வதைக்காதே என் கள்வனே

4.9
(11)

கள்வன்-20

அவள் கன்சீவாக இருக்கிறாள் என்று மருத்துவர் கூறியதும் ஒரு நிமிடம் அதிர்ச்சியாக இருந்தது மித்ரனுக்கு.

பின்பு அவர்கள் இருவருக்கும் நடந்தது நினைவு வந்தது. அவன் அவளிடம் அத்து மீறிய செயல் நினைவில் வந்தாலும், தனக்கு ஒரு குழந்தை என்றதும் அவன் முகமோ ஆனந்தத்தில் புன்னகை பூத்தது. “நான் அப்பாவாக போறேன் எனக்கு ஒரு குழந்தை வரப் போகுது..” என்று சந்தோஷப்பட்டவன் அவளை பார்ப்பதற்காக உள்ளே சென்றான்.

அவளோ இன்னும் மயக்கம் தெளியாமல் படுத்திருக்க, அவள் அருகில் சென்றவன் பக்கத்தில் இருக்கும் சேரில் அமர்ந்து அவளுடைய மாராப்பு சேலையை சற்று விலக்கியவன் தன்னுடைய நடுங்கிய கையை எடுத்து அவளுடைய வயிற்றில் வைத்து தடவியவாறு கண்மூடினான்.

அந்த தருணம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அவளுடைய வயிற்றைத் தொட்டதும் ஏனோ தன் மகவே தன் கையில் விளையாடிய ஒரு உணர்வு தோன்ற அவனுடைய வதனத்திலோ புன்னகை அரும்பியது.

அதேநேரம் மயக்கத்தில் இருந்தவளோ மெதுவாக கண்விழித்து எதிரில் இவனைப் பார்க்க அவனும் அப்போது அவளைப் பார்த்தான். இருவருடைய கண்களும் சந்தித்தன.

அவளுக்கோ தான் எங்கு இருக்கிறோம் என்று கூடத் தெரியவில்லை.

இவனோ மனதில் தோன்றும் ஆனந்தத்துடன் அவள் கண்களை பார்த்திருந்தான்.

அவள் மெதுவாக தன் வயிற்றில் எதுவோ அழுத்துவது போன்று தோன்ற சற்று குனிந்து பார்த்தாள். அவனுடைய கை தன் வயிற்றை அணைத்து இருப்பதை பார்த்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

படுக்கையில் இருந்து மெதுவாக எழ முற்பட்டவளை சட்டென்று எழுந்தவன் அவளுடைய தோள்களை பிடித்து, “ஏய் பொறுமையா எழுந்திரு..” என்று கூறியவன் அவள் அமர்வதற்கு உதவி செய்தான். அவளுக்கோ அவனுடைய இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடிவில்லை. இவனா தன்னிடம் இப்படி அக்கறையாக நடந்து கொள்கிறான் என்றே நினைத்தாள்.

அவள் அமர்ந்ததும் பெட்டில் அவள் அருகில் அமர்ந்தவன் அவளுடைய கன்னத்தை தன் இரு கைகளாலும் தாங்கியவன் “நான் அப்பாவாக போறேன்.. நமக்கு ஒரு குழந்தை வரப்போகுது.. இந்த நிமிஷம் எனக்கு எப்படி இருக்கு தெரியுமா அப்படியே வானத்தில பறக்கிற மாதிரி இருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..” என்று சொன்னவன் அவளை சட்டென்று தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்.

அவளுக்கோ இந்த நிமிடம் எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று கூட தெரியாமல் அவனுடைய இறுகிய அனைப்பில் கட்டுண்டு இருந்தாள்.

அவளை ஆரத் தழுவியவன் தன்னில் இருந்தும் பிரித்து அவளுடைய இதழைக் கவ்விக் கொண்டான் மென்மையாக. முதலில் அதிர்ந்தவள் பின்பு அவனுடைய மென்மையான இதழ் அணைப்பில் அவளுமே விரும்பி ஒத்துழைத்தாள்.

அந்த நிமிடம் அவனுக்கு அவள் மேல் இருக்கும் கோபம் எங்கு போனது என்று தெரியவில்லை. அவன் கொடுக்கும் முதல் மென்மையான முத்தம் இருவருக்குமே புதுவிதமான உணர்வாக இருந்தது. அவளுக்கு மூச்சு முட்ட உடனே அவளிடம் இருந்து மெதுவாக பிரிந்தவன் கீழே குனிந்து அவளுடைய வயிற்றில் முத்தம் பதித்தான். அவளுக்கோ அவன் செய்யும் செயலில் மயிர்க்கால்கள் கூசியது.

“சரி வா போகலாம்..” என்று அவளை அழைக்க “எங்க..?” என்று கேட்டாள். அதற்கு அவனோ “இது என்ன கேள்வி என்னோட வீட்டுக்கு தான்..” என்றான்.

“என்னது உங்க வீட்டுக்கா..?” என்றவளுக்கோ உடல் சட்டென்று தூக்கி வாரிப் போட்டது.

“இல்ல முடியாது நான் வரமாட்டேன்..” என்றாள்.

“உன்கிட்ட இங்க யாரும் பர்மிஷன் கேட்கல.. வரனும் அவ்வளவுதான்..” என்றவன் அவள் மறுவார்த்தை பேசும் முன் அங்கிருந்து அவளை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

அவளோ அவனிடம் மறுபடியும் எதுவும் கூறாமல் அவன் இழுத்த இழுப்பிற்கு அவனுடனே சென்றாள். காரில் முன்னிருக்கையில் அவளை அமர்த்தியவன் தன் வீட்டை நோக்கி காரை செலுத்தினான். வீட்டின் முன்பு காரை நிறுத்தியதும் கீழே இறங்கியவன் அவள் புறம் வந்து கதவை திறந்து அவளுடைய கைபிடித்து கீழே இறக்கினான்.

கீழே இறங்கியவள் அந்த வீட்டை பார்த்து “இது யாருடைய வீடு..?” என்று கேட்டாள். அதற்கு மித்திரனோ “இது என்னோட வீடுதான்..” என்றான். “அப்போ அன்னைக்கு கூட்டிட்டு போனது.. அது உங்க வீடு இல்லையா..?” என்று கேட்க.

“எனக்கு ஏகப்பட்ட வீடு இருக்கு அதுல ஒன்னு தான் அது.. நான் எப்பவும் இருக்கிறது இந்த வீடுதான் வா போகலாம்..” என்றவன் அவளது கைப்பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றான். இவர்களுடனே வந்த லியாவும் நந்தாவும் பின்னாடி வர, ஹாலுல் உள்ள ஷோபாவில் அவளை அமர்த்தியவன் “என்ன சாப்பிடுற..?” என்று கேட்டான்.

“இல்ல எனக்கு எதுவும் வேண்டாம்..” என்று பதில் சொல்ல. “நீ சாப்பிடு சாப்பிடாம போ எனக்கு அது பத்தி கவலை இல்லை ஆனா உள்ள இருக்க என் குழந்தைக்கு பசிக்குமே..” என்க. அவனை சட்டென்று ஏறிட்டுப் பார்த்தவள் கொஞ்சம் கோபம் மீதூற “அப்படின்னா உங்க குழந்தைக்கு போய் ஊட்டுங்க என்ன ஏன் சாப்பிட சொல்றீங்க..?” என்று கேட்க. சற்று குனிந்து அவள் இருக்கும் சோபாவில் இருபுறமும் கைகளை ஊன்றியவன் அவளுடைய முகத்தின் அருகே தன்னுடைய முகத்தைக் கொண்டு வந்து “ஓ ரொம்ப ஸ்மார்ட்னு நினைப்பா..? என் குழந்தை வெளியே ஓடிக்கிட்டு இருந்துச்சுன்னா நான் ஏன்டி உங்கிட்ட சாப்பிட சொல்லி கேட்கப் போறேன் நானே ஊட்டி விட மாட்டேன்.. இப்போ என் குழந்தை உன் வயித்துக்குள்ள இருக்கு அதனால தான் உன்னை கெஞ்சிகிட்டு இருக்கேன் ஒழுங்கா சாப்பிடு.. இப்ப நான் ஜூஸ் கொண்டு வருவேன் நீ குடிக்கிற..” என்றவன் அவளுடைய கன்னத்தில் லேசாக தட்டி விட்டு அங்கிருந்து செல்ல முற்பட, அவளோ அவனைப் பார்த்து “சரி ஓகே நான் சாப்பிடணும்னா நீங்களும் என் கூட சேர்ந்து சாப்பிடணும்..?” என்று சொல்ல ஒரு நிமிடம் நின்று அவளைப் பார்த்தவன் அவளுடைய முகத்தில் நீ சாப்பிட்டால் தான் நான் சாப்பிடுவேன் என்ற உறுதி தெரிய வேறு எதுவும் சொல்லாமல் அவளுக்கு ஜூஸ் போடச் சென்றான்.

ஜூஸ் போட்டு எடுத்து வந்தவன் அவள் கையில் ஒன்று கொடுத்து விட்டு தனக்கும் ஒன்று எடுத்துக் கொண்டான். “குடி..” என்க. அவளும் நீங்க முதல்ல குடிங்க அப்புறம் நான் குடிக்கிறேன்..” என்று சொல்ல “என் மேல எதுக்கு உனக்கு இந்த திடீர் அக்கறை..?” என்று மித்ரன் கேட்க ஒரு நிமிடம் தினறியவள் “அதெல்லாம் எனக்கு தெரியாது நீங்க குடிச்சிங்கன்னா நான் குடிக்கிறேன் இல்லைன்னா நோ..” என்று சொல்ல அவனும் சரி என்று ஒத்துக் கொண்டு ஜூஸ் குடிக்க இவளும் அவன் ஜூஸ் குடிப்பதை பார்த்துவிட்டு நானும் குடித்தாள். அதன் பிறகு “சரி வா இப்போ நீ கொஞ்சம் ஓய்வெடுக்கணும்..” என்று கூறியவன் அவனுடைய அறைக்குள் அவளை கூட்டிச் சென்றான்.

அவளும் மறுப்பேதும் சொல்லாமல் அவனுடன் சென்றாள்.

இவர்கள் இருவரும் அந்த ஹாலை விட்டு சென்றதும் இவ்வளவு நேரமும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த நந்தாவும் லியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதன் பிறகு லியா எதையோ தீவிரமாக யோசித்தது போல் இருக்க நந்தாவோ “என்ன லியா ஏதோ தீவிரமா யோசிச்சிட்டு இருக்க போல..” என்று கேட்க. லியாவோ தன்னுடைய அதி முக்கியமான சந்தேகத்தை அவனிடம் கேட்டது அதைக் கேட்டதும் நந்தாவிற்கோ ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றே தெரியாமல் ஆடிப் போய் நின்றான்.

“ஏன் நந்தா எனக்கு ஒரு டவுட் இந்த மதிக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகல அதுக்குள்ள எப்படி அவளுக்கு குழந்தை வந்திச்சு….” என்று கேட்க. அவனோ எந்த பதிலும் சொல்லாமல் லியாவை பார்த்தபடியே இருந்தான்.

“டேய் உன்கிட்ட தான கேட்கிறேன் பதில் சொல்லுடா பண்ணி..” என்று லியா அவனை வார.

“அது அதஉஊஊ வந்து நா எப்படி சொல்றது உனக்கு..” என்று திக்கித் திணற,

“ஏன்டா எதையாவது திங்கத் தெரியாம திண்ணியா இப்படி தொண்டை அடைக்குது..” என்று சொல்ல யோசித்தவன் இது சொல்லாம நம்மளை விடாது என்று லியாவிடம் மித்ரன் மதியிடம் நடந்து கொண்டதை கூறினான்.

அதைக் கேட்ட லியாவோ அதிர்ந்து போனது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!