துஷ்யந்த மாறன்

இதழ் – 4

இதழ் – 04 அவளின் தேகமோ இலேசான குளிரை உணரத் தொடங்கியது. ஏதோ ஓர் மெதுமையான பஞ்சின் மேலே இருப்பதைப் போல உணர்ந்தவள் தன் கண்களை மெல்லத் திறந்து கொண்டாள். நன்கு தூங்கி விழித்ததைப் போல தேகமோ இறகைப் போல இருக்க கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தவள் சுற்றிப் பார்க்கையில் அந்த இடமோ அவளுக்கு புதிதாக இருந்தது. நன்கு பரந்த விசாலமான பரப்பைக் கொண்ட அந்த அறையில் ஓர் உயர் தரப் பஞ்சு மெத்தையின் மீது தான் […]

இதழ் – 4 Read More »

இதழ் – 3

இதழ் – 03 கண்கள் சிவக்க முகமோ வீக்கத்துடனும் எப்போதும் சோர்வோடும் வெறுப்பை வெளிக்காட்டும் வகையிலேயே தன்னைப் பார்த்து பழகிய அதிரனுக்கு இன்றோ தான் வேறு வகையாக தெரிவதைப் போல தோன்றியது. இலேசாக அவனது வதனத்தில் தோன்றிய சிரிப்பானது அவனின் மனநிலையை சற்று மாற்றி சிந்திக்க வைத்தது.   சிறிது நேரத்திலேயே அவனது வேதனை குறைவடைந்ததையும் தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தையும் உணர்ந்தவனுக்கு அந்நேரம் அந்த மருத்துவர் கூறியதே ஞாபகத்தில் வந்தது. ‘கொஞ்சமாவது சிரிங்க சார் அப்போதான் உங்களோட

இதழ் – 3 Read More »

இதழ் – 2

அத்தியாயம் – 02 கண்ணாடிக் குவளைக்குள் இருப்பதைப் போல அவனது வீட்டின் மேல் தட்டு முழுவதும் அமைக்கப்பட்டிருந்தது. அதனுள் பல நிற விளக்குகள் எறிந்துக் கொண்டிருக்க வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு நட்சத்திர ஹோட்டல் போல காட்சியளிக்கக் கூடியது அதிரனின் வீடு… அதிரனோ தன் சிறுவயதிலேயே தாயை இழந்தவன். அவனது தாய் தந்தையினைப் பிரிந்து வேறொரு திருமணம் செய்து கொண்டார். மேலும் தந்தையோ தாயைப் பிரிந்து சில நாட்களிளேயே அதிரனையும் உலகையும் விட்டுப் பிரிந்தார். அன்றிலிருந்து தனிமையில் இருந்த

இதழ் – 2 Read More »

இதழ் தீண்டா பதுமையே – 1

அத்தியாயம் – 01 பல அடுக்குமாடிகளைக் கொண்ட இடமானது மக்கள் கூட்டத்தில் நிரம்பிக் காணப்பட்டது. அங்குள்ளவர்களின் தோற்றமே கூறியது அவர்களின் நிலமையை.. அது சாதாரண மக்கள் வந்து செல்லக் கூடிய இடம் இல்லை ஏனெனில் அங்கு ஒரு முறை வந்தாலே போதும் அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து இலட்சக் கணக்கில் பணம் காலியாகும். ஆம் அந்த நகரத்தின் உயர்தர வசதிகளைக் கொண்ட தனியார் மருத்துவமனையே அது. அவ்வாறான இடத்தில் கையில் ஓர் பேப்பர் வெயிட்டை வைத்து அங்குமிங்குமாக உருட்டியப்படி

இதழ் தீண்டா பதுமையே – 1 Read More »

மைவிழி – 24

அவளோ அழுது முடித்து தன்னைத் தானே தேற்றிக் கொண்டவள் அவனை எப்படியாவது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முடிவில் இருந்தாள். “ஹாஸ்பிடல் போகலாம் தீரா ப்ளீஸ்.” “ப்ச் வேணாம்னு சொன்னா கேளு.” என உறுமியவன் எழுந்து செல்ல அவனைப் பின்னால் சென்று அணைத்துக் கொண்டவள் கண்ணீரோடு அவனுடைய முதுகில் முகம் புதைத்தாள். “எனக்காக வாங்க தீரா. நீங்க என்னைக் காதலிக்கிறது உண்மையா இருந்தா வாங்க.” என அழுகையோடு கூற, அவளுடைய கண்ணீரை காண முடியாது விழிகளை

மைவிழி – 24 Read More »

மைவிழி – 23

தன் மேல் கொலைவெறியில் இருந்த மைவிழியோ திடீரென அவனை அணைத்து காதல் சொல்லி முத்தமிடவும் அவனோ திகைத்துப் போனான். அவளிடம் இருந்து விடுபட முயன்றவனின் தாடி அடர்ந்த கன்னங்களைப் பற்றிக் கொண்டவள் “எங்க போறீங்க.?” எனக் கேட்டாள். “உனக்கு என்ன ஆச்சு.?” “ஒன்னும் ஆகலையே.” என்றவளின் இதழ்களை குனிந்து முத்தம் இட்டான் அவன். அவன் தொட்டாலே வெறுத்து ஒதுக்குபவள் இன்று அவனுடைய கழுத்தை வளைத்து அவளும் முத்தமிட அவனோ கிறங்கிப் போனான். “அம்மு.” என கிறங்கியவன், அவளுடைய

மைவிழி – 23 Read More »

மைவிழி – 22

தன் பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களையும் மைவிழிக்கு மாற்றி எழுத நினைத்த தீரன் அதற்கு சாட்சியாக தன்னைப் பற்றி அனைத்தும் அறிந்த நண்பன் அருணைத்தான் தேர்ந்தெடுத்தான். பத்திரங்களில் கையொப்பம் வைப்பதற்கான இறுதி நாள் என்பதால் லாயர் தீரனுக்கு கால் செய்தும் அதை எடுக்காததால் அவனது வீட்டிற்கே அஷ்வினை அனுப்பி வைத்தார். அப்போது இதற்கு சாட்சியாக உள்ள அருணையும் தீரன் வீட்டுக்கு சென்று கையொப்பம் வைக்கும் படி கூற அருணும் தீரன் வீட்டுக்கு வந்தான். அவன் வரும் வழியில்

மைவிழி – 22 Read More »

மைவிழி – 21

தீரனுடைய செயல் அவளை ஸ்தம்பிக்கச் செய்தது. “என்ன சார் இது எதுக்காக என்னோட பேர்ல அவரோட சொத்து எல்லாத்தையும் எழுதி வைச்சிருக்கீங்க..?, யார் இப்படி பண்ணச் சொன்னது.? இது தீரனுக்கு தெரியுமா.” என அதிர்ச்சியுடன் கேட்டாள். “என்ன மேடம் சொல்றீங்க அப்படின்னா உங்களுக்கு  எதுவும் தெரியாதா…? தீரன் சாரோட சொத்து எல்லாத்தையும் உங்க பேருக்கு எப்பவோ எழுதி வெச்சிட்டாரு, இன்னைக்கு அவரும் சாட்சிக்கு இன்னொருத்தரும் சைன் வெச்சா எல்லாம் உங்க பேருக்கு  மாறிடும்.” என்றான் அவன். அவளுக்கோ

மைவிழி – 21 Read More »

மைவிழி – 20

பால்கனியில் வந்து நின்ற ருத்ரதீரனின் விழிகளோ சிவந்து போய் இருந்தன. தான் உயிருக்கு உயிராக நேசித்த தேவதைப் பெண்ணை இப்படி வருத்துகின்றோமே என எண்ணி கலங்கித் தவித்தான் அவன். “சாரி அம்மு… சாரிடி.. எனக்கு வேற வழி தெரியல அம்மு.” என்றவனின் விழிகள் கலங்கின. ‘இன்னும் கொஞ்ச மாசத்துல சாகப் போற நான் உனக்கு வேணாம் அம்மு.’ என்றவன் அன்று நடந்த சம்பவத்தை எண்ணிப் பார்த்தான். படம் முடிவடைவதற்கு சில நாட்களுக்கு முன் ஷூட்டிங்கில் இருந்தவன்  சற்றே

மைவிழி – 20 Read More »

மைவிழி – 19

யாரை இனி தேவை இல்லை எனக் கூறி அனுப்பி வைத்தானோ அவளையே மீண்டும் தன் வீட்டிற்குள் கட்டாயப்படுத்தி அழைத்து வந்திருந்தான் ருத்ரதீரன். மாற்றம் ஒன்று தானே மாறாதது. அவள் இன்றி ஒரு இரவை சிரமப்பட்டு கடந்தவனுக்கு அவளை இன்னொரு ஆணுடன் நெருக்கமாக பார்க்கும் திடம் சற்றும் இல்லாது போனது. வீட்டினுள் வந்தவளோ சீற்றத்தில் வெடித்து அழத் தொடங்கினாள். “நீங்க ஆசைப் பட்டதுதான் நடந்திருச்சுல்ல.? அப்புறம் எதுக்காக என்னை திரும்ப கூட்டிட்டு வந்தீங்க.? உங்க படம் எடுத்தாச்சு. அதுவும்

மைவிழி – 19 Read More »

error: Content is protected !!