நிதர்சனக் கனவோ நீ! : 16

4.7
(49)

அத்தியாயம் – 16

அழைப்பை எடுத்துக் கொண்டு இருந்த ஜெய் ஆனந்த்தின் அலைபேசியில் அழைப்பு துண்டிக்கப்பட்டதன் அடையாளமாக ‘கீக்’ என்ற ஒலியின் சத்தம் தொடர்ச்சியாக கேட்டது.

என்னவோ இதயம் படு வேகமாக துடித்தது.

அவளுக்கு ஏதேனும் ஆபத்து வந்து விட்டதோ என்ற எண்ணம் அவனை  ஆட்கொள்ள, மீண்டும் அவளுக்கு அழைப்பை எடுத்தவனுக்கு அலைபேசியோ அணைத்து வைக்கப் பட்டு இருக்கின்றது என தானியக்கியின் குரல் ஒலிக்க, அவனது முகமோ வெளிறிப் போனது.

முகத்தில் குழப்பத்துடன் வெளியில் கிளம்ப தயாரானவனை  தடுத்து நிறுத்திய நவீன் “இப்போ எங்க போற?” என்று அவன் கேட்க…

“என்னவோ தியாவுக்கு எதுவும் நடக்க போற போல பீல் ஆகுது டா” என்றவனை புருவங்கள் உயர பார்த்தவன் “வீட்ல தானே இருப்பா. அப்புறம் என்ன ஆக போகுது?”

“ஐ ஜஸ்ட் வான்ட் டு கோ” என்றபடி முன்னேறி நடந்தவனை “உன்னை வீட்டை விட்டு அனுப்பி இருக்கான் உன் தம்பி. அவன் பொண்டாட்டிய நீ என்னனு சொல்லி பார்க்க போற? என்ற நவீனின் கேள்வியில் நிதர்சனம் நெற்றிப் பொட்டில் அறைந்த போல அப்போது தான் உரைத்தது.

உண்மை தானே! என்னவென்று சொல்வான்?

விழிகளை மூடித் திறந்தவன் நடைத் தடைப் பட, செய்வது அறியாது தோய்ந்துப் போய் இருக்கையில் அமர்ந்தான்.

அவனின் தோளில் கையை வைத்த நவீன் “ கூல் டா. வீட்ல தான் இருப்பா என்று சொன்னவன் நினைவு வந்தவனாய் வேணும்னா தியாவோட சிஸ் பவ்யாவுக்கு கால் ட்ரை பண்ணி பாரு” என்க…

“வேண்டாம் டா. ஐ ஹேவ் டு மூவ் ஒன். நான் இந்த பீல்ல இருந்து வெளில வரணும் சோ டுடே நைட் டியூட்டி பார்க்குறேன்”

 இத்தனைக்கும் வீட்டில் நடந்தவைகளை  அறியாதவன், ஒருவேளை தெரிந்து இருந்தால் அவளைக் காப்பாற்றி இருப்பானோ என்னவோ?

இன்னும் குழப்பம் தெளியா அவனின் முகத்தை பார்த்தவன் “அம் ரியலி சாரி டா. நான் உன்ன ஹர்ட் பண்ண அப்படி சொல்லல. மறுபடி நீ போனால் விபீஷன் என்ன வேணாலும் பேசுவான்” என்றவனிடம் “எனக்கு புரியுது நவீன்” என்றவன் இருக்கையை விட்டெழுந்து தனது கேபினுக்குள் நுழைந்துக் கொண்டான்.

அவனின் ஆழ் மனதின் எண்ணம் சரி என்பதைப் போல இங்கோ நிலமை தலைக் கீழாக மாறிக் கொண்டு இருந்தது.

முதல் முதல் தன் அன்னை அவளுக்கு ஆசையாக வாங்கிக் கொடுத்த அலைபேசி.

இப்போது அதுவே இல்லை என்று நினைக்கும் போது இயலாமையுடன் கூடிய ஆத்திரம் தான் வந்தது.

தனது சிதறிக் கிடந்த அலைபேசியை வெறித்துக் கொண்டே “எதுக்காக என் போனை உடைச்சீங்க?” என்று நிதானமாகக்  கேட்டாள்.

“நீ எதுக்காக பொய் சொன்ன?” என்று அவன் பதிலுக்கு கேட்க…

“எப்ப பாரு மாமாவை ஏதோ விரோதிய பார்க்குற போல நடத்துறீங்க. அப்போ உங்களை போல மிருகத்துகிட்ட எதுக்காக நான் உண்மையை சொல்லணும்?

“ஓஹோ”  என்றவன் பார்வை அவள் மார்பில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் கயிற்றில் படிந்து மீள, ஏதோ கூற வந்தவன் நிற்க முடியாமல் தள்ளாடிய படி அவள் மீதே சரிய, அவனது மொத்த உடலும் தன் மீது சரியவும் பதறிப் போனவள் அவனைப் பிடித்து தள்ளி விட முயன்றாள்.

ஆம், முயற்சி மாத்திரமே செய்ய முடிந்தது ஆனால் திடகாத்திரமான அவனின் உடலை கொஞ்சமும் அவளால் அசைக்க முடியாது போனது மட்டும் அல்லாமல் அவன் மேலடித்த மதுவின் நெடியில் குமட்டிக் கொண்டு வர “ச்ச்சீசீ அருவருப்பா இருக்கு” என்ற படி அவனை விலக்கி நிறுத்த முயன்று தோற்றுப் போனவள் முகத்தை பக்கவாட்டாக திருப்பிக் கொண்டாள்.

அவன் போதையில் இருந்தாலும் அவனது ஐம்புலன்களும் விழித்துக் கொண்டல்லவா இருந்தன.

அவளின் அருவருப்பு என்ற வார்த்தை காதில் ஒலிக்க, “இதே ஜெய் ஆனந்த் குடிச்சிட்டு உன்மேல விழுந்தா கட்டி பிடிச்சிட்டு இருந்துருப்பல” என்றான்.

அவனின் நாராசம் மிகுந்த பேச்சு  எரிச்சலை கொடுக்க, “ஜெய் மாமா குடிக்க மாட்டார். ஹி இஸ் அ பியோர் சோல்” என்றாள் கர்வமாக…

அவ் வார்த்தைகளை சொல்லும் போதே அவளின் உடல் மொழியும் விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்றை அவள் உணர்ந்தாளோ இல்லையோ அவளை பார்த்துக் கொண்டு நின்று இருந்தவனுக்கு சட்டென புரிந்து போக ஆத்திரமோ தலைக்கு ஏறியது.

“அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுற… ஒரு…ஒருவேளை அவன் கூட படுத்….” என்றவனின் வார்த்தைகள் முடிக்கும் முன்னரே அவனை ஓங்கி அறைந்து இருந்தாள் பெண்ணவள்.

இதனை சற்றும் எதிர்ப் பார்க்கவில்லை அவன்.

“என்ன அறையிற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா?” என்றவன் அவளின் இடையைப் பற்றி தன்னை நோக்கி இழுத்திருந்தான்.

அவனது கை தன் இடையில் தவழ்வதை உணர்ந்து பரிதவித்து போனவள் அவனிடம் இருந்து திமிறி விலகப் போராட, “உன்ன சும்மா விட்டு வச்சா தானே. நானும் சின்ன பொண்ணுன்னு பார்த்தால் ஓவரா தான் போற” என்று சொல்லிக் கொண்டே வலுக்கட்டாயமாக அவளின் கன்னங்களை அழுத்தமாக தாங்கிப் பிடித்தான்.

அவளுக்கோ, விழிகளில் இருந்து கண்ணீர் உடைப்பெடுத்தது கன்னத்தை நனைத்தது.

அவளது கன்னங்களை தாங்கி கொண்டவனின் மனமோ, தான் மாபெரும் தவறு செய்வதாக உறுத்தியது.

என்ன தான் இருந்தாலும் தன் அண்ணன் காதலிக்கும் பெண்.

அவள் அவனைக் காதலிக்கா விட்டாலும் மனதளவில் அவளின் எண்ணங்களில் வாழும் ஜெய் ஆனந்தின் முகமோ சட்டென நினைவில் வந்து போனது.

அவனுக்கே அதிர்ச்சியாக இருந்தது.

அவளின் இதழ்களில் முத்தம் பதிக்க கன்னங்களை பற்றி இருந்தவன் கரங்கள் நடுங்கின.

விழிகளை மூடித் திறந்து அவளிடம் இருந்து விலகப் போக, அவனது மனநிலை அறியாத பெண்ணவளோ எங்கே தன்னை ஆட்கொண்டு விடுவானோ என அஞ்சியவளாய் “எ..என..எனக்கு டைம் வேணும் விபீஷன்”  என்று தட்டுத் தடுமாறி அவள் வார்த்தைகளைக் கோர்த்து சொல்ல…

“என் கண் முன்னால நிற்காத போடி” என்று கர்ஜித்தான்.

அவன் உதிர்த்த வார்த்தைகள் தன் செவிகளில் தேன் போல பாய, விட்டால் போதுமென விலகியவளின் துப்பட்டா கதவின் இடுக்கில் மாட்டியதன் விளைவாக கழண்டு கீழே விழ…

பதறிப் போய் திரும்பியவள் அவனை அறைய கை ஓங்கியே விட்டாள்.

ஆனால், இம்முறை அவளை அறைய விடாமல் அவளின் கையைப் பற்றி பிடித்துக் கொண்டவன் அவளின் கன்னத்தை திருப்பி கதவின் இடுக்கில் சிக்கி இருந்த அவளது துப்பட்டாவை பார்க்கச் செய்தான்.

 விழிகள் விரிய குற்ற உணர்ச்சியில் திரும்பி அவனைப் பார்த்தாள்.

அவனின் பார்வையோ அவளது கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் கயிற்றில் படிந்திருக்க, எச்சிலைக் கூட்டி விழுங்கியவள் “சாரி” என்ற அடுத்த கணம் அவளது   இதழ்களை வன்மையாக சிறை செய்து இருந்தான்.

தவறு என்று விலகி சென்றவன் தான் கட்டிய தாலி அவளின் கழுத்தில் உறவாடிக் கொண்டு இருக்கும் போது நான் எதற்காக அதுவும் அவனுக்காக பார்க்க வேண்டும்? என்று சிந்தித்தவன் போதையில் மொத்தமாக தன் நிதானத்தை இழந்து இருந்தான்.

அவனது மார்பில் தன் கையை வைத்து முடிந்தமட்டில் அவனை விலக்க போராடி தோற்றவள் விழிகளில் கண்ணீர் வழிய, அதைக் கூட பொருட்படுத்தாமல் மூச்சு முட்டும் அளவுக்கு வன்மையாகவும் அழுத்தமாகவும் இதழை பாரபட்சம் இன்றி சுவைக்க, அவள் தான் உயிருடன் மரித்து இருந்தாள்.

தன் மனநிலை அறிந்தே இவ்வாறு நடந்து கொள்பவன் மேல் வெறுப்பு மேலோங்கியது.

அடக்கிக் கொண்டாள்.

அவளின் இதழ்களில் ஆழ்ந்து போனவன் முதன் முறை ஒரு பெண்ணின் இதழின் மென்மையை அறிந்து சித்தம் திணறிப் போனான்.

ஒரு கட்டத்தில் அவளின் உடையில் கரத்தை வைத்ததும் உடலில் நடுக்கம் பரவ,  அவனது கரத்தை முன்னேற விடாமல் பற்றிப் பிடித்துக் கொண்டாள்.

அவள் தடுத்ததும்  அவளின் இதழை விடுவித்து விட்டு  அவள் விழிகளைப் பார்த்தான்.

விழிகள் சிவந்து, கண்ணீர் வழிய தன்னை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவள் இதழ்களில் வழிந்த உதிரத்தை துடைத்து விட்டவன் “என்னடி அப்படி பார்க்குற? நான் உன் புருஷன் தானே” என்று கேட்டவனை பார்த்து “இதோட நிறுத்துங்க பிளீஸ் என்னால முடியாது” என்று காலில் விழாத குறையாக கெஞ்சினாள்.

“சாரி, எனக்கு இப்போ நீ வேணும்” என்றானே பார்க்கலாம்.

தன் கரங்கள் இரண்டையும் கூப்பி “இப்போ வேண்டாம் விபீஷன்” என்றாள் மன்றாடும் குரலில்…

அவன் கேட்கும் மனநிலையில் இல்லை.

அவளை நெருங்கினான்.

அவளோ, பயத்தில் பின்னோக்கி நகர்ந்தாள்.

“வேண்… வேண்டாம் விபீ..” என்றாள் குரல் உடைய…

“சோ சேட்…” என்றவன் அவளை அப்படியே கைகளில் ஏந்திக் கொள்ள திமிறியவளை கணக்கில் கொள்ளாமல் தன் அறைக்குள் நுழைந்து கதவை காலால் உதைத்து சாற்றினான்.

இயலாமையில் விம்மி வெடித்து அழுதவள் மானசீகமாக கடவுளை வணங்கினாள்.

உள்ளே வந்த வேகத்தில் அவளுடன் கட்டிலில் சரிந்தவன்  பார்வை மொத்தமும் மஞ்சள் கயிற்றில் படிந்து பின் அவளின் முகத்தில் படிந்தது.

அவளுக்கோ அவனின் நெருக்கம் கசந்து போனது.

கணவனாகத் தெரிய வேண்டியவன் கயவன் போல தெரிந்தான்.

தன் ஒட்டு மொத்த பலத்தை திரட்டி எழ போனவளை, எழ விடாமல் பற்றிப் பிடித்தவன் “என்ன நான் தொட்டா பிடிக்கலையா? இல்ல உன் ஜெய் மாமாமாமா….” வந்து தொடனுமா?” என்று அவன் கேட்கும் போதே உடல் கூசிப் போனவள் அவனிடம் போராடுவதை நிறுத்திக் கொண்டாள் பெண்ணவள்.

தன் போராட்டமும் கெஞ்சல்களும் அவனிடம் எடுபட போவதில்லை என தெள்ளத் தெளிவாகப் புரிந்துப் போக, இனியும் போராடி அவன் பேசும் முறைக் கேடான வார்த்தைகளை கேட்பதை விட இந்த கொடூரனிடம் தன் கற்பை இழப்பதே மேல் என்று எண்ணிக் கொண்டவள் அவனின் தொடுகையில் மரக்கட்டை போல கிடந்தாள்.

தன் விதியை எண்ணி  கண்ணீர் வடித்தவள் அவனின் ஒவ்வொரு தொடுகைக்கும் அருவருத்துப் போனாள்.

அவளின் விழிகளை பார்த்துக் கொண்டே அவளுள் மொத்தமாக சரணடைந்தவன் உயிர் போகும் வலியில் விலகத் துடித்தவளின் இதழ்களை தன் இதழ்களால் முற்றுகையிட்டவன்   ஆட்கொண்டுவிட்டே விலகி படுத்தான்.

அவனின் வன்மை மென்மையான பெண்மையை கசக்கியிருந்தது.

இத்தனைக்கும் மனைவியாக இருந்தாலுமே அவளின் சம்மதம் இன்றி  நெருங்கக் கூடாது என்பதை அவனின் சிந்தை மொத்தமாக மறக்கடித்து இருந்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 49

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “நிதர்சனக் கனவோ நீ! : 16”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!