அத்தியாயம் 01
நடுத்தர குடும்பம் வாழும் அழகான ஓட்டு வீடு… வீட்டின் வாசப்படியில் அமர்ந்திருந்த லலிதா கையில் வைத்திருந்த ஃபோனை தட்டியபடி… “இன்னுமா வராங்க!… நம்ம உயிரை எடுக்கவே இவனுக்கு கண்ணாலம்னு ஒன்னை பண்ணியிருப்பாங்க போல” என்று எரிச்சலாக முனகினாள்… அவளின் முனகளுக்கு காரணமான இருவரும் காந்தி நகரை தாண்டி வந்து கொண்டிருந்தனர்… அடுத்த சில நிமிடங்களில் வீட்டின் வாசப்படியில் ஆட்டோ நிற்கவும்… புதுமண தம்பதிகள் இருவரும் ஆட்டோவிலிருந்து இறங்கினர்… எரிச்சலாக முனகிக்கொண்டிருந்த லலிதாவின் முகத்தில் ஏக்கர் கணக்கில் பொய்யான […]