நாணலே நாணமேனடி..

நாணலே நாணமேனடி – 10

அன்று ஞாயிற்றுக் கிழமை! மற்றைய தினங்களைப் போலன்றி பொழுது சற்று உட்சாகமாகப் புலர்ந்தது, சம்யுக்தாவுக்கு.   எழுந்ததும் அறையை சுத்தப்படுத்தி, கால்களை அகட்டி சுகமாக உறங்கிக் கொண்டிருந்த சத்யாவின் நெற்றியில் முத்தமொன்றைப் பதித்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்தவளின் இதழ்களில் முறுவலொன்று நெளிந்திருந்தது. சத்யாவுக்குத் தான் இந்த வயதிலே எவ்வளவு பக்குவம்.. குடும்ப கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து, அதற்கேற்றாற்போல் நடந்து கொள்ளும் அவளுடைய வயதுக்கு மீறிய முதிர்ச்சியும், அக்காளின் தலை மீதிருக்கும் பெரும் சுமையை இறக்கி வைக்க தன்னால் இயன்றளவு […]

நாணலே நாணமேனடி – 10 Read More »

நாணலே நாணமேனடி – 09

நாட்கள் வழமை போல் கடந்து சென்றன, சம்யுக்தாவுக்கு. ஒன்றரை மாதங்களில் திருமணமென முடிவாகி விட்டதும் சிறு தலையசைப்புடன் விடைபெற்றுக் கொண்டவனிடமிருந்து ஒரு வாரம் கழிந்தும் எந்தவொரு அழைப்பும் வரவில்லை. அவளும் அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை என்பதாய் காட்டிக் கொண்டாலும், ‘வாழ்க்கை இப்படியே அசுவாரஷ்யமா கழிஞ்சி போய்டுமோ?’ என்ற பயம் அடிமனதில் எழாமல் இல்லை. ஆனால் அவன் தான் ஆரம்பத்திலே, மறுமணம் யுவனிக்காக மட்டுந்தான் என தெளிவாய் உரைத்து விட்டானே.. பிறகும் எதை நீ எதிர்பார்க்கிறாய் அவனிடம்

நாணலே நாணமேனடி – 09 Read More »

நாணலே நாணமேனடி – 08

அந்த உணவகத்தில் யதுநந்தனின் வருகைக்காக காத்திருந்தாள் சம்யுக்தா. ‘நேற்றிரவு அழைப்பு விடுத்து இவ்விடத்தில் தானே சந்திக்க வேண்டும் என்பதாய் சொன்னார்?’ என நினைத்தவள் கண்களை சுழற்றி, சுவற்றில் அழகுக்காக பொறிக்கப்பட்டிருந்த ரெஸ்டாரண்ட் பெயரைப் பார்த்து அதை உறுதிப்படுத்திக் கொண்டாள். அன்று சாந்தனா தன் காதலனை அறிமுகப்படுத்தவென அழைத்து வந்த அதே உணவகம் தான்! அன்றிருந்த தயக்கமும், பிரமிப்பும் சற்றே அடங்கியிருந்தது அவளின் பார்வையில்.. “மிஸ்..” என்ற நயமான அழைப்புடன் அருகே வந்து நின்ற வெயிட்டரைப் பார்த்து சிறு

நாணலே நாணமேனடி – 08 Read More »

நாணலே நாணமேனடி – 07

கூடத்தில் அமர்ந்து, சத்யாவின் பாடம் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை தீர்த்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா. அவள் ஒன்றும் அவ்வளவு பெரிய படிப்பாளி இல்லை தான் என்றாலும் கல்வியறிவு அறவே இல்லாதவள் அல்ல என்பதால், டியுஷன் செலவுகளுக்கு பணத்தைக் கரைக்க வழியின்றி தன்னால் இயன்ற அளவு தங்கைக்கு உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருக்கிறாள். சொல்லிக் கொடுத்ததை கவனம் சிதறாமல் உள்வாங்கிக் கொண்ட சத்யா, சரியென்ற தலை அசைப்புடன் புத்தகத்தில் மூழ்கி விட, அவளைப் பார்த்தபடி சுவற்றில் முதுகு சாய்த்தவளின் மனம், காலைநேர யதுநந்தனின்

நாணலே நாணமேனடி – 07 Read More »

நாணலே நாணமேனடி – 06

உடலோடு மிகக் கச்சிதமாய் பொருந்தியிருந்த வெள்ளை நிற சட்டையின் மேலிரு பொத்தான்களை மூடி, கழுத்துப் பட்டியை நேர்த்தியாக கட்டிக் கொண்டு நிமிர்ந்தான், யதுநந்தன். மணிக்கட்டில் கட்டப்பட்டிருந்த கைக்கடிகாரத்தை சரி செய்தபடி கண்ணாடியில் தன் தோற்றத்தைப் பார்த்து திருப்தி அடைந்தவன், நெற்றியில் தவழ்ந்த கேசத்தைக் கோதி விட்டபடி மெத்தையில் வந்தமர்ந்தான். கழுத்து வரையான நேரிய குட்டை முடி தலையணையில் பரவிக் கிடக்க, தந்தை என நினைத்து ஆளுயர டெடிபியரை கட்டி அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள் யுவனி. அவளது முகம்

நாணலே நாணமேனடி – 06 Read More »

நாணலே நாணமேனடி – 05

தந்தையின் நெஞ்சணையில் சாய்ந்து சுகமாக உறங்கிக் கொண்டிருந்தாள் யுவனி. அவளின் தலை வருடி விட்டவாறே கட்டிலில் சாய்ந்து விட்டத்தை வெறித்திருந்தான் யதுநந்தன். கடலலை போல் மோதிச் சென்ற நினைவுகளில் எல்லாம், தெத்துப் பற்கள் தெரியும்படி அழகாக சிரித்துச் சென்றாள் பல்லவி. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன், ஆயிரமாயிரம் கனவுகளும் ஆசைகளும் போட்டி போட, பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தவளைத் தூக்கிக் கொண்டு இரவோடிரவாக மருத்துவமனைக்கு ஓடிய காட்சி மனக்கண் முன் தோன்றியதும் கண்கள் பனித்தன ஆடவனுக்கு. சிலமணித்

நாணலே நாணமேனடி – 05 Read More »

நாணலே நாணமேனடி – 04

மாலை மங்கி மெல்ல இருள் சூழ ஆரம்பித்திருந்த நேரம். மேஜை விளிம்பில் அமர்ந்து தந்தையின் மடியில் காலூன்றி சில்மிஷம் செய்து கொண்டிருந்த யுவனி சலித்துப் போனவளாய், “பப்பு..” என சிணுங்கத் தொடங்கியிருக்க, ஒரு கட்டத்தில் யதுநந்தனுக்குமே எரிச்சல் மண்டியிட்டது. ‘எவ்வளவு நேரமாயிற்று. இன்னுமே காணோமே!’ என கடுகடுத்தவன் மணிக்கட்டைத் திருப்பி பார்க்க, மணி ஆறு மணிக்கு பத்து நிமிடங்கள் எனக் காட்டி நின்றது, கைக்கடிகாரம்! பெருவிரலால் புருவத்தை நீவி விட்டபடி இருக்கையிலிருந்து எழுந்து நின்றவன், யுவனியைத் தன்

நாணலே நாணமேனடி – 04 Read More »

நாணலே நாணமேனடி – 03

“எனக்கு இன்னுமே நம்ப முடியல சார். நீங்க மறுமணத்துக்கு சம்மதிச்சு இருக்கீங்க! விஷயம் தெரிஞ்சதும் ஐ வாஸ் ரியலி சர்ப்றைஸ்டு..” என உவகை பொங்கப் பேசிக் கொண்டிருந்தவளை யதுநந்தன் சற்றும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை. இயந்திரகதியில் இரண்டு தோசைகளை உள்ளே தள்ளியவன், “லொட லொடனு பேசிட்டு இருக்காம குட்டிமாவைப் பார்த்துக்கோ!” என்று விட்டு எழுந்து கொள்ள, “பல்லவியை நினைச்சி நீங்க இப்படியே உங்க வாழ்க்கையை ஓட்டிடுவீங்களோனு பயந்துட்டு இருந்தேன் சார்!” என முணுமுணுத்தவளின் கண்களில் கண்ணீர் ஊர்வலம்.

நாணலே நாணமேனடி – 03 Read More »

நாணலே நாணமேனடி – 02

மூன்றடுக்காக உயர்ந்து நின்ற அந்த கட்டடத்தில், துருப்பிடிக்காத எஃகிலான சதுர வடிவ எழுத்துக்களை கொண்டமைந்த ‘கலேக்ஸி கிளோத்திங் ஸ்டார்’ என்ற பெயர் கதிரோனின் ஒளிபட்டு அழகாய் மின்னின. அண்ணாநகரில் பெயர் போன துணிக்கடைகளில் இதுவும் ஒன்று! எந்த வைபவமாக இருந்தாலும் விலை பற்றிய கவலையின்றி, தரமானதோ என்னவோ என்ற வீண் சந்தேகமின்றி மக்கள் திரள் திரளாக நாடி வரும் ஓரிடம். மக்களின் நம்பிக்கை வென்ற அந்த உயர்ரக துணிக்கடை, விஷால நிலப்பரப்பைத் தனதாக்கிக் கொண்டு அனைவரையும் வரவேற்று

நாணலே நாணமேனடி – 02 Read More »

நாணலே நாணமேனடி – 01

மூடுபனி படர்ந்த இளங்காலைப் பொழுதில் நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு சற்று நேரகாலத்துடன் வீட்டினுள் நுழைந்தான், யதுநந்தன். கூடத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து ஆங்கிலப் பத்திரிகையைக் கண்ணாடியின் உபயோகமின்றி புரட்டிக் கொண்டிருந்தவரை கண்டும் காணாத பாவனையில் வேக நடையிட்டு அறை நோக்கி நடந்தவனை, “நந்தா!” என அழைத்து நிறுத்தினார், கிருஷ்ணமூர்த்தி. “ப்ச்!” என வெளிப்படையாகவே சலித்துக் கொண்டவனுக்கு, ‘இவரிடம் பேச்சுக் கொடுத்து, இன்றைக்கும், காலையிலேயே என் மூடைக் கெடுத்துக் கொள்ள வேண்டுமா?’ என்ற கடுப்பு எழாவிட்டால் தான் அதிசயம்!

நாணலே நாணமேனடி – 01 Read More »

error: Content is protected !!