தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 26

4.7
(26)

பேராசை– 26

 

எல்லாரும் ஆரவாரமாக கூச்சலிட்டு கைகளை தட்ட காஷ்யபனோ முகத்தில் மென் புன்னகையுடன் அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டு ரூப் டாப் நோக்கி படிகளில் ஏறினான்.

அவளுக்கோ வெட்கம் தாழ முடியவில்லை “ஐயோ என்னை விடுங்க… நான் நடந்து வரேன் பிளீஸ்” என அவள் கெஞ்சியதைக் கூட காதில் வாங்காமல் இறுதியில் அவளை அவன் இறக்கி விட்டது என்னவோ ரூப் டாப்பில் தான்.

அவன் மேல் கோபம் இருக்க தான் செய்தது அவளுக்கு, அவன் எல்லோர் முன்னும் தன்னை ஏந்தி தனியாக சந்திக்க கூட்டி வந்தது ஏதோ போலவும் இருக்க என்ன முயன்றும் கட்டுப் படுத்த முடியாமல் அவளின் முகம் வெட்கத்தில் சிவக்க அவளின் குரலும் சிணுங்களாக தான் ஒலித்தது .

 “என்ன இது ? நம்மல என்ன நினைப்பாங்க? என்றவளை  மேலும் பேச இடம் கொடுக்காமல் அவளது வார்த்தைகளை தன் இதழ்களால் சிறை செய்து இருந்தான்.

அவளின் விழிகளோ தானாக மூடிக் கொண்டன.

அவனுக்கோ அவளை தன்னுடன் புதைத்துக் கொள்ளும் வேகம்.

சற்று முன்னர் அவள் தேஜாவிடம் புலம்பியது எல்லாம் மாயமாகியது போல் இருந்தது.

அவன் என்னவன் என்ற உணர்வு அவளை ஆட்கொள்ள தான் மருதாணி போட்டு இருக்கின்றோம் என்பதையே மறந்து அவனின் வெண்ணிற ஷர்ட்டினை இறுகப் பற்றிக் கொண்டாள்.

எவ்வளவு நேரம் அந்த முத்த யுத்தம் தொடர்ந்ததோ அவள் மூச்சுக்கு தவிப்பதை பார்த்து அவளின் இதழில் இருந்து தன் இதழ்களை பிரித்து எடுத்தவன் விழிகளில் அப்பட்டமான மோகம் நிறைந்து இருந்தன.

அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே “ நீ கொஞ்சம் முதல் டென்ஷன் அஹ் இருந்த பேபி என்னாச்சி?

அந்த கேள்வியில் சற்றே தடுமாறியவள் “ நதிங் காஷ் மேரேஜ் டென்ஷன் தான்” என்றாள்.

 “இப்பவே நாம பாதி ஹஸ்பண்ட் அண்ட் ஒய்ஃப் மாதிரி தான்…அது மட்டும் இல்ல விடிஞ்சா  நமக்கு மேரேஜ் ஆகிடும் சோ இதுல நம்மல பத்தி மற்றவங்க என்ன நினைப்பாங்கனு யோசிக்க அவசியம் இல்ல ஆழி” என்றான் பொறுமையாக….

இந்த இடைப்பட்ட நாட்களில் அவனின் இந்த பொறுமை எல்லாம் அவனே நினைத்துப் பார்க்காத ஒன்று தான்.

அவனின் மாற்றம் அவனுக்கு தெரிந்து இருந்தாலும் எல்லாம் பிஸ்னெஸிற்காக மட்டும் தான் எனத் தனக்குள் உரு போட்டுக் கொண்டான்.

அவளின் அமைதியை பார்த்து விட்டு “என்னை பிடிக்கலையா டி” என அவள் விழிகளை பார்த்துக் கொண்டே கேட்டு இருந்தான்.

அவன் அந்த கேள்வியை கேட்கும் போதே குரலில் ஒரு தடுமாற்றம்.

 இதயமோ வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது.

“பிடிக்காமலா மேரேஜ் வரையும் வந்து இருக்கேன்” என்றவள் வெட்கத்தில் விழிகளை தாழ்த்திக் கொள்ள…..

அவனுக்கோ இனம் புரியாத மகிழ்ச்சி.

இக்கணம் அவனின் பழி வெறியை மறந்தே இருந்தான்.

உணர்ச்சியின் உச்சத்தில் இருந்தவன் அவளை இறுக அணைத்து விடுவித்து விட்டு “ நீ என்னை டெம்ப்ட் பண்ணிட்டு இருக்க டி இங்கேயே இருந்தால் உன்னை” என அவளை முழுவதும் பார்வையால் வருடியவன் அடுத்து அவன் சொன்னதை கேட்டவள் “ஐயோ காஷ் நான் போறேன் என்றவள் பாதி தூரம் சென்று அவனை திரும்பி பார்த்து  இப்பவே நீங்க என்னை எடுத்துகிட்டாலும் தப்பில்லையே” என ஒற்றைக் கண்ணை அடித்து விட்டு முகம் சிவக்க ஓடி விட்டாள்.

அவளின் வார்த்தைகளில் வெட்கம் வந்தது என்னவோ அவனுக்கு தான்.

தலையைக் கோதிக் கொண்டே சிறிது நேரம் நின்றவனுக்கு அப்போது தான் தன்மேல் அவளின் மருதாணி வாசனை வருவதை உணர்ந்து தன்னைக் குனிந்து பார்க்க, அவனின் வெண்ணிற ஷர்ட்டின் மேற்பகுதி அவளின் மருதாணி படிந்து இருந்தது.

எதனால் என அவனுக்கு தெரியாதா என்ன? அவனுக்கோ உலக அதிசயமாக இதழ்களில் வெட்கப் புன்னகையே தோன்றியது.

இவன் தான் அன்று அவள் தன் கைகளில் மருதாணி போட்டு விட்டதற்காக அவளை அடித்து நொறுக்கும் வெறியில் இருந்தான் என்றால் ஒரு குழந்தை கூட நம்பாது.

அதே மருதாணி தான் அவனையே மறந்து இன்று புன்னகைக்க வைத்து இருந்தது.

அந்த அளவிற்கு அவள் மீதான காதல் அவனை  மாற்றி இருந்தது.

அதனை அவன்  உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அதனைத் தொடர்ந்து தான் மேலே போட்டு இருக்கும் கோர்ட்டை சரி செய்து ஷர்ட்டை முழுவதுமாக மறைத்துக் கொண்டவன் கீழிறங்கி ஹாலுக்குள் வந்தான்.

அவனின் விழிகள் அவளையே வட்டமிட அவளும் அவனை பார்த்து முகம் கொள்ள வெட்கப் புன்னகையுடன் கண்களைச் சிமிட்டிக் கொண்டாள்.

அதனைத் தொடர்ந்து இருவரும் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள அந்த இடமே ஆரவாரமாக மாறிப் போனது.

கேமரா மேனோ இருவரையும் வித விதமான புகைப் படங்கள் எடுத்துத் தள்ள… அவனும் அவளை முத்தமிட்டு பல போஸ்களை வேறு கொடுக்க, பாவம் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தவனுக்கு தான் வெட்கமாகிப் போனது.

அப்படியே அந்த நாளும் கழிய திருமண நாளும் விடிந்தது.

செல்வந்தக் குடும்பத்தின் ஒரே வாரிசுகளின் திருமணம் என்றால் இனி சொல்லவா வேண்டும்.

ஒரு இடம் விடாமல் அனைத்திலும் ஆடம்பரம் நிரம்பி வழிந்தது.

மீடியா உட்பட அனைத்து தொழில் முறை அதிபர்கள்  நிறைந்து இருக்க பிரகலாதன்  ஜீவா மற்றும் ஜெயகுமார் அவர்களை வரவேற்க, மறு புறம் வருணோ அழினிக்கு  அண்ணா இல்லாத குறையை நிவர்த்தி செய்து கொண்டு இருந்தான்.

அனைத்தையும் மேற்பார்வை செய்துக் கொண்டு இருந்தவனை தேஜா விழி அகலாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவன் மேல் காதல் பன்மடங்காக பெருகியது.

அதனைத் தொடர்ந்து நேரம் செல்ல புரோகிதர் “பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ” என்க.

உற்றார் உறவினர்கள் புடை சூழ அடர் செந்நிற புடவையில் அழகு பதுமை போல வருபவளை இமைக்காமல் மேடையில் தான் சொல்ல வேண்டிய மந்திரங்களை விடுத்து விழிகளில் காதலைத் தேக்கி பார்த்துக் கொண்டு இருந்தான் அவன் காஷ்யபன் ஷேத்ரா.

என்ன காதலா?

ஆம், எப்போதும் மோகப் பார்வையோடு அவளை பார்ப்பவன் இன்று அவளை காதலாக பார்த்து இருந்தான்.

தன் அருகில் வந்து அமர்ந்தவளிடம் குனிந்து “ஏஞ்சல் போல இருக்க டி” என்க…

அவனை அவள் ஏறிட்டுப் பார்த்த அந்த நொடி அவள் விழிகளோடு விழிகளை கலக்க விட்டவன் கெட்டிமேளம் முழங்க அனைவரின் ஆசியோடு அற்ச்சதைகள் தூவ அவளின் சங்குக் கழுத்தில் மங்கள நாணைப் பூட்டினான்.

அனைத்து சம்பிரதாயங்களும் இனிதே முடிய…தொழில்முறை பிரமுகர்கள் மேடை ஏறி வாழ்த்தி விட்டு புகைப்படங்கள் எடுத்து விட்டு சென்றனர்.

நேரம் இறக்கை கட்டிக் கொண்டு பறக்க மாலை 4 மணி போல தம்பதிகள் வீட்டிற்கு வர, தேஜா ஆரத்தி எடுக்க வலது காலை வைத்து உள்ளே நுழைந்தாள் ஆழினி.

ஒன்றன் பின் ஒன்றாக சடங்குகள் முடிய காஷ்யபனுக்கு தான் இருப்பு கொள்ளவே முடியவில்லை.

தன் அருகில் இருந்தவளிடம் “ஒரு கிஸ் தாயேன் டி”

“வாட்? என அதிர்ந்தவள் நீங்க ஹால்ல வச்சு பண்ணுன சேட்டைல அந்த கேமரா மேன் இந்த ஊர்லயே இருக்க மாட்டான் போல என் மானமே போச்சு அதுக்குள்ள இன்னும் கிஸ் வேணுமா?” என அவனை முறைக்க முடியாமல் தோற்றுப் போனவள் மெலிதாக சிரித்துக் கொண்டாள்.

“என் பொண்டாட்டிக்கு நான் எங்க கிஸ் பண்ணா தான் என்ன அவனுக்கு?” என்றான் குறும்பு புன்னகையுடன்…

அதில் முகம் சிவக்க வேறு பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டவள் காதருகே குனிந்து “நான் உனக்கு கிஃப்ட் பண்ணுன அந்த கிரீன் சாரில இன்னைக்கு நைட்” என்றவனின் வாயை தன் கையால் மூடியவள் “பப்ளிக்ல  பேச்சை பாரு என்றவள் அங்க பாருங்க  வருண் என்னை கிண்டலா பார்த்து சிரிக்கிறான் இப்படி எல்லாம் பேசாதீங்க காஷ்” என்றாள் முகம் சிவக்க….

“பொண்டாட்டி கிட்ட இப்படிலாம் பேசலானா தான்டி தப்பு” என்றான்.

அவளோ வெட்கத்தில் எழுந்து தேஜாவிடம் சென்று விட்டாள்.

ஒரு பெரு மூச்சுடன் அமர்ந்து இருந்த காஷ்யபன் அருகே வந்து அமர்ந்த வருண் “ என் ப்ரெண்ட் ஐ நல்லா பார்த்துக்கோ ஷேத்ரா” என்றான்.

அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே வம்பிலுக்கும் நோக்கில் அவனோ, “இல்லனா?”

“சாவடிச்சிடுவேன்” என்றான் வருண்.

சத்தமாக சிரித்தவன் “என் பொண்டாட்டியை எனக்கு நல்லா பார்த்துக்க தெரியும்” என்றான்.

“இதை முதலே சொல்றதுக்கு என்ன ? என்று எழுந்து கொண்ட வருணுக்கு அவனின் விதண்டாவாதமான பேச்சு கொஞ்சமும் பிடிக்க வில்லை.

ஆழினிக்காக பொறுமையாக இருந்தான்.

நேரம் நகர இரவு நேரமும் வந்தது.

அவன் அவளுக்கு வங்கி அனுப்பிய புடவைகளில் இருந்து அவன் பிரத்தியேகமாக அனுப்பிய புடவையை எடுக்கும் போதே அன்று அவன் கடிதத்தில் எழுதியவைகள் நினைவுக்கு வர கூச்சத்தில் முகம் உட்பட மேனி முழுவதும் சிவந்து விட்டது அவளுக்கு….

புடவையை பார்த்து பார்த்து கட்டியவள் தன்னை கண்ணாடியில் பார்த்தாள்.

பேரழகியாக இருந்தாள்.

இன்னும் சிறிது நேரத்தில் அவனவள் ஆகி விடுவேன் என்ற எண்ணம் வர புது மணப் பெண்ணுக்கே உரிய பதற்றத்துடன் நின்று இருந்தவள் கதவு தட்டப்படும் ஓசையில் சென்று கதவைத் திறந்தாள்.

இந்துவும் லதாவும் கையில் பால் செம்புடன் புன்னகை தவிழ நின்று இருந்தனர்.

அவளுக்கு பதற்றத்துடன் நாணமும் தொற்றிக் கொள்ள  தலையைக் குனிந்து கொண்டாள்.

அவளின் கையில் பாற் செம்பை கொடுத்து காஷ்யபனின் அறைக்குள் அனுப்பி வைத்தனர்.

அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டு இருந்தவன் அவள் உள்ளே வந்து கதவை தாழிட்டு விட்டு திரும்பும் கணம் அவளின் கையில் இருந்த பாற் செம்பை வாங்கி அருகில் உள்ள மேசையில் வைத்தவன் அவளின் விழிகளைப் பார்த்து “வை பேபி டென்ஷனா இருக்க?”

அவனையும் பாற் செம்பையும் மாறி மாறி பார்த்தவள் அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் “இதை நாம குடிக்கணுமே ” என்றாள்.

தேற்றி பற்கள் தெரிய புன்னகைத்தவனை பார்த்து அவள் மயங்கா விட்டால் தான் அதிசயம்.

ஆண் அழகனாக வெண்ணிற ஷர்ட் மற்றும் வேட்டியுமாக புன்னகைத்தவனை பார்த்து “அழகா இருக்கீங்க காஷ்” என்றாள்.

எந்த ஆணுக்கு தான் தன்னை அதுவும் மனைவியே ரசிப்பது பிடிக்காது.

அதே மாறா புன்னகையுடன் அவள் கையைப் பிடித்து கட்டிலில் அமர வைத்து விட்டு பாற் செம்பை எடுத்து வந்து அதிலுள்ள சிறிது பாலை குடித்து விட்டு அவளிடம் கொடுக்கப் போனவன் என்ன நினைத்தானோ தன் வாய்க்குள் இருந்த பாலை விழுங்காமல் அவளின் முகத்தின் அருகே குனிந்து அவளின் இதழ்களைக் கவ்வி அவளையும் பால் அருந்த வைத்து இருந்தான்.

அதிர்ந்து விழித்தாள் பாவை.

“காஷ்” என்றாள் ஆழி.

அவள் விழிகளை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டே “என்னடி?”

கன்னங்கள் சிவக்க அவன் விழிகளை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் நாணம் நெட்டித் தள்ள ஒருவாறு தன் தைரியத்தை வரவழைத்தவள் “ ஐ லவ் யூ” என்றாள்.

முகம் விகர்சிக்க அவளை இறுக அணைத்துக் கொண்டவன் “ லவ் யூ லாட்” என்றவன் அவள் முகத்தில் ஓரிடம் கூட விடாமல் முத்த மழை பொழிந்தான்.

 அவளைக் கட்டிலில் சரித்து காது மடல்களில் முத்தமிட்டான்.

அவளின் மேனியோ சிலிர்த்தடங்கியது.

விழிகள் மூடி இருந்தவளை மோகமாகப் பார்த்தவன் “ஆழி” என்றான் தாபமாக…

விழிகளை திறவாமலே அவளும் “ம்ம்” என்றாள்.

அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் குட்டி குட்டி முத்தங்கள் இட்டான்.

அவளோ அவனின் ஒவ்வொரு முத்தத்திற்கும் நெளிந்து கொண்டிருந்தாள்.

அவளின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவன் துடித்துக் கொண்டிருக்கும் அவளின் இதழ்களை மென்மையாக வருடி விட அவளுக்கோ குப்பென முகம் சிவந்து விட்டது… அடுத்த கணமே அவளின் இதழ்களைக் கவ்விக் கொள்ள பெரிய ஆழிப் பேரலையில் சிக்கிக் கொண்டது போல இருந்தது அவளுக்கு…

வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல குறுகுறுத்தது.

இனம் புரியாத பயம் வேறு உடல் நடுங்க திணறி விழிகளைத் திறந்துப் பார்த்தவள் மேல் மொத்தமாகப் படர்ந்து இருந்தான் அவன்.

இதழைக் கவ்வி சுவைத்துக் கொண்டிருந்தவனின் கரங்களோ அவளின் இடையை வருடியவாறு ஆடைகளுக்கு மேலாக அவளின் அங்கங்களை வருடத் தொடங்க அவனின் கரங்களை மேலும் முன்னேற விடாமல் பிடித்துக் கொண்டவள் அவனை விலக்கி விட்டு எழுந்து ஓட முயன்றாள்.

அவனோ அவளை பிடித்து  தனக்குள் புதைத்து விடுபவன் போல இறுக அணைத்துக் கொள்ள, அவனின் அணைப்பில் இருந்தபடியே “காஷ்” என்றாள் சிறிய தடுமாற்றத்துடன்…

“பிளீஸ் ஆழி ஐ நீட் யூ”என்றான்.

அவனின் ஆழ்ந்தக் குரலில் அவளாகவே அவனின் நெற்றியில் முத்தம் பதிக்க அவளின் சம்மதத்தை உணர்ந்துக் கொண்டவன் “என்கிட்ட உனக்கு என்னமா பயம் ரிலக்ஸ் பேபி” என்று அவளின் தலையை வருடி விட்டு பூப் போல கைகளில் ஏந்தி இருந்தான்.

அவளைக் கட்டிலில் கிடத்தியவன் நாணத்தில் விழிகள் மூடிக் கொண்டவளின் விழிகளுக்கு முத்தமிட்டு அவளின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டான்.

“காஷ்” என சிணுங்கினாள் அவள்.

“ஐ காண்ட் கன்ட்ரோல் மை ஃபீலிங்ஸ் ஆழி” என்றவனின் கரங்கள் அவளுடைய ஆடைகளை நெகிழ்த்தத் தொடங்கின.

இதயம் படபடக்க படுத்து இருந்தவளுக்கு குட்டி குட்டி முத்தங்கள் பதித்து அவளுள் மொத்தமாக புதைந்து இருந்தான்.

ஆழி என்ற அவனின் அழைப்பும் அவளின் சிணுங்கள்களுமே அறையியை நிறைத்தன.

ஆத்மார்த்தமான கூடல்.

அவளின் மீதான அவனின் காதலை அவன் உணரவில்லை என்றாலும் அவளை மென்மையாக கையாண்டு தன் காதலை சொல்லாமல் செயல்களால் உணர்த்தி இருந்தான்.

வலியில் சுருங்கிய அவளின் முகம் முழுவதும் முத்தமிட்டு அவளின் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரை தன் இதழ்கள் கொண்டு துடைத்தவன் அவளை ஆட்கொண்டு விட்டு விலகிப் படுத்து தன் மேல் அவளைப் போட்டுக் கொண்டு இறுக அணைத்த படி உறங்கிப் போனான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 26

No votes so far! Be the first to rate this post.

4 thoughts on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 26”

  1. சூப்பர் டா ❤️❤️❤️❤️😘😘😘😘🌹🌹🌹 வாழ்த்துக்கள் 🌹🌹🌹

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!