நேசம் கூடிய நெஞ்சம் 

20. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 2௦ மகன் சாப்பிடக்கூட இல்லையே என்று கவலையில் அவனை குறித்து யோசித்தபடியே இருந்ததில் அருணாவுக்கு உறக்கம் வரவில்லை. அதனால் அர்விந்தின் அறை கதவு திறந்த சத்தம் அவருக்கு கேட்டது. மகன் ஏதும் சாப்பிட நினைப்பானோ என்ற எண்ணத்தில் வேகமாக எழுந்து வந்து பார்த்தார் அருணா. ஆனால் அங்கு யாரும் இல்லாததால் குழப்பம் ஆனவர், பாட்டியின் அறையை எட்டிப்பார்த்தார். அங்கு மலரும் இல்லை எனவும் வேகமாக வந்து தியாகுவை எழுப்பி விட்டார். இருவரும் வீட்டை ஒரு […]

20. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

19. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 19 அன்று இரவு அனைவரும் உறங்க சென்றதும், மெதுவாக அர்விந்தின் அறைக்கு சென்றாள் மலர். மாலுக்கு  சென்று திரும்பியதில் இருந்து அறைக்குள் முடங்கியவன் தான், இரவு உணவு கூட வேண்டாம் என்று கூறி விட்டான். “கொஞ்சம் சந்தோஷமா இருக்கானேனு சந்தோஷப்பட்டேன், மறுபடி அந்த சிரிப்பு போய்டுச்சே….” அருணா தியாகுவிடம் வருத்தப்பட்டார். மலராலும் அர்விந்தின் இறுக்கத்தை அப்படியே விட முடியவில்லை. அவனின் மனநிலை அவளை எப்படி பாதிக்காமல் இருக்கும்? அவனை கொஞ்சமேனும் சரி செய்ய வேண்டும்

19. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

18. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 18 அருணாவுடன் சென்றவளுக்கு அருணா பேசியது எதுவுமே மண்டையில் ஏறவில்லை. அவள் கன்னம் இரண்டும் குறுகுறுத்தது. இடுப்பில் அவன் தொட்ட இடம் இன்னும் அவனின் உள்ளங்கை ஸ்பரிசத்தை உணர்த்திக் கொண்டே இருந்தது. நல்ல வேளையாக அருணாவிற்கு தொலைபேசி அழைப்பு வர, இவளுக்கு தனிமை கிட்டியது. அவனின் நெருக்கம் அவளை பித்தாக்கி விடப் போகிறது என்று நினைத்துக் கொண்டாள் மலர். அந்த அளவிற்கு அவளை தொல்லை செய்தது நடந்த விஷயம். அவனையே நினைத்துக் கொண்டு வேலையை

18. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

17. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 17 அர்விந்த் தன்னிடம் பேசாமல் முகம்  திருப்பியதை கண்டு மனம் வருந்தினாலும், அவனை வாக்கிங் ஸ்டிக்குடன் கண்டதும் மனம் தவித்து போனது மலருக்கு. ஆனால் அதை பற்றி பேசினால் அவனுக்கு நிச்சயம் பிடிக்காது என்று தெரிந்தவளாக, “எப்படி இருக்கீங்க சார்?” என்றாள். என்ன முயன்றும் அவள் குரல் தழுதழுப்பதை அவளால் மறைக்க முடியவில்லை. “இங்க தான் நிற்கிறேன், நீயே பார்த்துக்கோ…!” சொல்லிக்கொண்டே மெதுவாக திரும்பினான் அர்விந்த். “பார்க்கிறது எல்லாம் இருக்கட்டும், நீங்க சொல்லுங்க, உங்க

17. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

16. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 16     மூன்று மாதம் கழித்து, குடும்ப நல கோர்ட், நிவேதாவிற்கும் அர்விந்திற்கும் பரஸ்பர ஒத்துழைப்பில் விவாகரத்து கொடுத்தது கோர்ட். வெளியில் வந்து அவரவர் கிளம்பும் முன், அர்விந்திடம் வந்த நிவேதா, “தேங்க்ஸ் அர்வி, என்னை புரிஞ்சுகிட்டு, என் மேல கோபப்படாம நான் கேட்ட உடனே டைவர்ஸுக்கு ஒத்துகிட்டே!” என்றாள். மருத்துவமனையில் பார்த்ததோடு, அவனை இன்று தான் பார்க்கிறாள் நிவேதா. கன்னத்தில் தையல் போட்ட வடு, அதை மறைக்க தாடி, வாக்கிங் ஸ்டிக் என

16. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

15. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 15 விழியின் விழி தன்னை குற்றஞ்சாட்டுவது போல் இருக்க, அவளிடம் இருந்து மனமே இல்லாமல் அவன் கையை மெதுவாக உருவிக் கொண்டான் அர்விந்த். அவன் எதுவுமே பேசவில்லை என்றதும், அவன் அவளை தவிர்க்கிறான் என்று தவறாக புரிந்து கொண்டு கனத்த மனதோடு கிளம்பத் தயாரானாள் மலர். அப்பாவையும் பெண்ணையும் பஸ் ஏற்றி விட தியாகுவே கிளம்பினார். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய போது மற்றவர்களை போல் வாசல் வரை செல்லவில்லை அர்விந்த், வேகமாக திரும்பி

15. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

14. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 14 அவன் பேச்சில் அவனிடம் இருந்து பதறி அவள் விலக, கொஞ்சம் நிதானித்தான் அர்விந்த். அதற்குள் குளம் கட்டிய அவள் விழிகள் உடைப்பெடுத்து விட்டது. “அழாம ஏறு வண்டியில்” என்றான் இறுக்கமாக. அவள் வருந்துவது அவனை வருத்தும் எப்போதுமே. கோபம், வருத்தம் என கலவையாய் மாறியது அவன் மனநிலை. அவளிடம் அக்கறை காட்டுகிறேன் என்று நெருங்காமல், தள்ளியே இருந்திருந்தால் இது போல் அவர்களுக்குள் எந்த வருத்தமும் குழப்பமும் நேர்ந்திருக்காது என்று நினைத்துக் கொண்டான் அர்விந்த்.

14. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

13. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 13 நிமிர்வாக பேசிவிட்டு வந்தாளே தவிர, அடுப்படியில் வந்து வாயில் துப்பட்டாவை வைத்து அமுக்கி கொண்டு அழுது தீர்த்தாள் மலர். வலிக்க வைக்காமல், புலம்ப வைக்காமல் இருக்குமா உண்மை காதல்? எப்படி என் காதலை எளிதாக கூறிவிட்டான்! பல நண்பர்கள் இருக்கும் அவனின் பெண் தோழிகள் அப்படி இருந்தால், நானும் அப்படி இருப்பேனா? அவன் திருமண விஷயம் இப்படி என் மனதை அரிக்கிறதே? அவனுக்கு ஏன் புரியவில்லை, திருமணம் நிச்சயம் ஆகி இருக்கும் போது

13. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

12. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 12 சாப்பிட ஆரம்பித்த பின் தான் பசியே தெரிந்தது என்பது போல் பலர் சாப்பிடாமலே இருப்பார், ஆனா சாப்பிட ஆரம்பித்து விட்டால் மூச்சு முட்டும் வரை சாப்பிடுவர்… அதே போல் ஆரம்பிக்கும் வரை அவனின் உணர்வு அவனுக்கு தெரியாது, ஆனால் ஆரம்பித்த பின் அவன் ஆசை அவனை அவளிடம் இருந்து பிரிய விடவில்லை. எந்த இருட்டு, எந்த தனிமை அவளை மிரட்டியதோ, இப்போது அதே தனிமை, அதே இருட்டு அவனுடன் அவளை ஒன்ற வைத்தது.

12. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

11. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 11 அவன் கையை உதறி விட்டு சென்றவளுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக தான் இருந்தது. ஆனாலும் அவள் மேல் எந்த தப்பும் இல்லை என்பதாலும், அவளை சுத்தமாக கண்டுகொள்ளாமல் இருப்பவனுக்கு அவளை பற்றி பேச வேண்டிய தேவை இல்லை என்று தோன்றியதாலும் அவனிடம் துணிந்து பேசிவிட்டாள் மலர்.  நிச்சயம் ஆத்திரம் அடைந்து இருப்பான் என்று தான் நினைத்தாள். ஆனால் என்று அவள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறான் அர்விந்த்? கோபப்படுவான் என்று அவள் எதிர்பார்த்ததற்கு

11. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

error: Content is protected !!