வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 19

4.8
(22)

வாழ்வு : 19

தீஷிதன் அங்கிருந்து சென்ற பின்னர் அங்கேயே நின்றிருந்த பரந்தாமன் தனது கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு, அந்த இருள் நிறைந்த வானத்தைப் பார்த்தவாறு நின்றார். அறைக்கு வந்த தீக்ஷிதன் ஃப்ரெஷாகிவிட்டு வந்து போனை எடுத்தான். மறுபக்கம் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்த புகழ், தீஷிதனின் போன் காலில் பதறிப்போய் எழுந்தான். 

“ஹலோ தீஷி ஆர் யூ ஓகே?”என்று கேட்க, தீஷிதனோ, “புகழ் நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்..”

“சொல்லு தீஷி..”

“எனக்கும் சம்யுக்தாவிற்கும் இன்னும் ஐந்து நாள்ல கல்யாணம்..” என்று சொல்ல அந்தப் பக்கம் இருந்த புகழ் காதில் வைத்திருந்த போனை எடுத்துப் பார்த்தான். பின் மீண்டும் போனை காதில் வைத்து விட்டு, “ஏன் தீஷி நீயா பேசுற? ஆமா கனவு ஏதும் கண்டாயா?”

“இப்போ நான் வந்து உன்னை போட்டு அடிக்குறதுல உனக்கு கனவா நினைவானு தெரியும்.. எப்படி வசதி?” என்று அவனை மிரட்ட, புகழ் சிரித்துக் கொண்டு, “இல்லடா இந்த நைட் டைம்ல நீ எதுக்கு கஷ்டப்படணும்? நான் நீ சொல்றதை நம்புறேன்.. இப்போ நான் என்ன பண்ணணும்?” எனக் கேட்டான். 

அதற்கு தீஷிதன் புகழ் செய்ய வேண்டியதைக் கூற, “சிறப்பா பண்ணிடலாம் மச்சான்… நான் இப்பவே அதற்கான வேலையைப் பார்க்கிறேன்…”

“டேய் இப்போ தூங்கு காலையில வேலையை ஆரம்பிச்சா போதும்..” என்று சொல்லிவிட்டு மேலும் சில விஷயங்களை பேசி விட்டு போனை வைத்தான். 

புகழுடன் பேசிவிட்டு திஷிதன் தனது போனில் வித்யாவிற்கு அழைத்தான். லீலாவதி மீது கோபத்திலிருந்து வித்தியா என்ன செய்வது என்று தெரியாமல் கட்டிலில் படுத்துக் கொண்டு புரண்டு புரண்டு இருந்தாள். அந்த நேரத்தில் புது எண்ணில் இருந்து கால் வர இந்த நேரத்துல யாரா இருக்கும் என்று எண்ணியவர், போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தாள். 

“ஹலோ யார் பேசுறது?” என்றாள் வித்யா. மறுபக்கம் இருந்த தீக்ஷிதன், “நான் தீஷிதன் பேசுறன் மதுராவோட அண்ணன்..” என்று சொன்னதைக் கேட்ட வித்யா எழுந்து அமர்ந்தாள். “என்ன மதுவோட அண்ணனா? மதுவுக்கு என்ன ஆச்சு? ஏன் இந்த நேரத்தில் கால் பண்ணி இருக்கீங்க?” என்று அவனிடம் பதற்றத்துடன் கேட்டாள். தன் தங்கை மீது இவள் வைத்திருக்கும் உண்மையான நட்பினை பார்த்தவன் அவளிடம், “இங்க பாரு வித்யா மதுவுக்கு ஒன்னும் இல்ல.. ஆனா உன்கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. அதுக்கு தான் இப்ப கால் பண்ணினேன்..”

“என்கிட்ட முக்கியமான விஷயமா? சொல்லுங்க என்ன விஷயம்?”

“இங்க பாரு நான் டைரக்ட்டாவே விஷயத்துக்கு வந்திடுறன்.. நீ தேடிக்கிட்டு இருக்க உன்னோட அக்கா சம்யுக்தா இப்ப எங்க வீட்ல தான் இருக்கா..” என்றான். 

இதை கேட்டது வித்யா தான் கனவு காண்கின்றோமா என்ற எண்ணத்தில் தன் கையை ஒருமுறை கிள்ளிப் பார்த்தாள். அவளுக்கு வலித்ததில் ஆவென்று கத்த மறுபக்கம் லைனில் இருந்த தீக்ஷிதன், “என்ன ஆச்சு வித்யா?” என்றான். 

“ஒன்னும் இல்ல.. ஆமா நீங்க சொல்றது நிஜமா? எங்க அக்கா நல்லா இருக்கா இல்ல? ஆனா மது கூட என்கிட்ட அதை பத்தி சொல்லலையா.. மதுவுக்கு உன்னோட அக்காவ தெரியாதுல்ல.. அதனால தான் அவ சொல்லல.. நான் இப்போ உனக்கு எதுக்கு கால் பண்ணினேன்னா உன் அக்காவுக்கும் எனக்கும் அஞ்சு நாள்ல கல்யாணம்.. நீ இங்க வந்துடுறியா?”

“என்ன சார் சொல்றீங்க? திடீர்னு இப்படி ஷாக் நியூஸ் சொன்னா நான் எப்படி தாங்கிக்கிறது? என் அக்கா நல்லா இருக்கா இல்ல?”

“உங்க அக்கா நல்லா இருக்கிறா.. அதனால தான் எனக்கு அவங்களுக்கும் கல்யாணம்..”

“சார் எங்க வீட்டையும் பிரச்சனை நான் அக்காவை பார்க்க வாரது ரொம்ப கஷ்டம்னு நினைக்கிறேன்.. எங்க அம்மா என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்ப மாட்டாங்க.. என்னை நாளைக்கு பொண்ணு பாக்க வர்றதா சொல்லி இருக்காங்க..”

“ஓ அப்டியா உன்னோட நிச்சயதார்த்தத்தை முடிச்சிட்டு நீ அதுக்கப்புறம் வரலாமே வித்யா..”

“நோ நோ என் அக்காவோட வாழ்க்கையை அழிச்ச மாதிரி என்னையும் ஏதோ ஒரு பணக்கார இடத்துல கட்டி வைக்க பாக்குறாங்க.. பட் எனக்கு இதுல கொஞ்சம் கூட விருப்பம் இல்ல.. எனக்கு என் அக்கா கூட இருக்கணும் சார்.. ப்ளீஸ் ஏதாச்சும் ஹெல்ப் பண்ணுங்க..” என்று அவளுக்கு கிடைத்த ஒரு துருப்புச் சீட்டாக தீஷிதனை நினைத்து அவனிடம் உதவி கேட்டாள். 

அவனிடம் தன்னை வீட்டில் இருந்து எப்படியாவது அவள் அக்கா இருக்கும் இடத்திற்கு கூட்டிச் செல்லுமாறு கெஞ்சினாள். அவ்வளவு கெஞ்சலைக் கேட்ட தீஷிதன், “சரி வித்யா நீ காலையில நேரத்துக்கு வந்து வீட்டுக்கு வெளியில நில்லு.. அங்க ஒரு கார் இருக்கும்.. அந்த காரோட நம்பர் நான் உனக்கு அனுப்பறேன்.. அப்புறம் அந்த கார்ல ஏறி இங்க வந்துடு.. அடுத்தது அந்த வீட்டிலிருந்து நீ எதுவுமே எடுத்துட்டு வரக்கூடாது சரியா?”

“ரொம்ப நன்றி சார்.. நான் காலையில வந்துடறேன்.. என் அக்காவை நான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன் ரொம்ப சந்தோசம் நான் வர்றது அக்கா கிட்ட சொல்ல வேண்டாம்.. அவளுக்கு ஒரு சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும்..”

“ஓகே வித்யா பத்திரம்.. ஏதாச்சும் அவசரம் ஆபத்துனா எனக்கு கால் பண்ணு..” என்றான். 

“சரிங்க சார் ரொம்ப நன்றி..” என்று போனை வைத்தாள் வித்யா. இப்போதுதான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. ஒரு பக்கம் தனது அன்பான சம்யுக்தா அக்கா கிடைத்துவிட்டாள். மறுபக்கமும் இந்த பிடிக்காத திருமணத்திலிருந்து தப்பித்து விடலாம். என்று அவள் மகிழ்ச்சியோடு இருந்தாள்.

எல்லா விஷயங்களையும் பேசி முடித்த தீஷிதன் சம்யுக்தாவைப் பார்ப்பதற்காக அவள் அறைக்குள் வந்தான். அங்கே பச்சிளம் குழந்தை போல தூங்கிக் கொண்டிருந்தாள் சம்யுக்தா. அவளருகே வந்து நின்றவன் வெற்றியில் விழுந்த கூந்தலை தனது ஒரு கையால் மெல்ல அவள் எழும்பாதவாறு எடுத்துவிட்டான். கள்ளம் கபடம் இல்லாத அவள் முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன், “யுக்தா உனக்கு எந்தப் பிரச்சினையும் வராது.. அப்படி ஏதாவது ஒரு பிரச்சனை வரணும்னா அது என்னைத் தாண்டித் தான் வரும்.. கவலைப்படாதே உனக்கு நீ வாழாத வாழ்க்கை எல்லாம் நம்மளோட கல்யாணத்துக்கு அப்புறம் வாழ போற..” என்று அவளுடன் பேசியவன் சிறிது நேரம் அவள் முகத்தை பார்த்து விட்டு எழுந்து சென்றான். 

அடுத்த நாள் அதிகாலையிலே எழுந்து தயாரானாள் வித்யா. எப்போது தீஷிதனிடமிருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளை வெகு நேரம் காத்திருக்க விடாமல் கால் பண்ணினான் தீஷிதன். உடனே போனை எடுத்து பேசினாள் வித்யா. 

“வித்யா நீ ரெடியா?”

“ரெடியாயிட்டேன் சார்..”

“சரி ****இதுதான் கார் நம்பர்.. உங்க வீட்டுக்கு வெளியே நின்னுட்டு இருக்கு.. ட்ரைவர் ரொம்ப நம்பிக்கையானவரு அதனால பயப்படாம வா..” என்றான். 

“சரிங்க சார்..” என்றவள், வீட்டை விட்டு வெளியே வந்து காரில் ஏறினாள். அவள் ஏறியதும் ஜெட் வேகத்தில் கார் கிளம்பியது. 

இங்கே தீஷிதன் வீட்டில் காலையில் இருந்து வேலையாட்கள் பம்பரமாக வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். தீஷிதன் ஜாக்கிங் சென்று விட்டு வர, ஹாலில் காப்பி குடித்துக் கொண்டு இருந்த பரந்தாமன், தீஷிதனை அழைத்தார். 

“சொல்லுங்க டாட்..” என்றவாறு அவர் அருகில் வந்து அமர்ந்தன். 

“தீஷி காலையில இருந்து இவங்க இப்பிடி வேலை பார்க்கிறாங்க கேட்டா நீ ரூம் அரேஞ்ச் பண்ண சொன்னனு சொல்றாங்க… அதுமட்டும் இல்ல சாப்பாடு வேற ரொம்ப ஸ்பெஷலா ரெடி பண்ண சொல்லியிருக்க… ஆமா நம்ம வீட்டுக்கு யாரு வர்றாங்க? உன்னோட ப்ரெண்ட்ஸ் யாரும் வர்றாங்களா என்ன?” என்று கேட்டவரைப் பார்த்து சிரித்தவன், “கூல் டாட்.. வர்றவங்க இங்க இருக்கிறவங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல்.. அதனாலதான் இந்த ஏற்பாடு..”

“அப்படி யாரு தீஷி?”

“வெயிட் டாட்.. இப்பவே சொல்லிட்டா அதுல என்ன இருக்கு? வெயிட் பண்ணி அவங்க வந்ததும் நீங்களே பாருங்க..” என்றவன் அங்கிருந்து எழுந்து சென்றான். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!