இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!!

5
(9)

Episode – 09

 

அவன் தன் மேல் விழவும், பதறிப் போனவள் அவனைத் தடுக்க முயன்றாள்.

 

ஆனாலும் அவளால் அது முடியாது போகவே, அவளின் திமிறல்களை இலகுவாக அடக்கி அவளின் மேல் படர்ந்தவனோ, 

 

அவளின் தாவணியைப் பற்ற, பயந்து போனவள், அவனை  தன் பலம் முழுவதும் திரட்டி தள்ளி விட,

 

ஆதியோ, அப்போதும் விடாது, அவளின் தாவணியை முழுதும் பற்றி இழுத்து கொண்டு அவளிற்கு அருகில் விழுந்தான்.

 

அவன் எழும் முன்னாக, தன்னை இரு கைகளாலும் மறைத்துக் கொண்டு, விரைந்து எழுந்தவள்,

 

சுவரின் ஓரமாக அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டாள்.

 

அவனின் செய்கைகளில் வெளிப்படையாகவே உடல் நடுங்கியது.

 

அவள் வாய்க்காரி தான், எகிறிப் பேசுபவள் தான், சண்டைக்காரி தான். 

 

அவளை அடித்தால் கூட திருப்பி அடிக்கக் கூடியவள் தான்.

 

ஆனால் பெண்மை, கற்பு என்று வந்தால் அவளும் சராசரிப் பெண்கள் போல பயந்து விடுவாள்.

 

அது வரையும் தமக்கை, குடும்பம் என பொத்திப் பொத்தி வளர்க்கப் பட்டவள். பெண்கள் மட்டும் படிக்கும் பாடசாலையில் கல்வி கற்பவள். ஆண் வாசனை இது தான் என்பதை கொஞ்சமும் அறியாதவள். 

 

அப்படிப்பட்ட பெண்ணிடம் அத்து மீறி நடந்த முதல் ஆண் மகன் ஆதி தான்.

 

அவனின் செய்கைகளில், அவள் உண்மையில் நடுங்கித் தான் போனாள்.

 

ஆதியோ, அவளின் தாவணியை கழுத்தில் சுற்றிக் கொண்டு துள்ளி எழுந்தவன்,

 

“என்ன அபர்ணா மேடம், முழுத் தண்டனையும் கொடுக்க முதல் எழுந்துட்டீங்க. கொஞ்சம் திரும்புங்க ஜான்சி ராணி.” என கேலி செய்ய,

 

அபர்ணாவுக்கு அவனின் பேச்சில் கண்கள் கலங்கி விட்டது.

 

அவனோ, அவளையே பார்த்த படியே நெருங்கிப் போக,

 

அவளோ, அவனுக்கு முதுகு காட்டியபடியே முன் நோக்கி நகர்ந்தவள்,

 

சுவருடன் மோதி நிற்க, அவளின் பின்னாக உரசுவது போல வந்து நின்றவன்,

 

இரு கைகளையும், அவளின் இரு பக்க சுவரிலும் வைத்து, அவளை நகர விடாது சிறைப் பிடித்தான்.

 

அவனின் மூச்சுக் காற்று, முதுகில் பட இன்னும் கூனிக் குறுகிப் போனவள்,

 

தலையை பக்க வாட்டாக திருப்பி, 

“தயவு செய்து கொஞ்சம் தள்ளி நி…. ல்…. லுங்க….”என முகம் சிவந்து, 

கண்கள் கலங்கி, மென் குரலில் கூற,

 

அவனோ, சுவரில் தாளம் போட்டவன், 

“பார்றா…. நம்ம வாயாடிக்கு கூட நாக்கு குழறுது. நீ சொன்னா நான் விலகிப் போகணுமா?, முடியாதுடி.” என்றவன் இன்னும் அவளை நெருங்க,

 

“நோ…. நோ…. ப்ளீஸ். நீங்க என்ன சொன்னாலும் நான் செய்றன். இப்படி மட்டும் பண்ணாதீங்க.”

 

“ம்ம்ம்ம்…. என்ன சொன்னாலும் செய்வீயா?”

 

“செய்றேன்…. செய்றேன்…. அதுக்கு முதல்ல நீங்க கொஞ்சம் தள்ளி நில்லுங்க ப்ளீஸ்.” 

 

“ஓகே.”  என்றவன், அவளை விட்டு விலகி, தாவணியை அவளை நோக்கி நீட்ட,

 

அவளோ, அதனை வாங்கிக் கொண்டவள், 

 

அவன் புறம் திரும்பாது, அதனைப் போர்த்துக் கொண்டு, பாத்ரூமிற்குள் ஓடியவள்,

 

மனதிற்குள் அவனை வறுத்து எடுத்தபடி,

 

கை நடுங்க தாவணியை ஒழுங்காக கட்டி முடித்து விட்டு, முகத்தில் தண்ணீர் அடித்து கழுவினாள். அவளால் தன்னை நிலைப்படுத்தவே முடியவில்லை. 

 

ஆனாலும் முயன்று சமாளித்தாள்.

 

அடுத்து ஆழ்ந்த மூச்சு ஒன்றை எடுத்து விட்டு வெளியே வந்தாள்.

 

வந்தவளின் முகத்தையே, சுவரில் ஒற்றைக் காலை மடித்து சாய்ந்து நின்றபடி, கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தான் ஆதி.

 

அவளுக்கோ, அவன் இன்னும் மேலாடை அணியாது இருப்பது, ஒரு வித ஒவ்வாமை உணர்வைத் தர,

 

அவனை நிமிர்ந்து பார்க்க முடியாது குனிந்து கொண்டு நின்றவள், 

 

“அந்த டீ ஷேர்ட்டை எடுத்து போட்டா…. குறைஞ்சா போய்டுவார்.” என முணு முணுத்தாள்.

 

அவளின் முணு முணுப்பு அவனது காதில் தெளிவாகவே விழுந்தது.

 

“ம்க்கும்…. நான் என்ன செய்யணும், செய்யக்கூடாதுன்னு நீ சொல்லாத. கொஞ்ச நேரத்துக்கு முதல்ல நீ சொன்னத காப்பாத்தப் பார்.”

 

“என்ன செய்யணும். சொல்லுங்க செய்றேன்.”

 

“வெரி சிம்பிள். அப்போ போட்ட மாதிரி உன்னோட ஸ்பெஷல் காபி ஒன்னும், மனுஷங்க குடிக்கிற மாதிரி சாதா காபி ஒண்ணும் போட்டுக் கொண்டு வா.”

 

“இப்போ…. எதுக்கு….” என அவள் கம்மிய குரலில் கேட்க,

 

“கேள்வி கேட்காத சொன்னதை செய்டி.”

 

“ம்ம்ம்ம்….” என்றவள் அங்கிருந்து போக ஆரம்பிக்க,

 

சொடக்கிட்டு அவளை அழைத்தவன்,

அவள் நின்று திரும்பிப் பார்க்கவும், 

 

“அப்போ போட்ட மாதிரியே, காரம் 

தூக்கலா இருக்கணும். கொஞ்சம் குறைஞ்சாலும். திரும்ப காபி போட வேண்டி இருக்கும். எனக்கு திருப்தி வரும் வரைக்கும் நான் விட மாட்டேன்.” என கூறியவனை வெறித்துப் பார்த்தவள்,

 

எதுவும் கூறாது வெளியே செல்ல, அவனின் உதடுகளில் கேலிப் புன்னகை ஒன்று உருவானது.

 

கண்டிப்பாக தன்னை அந்த காபியை குடிக்க வைக்காது அவன் ஓய மாட்டான் என்பது அவளுக்கு நன்றாவே புரிந்தது.

 

அதனைக் கூட புரிந்து கொள்ளாத அளவுக்கு அவள் ஒன்றும் முட்டாள் இல்லையே. 

 

“எப்படி காரத்தை தாங்கப் போறனோ தெரியலயே.” என எண்ணிக் கலங்கிப் போனவள், யோசனையினூடு காபி போட்டு முடித்தாள்.

 

போட்டு முடிப்பதற்குள் அவள் குறைந்தது பத்து தரமாவது தும்மி இருப்பாள்.

 

“ஆத்தி…. காபி போட்டதுக்கே இப்படி தும்முதே…. குடிச்சா உயிர் தப்புமா?” என எண்ணி கொண்டவள், கையைப் பிசைந்து கொண்டு நிற்க 

“இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே நிக்கிற பிளான் மேடம்?” என கிச்சன் வாசலில் சாய்ந்து நின்றபடி கேட்டான் ஆதி. 

 

அவனின் குரலில் துள்ளித் திரும்பியவள்,

 

“அது வந்து….” என திக்க,

அவளை நோக்கி வந்தவன்,

 

காரமான காபியை எடுத்து அவளின் கைகளில் திணித்து விட்டு மற்றைய கப்பை எடுத்து, ஒரு மிடறு பருகியவன், 

 

“சூப்பர் காபி.” என கூறியவன்,

“நீயும் குடி.” என கண் சிமிட்டலுடன் கூறினான்.

 

அவளோ, அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

 

அவனோ, அவளின் தோள்களில் கையைப் போட்டு அழுத்தியவன், அவளைத் தன்னோடு நடத்தியபடி அறைக்குள் அழைத்துச் சென்றான்.

 

அங்கே சென்றதும், தனது காபியை முழுவதும் பருகி முடித்தவன் சாவகாசமாக கப்பை வைத்து விட்டு,

 

“ம்ம்ம்ம்…. சீக்கிரம் குடி. அப்போ தான்  தூங்க முடியும். இல்லன்னா நீ குடிக்கும் வரைக்கும் சிவராத்திரி தான்.” என மறைமுகமாக அவள் குடிக்கும் வரைக்கும், அங்கிருந்து நகர முடியாது என்பதை சுட்டிக் காட்ட,

 

வேறு வழி இன்றி கப்பினை வாய்க்கு அருகில் கொண்டு சென்றாள்.

 

ஆனால் அந்தக் கணமே, அவளுக்கு கண்கள் கலங்க ஆரம்பித்தது.

 

தெரியாது குடிப்பது வேறு, தெரிந்தே குடிப்பது வேறு அல்லவா.

 

காரத்தில் வாய் வெந்து போகும் என தெரிந்த பிறகும், எப்படி அவளால் குடிக்க முடியும்?

 

மீண்டும் குடிக்க முடியாது, கப்பை இறக்கியவள், அவனையே பாவமாகப் பார்க்க,

 

“இப்போ தெரியுதா உனக்கு?, எனக்கு எப்படி வாய் காந்தி எரிஞ்சு இருக்கும்னு. உனக்கு பாவம் பார்க்கிற அளவுக்கு நான் நல்லவன் இல்லை என்கிறது உனக்கு நல்லாவே தெரியும். சோ…. குடிச்சிடு செல்லம்.” என உதட்டு வளைவுடன் கூற,

 

அவளும், இதற்கு மேலும் கெஞ்ச முடியாது என எண்ணியவள்,

 

ஒரு ஆழ்ந்த பெரு மூச்சுடன் ஒரு மிடறு குடித்தாள்.

 

ஆனால் அதனை விழுங்க முடியாது வாய் எரிய, கப்பை வைத்து விட்டு பாத்ரூம் நோக்கி ஓடினாள் அபர்ணா.

 

பத்து நிமிடங்கள் கழித்து முகம், கண்கள் எல்லாம் சிவக்க, 

 

இருமியவாறு, உதடுகள் நடுங்க, வெளியே வந்தவளை, ஆழ்ந்து பார்த்தவன், 

 

“இப்போ புரியுதா அடுத்தவங்க வலி, எப்பவும் வெளில மட்டும் ஒரு விஷயத்தப் பார்த்து ஈசி தானே, இது இப்படித் தான் இருக்கும் என நாங்களா முடிவு பண்ணக்கூடாது. உள்ள போயும் கொஞ்சம் ஆராய்ஞ்சு பார்க்கணும். அப்போ தான் அதுக்குள்ள இருக்கிற வலிகள், வேதனைகள் புரியும்.” என ஒரு வித அழுத்தமான குரலில் கூறியவனின் மனதில் அந்த நொடி என்ன இருந்தது என்பது அவன் மட்டுமே அறிந்த ரகசியம். 

 

அவனின் குரலில் அவனின் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள் அபர்ணா. 

 

அதற்குள் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன்,

 

அவள் இன்னுமே காரத்தினால் கஷ்டப் படுவதைக் கண்டு, அவளையே சற்று நேரம் அசையாது பார்த்துக் கொண்டிருந்தான்.

 

பின்பு ஒரு பெரு மூச்சுடன், அங்கிருந்த பிரிட்ஜ்ஜில் இருந்த பட்டரை எடுத்து அவளிடம் நீட்ட,

 

அவளோ, அதனை வாங்காது, அவனைத் தள்ளி விட்டு, அங்கிருந்த சாக்லேட் ஒன்றை எடுத்து அவசரமாக வாய்க்குள் போட்டாள்.

 

அவள் அவசரமாக உண்பதையே, ஒரு கணம் பார்த்தவன், அடுத்த நொடி, அவளை இழுத்து அவளின் சாக்லேட் வழிந்த இதழ்களுடன் தனது காய்ந்த உதடுகளை இறுக்கமாக இணைத்துக் கொண்டான்.

 

அவன் அப்படி செய்யக் கூடும் என எதிர் பாராதவள், அவனின் செய்கையில் முற்றிலும் அதிர்ந்து போய் நின்றாள்.

 

அவளின் அதிர்ச்சியை கண்டு கொள்ளாது அவளின் இதழ்களில் குடி கொண்டு இருந்தவன், அவளை விட்டு விலகும் போது, அவளுக்கு மூச்சு முட்டியது, இதழ்களில் எரிச்சல் எட்டிப் பார்த்தது. 

 

அவன் முத்தம் இட்டு விலகிய அடுத்த கணம், அவள் உடல் நடுங்க, கால்கள் நிலை கொள்ளாது ஆதியின் மீதே வாடிய கொடியாய் சாய்ந்தாள்.

 

அவனும் அவளை தாங்கிப் பிடித்து தன்னோடு அணைத்துக் கொண்டவன்,

அவளை அங்கிருந்த கட்டிலில் படுக்க வைத்து விட்டு, போர்வையை போர்த்தி விட்டான்.

 

அவள் கண்கள் மூடியபடியே படுத்து இருக்கவும்,

 

அவளை சில கணங்கள் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, அங்கிருந்து அவசரமாக விலகி பால்கனிக்கு சென்று நின்று கொண்டான் அவன்.

 

அவனுக்கே தான் ஏன் அப்படி நடந்து கொண்டோம் எனப் புரியவில்லை.

 

“சே…. என்னாச்சு எனக்கு?, எதுக்கு இப்போ இப்படி நடந்து கொண்டன். அவளை அணைச்ச கணத்தில் இருந்து இது என்ன உடல்ல புதுசா ஒரு மாற்றம்?, மனதில் தடுமாற்றம்?, என்ன இது ஒரு புது பீல்?, இதுவரைக்கும் இப்படி ஒரு பீல் வந்ததே இல்லையே.” என தலையைக் கோதிக் கொண்டவனுக்கு, 

 

அவளை முதல் முறை அணைக்கும் போது உண்டான மாற்றத்தை இன்னுமே நம்ப முடியவில்லை.

 

அந்தக் கணத்தில் தன்னுள் எழுந்த உணர்வுகளின் குவியல்களை அடக்கத் தெரியாது தான் அவன் முத்தம் இட்டதே.

ஆரம்பத்தில் கோபத்தில் தான் அவளின் மீது படர்ந்தான். 

 

ஆனால் அவளின் தாவணியைப் பற்றிய கணம், 

 

“இவள் உனக்கானவள்….” என அவன் மனம் கூக்குரல் இட்டுச் சொன்னதை இந்தக் கணம் வரை அவனால் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

 

பால்கனியில் கால் ஓயும் வரை நடை பயின்றவன், அங்கிருந்த கண்ணாடி வழியே கண்களில் கண்ணீர் வழிய படுத்து இருந்தவளை ஒரு பார்வை பார்த்து விட்டு,

 

அவளைப் பார்த்தபடியே அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தான்.

 

மறு புறம் அபர்ணா சோர்ந்து போய் அப்படியே உறங்கி விட்டாள்.

 

ஆதியும் அப்படியே ஊஞ்சலில் படுத்து உறங்கி விட்டான்.

****************************************

காலை நான்கு மணி அடித்ததும், எழுந்த தமயந்தி கடவுளை மனசார வணங்கி விட்டு, அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தித்து விட்டு,

 

குளித்து தயாரானவள், மெல்ல வெளியே வந்து, அங்கிருந்த மலர்களில் சிலதைப் பறித்து, 

 

அங்கிருந்த  கல்லிலேயே அமர்ந்து மாலை தொடுத்து, அவளுக்கு கொடுக்கப்பட்ட குட்டி வீட்டில் இருக்கும் சாமிப் படங்களுக்கு போட்டவள்,

 

மீதியை மாலையாக தொடுத்து, இன்னொரு புறம் எடுத்து வைத்தாள். 

 

என்ன தான் தாமதமாக தூங்கிய போதும், அந்தக் காலை நேரத்து பறவைகளின் ஒலியில் அவளுக்குள் உண்டான சோர்வு எல்லாம் மறைந்து ஒரு புத்துணர்வு பிறந்தது.

 

அந்த உணர்வின் வெளிப்பாடாய், ஆழ்ந்த மூச்சுடன் கண்களை மூடியவளின் உதடுகள் அவளையும் அறியாது, 

 

“சஷ்டியை நோக்க சரவணபவனார்….

சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்….

பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை….

கீதம் பாட கிண்கிணி ஆட….”  என முருகனை வேண்டி மனம் உருகிப் பாட, 

அந்த காந்தக் குரல் ஓசை அந்த அமைதியான தோட்டம் எங்கும், அழகாக எதிரொலித்தது.

 

அந்த இனிமையான குரலில், புல்லினங்கள் கூட, சற்று அமைதியாகி, தமது கீச்சிடும் சத்தத்தை நிறுத்தி, கானம் இசைக்கும் உயிருள்ள பசும்பொன் சிலையை ரசிக்க ஆரம்பித்து இருந்தன.

 

ஆம் பார்ப்பதற்கு , அந்த பச்சை புடவையில் அவள் அப்படித் தான் இருந்தாள்.

 

சாதாரண புடவை கூட அவளை எடுப்பாக காட்டியது.

 

அவள் கந்தசஷ்டி பாடி முடிக்கும் போது  நேரமும் ஐந்து மணி ஆகி இருக்க, 

சொன்ன நேரத்துக்கு சரியாக, டீஷேர்ட் மற்றும் டிராக் பேன்டுடன் வெளியே வந்தவன், 

 

காதில் விழுந்த குரலில் ஒரு கணம் கால்கள் வேலை நிறுத்தம் செய்ய அப்படியே நின்று விட்டான்.

 

அந்தக் குரலின் மென்மையில், 

தொலைந்து போக ஆரம்பித்தவனுக்கு, பழைய நினைவுகள் யாவும் அலை மோத, 

 

கண்களில் கனிவு ஒன்று உருவாகி மறைந்தது.

 

அதே நேரம், அதற்கு அடுத்து வாழ்வில் நிகழ்ந்தவை யாவும் தொடராக நினைவுக்கு வர,

 

மீண்டும் அவனின் முகம் இறுக்கத்தை தத்து எடுத்துக் கொள்ள,

 

ஒரு கணம் உடல் இறுகி நின்றவன்,

அடுத்த நொடி வேக நடையுடன், தமயந்தியின் முன்பாக சென்று நின்றான்.

 

அடுத்த நொடியே, “போதும்டி நீ பாடினது கொஞ்சம் நிறுத்து.” என கர்ஜித்தான் அவன்.

 

அவனது கர்ஜனையில் பயந்து கண்களைத் திறந்தவள், 

 

தன் முன்பாக ருத்ர மூர்த்தியாக நின்றவனைக் கண்டு பயந்து போய் ஒரு அடி பின்னோக்கி நகர்ந்தாள்.

 

அவனின் கோபத்துக்கு காரணம் என்ன?

 

இரு ஆண் மகன்களின் வாழ்க்கையிலும், இரு பெண்களாலும் மாற்றம் வருமா?

 

அடுத்த பதிவில் பார்க்கலாம் ❤❤❤

 

கொஞ்சம் ஒர்க் பிஸி…அதனால தான் எபி போட முடியல.. நானும் ட்ரை பண்றேன்.. பார்ப்பம்.

 

கண்டிப்பா லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கொடுங்க மக்காஸ் ❤❤❤

 

நாளைக்கு மாக்ஸிமம் எபி போட ட்ரை பண்றேன் ❤❤❤

 

மறக்காம லைக்ஸ் கொடுங்க 😍😍😍

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!