தணலின் சீதளம்

தணலின் சீதளம் 30

சீதளம் 30 “என்னடி இப்படி சொல்ற அப்போ உனக்கு அந்த அண்ணாவ பிடிக்கலையா” என்று பூங்கொடி கேட்க. அதற்கு அவளோ, “புல்லா அவனை புடிக்கலைன்னும் சொல்ல முடியாது புடிச்சிருக்குன்னும் சொல்ல முடியாது” என்று இழுத்தவள், “எனக்கே தெரியலடி அவன புடிச்சிருக்கா புடிக்கலையான்னு ஆனா அந்த ஏலியன் கூட இருக்கும்போது நான் நானா இருக்கேன். சந்தோஷமாக இருக்கிறேன் என்கிட்ட அன்பா பேசி நான் பார்க்கல என்கிட்ட எப்பவும் ரூடா தான் நடந்துக்குவான் ஆனா இங்க சென்னைக்கு வந்ததுக்கு அப்புறம் […]

தணலின் சீதளம் 30 Read More »

தணலின் சீதளம்.29

சீதளம் 29 தன்னை தூக்கி வைத்திருக்கும் வேந்தனை பார்த்த மேகாவோ முதலில் அதிர்ச்சி அடைந்தவள். பின்பு அவனை முறைத்து பார்த்தாள். “உன்னை யார் என்னைய தூக்க சொன்னா அறிவுதான என்ன தூக்குறதா சொன்னா” “அட என்ன பொண்டாட்டி நீ வாட்டசாட்டமா மாமக்காரன் இருக்கும்போது இப்படி நாத்தனார தூக்க சொன்னா அப்போ எனக்கு என்ன மரியாதை இருக்கு. இப்ப பாரு மாமா உன்னை எப்படி அலேக்கா தூக்கி வெச்சி இருக்கேன்னு. நீ உனக்கு இன்னும் எவ்வளவு மாங்கா வேணுமோ

தணலின் சீதளம்.29 Read More »

தணலின் சீதளம் 27

சீதளம் 27 வேந்தன் குளியலறை சென்றதும் இங்கு கண்விழித்த மேகாவோ தன்னுடைய இரு கைகளையும் தூக்கி சோம்பல் முறித்தவாறு எழுந்து அமர அப்பொழுது வேந்தன் போர்த்தி விட்டு போயிருந்த அந்த போர்வையோ அவள் அனுமதி இன்றியே கீழே நழுவி விழுந்தது. தன் மேனியில் இருந்து ஆடை நழுவியதில் திடுக்கிட்ட மேகாவோ குனிந்து பார்க்க அதிர்ச்சி அடைந்தவள் சட்டென நழுவி விழுந்த அந்த போர்வையை எடுத்து தன் மார்போடு இறுக்கமாக கட்டிக் கொண்டவள் சிந்தனையோ இரவை நோக்கி சென்றது.

தணலின் சீதளம் 27 Read More »

தணலின் சீதளம் 26

சீதளம் 26 மேகா தனக்கு முத்தம் கொடுக்காததால் தன்னுடைய அறையில் அவளை திட்டிக் கொண்டிருந்தவன் அவள் அவனுடைய அறைக்கு வரவும் அவளுடைய அழகில் மெய் மறந்து அவளை ரசித்துக்கொண்டிருக்க அவளோ அவன் முகத்தின் முன்னால் சொடக்கிடவும் சுயநினைவிற்கு வர, அவளோ அவனை ஏற இறங்கப் பார்த்தாள். “ஹலோ என்ன இதுக்கு முன்னாடி பொண்ணுங்களை பார்க்காத மாதிரி இப்படி பார்த்துகிட்டு நிக்கிற” என்று இவள் கேட்க அவனோ, தன்னுடைய கெத்தை விடாமல், “ யாருடி உன்னை பார்த்தா இவ

தணலின் சீதளம் 26 Read More »

தணலின் சீதளம் 25

சீதளம் 25 “ஐயோ என்ன அப்பத்தா இவ்வளவு பூ வைக்க சொல்றீங்க ஏற்கனவே என் தலையை பாருங்க இவ்வளவு பூ வச்சிருக்காங்க சொல்ல சொல்ல கேட்காம” என்று முதலிரவுக்கு அவளை அலங்கரித்துக் கொண்டிருக்க, ஏற்கனவே அவள் தலையில் அதிக அளவு பூ வைத்திருந்தார்கள் அழகு கலை கலைஞர்கள். இதில் அப்பத்தா வேறு தன் பங்கிற்கு தங்களுடைய தோட்டத்தில் பூத்த குண்டு மல்லிகையை தன் கையாலேயே தொடுத்தவர் அவளுக்காக அதைக் கொண்டு வந்தார். “ பரவால்ல ஆத்தா வச்சுக்கோ

தணலின் சீதளம் 25 Read More »

தணலின் சீதளம் 24

சீதளம் 24 மறுநாள் வேந்தன் மற்றும் மேகாவினுடைய ரிசப்ஷன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேந்தனோ கோட் சூட் அணிந்திருக்க அவனது பக்கத்தில் தங்க நிற பட்டில் தேவதை போல நின்று கொண்டிருந்தாள் மேகா. அங்கு வந்திருந்த அனைவருடைய பார்வையும் அவர்களின் ஜோடி பொருத்தத்தை கண் வைக்காத குறையாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய ரிசப்ஷன் நல்லபடியாக நடக்க அந்த ஒவ்வொரு தருணத்தையும் அழகாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த புகைப்பட கலைஞர்களோ அவர்கள் இருவரை மட்டும் தனியாக வெளியே சென்று

தணலின் சீதளம் 24 Read More »

தணலின் சீதளம் 23

சீதளம் 23 வேந்தனுடைய வீட்டில் ஹாலில் அனைவரும் அமர்ந்திருந்தார்கள். அப்பொழுது வடிவுக்கரசி தன்னுடைய மகனிடம், “ஐயா நாளைக்கே நல்ல முகூர்த்த நாள் ஜோசியர் குறிச்சி கொடுத்திருக்காரு நாம நாளைக்கே இவங்க ரெண்டு பேருக்கும் ரிசப்ஷன் வச்சிருவோமா” என்று கேட்க, “அம்மா நாளைக்கு எப்படிம்மா” என்று செல்வரத்தினம் கேட்க அதற்கு வடிவுக்கரசியோ, “ஐயா புதுசா கல்யாணம் ஆனவங்க ரொம்ப நாளைக்கு பிரிச்சு வச்சா அது நல்லா இருக்காதுய்யா அதனாலதான் நான் அடுத்த முகூர்த்தத்திலேயே அவங்களுக்கு பங்க்ஷன் வச்சிரலாம்னு பார்க்கிறேன்”

தணலின் சீதளம் 23 Read More »

தணலின் சீதளம் 22

சீதளம் 22 மேகாவிடம் செல்வரத்தினம், “உனக்கு விருப்பம் இல்லைன்னா நீ சொல்லலாம்மா” என்று அவர் கேட்க அவளோ அங்கு உள்ள அனைவரையும் ஒரு முறை பார்த்தவள், “அங்கிள் எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் தான்” என்று சொல்ல வேந்தன் உட்பட அங்கு உள்ள அனைவருமே அவளை ஆச்சரியமாக பார்த்தார்கள். மீண்டும் மேகாவோ, “இந்த தாலி எனக்கு விருப்பம் இல்லாமல் என் சம்மதம் இல்லாம நான் என்னென்னு சுதாரிக்க முண்ணமே என் கழுத்தில ஏறினதுதான் அதுக்காக கழுத்துல ஏறிய

தணலின் சீதளம் 22 Read More »

தணலின் சீதளம் 21

சீதளம் 21 “வாங்க அண்ணி நான் கூட்டிட்டு போறேன்” என்ற அறிவழகி மேகாவை வேந்தனின் அறை நோக்கி அழைத்துச் சென்றவள், “ இதுதான் அண்ணா ரூம் இருங்க நான் அவனை கூப்பிடுறேன்” என்று கதவைத் தட்டி, “ அண்ணா அண்ணா கதவை திறயேன்” என்று கத்திக் கொண்டிருக்க ஆழ்ந்த தூக்கத்திலிருந்த வேந்தனுக்கோ அது எரிச்சலாக இருந்தது. புரண்டு படித்தவன், “ ஐயோ இந்த அம்மா கிட்ட சொல்லிட்டு தானே வந்தேன் எழுப்பாதீங்கன்னு இப்ப எதுக்கு எழுப்பறாங்க” என்று

தணலின் சீதளம் 21 Read More »

error: Content is protected !!