நாணலே நாணமேனடி – 01

மூடுபனி படர்ந்த இளங்காலைப் பொழுதில் நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு சற்று நேரகாலத்துடன் வீட்டினுள் நுழைந்தான், யதுநந்தன். கூடத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து ஆங்கிலப் பத்திரிகையைக் கண்ணாடியின் உபயோகமின்றி புரட்டிக் கொண்டிருந்தவரை கண்டும் காணாத பாவனையில் வேக நடையிட்டு அறை நோக்கி நடந்தவனை, “நந்தா!” என அழைத்து நிறுத்தினார், கிருஷ்ணமூர்த்தி. “ப்ச்!” என வெளிப்படையாகவே சலித்துக் கொண்டவனுக்கு, ‘இவரிடம் பேச்சுக் கொடுத்து, இன்றைக்கும், காலையிலேயே என் மூடைக் கெடுத்துக் கொள்ள வேண்டுமா?’ என்ற கடுப்பு எழாவிட்டால் தான் அதிசயம்! […]

நாணலே நாணமேனடி – 01 Read More »