இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 46

5
(16)

Episode – 46

அவள் போனதும், “வர வர அவ என்ன மாதிரி ஆயிட்டா, நான் அவள மாதிரி ஆயிட்டேன். கொஞ்சம் என் பேச்சைக் கேட்டு பொறுமையா இருந்து இருந்தா…. இப்போ நிலைமை வேற மாதிரி இருந்து இருக்கும். ரொமான்ஸ், லவ் எல்லாம் கூடி இருக்கும். ஏன் இரண்டு பேரும் விலகி இருக்கணும்?” என அவனது மனதிற்குள் எண்ணிக் கொள்ள,

அவனின் மன சாட்சியோ, “அப்போ இப்போ நீ அவ மேல நூறு சத விகிதம் கோபமா இருக்காய்?, உனக்கு இப்போ அவ மேல லவ், ரொமான்ஸ் என்கிற எந்த உணர்வும் இல்ல அப்படித்தானே….” என கேட்க,

அதற்கு பதில் சொல்லாது, மன சாட்சியை அடக்கி வைத்தவன்,

“எனக்கு என்னோட வேலை தெரியும். நீ உன்னோட வேலையப் பார்.” என பதிலுக்கு கூற,

அவனின் மன சாட்சியோ, அடங்காது,

“இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த உலகிலே….” என பாட ஆரம்பித்தது.

தீரனுக்கு, தனது மன சாட்சியை அடக்குவதே பெரும் பாடாகிப் போனது.

காதல், என்ற ஒன்று வந்தாலே…. நம் மனம் நம் வசம் இருக்காது தானே.

நம் பேச்சைக் கேட்காது தானே. அது தானே உலக நியதி.

இந்த ஜோடியின் நிலை இப்படி இருக்க,

மறு புறம், வேகமாக ஆதியின் பின்னால் சென்ற அபர்ணா, அவனின் கலக்கத்தைக் காண முடியாது பின்னிருந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

திடீரென அவள் அணைக்கவும், ஒரு கணம் திகைத்தவன், அடுத்த நொடியே அவளது கையைப் பற்றி முன்னால் இழுத்து அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

அவனின் இறுகிய அணைப்பில், அவனது தவிப்பை உணர்ந்து கொண்டவள்,

அவனது முதுகை ஆதூரமாக தடவி விட, மேலும் மேலும் அவனது அணைப்பு இறுகிக் கொண்டே போனது.

அவனது அணைப்பு வலித்தாலும், அபர்ணா தன்னவனுக்காக பொறுத்துக் கொண்டாள்.

ஒரு கட்டத்தில் அவனின் கண்ணீர் அவளின் தோளை நனைக்கவும்,

திடுக்கிட்டுப் போனவள், “என்னங்க…. என்னாச்சு…. ஆதி…. என்னது இது….” என கத்தியபடி, தன்னிடம் இருந்து அவனைப் பிரித்து எடுத்து,

“என்னங்க….” என மென்மையாக அழைத்து,

நுனிக் காலில் எம்பி நின்று, அவனின் முகத்தை கைகளில் தாங்கிப் பார்க்க,

அவனது கண்கள் கலங்கி இருந்தது கண்களில் பட்டது.

அந்த நொடி அவளது கண்களில் இருந்தும் கண்ணீர் உற்பத்தியாகி கன்னங்கள் வழியே வடிய,

அவளது கண்ணீரை, கீழே விழ விடாது தனது பெரு விரல்கள் கொண்டு தடுத்தவன், கண்ணீரை துடைத்து எறிந்து விட்டு,

அழவேண்டாம் என்பது போல, தலையை ஆட்ட,

அபர்ணாவோ, எம்பி அவனின் நெற்றியில் முத்தம் இட்டு,

பதிலுக்கு அவனது கண்களை துடைத்து விட்டாள்.

அதில் அவளது காதலுடன் கலந்த தாய்ப் பாசம் வெளிப் பட்டது.

அடிக்கடி சுட்டிக் குழந்தையாக இருப்பவள், இன்று தன்னவனுக்கு தாயாகிப் போனாள்.

அவளின் செய்கையில், அவனும் மென் புன்னகை புரிந்தான்.

அவளோ, அவனை பழைய நிலைக்கு கொண்டு வரும் பொருட்டு,

“எவ்வளவு நேரம் தான் காலை எம்பி எம்பி நிக்கிறது?, தூக்குங்க இல்ல நீங்க கொஞ்சம் குனிங்க.” என முறைத்துக் கொண்டு கூற,

“குள்ளக் கத்தரிக்காய்.” என கேலி செய்தபடி, அவளது மூக்கைப் பிடித்து ஆட்டி விட்டு,

அவளை அணைத்துத் தூக்கிக் கொண்டான் ஆதி.

தூக்கியவன் சிறு குழந்தை போல அவளை சுற்ற,

அவளோ, இரு கைகளையும் விரித்து, சிரிக்க ஆரம்பித்தாள்.

அந்த சிரிப்பில், ஆதியின் அகமும், முகமும் ஒருங்கே மலர்ந்து போனது.

அவளின் சிரிப்பில் தன்னையே மறந்து போனவன், அவளை இறக்கி இறுக அணைத்து, அவளது முகத்தை நிமிர்த்தி நெற்றியில் ஆழ்ந்த முத்தம் பதித்து விட்டு விலகியவன்,

என்ன நினைத்தானோ, பட்டென அவளை இழுத்து, அணைத்து வேகமாக அவளின் கன்னங்கள் இரண்டிலும், உதட்டிலும் ஆழ்ந்த முத்தம் பதித்தான்.

அவனது செய்கையில் முதலில் திகைத்துப் போனவள், இறுதியில் அவனின் செய்கைகளுக்கு விரும்பியே ஒத்துழைப்புக் கொடுத்தாள்.

அவனின் கை வளைவுக்குள், ஆசையாய் அடங்கிப் போனாள் பெண்ணவள்.

அவளின் மன மாற்றத்தை அவளது செய்கை மூலம் அறிந்து கொண்டவன்,

மேலும் தன்னவளை அணைத்துக் கொண்டு அவளில் முத்தப் பாடம் படிக்க ஆரம்பித்தான்.

ஆனால் ஆரம்பித்த அவனுக்கே, எங்கே முற்றுப்புள்ளி வைப்பது என புரியாது போனது.

அவனின் எல்லை மீறல் அதிகரிக்க,

அபர்ணா, அவனை சற்று எதிர்த்து தடுக்க ஆரம்பிக்க,

நடப்பதை அறிந்து கொண்டவன், சட்டென அவளில் இருந்து விலகி நின்று கொண்டான்.

அபர்ணாவோ, அவனது முகம் பார்க்க முடியாது, தலை குனிந்து நின்று மூச்சு வாங்க,

அவனும், தலையைக் கோதிக் கொண்டவன், குரலை செருமியபடி,

“சாரி…. சாரி…. ஏதோ கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டுட்டன். இனி மேல் இப்படி நடக்காது. முதல்ல நீ உன் படிப்பை முடி, அதுக்கு அப்புறம் பார்ப்பம். நமக்கு இன்னும் காலம் இருக்கு. ஆனா ஒண்ணு பொண்டாட்டி. இப்படி அடிக்கடி வந்து என்னை டெம்ப்ட் பண்ணாத. அதுக்கு அப்புறம் என் கண்ட்ரோல் என்கிட்ட இருக்காது. பிறகு நடக்கிற சேதாரத்துக்கு நான் பொறுப்பு இல்ல. புரியும்னு நினைக்கிறேன் என அவன் கூற,

அவனது பேச்சில், அபர்ணாக்கு கன்னங்கள் இரண்டும் தானாக சிவந்து போனது.

அவளின் அமைதியையும் கன்னச் சிவப்பையும், ஓரக் கண்ணால் பார்த்தவனுக்கும், மனதுக்குள் மத்தாப்பு வெடித்தது.

இங்கு ஒரு அழகான காதல் புரிதலுடன் ஆரம்பம் ஆனது.

இரவு உணவுக்கு என அனைவரும் உட்காரும் போதும், அபர்ணா தன்னவனுக்கு அருகில் சென்று அமர்ந்ததோடு, அவனையே ஓரக் கண்ணால் பார்த்தபடி உணவை உண்டு முடித்தாள்.

அவளுக்கு குறையாத காதல்ப் பார்வையை அவளை நோக்கி வீசியபடி உண்டு முடித்தான் ஆதி.

அவர்கள் இருவரும் தமது உலகத்தில் சஞ்சரிக்க,

மறு பக்கம், தமயந்தியின் புறம் திரும்பாது, அவளுக்கு நேர் எதிராக அமர்ந்து உண்டு முடித்து விட்டு கட கடவென எழுந்து சென்று விட்டான் தீரன்.

தமயந்தியோ, அவனது ஒற்றைப் பார்வைக்காக ஏங்கிப் போய், உண்ணாமல், உணவை வெறுமனே அளைந்தபடி அமர்ந்து இருந்தவள், அவன் போனதும் தானும் எழுந்து கை கழுவ சென்றாள்.

ஏற்கனவே, கை கழுவி விட்டு வந்தவன், அவளுக்கு இடம் கொடுக்காது, வழி மறித்தபடி நிற்க,

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “என்ன?” என்பது போல் புருவத்தை ஏற்றி இறக்க,

குரலை செருமிக் கொண்டவன்,

“சாப்பிடல போல…. போய் ஒழுங்கா சாப்பிட்டு முடி.” என அவளைப் பார்க்காது கூறியவன்,

அவள் நகராது நிற்கவும், கையைக் கட்டியபடி, அங்கேயே கதவு நிலையில் சாய்ந்தபடி நின்று கொண்டு இருந்தான்.

அவன் தான் உண்ணும் வரைக்கும் விட மாட்டான் என புரிந்து கொண்டவள், ஒரு பெரு மூச்சுடன் மீண்டும் உணவு மேசைக்கு செல்ல, அதற்குள் ஆதி மற்றும் அபர்ணா இருவரும் சாப்பிட்டு முடித்து எழுந்து ஒருவர் பின் ஒருவராக புன்னகை உடன் வந்து கொண்டு இருந்தனர்.

அவர்கள் சென்றதும், மீண்டும் தயங்கியபடி, தீரனைப் பார்க்க,

அவனோ, கண்களால் இருக்கையைக் காட்ட,

அமைதியாக அமர்ந்தவள், அதே உணவை உண்ண ஆரம்பிக்க,

பட்டென, அந்த தட்டை இழுத்து எடுத்தவன், வேறு தட்டு ஒன்றை வைத்து, அவளுக்கு பரிமாற,

அவனை ஏறிட்டுப் பார்த்தவளை,

தட்டைப் பார்க்கும் படி, சைகை செய்து விட்டு உணவைப் பரிமாறி முடித்தான்.

அதற்குப் பிறகும் போகாது அவளின் அருகே அமர்ந்து கொண்டவன்,

“சாப்பிடு….” என சற்று இறுகிய குரலில் கூறி விட்டு, போனைப் பார்க்க,

அவனுக்கு தன் மேல் அக்கறை இருக்கின்றது, அன்பு இருக்கின்றது, தான் உண்ணாததைக் கவனித்து இருக்கிறான் என எண்ணிக் கொண்டவள்,

கண்களில் ஆனந்த கண்ணீருடன், உணவை உண்ண ஆரம்பித்தாள்.

கை கழுவி முடித்து விட்டு வந்த ஆதியும், அபர்ணாவும், இருவரையும் பார்த்து விட்டு, அவர்களுக்குள் எல்லாம் ஓகே ஆகி விட்டதாக எண்ணிக் கொண்டு, ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டு சென்றனர்.

அவர்கள் போன பின்பு சற்று நேரத்தில் உண்டு முடித்தவள், தீரனைப் பார்க்க,

அப்போதும் அவளைப் பார்க்காது, போனைப் பார்த்தவன்,

“சாப்பிட சொன்னதும், ஏதோ பாசம்னு, காதல்னு நினைக்க வேண்டாம். எனக்கு உன்னோட ஆரோக்கியம் முக்கியம். என்னோட வைப் என்கிற ரீதியில எல்லாக் கடமையும் நான் உனக்கு சரியா செய்வன் அதுக்கு மேல என்கிட்ட காதல், ரொமான்ஸ் எல்லாம் எதிர் பார்க்க வேண்டாம்.” என அழுத்தமாக கூறியவன், எழுந்து செல்ல,

அவனது வார்த்தைகள் கொடுத்த வலியில் அப்படியே அவனை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்து இருந்தாள் தமயந்தி.

அவளுக்கு, உண்ட உணவு தொண்டைக்குள் சிக்கி இருப்பது போல உணர்வு.

ஒரு வாறு தன்னை சமன் செய்து கொண்டு, எழுந்து சென்றவளுக்கு, இன்னும் அவனின் மனதில் இடம் பிடிக்கலாம் எனும் நம்பிக்கை நிறையவே இருந்தது.

முயன்றால் முடியாதது என எதுவுமில்லையே.

நாம் அன்பை வாரி கொடுக்கும் போது, ஏதோ ஒரு கட்டத்தில், அந்த அன்பு சிறிதளவாவது திருப்பி கிடைக்கும் தானே. என எண்ணிக் கொண்டவள், அடுத்து என்ன வகையில் அவனை நெருங்கலாம் என பிளான் போட ஆரம்பித்தாள்.

அடுத்தடுத்த நாட்கள் தன் பாட்டில் ஓடிப் போக,

இரு ஜோடிகளின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் பெரிதாக இன்றி தெளிந்த நீரோடை போல சென்று கொண்டு இருந்தது.

ஆதி, அபர்ணா இருவரும் காதல் எனும் சுழலுக்குள் விரும்பி சுகமாக மூழ்கிப் போனதோடு ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளவும் ஆரம்பித்தனர்.

அவர்களின் புரிதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது.

மறு பக்கம், தமயந்தி தனது காதலுக்காக போராட ஆரம்பித்தாள்.

என்ன நடந்தாலும் பரவாயில்லை. ஒரு முடிவு கண்டு விடுவது என அவள் தீரனுடன் போராட,

அவனோ, அவளுக்கு மேலாக சென்று, அவளை விட்டு விலக ஆரம்பித்தான்.

இருவரும் தத்தமது பிடியில் பிடிவாதமாக நிற்க,

சில நிகழ்வுகள், தமயந்திக்கு சாதகமாகவும், சிலது தீரனுக்கு சாதகமாகவும் இடம்பெற,

இறுதியில், நடந்த ஒரு நிகழ்வின் மூலம், தீரன் தனது கோபத்தை வார்த்தைகள் மூலம் வெளிப் படுத்த,

அதன் மூலம், தமயந்தி எடுத்த முடிவு, அவளின் உயிருக்கே ஆபத்தாய் அமைந்து போனது.

அதே நேரம் அந்த நிகழ்வு தீரனுக்கும் அவளது உயிர்க் காதலை உணர வைத்தது.

அப்படி என்ன நிகழ்வு நடந்து இருக்கும்?

கோடீஸ்வரனை எப்படி தீரன், ஆதி இருவரும் எதிர் கொள்ளப் போகிறார்கள்?

அடுத்த எபி நாளைக்கு வரும் மக்காஸ் 😍😍😍

கதை சீக்கிரம் முடிஞ்சிடும்…. மக்காஸ். இன்னும் இரண்டு எபிகள் மட்டும் தான் இருக்கு..

படிக்காதவங்க படிக்க ஆரம்பிங்க மக்காஸ் 😍😍

மறக்காம படிச்சிட்டு கருத்து சொல்லுங்க மக்காஸ்.

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 46”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!