செங்கோதை மணம்

அத்தியாயம் 17

இறுகி முகத்துடன் வீட்டை வந்தடைந்து இருந்தான் இன்னுழவன். வீட்டுக்குள் அவன் பிரவேசிக்க, கல்யாணத்திற்காக தயாராகி அனைவரும் ரெடியாக அமர்ந்திருந்தனர். எல்லாவற்றிற்கும் மேல் சக்திவேல் மிகவும் ஆர்வமாக அமர்ந்திருந்தார். “இன்னு சீக்கிரமா கிளம்பி வாப்பா முகூர்த்தத்துக்கு டைம் ஆச்சு இல்ல” என கோதாவரி கையில் தாம்பூலத்துடனும் பட்டு சேலை சகிதம் வந்து நின்றார். “அடியேய் ஏஞ்சல் என் நிலைமைய பார்த்தியா என் தலைமைல உனக்கு வேற ஒருத்தனோட கல்யாணம். இதுக்கு நான் மூச்ச கொடுத்து என் நைனாகிட்ட கட்டளை […]

அத்தியாயம் 17 Read More »

அத்தியாயம் 16

காலைப்பொழுது விடிய ஆதவன் அவன் வேலையை செவ்வன செய்து கொண்டிருக்க, வழமை போல் காலை நேர ஓட்ட பயிற்சியினை முடித்துவிட்டு தனது அலைபேசியை காற்றலையில் இணைத்து அதனுடன் செவி மடலில் காதொலிப்பானுடன் இணைத்து இருந்தான் இன்னுழவன். உடையவள் குரல் இன்று அவன் செவிகளில் எட்டப் போவதில்லை என்று ஏற்கனவே யூகித்தவன், இருந்தாலும் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் காற்றலையில் சிந்தையை செலுத்தினான். கவனம் செவிமடலில் ஒலிக்க இருக்கும் சப்த குரலில் இருந்தாலும், விழிகளோ தொடுதிரையில் முன்தினம் உடையவள்

அத்தியாயம் 16 Read More »

அத்தியாயம் 15

“வாடா வீட்டுல பஞ்சாயத்து” என வீட்டை அடைந்திருந்தனர் இன்னுழவன் அகரனும். இன்னுழவன் வீட்டிற்குள் நுழைய அவன் பின் அகரன் நுழைய.. வீட்டு நடுக்கூடத்தில் சக்திவேல் மற்றும் தங்கமணி அவரின் கணவன் ராஜசேகர் அமர்ந்திருக்க, வீங்கிய கன்னங்களுடன் விழிகளில் நீருடன் நின்று கொண்டிருந்தாள் நந்தனா. நந்தனாவின் விழிகளோ முதலில் வந்த இன்னுழவனைத் தாண்டி பின்னால் வந்த அகரனின் மீது படிந்தது ஏக்கமாய். அகரனும் அவளை தான் பார்த்தான் விழி அதிர்வுடன். தன்னவள் கலங்கிய விழி கண்டு உள்ளமது பதைபதைத்தாலும்

அத்தியாயம் 15 Read More »

அத்தியாயம் 14

அவள் பேச… அவன் இரசிக்க… குறுக்கே கரடியாய் அழைதிருந்தார் மைதிலி அவளை போனின் வாயிலாக. அவ்வளவு நேரம் இன்னுழவனுடன் புதிதாய் பூத்த மலராய் பேசிக் கொண்டிருந்தவள் முகமது அலைபேசியின் திரையை பார்த்தவுடன் சுருங்கியது. முகம் மட்டும் சுருங்கவில்லை குரலும் தளர்ந்தது. அனைத்தையும் மறந்து பேசியவள் மனமும் விழிகளும் வெறுமையை உமிழ்ந்தது. இன்னுழவன் கண்ணில் இருந்து அதுவும் தப்பவில்லை. இன்னுழவனை ஏறெடுத்து பார்த்தவளோ “சரிங்க நீங்க பாத்து போங்க இருங்க. எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்பனும். சாரி

அத்தியாயம் 14 Read More »

அத்தியாயம் 13

காற்றடித்து ஓய விழிகள் நான்கும் மோத இருவரும் ஒருவருக்கொருவர் நின்றனர் அருகாமையில். இருவருக்குமான முதலாம் சந்திப்பு அரை நிமிட மோதல் சந்திப்பாக இருந்த போதும், இப்பொழுது இச்சந்திப்பானது பல வருட பிணைப்பிற்கான சந்திப்பாய் உயிர்தெழுந்தது இருவர் மனதிலும். இன்னுழவன் மேக விருஷ்டி முன் நின்றவன், “ஏய் பொண்ணே ஏன் என்ன தேங்கா பிஞ்சால அடிச்ச” என்றான் தாடை இறுகியவனாய். “யோவ் வளர்ந்தவரே… அதான் காத்து அடிக்குதுன்னு தெரியுது இல்ல சுத்தி முத்தி பார்க்க மாட்டீங்களா” கேட்டாள் ஆவேசமாக

அத்தியாயம் 13 Read More »

அத்தியாயம் 12

சரியாக நண்பகல் வேளையில் கிருஷ்ணகிரியை அடைந்திருந்தாள் மேக விருஷ்டி மணம் முழுவதும் வெறுமை சூழல. அந்தியூர் உங்களை அன்புடன் வரவேற்கின்றது என்ற மஞ்சள் வண்ண பலகை அவளை வரவேற்க… காரை செலுத்தாது அவ்வூரினுள் நுழைய இருந்த ஒரே நேரத்தில் ஒரு வாகம் மட்டுமே முன்னும் பின்னும் செல்லும் அளவிற்கு இருந்த பாலத்தில் காரை அணைத்தபடி ஸ்டியரிங்கில் தலைசாய்த்து அமர்ந்தாள் வாடிய முகத்தோடு. ஒருபுறம் விரும்பியவன் விரும்பிய வேலை என அணைத்தும் இழந்த எண்ணம் ஒருபக்கம் வதைக்க, விருப்பம்

அத்தியாயம் 12 Read More »

அத்தியாயம் 11

வீட்டில் இருந்து கிளம்பிய இன்னுழவன் நேரே வந்து சேர்ந்ததென்னவோ சோமசுந்தரம் இல்லத்திற்கு தான். வாசலில் பைக்கை ஸ்டாண்ட் போட்டு இறங்கிய அவனை உள்ளே இருந்து பார்த்துக்கொண்டார் சோமசுந்தரம். முகமதில் புன்னகை மலர “வா இன்னு…” என புன்முறுவலுடன் அவர் வரவேற்க, அவ்விடம் வந்து சேர்ந்தார் பழனியும். “என்ன பழனி அண்ணா நல்லா இருக்கீங்களா?” “எனக்கென்ன தம்பி உங்களுடைய தயவுல சந்தோசமா இருக்கேன்.” இருவரும் பேசிக் கொண்டிருக்க வாசல் வரை சென்று விட்டார் சோமசுந்தரம். “சரி தம்பி நீங்க

அத்தியாயம் 11 Read More »

அத்தியாயம் 10

யோசனையுடனே வீடு வந்து சேர்ந்திருந்தான் இன்னுழவன். உள்ளே வந்தவனை வழிமறித்து இருந்தார் அம்பிகாமா. என்ன என்னும் விதமாய் அவன் பார்க்க, “ஏன் பேராண்டி உன் லவ்வு சாஸ்ஸாகிருமா…?” (சக்ஸஸ் ) “ங… ஸாஸ் ஆ…” என இன்னுழவன் விழித்து வைக்க… அவன் தோள் தட்டி பின்புறம் வந்து நின்ற இனிதுழனியோ சக்ஸஸ் என திருத்திக் கூறினாள் செய்கை மொழி தன்னில். ஏனென்றால் தினமும் இவர்கள் இருவரின் காதல் சம்பாஷனைகளை ஊர் கேக்குதோ இல்லையோ மொத்த பேரும் கேட்டுக்

அத்தியாயம் 10 Read More »

அத்தியாயம் 9

இன்னுழவன் குரலில் அகரனும் நந்தனாவும் தலை குனிந்து வாயை மூடிக் கொள்ள அப்பத்தா ஏறிட்டு பார்த்தார் அவனை. மூவருக்கும் நடுவில் வந்து நின்று முதலில் நந்தனாவை நோக்கியவன், “நீ இன்னும் இங்க என்ன பண்ற உனக்கு இன்னைக்கு காலேஜ் இல்லையா?” “போகணும் மாமா” அவளிடமிருந்து குரல் வர “போகணும்னா எப்போ…? டைம் ஆச்சுல கெளம்பு” என்றவன் வார்த்தைக்கு மறு பேச்சு பேசாது அவ்விடம் விட்டு நகர்ந்தாள் நந்தனா. செல்லும் அவளைப் பார்த்தும் பார்க்காதது போல் அகரன் நிற்க,

அத்தியாயம் 9 Read More »

அத்தியாயம் 8

விழிகளில் நீருடன் நின்றவரை தோள் பிடித்து தன் புறம் திருப்பினான், இன்னுழவன். “என்ன மா…?” அவன் அவர் விழி நீர் துடைக்க “என் தம்பிக்கும் எப்படியும் உங்கள மாதிரி வயசுல பிள்ளைங்க இருக்கும் இல்லடா இன்னுழவா…” இன்னுழவன் ஆமோதிப்பாய் தலையசைக்க… “எங்க இருக்கானோ? எப்படி இருக்கானோ? நான் சாகறதுக்குள்ள அவன பாக்கவே முடியாதாடா?” என அவன் தோள் சாய்ந்து குலுங்கி அழுத்தார் கோதாவரி. இன்னுழவனோ அவரை நிமிர்த்தி தன் விழி பார்க்க வைத்தவன், “உன் தம்பி நல்லா

அத்தியாயம் 8 Read More »

error: Content is protected !!