best romance novels
மான்ஸ்டர்-12 4.9 (15)
அத்தியாயம்-12
இங்கோ மார்ட்டின் தனது குறுகுறுத்த நெஞ்சையே வருடியவரே தன்னுடைய அறையில் உட்கார்ந்து இருந்தான்… “என்ன நேத்துல இருந்து என் நெஞ்சே சரியில்லையே…..” என்று வருடியவரை இருக்க… அப்போது தான் நேற்று இரவு நடந்த நிகழ்வு அவனுக்கு ஞாபகம் வந்து கொண்டே தான் இருந்தது
“ம்ச் இது என்ன வித்தியாசமா…”என்று தன்னையே நொந்துக்கொண்டவனுக்கோ அந்த வித்தியாசமான உணர்வு பிடிக்கவே இல்லை.. “ம்ச் இங்கையே இருந்தா கண்டதையும் யோசிப்போம்…”என்றவன் கிளம்பி வெளியில் வர…
“அந்த நெக் லாக்கெட் மட்டும் நம்ம திருடி கொடுத்தோம்னா கிட்டத்தட்ட எவ்வளவு மில்லியன் கணக்குல நமக்கு லாபம் வரும் தெரியுமா பாஸ்…. இதுவரைக்கும் பல கேங்ஸ்டர் க்ரூப்புக்கு இந்த ப்ராஜெக்ட் கொடுக்கப்பட்டுச்சு… ஆனா அவங்க யாராலயுமே இதை செஞ்சு முடிக்க முடியல… ஏன்னா அந்த நிவாஸ் வீடு ஃபுல்லா எப்போதும் செக்யூரிட்டி நிறைஞ்சி தான் இருக்கும்… அதும் அந்த நிவாஸ் வேட்டை நாய் மாதிரி தன்னோட லாக்கெட் யாரு எடுத்தாங்களோ அவங்கள சும்மா விடமாட்டான்…. அதனால இது நமக்கு கூட கொஞ்சம் கஷ்டமா தான் பாஸ் இருக்கும்…” என்று கபீர் அந்த லாக்கெட்டை எப்படி திருடுவது என்பதை பற்றி சின்ன பிளானை ஒன்று போட்டு தன்னுடைய பாஸிடம் விளக்கிக் கொண்டிருந்தான்.
இதனை எல்லாம் கேட்டவாறு கம்பீரமாக உட்கார்ந்து இருந்த மார்ட்டினுக்கோ இன்னும் அவனது மார்பு குறுகுறுத்துக் கொண்டே இருப்பது போல தான் இருந்தது… அவன் நேற்று இரவு நேரத்தில் பப்பில் அந்த இளம் பெண்ணின் மீது மோதினானோ அன்றிலிருந்து அவன் நிலைப்பாடு இப்படித்தான் இருந்தது… “ஏன் இப்படி இந்த இடம் குறுகுறுத்துட்டே இருக்கு….” என்று தன்னுடைய மார்பினை வருட…
கபீரோ தான் விளக்குவதெல்லாம் விளக்கி விட்டு குனிந்து தன்னுடைய பாஸை பார்க்க அவனது முகத்தில் ஏற்பட்ட உணர்வுகளை பார்த்த கபீருக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை… “பாஸு சரி இல்லையே… எங்கையோ இருக்குற மாதிரில இருக்கு..”என்று நினைத்தவன்…. “பாஸ் பாஸ்..” என்று அவன் தன்னுடைய பாஸினையே அழைத்துக் கொண்டு இருந்தான்.
மார்ட்டினோ ஏதோ பலவித சிந்தனையிலேயே இருந்து கொண்டிருந்தான். அவன் உடல் ஏதோ ஒரு போதைக்கு அடிமையானது போல அந்த பெண்ணவளின் மென்மையான உடல் பாகத்தில் குறுக்குறுத்து கொண்டே இருக்க… அது எதனால் என்று தான் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.. அன்று இரவிலிருந்து கூட அவனுக்கு அப்படித்தான் இருந்து கொண்டே இருக்கிறது…
இப்படியே நாட்கள் ஓட… அந்த பெண் அவனின் மீது மோதி கிட்டதட்ட ஒரு வாரம் ஓடிவிட்டது… ஆனாலும் இந்த ஒரு வாரம் அவனின் செயல்பாடுகளில் ஏகப்பட்ட மாற்றங்கள்… இரவு நேரத்தில் இப்போது எல்லாம் அவன் பம்பில் சென்று குடிக்கும்போது அந்த தன் மீது வந்து மோதிய பெண்ணவள் இருக்கிறாளா என்றுதான் அந்த இடம் முழுவதும் அலசி ஆராய்ந்து கொண்டே இருந்தான்.
“ம்ம்ம்ச்ச் அவ எப்படிடா இங்க இருப்பா… அவள தான் அன்னிக்கி தூக்கிட்டு போக சொல்லிட்டியே..” என்று அவனுடைய மடத்தனத்தை அவனது மனம் எடுத்துரைக்க… அதில் முதலில் யோசனையுடன் சுத்திக் கொண்டிருந்தவன் பின்பு தோளை உலுக்கியவாறே…
“ஏற்கனவே நமக்கு நிறைய பிரச்சனை இதுல இந்த பிரச்சனை வேறையா…” என்று தன்னை நிதானித்தவன்… “முதல்ல அவள விட்டு வெளியில வாடா…” என்று தனக்கு தானே கூறிக்கொண்டான்…. ஆனால் உண்மையிலே, சத்தியமாக இந்த உணர்வுகள் எல்லாம் அவனுக்கு புதிதாக தான் தோன்றி கொண்டே இருந்தது. ஏதோ புது வகையான ஒரு போதைக்கு அவன் உடல் ஏங்குவது போல ஒரு பிரம்மை… அவனின் இத்தனை வருட பிரம்மச்சரிய வாழ்க்கையில் எந்த ஒரு பெண்ணை பார்த்தும் அவனுக்கு இப்படி தோன்றியது இல்லை… இத்தனைக்கும் அவன் மீது எந்த பெண்ணும் வந்து உரசாமலோ, மோதாமலோ இல்லை.. ஆனால் அப்படிப்பட்டவர்களை தன் கண் கொண்டு அனல் கக்க முறைத்தவாறு அவர்களை துரத்தி விடுபவனுக்கு அன்று எதார்த்தமாக தன் மீது மோதியவளையோ, தன்னை பின்னால் இருந்து அணைத்த அந்த பெண்ணவளை தான் அவனால் மறக்கவே முடியவில்லை…
“ஏதோ அவக்கிட்ட வித்தியாசமா இருக்கு…” என்று அவன் தன் எண்ணத்தை மாற்ற நினைத்துக் கொண்டே இருந்தாலும் முடியவில்லை…
தான் கேட்கும் கேள்விக்கோ.. தான் பேசுவதையோ தன்னுடைய பாஸ் கவனிக்காமல் இருப்பதையும், கிட்டதட்ட ஒருவாரமாக ஏதோ யோசனையிலையே இருப்பவனை பார்த்து கபீருக்கு ஒன்றுமே புரியவில்லை… அந்நேரம் பார்த்து கபீரின் போன் வேறு…
“எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று…
அது ஏனோ…. அது ஏனோ…
உன்னிடம் இருக்கிறது…
அதை அறியாமல் விடமாட்டேன்..
அதுவரை உன்னை தொட மாட்டேன்…” என்ற ரிங்டோன் வேறு இசைக்க… அந்த பாட்டின் வரியில் சட்டென்று நினைவுக்கு வந்த மார்ட்டினோ நிமிர்ந்து கபீரை முறைப்பாகப் பார்த்தான்…
கபீரோ தன்னுடைய பாஸின் முறைப்பை புரியாமல் பார்த்தவன்… “பாஸ் என் வைஃப் தான் கூப்புடுறா… பேசிட்டு வரேன்…” என்று கூறியவரே போனை காதில் வைத்துக் கொண்டு குசுகுசுவென்று ஏதோ பேசிக்கொண்டு இருக்க… இதனை பார்த்தவனுக்கு தான் ஒரு மாதிரி இருந்தது… அவனுக்கே நிறைய முறை தன்னை நினைத்து சந்தேகமாக தான் இருந்து கொண்டிருக்கிறது… எந்த பெண்ணை பார்த்தும் அவனுக்கு எந்த ஒரு உணர்வுகளும் தோன்றவே தோன்றாது… ஏன் அவன் முன்னால் எந்த பெண் வந்து உடைகள் இல்லாமல் நின்றாலும் அவனால் அதனை ரசனையாகவோ அல்லது அவளை புசிக்க வேண்டும் என்றோ அவனுக்கு தோன்றவே தோன்றாது… ஏன் அது போல் நடந்தும் இருக்கின்றது அவனுக்கு… ஆனால் அப்போதெல்லாம் அனல் தெறிக்க பார்த்து விலகி ஓடி வருவானே தவிர எப்போதும் அவன் பெண்களிடம் நெருங்கியதே இல்லை…
“ஒருவேளை நமக்கு அந்த பிரச்சனையோ…” என்று அவன் மனம் யோசிக்காமலும் இல்லை… ஆனால் அதற்காக மருத்துவமனைக்கு ஓடி சென்று தன்னை பரிசோதிக்கும் அளவுக்கு மார்ட்டினுக்கு இன்னும் அந்த அளவிற்கு தேவை வரவில்லை… “ம்ச் இந்த உலகத்துல பொண்ணுதான் பெருசா… பொண்ணுங்க கிட்ட இல்லாத சுகம் வேற எதிலுமே இல்லையா என்ன… அதெல்லாம் இல்ல அதெல்லாம் சும்மா கட்டுக்கதைங்க…” என்று புலம்பியவன் அதனை அடியோடு ஒதுக்கி விட்டு தான் சுத்திக் கொண்டிருந்தான்.
ஆனால் இன்று அவனது உணர்வுகளோ தூண்டப்பட்டிருந்தது.. அதுவும் ஒரு சிறிய பெண்ணினால் தூண்டப்பட்டு இருந்தது.. அவளுக்கு தெரியாமல் தான் இது நடந்து இருந்தது.. மார்ட்டின் திரும்ப அந்த யோசனையிலையே இருக்க… “ம்ச் பாஸ் நான் சொல்றத கேக்குறீங்களா…” என்று மறுபடியும் கபீர் கேட்டான்…
அப்போது தான் நிகழ்வுலகத்திற்கு வந்த மார்ட்டினோ தன்னுடைய மூளை யோசிப்பதை நினைத்து கடுப்பானவன்… “சும்மா இருந்தா இப்படித்தான் ஏதாவது யோசனை தோனிக்கிட்டே இருக்கும்…” என்று தோன்றியவாறே,… “ம்ம்ச் சொல்லு கபீர் என்ன நீ தகவல் தரணும்…” என்று கேட்க.
கபீர் மறுபடியும் ஆரம்பத்தில் சொன்ன அனைத்து விஷயங்களையும் இப்போது கூறிக் கொண்டிருந்தான். அதனை எல்லாம் கேட்டவனோ… “ம்ச் இப்ப நீ என்ன சொல்ல வர இந்த ப்ராஜெக்ட் ரொம்ப கஷ்டம் சொல்ல வரியா இல்ல என்னால முடியாதுன்னு சொல்ல வரியா…” என்று வீறுக்கொண்ட சிங்கமாக கர்ஜித்தவாறே கேட்க…
கபீரோ அதில் திருத்திருத்தவன் “ஐயோ பாஸ் நான் அப்படியெல்லாம் சொல்லல…” என்று பதட்டமாக கூறினான்…
“ம்ம் வெல் வேற என்ன சொல்ல வர கபீர்…” என்று கேட்டவனோ… “ஸீ இந்த மார்ட்டினுடைய லைஃப்ல எதுவுமே முடியாதுன்றதே கிடையாது.. இந்த மார்ட்டின் கண்டிப்பா அதை முடிச்சு காட்டுவான்… அந்த நிவாஸ் இல்ல பெரிய டான்னே வந்தாலும் எனக்கு அத பாத்து பயமில்ல.. இந்த ப்ராஜெக்ட்ட நான் முடிச்சே ஆவேன்…”என்று கூறியவனோ… ஏதோ யோசித்தவாறே… “ம்ம்ம் அந்த நிவாஸோட வீட்ல எதுவும் ரீசண்டா பங்க்ஷன் வருதா..” என்று கேட்க.
கபீரோ புருவம் சுருக்கி யோசித்தவன் “ஆமா பாஸ்… அந்த நிவாஸ் இப்போ ரீசண்டா அஞ்சாவது முறையா ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க இருக்கான்னு நம்ம அன்டர்க்ரவுன்ட்ல பேசிக்கிட்டாங்க..” என்று கூறினான்…
அதில் நக்கலாக சிரித்த மார்ட்டினோ… “ம்ம்ம் அஞ்சாவதா கல்யாணமா… வாவ் வன்டர்ஃபுல்…”என்று இதழ் சுளித்து சிரித்தவன்… “ம்ம்ம் இந்த ஒரு பங்க்ஷன் போதுமே கண்டிப்பா எப்படி இருந்தாலும் நமக்கு அந்த மேரேஜ்க்கு அழைப்பு வரும்ல…” என்று கபீரிடம் கேட்க…
“எஸ் எஸ் பாஸ்… கண்டிப்பா வரும் அதுவும் இப்போ அவன் ரீசண்டா முடிச்ச நாலு கல்யாணம் வரைக்கும் நம்ம இன்வைட் செஞ்சான்… ஆனா நம்ப தான் இதெல்லாம் தேவையில்லைனு அதுக்கு போகல…” என்று கூற
“ம்ம்ம் அப்ப இந்த முறையும் கண்டிப்பா நமக்கு இன்வைட் வரும்… அப்போ பார்த்துக்கலாம்.. நம்ம ப்ளான..” என்று கூற… கபீருக்கு தன்னுடைய பாஸ் இதில் தீவிரமாக இறங்கிவிட்டது நன்றாகவே தெரிந்து போனது…
“ஓகே பாஸ்…” என்று கூற… இன்னும் பல தகவல்களை கேட்டு தெரிந்துக்கொண்ட மார்ட்டின்.. அந்த சங்கீத்திற்கு தன்னை அழைத்து இன்விடேஷன் எதுவும் வருகிறதா என்று கபீரை பார்க்க சொல்ல… அது போல கபீரும் அதனைப் பார்த்துக் கொண்டிருந்தான்…
இங்கு மைத்துவோ அந்த இருட்டு அறையில் அழுகையில் தேம்பியவாறு இருக்க… திடீரென்று அந்த அறை திறக்கப்பட்டது.. அதில் பெண்ணவள் பயத்துடன் நிமிர்ந்து பார்க்க.. அங்கு 2 பெண்கள் அவளை பார்த்தவாறே வந்தவர்கள்… “ம்ம் மேடம் சார் உங்களுக்கு அளவு எடுத்துக்க சொன்னாங்க… உங்களோட சங்கீத்க்கு தேவையான டிரஸ் தைக்கணும் இல்ல..” என்று கூற மைத்துக்கோ இங்கிருந்து தப்பிக்க அவர்களிடமும் உதவி கேட்க மனம் பிராண்டியது.. ஆனால் இதற்கு முன்னால் தனக்கு உதவி செய்த அந்த பணியாளர் இறந்த குற்ற உணர்ச்சிலேயே இருந்த மைத்ரேயிக்கு இவர்களையும் சாகடிக்க மனமே வரவில்லை… மைத்ரேயி அப்படித்தான் எதற்கும் இளகிய மனம் கொண்டவள்… தன்னால் ஒருவர் துன்பப்படுவதை அவளால் தாங்க முடியாது.. அப்படி இருக்கும்போது தன்னால் ஒருவர் செத்துப் போவது எப்படித்தான் அவளால் ஏற்றுக் கொள்ள முடியும்,,
அப்படியே அமைதியாக எழுந்து பொம்மை போல நிற்க… அந்த பெண்களோ இருவரும் தங்களுக்குள்ளே பார்த்தவாறே அவளை அங்க அளவுகளை அளந்து எழுதிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்… மைத்ரேயி கடனே என்று அப்படியே உட்கார்ந்து கொண்டவளுக்கு தன்னுடைய நிலையை நினைத்து மனம் வெம்பியது…
“இந்நேரம் அப்பத்தாவுக்கு என்ன ஆகி இருக்குமோ தெரியல… அப்பத்தாவை ஒழுங்கா பாத்துக்கிட்டாங்களானும் தெரியலையே…” என்று இப்போதும் அப்பத்தாவினை நினைத்து அழுது கொண்டே இருக்க.. நாளை அவளது வாழ்க்கையை திசை மாறி போகப்போகிறது என்பதனை அவள ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..
(கேப்பச்சினோ…)
மான்ஸ்டர்-11 4.8 (19)
அத்தியாயம்-11
மார்ட்டின் தன் நெஞ்சில் பூப்போல வந்து மோதி நின்ற பெண்ணை கிறக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்… மார்ட்டின் வழக்கம் போல அந்த வார இறுதியில் தன்னுடைய பப்பிற்கு வந்தவன் முழுதாக குடித்துவிட்டு தன்னுடைய பிஏ கபீரிடம் சில வேலைகளை ஒப்படைத்துவிட்டு தன் வீட்டிற்கு கிளம்புவதற்காக தள்ளாடிக்கொண்டே அந்த வராண்டாவில் வந்து கொண்டிருக்க…
அப்போதுதான் அவன் மீது பூப்போல வந்து மோதினாள் அந்த பெண்ணவள்… அவன் மீது மோதிய வேகத்திற்கு தன்னை சமாளிக்க முடியாதவளோ அப்படியே தரையில் விழுந்து விட… மார்ட்டினோ கொஞ்சம் தள்ளாடியவன் தன்னை சமாளித்தவாறே நிற்க… தன் நெஞ்சில் ஏதோ குறுக்குறுக்க… சட்டென்று அவன் கண்கள் கீழே விழுந்தவளையே விரித்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் ஒருவிதம் மயக்கம் இருந்தது.. ஏதோ புதுவித உணர்வின் தாக்கத்தில் அவன் முகம் சிவந்து போயிருந்தது..
அவனின் கைகளோ அந்த பெண் மோதிய தன்னுடைய நெஞ்சையே வருடிக் கொண்டிருக்க… ஆனால் அவளோ அதனை கவனிக்கும் சூழ்நிலையில் எல்லாம் இல்லை… அவளின் கண்களோ அந்த ஆடவனை நிமிர்ந்து பார்த்து மிரட்சியுடன் பின் தனக்கு பின்னால் திரும்பிப் பார்க்க… அங்கோ அவளை துரத்தி வந்து கொண்டிருந்த அந்த மூவருமே அவளைத்தான் விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தனர்…
“ம்ச் என்னடா பாக்குறீங்க.. டேய் போய் தூங்குங்க டா…” என்று ஒருவன் அதட்டலாக கட்டளையிட… அதனைக் கேட்ட மற்ற இருவரும் வேகமாக அவளின் அருகில் நெருங்க பார்க்க… பெண்ணவளோ அவர்களின் முயற்சியில் பயந்தவள் வேகமாக எழுந்தவள் ஓடிப்போய் மார்ட்டினின் பின்னால் போய் ஒளிந்து கொண்டாள்.
மார்ட்டினோ அவளது செயலை தலையை மட்டும் திருப்பி கூர்மையான பார்வையுடன் தன்னுடைய கருப்பு நிற கோட்டை விரல்களால் பிடித்து இழுத்தவாறே தனக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டு நிற்கும் பெண்ணவளையே திரும்பி ஒரு பார்வை பார்த்தவனுக்கு உடல் எல்லாம் ஏதோ சில்லென்று உணர்வாக இருந்தது.. இது அனைத்துமே புது உணர்வு தான் அவனுக்கு தோன்றியது… இதற்கு முன்னால் இப்படிப்பட்ட ஒரு உணர்வினை அவன் அனுபவித்ததே கிடையாது..
ஏதோ உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை சுள்ளென்ற உணர்வு ஏறிக்கொண்டிருந்தது… அதுவும் சிறிது நேரத்திற்கு முன்பு தன் இரும்பு நெஞ்சத்தில் வந்து மோதிய பெண்ணவளின் மென்மையான பாகங்கள் அவனுக்கு ஒரு வித கிறக்கத்தை தான் ஏற்படுத்தியது… இது இதற்கு முன்பு வரை கூட “அப்படி என்னதான் இருக்கோ… இப்படி உரசிக்கிட்டு ஆடுறாங்களோ அப்படி அதுல என்னதான்டா இருக்கும்…” என்று தன்னுடைய பிஏவிடம் கேட்டு விட்டு வந்தவனுக்கு இப்போது பெண்ணவள் தன் மீது மோதியதிலிருந்து அந்த உணர்வுகள் அவனுக்கு புதிதாகத்தான் தெரிந்தது…
அவனுக்கு கண்டிப்பாக புதிதாக தான் தெரியும் ஏனென்றால் இதற்கு முன்பு மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காமல் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு இதற்கு முன்பு எந்த ஒரு சபலத்தாலும் எந்த ஒரு பெண்ணையும் நெருங்காதவனுக்கு இந்த சிறு பெண்ணவள் மோதல் ஒருவித கிறகத்தையும், புத்துணர்வையும் தான் கொடுத்தது… ஆனால் அதனை முகத்தில் காட்ட அவன் ஒன்னும் சாதாரண மனிதன் அல்லவே… தன் இரும்பு கைகளை மடக்கியவாறு அப்படியே நின்றவன் அவனை நோக்கி வரும் இருவரையும் வெறிகொண்டு முறைக்க…
அப்போதுதான் அவர்கள் அவனது முகத்தையே தெளிவாக பார்த்தனர்…. அந்த ஹோட்டலின் காரிடார் முழுவதும் இருட்டாகவே இருக்க.. இதற்கு முன்பு அவர்கள் மார்ட்டினை பார்த்திருப்பதற்கு வாய்ப்பே இல்லாமல் தான் இருந்தது… ஆனால் இப்போது நன்றாக மார்ட்டினின் முகம் தெரிய… அந்த இருவருக்கும் அவனை பார்த்த வேகத்திற்கு உடல் தடதடக்க ஆரம்பித்துவிட்டது…
மார்ட்டினை பற்றி தெரியாதவர்கள் அந்த மும்பையில் இருப்பார்களா என்ன… அந்த மும்பையை பாதியை ஆட்சி செய்வதே அவன் தானே.. அதனால் இருவரும் அவனை பார்த்த வேகத்திற்கு கிடுகிடுவென்று ஆடிக் கொண்டிருக்க..
“ம்ச் டேய் என்னடா வந்த வேலைய முடிக்காம இப்படி நின்னுகிட்டு இருக்கீங்க… போய் அவள இழுத்துட்டு வாங்கடா…” என்று பின்னால் இருந்து ஒருவன் கத்த… அவனுக்கு கண்டிப்பாக மார்ட்டினின் முகம் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை… சட்டெப்று இருவரும் திரும்பி அவனை முறைத்து பார்த்தவர்கள்… “இங்க வந்து பாருடா யாருன்னு…” என்று கத்த..
“ம்ச் அப்படி யார்ரா அது..”என்று வேகமாக வந்தவனுக்கு மார்ட்டினை கண்டிப்பாக எதிர்ப்பார்க்கவே இல்லை… அவனின் இருக்கமான முகம் அந்த அவனுக்கு பீதியை தான் கிளம்பியது…
“ஜீ..” என்று பதறியவனோ சட்டென்று மார்ட்டினின் காலடியில் போய் உட்காந்து விட… இதனை யார் கவனித்தார்களோ இல்லையோ அவனுக்கு பின்னால் கோழிக்குஞ்சு போல நடுங்கிக் கொண்டிருந்த அந்த பெண்ணவளின் பார்வையில் இதெல்லாம் ஆழமாக பதிந்து போனது.
ஒரு நிமிடம் அவளது பூப்போன்ற இதழ்கள் குருவி வாயை போல பிளந்துக் கொள்ள… மார்ட்டினும் இப்போது அவளை தான் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான்… அவனது கண்கள் அவனையும் மீறி அவளது பிளந்த வாயிலேயே போய் நிற்க.. அவனது உடல் எல்லாம் ஜிவ்வென்று ஏறியது.. ஆனால் அந்த உணர்வினை மார்ட்டின் அடியோடு வெறுத்தான்.
சட்டென்று தன்னை சமாளித்துக்கொண்டவனோ தனக்கு பின்னால் நின்று கொண்டு உரசிக்கொண்டு நிற்கும் பெண்ணவளை எரித்த பார்வை பார்த்தவன்… “இடியட்… அறிவில்ல…” என்று வேகமாக கத்த..
அதில் அதிர்ந்த பெண்ணோ சட்டென்று அவனை விட்டு பின்னால் நடக்க… ஆனால் ஒரு அடி தான் பின்னால் நகர்ந்து இருப்பாள் முழுதாக அவனை விட்டு நகர அவளுக்கு என்ன பைத்தியமா? இதுவரை அங்கு நடக்கும் அனைத்தையும் அவள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள்.. மார்ட்டினை பார்த்து அந்த மூவரும் மிரண்டு போய் நிற்பதும் அந்த பெண்ணவளின் கண்களுக்கு நன்றாகவே தெரிந்தது….
“ஜீ…” என்று அந்த மூவரும் சட்டென்று அவனுக்கு முன்னால் மண்டி போட… அவர்களை எரிப்பார்வை பார்த்தவன்… “திஸ் இஸ் மை ப்ளேஸ்…. இந்த பப்குள்ள உங்களால எந்த பிரச்சனையும் வரக்கூடாது… பஸ்ட் அவுட்….” என்று ஆத்திரமாக கத்த… அதில் அந்த மூவரும் மிரண்டே போனார்கள்…
“தெரியாம வந்துட்டோம் ஜி எங்களை மன்னிச்சிடுங்க…” என்று அவர்கள் பயத்துடன் கூற…
“ம்ம்ம்….”என்ற மார்ட்டினோ அங்கிருந்து வேகமாக கிளம்ப முயல…. அதில் சட்டென்று அவனது கோட்டை இறுக்க பிடித்துக் கொண்டாள் அவள்…
“சார் ப்ளீஸ் சார்…” என்று அவள் பாவமாக கெஞ்ச…
அதனைக் கண்ட மார்ட்டினோ முகத்தை கற்பாறையாக இறுக்கியவன் வெடுக்கென்று தன் கோர்ட்டில் இருந்து அவள் கையை தட்டிவிட்டவன் அவளை அனல் பார்வை பார்த்தான்… அவனுக்கோ அவள் மார்ட்டினின் நெஞ்சில் அளவில் மட்டுமே தான் இருந்தாள்…. அவள் கெஞ்சலாக மார்ட்டினை பார்த்துக் கொண்டிருக்க மார்ட்டினோ அவளை நீ யார் என்பது போல பார்த்தவன்…
“உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்… எதுக்காக நான் உன்னை சேவ் பண்ணனும் ..”என்று எடுத்தெறிந்து பேசியவன்.. மறுபடியும் அந்த மூவரையும் திரும்பிப் பார்த்து “மறுபடியும் சொல்றேன் இது என்னோட பப்… இங்க வேற சம்பவமும் நடக்கிறதுக்கு நான் அனுமதிக்க மாட்டேன்… எதுனாலும் வெளில வச்சுக்கோங்க…” என்று படார் என்று உரைத்தவன் வேகமாக அந்த சிறு பெண்ணை திரும்பி பார்க்காமலேயே அந்த பப்பினை விட்டு விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்து விட்டான்…
“டேய் அதான் சொல்லிட்டாருல.. தூக்குங்கடா அவள…”என்று அந்த மூவரும் அவளை நோக்கி நெருங்க…
மார்ட்டினின் செயலில் அதிர்ந்து போன பெண்ணவளோ அவர்கள் தன்னை நெருங்குவதை பார்த்து மிரண்டவள்… “சார் ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்… காப்பாத்துங்க சார்…” என்று மைத்ரேயியும் அவன் பின்னால் ஓட ஆரம்பித்தாள்… ஆனால் அவளால் முடியவில்லை… சட்டென்று அந்த மூவரும் அவளை இறுக்க பிடித்துக் கொண்டவர்கள்….
“டேய் சீக்கிரம் இவள தூக்குங்கடா… இந்த இடத்தை விட்டு சீக்கிரம் வெளியில் போய்டனும்டா…” என்று பரபரப்பாக கத்த…
அதிலேயே மற்றவர்களும் தலையாட்டியவர்கள் பெண்ணவளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்கள்…, “அண்ணா ப்ளீஸ்ண்ணா… என்ன விட்டுடுங்கண்ணா… நான் எங்கையாச்சும் ஓடிடுறேண்ணா… என்ன விடுங்கண்ணா…” அவர்களிடம் கெஞ்சி கதறி கூப்பாடு போட… ஆனால் அவர்களோ அதனை கேட்டு மனமிறங்கவே இல்லை..
இங்கு மார்ட்டினோ காரில் ஏறி உட்கார்ந்தவனுக்கு ஏதோ அவனின் நெஞ்சம் குறுகுறுவென்று குறுக்குறுத்தது.. அவன் மனம் படப்படத்து கொண்டே இருக்க அதனை வருடியவாறு இருந்தவனுக்கு கொஞ்சமும் காரினை ஓட்டும் நிதானம் எல்லாம் இல்லவே இல்லை…அவன் வழக்கமாக குடிக்கும் அளவை கூட இன்று குடிக்கவில்லை கம்மியாகத்தான் குறித்து இருந்தான்… ஆனால் ஏதோ ஒன்று அவனின் நெஞ்சை அழுத்துவது போல இருக்க.. அந்த அழுத்தம் தாங்காதவனோ அப்படியே ஸ்டேரிங்கில் தலை வைத்து படுத்துக்கொண்டு இருந்தவனின் கண்களுக்கு சிறிது நேரத்திற்கு முன்பு தன்னை கெஞ்சலாக பார்த்துக் கொண்டிருந்த அந்த பெண்ணவளின் முகம் தான் வந்து சென்றது… அதனை கண்டு வேகமாக தலையை குலுக்கியவன்….
“ஓஓஓ சேட்… வாட் ரப்பிஸ் திஸ்… யாருனே தெரியாதவ ஏன் என் கண்ணு முன்னாடி வந்து போறா…” என்று தலையை உலுக்கியவன் வேகமாக காரினை எடுத்துக்கொண்டு தன் வீட்டினை நோக்கி பறந்து விட்டான்…
இங்கு அந்த பெண்ணை மறுபடியும் அந்த அரக்கனிடமே மாட்டிக்கொண்டு தவித்துக் கொண்டிருந்தாள்…
மைத்ரேயியோ தனக்கு முன்னால் வெறி கொண்ட சாத்தானாக முறைத்தவாறே அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கும் அதை நிவாஸினையே மிரட்சியாக பார்த்துக்கொண்டிருந்தாள்…
அவனோ இவளையே அனல் கக்க பார்த்துக்கொண்டிருக்க… தைரியத்தை வரவழைத்துக்கொன்ட பெண்ணவளோ… “ப்ளீஸ் சார் என்னை விட்டுருங்க சார் எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே சார்.. ஏன் சார் என்ன டார்ச்சர் பண்றீங்க… நான் உங்க பொண்ணு மாதிரி சார்… என்னை விட்ருங்க சார் நான் எங்கேயாவது போய்டுறேன்… உங்க கண்ணுல கூட இனி விழ மாட்டேன்… இந்த ஊரை விட்டு ஓடிடுறேன் சார் ப்ளீஸ்…” என்று அழுதவாறே கெஞ்சி கொண்டே இருக்க…
அந்த நிவாஸோ அதனை எல்லாம் காதில் வாங்குவதாக இல்லை. அவனின் கண்கள் அவளையே படிப்படியாக அளந்து கொண்டிருக்க… அதில் பெண்ணவளுக்கு இன்னும் பயம் ஏறத்தான் செய்தது.
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இவ்ளோ பாதுகாப்பு போட்டும் இந்த வீட்டை விட்டு வெளில ஓடி இருப்ப…” என்று நிவாஸ் அவளுக்கு முகத்திற்கு நெருக்கமாக தன்னுடைய முகத்தை கொண்டு வந்தவாறே பேச…
அவளோ பயத்தில் தன் முகத்தை பின்னால் நகர்த்தி கொண்டு சென்றவளுக்கு இதன் பிறகு எப்படி அவனிடமிருந்து தப்பிப்பது என்றே தெரியவில்லை… தனக்காக அழகாக ஒரு வாய்ப்பு கிடைக்க அதனையும் அப்படியே கோட்டை விட்டுவிட்டு மறுபடியும் இந்த கொடூரனிடமே மாட்டிக்கொண்டு தவித்துக் கொண்டிருப்பதை நினைத்து பெண்ணவளுக்கு கதறி அழத்தான் தோன்றியது..
“ஏன் பேபி என்ன உனக்கு புடிக்கல…” என்று அந்த நிவாஸ் கோவத்தில் கத்தி கொண்டு இருக்க… மைத்துக்கோ அந்த குரலை கேட்க கேட்க உடல் தூக்கிப் போட்டது… அன்னையும் இல்லாமல் தந்தையும் தன்னை கவனிக்காமல் புத்தம் புதுசாக வாழ்க்கையை அமைத்து போக… ஏனோ தானோ என்று அன்பிற்கு ஏங்கி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தவளுக்கு வாழ்க்கை எவ்வளவு மோசமாக அடி கொடுத்திருக்கக் கூடாது என்றுதான் அவளுக்கு இந்த நிமிடம் வரை தோன்றிக் கொண்டே இருக்கிறது…
“ஏன் ம்மா என்ன விட்டுட்டு போன.. பேசாம அப்போவே என்னையும் உன்கூட கூட்டிட்டு போயிருக்கலாம் இல்ல…” என்று இந்த குழந்தை பெண் இப்போதும் தன் அன்னையை நினைத்து ஏங்கிக் கொண்டே இருக்க.. ஆனால் அவளுக்கு முன்னாள் நின்று இருந்தவனுக்கு அவள் ஒரு சதை பிண்டமாக தான் தெரிந்தாள்…
“இங்க இவ்வளவு பெரிய சொத்து இருக்கு… இதுக்கு வாரிசா இருக்கிறதுக்கு ஒரே தகுதி உனக்கு மட்டும் தான் இருக்கு… கூடிய சீக்கிரம் நமக்கு கல்யாணம் நடந்துரும்… இன்னும் நாளு நாளுல குருஜி டேட் ஃபிக்ஸ் பண்ணிருக்காரு நமக்கு மேரேஜிக்கு… அதுக்குள்ள இப்படி வீட்டை விட்டு ஓடிப் போக பாத்திருக்கியே செல்லம்…” என்று அவளின் கண்ணத்தை பிடித்து கிள்ளியவனை கண்டு அருவருத்து போனாள் மைத்து..
“இன்னொரு தடவை இந்த வீட்டை விட்டு ஓடனும்னு நீ நெனச்சனா…” என்று ஒரு மாதிரி மிருகம் போல கண்கள் பளப்பளக்க கத்தியவானோ… பின்னால் திரும்பி தன் ஆட்களை பார்த்து.. “ம்ம்ம் கொண்டு வாங்க அவனை…” என்று ஆக்ரோஷமாக கத்த… அடுத்த நிமிடம் இவளை காப்பாற்றி வெளியில் அனுப்பி வைத்த பணியாளரை நான்கு பேர் அல்லேக்காக அதே நேரம் பிணமாக அந்த ரூமுக்கு எடுத்து வர….
அதனை பார்த்தவளுக்கு அது யாரென்று விளங்கி போனது… “ஆஅ ஐயோ அவரை விட்டுருங்க ப்ளீஸ்…” என்று கதறிக் கொண்ட கிடக்க… அதனை பார்த்த நிவாஸீற்கு குதுக்கலமாக இருந்தது.. பெண்ணவளோ தன்னால் ஒருவன் சாக கிடைப்பதை பார்த்து கண்ணீர் வடிக்க….
ஆனால் அதனை கேட்க தான் மனிதர்கள் என்று அங்கு யாருமே இல்லை… நிவாஸ் அவளைப் பார்த்து கோணலாக சிரித்தவர் “இவன்தானே உன்ன காப்பாத்துனவன்…”என்றவனோ… “ம்ச் ஆனா நீ கதறுறத பாக்க பாவம் அவன் உயிரோட இல்லயே..” கூறியவாறு தன் பாக்கெட்டில் இருந்த போதை வஸ்துவை எடுத்து வாயில் போட்டுக்கொள்ள…
அவன் கூறியதை கேட்டு அதிர்ந்தவளோ அந்த பணியாளரின் உடலை பார்த்து பார்த்து அலறலாக அலறிக் கொண்டே இருந்தாள்… அவள் வாயை சட்டென்று பொத்திய நிவாஸோ “எனக்கு இப்படி எல்லாம் கத்துனா பிடிக்காது பேபி….” என்று கூறியவன்…
“உனக்கு ஒரே ஒரு வாய்ப்பு தான்… அதுவும் என்னை மேரேஜ் பண்ணிக்கிறது மட்டும்தான்… பேசாம வாய மூடிட்டு அடக்கமா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு ராணி மாதிரி இந்த வீட்டுல இரு… அத விட்டுட்டு ஓடனும்னு நெனச்ச…” என்று மிரட்டியவனை கண்டு அவளுக்கு அழுகை கதறலாக வந்தது..
“சார் ப்ளீஸ் சார் நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க… உங்களுக்கும் எனக்கும் வயசு வித்தியாசம் ரொம்ப ஜாஸ்தி சார் ப்ளீஸ் நான் சொல்றத கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க சார்…. உங்க பொண்ணு மாதிரி சார் நானு..” என்று மைத்து கெஞ்ச ஆரம்பிக்க…
அதில் இல்லை என்று தலையாட்டியவனோ அவனின் முடிவில் உறுதியாக இருந்தான்… “எனக்கு பொண்ணும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது.. சொல்ல போனா எனக்கு வாரிசே கிடையாது.. அதுல எனக்கு எந்த விருப்பமும் கிடையாது…” என்று கூறியவனோ… “உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அதுவும் உன்னுடைய இளமையும், அழகும்….”என்று அவளது கன்னத்தில் தன் விரல்களை வைத்து ஒரு கோடு போட அவளின் உடல் அறுவறுத்து போனது.
“என்னை அப்டியே பித்து செய்யிது…“என்றவன்… “நீ எவ்வளவு கெஞ்சினாலும் கதறுனாலும்.. உன்ன காப்பாத்த யாரு வந்தாலும் நீ இங்க இருந்து தப்பிக்கவும் முடியாது.. இங்கிருந்து வெளில போகவும் முடியாது பேபி..” என்று கூறியவனோ “பிடிவாதம் பிடிக்காம கல்யாணத்துக்கு ரெடியாகு…” என்று கடைசியில் கூறிவிட்டு அந்த இடத்தினை விட்டு வெளியேறி விட்டான்… அன்றிலிருந்து மைத்ரேயி அந்த இருட்டு அறையில் உட்கார்ந்து அழுதவாறு இருப்பதை தவிர வேறு வழியும் அவளுக்கு கிடைக்கவில்லை..
(கேப்பச்சினோ….)