பண்ணிட்டீங்க.. என் மருமகன் என்ற முறையில இனி அடிக்கடி நான் இங்க வந்துட்டு தான் இருப்பேன்.. எனக்கு நீங்களும் முக்கியம்தான் மாப்பிள்ளை.. இந்த மாமா உங்களுக்கு எப்பவும் ஆதரவா தான் இருப்பேன்..” என்று சொல்ல, அவனுக்கோ கண்கள் கலங்கி விட்டது.

எப்படிப்பட்ட உறவுகளை தன்னை விட்டு விலக்கி வைத்திருக்கிறோம் என்று காலம் கடந்து நினைத்தான். இனியும் அவர்களை விட்டு இருக்கக் கூடாது என்றும் முடிவு எடுத்துக் கொண்டான்.

தன்னுடைய மனைவியை பார்க்க அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள்.

“என்னுடைய ஏஞ்சல் டி நீ..” என்று வாயசைக்க,

அவளோ “என் மச்சக்கார மாமா..” என்றாள்.

இளவேலனோ “என் மச்சமே நீதான்டி என் வெள்ளத் தக்காளி..” என்றான்.

******

ஐந்து வருடங்கள் கழித்து..

 

வகுடுப்பட்டி கிராமமே திருவிழா போல இருந்தது.

ஏனென்றால் விடிந்தால் தீபாவளி. அங்கு உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் உடைகள் முதல் பட்டாசுகள் வரை அனைத்தும் இளவேலன் பரிசாக கொடுத்திருந்தான்.

ஊர் மக்களும் அவனை ஆஹோ ஓஹோ என்று போற்றினார்கள்.

முதலில் அவனை எதிர்த்த அந்த இன்ஸ்பெக்டர் கூட அவனுடைய இந்த செய்கையினால் அவன் மேல் பெரிய மதிப்பே வந்தது.

முன்னாடி எல்லாம் அவன் மைனராகத் தன்னைக் காட்டிச் சுற்றும் பொழுது தங்களுடையப் பெண்களை அவன் கவர வருகிறான் என்று தெரிந்ததால் உள்ளே வைத்து பூட்டியவர்களோ இப்பொழுதெல்லாம் அவனுடைய நற்குணங்கள் தெரிந்து அவனை நல்ல மனிதனாக பார்க்கின்றார்கள். அந்த ஊரைச் சுற்றி பல ஏக்கர்கள் அவனுடையது.

அதனால் அந்த ஊரில் உள்ள ஏழைச் சிறுவர்களை அவன் தான் படிக்க வைக்கிறான்.

விவசாயம் பற்றி சொல்லிக் கொடுக்க அங்கு ஒரு காலேஜே அவன் கட்டியிருக்கிறான்.

இதனால் அவன் மேல் இருந்த தப்பான எண்ணங்கள் மறைந்து அவன் மேல் மரியாதை கூடியது அங்கு உள்ள மக்கள் மத்தியில். நண்டுவிற்கு வினிதாவின் தங்கை ரீமாவை திருமணம் செய்து வைத்து அவனுக்கு காலேஜில் ஒரு மிகப்பெரிய பொறுப்பை அவனிடம் ஒப்படைத்து விட்டான் இளவேலன்.

அவனும் தன்னுடைய வேலையில் சின்சியராக இருக்கிறான்.

இளவேலனும் வினிதாவும் ஒன்றான பிறகு ஒரு முன்று மாதம் கழித்து ப்ரசாந்த் இளவேலனுக்கு அழைப்பெடுத்தான்.

அவனுக்கு வினிதாவை பிடித்திருந்தது. அதனால் அவனாகவே அழைப்பெடுத்து இளவேலனிடம் பேசினான் தனக்கு வாய்ப்பு இருக்குமா என்று.

இளவேலனுக்கோ கை முஷ்டிகள் இறுகியது.

ஆனாலும் இதை ஆரம்பித்து வைத்தது தான் தான் என்பதால் அவனிடம் தன் “வாழ்நாளில் அவளை எக்காரணத்தை கொண்டும் பிரியேன்..” என்று சொல்லி விட அவனும் வேறு வழியில்லாமல் தனக்கு வீட்டில் பார்த்த பெண்ணிற்கு சம்மதம் சொல்லிவிட்டான்.

இரவு தன்னுடைய மகளைத் தூங்க வைத்துவிட்டு தன்னுடைய அறைக்கு பால் கப்போடு உள்ளே வந்தாள் வினிதா.

அங்கு அவளுக்காகவே காத்திருந்தவன் போல அவள் உள்ளே வரவும் பூனை போல கதவை அடைத்து விட்டு அவளை பின்னோடு அணைத்து தூக்கிக் கொண்டான் இளவேலன்.

“என்னடி பொண்டாட்டி இப்ப எல்லாம் மாமன கண்டுக்கவே மாட்டேங்குற.. ரொம்பதான் பண்ற.. கல்யாணமான புதுசுல என்னை எப்படி எல்லாம் மயக்க பார்த்த..” என்று அவளை அணைத்தபடியே கேட்க, அவளோ “ம்ம் அப்போ நான் உங்கள மயக்குறதுக்காக பண்ண சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கு.. நீங்க என்கிட்ட தெரியாத மாதிரி நடிச்சு இருக்கீங்க..” என்று கேட்க,

அவனோ அசடு வழிய தன்னுடைய முகத்தை அவளுடைய கழுத்தில் உரசியவாறு “பின்ன தெரியாமலா இருக்கும்.. ஆனாலும் என்னால உன்கிட்ட நெருங்க முடியாது.. ஆனால் நீ பண்ற சின்ன சின்ன விஷயங்களை நான் எனக்குள்ளேயே ரசிச்சி இருக்கேன்..” என்றான்.

“அடப்பாவி மாமா இப்படி எல்லாம் பண்ணி இருக்கியா நீ..” என்று வாயை பிளந்து கேட்க, அவளை தன் பக்கம் திருப்பியவன் அவளுடைய பிளந்த இதழை தன் இதழ் கொண்டு அடைத்து விட்டான்.

சிறிது நேரத்தில் அவனிடம் இருந்து விலகியவள் “விடுங்க மாமா நாளைக்கு தீபாவளி.. இப்பவே இவ்ளோ லேட் ஆகிட்டு.. இப்ப கொஞ்சமாவது தூங்குனாதான் நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் எழுந்திருக்க முடியும்..” என்று அவள் சொல்ல,

“என்ன தூங்கப் போறியா.. அடியேய் வெள்ளத் தக்காளி அப்போ நான் பிளான் பண்ணி வச்சிருக்கிறது எல்லாம் வேஸ்டா..” என்று அவளை பார்த்து கேட்க, அவளோ “என்னது பிளானா.. அதெல்லாம் முடியாது எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன்..” என்று அவள் திரும்ப, அவள் முன்னால் போனவன் “அப்போ உனக்கு மச்சம் பாக்குற ஆசை இல்லையா..?” என்றான். அவளோ தனக்குள் சிரித்துக் கொண்டு “அதான் என் மச்சக்கார மைனர் என்கூடவே இருக்காரே எப்ப வேணா பார்க்கலாமே.. இன்னைக்கு ஒரு நாள் பார்க்கலைன்னா ஒன்னும் கெட்டுப் போகாது..” என்று சொல்ல, “அதெல்லாம் முடியாது..” என்று சொன்னவன் அவனுடைய பிளானை அரங்கேற்றியே அவளைத் தூங்க விட்டான்.

மறுநாள் அழகாக விடிந்தது. அனைவரும் புத்தாடைகள் உடுத்திக்கொண்டு பட்டாசுகள் வெடிக்க தீபாவளி அழகாக கொண்டாடப்பட்டது.

அப்பொழுது இவர்களுடைய அருமை மகன் வருண். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். முத்தவன் வருண். இரண்டவது ஒரு குட்டி தேவதை ரித்யா.

வருண் குட்டி பெண்கள் புடை சூழ அவர்கள் நடுவே குட்டி கண்ணனாய் தன்னுடைய வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தான்.

அவன் உடன் வந்த அந்த குட்டி பெண்களும் அவனை “குட்டி மைனர்.. குட்டி மைனர்..” என்று அழைத்துக் கொண்டே வந்தார்கள். அதை பார்த்த அங்கு உள்ள பெரியவர்களோ “என்ன அடுத்த மைனரா..?” என்று புன்னகைத்தார்கள். 

 

நன்றி..

ஆதி..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

1 thought on “மச்சக்கார மைனர்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!