நாயகனின் மைவிழியே..!!

மைவிழி – 04

தன் தந்தையின் கட்டாயத்தால் என்னவென்றே அறியாமல் செல்ல சம்மதம்தெரிவித்தாள் மைவிழி. சினிமா எனும் கடலில் உள்ள ஆழம் அறியாமல் பணத்திற்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும் வலுக்கட்டாயமாகமைவிழியை தள்ளி விட்டார் குகன். அவளும் அதன் விளைவுகள் பற்றி அறியாமல் செல்லத் தயாராகையில் வீட்டின்வெளியே வந்து நின்றது சொகுசு கார் ஒன்று. அந்த கிராமத்தினுள் கார் வருவதைப் பார்த்து அதன் பின்னே வந்தவர்கள்மைவிழியின் வீட்டின் முன் கார் நிற்கஅனைவரும் வியப்புடன் அங்கு வந்து நின்றனர். பல இலட்சங்களை விழுங்கிய காரை விட்டுவெளியே […]

மைவிழி – 04 Read More »

மைவிழி – 03

தனக்கு பிடித்த மற்றும் தான் எதிர்பார்த்ததை போல இருந்த பெண்ணை தனது படத்தில் நடிக்க வைப்பதற்கு ஆசைக் கொண்டான் ருத்ரதீரன். ஆனால் அவளோ சிறுப்பிள்ளை தனமாக பேசிவிட்டு ஓடிச் செல்ல என்ன செய்வது என அறியாமல் தனது காரை சரி செய்ய வந்த மெக்கானிக்கிடம் அவளைப் பற்றிக் கேட்டான். மைவிழியின் வீடியோவை காட்டி யார் என்றும் அவளை தன்னோடு அழைத்துச் செல்ல உதவினால் பணம் தருவதாகவும் கூற அந்த மெக்கானிக் கோபம் கொண்டு அவனது சட்டையை பிடித்து

மைவிழி – 03 Read More »

மைவிழி – 02

தன் வாழ்வில் சில நிமிடத்தைக் கூட வீணாக்காமல் இருக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டவன் தான் ருத்ரதீரன். தனது படத்தில் தனக்கு தேவையான திருப்தி கிடைக்கும் வரை விடாது முயற்சி செய்யும் காரணமாகத்தான் அவன் வந்த குறுகிய நாட்களில் மிகப்பெரிய நாயகனாக உருவாகினான். ரேஷ்மா சிபாரிசில் நடிக்க வந்தாலும் கூட தான் எதிர்பார்த்ததை போல நாயகி அமையாததால் டென்ஷனாக அங்கிருந்து சென்றான் ருத்ரதீரன். ஒழுங்காக வடிவமைக்காத குன்றும் குழியுமாக உள்ள வீதியில் கார் சென்று கொண்டிருக்கையில் திடிரென

மைவிழி – 02 Read More »

மைவிழி – 01

பகலவன் எழும் பொழுதில் அவன் கதிர்கள் பூமியை அணைத்துக் கொள்ளும் நேரம் மஞ்சள் போர்வையை போர்த்தியது போல காட்சியளித்தது பூமி. அந்த அழகிய காலைப் பொழுதில் பச்சைப் கம்பளம் விரித்தது போல படர்ந்திருந்த வயல் வெளியில் உள்ள சிறு  பறவைகள் கதிரவன் ஒளிப்பட்டு பறந்து செல்ல பனித்துளிகள் உருகி சிறு புற்களையும் நீராட வைத்தது. கையில் கலப்பையும் கட்டுச்சோற்றையும் ஏந்திக் கொண்டு வயலில் பலர் வேலை செய்து கொண்டிருக்க, எங்கோ தொடங்கி எங்கோ முடிவடையும் நீரோடையின் நீர்

மைவிழி – 01 Read More »

நாயகனின் மைவிழியே..!! துஷ்யந்த மாறன் – கதைச் சுருக்கம்

உலகம் அறியாத முல்லைக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த நாயகியான மைவிழிக்கும் தமிழ்நாடே வியந்து ரசிக்கும் சினிமா நடிகனுக்கும் இடையிலான காதல் கதையே இது

நாயகனின் மைவிழியே..!! துஷ்யந்த மாறன் – கதைச் சுருக்கம் Read More »

error: Content is protected !!