தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 21

5
(25)

பேராசை – 21

காஷ்யபன் நேரே காரை சென்று நிறுத்தியது என்னவோ பிரகலாதனின்  “PL எண்டர்பிரைசஸ்” முன்பு தான்.

அவனை மேலிருந்து கீழ் ஓர் பார்வைப் பார்த்தவள் எதுவுமே பேசாமல் காரில் இருந்து கீழே இறங்கி ஒன்றுமே பேசாமல் கம்பனி உள்ளே விறு விறு வென சென்று விட்டாள்.

போகும் அவளின் முதுகை வெறித்துப் பார்த்தவனுக்கு “உனக்கு உடம்பெல்லாம் திமிர் டி” என சொல்லிக் கொண்டவன் காரை உயர் வேகத்தில் கிளப்பி இருந்தான்.

பிரகலாதனின் அறைக்குள் வந்தவளைப் பார்த்து “வெல்கம்  ஆழினி” என இருக்கையில் இருந்து எழுந்தவர் இன்முகமாக அவளை வரவேற்க….

அவளும் “குட் மார்னிங் மாமா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”

“குட் மார்னிங் என்னமா சொல்லு?”

“என்னையும் வருணையும் பற்றி நீங்க எல்லாம் என்ன  நினைச்சிட்டு இருக்கீங்க?” என்ற அவளின் முதல் கேள்வியே அவருக்கு தூக்கி வாரிப் போட்டது.

“என்னமா நாங்க உனக்கு நல்லது தானே பண்றோம்”

“அது எனக்கு புரியிது மாமா பட் எனக்கு வருண் ஒரு நல்ல பிரண்ட், வெல் விஷர் அவனைப் போய் நான் எப்படி என்னால அதை நினைச்சுக் கூட பார்க்க முடியாது மாமா… இதைப் பத்தி நான் வீட்ல கதைச்சாலே யாருக்கும் புரியாது அண்ட் அங்க பேசவும் முடியாது…. அதான் உங்ககிட்ட பேசலாம்னு நினைச்சேன்”

“ப்ரண்ட்ஸ் மேரேஜ் பண்ணிக்க மாட்டாங்களா மா?”

“என்ன மாமா நீங்களும் புரியாமல் பேசுறீங்க? இந்த விஷயம் வருணுக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவானோ? என்றவள் கண்களை மூடித் திறந்து ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவள் பிளீஸ் இந்த மேரேஜ் ஐ எப்படி சரி நிறுத்துங்க” என்று அவள் சொன்ன அதே கணம் அங்கோ வருண் கண்கள் சிவக்க அடக்கமுடியா சினத்தில் அறையில் அமர்ந்து இருந்தான்.

ஜெயகுமாருக்கே அவனைப் பார்க்க பயமாக இருந்தது.

மெதுவாக அவன் அருகே வந்தவர் “ எனக்கு அவங்க கேக்குறப்போ மறுக்க தோணலை வருண்…. எனக்கு அவளை தவிற நல்ல மருமகள் கிடைக்க மட்டானு தோணுச்சு டா அதான் ஓகே பண்ணேன்” என்க….

“அப்பா பிளீஸ் ஸ்டாப் இட் என அறை அதிரக் கத்தியவன்…. அவ என் பெஸ்ட் ப்ரெண்ட் பா இது வரையும் அப்படி ஒரு எண்ணமே எனக்கு ஆழினி மேல வந்தது இல்லபா…. அவளும் நானும் சொல்ல போன அண்ணா தங்கச்சி போல தான் இருப்போம் எங்களை போய் எப்படி? சாரி அப்பா உங்களை ஹர்ட் பண்ணிட்டேன் பிளீஸ் ஆழினி  வீட்ல டுடே போய் பேசிட்டு வந்துருவோம் அப்பா” என்றான்.

“நீ சாரி கேட்காத வருண் உன்னை நான் ஒரு வார்த்தை சரி கேட்டு இருக்கணும் என்றவர் நாம இன்னைக்கு பேசிக்கலாம் டா வொர்ரி பண்ணிக்காத”

“ப்ச… நீங்க என் அப்பா உங்களுக்கு என்மேல ஆல் ரைட்ஸ் இருக்கு அப்பா என அவரின் மடியில் படுத்துக் கொண்டவன் அவ என் பிரண்ட் பா இன்னும் சொல்லப் போனால் தங்கச்சி போல அதான் அப்பா உங்ககிட்ட கோபமா நடந்துகிட்டேன் ரியலி சாரி”

அவனின் தலையை கோதிக் கொண்டே “ டேய் லீவ் இட் டா எனப் புன்னகைத்தவர் ஆழினிக்கு கால் பண்ணி பாருடா” என்க..

“ஆமால… ஓகே அப்பா என்றவன் சற்று குரலை செருமிக் கொண்டே “  அப்பா எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சு இருக்கு, அவள் படிச்சு முடிக்கட்டும் அப்ரமா அவங்க வீட்ல பேசுங்க அப்பா” 

“வாவ்… யார்டா என் மருமகள்?” எனப் பூரிப்பாக கேட்க….

அவரின் மடியில் இருந்து எழுந்தவன் “நானே இன்னும் என் லவ் ஐ அவகிட்ட சொல்லல அப்பா அவ படிச்சு முடியட்டும் நான் பேசிட்டு அவளுக்கு ஓகேவா இருந்தால் மேற்கொண்டு பேசலாம் அப்பா” என ஒரு பெருமூச்சுடன் கூறினான்.

“உனக்கு என்னடா குறை? என்றவர் எழுந்து என் மருமகள் ஓகே சொல்லுவா வருண்” என்று விட்டு  வெளியேறி சென்று விட்டார்.

தன் அலைபேசியை பாக்கெட்டில் இருந்து எடுத்தவன் ஆழினிக்கு அழைத்தான்.

பிரகலாதனுடன் பேசி ஓர் முடிவுக்கு வந்தவள் அவரின் பிஸ்னஸ் பற்றிய சில கோப்புக்களை சரி பார்த்துக் கொண்டு இருக்கும் போது அவளின் அலைபேசி ஒலிக்க, அதனை எடுத்துப் பார்த்தவள் வருணின்  பெயரைக் கண்டவளுக்கு அவனுடன் பேச ஏதோ போல் இருக்க… எதுவாக இருந்தாலும் பேசித் தானே ஆக வேண்டும் என நினைத்தவள் அழைப்பை எடுத்து இருந்தாள்.

அழைப்பை அவன் எடுத்து இருந்தாலும் அவனின் அவன் எதுவும் பேசவில்லை அவனின் அமைதியே அவளுக்கு புரிந்து விட கண்களை மூடித் திறந்து ஓர் ஆழ்ந்த பெரு மூச்சை விட்டவள் “சாரி வருண்” என்று அவள் சொன்ன அதே கணம் மறு புறம் இருந்து அவனும் “சாரி ஆழினி” என்றிருந்தான்.

வருண் அடக்க முடியாமல் சிரித்து விட… அழைப்பில் இருந்த ஆழினியோ  பொறுமை இழந்து “ஸ்டாப் இட் வருண் பாவம்னு சாரி சொன்னா ஓவர் ஆஹ் பண்ணாத”

“எவ்ளோ சீரியஸ் ஆஹ் இருந்தேன் தெரியுமா? இப்போ தான் சிரிக்கிறேன் என்றவன் ஓகே ஓகே ஜாக்ஸ் அபார்ட்… நம்மல போய் இந்த பெருசுங்க சேர்த்து வைக்க டிரை பண்ணதுக்கு சாரி டி” என்றான்.

“நானும் அதுக்கு தான் சாரி கேட்டேன் என்ன தான் இருந்தாலும் என் வீட்டுல தானே பேசி இருக்காங்க அதான் டா எனக்கு என்னவோ போல இருக்கு நான் உன்கிட்ட ப்ரெண்ட்லியா தானே நடந்துப்பேன்” என குரல் தளுதளுக்க அவள் கூற…

“லூசு என்னை பத்தி உனக்கும் உன்னை பத்தி எனக்கும் தெரியும் டி…. நானே கொஞ்சம் முதல் அப்பாகிட்ட அப்படி கோபப் பட்டேன் பட் அவங்க பாயின்ட் ஆப் வியூல  இருந்து நாம மேரேஜ் பண்ணிக்கிட்டா நல்லம்ன்னு யோசிச்சு இருப்பாங்க மா”

“ஹூம் புரியுது டா பட் அவ்ளோ பிரன்ட்ஸ்ன்னு தெரியலையா என்ன?”

“நமக்கு நாம பிரண்ட்ஸ்ன்னு தெரியும் அதுக்காக மைக் செட் போட்டு ஊருக்கே சொல்ல முடியுமா? அரை மெண்டல்” என அடக்கப்பட்ட சிரிப்புடன் கூற…

அவன் சொன்ன தோரணையில் அவளுக்கும் சிரிப்பும் வந்து விட்டது “இந்த கேப்ல என்னை அரை மென்டல்ன்னு சொல்லிட்டல இட்ஸ் ஓகே இப்போ என்னை சிரிக்க வச்சதுக்காக உன்னை சும்மா விடுறேன் என்றவள் ஞாபகம் வந்தவளாய் வரு வரு நான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும் இன்னும் நான் இதை தேஜாகிட்ட கூட சொல்லல” என பதற்றத்துடன் அவள் சொல்ல….

“ரிலாக்ஸ் மா அப்படி என்ன விஷயம்? அதுவும் தேஜ் கிட்ட சொல்லாமல் என்கிட்ட ஃபர்ஸ்ட் ஆஹ் வருது” என்க…

“நான் சொல்ல போற விஷயத்துல உனக்கு ஹார்ட் அட்டாக் வராமல் இருந்தால் ஓகே”

“என்னை பதற வைக்காமல் சொல்லு டி”

“காஷ்மோரா என்னை லவ் பண்றேன்னு புது கதை கட்டிட்டு இருக்கு வருண்  நம்புறதா என்னனு தெரியலையே ஒரே குழப்பமா இருக்கு டா”

இங்கு தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தவனுக்கு புரை ஏற, “வாட்” என தலையில் தட்டிக் கொண்டே கேட்டு இருந்தான்.

“உன் காதுல சரியா தான் விழுந்து இருக்கு”

“ஹவ் இஸ் இட் போசிபல் டி உன்னை கொலை பண்ற லெவலுக்கு இறங்குனவன் ஆச்சே! என யோசித்து விட்டு எப்போ புரோபோஸ் பண்ணான்?” எனக் கேட்க…

“எஸ்டர்டே”

“ஒருவேளை என்னோட உனக்கு மேரேஜ் பண்றதா பேசிட்டு இருந்ததுல சாருக்கு போஸ்சசிவ் ஆகி லவ் ஹார்மோன்ஸ் வேலை செஞ்சி உன்மேல இருக்க லவ் ஐ புரிய வச்சு இருக்குமோ?”

“அறிவாளி அறிவாளி இதான் நான் உன்னை கூடவே வச்சிகணும்”

“என்னடி கலாய்க்கிறியா?”

“புரோபோஸ் பண்ணிட்டு நீ சொன்ன அந்த ரீசனை தான் ரீல் விட்டுச்சு காஷ்மோரா”

அதிர்ந்த வருண், “ஆழினி அப்போ உண்மையா தான் இருக்கும்… இப்போ உன்மேல இருக்க லவ் வெளில வந்து இருக்கலாம்”

“அப்போ நம்ப சொல்றியா?”

“ஒருத்தன் இதுல எல்லாம் போய் விளையாடுவானா? எதுக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணி ஓகே சொல்லு டி…. என்னால கன்பார்ம் ஆஹ் சொல்ல முடியாது மா, நீ தானே அந்த வீட்டுல இருக்க என்னை விட உனக்கு தான் அவனை பற்றி தெரியுமே? கொஞ்சம் வெயிட் பண்ணி முடிவு எடு என்ன பிராப்ளம் ஆஹ் இருந்தாலும் என்கிட்ட சொல்லு டி உனக்கு பிரண்ட் ஆஹ் மட்டும் இல்ல ஒரு அண்ணாவாவும் உன்கூட இருப்பேன் மா” என்றான்.

அவனின் அண்ணா என்ற சொல்லில் உள்ளம் நெகிழ “ஓகே டா அண்ணா பட் உனக்கும் அவன் ப்ரெண்ட் தானே ‘ஆழினியை உண்மையாவா லவ் பண்றனு?’ கொஞ்சம் கேட்டு பாரேன்….

“நான் அவ்ளோ க்ளோஸ் எல்லாம் இல்லமா சும்மா பிஸ்னஸ் ல மீட் பண்ணிகிட்டோம் அப்புறம் தான் ஃபேமிலி பிரண்ட்ஸ்ன்னு தெரிஞ்சிகிட்டோம் பட் க்ளோஸ் இல்லை இதுல என்ன டுவிஸ்ட்னா அவ்ளோ வருஷம் உன் கூட யூநிவர்சிடில படிச்சும் தெரியாமல் நான் ‘US’ போறப்போ தான் அவன்  உன் காஷ்மோரான்னு எனக்கு  தெரிய வந்துச்சு” என சிரிக்கத் தொடங்கி விட….

“போதும் உன் விளக்கம்… இன்னுமே எனக்கு தலைவலியை கூட்டி விட்டு இருக்க நானே பாத்துக்கிறேன்” 

“ஹியர் லிசின் ஆழினி  உனக்கு பிடிக்கலனா ஷேத்ராகிட்ட சொல்லிட்டு விலகு… உன்னை ஏன் சும்மா ட்ரெஸ்  பண்ணிகிற?”

அவளிடம் இப்போது மௌனம் மட்டுமே….

“என்ன மேடம் பதிலை காணுமே”

அவன் குரலில் தெளிந்தவள் “ஒரு 2 நாள் போகட்டும் அப்புறம் பாக்கலாம்” என்று விட்டு சிறிது நேரம் கதைத்து விட்டு அழைப்பைத் துண்டித்து இருந்தாள்.

அப்படியே நாட்கள் நகர ஆரம்பித்து இருக்க, அன்று சனிக்கிழமை அவனின் அவனின் கெஸ்ட் ஹவுஸ்க்கு செல்ல ஆயத்தமாகி  வந்தவன் தொலைக்காட்சியில் செல்லும் பாடலைப் பாடிக் கொண்டே பல பழச்சாற்றை பருகிக் கொண்டு இருந்தவள் அருகில் வந்தவன் சுற்றிலும் பார்த்து யாரும் இல்லை என உறுதி செய்துக் கொண்டவன் அவளின் இதழ்களில் மீதமாக இருந்த பழச் சாற்றை தன் இதழ்களைக் கொண்டு சுவைத்து இருந்தான்.

அவன் வந்தது கூட தெரியாமல் பாடலில் லயித்து இருந்தவள் இவனின் இந்த எதிர் பாராத செயலில் அதிர்ந்து விலகியவள் யாரும் பார்த்து விட்டார்களா என கண்களை சுழல விட்டாள்.

அதற்கு அவனே “யாரும் பார்க்கல பேபி” என்றிருக்க கோபமாக அவனை முறைத்தவள் என்ன தோன்றியதோ கொஞ்சமும் யோசிக்காமல் மிகுதியாக கிளாஸில் இருந்த பழச்சாற்றை அவனின் ஷர்ட்டில் ஊற்றி இருந்தாள்.

அன்று எனப் பார்த்து அவனுக்கு பிடித்த வெள்ளை நிற ஷர்ட் வேறு அணிந்து இருக்க, கோபத்தில் கண்கள் சிவந்து “ஏய்” என்று சீறியவன் அவளை அறைய கைகளை ஓங்கியவன் அவள் அதிர்ந்த தோற்றத்தில் தன்னை சுதாரித்து இதழைக் கடித்து கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன் “சாரி ஆழி” என்றான்.

இவ்வளவு நாட்களும் அவனுக்கு என்னன்னவோ செய்து இருக்கின்றாள் ஒவ்வொன்றையும் அவள் சொல்வது போலவே கேட்டு செய்தவனின் பொறுமை இன்று மொத்தமாக போயிருந்தது.

தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வேறு உடைக்கு மாறியவன் ஆயத்தமாகி ஹாலுக்கு வரும் போது அவள் முதல் எங்கு இருந்தாளோ அங்கேயே அமர்ந்து எங்கேயோ வெறித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.

“ஓ மை கோட் பீ கன்ட்ரோல் ஷேத்ரா” எனத் தனக்குள் சொல்லிக் கொண்டவன் அவள் அருகே சென்று “ஆழி” என்று அழைத்து இருந்தான்.

அவனை பார்த்தவள் விழிகளில் “என்ன” என்ற கேள்வி தொக்கி நின்றது.

“நான் கெஸ்ட் ஹவுஸ் போறேன் வர்றியா?”

“முடியாது” என இரு பக்கமும் தலையை அசைத்து இருந்தாள்.

இத்தனைக்கும் அவள் வாயே திறக்கவில்லை.

ஒற்றைக் கையால் தலையைக் கோதிக் கொண்டே ஒரு பெரு மூச்சுடன் “என்னடி இப்போ ரியலி சாரி” என்று விட்டு அவளின் காலில் விழப் போக….

அதிர்ந்து விழிகள் விரிய வேகமாக எழுந்து நின்றவள் “லூசா உங்களுக்கு? என அவனை முறைத்தவள் வெயிட் நான் ரெடி ஆகிட்டு வரேன்” என்றவள் தனது அறை நோக்கி சென்றாள்.

போகும் அவளின் முதுகை வெறித்தவன் இதழ்களில் வன்மப் புன்னகை தோன்றி மறைந்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

3 thoughts on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 21”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!