இன்னுமே அவளின் அதீத கற்பனை திறன் மிகுந்த இவ்வளவு நீண்ட கனவை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.
தன்மேல் அவனுக்கு அதே காதல் இருக்குமா? என மனதில் எழுந்த கேள்வியுடன் பதைபதைப்பாக திரும்பியவள் திகைத்தாள்.
அவனோ, மென் புன்னகையுடன் தான் நின்று இருந்தான்.
இவ்வளவு நேரம் விபீஷனுடன் வார்த்தைக்கு வார்த்தை பேசிக் கொண்டு இருந்தவளுக்கோ இப்போது ஜெய் ஆனந்த்தை பார்த்ததும் வார்த்தைகளோ தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்டு சதி செய்தன.
“தியா, ஆர் யூ ஆல்ரைட்?” என்று தன் முதல் வார்த்தையை உதிர்த்து இருந்தான் ஜெய் ஆனந்த்.
ஆக, தன் முக உணர்வுகளை படித்து விட்டானா என்ன?
அடி வயிற்றில் குறுகுறுத்தது.
அவன் கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் கூறும் நிலையில் அவள் அல்லவே!
திருதிருவென விழித்தவள் “ஹான்”, என்றவள் குரல் அடைத்துக் கொண்டது.
அவனை பார்த்த விழி பார்த்த படி நின்று இருக்க, அவளின் பார்வை வீச்சோ அவனது பார்வையுடன் கலக்க, “தியா” என்றான் மென்மையாக …
அப்பப்பா… இந்த குரலை கேட்கவே பல ஜென்மங்கள் தவம் இருக்கலாம் போலவே என்று எண்ணிக் கொண்டவளுக்கு அவனது காதலை மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற பேராவல் எழுந்தது.
அவள் வாயை திறந்து பேசுவதற்குள் அங்கே வந்த வித்யா “என்னடி தூங்கி எழுந்து அப்படியே வந்திருக்க. ஆம்பளை பசங்க இருக்க வீட்ல இப்படியா வந்து நிற்கிறது?” என்று பேசிக் கொண்டே போக, அவளுக்குத் தான் தன்னவன் முன்னிலையில் இப்படி அன்னை திட்டுகின்றாறே என நினைத்து நொந்து கொண்டவள் “சாரி” என்ற படி மேலும் இங்கு நின்றால், தன்னவன் முன் மானம் போய்விடும் என்று ஊகித்தவள் வீட்டின் நுழைவாயிலை நோக்கி நடந்தாள்.
“அத்தை எதுக்காக தியாவை பேசுறீங்க?” என்ற அவனின் குரல், போகும் அவளின் செவியில் தேன் போல பாய்ந்தது.
‘அதே போல தான் பேசுறான். நம்ம கனவுல வந்தது மாதிரி ஒன்னும் நடக்கலைனாலும் இதுவும் லைட்டா நல்லா தான் இருக்கு’ என்று தனக்குள் பேசிக் கொண்டே தன் வீட்டை அடைந்தவள் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள வேகமாகத் தன் அறைக்குள் புகுந்திருந்தாள் பெண்ணவள்.
சற்று நேரத்திலேயே குளித்து விட்டு மீண்டும் ஜெய் ஆனந்த்தை பார்க்கத் துடித்த அவளின் மனதை சிரமப்பட்டு அடக்கியவள் அவன் அணிந்திருந்த ஷர்ட்டின் நிறத்திலேயே வெண்ணிற சுடிதாரொன்றை அணிந்துக் கொண்டவள் தன்னை அலங்கரிக்க ஆளுயரக் கண்ணாடியின் முன் அமர்ந்தும் விட்டாள்.
இங்கோ, ஜெய் ஆனந்த்தின் தோள் மேல தன் கையை போட்டுக் கொண்டே அவனைப் பார்த்தவன் “இத்தனை வருஷமா எப்படிடா பிட்டா பாடிய மெயின்டெய்ன் பண்ணிட்டு இருக்க?” என்று கேட்க…
அதற்கு மெலிதாக சிரித்துக் கொண்டவனோ “ நீ எப்படி மெயின்டெய்ன் பண்றியோ அதுபோல தான்” என்று தோள்களை குலுக்கிக் கொள்ள, “சரி தான் என்று சொன்னவன் “நீ இல்லாம செம்ம போர் டா” என்று சொன்னவனை பார்த்து “ இஸ் இட்?” என்றான் கேள்வியாக…
“ஒப்கார்ஸ், என்றவன் குரலை செருமிக் கொண்டே அப்புறம் லவ் எல்லாம் எப்படி போகுது?” என்றான் ஒரு மார்க்கமாக…
“என்னை பார்த்தா லவ் பண்ணிட்டு வந்த போலவா தெரியுது?” என்றான் புருவம் உயர்த்தி…
“போட்டு வாங்க தான் கேட்டேன். நீ மேரேஜ் பண்ணிக்கிட்டா தானே என் ஆளை எனக்கு கல்யாணம் பண்ணிக்க முடியும்” என்றான் விபீஷன்.
இதழ் குவித்து ஊதிக் கொண்டே “லவ்வா ? நைஸ் ஜோக் என்று சத்தமாக சிரித்தவன் நோ ஐடியா வீட்டுல பார்க்குற பொண்ணை மேரேஜ் பண்ணிக்கிற எண்ணம் தான்” என்ற ஜெய் ஆனந்த்தின் வார்த்தைகள் வீட்டின் உள்ளே சந்தோஷமாக அவனைப் பார்க்கவென்றே ஓடி வந்த ஆஹித்யாவின் காதில் விழ,
அவ்வளவு தான் துடித்துப் போனாள்.
‘அப்போ அவ்வளவு தானா?’ என்று மனதில் கேட்டுக் கொண்டவள் புத்தி பேதலித்து போனவள் போல விழிகள் இரண்டும் கலங்க மீண்டும் கனவேதும் காண்கின்றோமா? என்ற எண்ணத்தில் தன் கையை நறுக்கென்று கிள்ளிப் பார்த்தாள் பேதை பெண்.
அந்தோ பரிதாபம்.
அடுத்த கணமே சுளீர் என்ற வலி அவளின் கையில் பரவி நிதர்சனத்தை விளக்கியது.
அப்படியென்றால் அவனின் தன் மீதான காதல் வெறும் கனவு தானா?
இதயம் விம்மியது.
அடுத்த நொடியே அவளின் மூளையோ, ‘ முட்டாள், கனவில் நடந்தவை யாவும் அச்சு பிசகாமல் நடக்கும் என்று யார் சொன்னது?’ என்ற கேள்வியை எழுப்ப, அவனின் கரை காணாத காதல் வேண்டும் என்று அவளின் மனதோ துடியாய் துடித்தது.
விபீஷனுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ஜெய் ஆனந்த்தை வெறித்தாள்.
கனவில் ஒரு வாழ்க்கையே வாழ்ந்து விட்டாள்.
அவனுக்காக மட்டும் அல்லவே ஒட்டுமொத்த குடும்பத்தின் கண்ணீரையும் அவள் அல்லவா உணர்ந்து படுக்கையிலேயே அழுது கரைந்தாள்.
இன்னுமே மனதின் ரணம் குறைந்த பாடும் இல்லை. இதில் மீண்டும் மீண்டுமா? நினைக்கையிலே ஆயாசமாக இருந்தது.
அவன், நான் கிடைக்கவில்லை என்றதும் பட்ட துன்பங்களை உணர்ந்தாள் அல்லவா!
இப்போது அனைத்தும் தலைகீழாக போய்விட்டதே!
இதயம் படபடக்க அங்கே இருந்த சோஃபாவில் தொப்பென அமர்ந்து விட்டாள்.
காலையிலிருந்து பைத்தியம் போல சுற்றித் திரிந்தவள் இப்போது விரக்தியாக அமர்ந்து விட, அவளையே யோசனையாக நோக்கிய படி தேனீரை அருந்திக் கொண்டே அவளருகில் வந்தமர்ந்த பவ்யாவோ “ சாரி டி” என்றாள்.
தன்னருகில் கேட்ட பவ்யாவின் குரலில் தன்னை நிலைப் படுத்திக் கொண்டே “என்ன சொன்ன?” என்று கேட்டாள்.
“என்னடி என்னை கெஞ்ச வைக்கிறியா?” என்று கேட்டாள்.
உள்ள தலைவலியில் இவள் வேறு என்று நொந்துக் கொண்டவள் “நான் எதுக்காக உன்னை கெஞ்ச வைக்க போறேன்? நீ கேட்டது என்னனு என் காதுல உண்மையாவே விழல பிகாஸ் நான் வேற திங்க் பண்ணிட்டு இருந்தேன்”. என்றாள் நெற்றியை அழுத்தி விட்ட படி…
“ஓகே, என்றவள் மார்னிங் உன்ன ரூடா ஏசிட்டு வந்துட்டேன் சோ அதுக்காக சாரி. இப்படி மூஞ்சை தூக்கி வச்சிட்டு இருக்காத பார்க்க சகிக்கல” என்றாள்.
‘ஓஹோ மேடம் இவங்களுக்காக சோகமா இருக்கேன்னு நினைச்சிடாங்க போல, ஆஹி அப்படியே மெயின்டெய்ன் பண்ணிக்கோ’ என்று மனதில் சொல்லிக் கொண்டவள் “இட்ஸ் ஓகே நமக்குள்ள சண்டை வர்றது புதுசா என்ன?” என்றவள் வலுக்கட்டாயமாக சிரித்து வைத்தாள்.
“உன்னை அத்தை கூட்டிட்டு வர சொன்னாங்க சோ நானே வீட்டுக்கு வர்லாம்னு இருந்தேன் பட் தேங் கோட் நீயே வந்துட்ட என்ற படி தேனீர் கோப்பையை அவளின் கையில் திணித்தவள் நான் காலேஜ் கிளம்புறேன் என் செல்லம்ல கழுவி வச்சிடு”. என்று சொல்லி விட்டு சென்றவளை ஜெய் ஆனந்துடன் பேசிக் கொண்டு இருந்த விபீஷனின் பார்வை காதலாக அவளைப் பின் தொடர்ந்தது.
‘ ஒரு சாரியை கேட்டுட்டு என்னை வேலைகாரியாக்கி விட்டுட்டு போறா’ என்று கறுவிய படி எழுந்து கொண்ட பெண்ணவளோ சலிப்புடன் சமையலறைக்குள் நுழைந்திருந்தாள்.
அவளுள் ஆயிரம் எண்ணங்கள்.
அவன் தன்னை காதலிக்கவில்லை என்றாலும் வேறு யாரையும் அவன் விரும்பவில்லை என அவனின் பேச்சுக்களில் இருந்து புரிந்து கொண்டவளுக்கு சற்றே ஆசுவாசமாக இருந்தது.
ஒரு பெரு மூச்சுடன் சமையற் கட்டில் பாய்ந்தேறி அமர்ந்தவள் மனமோ ‘ வீட்டுல கல்யாண பேச்சு எடுத்த நாம குறுக்குல புகுந்திட வேண்டியது தான் சாருக்கு வீட்டுல பார்க்குற பொண்ணாமே வேணும்’ என்று நொடித்துக் கொண்டவளுக்கு சட்டென தூக்கி வாரிப் போட்டது.
என்னவோ மனதில் உறுத்தலாக இருக்க, கனவே என்றாலும் அவளின் கன்னித் தன்மையை அறிந்து ஆக வேண்டும் என்று மனம் ஒருநிலையில் இல்லாது தவித்தது.
இதை எண்ணும் போதே முட்டாள் தனமாக இருந்தாலும் காலையிலிருந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற நம்ப முடியாத அதிர்ச்சியில் அவளால் சாதாரணமாக இருக்கவே உடல் கூசியது.
அப்படியென்றால் நீ கன்னித்தன்மை உடையவள் இல்லையென்றால் என்ன செய்யப் போகிறாய்? என்ற கேள்வி எழ, திடுக்கிட்டு கலங்கிப் போனாள்.
எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டவள் ‘ இல்லையென்றால் கலங்கமான நான், என்னவனுக்கு தேவையே இல்லை. மொத்தமாக விலகி விடலாம்’ என்ற பதிலை அவள் மனம் சொல்லும் போதே இதயத்தை கசக்கிப் பிழிவது போல வலி எழுந்தது.
கிராமம் வேறு! எங்கே செல்வது? செல்ல வேண்டும் என்றால் அவன் நிருவகிக்கின்ற மருத்துவமனைக்கல்லவா போக வேண்டும்.
தலையில் கையை வைத்துக் கொண்டாள்.
என்ன சொல்லி எப்படி கேட்பது?
பரிசோதிக்க சென்றால் காரணம் கேட்டால் என்ன சொல்வது? என்ற எண்ணம் உள்ளத்தை பதற வைத்தது.
இது சரிப்பட்டு வராது சதையில் முள் குத்திவிட்டால், அப்புறப் படுத்த முள்ளை வலிக்க வலிக்க எடுத்தாலே அன்றி அதன் வழி குறையப் போவதே இல்லையே!
அதுபோல எதையாவது செய்தாவது தன் மனதின் உறுத்தலை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வெறியில் சமயற் கட்டில் இருந்து இறங்கிக் கொண்டவள் மெதுவாக ஹாலிற்குள் எட்டிப் பார்த்தாள்.
உடற்பயிற்சி செய்ய மேலே மொட்டை மாடிக்கு தானே வந்ததாக வேண்டும்.
‘பார்த்து பதமா கேட்டுடலாம் ரீசன் கேட்டா எதாச்சும் ரீசர்ச் அது இதுன்னு சொல்லி சமாளிச்சிடலாம்’ என்று தனக்குள் திட்டங்களை வகுத்துக் கொண்டே வேகமாக மொட்டை மாடிக்கு செல்லும் படிகளில் ஏறினாள்.
துப்பட்டாவை கரத்தால் திருகிவிட்ட படி கேட்போமா? வேண்டாமா? என்று மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டு இருந்தாள்.
என்னவோ கேட்டு விட வேண்டும் என்ற எண்ணம் அலைக்கழிக்க, தடுமாற்றத்துடன் கைகளை பிசைந்த படி அடிக்கொரு தடவை படிகளை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவள் செவியோ கூர்மை பெற்றது.
‘ஹையோ… ஆஹி, என் ஜெய் பேபி தான் வர்றார் எப்படியோ சொதப்பாம கெத்தா நின்னு கேட்டுடு’ எனத் தனக்குள் தானே எச்சரித்துக் கொண்டே மாடிப் படியை வெறித்தவள் இதழ்களில் இருந்த புன்னகை வடிந்து போனது.
‘ இந்த வீணா போனவன் எதுக்கு இங்க வர்றான் இரிட்டடேங் இடியட். இவனால தான் எனக்கு இப்போ இந்த அவஸ்தை. சைக்’ என்று கறுவிக் கொண்டே விபீஷனை தீயாக முறைத்தாள்.
இவள் என்ன காலையில் இருந்து என்னை முறைத்துக் கொண்டே சுற்றுகின்றாள் என்ற யோசனையுடன் அவளைக் கடந்துச் சென்று டம்பல்ஸ்ஸை எடுத்து உடற் பயிற்சி செய்ய ஆரம்பித்து விட, அவளுக்கு தான் அவனைப் பார்க்க பார்க்க எரிச்சலாக வந்தது.
அதே கணம், காதில் ப்ளூ டூத்துடன் அழைப்பில் பேசிக் கொண்டே மேலே வந்த ஜெய் ஆனந்த்தைக் கண்டவள் முகமோ சட்டென பிரகாசமானது.
அவள் இங்கு நிற்பதை பார்த்தவன் புன்னகைத்துக் கொண்டே “ஐ வில் கால் யூ பேக்” என்று அழைப்பை துண்டித்து விட்டு திரும்பி அவளை நோக்கியவன் “இங்க என்ன பண்ற?” என்று கேட்டான்.
‘வாய்ல நல்லா வருது’ என்று மனதில் கவுண்டர் கொடுத்தவள் இதழ் பிரித்து புன்னகைத்தவள் “அதுஉஉஉ.. என்று இழுத்தவள் நீங்க எனக்கு ஒரு சின்ன ஃபேவர் பண்ணனும் மாமா” என்க…
“ஷோர்.. தியா” என்று ஜெய் ஆனந்த் சொன்னது தான் தாமதம், அவளோ “நான் வெர்ஜின்னானு டெஸ்ட் பண்ணனும்” என்று வேகமாக கூறி முடித்து இருந்தாள்.
உடற்பயிற்சி செய்து விட்டு நீரை அருந்திக் கொண்டு இருந்த விபீஷனுக்கோ குடித்த தண்ணீர் யாவும் மூக்கின் வழியாக வெளியில் வந்தே விட்டது.
இருமிக் கொண்டே மீதி இருந்த நீரில் முகத்தை அடித்து கழுவியவன் ‘ என்ன பொண்ணுடா இவ’ என்று மனதில் எண்ணிக் கொண்டே “ஜெய் நான் ஹால்ல வெயிட் பண்றேன்” என்று சொன்னவன் வேகமாக படிகளில் கீழிறக்கி சென்று இருந்தான்.
அவள் கேட்ட கேள்வியில் தன் செவியில் வந்து வீழ்ந்த வார்த்தைகள் யாவும் உண்மை தானா என்று மீண்டும் உறுதி செய்து கொள்ள நினைத்தான் போலும்.
“சாரி எனக்கு சரியா கேட்கலன்னு நினைக்கிறேன் என்று ஏர்பொட்ஸை கழற்றி விட்டு அவளை கேள்வியாக நோக்க…
அவன் மீண்டும் கேட்கவும் இம்முறை இதயமோ தடதடக்க ஆரம்பித்தே விட்டது.
இருந்தும் தான் இன்னும் கன்னித் தன்மையாகத் தான் இருக்கின்றோமா? என்று அவளுக்கு அறிந்தே ஆக வேண்டிய கட்டாயம்.
மனதின் உறுத்தலை அறிந்து கொண்டால் தான் என்ன?
எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே, “ வெர்ஜின்… டெஸ்ட்…” என்று வார்த்தைகளை கோர்க்க முடியாது திணறினாள்.
அவளின் வார்த்தைகளில் அதிர்ந்தவன் “ஆர் யூ லாஸ்ட் யுவர் மைண்ட்” என்று கேட்டே விட்டான்.
அவனின் கர்ஜனை குரல் அவளை நொடிப் பொழுதில் கலங்க வைத்திருந்தது.
அத்தியாயம் – 2
கலங்கிப் போய் நின்றவள் தோற்றத்தை பார்த்து தன்னை நிதானித்தவன் “தியா நீ என்ன கேட்குறனு புரிஞ்சி தான் கேட்குறியா?” என்ற அவனது கேள்வியில் திணறியவள் “எஸ் மாமா, நீங்க நினைக்கிற போல எனக்கு எதுவும் இல்ல. ஜஸ்ட் ரிசர்ச்கு தேவை. நான் பிரசன்டேஷன் கொடுக்கணும்” என்று தன் வார்த்தைகளை நிறுத்தி நிதானமாக கூறி இருந்தாள்.
புருவங்கள் இடுங்க அவளை பார்த்தவன் “இப்படி எல்லாம் ரிசர்ச் பண்ணுவீங்களா என்ன? என்ன மாதிரி பிரசென்ட் பண்ண போற ? ஐ மீன் உன் ஐடியா என்ன? “ என்று கேட்டான் சந்தேகமாக…
அவன் தன்னை ஆராயும் பார்வை பார்க்கின்றான் என்று சுதாரித்தவள் தன் முக உணர்வுகளை வெளியில் காட்டாது “ இனிமேல் தான் ஐடியா திங்க் பண்ணனும் மாமா. அதுக்குள்ள ரிப்போர்ட் ரெடி பண்ணி வச்சுக்க பார்த்தேன். இட்ஸ் ஓகே நீங்க பிசியா இருப்பீங்க சோ நான் என் ப்ரண்டோட அண்ணா டாக்டர் தான். அவர்கிட்ட ஹெல்ப் கேட்டுக்கிறேன்” என்றவள் தன் இல்லாத நண்பியின் அண்ணனை உருவாக்கியவள் வாயில் வந்ததை அடித்து விட்டு அப்பாவி போல அவனை நோக்கினாள்.
“ஓஹ் கோட் ஆர் யூ மேட்? இப்படி தான் இன்னொருத்தன் கிட்ட போய் வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்க போறியா தியா? என்று அடக்கப்பட்ட சினத்துடன் கேட்டவன் அவளின் திகைத்த பார்வையில் இதழ் குவித்து ஊதிக் கொண்டே “ஆல்ரைட் நானே எடுத்து தரேன்” என்றதும் ‘இத இதத்தான் எதிர் பார்த்தேன்‘ என மனதில் குத்தாட்டம் போட்டவள் “சாரி மாமா, நீங்க பிசியா இருப்பிங்கனு தான் அப்படி சொல்லிட்டேன் என்று சற்று தயங்கிய படியே எப்போ ஹாஸ்பிடல் வர்றது?” என்று கேட்டாள்.
“வில் மீட் டுமோரோ” என்க.
“ஓகே மாமா தேங்க்ஸ்” என்று பற்கள் பளிச்சிட புன்னகைத்தவள் மேலும் இங்கு நின்றால் இல்லாத ரிசர்ச் பற்றி கேள்விகள் கேட்டே தன்னை ஒரு வழி பண்ணி விடுவான் என்று எண்ணிய பெண்ணவளோ, ‘அவனை சைட் அடி’ என்று கூறிய தன் மனதை கடிவாளம் இட்டு அடக்கியவள் “பை மாமா” என்று படிகளின் அருகே ஓடினாள்.
வேகமாக ஓடிய வேகத்தில் மீண்டும் மேலே காஃபி கப்புடன் வந்த விபீஷன் மீது இடித்து விழ இருந்தவள் சட்டென சுதாரித்து பக்கவாட்டாக இருந்த நிலை சுவரை பிடித்து நின்றே விட்டாள்.
“தியா ஆர் யூ ஆல்ரைட்?” “ஆஹித்யா ஆர் யூ ஆல்ரைட்?” என்ற ஒரே கேள்வி இருவரிடம் இருந்து வந்திருக்க, முதலில் மலங்க மலங்க விழித்தவள் தன் முன் சாந்தமாக நின்று கொண்டிருந்த விபீஷனை முறைத்து விட்டு ஜெய் ஆனந்த் புறம் திரும்பியவள் “அம் ஓகே மாமா” என்றவள் தன்னைக் கடந்து ஜெய் ஆனந்த்தின் கையில் விபீஷன் கொடுத்த காஃபியை பார்த்தவள் சடுதியில் என்ன தோன்றியதோ “ஜெய் மாமா குடிச்சிடாதீங்க” என்று சொல்லிக் கொண்டே வேகமாக அவனை நெருங்கியவள் அவன் நிதானிக்கும் முன்னரே அவனின் கையில் இருந்த காஃபி கப்பை பறித்து மிடறு விழுங்கி விட்டு கப்பை ஜெய் ஆனந்த் கையில் திணித்து விட்டு “ ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க மாமா. எனக்கு எஃபெக்ட் பண்ணுதானு பார்ப்போம். அதுக்கு பிறகு நீங்க குடிக்கலாம்” என்றவள் அவன் அருகில் தன்னையே விழிகள் விரிய பார்த்துக் கொண்டு நின்றிருந்த விபீஷனை தன் அனல் கக்கும் பார்வையால் முறைத்து வைத்தாள்.
“தியா வாட் ஹெப்பென்ட்?” என்ற ஜெய் ஆனந்த்தின் கேள்வியில் திருதிருவென முழித்தவள் இதற்கு என்ன விளக்கத்தை கூறி விட முடியும்?
இவன் கேடு கேட்டவன் உன்னை கொல்ல கூட தயங்க மாட்டான் என்று எப்படி சொல்வது? அதுவும் தன் கனவில் வந்ததை போல அவன் இல்லையே! முற்றிலும் மாறுபட்ட மனிதனாக அல்லவா சாந்தமாக இருக்கின்றான்.
முதலில் தான் என்ன சொன்னாலும் இங்கே இருக்க யாரும் நம்ப மாட்டார்கள் இதில் என்ன விளக்கத்தை உரைப்பது?
‘ஹையோ அவசரத்துக்கு பிட்டு கூட தோணுதில்லையே’ என தன்னை தானே திட்டிக் கொண்டவள் “இதோ வரேன் மா” என்று சத்தமாக கீழ்நோக்கி குரல் கொடுத்தவள் “சாரி அம்மா கூப்பிடுறாங்க” என்று சொன்னவளிடம் “கூப்பிட்ட போல தெரியலையே” என்று நக்கலாக சொன்னது வேறு யாருமில்லை சாட்சாத் விபீஷனே தான்.
விபீஷன் அப்படி கேட்டதும் எங்கு இருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ “ உங்க வேலையை மட்டும் பாருங்க விபீஷன். ஐ திங்க், உங்க காதை கொஞ்சம் செக் பண்ணி பாருங்க. எதாச்சும் ப்ராப்ளம் இருக்க போகுது” என்று முகத்தை உர்றென்று வைத்துக் கொண்டு சொன்னவள் கடை கண்ணில் ஜெய் ஆனந்த் அவளை உறுத்து விழித்துக் கொண்டு நிற்பதை உணர்ந்த பெண்ணவளோ விட்டால் போதுமென தலை தெறிக்க கீழே ஓடி வந்தவள் சட்டென ஸ்விட்ச் போட்டதை போல நின்றாள்.
இதயம் வேகமாக அதிர்ந்து துடிக்க, சத்தம் எழுப்பாது மீண்டும் படிகளில் மேலேறி சென்று பக்கவாட்டு சுவற்றுடன் ஒன்றி நின்ற படி மெதுவாக மேலே எட்டி பார்த்தாள்.
ஆம், இதழ்களில் மென் புன்னகையுடன் அவள் அருந்தி விட்டு கொடுத்த காஃபி கப்பில் வாய் வைத்து சிப் சிப்பாக காஃபியை அருந்திக் கொண்டு நின்றிருந்தான் ஜெய் ஆனந்த்.
அதை பார்த்த அக் கணம், அவள் என்ன மாதிரி உணர்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை.
அவளின் மேனி முழுதும் சிலிர்த்தது.
மனதுக்கு பிடித்தவன் தீண்டினால் மட்டும் தான் உடல் சிலிர்க்குமா என்ன?
மெய் தீண்டா, உணர்வுகளை தூண்டா, பேரின்பம் இது தானே!
சற்று நேரம் சுவரில் சாய்ந்து மென் புன்னகையுடன் நின்றிருந்தவள் மனம் நிறைய கீழே சென்றிருந்தாள் பெண்ணவள்.
இங்கோ, சிலவற்றை பேசிக் கொண்டே பேச்சின் சுவாரஸ்யத்தில் “வேற காஃபி எடுத்து வரட்டுமா?” என்று விபீஷன் கேட்ட கேள்வியில் சட்டென அவன் புறம் பார்வையை திருப்பிய ஜெய் ஆனந்த் “ ஏன் நான் குடிக்கிறது காஃபி போல தெரியலையா?” என்று கேட்க…
“இல்ல ஆஹித்யா?” என்றான் இழுவையாக…
அதற்கு மென் புன்னகையை பதிலாக தந்தானே தவிர, வேறு ஒன்றும் பதில் கூற முனையவும் இல்லை ஜெய் ஆனந்த்.
அவனின் புன்னகையில் விழி விரித்தவன் “சிரிக்கிறதை பார்த்தா என்னவோ சீக்ரெட் இருக்கு போலவே ” என்று நக்கலாக விபீஷன் பாதியோடு கேட்டு விட்டு காஃபியை அருந்திக் கொண்டே கீழே பார்க்க, அதே நேரம் ஜெய் ஆனந்த்தின் பார்வையும் கீழே நின்றவர்களின் மேல் படிந்தது.
பவ்யாவை இறுக அணைத்த படி, அவள் கத்த கத்த கேட்காமல் அவளை வம்பிலுத்த படி செல்லும் ஆஹித்யாவின் மேல் அவன் பார்வை அழுத்தமாக படிந்தது.
“வியர்ட்டா பிஹேவ் பண்ணிட்டு இருக்கா என்று சொல்லிக் கொண்டே விபீஷனைப் பார்த்து எதுக்கு உன்னை எதிரிய பார்க்குற போல பார்க்குறா? உங்க ரெண்டு பேர்குள்ள எதுவும் சண்டையா என்ன?” என்ற ஜெய் ஆனந்த்தின் கேள்வியில், “சண்டை போடுற அளவுக்கு நான் என்ன பண்ண போறேன்? உனக்கு தான் தெரியுமே நான் ரொம்ப சைலண்ட்ன்னு உன்கிட்ட பேசுற அளவுக்கு யார்கிட்டயும் பேச மாட்டேனே” என்று சொல்ல…
“ஹும் கிளம்பலாம்” என்றவன் அவனது காஃபி கப்பை வாங்க முயல,
“இன்னுமே நீ மாறவே இல்ல விபீஷன். பட் இட்ஸ் ஓகே யூ எஸ் ல நானே தான் என் வொர்க்கை பார்த்துப்பேன்” என மென் புன்னகையுடன் கூற…
“சில் டா, என் ப்ரோகு நான் பண்றேன் இதுல என்ன இருக்கு” என்று அவன் கையில் இருந்த காப்பி கப்பை வாங்கிக் கொண்டு படிகளில் இறங்கி சென்று விட்டான்.
இதழ் குவித்து ஊதிக் கொண்டே போகும் அவளின் முதுகை வெறித்த படி நின்றிருந்தான் ஜெய் ஆனந்த்.
அத்தியாயம் – 3
அறைக்குள் வந்து கதவை மூடிக் கொண்டவளுக்கு இன்னுமே தன் முகச் சிவப்பு அடங்கிய பாடு தான் இல்லை.
தான் அருந்தி விட்டு கொடுத்த காஃபியை குடித்து விட்டானே!
“ஹையோ!” என்று வெட்கத்தில் சொல்லிக் கொண்டவள் சுவரில் சாய்ந்து நின்று கொண்டாள்.
இன்னும் இதழ்களில் புன்னகை மீதம் இருந்தது.
அதேநேரம், ஜெய் ஆனந்த் காலை உணவை சாப்பிட வந்தமர்ந்த போதே குரலை செருமிக் கொண்ட பிரதாபன் “ அடுத்து என்ன பண்ண போறதா ஐடியா?” என்று கேட்டார்.
“ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் அஹ் பார்த்துக்கணும் அப்பா” என்று சொல்லிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்து விட, சித்ராவோ பிரதாபனிடம் கண்களில் ஜாடை காண்பிக்கவும் “உனக்கும் விபீஷனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலம்னு முடிவு பண்ணி இருக்கோம் ஆனந்த்” என்ற விடயத்தை போட்டு உடைத்தார்.
இவ்வளவு சீக்கிரம் அவன் தன் திருமணத்தை எதிர் பார்க்க வில்லையே.
அதிர்ந்து தான் போனான்.
“அப்பா கொஞ்ச நாள் போகட்டுமே” என்று சொல்ல…
“அஞ்சு வருஷம் போச்சு டா இனிமேலும் தாமதிக்காம உங்க ரெண்டு பேரோட கல்யாணத்தையும் செஞ்சி வச்சிறணும்” என்று சொன்ன அடுத்த கணமே தன் முன் இருந்த தண்ணீரை மடமடவென பருகிய விபீஷன் “அப்பா எனக்கு பவ்யாவை பிடிச்சு இருக்கு” என்று தன் விருப்பத்தை போட்டு உடைத்து இருந்தான்.
அவன் சொல்லிய வேகத்தில் புரை ஏறியது என்னவோ ஜெய் ஆனந்த்திற்கு தான்.
இறுமிக் கொண்டே தலையை தட்டிக் கொண்டவன் விபீஷனை திரும்பி பார்க்க, அவனோ கூலாக அமர்ந்திருந்தான்.
அவன் கூறிய தொனியில் சித்ரா சிலை போல நின்றிருக்க, முதலில் சுயம் அடைந்த பிரதாபன் “நாங்க பார்த்த பொண்ணே அவ தான்டா” என்று சிறு புன் முறுவலோடு கூற, என்ன சொல்லப் போகிறார்கள் என்று உள்ளே எழுந்த மெல்லிய பதட்டத்துடன் முகத்தில் ஏதனையும் காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தவனுக்கு தன் தந்தை கூறிய விடயத்தில் இதழ் பிரித்து புன்னகைத்தான் ஆனால் அடுத்த கணமே சட்டென என்னவோ தோன்ற “அப்பா அண்ணா?” என முகத்தில் குழப்பத்துடன் கேட்க,
“ஆஹித்தியா தான் நம்ம வீட்டு மூத்த மருமகள்” என்று சித்ரா கூற,
“வாவ் சூப்பர்ல” என்று ஜெய் ஆனந்த்தின் தோளில் கையை போட்டுக் கொண்டான் விபீஷன்.
“முதல்ல உங்க ரெண்டு பேருக்கும் சம்மதமான்னு நாங்க கேட்க அவசியம் இல்லை போல இருக்கே” என்று சித்ரா கேலியாக கேட்க…
“புரிஞ்சா சரி தான்” என்று எழுந்து கொண்டான் விபீஷன்.
“டேய், எங்கடா போற இன்னைக்கே நல்ல நாள் தான் தள்ளி போடாமல் கிளம்புங்க ரெண்டு பேரும் போய் பொண்ணு பார்த்திட்டு வந்துடலாம்” என்று சித்ரா சொல்ல,
“வாட் இன்னைக்கா?” என்று ஜெய் ஆனந்த் மற்றும் விபீஷன் ஒரே நேரத்தில் அதிர்ந்து போய் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.
“பின்ன, இன்னைக்கு விட்டா இனி அடுத்த வாரம் தான் நல்ல நாள் வருது அது வரையும் எதுக்கு டா பார்த்திட்டு இருக்கணும்? சீக்கிரம் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி பார்த்திடணும்ன்னு எங்களுக்கு ஆசை இருக்காதா?” என்று ஆதங்கமாக கேட்க,
“சித்ரா” என்ற பிரதாபனின் அழைப்பில் அவரோ அமைதியாகி விட, “என்னப்பா இன்னைக்கு என்ன?” என்று தன்மையாக கேட்டார்.
“ நான் ஆஹித்யா கூட பேசணும் அப்பா” என்று சொல்ல.
“அதுக்கு தானே போறோம் அங்க போய் பேசிக்கலாம்” என்று சித்ரா ஆரம்பித்து விட,
“சித்ரா நீ உள்ள போ” என பிரதாபன் கூற,
“அப்பாவும் மகனும் என்னவோ பண்ணுங்க” என்று நொடித்துக் கொண்டு சமையல் கட்டுக்குள் நுழைந்து கொள்ள,
போகும் அவரை பெரு மூச்சுடன் பார்த்து விட்டு திரும்பிய பிரதாபன் “உனக்கு ஆஹித்யாவை பிடிக்கலையா ப்பாஹ்?” என அவன் தயங்குவதை பார்த்து கேட்க,
அவசரமாக “அப்பா அப்படி எல்லாம் இல்ல. எனக்கு ஓகே தான். பட் இந்த ஒன் வீக்ல நிறைய வொர்க் இருக்கு சோ நெக்ஸ்ட் வீக் சரியா வரும் பாஹ்” என்றவன் திரும்பி விபீஷனை ஒரு பார்வை பார்த்து விட்டு “விபீஷனை கூட்டிட்டு போங்களேன்” என்று கோர்த்து விட,
‘ நாசமாபோச்சு’ என்று மனத்தில் சொல்லிக் கொண்டவன் “நானும் நெக்ஸ்ட் வீக் பார்த்துக்கலாம்னு இருக்கேன்” என்று சொல்ல…
இருவரையும் புரியாமல் பார்த்துக் கொண்டு நின்ற பிரதாபனோ “ அப்போ அடுத்த வாரம் பார்த்துக்கலாம்” என்று சொன்ன பிரதாபன் வாயில் வரை சென்று மீண்டும் திரும்பியவர் “ மில் ல எதுவும் வேலை விட்டு வச்சுட்டியா என்ன?” என்று விபீஷனிடம் கேட்டு விட,
அவனோ, ‘ஓஹ் கோட் இவர் வேற, அவளை கரெக்ட் பண்ண டைம் கிடைக்கும்னு பார்த்தா கேள்வி கேட்டே ரவுண்ட் கட்டுறாங்க’ என்று சொல்லிக் கொண்டவன் “இல்ல ப்பாஹ் என்றவன் பிடரியை வருடிக் கொண்டு சம்பந்தமே இல்லாமல் “அண்ணா கூட ஹாஸ்பிடல் கிளம்புறேன்” என்றான்.
இதழ் குவித்து ஊதிக் கொண்டே இருக்கையை விட்டு எழுந்த ஜெய் ஆனந்த் “நெக்ஸ்ட் வீக் பேசலாம் ப்பாஹ்” என்று சொன்னவன் திரும்பி ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன் வெயிட் பண்ணு” என விபீஷனிடம் சொன்னவன் தன் அறையை நோக்கி சென்றிருந்தான்.
இங்கோ, வித்யா கூறிய விடயத்தில் இன்ப அதிர்ச்சியில் அமர்ந்திருந்தாள் ஆஹித்யா.
இவ்வளவு சீக்கிரத்தில் தன் எண்ணம். தன் காதல் கைகூடும் என்று விளையாட்டிற்கு கூட அவள் நினைக்கவில்லையே!
ஜெய் ஆனந்த்துடன் தான் திருமணம் என்று சொன்னதும் இதோ இன்னுமே அவளால் நம்ப முடியாத அதிர்ச்சியிலிருந்தாள்.
சிந்தனையில் இருந்தவளை பார்த்துக் கொண்டே அவளின் அறைக்குள் கோபமாக உள்ளே வந்த பவ்யா “ கடுப்பா இருக்கு” என்று சொல்லிக் கொண்டே வந்து கட்டிலில் அமர்ந்தாள்.
தன் எண்ண ஓட்டங்களில் இருந்து மீண்ட பெண்ணவளோ “ஏன் டி என்னாச்சு?” என்று கேட்க,
“இப்போ எனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை” என்று அவள் தலையில் இடியை இறங்கினாள் பவ்யா.
“விபீ பின்னாடியே சுத்தி லவ் பண்ணி அழுது கரைஞ்ச, இப்போ என்ன கசக்குதோ?” என்று தன் வாயில் வந்ததை உலற, “வாட்? என்ன சொல்ற?” என புரியாமல் கேட்டாள் பவ்யா.
ஆஹித்யாவோ “ஹி ஹி சும்மா” என்று சமாளிக்க முயல…
“நீ என்ன சொன்னனு எனக்கு நல்லாவே கேட்டுச்சு” என்றவள் முறைத்துக் கொண்டே “நான் எப்போ அந்த அடக்கவடக்கமான பையனை லவ் பண்ணேனு சொன்னேன்? என்ன கனவு ஏதும் கண்டுட்டு உளருறியா?” என்று வேறு அவளே அடியெடுத்து கொடுக்க,
‘ ஆத்தி உஷார் ஆஹி உஷார், எல்லாம் சொல்லி பைத்தியகாரி பட்டம் மட்டும் வாங்கிடாத’ என தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் “எப்படி டி கரெக்டா கண்டு பிடிச்ச? லைட்டா குட்டி கனவு கண்டேன் அந்த அப்பெக்ட்ல தான் ஒரு புளோல சொல்லிட்டேன்” என்றாள் பாவமாக…
உள்ளேயோ அவள் மனம், அவளுக்கே காரி உமிழ்ந்தது என்னவோ உண்மை தான்.
“எதுக்கு இப்போ முகத்தை பாவமா வச்சிட்டு இருக்க? உனக்கு ஹேப்பி தானே வெட்டிங் அதுவும் உனக்கு பிடிச்ச ஆள் கூட என்றதும் “ஹேய் உனக்கு எப்படி?” என்று வியப்பாக கேட்டாள் ஆஹித்யா.
“மாமாவை பார்த்ததும் உன் முகம், தௌசண்ட் வால்ட் பல்ப் போல பிரகாசமா மாறவும் கெஸ் பண்ணேன் பட் என்னை பத்தி நீ கனவு கண்டது தான் தப்பு கணக்கா போச்சு” என்றாள்.
‘ ஆமா டி ஆமா எல்லாமே தலைகீழா நடந்துட்டு இருக்கு’ என்று மனதில் அலறியவள் குரலை செருமிக் கொண்டே “ பவ்யா நீ வேற யாரையும் லவ் பண்றியா?” என்று பதட்டமாக கேட்டாள்.
“ம்கும் அதெல்லாம் இல்ல. பட் அந்த மகா நல்லவன் வேண்டாம்” என்றாள் தெளிவாக…
“உனக்கு என்ன கிறுக்கு பிடிச்சிருக்கா அதுவும் நல்லவன்னு சர்டிபிகேட் கொடுத்திட்டு வேண்டாம் சொல்ற, என்னடி காமெடி பண்றியா?”
“ஆஹி, என் வாழ்க்கை விஷயத்துல நான் ஏன் காமெடி பண்ண போறேன்? அண்ட் எனக்கெல்லாம் ஆன்டி ஹீரோ போல இருந்தா தான் பிடிக்கும்” என்றவளை அதிர்ந்து பார்த்த ஆஹித்யா “எதே ஆன்டி ஹீரோவா?” ‘கிறுக்கி, அவன் ஆன்டி ஹீரோவையே விழுங்கிருவான் டி’ என வழக்கம் போல அவள் மனம் கவுண்டர் கொடுக்க, “விழிகள் மின்ன, நான் தான் அவன் மேல லவ் ல விழணும் அதுவும் லோ லோனு அவன் பின்னாடி சுத்தணும் பட் அவன் என்னை சுத்தமா கண்டுக்க கூடாது. எப்ப பார்த்தாலும் வாய்க்குள்ள காரத்தை வச்சுட்டு சுத்துற போல சிடு சிடுன்னு இருக்கணும் பட் நான் மட்டும் லவ் பண்ணிட்டு பின்னாடியே வழிஞ்சிட்டு அவன் பின்னாடி போகணும்” என்று அடுக்கிக் கொண்டே போக, எதிரே விழிகள் இரண்டும் பிதுங்கி போய் அமர்ந்திருந்த ஆஹித்யாவுக்கோ ‘அல்டிமேட் உல்ட்டாவா இருக்கே என்று மனதில் சொல்லிக் கொண்டவள் அவன் அப்படி தான்’ என்று தொண்டை வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டவள் “அப்போ உன் ஆன்டி ஹீரோ கூட எப்ப வாழுறதா ஐடியா?” என்று கேட்க,
“திருந்தின பிறகு தான்” என்று பவ்யா சொல்ல,
அதுக்கு வாய்ப்பே இல்லையே என்று யோசித்தவளுக்கு இப்போது நிதர்சனம் உரைக்க, “நானே சொல்றேன், சும்மா ஆன்டி ஹீரோ அது இதுன்னு சொல்லிட்டு சுத்தாம அந்த சொக்க தங்கத்தை இல்லை இல்லை பியூர் டயமண்ட்டை கட்டிக்கோ” என்றாள் அழுத்தம் திருத்தமாக….
“யோசிப்போம், எப்படியும் அவனுக்கு தானே என்னை நேந்து விட்டு இருக்காங்க கட்டி தொலைக்கிறேன் பட் கொஞ்ச நாளா என்னை குறுகுறுனு பார்த்திட்டு சுத்துறான் அதை மட்டும் கொஞ்சம் நிறுத்த சொல்லு. பத்திட்டு வருது” என்று சொன்னவள் எழுந்து அறையை திறந்து கொண்டு வெளியில் சென்றாள்.
“என்னவோ கோமா ஸ்டேஜ் போன போல ஒன்னுமே ஞாபகத்துல இல்லையே. அதுவும் விபீஷனோட சைலண்ட் கேரக்டர் தெரிஞ்ச எனக்கு ஏன் தான் இவ்வளவு மோசமான கனவு வந்துச்சோ தெரியல” என புலம்பிக் கொண்டே எழுந்து ஹாலுக்குள் வந்தவள் திகைத்து நின்றாள்.
அத்தியாயம் – 4
அறையை விட்டு வெளியில் வந்த ஆஹித்யாவிற்கோ தூக்கி வாரிப் போட்டது.
ஹாலில் அமர்ந்து தொலைக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த விபீஷனுடன் வம்பு வளர்த்துக் கொண்டு நின்றிருந்தாள் பவ்யா.
‘ஆத்தி, நானே தலை சூடேறி போய் இருக்கேன். இவ வேற ஓவர் பேர்போமன்ஸ் பண்றாளே’ என முணுமுணுத்துக் கொண்டே கதவின் நிலையில் சாய்ந்து நின்ற படி இருவரையும் அவதானித்தாள்.
“இது என் சோஃபா மரியாதையா எழும்பி வேற எங்க சரி போய் உட்காருங்க” என சீறினாள் பொறுமையை இழுத்து பிடித்த படி,
“வாட்? உங்க சோஃபாவா பட் நான் நேம் அஹ் கவனிக்கலயே” என்று சொல்லிக் கொண்டே எழுந்த விபீஷன் இருக்கையை ஆராய,
அவளுக்கோ, பொறுமை எல்லையை கடந்து போனது.
இருக்கையை ஆராய்ந்து கொண்டிருந்தவனை சொடக்கிட்டு அழைத்தாள்.
இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவள் புறம் திரும்பினான்.
“என்ன கிண்டலா?” என்று கேட்டாள்.
“கிண்டலா? வொய் என்ன கிண்டல் புரியல” என அப்பாவி போல விழித்தான் அவன்.
“தப்பு பவி, புருஷனை கை நீட்டி அடிக்க கூடாது” என்றான் பவ்யமாக,
“ஹாங், புருஷனா யார்?” என கேலியாக சொன்னவள் அவன் பின்னால் எட்டிப் பார்க்க,
“யாரை கை நீட்ட தோணிச்சோ அவர் தான்” என்றான் பதிலுக்கு,
“அவர்கிட்ட போய் சொல்லுங்க கனவுல கூட அவர் எனக்கு புருஷனாக மாட்டார்னு” என்றாள் இதழ்களை சுளித்த படி,
நெற்றியை அழுத்தி விட்ட படியே சற்றே அவள் உயரத்திற்கு குனிந்தவன் “ கனவுல இல்ல, ரியலாவே நடத்தி காட்டுறேன்” என்றவன் அவளின் சோஃபாவிலேயே அமர்ந்து கொண்டான்.
“ஹவ் டேர் யூ” என கை நீட்டி என்னவோ விபீஷனிடம் வாக்குவாதம் பண்ணிக் கொண்டிருந்த மகளை சமையலறைக்குலிருந்து வந்த வித்யா பார்த்து விட,
“பவ்யா நானும் கேட்டுட்டு தான் இருந்தேன். என்னடி வர வர உனக்கு வாய் கொழுப்பு அதிகமாயிட்டே வருது. சும்மா சின்ன பொண்ணு போல வம்பு வளர்த்திட்டு இருக்காமல் உள்ள போ” என்று விபீஷன் முன்னாலேயே திட்டிக் கொண்டே அவனுக்கு காஃபியை அவர் பரிமாற,
“அத்த நான் வீட்ல காஃபி குடிச்சிட்டேன்” என்றான்.
“பரவால்ல டா எடு” என்க,
வேறு வழி இல்லாமல் அவனும் காஃபி கப்பை எடுத்துக் கொள்ள, கேலியாக இதழ் வளைத்தவள் ‘இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்’ என்று மனதில் சொல்லிக் கொண்டாள்.
அவள் தன்னை கேலியாக பார்த்து என்னவோ நினைத்து தனக்குள் சிரிக்கின்றாள் என்று புரிந்தது.
ஆனால், கோபம் வர வேண்டிய ஆணவனுக்கு அவளின் செய்கை ஒவ்வொன்றும் ரசிக்க வைத்தது.
தன்னை விழி அகலாமல் பார்த்த படி காஃபியை அருந்தியவனை கண்டு இருப்பு கொள்ள முடியாத பவ்யாவுக்கோ, கோபம் சுர்ரென்று ஏறியது.
அதிலும் அவனது இதழ்களில் தேங்கிய புன்னகை கூட தன்னை பார்த்து அவன் கேலியாக புன்னகைப்பது போலிருக்க, பல்லைக் கடித்தவள் “ஐ ஹேட் யூ” என்று சீறியவள் வாயடைத்து போய் பார்த்துக் கொண்டிருந்த ஆஹித்யாவை இடித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்து விட்டாள்.
அவள் இடித்ததில் சமநிலை தடுமாறி விழ எத்தனிக்க, “ஓஹ் ஷிட், அண்ணிணி…” என்று விபீஷன் கத்தவும் அவள் கதவு நிலையை பிடிமானமாக பற்றிப் பிடிக்கவும் சரியாக இருந்தது.
இருக்கையை விட்டெழுந்து காஃபி கப்புடன் தன் முன் வந்து நின்ற விபீஷனை தான் அதிர்ந்து போய் மலங்க மலங்க விழித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
“தேங் கோட், பவ்யாவுக்காக நான் சாரி கேட்டுகிறேன் அண்ணி” என்றவன் மெலிதாக புன்னகைத்துக் கொண்டே சொல்ல,
அதெல்லாம் எங்கே அவள் காதில் விழ போகின்றது?
அவன் “அண்ணி” என்று அழைத்ததிலேயே தேங்கி விட்டாள் அல்லவா?
தன்னையே பார்த்துக் கொண்டு நின்ற ஆஹித்யாவை “அண்ணி” என்றழைத்தான் மீண்டும்,
அவ்வழைப்பில் மீள சுயம் அடைந்த பெண்ணவளோ “எ…என்ன சொன்னீங்க?” என்று கேட்டவள் வார்த்தைகள் திணறி ஒலித்தன.
“எப்போ?” என்றான் புரியாமல்,
“ஜஸ்ட் நவ்”
இதழ் கடித்து ஒற்றை புருவம் உயர்த்தி சிந்தித்தவனோ “அண்ணி” என்றவன் தோள்களை குலுக்கி விட்டு திரும்ப,
“விபீ” என்றவள் ‘ஸ்ஸ் சொதப்பாத ஆஹி’ என தனக்குள் சொல்லிக் கொண்டே “ஷன்” என்று அவனின் பிற்பாதி பெயரை அழைத்திருந்தாள்.
கேள்வியாகத் திரும்பி அவளை நோக்கினான்.
“ஜெய் மாமா மேரேஜ்கு ஓகே சொன்னாரா?”
“உங்களோட பேசணும்னு சொல்லிட்டு இருந்தார் அண்ணி” என்றவன் எதுவும் பூசி மெழுகாமல் உள்ளதை உள்ளபடியே கூற,
“என்கூட பேச என்ன இருக்கு?” என்ற கேள்வியை தன் மனதுக்குள் கேட்பதாக நினைத்து வெளியில் கேட்டு விட,
“ஐ டோண்ட் க்னோ அண்ணி” என்றவன் நெற்றியை நீவிக் கொண்டே , “என்னை பார்த்து வொய் மார்னிங் முறைச்சிட்டு என்னன்னவோ பேசுனிங்க? ப்ராமிஸ், நீங்க என்ன பேசுனிங்கனு புரியல” என்றவன் தன் மனதில் ஓடிக் கொண்டு இருந்த கேள்வியை கேட்டு விட,
இப்படி நேரடியாகவே கேட்பான் என்று கொஞ்சமும் எதிர் பார்க்காதவளோ திணறி விட்டாள்.
அவன் கேட்ட தோரணையில் ஒரு கணம் ஒரே ஒரு கணம் தான் கண்ட அந் நீள கனவு நினைவடுக்கில் வந்து போக, ‘ஆத்தி எதாச்சும் சொல்லி தொலை’ என தன்னை தானே திட்டிக் கொண்டவள் “ஹி ஹி ஹி” என பற்கள் பளிச்சிட புன்னகைத்து வைத்தவள் “லைட்டா குட்டியா கெட்ட கனவு கண்டேன் சோ அந்த எஃபெக்ட்ல வந்து பேசிட்டேன்” எனக் கூறியவள் அவன் அடுத்த கேள்வி கேட்பதற்குள்ளேயே “நாம அப்புறம் பேசலாமே” என்று சொன்னவள் பக்கத்து அறைக்குள் புகுந்து கொண்டாள்.
‘சம்திங் பிஷி’ என முணுமுணுத்துக் கொண்டவன் வித்யாவிடம் கூறி விட்டு அப்போதே கிளம்பி இருந்தான்.
இங்கோ, அறைக்குள் வந்த பெண்ணவளுக்கு ஜெய் ஆனந்த் தன்னிடம் பேச வேண்டும் என்று கூறியதை நினைத்தே எண்ணங்கள் வலம் வந்துக் கொண்டிருந்தன.
“ஹையோ என்னவா இருக்கும்?” என சுவரில் கோலம் வரைந்து கொண்டே தன்னிடம் அக் கேள்வியை கேட்டாள்.
“ஒருவேள நான் வெர்ஜின்ட்டி டெஸ்ட் எடுக்குறதா கேட்டேனே அதைபத்தியா இருக்குமோ?” என தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டே சுவரில் சாய்ந்து நின்றாள்.
யோசித்து யோசித்து மண்டை காய்ந்தது.
“ஐயோ கடவுளே! என் நிலைமை யாருக்கும் வர கூடாது. கனவுலயும் சரி எழுந்ததுல இருந்தும் சரி என்னை புல் ஹைப்பர்டென்ஷன்லயே வச்சிட்டு இருக்க” என்று பல்லைக் கடித்தாள்.
சட்டென மனதில் ஓர் கேள்வி எழுந்தது.
“ஐயோ! வேற எவளையும் லவ் பண்ற விஷயத்தை என்கிட்ட சொல்லவா இருக்குமா?” எனக் கேட்டுக் கொண்டவள் உடல் விறைத்தது.
அந்த கேள்வியே அவளை மேலும் சிந்திக்க விடாமல் மேனியை இறுக வைத்தது.
தொண்டை அடைப்பதை போலிருக்க எச்சிலைக் கூட்டி விழுங்கினாள்.
விழிகள் வேறு கலங்கி விட, அப்படியே விழிகளை மூடி நின்றவள் செவிகளில் “லவ்வா? நோ ஐடியா வீட்ல பாக்குற பொண்ணை மேரேஜ் பண்ற எண்ணம் தான்” என காலையில் ஜெய் ஆனந்த், விபீஷனிடம் உரைத்த வார்த்தைகள் தேன் போல ஒலித்தது.
இதழ் குவித்து ஒரு பெரு மூச்சை விட்டுக் கொண்டவளோ படு வேகமாக துடித்த தன் இதயத்தின் ஓசையை வலக் கரம் உயர்த்தி உணர்ந்தாள்.
“கொஞ்சதுல மேலோகம் போய் வந்த போல இருக்கு” என சொல்லிக் கொண்டவள் எதுவாக இருந்தாலும் நாளை அவனின் மருத்துவமனைக்கு சென்று கன்னித்தன்மையை உறுதிப் படுத்திக் கொண்டு பேசிக் கொள்ளலாம் என்ற தெளிவான முடிவை எடுத்தவள் முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டாள்.
அன்றைய நாள் அப்படியே கழிய, இரவு தூங்கப் போவதற்கு முதலே அறையில் இருக்கும் ஒவ்வொன்றையும் சுற்றி பார்த்துக் கொண்டவள் கட்டிலில் வந்தமர்ந்தாள்.
இதயம் என்னவோ தடதடத்துக் கொண்டிருந்தது.
தூங்கினால் மீண்டும் கனவு வந்து மீள முடியா சுழலுக்குள் சிக்கி விடுவோமோ? என்ற பயம் அவளை ஆட்கொண்டது.
இனம் புரியா பயத்தில் இதழ்கள் வேறு உலர்ந்து போனது.
தன்னைத் திடப் படுத்திக் கொண்டு எழுந்தவள் மேசையிலிருந்த போத்தலை திறந்து நீரை மடமடவென அருந்தினாள்.
விழிகளை விரித்து தன் முன்னிருந்த நாட்காட்டியை பார்த்து விட்டு பெரு மூச்சுடன், முன்கூட்டியே அறைக்குள் கொண்டு வந்த விபூதி அடங்கிய காகிதத்தை பிரித்து அதிலிருந்த விபூதியை மூன்று விரலால் அள்ளி தன் நெற்றியில் பட்டை போல பூசியவள் “ஓஹ் மை கோட் முருகா! ஹையோ!, அவருக்கு ரெண்டு பொண்டாட்டில அவர் வேணா, என நாடியை தட்டி யோசித்தவள் ஹான், ராமா! தயவு பண்ணி என்னை என் பாஸ்ட்லயோ இல்லனா பியூச்சர்லயோ கூட்டி போய் அல்லாட விட்டுடாத. இந்த பிரசென்ட் லைஃப்பே எனக்கு ஓகே தான்” என விட்டத்தை பார்த்து கை கூப்பி வேண்டியவள் நித்திரை கொள்ள பயந்து கொண்டே கட்டிலை நோக்கி நடந்தாள்.
அத்தியாயம் – 5
விடியற் காலையிலேயே விழிப்பு தட்ட, மெல்ல தன் இமைகளை பிரித்து விழிகளை திறந்தாள் ஆஹித்யா.
சோம்பல் முறித்து எழுந்து அமர்ந்தவளுக்கு இன்னும் நித்திரை கொள் என்று எரிந்த விழிகளை கசக்கி விட்ட படி, தூக்கத்தை தூர விரட்டியவள் அப்போது தான் சுயம் அடைந்து சுற்றும் முற்றும் தனதறையில் விழிகளை சுழற்றி பார்த்தாள்.
நேற்று அவள் தூக்கத்தை தழுவும் முன்பிருந்தது போலவே இப்போதும் அதே போல அறை நேர்த்தியாக இருக்க, சட்டென வலப் புறம் திரும்பி நாட்காட்டியை பார்த்தாள்.
அதை பார்த்ததும் திருப்தியாக மென் புன்னகை சிந்தியவள் “தேங் கோட் பிரசென்ட்ல தான் இருக்கோம் “ என்று சொல்லிக் கொண்டே கட்டிலை விட்டெழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
அடுத்த சில நிமிடங்களில் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அறைக்குள் வந்தவள் அவசர அவசரமாக தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்த படி நேர்த்தியாக ஆடையொன்றை எடுத்து அணிந்து கொண்டு தன் விம்பத்தை தன் முன்னிருந்த ஆளுயரக் கண்ணாடியில் பார்த்தாள்.
முகத்தை வலமும் இடமும் திருப்பி பார்த்தவள் “நாட் பேட் அழகா தான் இருக்க” என தனக்கு தானே புகழ்ந்து கொண்டவள் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தாள்.
திருட்டு முழி முழித்துக் கொண்டு வெளியில் வந்தவளை அதிர்ச்சியில் புருவங்கள் இடுங்க பார்த்த வித்யா “என்ன சீக்கிரமா எழுந்திட்ட” என்று கேட்க,
தனக்கு எதிரே கேட்ட தன் அன்னையின் குரலில் திடுக்கிட்டு திரும்பியவள் “என்ன மா கேள்வி இது? காலேஜ் போக இன்னைக்கு கொஞ்சமே கொஞ்சம் சீக்கிரமா எழுந்துட்டேன் . அசைன்மெண்ட் சப்மிட் பண்ணனும். கிரஜுவேஷன்கு ரெடி ஆகணும். நீங்க வேற காலைல கடுப்பை கிளப்பிட்டு” என்று சொல்லிக் கொண்டே சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.
“அது சரி, உன் பேக் எங்க?” என்று கேட்டுக் கொண்டே அவளுக்கு உணவினை பரிமாறினார் வித்யா.
‘ஆஹா மண்டை மேல இருக்க கொண்டையை மறந்துட்டேனே’ என்று தனக்குள் அலறியவள் “சோ வாட் மா? பசிக்குது சாப்பிட்டு போய் எடுத்துக்கலாம்ன்னு இருந்தேன்” என்று சொல்லி விட்டு சாப்பிட ஆரம்பித்தவளுக்கு உணவு தொடைக்குழிக்குள் இறங்கினால் தானே?
அவளின் எண்ணமோ ஜெய்யை சந்திக்க வேண்டும் என்றதில் தான் தேங்கி நின்றது.
அவளோ, சீக்கிரமாக பாதி உணவில் எழுந்து கொள்ளவும், “என்னடி பசிக்குதுனு சொன்ன இப்போ பாதிலயே எழுந்து போற?” என்ற வித்யா, அவளுக்காக பொதி செய்து வைத்திருந்த உணவை நீட்ட, “அசைன்மெண்ட் சப்மிட் பண்ணனும் அந்த டென்ஷன் மா அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது” என்று சொல்லி விட்டு கையை அலம்பி விட்டு வித்யாவின் கன்னத்தில் அவசரமாக முத்தம் பதித்தவள் நுழைவாயிலை நோக்கி ஓட, “பேக் எடுத்திட்டு போடி” என்ற வித்யாவின் குரலில், “ப்ச்…” என்று சலித்துக் கொண்டே அறையை நோக்கி ஓடி வரவும், வித்யா அவளின் பையை அறைக்குள் இருந்து எடுத்துக் கொண்டு வரவும் சரியாக இருந்தது.
“தேங்ஸ் மா” என்றவள் தன் பையை வாங்கிக் கொண்டு, அவள் நேராக சென்றது என்னவோ ஜெய் ஆனந்த்தின் மருத்துவமனைக்கு தான்.
அவளுக்கே தெரிந்தது தான் செய்யப் போகும் விடயம் பைத்தியகாரதனமானது என்று, ஆனால் என்னவோ அவளின் மனம் தான் முரண்டு பிடித்துக் கொண்டிருந்ததே!
ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவளை “மேம்” என்றழைத்த பெண்ணின் குரலில் பின்னால் திரும்பிப் பார்த்தாள்.
“எஸ் சொல்லுங்க” என்றாள் கனிவாக,
“டாக்டர் உங்களை அவர் கேபின்ல வெயிட் பண்ண சொன்னார் மேம்” என்று சொல்ல,
“ஹும், ஓகே” என்று விட்டு தனக்கு நேரெதிரே இருந்த ஜெய் ஆனந்த்தின் கேபினுக்குள்ளே நுழைந்தாள் பெண்ணவள்.
உள்ளே நுழைந்ததுமே அவளின் நாசியை முதலில் துளைத்தது என்னவோ அவனது வாசனை தான்.
“கனவுல யூஸ் பண்ண அதே பெர்ஃப்யூம்” என்று சொல்லிக் கொண்டே விழிகளை மூடி ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து வெளி விட்டவள் மெதுவாக விழிகளை திறந்தாள்.
விழிகளை திறந்தவளுக்கோ, தூக்கி வாரிப் போட்டது.
மேசையில் சாய்ந்து, மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிய படி அவளின் செய்கையைத் தான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ஆணவன்.
“சா… சாரி மாமா” என வார்த்தைகளை கோர்க்க முடியாது திணறினாள்.
“வொய் சாரி? என்று புன்னகையுடன் கேட்டவன் கூல் என்னவோ நான் உன்ன கடிச்சு சாப்பிடுற போல பதறிட்டு இருக்க” என்றவன் விழித்துக் கொண்டு நின்றவளிடம் தண்ணீர் போத்தலை நீட்டினான்.
அவன் கேட்டது என்னவோ சாதாரணமாக தான் ஆனால் அவன் மீது காதல் கொண்ட அவளின் உள்ளம் ‘கடிச்சு சாப்பிட்டா தப்பே இல்ல ஜெய் பேபி’ என்று சொல்லிக் கொள்ள, தன் மனதுடன் பேசிக் கொண்டே பாட்டிலை வாங்கி நீரை குடித்து விட்டு அவன் முகம் பார்த்தவளுக்கு தான் வந்த நோக்கத்தை மறுபடி பேசவே தயக்கமாக இருந்தது.
நேற்று இருந்த அவளது தைரியம் இன்றோ தலைமறைவாகி விட்டது போலும், விரல்களை பிசைந்துக் கொண்டே என்னவோ யோசனையில் நிற்பவளை “தியா வாட் ஹப்பெண்ட்? பீவரா?” என்று கேட்டவன் தன் கரத்தை உயர்த்தி அவளின் நெற்றியில் வைத்து ஆராய, அவளுக்கோ வெடவெடத்து போய்விட்டது.
அவனின் முதல் ஸ்பரிசம்.
மேனி சிலிர்த்து அவனிடம் காட்டிக் கொடுத்து விடுமோ? என்று பயந்து போன பெண்ணவளோ சட்டென ஓரடி பின்னால் நகர்ந்து “ஹாங், அதெல்லாம் இல்ல. எனக்கு… நான்… நான்” என்று உளறியவளுக்கு வார்த்தைகள் வராமல் சண்டித்தனம் செய்தன.
இத்தனைக்கும் நேற்று, கன்னித் தன்மையை ஆராய வேண்டும் என்று அவள் கேட்டதையே முழுதாக மறந்து போனான் அவன். இதில் எங்கனம் அவள் கூற வருவதை அவன் அறிந்து கொள்வான்?
அவள் பதற்றமாக ஏதோ சொல்ல தயங்குகின்றாள் என்று புரிந்து கொண்டவன் “ரிலக்ஸ் தியா, லேடி டாக்டர் வர சொல்லட்டுமா?” என்று கேட்டான்.
வேறு யாரிடமாவது செல்ல வேண்டும் என்றால் அவள் ஏன் அவனிடம் வரப் போகின்றாள்?
‘ ஆஹி கம் ஒன் சொல்லிடு’ என்று தன்னை தானே ஊக்கப்படுத்திக் கொண்டே, “இல்ல வேணாம் மாமா” என குரலை செருமிக் கொண்டவளோ “நேத்து நான் டெஸ்ட்பத்தி கேட்டேன்” என தயங்கியவாறு கூற,
“வாட்? டெஸ்ட்டா?” என்றவனுக்கு சுத்தமாக அதைப் பற்றிய நினைவே இருக்கவில்லை.
‘ மீண்டும் மீண்டுமா?’ என சொல்லிக் கொண்டவள் “அசைன்மெண்ட்… வெர்ஜின்” என்றாள் தொண்டையை விட்டு வர மறுத்த வார்த்தைகளை கோர்க்க முடியாது,
“ஓஹ் ஷிட் சாரி தியா மறந்துட்டேன் என்றவன் இது வரையும் இப்படி ஒரு அசைன்மெண்ட் நானே கேள்வி பட்டது இல்லை இந்த அசைன்மெண்ட் பண்ண ஓகே பண்ண பிராஃபசர் யார்?” என்று கேட்டவன் தனது அலைபேசியை எடுக்கவும், மருண்டு விழித்தவள் ‘ஆத்தி தொக்கா சிக்க போறோமா? ஹையோ என்னவாவது பண்ணு ஆஹி’ என உள்ளே பதறிப் போனவளாய் “அசைன்மெண்ட் என் ஐடியா தான் மாமா, ரொம்ப கஷ்டபட்டு தான் பிராஃபசரை ஒத்துக்க வச்சேன்” என்றாள் பாவமாக,
‘உஃப்’ என இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவளை ஆழ்ந்து பார்த்தவன் “இந்த டெஸ்ட் உன்ன ப்ரூப் பண்ண போறதில்லை ஆஹித்யா” என்றவன் அவளின் அதிர்ந்த தோற்றத்தை உள்வாங்கிய படி, “ஐ மீன் ஒரு பொண்ணு வெர்ஜினா இல்லையானு ஜஸ்ட் ஒரு டெஸ்ட்டால க்ளியர் பண்ண முடியாது சோ உன் டெஸ்டிங் போசிடிவ்வா இருக்காமல் கூட இருக்கலாம்” என்று மருத்துவ மற்றும் விஞ்ஞான ரீதியாக விளக்கம் கூறிக் கொண்டிருக்கும் போதே முகம் வெளிறிப் போனவளோ “நான் தப்பானவ கி… டையாது மாமா” என்றாள் குரல் நடுங்க,
அவளின் பதிலில் உடல் இறுக, சீற்றத்தில் முகம் சிவந்து போக, “ஆர் யூ மேட்? நீ படிச்ச பொண்ணு தானே நான் என்ன சொல்றேன்னு ஃபர்ஸ்ட் கேளு” என்றான் சீறலாக,
என்ன முயன்றும் அவனால் அவளின் பதிலில் உண்டான கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
முதன் முறையாக அவளிடம் குரல் உயர்த்தி பேசி இருக்கின்றான்.
அவளோ, விழிகள் கலங்க நின்றிருக்க, தன்னை சற்றே ஆசுவாசப் படுத்திக் கொண்டவன் “ஜஸ்ட் டிஷ்ஷு தான் ஒரு பொண்ணை நிருபிக்கணும்ன்னு அவசியம் இல்ல சோ மே பீ ரிசல்ட் பாஸிடிவ்வா வரலாம்” என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் பரிசோதனையை மேற்கொள்ள ஆயத்தமானான்.
அதனைத் தொடர்ந்து மூன்று மணித்தியாலங்களாக தடதடக்கும் இதயத்துடன் பரிசோதனையின் முடிவுக்காக காத்திருந்தாள் பெண்ணவள்.
ஜெய் ஆனந்த் கூறிய விடயத்திலேயே தான் அவளது எண்ணம் முழுதும் சுழன்று கொண்டிருந்தன.
தனக்கே இப்படி என்றால், கன்னித்தன்மையையே கலாச்சாரமாக பின்பற்றி வாழும் சில மனித பிறவிகள், இன்னும் வீட்டு பெண்களை மனதளவில் நோகடித்து கொண்டு தானே இருக்கின்றனர்?
நினைக்கும் போதே உள்ளம் பதறி உடல் இறுகியது.
தான் இதை பரிசோதிக்க நினைத்ததே தப்பு என அக்கணம் உணர்ந்தாள் பேதையவள்.
அவளின் பரிசோதனை முடிவுடன் வந்தவன் அவளது கோப்பை அவளிடம் நீட்டினான்.
கோப்பை வாங்கிக் கொண்டவளோ “எ… என்ன ரிசல்ட் மா..மாமா?” என்றவள் குரல் அவளையும் மீறி படபடத்து ஒலித்தது.
“சாரி தியா நான் பார்க்கல. டாக்டர் ஶ்ரீ தான் கொடுத்தாங்க சோ நீயே பார்த்துக்கோ என்றவன் ஆல் த பெஸ்ட் ஃபோர் யுவர் அசைன்மெண்ட் சப்மிஷன்” என்றவன் ஸ்டெதெஸ்கோப்பை கழுத்தில் போட்டுக் கொண்டு கதவில் கை வைத்தவனிடம் “உங்களுக்கு தெரிய வேணாமா?” என்று கேட்டாளே பார்க்கலாம்.
கதவில் கை வைத்திருந்தவன் கையோ இறுகி போயின, பல்லைக் கடித்து உணர்வுகளை அடக்கிக் கொண்டு அவள் புறம் திரும்பியவன் “எதுக்கு தெரிஞ்சுக்கணும்?” என்று அவளிடமே திருப்பி கேட்டான்.
அவனின் பேச்சின் தோனியின் பேதத்தை அறியா பேதையவளோ “நீங்க தானே என்னை மேரேஜ் பண்ணிக்க போறீங்க” என்று சொல்லிக் விட்டு தலை தாழ்த்தி கொண்டவளிடம் “இஸ் இட்? சோ நான் ஒரு பொண்ணுக்கு கற்பு இருக்கா இல்லையானு டெஸ்ட் பண்ணிட்டு தான் மேரேஜ் பண்ணிக்குவேனு உன் மைண்ட்ல திங்க் பண்ணிட்டு இருக்க ரைட்?” என்றவனது கேள்வியில் அவசரமாக “ஹையோ மாமா அப்படி சொல்ல வர்ல. ஜஸ்ட் ஒரு கியூரியாசிட்டில புத்தி பேதலிச்சு போய் கேட்டுட்டேன்” என்று காலில் விழாத குறையாக குரல் தாழ்ந்து பேசுபவளிடம் மேலும் சீற்றத்தை காட்ட விரும்பாதவன் திரும்பி “அந்த ரிப்போர்ட்டை நீ பார்க்க கூடாது தியா” என்றான்.
“வொய்?” என அதிர்ச்சியாக கேட்டாள்.
“நீ என்னை நம்புற தானே”
“ஆஃப்கோர்ஸ் உங்களை நம்பாமலா?” என்றிட,
“சோ சிம்பல், பார்க்க வேண்டாம் ப்ராமிஸ் பண்ணிட்டு கிளம்பு” என்றான்.
“என்ன ப்ராமிஸ் ஆஹ்? நோ, அதெல்லாம் வேணாம் நான் பார்க்க மாட்டேன்”
“சோ சேட் நீ என்மேல வச்சிருக்க நம்பிக்கை இந்த விஷயத்துல உன்மேல இல்ல” என்று சொல்லியே விட்டான்.
அதில் மனம் சோர்ந்தாலும் சட்டென ஞாபகம் வந்தவளாய் “அசைன்மெண்ட் சப்மிட் பண்ண நான் பார்த்து தானே ஆகணும்” என சொல்ல, “இங்க வா” என்று அழைத்தான்.
அவன் அழைக்கவும் மனதில் என்னவோ சொல்ல முடியாத உணர்வு.
ஆர்வக்கோளாறில் கூச்சலிட்டு சந்தோஷ மிகுதியில் கத்தி விடுவேனோ என்று பயந்து போனாள்.
அவனை நெருங்கியவள் மெல்ல நிமிர்ந்து கேள்வியாக அவனை நோக்க, அவளின் முகத்தை பற்றி பக்கவாட்டு சுவற்றில் இருந்த பெயர் பலகையை பார்க்க வைத்தான்.
சட்டென ஏமாற்றம் படர “எ..என்ன?” என்றாள் புரியாமல்,
சுவரில் சாய்ந்து நின்றவன் “ரீட் மை நேம் இன் புல்” என்றான்.
ஒரு பெரு மூச்சுடன் “டாக்டர் ஜெய் ஆனந்த் பிரதாபன் எம்பீபீஎஸ்” என வாசித்து விட்டு அவனை பார்த்து புருவம் உயர்த்த “நீ எதுக்காக டெஸ்ட் பண்ணனும்னு கேட்டனு ஐ டோண்ட் க்னோ பட் இனிமேல் பொய் சொல்லாத” என்றவன் அவளின் பெரிதாக விரிந்த இரு விழிகளை பார்த்துக் கொண்டே “டு யூ லைக் மீ?” என்று கேட்டிருந்தான்.
அத்தியாயம் – 6
ஒரு கணம் தன் செவியில் வந்து வீழ்ந்த வார்த்தைகளை உண்மை தானா என விழிகளை மூடித் திறந்து “என்..என்ன கேட்டீங்க?” என கேட்டு வைக்க,
இதழ் குவித்து ஊதிக் கொண்டே “டு யூ லைக் மீ என்று கேட்டவன் குரலை செருமிக் கொண்டே ஐ மீன் என்னை மேரேஜ் பண்ணிக்க ஓகே தானே?” என கேட்க,
அவளா முடியாது என்று சொல்வாள்?
சிறகிருந்தால் வானத்தில் பறந்திருப்பாள் போலும், அளவில்லா மகிழ்ச்சியில் திளைத்தவள் முகம் நொடியில் பிரகாசமானது.
அவளின் அமைதியில் “வேற யாரையும் லவ் பண்றியா தியா?” என்ற அவனது அடுத்த கேள்வியில் ‘இப்பவே லவ்வை சொல்லிடாத ஆஹி வழிஞ்சான்னு நினைக்க கூட சான்ஸ் இருக்கு’ என தனக்குத் தானே வலியுறுத்திக் கொண்டவள் “ச்சீ லவ்வா? ஐம் பியூர் சிங்கிள் என்றவள் நான் வீட்ல அரேஞ்ச் பண்ற மேரேஜ்கு தான் ஓகே சொல்லலாம்னு இருந்தேன். அதுவே நீங்களா இருக்கப்போ ஹேப்பி தான்” எனக் கூற,
அவளின் மனதோ ‘அய்யய்யோ! அரேஞ்ச் மேரேஜ்கா ஆசைப்பட்ட! என்னடி இப்படி உல்ட்டாவா பொய் சொல்ற?’ என கேள்வி கேட்டு காரி உமிழ்ந்தது.
“ஓகே ப்ராமிஸ்ஸா நான் ரிபோர்ட்டை ஓபன் பண்ணி பார்க்க மாட்டேன்” என்றவள் சற்று தயங்கிய படியே “சாரி இனிமேல் பொய் சொல்ல மாட்டேன் அண்ட் நான் எதுக்காக இந்த டெஸ்ட் எடுத்தேனு…” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “ பிளீஸ் இப்பவே எதுவும் சொல்லனும்னு கட்டாயம் கிடையாது தியா. டேக் யுவர் ஓவ்ன் டைம். கல்யாணத்துக்கு டைம் இருக்கு பேசி பழகலாம்” என்று சொல்ல,
அவளுக்கு அவனது நேரடி பேச்சில் முகம் சிவந்து போனது.
“ம்ம்” என்று சொன்னவளுக்கு அதற்கு மேல் அங்கு, அதுவும் அவனருகாமையில் நிற்கும் தைரியம் அற்று விட, நிலத்தைப் பார்த்துக் கொண்டே “நான் கிளம்புறேன் மாமா” என்றாள்.
“காலேஜ் லேட்டாகலையா?”
“சைன் பண்ண ஆள் இருக்கு” என்று சொல்லி விட்டு கண்களை சிமிட்டி விட்டு கதவை திறந்து கொண்டு வெளியே ஓடியவள் திகைத்து நின்றாள்.
“ஹாய் சிஸ்டர் ஐம் நவீன். ஆனந்த்’ஸ் ப்ரெண்ட்” என்று வலக் கரத்தை அவளை நோக்கி நீட்டினான்.
அதே அதிர்ச்சி மாறாமல் தன் வலக் கரத்தை நீட்டியவள் “ஹாய் அண்ணா” என புன்னகைத்து விட்டு கடந்தவளுக்கு ‘இப்போ தான் இவர் என்ரியா’ என முணுமுணுத்துக் கொண்டவள் காலேஜுக்கு கிளம்பியிருந்தாள்.
கேசத்தை கோதிக் கொண்டே இதழில் புன்னகையுடன் நின்றிருந்த ஜெய் ஆனந்த்தை குறுகுறுவென பார்த்த நவீன் “என்ன மச்சி….?” என்று இழுவையாக சொல்ல,
“ஹேய், இழுத்து வச்சு ஸ்டிச் பண்ணிடுவேனு சொல்ல வந்தேன் டா. சோ நீ வந்த வேலையை மட்டும் பார்க்குற ரைட்”
“அடியேனும் வாங்க. பேஷண்ட்ஸ் வெயிட்டிங்”
“வெட்டி ஆபீசர் நீ அதெல்லாம் பேச கூடாது” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொன்னவன் அவனின் முகம் போன போக்கில் “ஓகே ஓகே முகத்தை தூக்கி வைக்காத சகிக்கல” என்று சொன்னவன் பேசி சிரித்த படி கிளினிக் அறைக்குள் நுழைந்தான்.
********************************
அன்றைய நாள் இரவில் ஏனோ மனம் லேசாக, ஆஹித்யாவுக்கோ நிம்மதியான உறக்கம் அவளைத் தழுவியது.
அதனைத் தொடர்ந்து நாட்களும் வேகமாக நகர ஆரம்பித்த தருணம் அது.
வீட்டில் பேசி வைத்தது போல பெண் பார்ப்பதற்காக நன் நாள் மற்றும் நல்ல நேரம் என அனைத்தையும் பார்த்து புரோகிதரிடம் குறித்து எடுத்துக் கொண்டு வந்த சித்ராவும் வித்யாவும் தாங்கள் பெற்று வைத்தவர்களை கிழப்பவே ஒருவழியாகி இருந்தனர்.
இதில், எதிர் மாறாக அதீத நாட்டத்துடன் நாட்களை எதிர்பார்த்து காத்திருந்தது என்னவோ விபீஷனும் ஆஹித்யாவும் மாத்திரமே!
அன்றைய நாளும் அழகாக விடியல் தர, காலையிலேயே தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு முதலில் ஆயத்தமானது என்னவோ விபீஷன் தான்.
அன்றைய நாள் ஜெய் ஆனந்த் மருத்துவமனைக்கு செல்லவில்லை என்பதால் சற்று தாமதமாகவே எழுந்தான்.
ஆளுயரக் கண்ணாடியின் முன் நின்று வேஷ்டியின் நுனியை ஒற்றை கரத்தால் பிடித்து கொண்டு மறு கரத்தால் கேசத்தை கோதியபடி நின்று தன் பிம்பத்தை பார்த்துக் கொண்டிருந்த விபீஷனை பார்த்துக் கொண்டே மெலிதாக புன்னகைத்த படியே எழுந்தமந்தான் ஜெய் ஆனந்த்.
குரலை செருமிக் கொண்டே கழுத்தில் கரம் வைத்து நெட்டி முறித்தவன் “இன்னும் டைம் இருக்கே இப்பவே ஏன்டா?” என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் கேட்டான்.
அவனும் தன் உடன் பிறந்தவனை கவனியாமல் அல்லவே!
பவ்யா செல்லும் இடம் முழுதும் அவனது காதலான பார்வையும் அவள் மீது அவன் கொண்ட நேசத்தை இந்த ஒரு வாரத்தில் உணர்ந்து கொண்டான்.
என்னவோ, தானும் இப்படி விழுந்து விழுந்து காதலிக்க வேண்டும் என்ற உணர்வு ஆழிப்பேரலையாய் எழுந்தது அவனுள்,
அந்நொடி முதல் அவனும் தன்னவளை கண்டும் காணாமல் பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தான் ஆண்மகன்.
“இட்ஸ் அ பீல் டா. லைஃப்ல ஒரு முறை தான் மேரேஜ். பிபோர் மேரேஜ் இப்படி எல்லா இருந்தேன்னு என் பேபிஸ்கு பாடம் எடுக்கணும்ல” என்று இதழ் பிரித்து புன்னகைத்தான் விபீஷன்.
“நான் உன் அண்ணன்டா. கொஞ்சம் ஃபீலிங்ஸ் கன்ட்ரோல் பண்ணு ஓவரா ப்ளோ ஆகுது” என்று நக்கலாக சொல்லிக் கொண்டே குளியலறைக்குள் நுழைந்தான்.
“போடா, உனக்கெல்லாம் சொன்னா புரியாது லவ்வை பீல் பண்ணி பாரு புரியும்” என்று அறைக்குள் இருந்து கத்த, “அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கு எப்படி உறிக்கணும்னு தெரியும். ஃபர்ஸ்ட் உன் ரூட்டை க்ளியர் பண்ணு” என்று குளியலறைக்குள் இருந்து குரல் கொடுத்தான் ஜெய் ஆனந்த்.
“எப்பவாவது என்கிட்ட ஹெல்ப் கேட்ப தானே அப்போ வச்சிக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே ஹேங்கரிலிருந்த ஷர்ட்டை எடுத்து அணிந்தவன் கையை முட்டி வரை மடித்தான்.
முப்பது வயதே ஆனாலும் அவனது திண்ணிய உடற் கட்டமைப்பு அவ் ஆறடி ஆண்மகனை அழகனாக காட்டியது.
சற்று நேரத்திலேயே குளித்து விட்டு இடையில் டவலுடன் அறைக்குள் வந்த ஜெய் ஆனந்த் “இப்ப கூட டார்க் க்ரீன் ஷர்ட் தானா வேர் பண்ணுவ? வேற ஷர்ட் போடுடா”
அவனை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்த விபீஷனோ “வொய் நாட் பட், சார் ஒயிட் ஷர்ட்டை ரிமூவ் பண்ணிட்டு வேற கலர் ஷர்ட் போட்டா என்னவாம்” என்றான் புருவம் உயர்த்தி,
இதழ் குவித்து ஊதிக் கொண்ட ஜெய் ஆனந்த்தோ “நோ மென்ஷன். நீ இப்படியே கிளம்பு” என்று அறைக் கதவின் புறம் காட்டினான்.
இதழ் பிரித்து சத்தமாக சிரித்தவனோ “சீக்கிரம் ரெடியாகிட்டு வா” என அறையை விட்டு வெளியேறியிருந்தான்.
வெண்ணிற ஷர்ட்டின் பட்டன்களை ஒவ்வொன்றாக போட்டவன் என்ன நினைத்தானோ மேலிரு பட்டனைகளை போடாமல் விட்டவன் கேசத்தை கோதிக் கொண்டே ஹேங்கரிலிருந்த நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டில் கரத்தை வைத்தவன் ‘ப்ச்’ என சலித்து விட்டு விபீஷன் எடுத்து வைத்து விட்டு போன வெண்ணிற வேஷ்டியை அணிந்துக் கொண்டான்.
அதனைத் தொடர்ந்து, மணிக்கட்டில் வாட்ச்சை கட்டிக் கொண்டு அறையை விட்டு வெளியேறி வந்தவனை பார்த்த விபீஷன் சத்தமாக சிரித்து விட, அவனை கடுமையாக முறைத்த ஜெய் ஆனந்த், “என்னடா?” என கடுப்பாக கேட்டவன் தன்னைக் குனிந்து ஆராய்ந்தான்.
“பின்ன, நாம என்ன அரசியல் மீட்டப்கா போறோம்? புல் ஒயிட் அண்ட் ஒயிட்டா வந்திருக்க” என்றதும் நெற்றியை நீவிக் கொண்டே “என்ன? கலாய்க்குறியா?” என்று கேட்டான்.
“இட்ஸ் ஓகே” என சொல்லி விட்டு அவன் தோளில் கரத்தை போட்டு அலைபேசியில் செல்ஃபி எடுத்தான் ஜெய் ஆனந்த்.
“என்ன அண்ணிக்கு சென்ட் பண்ணவா?” என்று கேட்டான்.
“ச்சே இல்லையே, நீ கலர்புல்லா பக்கத்துல இருக்கல சோ ஒயிட் அண்ட் ஒயிட் வித் க்ரீன் காம்பினேஷன் பார்த்தேன்” என்றான் இதழ் கடித்து சிரித்த படி,
“எனக்கென்னவோ அண்ணிக்கு ஃபோட்டோ சென்ட் பண்ண போறனு தோணுது” என்று சொல்ல,
“தியா’கு சென்ட் பண்ண நான் ஏன் உன்கூட செல்ஃபி எடுக்க போறேன்?” என புருவம் உயர்த்த,
“சோ?” என விபீஷன் கேட்க,
“வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்க போறேன்” என்று சொல்லிக் கொண்டே அப் புகைப்படத்தை சொன்னது போலவே புலனத்தில் பதிவேற்றியிருந்தான்.
இங்கோ, தயாராகி விட்டு அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த பவ்யா, ஜெய் ஆனந்த் புலனத்தில் பதிவிட்டிருந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ந்தவள் பார்வை விபீஷனில் தான் நிலைத்தது.
பின்னே அதிராமல் இருப்பாளா?
அவன் அடர் பச்சை நிற ஷர்ட் அணிந்திருக்க, அவளோ அதே நிறத்தில் கல் வேலைப்பாடுங்கள் செய்த புடவையை கட்டி அல்லவா இருந்தாள்.
ஆஹித்யாவோ, அவளின் அதிர்ந்த பார்வையை பார்த்துக் கொண்டே காதில் ஜிமிக்கியை மாட்டிக் கொண்டு அவளை நெருங்கி அலைபேசியை பார்த்தாள்.
முதலில் அவள் பார்வை பதிந்தது தன்னவன் மீது தான்.
அவனைத் தவிர வேறு ஏதேனும் தெரிந்தால் அதிசயம் தான் போலும்,
ஆண்மையின் மொத்த இலக்கணமாக திரையில் புன்னகையுடன் நின்றிருந்த ஜெய் ஆனந்த்தை வஞ்சனை இன்றி ரசித்து பார்த்தாள்.
இவ்வளவு விரைவாக தன்னவனுடன் அதுவும் தான் விரும்பியவனை கரம் பிடிக்க பல தடைகளை தாண்ட தான் வேண்டுமோ? என்று நினைத்து புலம்பியவளுக்கு தானாக அவன் கிடைத்தும் விட்டான்.
திருமணம் நெருங்க நெருங்க ஏனோ அவளை வெட்கம் எனும் அலையா விருந்தாளி நாடிக் கொள்ள, அவன் எதிரே வந்தால் கூட குனிந்த தலை நிமிராமல் அமைதியாக சென்றவள் இன்று அவனை நேருக்கு நேர் பார்த்து பேச போகின்றோம் என்ற படபடப்புடன் சேர்ந்து வெட்கம் வேறு பிடுங்கித் தின்றது.
அதன் விளைவால் அவனை திரையில் கண்ட பெண்ணவளுக்கோ, காது மடல்கள் சிவந்து போயின.
இதழில் தவழ்ந்த புன்னகையுடன் “பவ்யா வாடி அம்மாவுக்கு எல்லாம் எடுத்து வைக்க ஹெல்ப் பண்ணலாம்” என்றழைத்தவள் அப்போது தான் அவளை பார்த்தாள்.
அவளின் விழிகள் திரையில் ஜெய் ஆனந்த்தின் பக்கத்தில் அவனுக்கே சவால் விடும் வகையில் ஆண்மையின் மறுவுருவமாக நின்றுக் கொண்டிருந்த விபீஷனில் படிந்திருப்பத்தை பார்த்து அவளுக்கு அபாய சங்கு ஒலித்தது.
‘ ஆத்தி, என்னத்தை வச்சு வம்பு பண்ண போறாளோ தெரியலயே’ என அரண்டவள் அவளின் தோள்களை தொட்டு உலுக்கி “போனை வச்சிட்டு வா ஹெல்ப் பண்லாம்” என்று சொல்ல,
“நான் சாரி சேஞ்ச் பண்ணிட்டு வரேன்” என்றாள் குரல் கம்ம,
அதிர்ந்து போன ஆஹித்யா “நாம ரெண்டு பேருக்கும் அத்தை வீட்ல எடுத்து கொடுத்த சாரி சோ சேஞ்ச் பண்ண கூடாது” என்றாள் அழுத்தமாக,
அதை கேட்ட பவ்யாவுக்கோ கோபம் தாறுமாறாக ஏறியது.
‘ எல்லாம் அவன் வேல தான்’ என்று மனதில் கறுவிக் கொண்டவள் “ சரி தான் நடக்காத கல்யாணத்துக்கு நான் ஏன் சும்மா சேஞ்ச் பண்ண” என்று சொல்லிக் கொண்டே முன்னேறி நடந்தவளிடம் “வாட்? என்ன உளருற?”
“ஹே கூல் மேன். உனக்கும் ஜெய் மாமாவுக்கும் மேரேஜ் நடக்கும் பட் எனக்கும் அந்த நல்லவருக்கும் ‘ப்ச்…’ ”என்று இதழ்களை பிதுக்க, எதிரே நின்றவளுக்கோ இவள் என்ன செய்து வைக்கப் போகிறாள் என்று இப்போதே குளிர் பரவ ஆரம்பித்து விட்டது.
அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கேட்ட படி அறைக்குள் நுழைந்த வித்யா வில்லத்தனமாக பேசிக் கொண்டிருக்கும் தனது மகள் பவ்யாவின் கையை பிடித்து இழுத்து தன் புறம் திருப்பியவர் “என்மேல சத்தியம். நீ விபீஷனை தான் கல்யாணம் பண்ணிக்கணும்” என சொன்னவர் சிலை போல நின்றவளின் வலக் கரத்தை உயர்த்தி தன் தலையில் வைத்திருந்தார்.
“அம்மா” என்றவள் விழிகள் கலங்கி போக,
“அவனை நீ ஏன் இந்த பாடு படுத்திட்டு இருக்க பவ்யா ? உன்ன நேசிச்சதை தவற வேற எண்ண தப்பு பண்ணான்?” என சீற்றமாக வெளி வந்தன வித்யாவின் குத்தீட்டியான கேள்விகள்.
விடையறியா கேள்விக்கு அவள் எப்படி பதில் சொல்வாள்?
ஏனோ அவனைக் கண்டாலே கோபம் கோபமாக வந்து தொலைக்கின்றது. ஆனால் அவன் மீது தனிப்பட்ட வெறுப்போ, பழி வெறியோ எதுவும் கிடையாது.
அவனைக் கண்டாலே தனக்குள் தோன்றும் கோபம் ஏன்? என தெரியாமல் அவள் தவிக்கும் போது, வித்யாவின் கேள்விகளுக்கு என்ன தான் பதில் கூற முடியும்?
இதே தொடர்ந்தால் இருவரின் வாழ்க்கையும் வீணாக போய்விடும் என்றல்லவா தனது திருமணத்தை நடக்க விடாமல் செய்யலாம் என யோசித்திருந்தாள்.
விதியோ அவளை பார்த்து சிரித்து கொண்டது.
அமைதியாக நின்றவள் ஒரு பெரு மூச்சுடன் “நிறுத்த மாட்டேன். அவரை கட்டிக்கிறேன் என்றவள் தன் அன்னையின் விழிகளை பார்த்து பட் எனக்கு என்னை மாத்திக்க டைம் வேணும் மா. அதுக்குள்ள ஊர்ல அப்படி பேசுறாங்க இப்படி பேசுறாங்கனு குழந்தை விஷயமா என்கிட்ட பேச கூடாது” என சட்டென கூறி விட்டாள்.
தன் தங்கையா இப்படி பேசுகின்றாள்? என அவளை பார்த்துக் கொண்டிருந்த ஆஹித்யா “ ஓகே ரிலக்ஸ்” என திரும்பி தன் அன்னையின் “அம்மா நீங்க போங்க நாங்க வரோம்” என்று சொல்ல,
இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியேறியிருந்தார் வித்யா.
இன்னும் முகத்தில் தெளியா குழப்பத்தோடு கலங்கி போய் நின்றிருந்த பவ்யாவின் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தவள் “ லைஃப் ல அனுபவிக்க இன்னும் நிறையவே இருக்கு பவ்யா. நாளைக்கு என்ன நடக்கும்னு நிச்சயம் இல்லாத வாழ்க்கை இது. சோ இப்போ இந்த நொடி நமக்கானது என்ஜாய் பண்ணு. விபீஷன் கூட மனசு விட்டு பேசு. டைம் கேளு. காலம் எல்லாத்தையும் நிச்சயமா மாத்தும் சோ நாளைக்கு என்னனு நினைச்சு பீல் பண்ணாத நம்ம நிம்மதி போய்டும். வாழ்க்கை வாழ்வதற்கே” என்று அவளின் இதழ்களை தன் இரு விரல்களால் விரித்து விட்டவள் “ சிரி அப்போ தான் கொஞ்சமாச்சும் சைட் அடிக்கிற போல இருப்ப”என்றவள் கேலியில் சட்டென சிரித்தவள் “என்னவோ கொஞ்சம் டென்ஷன் குறைஞ்ச போல இருக்கு ஆஹி. தேங்க்ஸ்” என்று அவளின் கன்னத்தில் குனிந்து முத்தமிட்டு இறுகி அணைத்துக் கொண்டாள்.
அத்தியாயம் – 7
வித்யாவிற்கு உதவிகளை செய்து விட்டு மீண்டும் அறைக்குள் வந்தமர்ந்து பேசிக் கொண்டிருந்த பெண்களுக்கோ, வரவேற்பறையில் பேச்சு சத்தம் கேட்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“ஆஹி, இது சரி வருமா?” என்று பவ்யா கேட்டு வைக்க,
“இவ்வளவு நேரம் உனக்கு வாய் வலிக்க அட்வைஸ் பண்ண எனக்கு. இல்லை இல்லை போன எபிசோட்ல அட்வைஸ்ஸை வாரி வழங்குன ரைட்டருக்காச்சும் கொஞ்சம் ரெஸ்பெக்ட் கொடுடி”
“ம்கும்” என நொடித்துக் கொண்ட பவ்யா, ஆஹித்யா கூறியதை போல திருமணத்திற்கு பிறகு விபீஷனுடன் பேச வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
அதனைத் தொடர்ந்து சித்ராவோ, இருவரையும் சமையலறைக்குலிருந்து அழைக்கவும், இருவரும் ஒரு பெரு மூச்சுடன் சமையலறையை நோக்கி சென்றனர்.
வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த ஜெய் ஆனந்த் மற்றும் விபீஷன், இருவரும் முகத்தில் எதுவும் காட்டிக் கொள்ளாமல் பிரதாபனிடம் பேசிக் கொண்டிருந்தாலும் மனதில் என்னவோ சொல்ல முடியாத உணர்வு இருவருக்குள்ளும் தோன்றிக் கொண்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து இரு ஆண்களின் கடைக் கண் பார்வையும் சமையலறையின் வாயிலை தான் நோட்டமிட்டிக் கொண்டிருக்க, அவர்களை ஏமாற்றாது இரு பெண்களும் கையில் காஃபியுடன் தலை தாழ்த்தி அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர்.
விபீஷனுக்கோ இதயம் படு வேகமாக துடித்தது. பவ்யா தலை தாழ்த்தி இருந்ததால் என்னவோ அவளை வஞ்சனை இல்லாமல் கண்களால் பருகிய படி கவனித்தான்.
முதலில் ஜெய் ஆனந்த்தை நெருங்கிய ஆஹித்யா, தடதடக்கும் இதயத்துடன் தன்னவனை தலை நிமிர்ந்து பார்க்க நாணியவளாய் இதழ் கடித்து தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு காஃபியை ஜெய் ஆனந்த்திடம் நீட்ட, அவனோ மென் புன்னகையுடன் அவளைப் பார்த்தானே தவிர அவள் நீட்டிய காஃபியை கையில் எடுத்துக் கொள்ளவில்லை.
சில நொடிகளில் அவன் இன்னுமே காஃபியை எடுக்கவில்லை என்று புரிந்த கணம் சங்கடமாக “மா…மாமா காஃபி” என திணறிய படி கூறினாள்.
அவனோ பதிலும் கூறவில்லை. காஃபியை எடுக்கவும் இல்லை.
அவனின் செயலில் விபீஷனோ சற்றே குனிந்து “டேய் எடு டா என் ஆல் வெயிட்டிங். அவளுக்கு கை வலிக்க போகுது” என்று மெலிதாக கூற,
சட்டென அவன் புறம் திரும்பி ஜெய் ஆனந்த் பார்த்த பார்வையில் விபீஷனின் இதழ்களோ பசை போட்டதை போல ஒட்டிக் கொண்டது.
ஜெய் ஆனந்த்தின் செயலில் பதறிய சித்ரா “ஆனந்த்” என்றார்.
அருகிலிருந்த பிரதாபனோ சித்ராவின் முகத்தில் தோன்றிய பதட்டத்தை எண்ணி நொந்துக் கொண்டவர் குரலை செருமி கண்களால் சைகை செய்ய, ‘ஹையோ என்னாச்சு மாமா சைலண்ட்டா இருக்காங்க’ என இப்போது திணறி போன ஆஹித்யா சற்றே நிமிர்ந்து விழிகளில் கலக்கத்துடன் தன்னவனை ஏறிட்டாள்.
அவ்வளவு தான். அவனின் முகத்தில் மிளிர்ந்த மந்தகாச புன்னகையில் அவளின் சித்தம் அவன் விழி வீச்சில் மொத்தமாக தொலைந்தது.
அவள் தன்னை ஏறிட்ட அடுத்த கணம், அவனோ அவள் கொடுத்த காஃபியை எடுத்து அவளிலிருந்து பார்வையை அகற்றாது பருக ஆரம்பித்து விட்டான்.
என்ன பார்வை இது? ஒற்றை பார்வை உயிரை உறிஞ்சுமா என்ன? மேனியில் சொல்ல முடியாத பரவசம் அவளுள்,
நெஞ்சம் படபடக்க, அவனை பாராதே என மனதை கடிவாளமிட்டு அடக்கியவள் பார்வையை கடினப்பட்டு தாழ்த்திக் கொண்டவள் விலகி நிற்க, பிரதாபன் சித்ரா உட்பட வித்யாவும் இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.
அவர்களை ரசனையாக பார்த்துக் கொண்டு நின்ற பவ்யாவின் பார்வையோ விபீஷனின் மீது படிய, அவள் தன்னை எப்போது பார்ப்பாள் என்று காத்திருந்தான் போலும், அவளின் பார்வை வீச்சில் சட்டென விழிகளை சிமிட்டி நாவால் உட்புறமாக கன்னத்தை வருடி மெலிதாக புன்னகைத்தான்.
அவனின் செயலில் வழமை போல கோபம் வர வேண்டிய பாவையவளுக்கோ வெட்கம் பிடுங்கி தின்ன, முகமோ சூடேறி சிவந்து போனது.
ஜெய் ஆனந்தின் செயலும் அதற்காக தன் தாமக்கை நாணியதையும் பார்த்தவளுக்கோ, ரசனையுடன் கூடிய எதிர் பார்ப்பில் மெல்ல பார்வையைத் திருப்பியவளுக்கு, அவளவன் அவளின் எதிர் பார்ப்பை செவ்வனே நிறைவேற்றியிருந்தான்.
அதனைத் தொடர்ந்து அவளும் காஃபியை நீட்ட, தன்னவள் தன்னைக் கண்டு வெட்கி சிவந்ததில் உள்ளூர ஆனந்த அதிர்ச்சி கொண்டான் அவன்.
அவளை சீண்டலாம் என்று நினைத்திருந்தவனுக்கு அவளின் தனக்கே தனக்கான வெட்க முகச் சிவப்பு ஆணவனை திக்கு முக்காட வைக்க, எவ்வித ஆரவாரமும் இன்றி அமைதியாக காஃபியை எடுத்துக் கொண்டான் விபீஷன்.
இனி கேட்கவும் வேண்டுமா? அவ்விடத்தில் கலகலப்புக்கு பஞ்சம் ஏது?
சித்ராவும் வித்யாவும் வீட்டுக்கு வரவழைத்த புரோதருடன் கல்யாண விடயங்களை பேச ஆரம்பித்து விட, பிரதபனுக்கோ அங்கு அமைதியாக இருக்க வேண்டிய நிலை தான்.
இருவரும் மின்னல் வேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்க, அவரும் என்ன தான் செய்வார்?
மென் புன்னகையுடன் பார்வையாளராக இருந்தார்.
அங்கிருந்து மெதுவாக நழுவி பவ்யா வெளியில் செல்வதை பார்த்துக் கொண்டே கழுத்தில் கரம் வைத்து நெட்டி முறித்த படி இருக்கையை விட்டு எழுந்த விபீஷனை பார்த்து குரலை செருமினான் ஜெய் ஆனந்த்.
அவன் தன்னை பார்த்ததும் நக்கலாக புன்னகைக்க, விபீஷனோ கேசத்தை கோதிக் கொண்டே வாயிலை நோக்கி நடந்தான்.
இதழ் குவித்து ஊதிக் கொண்டே விபீஷனின் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்பி விட்டு நவீனுக்கு அழைப்பை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றான்.
அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததன் அடையாளமாக ஒலிக்கவும் சட்டென அலைபேசியை எடுத்து பார்த்தவனுக்கு இதழ்களில் மெலிதான புன்னகை.
ஆம், ஜெய் ஆனந்த் தான் ‘ஆல் தி பெஸ்ட்’ என்று அனுப்பியிருந்தான்.
‘தேங்க்ஸ் டா’ என்று பதில் அனுப்பி வைத்தவன் தன்னவள் எங்கே என்று பார்வையால் அவ் இடத்தை சுழற்றி தேடினான்.
அவளோ, மரத்தின் கீழே நின்று விரல் நகங்களை கடித்துக் கொள்வதும் பின் நெற்றியை நீவிக் கொள்வதுமாக நின்றிருந்தாள்.
அவளின் செயலை கண்டவனுக்கோ ஏதோ பதட்டதில் இருக்கின்றாள் என்று புரிந்தது.
மெதுவாக அவள் இருக்கும் இடத்தினை நோக்கி நடந்தான்.
அவளை நெருங்க நெருங்க அவளின் பிதற்றல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவனின் செவியை தெளிவாக அடைந்தது.
“ஹையோ, எதுக்கு அவன் முன்னாடி வெட்கப்பட்ட லூசு ஆஆஹ்” என்று தலையைப் பிய்க்காத குறையாக பிதற்றியவள் விபீஷனின் கண் சிமிட்டல் மனக் கண்ணில் தோன்றி மறையவும், “அச்சோ அந்த லுக்கே என்னை என்னவோ” என்று சொல்லிக் கொண்டே முகம் சிவக்க திரும்பியவளுக்கு நெஞ்சே அடைத்து விட்டது.
இதழ் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டு மரத்தில் சாய்ந்து அவளையே விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டு நின்ற விபீஷனை பார்த்து அவளுக்கோ மேலும் பேச வார்த்தைகள் வர மறுத்தன.
‘பதிலுக்கு பதில் பேசுவ தானே ஏதாவது பேசித் தொலை’ என்று மூளை எச்சரிக்க, அதற்கு மாறாக அவளின் மனமோ சொல் பேச்சு கேட்காமல் அவனின் ஆளுமையான தோற்றத்தை ரசிக்க தூண்டியது.
இது என்ன புது வித அவஸ்தை?
‘ஹையோ,’ என மனதில் நொந்து கொண்டவளுக்கு அவனின் அடக்கப்பட்ட புன்னகையே தன் புலம்பல்களை கேட்டு விட்டான் என்று அப்பட்டமாக தெரிந்து போனது.
‘போச்சு, மானமே போச்சு’ என மனதில் ஆயிரமாவது முறையாக நொந்து கொண்டவள் அவனை தாண்டி நடக்க முயன்றவள் செவியில் அவனது வார்த்தைகள் தீண்டி அவளை மொத்தமாக சிவக்க வைத்து மயிர்க்கால்கள் சிலிர்த்து குத்திட்டு நிற்க வைத்து விட்டன.
விழிகளை மூடித் திறந்து ஒரு பெரு மூச்சை விட்டுக் கொண்டவள் “தேங்க்ஸ்” என்றாள்.
முதல் முறையாக அவனிடம் அமைதியாக பதில் கூறிக் கொண்டிருக்கிறாள்.
அவளை நினைத்தே அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
“நான் எப்படி இருக்கேன்னு சொல்லவே இல்லையே” என்றவனது கேள்வியில் அவளுக்கோ மயக்கம் வந்து விழ மாட்டோமா என்றாகி போனது.
‘ஓஹ் கோட் என்ன இது பேச கூட முடியாம ஷை ஆகுதே’ என மனதில் சொல்லிக் கொண்டவள் இப்போது அவனிடம் என்ன சொல்வது என்று நினைத்தே திணறி போனாள்.
“என்ன நோக்கி பரயு” என்றான் மலையாளத்தில்,
அவன் மலையாளத்தில் பேசியதும் புருவங்கள் உயர அவன் புறம் திரும்பியவள் தயங்கங்கள் விடை பெற்று செல்ல, அவளின் துடுக்குத்தனம் வெளியே வர “நீ சைட் நன்னாயி அடிக்குன்னாதாயி தொன்னுனு” என்று சொன்னவள் அதற்கு மேல் அவன் முன் நின்றால் தானே! வீட்டை நோக்கி வெட்கத்தில் ஓடியவளிடம் “சத்யமானோ பரயுனது?” என்றவன் கேள்வியில் அவளது நடை சட்டென தடைபட, “கண்ணாடி போயி நோக்கு” என்று சத்தமாக குரல் கொடுத்தவளுக்கு எங்கிருந்து இவ்வளவு பொறுமை வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை.
அப்படியே திரும்பியும் பாராமல் வீட்டுக்குள் நுழைந்து கொண்டாள் பாவை.
தன்னை கண்டதும் என்னவோ ஏச தான் போகின்றாள் என எண்ணி இருந்தவனுக்கு அவளின் முகத்தில் தோன்றிய தனக்கான வெட்கமும் பதில் கூற முடியாமல் சிலிர்த்து போய் திணறியதையும் கண்டவனுக்கு இதழ்களில் புன்னகை விரிந்தது.
நீண்ட நேரம் அப்படியே மரத்தில் சாய்ந்து நின்றவன் செவிகளில் அவள் கூறிய பதில் எதிரொலிக்க மெலிதான வெட்கப் புன்னகை அவனிடம்,
இங்கு இப்படி இருக்க, நவீனுடன் பேசிக்கொண்டே மொட்டை மாடிக்கு வந்தவன் மேலே கேட்ட ஆஹித்யாவின் குரலில் புருவங்கள் உயர “நவீன் ஐ வில் கால் யூ லேட்டர்” என அழைப்பைத் துண்டித்த ஜெய் ஆனந்த், ‘ எல்லாரும் கீழ இருக்காங்க இவ யார் கூட பேசிட்டு இருக்கா’ என இதழ்களுக்குள் முணுமுணுத்த படி, படிகளில் மேலேறி வந்தவன் அவளின் குரல் வந்த திசையை பார்த்தான்.
அங்கோ, அவளைக் கண்டவன் விழிகளோ அதிர்ச்சியில் பெரிதாக விரிந்து கொண்டன.
பின்ன, தானாக புலம்பிக் கொண்டு தலையை நங் நங்கென்று சுவரில் முட்டிக் கொண்டிருப்பவளை பார்த்து அதிராமல் இருக்க முடியுமா என்ன?
“தியா” என்றபடி அவளை நெருங்கியவனை அப்போதுதான் பார்த்தாள் பாவை.
‘ஆத்தி’ என மனதில் பதறியவள் நீ… நீங்க எப்… எப்போ வந்தீங்க மாமா?”
“ஜஸ்ட் நவ்” என்றவன் கரமோ தானாக உயர்ந்து அவளின் நெற்றியில் படர்ந்திருந்த முடிக் கற்றையை காதோரமாக ஒதுக்கி விடவும், அவனின் இச் சிறு செயல், அவன் மேல் காதல் கொண்ட பாவையவளின் இதயத்தின் துடிப்பை அதிகரித்தது.
“நர்வஸ் ஆகுற போல என்னாச்சு?”
‘எதையாவது சொல்லி சமாளி இப்போ’ என தன்னைத் தானே திட்டிக் கொண்டவள் “ஹி ஹி ஹி… சும்மா தான். தலை வலிச்சது அதான் கொஞ்சம் இதோ இந்த வால்ல முட்டி பார்த்தேன் அவ்ளோ தான்” என்றவள் பதில் அவளுக்கே உவப்பானதாக தோன்றவில்லை.
இருந்தும் அவன் நம்பி விட்டானா என முகத்தை ஆராய்ந்தாள்.
ஆனால், அவன் முகமோ சாதாரணமாக தான் இருந்தது.
“இஸ் இட்?” என்று கேட்டவன் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
அவனின் கேள்வியிலேயே, தான் கூறியதை அவன் நம்பவில்லை என்று புரிந்து போக, “எஸ் ஒப்கார்ஸ் மாமா” என்றாள்.
என்ன நினைத்தானோ “ஒயிட் அண்ட் டார்க் ப்ளூ சாரில அழகா இருக்க” என்றான்.
பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் இப்படி கூறுவான் என அவள் எதிர்பார்க்கவே இல்லை.
அவளும் சாதாரண உணர்வுகள் கொண்ட பெண் தானே!
அவன் முன்னிலையில் வெட்கம் தாழாது தனது இரு கரங்களாலும் முகத்தை மூடிக் கொண்டாள் பெண்ணவள்.
அத்தியாயம் – 8
இரு கரங்களாலும் தன் முகத்தை மூடிக் கொண்டவளின் வெட்கத்தை ரசனையாக பார்த்தவன் குரலை செருமிக் கொண்டே “பொய் சொல்லாதனு சொன்னதை மறந்துட்ட போல” என்றதும் சட்டென தன் கரங்களை அகற்றி அவன் முகம் நோக்கியவளுக்கு தான் ‘ ஐயோடா’ என்றாகி போனது.
அவனைக் கண்டாலே திணறும் தன்னை நொந்து கொண்டாள்.
இதில் அநியாயத்துக்கு வெட்கம் வேறு வந்து தானாய் தொற்றிக் கொள்கின்றது என ஆற்றாமையாக இருந்தது.
நிலத்தை பார்த்துக் கொண்டே “நீங்க காஃபி எடுக்காமல் லேட் பண்ணிங்கல அதான்” என்றாள்.
“ஜஸ்ட் காஃபி எடுக்க லேட் பண்ணதால மட்டும் தானா?” என்ற கேள்வி அவனிடம்,
‘ ஹையோ’ இவன் விட மாட்டானா என்று தான் அவளுக்கு தோன்றியது.
அதற்கும் மேல் இவன் இப்படி எல்லாம் பேசுவானா? என அதிர்ச்சியாக வேறு இருந்தது.
இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவன் முகம் பார்த்தவள் இதழ் கடித்து தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு “ நீ.. நீங்க என்றவள் குரலை செருமிக் கொண்டே என்னவோ போல என்னை பார்த்தீங்க தானே…” என கூற வந்தவளுக்கு மேலும் பேச்சை தொடர முடியாது வார்த்தைகள் தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்டு வர மறுத்து விட்டன.
புருவங்கள் உயர “எப்பவும் போல தானே பார்த்தேன்” என்றவன் அவளறியாது இதழ்களுக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
“நோ மாமா, நீங்க பொய் சொல்றீங்க. என்னால பீல் பண்ண முடிஞ்சது” என்றவளை ஆழ்ந்து அவன் பார்த்த பார்வையில் மீண்டும் திணறியவள் “இதோ இ…இப்…இப்படி தான் பார்த்தீங்க” என்று அவனை அவனுக்கு உணர்த்தி விடும் வேகத்தில் சொன்னவளுக்கு அவனின் கனிவான புன்னகையில் தான் தன்னை சீண்டிக் கொண்டிருக்கிறான் என்றே புரிந்தது பெண்ணவளுக்கு,
“நா..நான் போறேன்” என்றவள் அவனைத் தாண்டி செல்லும் போதே அவளின் கையைப் பற்றி பிடித்து விட்டான் ஜெய் ஆனந்த்.
அவளுக்கோ விழிகள் இரண்டும் விரிந்து கொண்டன.
இதயம் எம்பி வெளியில் குதித்து விடுவது போல படு வேகமாக துடித்தது.
என்ன செய்யப் போகின்றான்?
எனது முதல் முத்தத்தை கள்வனவன் திருடப் போகிறானோ? என்றெல்லாம் தாறுமாறாக அவளின் சிந்தனை பயணிக்க, அதற்கு ஏற்றாற் போல மயிர்க்கால்கள் சிலிர்த்து மேனி முழுவதும் சிவந்து போய் அப்படியே நின்றிருந்தாள்.
“லுக் அட் மீ தியா” என்றவன் குரலோ மென்மையிலும் மென்மையாக அவளைத் தீண்டியது.
“ம்ஹூம்” என்றாள் மறுத்து,
“தட்ஸ் ஃபைன் நானே உன் முன்னாடி…” என்று அவன் சொல்லும் போதே அவன் புறம் முழுதாக திரும்பியவள் பார்வை தன் விரல்களோடு பிணைந்திருந்த அவனின் நீள் விரல்களில் பதிந்தது.
“ஐ திங்க் நார்மல் ஸ்பீட விட ஹார்ட் இஸ் பீடிங் டூ பாஸ்ட் தியா, என்றவன் அவளின் நாடியை பிடித்து பார்த்ததுமில்லாமல் தனது இடது மார்பில் அவளது கரத்தை வைத்து அழுத்தினான்.
சும்மாவே அவனின் இவ் அவதாரத்தில் ஆடிப்போய் நின்றவள் இப்போது அவன் வேறு தனது நிலை புரியாமல் என்னவோ செய்து கொண்டு இருக்கிறானே!
அந்நிசப்த்தத்தை கிழிக்கும் வண்ணம் இருவரின் இதயத் துடிப்பும் ஒருங்கே தாளம் தப்பித் துடித்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு எவ்வளவு நேரம் அப்படியே நின்றனரோ சட்டென கீழே கேட்ட வித்யாவின் குரலில் சுயம் அடைந்து சுற்றம் உணர்ந்தவர்கள் சட்டென பிரிந்தனர்.
முத்தம் கொடுத்து கட்டி அணைத்து மூன்றெழுத்து வார்த்தைகளை கூறினால் தான் காதலா என்ன?
பேசப்படாத மௌனங்களும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்ட அருகாமை கொடுத்த உணர்வும் கூட காதல் தானே!
கேசத்தைக் கோதிக் கொண்டே லேசாக புன்னகைத்துக் கொண்டவன் “வா போகலாம்” என்று கரத்தை நீட்ட,
‘ஆத்தி மீண்டும் மீண்டுமா?’ என்று அரண்டவள் “இல்ல மாமா நீங்க முன்னாடி போங்க நான் வரேன்” என்றவளின் தயக்கம் அறிந்தவனோ இதழ் குவித்து ஊதிக் கொண்டே அதிரடியாக அவளின் கரத்தை பற்றியே விட்டான்.
அவனின் கைச்சிறைக்குள் அகப்பட்டுக் கொண்ட தன் கரத்தை ஒரு பெருமூச்சுடன் பார்த்தவளுக்கு படபடப்பு தான் குறைந்தபாடில்லை.
அவனின் விரல்களோடு விரல் பிணைத்து கொண்டவள் மந்திரித்து விட்டதை போல அவன் அவனோடு இழு பட்டு சென்றவளுக்கு ஒரே வேண்டுதல் தான்.
‘ஆம், வேறென்ன? அனைத்தும் நிதர்சனமாக இருக்க வேண்டும் என்று தான்’
அதனைத் தொடர்ந்து நாட்களும் தன் பாட்டில் நகர ஆரம்பித்த தருணம் அது.
இதோ அதோ என்று திருமணத்திற்கு ஒரு கிழமை தான் என்றிருக்கும் போதே சித்ராவோ அனைவரையும் ஆடைகளை எடுக்க கிளப்பி இருந்தார்.
அதிலும் ஜெய் ஆனந்த் தான் இவ் விடயம் அறிந்து முன் கூட்டியே மருத்துவமனைக்கு செல்லாமல் விடுப்பு வேறு எடுத்து இருந்தான்.
“ஆனந்த்” என அழைத்துக் கொண்டே லேசாக திறந்திருந்த அவனின் அறைக்குள் நுழைந்திருந்தார் சித்ரா.
ஷர்ட்டை முட்டி வரை மடித்துக் கொண்டே ஆளுயரக் கண்ணாடியின் முன் நின்றவனோ “ அம்மா வொய் என்ன இவ்ளோ அவசரம்?”
“முகூர்த்த புடவை எடுக்கணும் டா எக்கச்சக்கமா இருந்த கல்யாண வேலையில உன்கிட்ட இதபத்தி சொல்லவே மறந்துட்டேன் என்று தயங்கியவாறே சொன்னவர் ஹாஸ்பிடல் போகாத டா” என்று சொல்லி விட,
“மா” என்று சித்ராவின் கன்னத்தை பற்றியவன் “ஆல்ரெடி லீவ் சொல்லிட்டேன். சோ கிளம்பலமா?” என கேட்டிருக்க,
அவன் வர மாட்டானோ என தவித்த மனதிற்கு அவனின் வார்த்தைகள் பலத்தை அள்ளியே அளித்து விட்டது போலும், “சீக்கிரம் கிளம்பு டா சின்னவனும் வெயிட் பண்றான்” என்று சொல்லிக் கொண்டே துள்ளி குதிக்காத குறையாக சித்ராவும் ஓட, “அம்மா பீ கேர்புல்” என்றவனின் வார்த்தைகள் காற்றில் தான் கரைந்தது .
**************************************
அதனைத் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் விலையுயர்ந்த ஆடைகளைக் கொண்ட ஆடையகத்தினுள் நுழைந்திருந்தனர்.
இனி சொல்லவா வேண்டும்?
“ஆஹித்யா ஆனந்த் கூட போய் உனக்கு பிடிச்ச புடவைகளை எடுத்துக்கோ” என சித்ரா கூற, அவள் பதில் கூற வரும் முன்னரே அதற்காகவே காத்திருந்தவன் போல அவளது கரத்தை பற்றி விட்டான் ஜெய் ஆனந்த்.
அவளுக்கோ, வெளிவரவிருந்த வார்த்தைகளோ தொடைக்குழிக்குள் சிக்கிக் கொண்டன.
“என்னமா தயக்கம்? போ…போய் உனக்கு பிடிச்ச போல எடுத்துக்கோ” என சித்ரா சொல்லவும் “சரி அத்தை” என்றாள்.
இங்கு நடப்பவைகளை பார்த்த படி நின்ற வித்யா, பவ்யாவை கவனித்தார்.
அவளோ யாருக்கு வந்த விருந்தோ என்று அலைபேசியை ஆராய்ந்துக் கொண்டிருக்கவும் கோபமடைந்த வித்யா, “ஹேய் பவ்யா என்ன போனை நோண்டிட்டு இருக்க? பாரு உனக்காக விபீஷன் புடவை தேர்ந்தெடுத்துட்டு இருக்கான். போடி போய் அவன் பக்கத்துல நில்லு” என்று வித்யா கறுவ, “அம்மா பிளீஸ் மா ஏதாச்சும் செலக்ட் பண்ணி கொடுக்கட்டும் எனக்கு இப்போ அங்க போக மூட் இல்லை” என்று விட,
அவளை மேலும் நன்றாக முறைத்த வித்யா, அடுத்த வார்த்தை பேசும் முன்னரே அவ்விடம் வந்த சித்ரா “வித்யா வா என்கூட என்று சொன்னவர் திரும்பி விபீஷன் கூப்பிட்டு விட்டான் மா” என்க,
“என்னையா?” என்றாள் அதிர்ச்சியாக,
“ம்ம், போ மா” என்றவர் வித்யாவை கையோடு அழைத்துக்கொண்டு சென்ற வேகத்திலேயே புரிந்து விட்டது அவளுக்கு, அவன் தன்னை கூப்பிட எல்லாம் இல்லை என்று,
போனை அணைத்தவள் விபீஷன் நிற்கும் இடத்தினை நோக்கி விரைந்திருந்தாள்.
அவனை நெருங்க நெருங்க என்னவோ ஓர் தயக்கம் ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
அவள் தன் அருகே வந்து விட்டாள் என திரும்பி பாராமேலேயே உணர்ந்தது கொண்டவன் “ஃபைனலி என்கிட்ட வந்துட்ட போல” என்றான் ஆழ்ந்த குரலில்,
“வராமல் இருக்க முடியுமா என்ன?” என்றாள் பதிலுக்கு,
“சோ வாட் நெக்ஸ்ட்?” என்றவன் நிமிர்ந்து தன் முன்னிருந்த ஆளுயரக் கண்ணாடியில் தெரிந்த அவளின் விம்பத்தை பார்த்து ஒற்றை புருவம் ஏற்றி இறக்கினான்.
அதே நேரம், அவளோ அவனின் பக்கவாட்டில் நின்ற படி கண்ணாடியில் தெரிந்த அவனின் பிம்பத்தை பார்த்துக் கொண்டே அவனிடம் பேசிக் கொண்டிருந்தவளுக்கோ சட்டென அவன் தன்னை நிமிர்ந்து பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டது.
உள்ளே அதிர்ந்தாலும் குரலை செருமிக் கொண்டவளோ “ சாரி செலக்ட் பண்ணனும்” என்றாள்.
இதழ்களில் புன்னகை மிளிர, “உனக்காக நான் செலக்ட் பண்ணேன் பட் சாய்ஸ் இஸ் யுவர்ஸ்” என்றவனோ அவளுக்காக தான் தேர்ந்தெடுத்த அடர் பச்சை மற்றும் வயலட் நிறத்தாலான வேலைப்பாடுகள் நிறைந்த இரு புடவைகளை அவள் புறம் நகர்த்தினான்.
அவன் நகர்த்திய புடவைகளை பார்த்தவளுக்கோ, விழிகளை வேறு புடவையின் புறம் திருப்பவே மனதே இல்லை.
விழிகள் மின்ன இரு சேலைகளையும் வருடியவள் அதிலொன்றை எடுத்து தன் மார்பில் போட்டு கண்ணாடியில் பார்த்தாள்.
அவளின் வெண் நிறத்திற்கு அப் புடைவையோ மேலும் அழுகு சேர்த்திருக்க, இதழ்கள் தாராளமாக விரிய “தேங்க்ஸ் விபீஷன்” என்று சொல்லிக் கொண்டே திரும்பும் போது தான் அவனது பார்வையில் தெரிந்த காதலைக் கண்டு கொண்டாள் பாவை.
‘விட்டால் தன்னை விழுங்கி விடுவான் போலும்’ என்று நினைத்துக் கொண்டவள் மீண்டும் “தேங்க்ஸ்” என்றாள் திணறி படி,
அவளே அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவளின் மனதுக்குள் ஆழமாக வேரூன்றி இருந்தான் அவன்.
“நமக்குள்ள இந்த தேங்க்ஸ் தேவை தானா?”
“மேரேஜ் ஆகுற வரை தேவை தானே சார்” என்றாள் சளைக்காமல்,
“இஸ் இட்? என புன்னகையோடு கேட்டவன் அப்போ மேரேஜான பிறகு நோ நீட் ரைட்?” என்க,
“நீங்க நடந்துகிறதை பொறுத்து தான் டிசைட் பண்ண முடியும்”
“ஓகே… என இழுவையாக சொன்னவன் உனக்கு ஓகே தானே ஐ மீன் இந்த மேரேஜ்” என்றான் உள்ளே எழுந்த ஒரு வித தவிப்புடன்,
“பர்ஸ்ட் பிடிக்கல என்றவள் அவனின் விழிகளில் தெரிந்த வலியை கண்டு கொண்டவள் வெயிட் அதுக்குள்ள கலங்குனா எப்படி? பர்ஸ்ட் தான் பிடிக்கல பட் இப்போ ட்ரை பண்ணி பார்க்கலாம்னு தோணுது” என்றவள் புடவையை ஆராய்வது போல பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.
அவள் தான் பார்வையைத் திருப்பிக் கொண்டாளே தவிர, அவன் பார்வை அவளை மட்டும் தான் துளைத்துக் கொண்டிருந்தது.
“கம்பள் பண்ணலயே” என்றான் மீண்டும்,
“என் லைஃப்ல யார் வந்தாலும் நான் இஷ்டபட்டால் மட்டும் தான்” என்றவள் இப்போது நன்றாக திரும்பி அவனின் விழிகளை நோக்கிய படி“ அதுக்காக உங்களை முழுசா பிடிக்கும்னு இல்ல. எனக்கு டைம் வேணும். உங்க கூட நிறைய பேசணும்”
“ஓகே பட் என்னை பியூச்சர்ல பிடிக்க சான்ஸ் இருக்கா?” என எதிர்பார்ப்புடன் கேட்க, என்னவோ சிறு பிள்ளை தான் விருப்பும்பியது கிடைக்குமா? கிடைக்காதா? என பிடிவாதமாய் கேட்பதை போல தான் அவளுக்கு தெரிந்தது.
அவன் கேட்ட தோரணையில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவள் “பிடிக்கலாம் பிடிக்காமலும் போகலாம் சோ அதுக்கு நீங்க எனக்கு பிடிச்ச போல நடந்துக்கணும்”
தன்னைக் கண்டு கொண்டான் என்று புரிய மனம் பிசைய “சாரி விபீஷன் நீங்க கேட்டது…” என்றவளை பேச வேண்டாம் என்பதை போல விழிகளை மூடித் திறந்தவன் “ஐ மேட்லி இன் லவ் யூ பவி” என்றவன் வாயடைத்து நின்றவளை பார்த்து சன்னமாக விசிலடித்த படி கண்ணடித்து விட்டு அவளைக் கடந்து சென்று ஜெய் ஆனந்த்துடன் நின்று விட, தன்னையும் மீறி சிவந்த கன்னங்களை மறைக்க முடியாது மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றவளை கவனியாது முகம் சிவக்க ஓடி வந்த வேகத்திலேயே இடித்திருந்தாள் ஆஹித்யா.
அத்தியாயம் – 9
ஆஹித்யா இடித்ததில் சமநிலையின்றி விழப் போனவள் சட்டென சுதாரித்து கண்ணாடியாலான தடுப்பு சுவரை பற்றி தன்னை நிலைப் படுத்திக் கொண்டே கோபமாகத் திரும்பினாள்.
“ஹேய் சாரிடி” என்ற ஆஹித்யாவின் சிவந்த முகத்தை பார்த்தவள் ஒரு குறுநகையுடன் “அஹான் நல்லா நடத்து நடத்து” என்றாள் படு நக்கலாக,
மார்புக்கு குறுக்காக கரங்களை கட்டிக் கொண்டவளோ “நான் நடத்திட்டு வந்தேன் ஓகே பட் நீ என்னவோ நடத்தியிருக்க போல” என கேலிக் குரலில் சீண்டியவள் பவ்யாவின் இரு கன்னங்களையும் மாற்றி மாற்றி திருப்பி பார்க்கவும், சலிப்பாக “ப்ச்ச.. கைய எடு” என்று தட்டி விட்டாள் பவ்யா.
“சரி தான், இனி நான்லாம் மேடமை தொடவே முடியாது போல” என அதற்கும் கேலியாக அடக்கப்பட்ட சிரிப்புடன் கூற, “நீ மட்டும் இல்ல சம்மபந்தபட்டவரும் என் பெர்மிஷன் இல்லாம என்னை தொட முடியாது” என்றவள் பார்வை சிரித்து பேசிக் கொண்டிருந்த விபீஷன் மீது படிந்தது.
“ம்ம், பார்க்கலாம் பார்க்கலாம்” என்று சொல்லிக் கொண்ட ஆஹித்யாவின் முகமோ சற்று முன்னர் அவன் என்னவெல்லாம் தன்னை செய்து விட்டான் என்றெண்ணி நாணத்தை பூசிக் கொண்டது.
“எனக்கு வழியை விட்டுட்டு கொஞ்சம் நகர்ந்து போய் ஓரமா நின்னு வெட்கபடுட்டு இரு” என்ற பவ்யா அவளின் தோள்களை பற்றி சற்றே விலக்கியவள் இரு புடவைகளையும் எடுத்துக் கொண்டு சிறிது தூரம் சென்று மீண்டும் திரும்பி வந்தவள் “ ஓகே ஓகே எனக்கு காட்டு” என்றாள் கண்களை சிமிட்டி,
“வாட்?” என்றாள் அதிர்ச்சியாக,
“ஆஹி காட்டேன் டி பிளீஸ் பிளீஸ்” என்று கெஞ்சியவளை சங்கடமாக பார்த்தவள் “இங்க எல்லாம் காட்ட முடியாது” என்றவள் சுற்றி முற்றி பார்த்து விட்டு அருகிலிருந்த ஆடை மாற்றும் அறைக்குள் பவ்யாவை இழுத்துக் கொண்டு நுழைந்திருந்தாள்.
தன்னையும் இழுத்துக் கொண்டு ஆடை மற்றும் அறைக்குள் வந்தவளை கேள்வியாக பார்த்தவள் “ஜஸ்ட் ஒரு புடவையை ஓபன் பண்ணி காட்டுறதுக்கு இந்த ரூம் தேவையா?” என நெற்றியை நீவிக் கொண்டவள் கலிகாலம் என்று சொல்ல,
“வாட்? புடவையை தான் காட்ட சொன்னியா?” என அதிர்ச்சியாக கேட்டு சங்கடமாக சிரித்து வைத்தவள் “வா, வெளில போயே பார்த்துடலாம்” என்று சமாளிக்க,
“வெயிட் வெயிட் மா. எங்க போறீங்க? நீங்க எதை காட்ட வந்தீங்களோ அதையே பார்த்திட்டு போகலாமே” என்றவள் சிரிப்பை அடக்க முடியாமல் சத்தமாக சிரித்து விட்டாள்.
“உஷ்ஷ்ஷ்…. ஹையோ சிரிச்சு தொலையாத வெளில கேட்டுட போகுது” என எட்டி பவ்யாவின் இதழ்களை தன் கரத்தால் பொத்தி பிடிக்கவும், இவர்களின் அட்டூழியத்தில் தாழ் போடாமலிருந்த கதவு திறந்து கொள்ளவும் சரியாக இருந்தது.
இருவரும் ஒருங்கே உச்சகட்ட அதிர்ச்சியில் விழிகள் விரிய தாங்கள் இருக்கும் கோலம் மறந்து வெளியில் பார்க்க, அங்கோ இருவரையும் கேள்வியாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தது என்னவோ ஜெய் ஆனந்த்தும் விபீஷனும் தான்.
விபீஷனின் புருவங்கள் மேலேறவும், அவனின் பார்வையை எதிர் கொள்ள முடியாத பவ்யா தான் சட்டென ஆஹித்யாவை விட்டு விலகி நகர்ந்து சென்று விட, போகும் அவளை பார்த்து விட்டு தன் அண்ணனை பார்த்த விபீஷனின் இதழ்களில் புன்னகை.
சற்றே குனிந்து “லுக் விட்டது போதும் அண்ணி இன்னும் ஷாக்ல இருந்து வெளில வர்ல. தெளியவச்சு கூட்டிட்டு வந்துடு” என்று சொன்னவன் இருவருக்கும் தனிமை கொடுத்து சென்று விட்டான்.
இப்போது அவ்விடத்தில் எஞ்சி நின்றது என்னவோ ஆஹித்யாவும் ஜெய் ஆனந்தும் தான்.
மீண்டும் அவனுடனான தனிமை.
பெண்ணவளுக்கோ மனது படபடத்து போனது.
புடவை எடுக்கும் போதே கிடைத்த தனிமையில் அவனின் நெருக்கத்தில் மனதில் தோன்றியதை பேசி விட்டு வெட்கத்தில் ஓடி வந்தவளுக்கு இப்போது மீண்டும் அவனிடம் மாட்டிக் கொண்ட உணர்வு.
மெதுவாக நகர்ந்து தலையை தாழ்த்திய படி தன்னை தாண்டி அமைதியாக செல்ல முயன்றவளின் கரத்தை பிடித்திழுத்து தன்னோடு இறுக அணைத்துக் கொண்டவன் கரம் செய்த வேலையில் அவளின் இதயமோ தாளம் தப்பித் துடித்தது.
“ஹிப் தெரியிற போலவா பப்ளிக்ல போவீங்க?” என்ற அவனது கேள்வியில் தான் அவனது கரம் தன் இடையில் படிந்ததன் அர்த்தத்தை புரிந்து கொண்டாள் பாவையவள்.
“எ…என்ன ஹிப்பா?” என்று திணறிய படி திரும்பியவள் அவனது விழுங்கும் பார்வையில் ஸ்தம்பித்து போனாள்.
“மாமா யாரும் வந்திட போறாங்க பிளீஸ்” என அவஸ்தையாக நெளிந்தாள்.
“சோ வாட்?” என்றானே பார்க்கலாம்.
சுற்றியும் விழிகளை சுழல விட்டவள் சட்டென எம்பி அவனது கன்னத்தில் இச்சென்ற சப்தத்துடன் முத்தம் கொடுத்த மறுநொடி, நம்ப முடியாத அதிர்ச்சியில் தன் கரத்தை தானாக அவளின் இடையில் இருந்து விலக்கவும், இரு புருவங்களை உயர்த்தி ஒற்றை கண் சிமிட்டியவள் அதற்கு மேல் அவள் அங்கு நிற்க பைத்தியமா என்ன?
நாணத்தில் விரைந்து ஓடியிருந்தாள்.
இப்போது என்ன செய்து விட்டு சென்றாள்?
கரமோ தானாக உயர்ந்து அவளின் உமிழ் நீர் பட்ட கன்னத்தை வருடிய அதே நேரம், அவனது இதழ்களோ வெட்கப் புன்னகையில் தாமாக விரிந்து கொண்டன.
அவனுக்கு கசக்குமா என்ன? முதல் முத்தம் உயிர் வரை பித்தம் கொள்ள வைத்திருந்தது.
அதன் பின்னர் சொல்லவும் வேண்டுமா?
அவன் விழிகளில் அகப்படாமல், இல்லை இல்லை அவன் அருகாமையை தவிர்த்த வண்ணம் கவனமாக தன் அன்னையுடன் சுற்றிக் கொண்டு போக்கு காட்டிக் கொண்டிருந்தாள் ஆஹித்யா.
அவளின் சிறுபிள்ளை செயலை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கிக் கொண்டு ரசித்த படி கண்டும் காணாதது போல முகத்தை சாதாணமாக வைத்த படி சுத்தவும் அவளுக்கு தான் அவனின் நடவடிக்கையில் குழம்பிப் போனது.
எல்லோரும் அன்று வீடு வந்து சேரவே மாலை நான்கு மணியைக் கடந்திருக்க, வரும் வழியில் ஜெய் ஆனந்த்தோ நேராக மருத்துவமனைக்கு கிளம்பி இருந்தான்.
அவன் தன்னைக் கண்டு கொள்ளவில்லை என்றதும் அவளின் மனதோ வெகுவாக சோர்ந்து போனது.
அறைக்குள் வந்து கதவில் அப்படியே சாய்ந்து நின்றவள் “மாமா நான் ரொம்பவே அதிகப்படியா கிஸ் பண்ணிட்டேனா? என கேட்டுக் கொண்டவள் நொடியில் கலங்கியவாளாய் அப்போ என்னை தப்பான பொண்ணுன்னு நினைச்சிட்டீங்களா மாமா?” என புலம்பிக் கொண்டே விழிகளை மூடி கதவில் சாய்ந்து நின்றவள் நாசியோ அவனது பிரத்தியேக நறுமணத்தை உணர்ந்தது.
குழப்பத்தில் விழிகள் மூடி இருந்தவள் சற்றே தெளிந்தவளாய் இதழ்கள் தாராளமாக புன்னகையில் விரிய சட்டென விழிகளைத் திறந்தவள் தான் அணிந்திருந்த புடவையில் வீசிய அவனது பிரத்தியேக நறுமணத்தை முகர்ந்தவளுக்கு வெட்கத்தில் கன்னங்கள் சூடேறி சிவந்தன.
“ஹையோ மாமா, நான் நினைச்சே பார்க்காத போல இருக்கீங்களே சோ கியூட் என சொல்லிக் கொண்டவள் நெற்றியை நீவி விட்ட படியே தேவையில்லாமல் கற்பனை பண்றதை முதல்ல நிறுத்தனும் ஆஹி” என்றவள் எதிர் வீட்டில் மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்த பாடலில் மனம் லயிக்க பால்கனியை நோக்கி சென்றவளின் இதழ்களோ, மன்னவன் பேரை சொல்லி மல்லிகை சூடி கொண்டேன் மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடி கொண்டேன்…
சொல்ல தான் எண்ணியும், இல்லயே பாஷைகள், என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்…
மாலை சூடி ம்ம்ம்.. இம்ம் மஞ்சம் தேடி ம்ம்ம்.. இம்ம்
காதல் தேவன் சன்னிதி காண காண காண காண” என்று முணுமுணுத்துக் கொண்டே திரும்பியவளுக்கோ மயக்கம் வராத குறை தான்.
எங்கே விழுந்து விடுவோமோ என்று பயந்தவள் அப்படியே சாய்ந்து சுவரை பிடிமானமாக பற்றிக் கொண்டவள் “மாமா.. நீ.. நீங்க எப்போ வந்தீங்க?”
அவளின் கேள்விக்கு பதில் கூறாதவனோ எப்போது அவளை நெருங்கினான் என்று அவளுக்கே தெரியவில்லை.
தன் கரத்தில் வைத்திருந்த முல்லைப் பூக்களால் கோர்க்க்கபட்ட சரத்தை அவளின் நீண்டு விரிந்திருந்த கூந்தலில் வைத்து விட்டவன் “ நோ நீட் நானே வச்சு விட்டுட்டேன் சோ வாட் நெக்ஸ்ட்?” என அசராமல் அவன் கேட்ட கேள்வியில் சில நொடிகள் பிடித்தன அவனது வார்த்தைகளை கிரகிக்கவே,
இவன் என்ன இப்படி ஒரு நாளைக்குள் இத்தனை முறை வெட்கப் பட வைத்துக் கொண்டு இருக்கிறான்?
ஒரு நாளைக்கே இப்படி என்றால் திருமணத்திற்கு பிறகு? என்று நினைக்கும் போதே அவளின் விழிகள் அவனின் விழி வீச்சை சந்திக்க முடியாது வேறு பக்கம் திரும்பியது.
“நாட் பேட் சூப்பரா பாடுற தியா என்றவன் புருவம் உயர்த்தி பினிஷிங் லிரிக்ஸ் மைண்ட் பிளோவிங் சோ அதையும்…” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “ஐயோ அத்தை” என சொல்லிக் கொண்டே குளியலறைக்குள் நுழைந்து கதைவை அடைத்திருந்தாள்.
அவளுக்கோ, இதயம் படு வேகமாக துடித்தது.
சலிப்பாக பின்னால் திரும்பி கதவை ஒரு பார்வை பார்த்து விட்டு கேசத்தைக் கோதிக் கொண்டவனுக்கு தன்னை எதிர் கொள்ள இவளிடம் என்ன அத்தனை தயக்கமும் தடுமாற்றமும் அவளிடம்? நினைக்கவே அவன் இதழ்களில் குறும்பு புன்னகை தோன்ற “தியா வெளில வா” என்றான்.
“மாட்டேன்” என்றாள்.
“சோ…. நான் போகட்டுமா?” என்றான் மிக மிக மென்மையாக ….
“……….”
அவளிடம் மௌனம்.
“ஸ்பீக் அவுட் தியா”
“ஹையோ எனக்கு ஷையா இருக்கு” என்று சொல்லி விட்டு நாவை மெலிதாக கடித்த படி முகத்தை மூடிக் கொண்டாள்.
‘ ஹையோ விட்டா எல்லாத்தையும் உலறிடுவ போலவே மைண்ட் யுவர் டங்’ என தன்னைத் தானே வசை பாடியவள் தன் தலையில் அவன் சூட்டி விட்ட முல்லை சரத்தை தொட்டு பார்த்தவளுக்கோ வெளியில் ஓடிச் சென்று அவனை இறுக அணைத்துக் கொள்ளலாமா என்றெல்லாம் எண்ணம் தறிகெட்டு ஓட “ஷையாகலாம் தப்பில்ல” என்றவன் வார்த்தைகளில் என்ன நினைத்தாளோ சட்டென கதவைத் திறந்துக் கொண்டு வெளியில் வந்தவள் அவனைத் தன் அறையில் காணாது திகைத்து நின்றாள்.
அத்தியாயம் – 10
அவனை இறுக அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற பேரவா எழவும், வேகமாக குளியலறைக் கதவைத் திறந்துக் கொண்டு அறைக்குள் வந்தவளை அவனில்லா வெறுமையான அறை தான் வரவேற்றது.
தன் விழிகளை சுழல விட்டவள் “மாமா” என மெலிதாக அழைக்கவும் அவன் அவளின் பின்னால் நெருங்கி நிற்கவும் சரியாக இருந்தது.
அவனின் உஷ்ண மூச்சுக் காற்றோ அவளின் கழுத்து வளைவை உரசிச் செல்லவும் சிலிர்த்த பெண்ணவளோ, “நீ…நீங்க இன்னும் போ.. போகலையா மாமா?” என்றவளிடம் “போகணுமா என்ன?” என்று கேட்டவன் அவளை விட்டு ஒரு இஞ்ச் கூட நகரவில்லை.
இத்தனைக்கும் இருவருக்கும் இடையில் நூலிழை போல மெல்லிய இடைவெளி தான். ஒருவர் அசைந்தால் கூட மேனிகள் உரசிக் கொள்ளும் அளவுக்கு நெருக்கம்.
விழிகளை மூடித் திறந்து ஆழ்ந்த பெரு மூச்சை விட்டுக் கொண்டே அவன் புறம் முழுதாக திரும்பிய பெண்ணவளோ “அத்தை தேடுவாங்க கிளம்புங்க மாமா” என்றவள் முதன் முறையாக தடுமாறாமல் அவனின் விழிகளை ஏறிட்டாள்.
“பைன், இன்னைக்கு தான் என் கண்ண பார்த்து திக்காம பேசுற” என்றவாறே சிவந்த அவளின் இரு கன்னங்களையும் ரசனையாக பார்த்தவன் “நீ என்னை தேட மாட்ட போல” என இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டே அவன் கேட்ட, மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டவள் பார்வையோ தன் இடையில் பதிந்திருந்த அவனின் கரத்தில் படிந்தது.
“நீ பார்த்ததும் கையை எடுக்குற அளவுக்கு அவ்ளோ நல்லவன்லாம் இல்ல” என்றவன், ஆழ்ந்த குரலில் “ ஆன்சர் மீ, நீ என்னை தேட…” என்று அவன் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கும் போதே எம்பி அவனின் இதழ்களை ஆழமாக சிறை செய்திருந்தாள் அவனின் தியா.
அவனது விழிகளோ ஒரு கணம் திகைத்து பின் அவள் தரும் முத்தத்தில் தாமாக மூடிக் கொள்ள, அவனின் சிகைக்குள் கரத்தை நுழைத்து தன்னை மறந்து அவனுக்கு முத்தமிட்டவளின் இதழணைப்பை தனதாக்கியிருந்தான் ஜெய் ஆனந்த்.
வார்த்தைகளால் சொல்லாமல் தனது செயலால் அவனுக்கு தன் தேடலை புரிய வைத்துவிடும் வேகம் அவளிடம்,
ஏதோ வேகத்தில் முத்தமிட ஆரம்பித்தவள் அவனது பதில் தாக்குதலில் தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று புரிய, இப்போது நிலைக்குலைவது அவளது முறையாகிப் போனது.
இருவருக்குமான முதல் இதழணைப்பு.
என்ன மாதிரி உணர்கிறாள் என்று அவளுக்கே பிரித்தறிய முடியவில்லை.
அவளது மேனியோ பெண்மையின் நுண் உணர்வுகளை கட்டவிழ்க்க ஆரம்பித்து விட, ஒரு கட்டத்தில் அவன் மீது துவண்டு சரிந்தே விட்டாள்.
விழிகளை மூடி அவளை முத்தமிட்டுக் கொண்டிருந்தவன் அவள் தன்மீது விழவும் அதிர்ந்து விட்டான் அவன்.
“ஷிட்” என்று நெற்றியை நீவிக் கொண்டே அவளை கைகளில் ஏந்திக் கொண்டவன் கட்டிலில் படுக்க வைத்து விட்டு அவளை ஆழ்ந்து பார்த்தவன் குனிந்து அவளின் கன்னத்தை மிக மிக மென்மையாக வருடி விட்டவன் “தியா” என்றழைத்தான்.
அவனையும் மீறி குரலோ கரகரத்து ஒலித்தது.
அவளோ விழிகளைத் திறக்காமல் சுயநினைவின்றி கிடப்பது போல இருக்கவும், அவளின் காதருகே நெருங்கி “படுத்துறடி, ஐ காண்ட் கன்ட்ரோல். உன்னை இன்னும் கிஸ் பண்ணணும் போல தோணுதே என்னடி பண்ண?” என்று அவன் ஹஸ்கி குரலில் கேட்ட அடுத்த நொடி பட்டென விழிகளை திறந்தவள் “ஐ… ஐம் ஓகே மாமா” என்றாளே பார்க்கலாம்.
அவளை அறிந்தவனாயிற்றே! அவளின் சிறு சிறு செயல்களும் அவள் வசம் ஈர்த்து இழுத்தது.
இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே எழுந்தவன் “ இதுவே லாஸ்ட்டா இருக்கட்டும் என்னை பார்த்து டென்ஷன் ஆகாமல் நார்மலா பேசு அண்ட் மோரோவர் கிஸ் ரொம்ப ஸ்பைசியா இருந்துச்சு” என்று சொல்ல,
அப்போது தான், தன் இதழ்களில் காரத்தை உணர்ந்த பெண்ணவளோ அடுத்த நொடியே “ஐயோ மாமா சாரி அது..அது வந்து நான்” என்று மீண்டும் தடுமாறி திக்கி திணற ஆரம்பித்து விட, “இப்போ தானே சொன்னேன் கூல்” என கடிந்தவனின் முகத்தையே வெட்கம் பாதி தயக்கம் மீதியாக பார்த்துக் கொண்டிருந்தவளின் மெலிதான நடுக்கத்துடன் துடித்துக் கொண்டிருந்த அதரங்களை தனது விரல்களால் வருடியவன் “இன்னும் தூக்கலா காரம் சாப்ட்டு கிஸ் பண்ணிருக்கலாமே” என்றவன் புன்னகை மாறாமல் அவளை நொடியில் அணைத்து விடுவித்தவன் “ஐ காண்ட் வெயிட், சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாம்டி” என்றவன் சட்டென அவளின் அறையை விட்டு வெளியேறியிருந்தான்.
அவன் மீதெழும் உணர்வுகளை அடக்கும் வழியறியாது அவனை முத்தமிட்டது என்னவோ அவள் தான். ஆனால் அவன் பேசிவிட்டு செல்லும் தோரணையில், போகும் அவனை பார்த்துக் கொண்டிருந்தவள் வெட்கி தலையணையில் முகம் புதைத்து கட்டிலில் புரண்டவள் “ஹையோ எனக்கு என்னவோ பண்ணுதே! கடவுளே! என்னை அலைஞ்சான் கேஸ்னு நினைச்சு இருப்பாரோ?” என்றெல்லாம் தனக்குள் தானே பேசிக் கொண்டே தன் இதழ்களை விட்டால் கழட்டி பார்த்து விடுவாள் போலும் வருடிவிட்ட படியே “காரம் மட்டும் இல்ல இனிமேல் ஸ்வீட் கிஸஸ்ஸாவே கொடுத்து கரெக்ட் பண்ணிடனும்” என்றவள் மனசாட்சியே ‘ரொம்ப ஆடாத அடக்கி வாசி’ என காரி உமிழ்ந்தது “எல்லாம் எனக்கு தெரியும் நீ மூடிட்டு இரு” என தன் மனசாட்சியை அடக்கியவள் தன்னவன் நினைவிலேயே இதழ்களில் வெட்கப் புன்னகையுடன் விழிகளை மூடி அசதியில் உறங்கிப் போனாள்.
**********************************************
அதனைத் தொடர்ந்து திருமண நாளை முன்னிட்டு நாட்களும் வேகமாக நகர, கிட்டத்தட்ட திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பே வித்யாவின் குடைச்சல் தாளாத பவ்யா, கல்லூரிக்கு போகாமல் விடுப்பை எடுத்து விட்டு சோர்வாக வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சுற்றிலும் பரந்து விரிந்திருந்த வயல்வெளியில் தன் பார்வையை படியவிட்டவளுக்கு வரப்பில் ஷர்ட்டின் கையை முட்டி வரை மடித்து விட்ட படி வேலையாட்களுக்கு கட்டளையிட்ட படி நின்றிருந்த விபீஷன் மீது தன் பார்வையை ஆழமாக படியவிட்டாள்.
காற்றில் அலைந்த சிகையை கோதிக் கொண்டே நின்றிருந்தவன் தன்னை என்னவோ ஒன்று துளைப்பதை போலிருக்க, சட்டெனத் திரும்பி பின்னால் பார்த்தான்.
அவன் இப்படி சட்டென திரும்புவான் என எதிர்பாராமல் திகைத்து விழி விரித்தவள் சட்டென வயலை பார்ப்பதைப் போலவே தன் பார்வையை மாற்றாது அவள் சாதாரணம் போல இருக்க, “நல்லா சைட் அடிச்சிட்டு இப்போ ஆக்ட் பண்றா” என தன் இதழ்களுக்குள் முணுமுணுத்த படி அவளை ஆழ்ந்து பார்த்து விட்டு முன்னால் திரும்பிக் கொண்டவன் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.
அவன் முன்னால் திரும்பிக் கொண்டதும் தான், இழுத்து பிடித்திருந்த மூச்சை வெளி விட்டவள் “ஜஸ்ட் மிஸ் எப்படியோ சமாளிசிட்டேன்” என தலையை உலுக்கி சமன் செய்து கொண்டவள் நெற்றியை நீவிக் கொண்டே “எப்படி இவனை சைட் அடிக்கிற லெவலுக்கு இறங்கினேன்?” என்று தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டே எழுந்தவள் தன் முன்னால் நின்றிருந்தவனை உச்சகட்ட அதிர்ச்சியில் விழிகள் மேலும் அகல விரிய பார்த்தாள்.
மனதை உறுதியாக வைத்திருக்கும் அவளுக்கே மயக்கம் வருவதைப் போலிருந்தது அவனது நெருக்கத்தில்,
“நான் வேணும்னா உன் கேள்விக்கு விடையை க்ளியரா சொல்லவா?” என்று கேட்க,
“ஹான், என்ன கேள்வி அதெல்லாம் ஒன்னும் இல்ல” என அவசரமாக சொல்லி விட்டு எங்கே இன்னும் நின்றால் தான் மாட்டிவிடுவோமோ என்று அரண்டு போனவள் திரும்பி நடக்க முயன்றவள் கையை எட்டி பிடித்தே விட்டான்.
அவன் பார்வை தன்மீது பட்டாலே எரிந்து வீழ்பவளோ இப்போது அவனது கரம் தன் கரத்தை தீண்டியதும் அவனது இச் செயலில் கோபம் கொள்ளாது தவித்து போய் இதயம் படபடக்க நின்றிருந்தாள்.
புதிதாக, இல்லை இல்லை கடந்த ஒரு வாரமாக அவன் மேல் உண்டான சலனம், அவனின் இச் செயலில் கோபம் கொள்ள விடுமா என்ன? ஆனால் இப்போதோ அவளின் தவிப்புக்கான காரணம் வேறல்லவா!
திருமண வீடு என்பதால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்த வண்ணம் வேலையில் இருக்கும் போதே வெட்ட வெளியில் வைத்து அதுவும் அவனது தொடுகையில் அவள் மனம் தான் படபடத்து போனது.
செய்வதறியாது பின்னால் திரும்பி அவன் முகத்தையும் தன் கரத்தில் பிணைந்திருந்த அவனது கரத்திலும் பார்வையை படியவிட்டவளை விட்டு விட தான் அவனுக்கு மனதில்லை போலும் “என்னை லவ் பண்ணிடுவனு பயமா இருக்கா என்ன?” என்றவன் கேள்வியில், அவளது பழைய துடுக்குதனம் வெளிவர ‘என்கிட்டேவா கொஞ்சமா சைட் அடிச்சது தப்பா போச்சே’ என மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் பற்கள் பளிச்சிட புன்னகைத்த படியே “நான் பயப்பட அவசியமே இருக்காது மிஸ்டர் விபீஷன் பிகாஸ் அப்படி ஒன்னு நடக்கப் போறதே இல்லையே” என விழிகளை சிமிட்ட,
சிரித்துக் கொண்டே வார்த்தைகளால் ஒருவனை உயிருடன் கொல்ல முடியுமா என்ன? அதை தான் பாவையவளும் தன்னையறியாமல் செய்து கொண்டிருந்தாள்.
இதே பழைய விபீஷனாக இருந்தால் அவளது பேச்சில் காயப்பட்டு இருப்பான் ஆனால் இப்போதோ நொடியும் விடாது தன் நினைப்பும் பார்வையும் அவளைச் சுற்றி சுழலும் போது தன்மீதான அவளது பார்வையை உணர்ந்து கொள்ள மாட்டானா என்ன?
தன் பேச்சில் அவன் முகம் போகும் போக்கை காண ஆவலாய் இருந்தவளுக்கு நினைத்ததிற்கு மாறாக அவன் முகத்தில் மிளிர்ந்த புன்னகையில் குழம்பி போனது என்னவோ அவள் தான்.
இருவரின் மோன நிலையை கலைக்கவென்றே “மாமா… விபீ மாமா…” என சத்தமாக அழைத்த படி ஒரு பெண் ஓடி வருவதை பார்த்து சட்டென தன் கரத்தை அவனது பிடியிலிருந்து உருவி எடுத்தவள் பார்வை, அவனை நோக்கி வேகமாக ஓடிவந்த அப் பெண்ணின் மீது தான் ஆராய்ச்சியாக படிந்தது.
தன் முன் மூச்சிறைக்க வந்து நின்றவளை யாரென்று அவன் சுதாரிக்கும் முன்னரே அவனை அணைத்திருந்தாள் அப் பெண்.
நொடிப்பொழுதில் நடந்து விட்ட செயலில் திகைத்தவன் கடினப்பட்டு அவளை தன்னிலிருந்து பிரித்து விலக்கி நிறுத்தியவன் “யார்மா நீ?” என்று பொறுமையாக கேட்டான்.
அப்போது தான் அவனருகில் தூக்கிவாரிப்போட ஓடிவந்த அப்பெண்ணின் அன்னை “விபீ, என் பொண்ணு தெரியாம பண்ணிட்டா மன்னிச்சிடுடா” என்க,
அப் பெண்மணியை கூர்ந்து பார்த்தவன் “ஓஹ் கோட் அத்தை, சாரி ரொம்ப நாள் ஆச்சு சோ அடையாளம் தெரியல சாரி என்றவன் பார்வை இப்போது கனிவாக மாறி அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டே தன்னேதிரே நின்றிருந்தவளை நோக்கி “ஹேய் லிட்டில் பிரின்சஸ் அதுக்குள்ள ஆளே மாறிட்ட” என சகஜமாக பேச,
“நான் ஒன்னும் லிட்டில் இல்ல நான் இப்போ பெரிய பொண்ணு அதுவும் உங்களுக்கு இன்னுமே நான் முறை பொண்ணு தான்” என்று வாயாட,
“நானும் இல்லன்னு சொல்லவே இல்லையே”என்றபடி இதழ் பிரித்து சிரித்தான்.
ஆரம்பத்திலிருந்து என்ன தான் நடக்கின்றது? என அவதானிக்க நினைத்தவள் பிடிவாதமாய், போய்விடு என்று சொன்ன மனதை அடக்கி விட்டு வலுக்கட்டாயமாக நின்றிருந்தாள்.
அதுவும் அவனை உரிமையாக அழைத்துக் கொண்டே ஓடி வந்து யாரோ ஒரு பெண் அணைத்ததுமே அவளது உடல் முழுவதும் தீப்பற்றி எரிவது போல எரிந்து விறைப்பது போலிருந்தது.
தன்னைக் கண்டு கொள்ளாது இன்னொரு பெண்ணிடம் அவன் உரையாடுவது, இவ்வளவு நேரமும் வராத கோபம் இப்போதோ தாறுமாறாக வந்தது.
கல் போல் இறுகி நின்றிருந்தவளை அவனது அழைப்பு தான் நிகழ் உலகிற்கு கொண்டு வந்தது.
“ஹே பவி மறந்துட்டியா ஷி இஸ் ஶ்ரீ நவி” என்றான்.
அவன் அப் பெயரைக் கூறியதும் தான் என்னவோ பொறித்தட்டுவது
போலிருக்க, “வாட்? நவி நீயா? என்னடி இவ்ளோ வளர்ந்திருக்க இவ்ளோ வருஷம் கழிச்சு என் கல்யாணத்துக்கு தான் வர தோணிச்சா?” என்றாள் கோபமாக,
“எங்கம்மா வர்றது? அவருக்கும் வேலை ஒரு பக்கம் இவளுக்கும் படிப்புன்னு அதுக்கே ஓட சரியாயிடுச்சு” என பெரு மூச்சை விட்டுக்கொண்ட ஶ்ரீநவியின் அன்னையோ “வந்ததும் உள்ள போகாமல் பேசிட்டு இருக்கேன் என தலையில் தட்டிக் கொண்டவரோ நீங்க பேசிட்டு இருங்க. நான் உள்ள போறேன்” என்றவாறு வீட்டை நோக்கி அவர் நடக்க,
தன் அன்னை சென்றதை உறுதிப் படுத்துக் கொண்டே பவ்யாவை
பார்த்து முறைத்த ஶ்ரீ நவியோ, “சின்ன வயசுல நாம போட்ட அக்ரிமெண்ட் மறந்து போச்சு போல” என சம்மந்தமே இல்லாமல் வாயை திறந்தாள் அவள்.
“அக்ரிமெண்டா? என விழிகள் இடுங்க யோசித்தவள் இதழ்களை
பிதுக்கி சத்தியமா ஞாபகம் வர்லமா என்றவளோ ஓகே ஓகே அதை விடு, வா உள்ள போலாம்” என்று சொல்லிக் கொண்டே அவள் கையை பிடிக்கப் போன பவ்யாவின் கையை கோபமாக தட்டி விட்டாள் ஶ்ரீநவி.
அவளின் செயலில் பவ்யாவுக்கு முகம் கருத்தது என்றால், என்னவோ
சரியில்லையென்று உணர்ந்தவன் இதற்கு மேல் இங்கு நிற்பது சரிவராது என்று பட, குரலை செருமிய விபீஷனோ ” நீங்க பேசிட்டு இருங்க லஞ்ச் சாப்பிட்டு ஈவினிங் பார்க்கலாம்” என பொதுவாக சொன்னவனோ, பவ்யாவை ஆழமாக ஒரு பார்வை பார்த்தவன் செல்ல
முற்பட்ட போதே “மாமா போக வேணாம் நீங்களும் வெயிட் பண்ணுங்க. இப்பவே பேசிடலாம்” என ஶ்ரீநவியிடமிருந்து குரல் வந்தது.
வந்ததிலிருந்து இவளின் போக்கே சரியில்லையே! அப்படி இவள்
என்ன தான் பேச போகின்றாள்? அதுவும் அவனையும் வைத்துக் கொண்டு என்று மனதில் நினைக்கும் போதே இதயமோ தொண்டைக்குழிக்குள் வந்து துடிப்பதைப் போலிருந்தது.
இதற்கு முன் இப்படியான உணர்வையெல்லாம் அவள் உணர்ந்ததே இல்லை.
என்னவோ புதிதாக படபடத்தது.
நெற்றி முதல் உள்ளங்கால் வரை வியர்த்து விறுவிறுக்க
நின்றவளை பார்த்த ஶ்ரீ நவி “நாம டென்த்ந் படிக்கிறப்போ ஒரு பெட் வச்சிகிட்டோம் அது ஞாபகம் இருக்கா பவ்யா?” என்றாள் உணர்ச்சியற்ற குரலில்,
‘ப்ச்ச, இவ வேற இவளையே மறந்துட்டேன் இதுல பெட்டு வேற’ என மனதில் சொல்லிக் கொண்டவள் “சாரி ஞாபகம் இல்ல” என்றாள்.
இருவரின் உரையாடல்களையும் கேட்ட படி இதழ் குவித்து ஊதிக் கொண்டே பக்கவாட்டு சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தான் விபீஷன்.
“வெல் நானே ஞாபக படுத்துறேன். நாம ரெண்டு பேர்ல யார் பைனல் எக்ஸாம்ல
அதிகமா ஸ்கோர் பண்றது? அது தான் பெட். அதுல வின் பண்ணது நான் தான் சோ அதுக்காக நான் கேக்கிறதை பண்றேன்னு சொல்லியிருந்த” என்றவள் நிறுத்தி விபீஷனை ஒரு பார்வை
பார்த்து விட்டு இப்போது பவ்யாவை பார்த்தவள் “என் விருப்பதை
அப்போவே உன்கிட்ட சொன்னேன் நீயும் ஓகே சொல்லிட்ட பட் இப்போ நீ என்னை ஏமாத்திட்ட” என்றவள் அதற்குமேல் பேச முடியாது பேச்சை நிறுத்த,
என்னவோ விடயம் பெரிதாக இருக்குமோ என்று தீவிரமாக கேட்டுக்
கொண்டு இருந்தவனுக்கு ஶ்ரீ நவி கூறிக் கொண்டிருப்பதை கேட்டதும் இதழ் பிரித்து சத்தமாக சிரித்தே விட்டான்.
இருவரும் ஒருங்கே திரும்பி அவனை முறைக்க “என்னை ஏன்
முறைக்கிறீங்க ஓஹ் மை கோட் கண்டிநியூ” என்றான் இதழ் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டே,
அவன் சிரித்தும் ‘அச்சோ மானமே போகுது’ என தனக்குள் சொல்லிக் கொண்டவள் அவசரமாக “விபீஷன், நீங்க போகலாம் நாங்க பெர்சனலா பேசுறோம்” என்றாள் பவ்யா.
“நோ பவ்யா, மாமா இருக்கட்டும் அவரை வச்சு தான் பெட்டே சோ அவர் எனக்கு இல்லனா எப்படி?” என ஶ்ரீ நவி தன் மனதில் உள்ளதை உடைத்து சொல்லி விட,
இதைக் கேட்ட பவ்யாவுக்கு நெஞ்சே அடைத்து விட்டது.
அறியா வயதில் தான் செய்து வைத்ததை எண்ணி தன்னைத் தானே மானசீகமாக நொந்து கொண்டாள்.
அதுவும் இப்படி ஒன்று நடந்ததாக கூட அவளுக்கு நினைவில்லாத போது இவள் வேறு என சலிப்பாக இருந்தது.
இதழ் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றவனோ இப்போது, “வாட்? எனக்கு புரியல” என்றவன் பார்வை கூர்மை பெற்றது.
அவனது தோற்றத்தை கண்டு பவ்யாவுக்கோ உள்ளே நடுங்கினாலும்
தான் நன்றாகவே சொதப்பி வைத்து விட்டோம் என்று தெள்ளத் தெளிவாக புரிய “நவி வாயேன் நாம உள்ள போய் சாப்பிட்டு பேசலாம்” என்று அழைத்துக் கொண்டு செல்ல பார்த்தாள் பவ்யா.
“நோ வெயிட் பண்ணு பவ்யா. நீ என்ன தான் சொல்லிருக்கனு தெரிஞ்சுக்கலாம்” என்று சொல்ல,
‘பவி’ என்ற அவனது அழைப்பு ‘பவ்யா’வாக மாறியிருந்தது.
அதுவே அவளின் மனதை உடைக்கப் போதுமானதாக இருக்க, பதைபதைப்பாக நின்றிருந்தவள் செவியில் வந்து வீழ்ந்தன அந்த வார்த்தைகள்.
“உங்கள கல்யாணம் பண்ணிக்கிற சிட்டுவேஷன் வந்தால் கல்யாணத்தை நிறுத்தி உங்கள என்கூட சேர்த்து வைக்கிறேன்னு சொன்னா”
என்று ஶ்ரீ நவி சொன்னது தான் தாமதம் “வாட் த ஃப* என்று சொன்னவன் ஹவ் டேர் யூ பவ்யா இப்படி தான் யார் கேட்டாலும் என்னை கொடுத்துவிடுயா?” என உச்சகட்ட ஆத்திரத்தில் சீறியவன் ஆழ்ந்த ஒரு பெரு மூச்சுடன் “உனக்கு தான் என்னை அப்போல இருந்து இதோ
இப்போ வரை பிடிக்கலைல பட் நான் தான் பைத்தியகாரன் போல. ‘ஷிட்’ ” என்று முஷ்டியை மடக்கி கரத்தை பக்கவாட்டு சுவற்றில் ஓங்கி குத்தினான்.
அவனது விழிகளோ அடக்க முடியாத ஆத்திரத்தில் ரத்தமென சிவந்திருக்க, முயன்று தன்னை கட்டுக்குள் கொண்டு வர முயன்றான்.
அங்கு நின்றிருந்த இரு பெண்களுக்கும் தூக்கிவாரிப் போட, ஶ்ரீநவியோ “மாமா” என்றிட, அதற்கும் ஒரு படி மேலாக பவ்யா அவனை நெருங்கி அவன் கையை பற்றவும் சட்டென திரும்பி இருவரையும் தீயாக முறைத்தவன் பவ்யாவை நோக்கி “என் வாழ்க்கை மொத்தமும் உனக்கு மட்டும் தான் பவ்யா. இதை நல்லா உன் மைண்ட்ல ஏத்திக்கோ அண்ட் மோரோவர் எனக்கு பிடிக்காத எதையும் நீ செஞ்சு, உன்ன அதிகமா வெறுக்க வச்சிடாதடி. நீ தாங்க மாட்ட” என்றுவிட்டு விறுவிறுவென ஆத்திரமாக செல்லும் அவனையும் பவ்யாவையும் உறுத்து விழித்தவளோ பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டே வீட்டினுள்ளே ஓடியிருந்தாள் ஸ்ரீநவி.
அழுது கொண்டே போகும் அவளை ஓர் ஆழ்ந்த பெரு மூச்சுடன் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு தலையோ விண் விண்ணென்று வலிக்க ஆரம்பித்து விட, தலையைப் பற்றிக் கொண்டே தொப்பென அமர்ந்து கொண்ட பவ்யாவுக்கோ தன் மனநிலையை நினைத்து அதிர்ச்சியாக இருந்தது.
தன்னிடம் மென்மையாக நடந்து கொள்பவனின் கடினம் அவளைக் கொல்லாமல் கொன்றது.
என்ன வார்த்தை சொல்லி விட்டான் அவன்?
அவனது காதல் எந்த அளவிற்கு ஆழமானதோ? அதே அளவிற்கு அல்லவா வெறுப்பாக கடினமான வார்த்தைகளை துப்பிவிட்டு போகின்றான். நினைக்கவே நெஞ்சம் நடுங்கியது.
ஏதோ கடமைக்காக அவனை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற மனநிலையில் இருந்தவளுக்கு கடந்த ஒரு வாரமாக அவன் மீது புதிதாக தோன்றிய என்னவோ ஓர் உணர்வு, ஆழிப்பேரலையாக பிரவாகம் கொண்டது.
தன்னை வெறுத்து விட்டானோ? என இனம்புரியாத பயம் நெஞ்சத்தை கவ்வ, விளைவு அவளின் விழிகளிலிருந்து கண்ணீரோ அருவியாக வழிந்துக் கொண்டிருந்தது .
இக்கணமே தன் மனநிலையை அறிந்து கொண்ட பெண்ணவளின் இதழ்களோ, “எஸ் அம் இன் லவ் வித் யூ விபீஷன்” என்று சொல்லிக் கொண்டே கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டவளோ “கண்டிப்பா நீங்க வெறுக்குற போல நடந்துக்க மாட்டேன் விபீஷன். சீக்கிரமே என் காதலை உணர வைக்கிறேன்” என சொல்லிக் கொண்டவளோ தெளிவான ஒரு மனநிலையுடன் எழுந்து கொண்டாள்.
அதேநேரம், அறைக்குள் வந்த விபீஷனின் விழிகள் இரண்டும் கோபத்தில் சிவந்திருந்தன.
அங்கு நின்றால் ,எழும் அவளை காயப்படுத்தி வார்த்தைகளை விட்டு விடுவோமோ என்று அஞ்சியவன் விழிகளோ இப்போது தன்னையும் மீறி அவளிடம் தற்போது கடினமாக பேசிவிட்டு வந்ததற்காக கலங்கி மேலும் சிவந்தன.
மென்மையானவன் ஆயிற்றே!
“வலிக்குதுடி” என்று சொல்லிக் கொண்டவனின் குரலோ நடுக்கத்துடன் ஒலிக்க, அவனது வலக் கரமோ உயர்ந்து இடது மார்பை நீவிக் கொண்டது.
அவனது வெறுப்பான வார்த்தைகளில் தான் தன்னவள் அவன் மீது கொண்ட காதலை உணர்ந்து கொண்டாள் என அவன் அறிய நேர்ந்தால் என்ன ஆகுமோ?
அதனைத் தொடர்ந்து அன்றிரவே எதிர்பாராத விதமாக பவ்யாவிடம் மன்னிப்பை யாசித்திருந்தாள் ஶ்ரீநவி.
அவள் மன்னிப்பை யாசித்திருந்தாலுமே பெண்ணவளின் விழிகள் தேடிக் கொண்டிருந்தது என்னவோ விபீஷனை தான்.
குரலை செருமிக் கொண்டவளோ “ என்ன சீக்கிரமாவே சாரி எல்லாம் கேக்குற எதுவும் பிளான் பண்றியா என்ன?” என்று கேட்டவளை சிறு புன்னகையுடன் பார்த்தவள் “ மாமாவோட சந்தோஷம் உன்கிட்ட இருக்குனா இட்ஸ் ஹேப்பி ஃபார் மீ பவ்யா” என்று சொன்னவளோ “ ஹாங், ஒன்மோர்திங் நீ நினைக்கிற போல வில்லிலாம் நானில்ல. எனக்குள்ள வலி இருக்கு இல்லனு பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன் பட் கம்பல் பண்ணி வர்றது லவ் கிடையாதே. நீ ஆழமா அவர் மனசுல இருக்க. நீ மட்டும் தான். என அழுத்தம் திருத்தமாக சொன்னவள் சட்டென மெலிதாக புன்னகைத்துக் கொண்டே அதை புரிஞ்சிக்கிட்டேன் தட்ஸ்ஆல்” என சொல்லி விட்டு தன் அறைக்குள் புகுந்திருந்தாள்.
அவளின் வார்த்தைகளில் இதழ்களோ தாராளமாக விரிய, மனம் கொள்ள சந்தோஷத்துடன் மீண்டும் தன்னவனைத் தான் விழிகள் தேடின.
மனமோ இதமாக இருந்தது.
தன்னவனைக் காண விழிகள் பரிதவிக்க, மனமோ அலைபாய்ந்து கொண்டிருந்தது.
ஆனால், அவளின் எண்ணங்கங்களை திருடிக் கொண்டவனோ பால்கனியில் நின்று தொலைதூர நிலவை வெறித்த படி திண்ணிய அவனின் வெற்று மேனியைத் குளிர்காற்று தழுவ அப்படியே அசையாது நின்றிருந்தான்.
அவனுக்கோ, மனது என்னவோ வெறுமையாகத் தான் இருந்தது.
“ நீ என்னை பார்க்குறப்போ என்னால உன்ன பீல் பண்ண முடியுது பட் அடுத்த நொடியே உன்னோட பார்வை பொய்யோனு பீல் பண்ண வைக்கிறடி” என பித்தன் போல தொலைதூர நிலவைப் பார்த்து பிதற்றிக் கொண்டிருந்தான்.
ஆம், அவள் மீது அவன் கொண்ட தீராக் காதல் அவனைக் கொஞ்சம் கொஞ்சமாய் பலவீனமாக்கிக் கொண்டிருந்தது.
அத்தியாயம் – 11
அனைவரும் எதிர் பார்த்த திருமண நாளும் இனிதே விடிந்தது.
அவ்வூரின் பெரிய அந்தஸ்தை உடைய குடும்ப வாரிசுகளின் திருமணம் என்றால் சும்மாவா என்ன? திருமணத்தை கோயிலில் வைத்துக் கொண்டாலுமே மிக மிக ஆடம்பரமாகவும் நேர்த்தியாகவும் குறை என்ற ஒன்றை கூட கூற முடியாதளவு பிரம்மாண்டமாக அலங்கரித்து இருந்தனர்.
நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க, அவ்விடமே களைகட்டிக் கொண்டிருக்க, ஒரே மணமேடையில் கிழக்குத் திசை நோக்கி அமைக்கப்பட்டிருந்த மணவறையில் ஜெய்ஆனந்த்தும் விபீஷனும் வெண்ணிற பட்டு வேஷ்டி சட்டையில் முகத்தில் நிறைந்த புன்னகையுடன் தத்தமது துணைக்காக காத்துக்கொண்டிருந்த தருணம் அது.
இதோ அதற்காகவே காத்திருந்தவன் போல அபார அழகுடன் தன்னை நோக்கி வந்துக் கொண்டிருந்த தன்னவளை விழி விரித்து பார்த்த ஜெய் ஆனந்த்திற்கோ மூச்சு முட்டியது என்றால் ஆஹித்யாவின் அழகுக்கு சற்றும் குறையாத அழகுடன் வந்த பவ்யாவைப் பார்த்த விபீஷனின் நிலையை சொல்லவும் வேண்டுமா?
சகோதரர்கள் இருவருமே புரோகிதர் கூறிய மந்திரங்களை உச்சரிக்க மறந்தே போயினர்.
அவர்களின் தீவிர காதல் பார்வையில் திருமணத்திற்கு வந்திருந்த சில பெண்களின் மனமோ அப்பட்டமாக புகைந்து கொண்டிருந்தது.
குனிந்த தலை நிமிராமல் தத்தமது துணைகளுக்கு அருகே வந்தமர்ந்த பெண்களோ, புரோகிதரின் அழைப்பில் ஒருங்கே திரும்பி சற்று நேரத்தில் தன்மை உடைமையாக்கிக் கொள்ளப் போகின்றவர்களை முகம் சிவக்க நாணத்துடன் ஏறிட்டு பார்க்க, அவர்களோ தத்தமது துணையை விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டல்லவா இருந்தனர்.
நால்வரையும் விழிகளை நிறைத்த ஆனந்த கண்ணீருடன் பார்த்த சித்ராவை திரும்பி அதே மாற புன்னகையுடன் பார்த்த பிரதாபனோ “ நல்ல விஷயம் நடந்திட்டு இருக்கப்போ என்னடி கண்ணை கசக்கிட்டு இருக்க?” என்றவரின் குரல் கூட கரகரத்து தான் ஒலித்தது.
“சும்மா திட்டிட்டே இருக்காதீங்க என்று கண்ணீரை துடைத்துக் கொண்டவரோ, நான் அழல” என்று விட்டு வித்யாவையும் தன்னருகில் பிடித்து வைத்துக் கொள்ள,
“அண்ணி நான் எப்படி மேடைல” என்றவர் மேடையை விட்டு கீழிறங்க எத்தனிக்க, “அத்த” என்று அழைத்த ஜெய் ஆனந்த்தோ போக வேண்டாம் என்பதைப்போல தலையசைக்க, சங்கடமாக நின்றவருக்கு தான் அமங்கலமாக இங்கு நின்கின்றோமோ என தவிப்பாக இருந்தது.
அவனது பார்வையில் என்ன கண்டாரோ அப்படியே நின்றிருக்க, ஆசீர்வதிக்கப்பட்ட மாங்கல்யம் புரோகிதரிடம் வந்து சேரவும் சரியாக இருந்தது.
புரோகிதரோ “ இனிமேல் ஆசைத்தீர பார்த்துக்கோங்க” என இருவரையும் பார்த்து சொல்ல அங்கு கூடி நின்ற அனைவரின் இதழ்களும் புன்னகையில் விரிந்த அதேநேரம், ‘மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்’ என்ற மந்திரம் கோயில் முழுதும் எதிரொலிக்க மேளதாளங்கள் முழங்க மங்கலநாணை தனக்குரியவள் கழுத்தில் கட்டி தனதாக்கிக் கொண்டனர்.
ஜெய் ஆனந்த், தாலி கட்டும் வரை மனதில் படபடப்புடன் அமர்ந்திருந்த ஆஹித்யாவுக்கோ தன்னவன் தன் நெற்றி வகிட்டில் குங்குமத்தை சூட்டவும் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்து நடப்பவை யாவும் கனவல்ல நிஜம் என எடுத்துரைத்து அவளின் படபடப்பை முற்றிலுமாக நீங்கச் செய்திருந்தது.
முகத்தில் தேங்கிய நாணத்துடன் மெல்லத் திரும்பி தன்னவன் முகம் பார்த்தாள் ஆஹித்யா.
தன்னவள் தன்னை பார்க்கும் வரை காத்திருந்திருப்பான் போலும், அவள் பார்வை தன் மீது பதியவும் மெல்ல கண்களை சிமிட்டிக் கொண்டவனின் ஆளுமையான தோற்றத்திலும் கம்பீரத்திலும் தன்னை தொலைத்தாள் பெண்ணவள்.
சட்டென சுற்றம் உணர்ந்து தலையை தாழ்த்துக் கொண்டவள் மிக மிக மென்மையாக அவனுக்கு கேட்கும் படி “மாமா என்னையே இப்படி பார்த்திட்டு இருக்காதீங்க. எல்லாரும் நம்மளதான் பார்க்குறாங்க” என்க,
“ஐ டோண்ட் கேர், யார் பார்த்தா எனக்கென்ன? நவ் யூஆர் மை பெட்டர் ஹாஃப்” என்று சொன்னவனோ அதோடு நிறுத்தாமல் சற்றே சரிந்து அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தத்தை பதித்திருந்தான்.
அவனின் செயலில் சுற்றி நின்ற அனைவரும் ஆரவாரத்துடன் ஆர்பரிக்க, நவீனோ சற்றே சத்தமாக “கொடுத்ததை திருப்பி கொடுத்துடுமா என் ஃப்ரெண்ட் பாவம்ல” என்று சொல்ல, பதில் சொல்லும் நிலைமையிலா அவள் இருக்கின்றாள்? அவளுக்கு தான் நிலத்திற்குள் புதைந்து விடலாமா என்கின்ற அளவுக்கு கூச்சம் நெட்டித் தள்ளியது.
நெற்றியை நீவிக் கொண்டே புன்னகைத்த ஜெய் ஆனந்த்தோ, “லீவ் ஹேர்டா” என்றான் மென்மையாக,
“டேய் இப்பவே சப்போர்ட் பண்ண ஸ்டார்ட் பண்ணிடியா?” என்றவனின் தோரணையில் சுத்தி நின்ற அனைவரும் சத்தமாக சிரித்தனர்.
இவர்கள் இப்படி இருக்க, அதற்கு முற்றிலும் மாறாக தன்னவன் தன்னை பார்க்க மாட்டானா என்ற ஏக்கத்துடன் கடைக்கண் பார்வையை விபீஷனில் படிய விட்டிருந்தவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
அறியாத வயதில் அதுவும் அவன் மீது காதல் இல்லாத போது தான் ஶ்ரீநவிக்கு கொடுத்த வாக்கு, தன்னவனை இவ்வளவு பாதிக்கும் அளவுக்கா தான் மீது அவ்வளவு காதல் அவனுக்கு?
உள்ளூர மனம் உற்சாகம் அடைந்தாலும் அவன் தன்னை இன்னுமே பார்க்கவில்லை என்ற ஏமாற்றம் நெஞ்சை அரித்துக் கொண்டு தான் இருந்தது.
பொறுத்து பொறுத்து பார்த்தவள் “நான் அழகா இல்லையா?” என்று அவனுக்கு கேட்டுக்குமாறு குரல் தாழ்த்தி கேட்க.
அவளின் ஆளை அசரடிக்கும் அழகில் சற்று முன் தன்னவன் ஏற்கனவே மயங்கி விட்டான் என தலை தாழ்த்தி வந்தவளுக்கு தெரிய வாய்ப்பிலையே !
அவனிடமிருந்து பதில் இல்லாது போக “நீங்க பேசலனா ஜெய் மாமா போல நான் அதிரடியா உங்களுக்கு கிஸ் பண்ணுவேன் ஓகேவா புருஷா” என அவள் கிசுகிசுக்க,
அதிர்ந்து சட்டென திரும்பி அவளைப் பார்த்தவன் அவளின் கண் சிமிட்டலில், ஏற்கனவே அவளில் தொலைந்தவன் மீண்டும் அவளில் சுகமாக தன்னைத் தொலைத்தான்.
தலையை உலுக்கி சமன் செய்தவன் ‘ஃப்பாஹ் என்ன கண்ணுடா. இட்ஸ் கில்லிங்’ என மனதில் சொல்லிக் கொண்டவன் இதழ் குவித்து ஊதிக் கொண்டான்.
அதனைத் தொடர்ந்து சாஸ்திர சம்பிரதாயங்கள் என அனைத்தையும்
மணமக்கள் செய்து முடித்திருக்க, அதிலேயே களைத்து போன ஆஹித்யா, “மாமா டயர்டா இருக்கு சோ கொஞ்சம்” என்று தயங்கியவளை ஆழ்ந்து பார்த்தவன் “ இப்பவே ரெஸ்ட் எடுத்துக்கோ நைட் டயர்ட் ரெட்யூஸ் பண்ண ட்ரீட்மெண்ட் பண்றேன்” என்றவன் வார்த்தையில் உடலின் மொத்த ரத்தமும் முகத்தில் வந்து குடி கொண்டத்தை போல சிவந்து போனவள் அவனின் வெளிப்படையான பேச்சில் அதிர்ச்சியில் வலக் கரமோ உயர்ந்து அவளின் வாயை மூட செய்திருந்தது.
“ஓஹ் கோட் என்று சொன்னவனோ கைய எடுடி நான் பண்ற வேலையெல்லாம் உன் கை பார்த்திட்டு இருக்கு” என்றவன் பேச்சில் “ஹையோ! மாமா” என்று சிணுங்கிவளோ திரும்பியும் பாராமல் மெதுவாக நடந்து கோயிலுக்கு வெளியே சற்றே தள்ளி அமைக்கப்பட்டிருந்த குடிலில் ஏற்கனவே களைப்பாக வந்தமர்ந்திருந்த பவ்யாவின் அருகில் வந்தமர்ந்து கொண்டாள்.
எதிலிருந்தோ தப்பித்து வருவதை போல் மூச்சு வாங்க வந்தமர்ந்து கொண்டவளுக்கு அவனின் எல்லை தாண்டிய உரிமையான பேச்சிலேயே தெரிந்து விட்டது. அவன் இன்று தன்னை ஆட்கொள்ளாமல் விட மாட்டான் என்று,
என்னவோ ஜென்மங்கள் கடந்து காதலிக்கும் உணர்வு.
அவளுக்கும் அவன் தேவை. மொத்தமாகவும், உரிமையாகாவும், இன்றிரவை நினைக்கும் போது, இப்போதே வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்து குறுகுறுப்பதைப் போலிருந்தது.
தன்னருகில் வந்தமர்ந்து தானாக வெட்கதிலில் புன்னகைத்துக் கொண்டிருந்தவளை ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு குரலை செருமிய பவ்யா, “என்னடி இப்பவே மாமா கூட ரொமான்ஸ்ஸா” என்று கேட்டவள் குரலில் தூக்கிவாரிப்போட திரும்பியவள் “நீ வேற சும்மா இருடி” என்க.
“அக்கா” என்று திடீரென மென்மையாக அழைத்தாள்.
“வாட்? என்ன சொன்ன? சரியா கேட்கல” என கேட்டுக் கொண்டே முழுதாக திரும்பி பவ்யாவைப் பார்த்த படி அமர்ந்தாள் ஆஹித்யா.
“அக்கா” என்றாள் மீண்டும்,
“கேக்கல சத்தமா” என்று சொல்ல, அவள் கிண்டல் செய்கின்றாள் என தெரிந்தும் தன் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டே பற்கள் தெரிய புன்னகைத்தவள் “அக்காகாகா…” என அழுத்தம் திருத்தமாக அழைத்தவளிடம் “மரியாத எல்லாம் பலமாதான் இருக்கு ம்ம்…” என்று சொல்லிக் கொண்டே அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவள் “என்னால உன் ஃபர்ஸ்ட் நைட்டலாம் ஸ்டாப் பண்ற அளவுக்கு ஏதும் பண்ண முடியாது சோ வேற ஏதாவது கேளு” என அவளை கணித்த படி அவள் கூற,
“அடிங்க அக்கான்னு கூட பார்க்க மாட்டேன் அடிச்சு சாவடிச்சுடுவேன் பார்த்துக்கோ” என்று சீற, “என்னடி இவ்ளோ காண்டாகுற நான் இன்னுமே கன்னிகழியல மா அதுக்குள்ள என்னை கொண்ணுடாத என் சாபம் சும்மா விடாது” என்று அவள் சீற,
“இப்போ இது ரொம்ப முக்கியம் என சலித்துக் கொண்டவள் முதல் என் ரூட்டை க்ளியர் பண்ணு” என்க.
“ப்ப்ச்ச, நான் என்ன பண்ணட்டும்? பாவம் டி விபீஷன கொஞ்சம் புரிஞ்சிக்க ட்ரை பண்ணு”
“அந்த ஈர வெங்காயமெல்லாம் எனக்கு தெரியும். நான் என்ன சொல்ல வர்றேன்னு கேட்டு தொல” என்றாள் சீறலாக,
“ என்ன விஷயம்?” என்றாள் வேண்டா வெறுப்பாக மனதில் பயத்தை தேக்கி,
“எனக்கு இன்னைக்கே ஃபர்ஸ்ட் நைட் நடந்தாகனும்”
“வாட்? என்னடி உளறிட்டு இருக்க?”
“ஹையோ! என நெற்றியை நீவிக் கொண்டே இழுத்து ஓர் ஆழ்ந்த மூச்சை விட்டுக் கொண்டே ஓகே ஸ்ட்ரெய்டாவே சொல்றேன் எஸ், நான் விபீஷன லவ் பண்றேன் பட் என்றவள் ஆஹித்யாவின் முகத்தில் தோன்றிய கலவரத்தை பார்த்து என்ன நினைத்தாளோ கூல் பெருசா ஒன்னும் இல்ல ப்ராப்ளம் சோல்வ்ட் தான்” என்றவள் ஶ்ரீநவியின் விடயத்தில் தான் செய்த குளறுபடியை கூற, “ நீ பண்ண வேலைக்கு ஒருவேளை நான் விபீஷனா இருந்திருந்தேனா சரி தான் போடின்னு வேற பொண்ணை கரெக்ட் பண்ணிட்டு போயிட்டே இருந்திருப்பேன்” என்றவளை தீயாக முறைத்தவளோ “ஷிட் நீயெல்லாம் அக்காவா?”
“அதனால தான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்” என்றாள் சளைக்காமல்,
“இப்போ அவரோட கோபத்தை கம்மி பண்ண ஐடியா தர முடியுமா? முடியாதா?”
“ஓகே ஓகே தரேன் என புன்னகைத்தவள் பட் எனக்கொரு டவுட்? உனக்கு ஆன்டி ஹீரோ போல தானே ஆள் வேணும்னு கேட்ட பட் விபீ” என்று இழுவையாக சொன்னவளை முறைத்தவள் “ இப்போ எனக்கு இந்த இன்னசென்ட் ஹீரோவை தான் பிடிச்சிருக்கு” என்று சொன்னவள் முகம் செம்மை பூசிக் கொண்டது.
“இதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு” என்றவளை ஆர்வமாக பார்த்தவள் “ என்னடி சொல்லு” என நெருங்கியவளை விலக்கி விட்டு எழுந்து நின்றவளோ “பெருசாலாம் இல்ல சாஷ்டாங்கமா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டு ப்ரொபோஸ் பண்ணிடு மொத்தமா உன் ப்ராப்ளம் சோல்வ்ட் ஆகிடும்” என்று விட்டு நிமிர்ந்தவள் அவளை காணாது திகைத்து விழிகளை சுழல விட்டாள்.
“ஹலோ மேடம் இங்க” என்ற பவ்யா, சொடக்கிட்டு அழைக்க,
தன் பின்னால் கேட்ட அவளின் குரலில் திரும்பியவளுக்கோ தூக்கி வாரிப்போட்டது.
“ஹேய் என்னடி பப்ளிக்ல அதுவும் கோவிலுக்கு வெளிய நின்னுட்டு செருப்பை தூக்கிட்டு நிக்கிற யாரும் பார்த்திட போறாங்க” என்று பதறியவளை “பார்க்கட்டுமே உன்ன என்ன பண்ண போறேன்னு இந்த ஊரே பார்க்கட்டும்” என்று சொன்னவளோ, கொஞ்சம் கொஞ்சமாக பின்னால் நகர்ந்து கொண்டிருந்தவளை குறி பார்த்து செருப்பை வீசி இருக்க, அதுவோ அவளின் நேரத்திற்கு சரியாக கோயிலின் உள்ளிருந்து அலைபேசியை பார்த்த படியே பவ்யாவைத் தேடிக் கொண்டு அங்கே வந்த விபீஷனின் மார்பின் மீது பட்டு கீழே வீழ்ந்திருந்தது.
அவள் என்னவோ விளையாட்டுக்காக தான் எறிந்தாள். ஆனால் விளைவு இப்படியாகும் என்று அவள் கிஞ்சித்தும் எதிர் பார்க்கவில்லையே!
“நாசமாபோச்சு” என நெற்றியில் கையை வைத்துக் கொண்ட ஆஹித்யா, விபீஷன் பின்னால் நின்று சற்றே தலை சரித்து எட்டி பார்க்க, அங்கோ விழிகள் இரண்டும் தெறித்து கீழே விழுந்து விடும் என்பதைப் போலவே விழிகளை அகல விரித்து அகழிகை சிலை போல நின்றிருந்தாள் பவ்யா.
அத்தியாயம் – 12
கனநேரத்தில் நடந்து முடிந்துவிட்ட செயலில் ஸ்தம்பித்து தன்னையே விழிகள் விரிய பார்த்துக் கொண்டு நின்றவளை நெருங்கியிருந்தான் விபீஷன்.
தான் அவளை நெருங்கியும், நின்ற நிலை மாறாமல் நின்றவளின் கவனத்தை திருப்பும் விதமாக சற்றே குரலை செருமியவன் “இங்க என்ன பண்ற?” என்று கேட்டான்.
அவனது கேள்வியில், சுயம் அடைந்தவள் “சாரி, நான் ஆஹிக்கு தான்…” என குரல் நடுங்க கூற,
அவளை ஓர் பார்வை பார்த்தானே தவிர பதில் ஏதும் கூறாது குனிந்து சற்றே அவளின் புடவையை அகற்ற எத்தனிக்க, ‘இவன் என்ன தான் செய்ய போகின்றான்?’ என ஒன்றும் புரியாது மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றவள் அவன் செய்யப் போகும் செயலில் தூக்கி வாரி போட்டது.
“ஐயோ என்ன பண்றிங்க விபீஷன் விடுங்க” என்று சொல்லிக் கொண்டே குனிந்து புடவையின் மீதிருந்த அவனது கரத்தை மேலும் முன்னேற விடாது பற்றிப் பிடித்துக் கொண்டாள்.
‘ப்ச்ச’ என சலித்துக் கொண்டே நிமிர்ந்தவன் சற்று முன் அவன் கட்டிய தாலி அசைந்தாட, தன்னெதிரே மிக நெருக்கத்தில் தெரிந்த அவளது வதனம் ஆடவனை பித்தம் கொள்ள வைக்க, எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டே அவளது இரு நீள் விழிகளை ஆழ்ந்து நோக்கியவன் பார்வையில் என்ன உணர்ந்தாளோ அவனது பார்வை வீச்சினை தாழ முடியாதவள் கரமோ, அவளை அறியாமலேயே அவனது கரத்தை விடுவித்திருந்தது.
அந்நொடி இருவரும் சுற்றம் மறந்தனர்.
தனது நெருக்கத்தில் அவளது அவஸ்தையை உணர்ந்து கொண்டவனுக்கு இதழ்களுக்குள் யாருமாறியாமல் மெலிதாக புன்னகைத்துக் கொண்டவன் புடவையை லேசாக உயர்த்தி மருதாணியால் சிவந்திருந்த அவளின் பாதத்தை பற்றி அவளெறிந்த காலணியை அணிவித்து விட்டான்.
சும்மாவே அவனின் காதலில் மயங்கி கிடப்பவளுக்கு அவனின் இச் செயலில் உச்சி முதல் பாதம் வரை சிலிர்த்தடங்கியது.
அவனை அணைத்து இப்போதே காதலை கூறி விட்டால் என்ன? என்று தோன்றியது. ஆனால் பெண்ணவளுக்கே உரிய கூச்சம் அவளை தடுக்க ஒருவாறு தட்டுத்தடுமாறி “ விபீஷன் நான் ஒண்ணு சொல்லணும்” என்றாள் நாணத்தில் முகம் சிவக்க,
“எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம் இப்போ என்கூட வா” என்று அவளின் கரத்தை பற்றிக் கொள்ள, என்னவோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல அவன் இழுத்த இழுவைக்கு இழுபட்டு சென்றாள் பாவை.
கணநேரத்தில், அவர்களை கண்டும் காணாதது போல அமர்ந்திருந்த ஆஹித்யாவை நெருங்கியிருந்தான்.
“அண்ணி” என காற்றுக்கும் கேட்காத குரலில் மிக மிக மென்மையாக அழைத்தான்.
அவனின் மென்மையான அழைப்பில், கல்லும் கூட கரைந்து விடும் போலும் ஆஹித்யா மட்டும் விதிவிலக்கா என்ன?
“சொல்லுங்க விபீஷன்” என கேட்டுக் கொண்டு எழுந்து நின்றவள் பார்வை, வெட்கப் புன்னகையுடன் நின்ற பவ்யாவின் மேல் படிந்து மீள, “பவிக்காக நான் சாரி கேட்டுகிறேன் அண்ணி” என்றவனை அதிர்ந்து பார்த்த பவ்யா, “அச்சோ என்ன இது நாங்க இப்படி தான் அடிச்சுக்குவோம் ஜஸ்ட் ஃபோர் ஃபன் அவ்ளோ தான்” என்றவளை “நீ பண்ணது தப்பு பவி. இது வெளியிடம் அதுவும் நாம நிற்கிறது கோவில்ல. இங்க எப்படி நடந்துக்கணும்னு உனக்கு தெரியும்னு நினைக்கிறேன் சோ” என ஏதோ கூற வந்தவனை இடைமறித்த போல “பரவல்ல விபீஷன். அவளை விடுங்க” என ஆஹித்யா கூறவும், சட்டென “அக்கா ரியலி ரியலி சாரி” என்றவள் விபீஷனைப் பார்த்து புன்னகைத்தவள் “இப்போ ஓகேவா? இனிமேல் இப்படி வீட்லயும் கூட நடந்துக்க மாட்டேன்” என்றவளிடம் “எப்பவும் யாருக்காகவும் உன் சுயம் இழக்க கூடாது பவி. நீ நீயா இரு. அது தான் எனக்கு உன்கிட்ட பிடிச்சது” என்றவன் திரும்பி “அண்ணி உங்கள அண்ணா போன் செக் பண்ண சொன்னார்” என்று விட்டு “ உள்ள போறேன் பேசிட்டு வா பவி” என்றவன் கரமோ அப்போது தான் அவளின் கரத்தை விடுவித்தது.
“என்னவாம்டி? இப்போ தானே இப்படி நடந்துக்க வேணாம்னு சொல்லிட்டு, நான் நானா இருக்கணுமாம்” என்று பிதற்றியவளை “ அடியே அறிவாளி காதோல் என வேண்டுமென்றே இழுவையாக சொன்னவள் பண்ணா மட்டும் பத்தாது உன்னோட அவர் என்ன சொல்ல வர்றார்னு புரிஞ்சிக்கணும்” என்றவளை மேலிருந்து கீழாக பார்த்தவள் “நீ மட்டும் ஒழுங்கோ” என கேட்க.
“எல்லாரும் எல்லா விஷயத்துலயும் பர்பெக்ட்டா இருக்க முடியாது” என ஏதோ கூற வந்தவளின் வாயை எட்டி கரத்தால் பொத்தியவள் “ போதும் எனக்கு புரிஞ்சுது கிளம்பு போகலாம்” என்று சொன்னவளோ முன்னே நடக்க, எங்கே விபீஷனை இறுதி வரை புரிந்து கொள்ள மாட்டாளோ என மனதின் ஓரத்தில் உறுத்திக் கொண்டிருந்த எண்ணம், இப்போதோ அவன் மீதான பவ்யாவின் விழிகளில் தெரிந்த அளவுக்கதிகமான காதலில் மனமோ மட்டில்லா மகிழ்ச்சியை அடைந்தது.
இதழ்களில் திருப்தி புன்னகையுடன் தனது அலைபேசியை எடுத்து பார்த்தாள்.
திரையை ஒளிரச் செய்து பார்த்தவளுக்கு தன்னவனிடமிருந்து வந்த குறுஞ்செய்தி தான் முதலில் தென்பட்டது.
என்னவாக இருக்கும் என ஓர் ஆர்வத்துடன் மனதில் குறுகுறுப்பாக இருக்க, அக் குறுஞ்செய்தியை பார்த்தவளின் முகமோ அப்பட்டமாக வெளிறிப் போனது.
வெளிறிய முகத்துடன் வந்தவளை திரும்பி பார்த்த பவ்யா “ என்னடி பேய் புகுந்துடுச்சா?” என்றவளை முறைத்தவள் “என்ன பார்த்தா அப்படியா தெரியுது? அதுவும் கோவில் உள்ள பேய் வந்துடுமா?” என்றவளை “ஏன் நீ வர்லயா?” என கேலியாக சொன்னவள் அவளின் தீ பார்வையில் “கண்ணாலே என்னை எரிச்சிடாத. போ போய் மாமாவை கவனி. மாமா உனக்காக தான் வெயிட்டிங் போல” என்று சொன்னவளோ தன்னவன் அருகில் சென்று நின்று கொண்டாள்.
‘இவ வேற என் அவஸ்தை புரியாமல்…’ என மனதில் புலம்பிக் கொண்டே சாதாரணமாக நவீனுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்த ஜெய் ஆனந்த்தின் அருகே நெருங்கியிருக்க, “ஹேப்பி மெர்ரிட் லைஃப் மா” என புன்னகையுடன் சொன்ன நவீனிடம் “தேங்ஸ் அண்ணா. அப்புறம் எப்போ உங்க மேரேஜ்? எவ்ளோ நாள் தான் அம்மா பேச்சை கேக்காமல் லவ் பண்ண பொண்ணை தேடிட்டு இருக்க போறீங்க?” என்று கேட்டவள் நவீனின் அதிர்ச்சியான முகபாவனையில் ‘ஆத்தி, மண்டை மேல இருக்க கொண்டையை மறந்துட்டேன் போலயே’ என மனதில் அரண்டவள் “நான் ஏதும் தப்பா கேட்டுட்டேனா?” என கேட்டு பற்கள் தெரிய சிரித்து வைத்தாள்.
“அவனுக்கு லவ் மேரேஜ் பிடிக்கும்னு உனக்கு எப்படி தெரியும்?” என்ற ஜெய் ஆனந்த்தின் கேள்வியில் திகைத்து விழித்தவள் ‘ஹையோ! ஹே ஏதாவது சமாளிச்சு தொல’ என தன்னைத் தானே திட்டிக் கொண்டவள் “ஜஸ்ட் கெஸ் பண்ணேன். அதுக்காக ஏன் ரெண்டு பேரும் இவ்ளோ ஷாக் ஆகுறீங்க?” என்றவளிடம் “நதிங் மா, என்னை பத்தி எல்லாமே தெரிஞ்சு வச்சிருக்கவன் ஜெய் தானே சோ இப்போ நீங்க சொல்லவும் கொஞ்சமா ஜெர்க் ஆயிட்டேன்” என்றான் நவீன்.
“தப்பா கேட்டிருந்தா சாரி அண்ணா”
“ஹேய் இதுக்கெல்லாம் எதுக்கு சாரிலாம் நோ இஷ்ஷு. என் ப்ரண்ட் ரொம்ப நல்லவன் கவனமா பார்த்துக்கோ மா” என அடக்கப்பட்ட புன்னகையுடன் கூறியவனிடம் “கண்கலங்காம பார்த்துப்பேன் ஓகேவா” என்றாள் கண்களை சிமிட்டி,
“டபுள் ஓகே” என்றவனோ திரும்பி “ஜெய் ஐம் லீவிங்டா” என்று சொன்னவனோ அவனை கட்டி அணைத்து விடுவித்தவன் விடை பெற்று சென்ற மறு நொடியே,
“எதுக்காக வெர்ஜினிட்டி ரிப்போர்ட் அஹ் கேட்குறீங்க மாமா?” என படபடப்பாக கேட்டாள்.
“ஏன்னு நாளைக்கு சொல்றேன்” என்று சொன்னவன் முகம் என்னவோ சாதாரணமாகத் தான் இருந்தது.
“பட் எதுக்கு?” என மீண்டும் பதற்றமாக கேட்டவளிடம் “இப்படியே பேசிட்டு இருந்தனா உன் லிப்ஸை கடிச்சு வச்சிடுவேன்” என ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்க, இவ்வளவு நேரமும் முகம் வெளிறி பதைபதைப்புடன் இருந்தவளுக்கோ அவனின் வார்த்தைகளில் படபடப்பு நீங்கி கூச்சம் தானாக வந்தொட்டிக் கொண்டது.
எல்லோர் முன்பும் வைத்து கன்னத்தில் முத்தத்தை கொடுத்தவன் இதை செய்ய மாட்டானா என்ன?
அவன் செய்யக் கூடிய ஆள் தான்.
அதன் பின் அவள் வாயே திறக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து உறவினர்களுடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்ட பின்னர் தனித் தனியே ஜோடியாகவும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
ஒரு வழியாக சம்பிரதாயங்களை முடித்து விட்டு கோயிலிலிருந்து மணமக்கள் வீட்டுக்கு கிளம்பி இருக்க, மாலையும் மங்கி இருள் கவிழ ஆரம்பித்து இருந்தது.
வீட்டுக்கு வந்ததன் பின்பும் சம்பிரதாயங்கள் என ஒரு வழி பண்ணி விட, ‘மீண்டும் மீண்டுமா’ என சலித்துக் கொண்டே செய்த அஹித்யாவுக்கு தன்னவன் எடுத்து வைக்க சொன்ன ரிப்போர்ட் வேறு அநியாயத்துக்கு ஞாபகம் வந்து தொலைக்க, ஒரு வித சங்கடத்துடனேயே தன் வீட்டுக்குச் சென்று யாருமரியாமல் எடுத்து வந்து தனது உடை பெட்டிக்குள் மறைத்து வைத்துக் கொண்டாள்.
அதுமட்டுமா என்ன? இருள் கவிழவும் அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போல குறுக்குறுக்கவும் ஆரம்பித்து விட, ஒருவித மோன நிலையில் சுற்றிக் கொண்டிருந்தவளை அழைத்திருந்தார் சித்ரா.
இதோ அழைத்து விட்டார்.
மறுக்க முடியாது.
மறுக்கவும் முடியாது என்று தெரிந்தது.
தன் இதயம் துடிக்கும் ஓசை அவளுக்கே தாறுமாறாக கேட்டது.
தனக்குள் உழன்றவாறே “அத்தை” என்றழைத்த படி அவரிருந்த அறைக்குள் நுழைந்தாள்.
மென் புன்னகையுடனேயே அடர் நீல நிறப் புடவையில் ஆங்காங்கே வெண் கற்கள் பதித்த வேலைப்பாடுகள் நிறைந்த புடவையை அவளின் கையில் திணித்தவர் “கட்டிட்டு வா” என்று கொடுக்க,
நாணம் ஒருபுறம் என்றாலும் தன்னையே அறியாமல் மெல்லிய நடுக்கம் அவளுள்…
“என்னமா போ போய் புடவையை கட்டிட்டு வா” என்று சொல்லி விட்டு அறையை விட்டு வெளியேறி விட, ஓர் ஆழ்ந்த பெரு மூச்சுடன் தான் அணிந்திருந்த புடவையில் கை வைக்க போக, “ ஹேய் வெயிட் வெயிட்” என திடீரென கேட்ட பவ்யாவின் குரலில் அதிர்ந்து போய் அப்போது தான் சுற்றிலும் விழிகளை சுழல விட்டாள்.
அவள் அறைக்குள் வந்த மனநிலையில் ஏற்கனவே அலங்காரங்களை முடித்துக் கொண்டு ஓரமாக அமர்ந்து ஆப்பிளை கொறித்து கொண்டிருந்த பவ்யாவை கவனிக்கத் தவறி இருந்தாள்.
“இங்க தான் இருக்கியா?” என்று கேட்டுக் கொண்டே குரலை செருமியவள் விபீஷன் நிலைமைய நினைச்சா எனக்கே பாவம் போல இருக்கே” என்றுவளோ பவ்யாவை கேலி செய்ய,
“ப்ச்ச… எனக்கென்னவோ என்ன நினைச்சா தான் எனக்கு பாவம் போல இருக்கு” என்றவளோ ஒரு பெரு மூச்சுடன் எழுந்தவள் நான் வெளில நிக்கிறேன் வேயார் பண்ணிட்டு கூப்பிடு” என்றவள் கதவில் கையை வைக்க, “ஏன் என்னை இதுக்கு முதல் மேடம் டிரஸ் இல்லாம பார்த்ததே இல்ல போல” என்க,
“என் புருஷன் பேச வேண்டியதெல்லாம் நீ பேசுற, எல்லாம் என் விதி என சலித்துக் கொண்டே நதிங், ஜஸ்ட் ஒரு கர்டசிகாக தான் வெளில போலாம்னு இருந்தேன் பட் உன் வேர்ட்ஸ் என்னை டெம்ப்ட் பண்ணிடுச்சு” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் வந்து இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
“பேச்சு வேற எங்கயோ போற போல இருக்கே” என அடக்கப்பட்ட சிரிப்புடன் சொன்ன ஆஹித்யாவின் மனநிலை இயல்புக்கு திரும்பியிருந்தது.
“போய் என்ன பண்ண? என்னை தான் விபீஷன் கண்டுக்கவே இல்லையே” என ஆரம்பித்து விட,”கோவில்ல வச்சு சுத்தி யார் இருக்கான்னு கூட பார்க்காம பட்ட பகல்ல மனசாட்சியே இல்லாம கண்ணாலே ரொமான்ஸ் பண்ணிங்களேடாவ்! இதுக்கு பேர் தான் கண்டுகிறது இல்லையா?” என்றாள் புருவங்கள் உயர,
“ஹையோ! அது சாதா ரொமான்ஸ்டி. இது வேற கேட்டகரி” என்க,
“இப்போ உனக்கு என்ன
தான் ப்ராப்ளம்?” என்ற ஆஹித்யாவின் கேள்வியில், “என் கூட இன்னும் கோபமா இருக்கார் சோ எனக்கு என்னவோ போல இருக்கே” என்று சொன்னவள் விழிகளோ உண்மையாகவே இயலாமையில் கலங்கி விட,
கதைத்துக் கொண்டே புடவையை கட்டி முடித்தவளோ அவள் கண் கலங்கியதில் பதறிப் போனவளாய் “தேவையில்லாம எதுக்காக ஓவரா யோசிக்கிற?” என்று சொல்லிக் கொண்டே அவளின் தாடையை பற்றி நிமிர்த்தியவள் “இன்னுமே உன்ன விபீஷன் லவ் பண்றார். இது உனக்கான நாள். நீ தான் உன் லவ்வ புரிய வைக்கணும் சோ தேவையில்லாம திங்க் பண்ணாத” என்றவள் சென்று கதவை திறந்து வெளியில் கதைத்துக் கொண்டு நின்ற சித்ராவை அழைத்தாள்.
மென் புன்னகையுடன் அறைக்குள் வந்தவரோ “ரெண்டு பேரும் மகாலக்ஷ்மி போல அழகா இருக்கீங்க” என முகம் மலர சொன்னவரோ முகத்தை வழித்து நெட்டி முறித்த அதே நேரம், உள்ளே வந்த வித்யாவுக்கும் ஆனந்தத்தில் கண் கலங்க “ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்” என்று சொல்லிக் கொண்டே இருவரின் கரத்திலும் கொண்டு வந்திருந்த பால் செம்பினை வைத்திருந்தார்.
எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே அதனை வாங்கிக் கொண்ட ஆஹித்யாவுக்கு இதயம் தொண்டைக் குழிக்குள் வந்து துடிப்பதை போல் இருந்தது.
ஆனால் அதற்கு எதிர் மாறாக எவ்விதமான பதற்றமும் இன்றி வெட்க புன்னகையுடன் நின்றிருந்தாள் பவ்யா.
இனி சொல்லவும் வேண்டுமா என்ன?
அடுத்த சில நிமிடங்களில் இருவரும் வெவ்வேறு அறைகளுக்குள் நுழைந்திருந்தனர்.
பதற்றத்துடன் அறையினுள் வந்த ஆஹித்யாவின் விழிகளோ தன்னவனை தேடி சுழன்றன.
அவனது அறை முழுதும் அவனது வாசமே!
ஒரு கணம் ஒரே ஒரு கணம் விழிகளை மூடி ஆழ்ந்து சுவாசித்தாள்.
சட்டென பின்னங் கழுத்தில் உணர்ந்த உஷ்ணப் மூச்சுக்காற்றில் அவளது கரங்களோ பால் செம்பினை அழுத்தமாக பற்றிக் கொண்ட அதேநேரம், அவனோ “பைனலில் மை வெயிட் இஸ் ஓவர்” என்றவன் குரலில் விழிகளை திறந்தவள் “மாமா” என வெட்கத்துடன் தலையை தாழ்த்திய படி அவன் புறம் திரும்பி “பால் குடிங்க” என்றபடி செம்பினை அவனை நோக்கி நீட்டினாள்.
அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன் “லுக் அட் மீ தியா” என்றான் மென்மையாக,
“ம்ஹூம், நான் பார்க்க மாட்டேன்” என்று சொன்னவள் “பால்” என்றாள் மீண்டும்,
அவள் நீட்டிய பாலை அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே வாங்கியவன் “அப்போ நான் குடிகட்டுமா?” என ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டவனைப் ஏறிட்டு பார்த்தவள் “எனக்கும் பா…” என்று வார்த்தையை முடிக்கும் முதலே அனைத்து பாலையும் வாய்க்குள் சரித்தவனை அதிர்ச்சியாக நோக்கியவள் “ ஹையோ மாமா நானும் பாதி குடிக்கணும் பட் எல்லாமே நீங்க…” என்று கேட்டுக் கொண்டிருந்தவளின் இடையை ஒற்றை கரத்தால் பற்றி தன்னை நோக்கி இழுத்து அணைத்தவன் நொடியும் தாமதிக்காமல் குனிந்து அவளின் இதழைக் கவ்வியிருந்தான்
அதுமட்டுமா என்ன?
அவன் முத்தமிட்ட அதிர்ச்சி ஒருபுறம் என்றால் அவன் குடித்து விட்டான் என நினைத்த பால் மொத்தமும் அவள் இதழ்களுக்குள் இடம் பெயர்ந்திருக்க, அவள் தான் அவனது அதிரடியில் திணறி போனாள்.
சற்று நேரத்திலேயே அவளின் இதழ்களை விட்டு பிரிந்தவன் தன்னவளை பார்த்தான்.
அவளோ உணர்வுகளின் பிடியில் விழிகளை மூடி அவனது ஷர்ட்டின் காலரை இறுகப் பற்றி கசக்கிப் பிடித்திருக்க, அவளையே ரசனையாக பார்த்திருந்தவன் இதழ்களில் கர்வப் புன்னகை.
விழிகளை மூடியிருந்த பெண்ணவளுக்கே அவனது இதழ்கள், அவளது இதழ்களில் ஆழ்ந்து இருப்பது போல பிரம்மை போலும், தன்னவளின் சூடேறி சிவந்த இரு கன்னங்களையும் மென்மையாக வருடியவன் “யூ ஆர் பிளஷிங் பேபி” என்றதும் மெல்ல தன் விழிகளை திறந்தவளுக்கு அப்போது தான் தன் நிலையே உரைத்தது.
தன்னை குனிந்து பார்த்தாள்.
மார்பை மறைத்திருந்த சேலை களைந்து அவளது அங்கங்களை அவனுக்கு வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டு இருக்க, பதறிப் போய் மார்பில் கரத்தை வைத்து மறைத்துக் கொண்டே மறுபுறம் திரும்பி நின்று கொண்டவளுக்கு இதயமோ படு வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.
“இதுக்கு பிறகு என்கிட்ட இருந்து என்ன மறைக்க போற தியா” என்றவன் குரல் கூட மோகமாக ஒலித்தது.
“மாமா பிளீஸ் இப்படி பேசாதீங்க” என்றவளை பின்னிருந்து அணைத்தவன் “சோ நான் பேசக்கூடாதா?” என கேட்டவன் கரங்கள் அவளின் இடையில் கோலம் போட, அவளும் பெண் தானே! கண்ட கனவிலேயே அவனின் மென்மையில் தன்னை அறியாமல் காதலித்தவள் அவள். இப்போது நிதர்சனத்தில் அவனே அவளது கணவனாக தன்னில் பித்தாகி நிற்கும் போது அவளது உணர்வுகளும் பீறிட்டு கிளம்ப ஆரம்பித்து விட்டிருந்தன.
அதன் விளைவாக, இதழ் கடித்து தன் உணர்வுகளை அடக்க முயன்றவளோ அவனது கரத்தை மேலும் முன்னேற விடாது பற்றிக் கொள்ள முயல, “என்னடி?” என்றான் மோகமாக,
அவளால் என்ன சொல்லி விட முடியும்?
சும்மாவே அவனருகாமையில் தன்னை மறப்பவள் அவள். அவன் கேட்ட கேள்விக்கு சற்று தயங்கியவாறே “நர்வஸ்ஸா இருக்கு” என்றவள் கரம் தானாக அவனது கரத்தை பற்றிய பிடியை தளர்த்தி இருக்க, அவளை அப்படியே தன் கரங்களில் ஏந்திக் கொண்டவன் “ உன் நர்வஸ்ஸ பஸ்ட் பண்ண ஹெல்ப் பண்றேன்” என ஹஸ்கி குரலில் கூறியவன் அவளுடன் கட்டிலில் தஞ்சமடைந்திருந்தான்.
அதிர்ந்து விழிகளை அகல விரித்தவள் தன்னை மறைத்துக் கொள்ள கட்டிலில் கிடந்த போர்வையை எடுக்க முயன்றாள்.
இதழ்களுக்குள் அடக்கப்பட்ட புன்னகையுடன் அவளைப் பார்த்தவன் “எதை மறைக்க ட்ரை பண்ற? ஐ திங்க் உன் ரைட் சைட் செஸ்ட்ல” என்று சொல்ல வந்தவனின் வார்த்தைகளை முடிக்க முதலே எட்டி அவனின் இதழ்களை தன் கரம் கொண்டு மூடியவள் “மாமா இப்படி எல்லாம் பேசாதீங்க எனக்கு என்னவோ போல இருக்கு” என்றவள் வெட்கத்தோடு பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள, “ சோ நான் உன்ன பார்க்கிறது ப்ராப்ளம் இல்ல பேசுறது தான் ப்ராப்ளம் ரைட்” என்றவனை விழி விரித்து பார்த்தவள் ‘இன்னைக்கு நம்ம பர்ஸ்ட் நைட் கன்பார்ம்’ என தனக்குள் சொல்லிக் கொண்டவள் “நான் என்ன சொன்னாலும் நீங்க என்னை பேசி பேசியே ஷையாக்குறீங்க மாமா” என்று சொன்னது மட்டும் தான் தெரியும் அவளுக்கு, அவள் மேல் மொத்தமாக படர்ந்து மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்த அவளின் இதழ்களில் தன் இதழ்களை ஆழமாக பொருத்தி இருந்தான்.
மீண்டும் ஒரு முத்தம்.
இருவர் மேனியும் உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவிக்க, அவன் கரமோ அவளின் மேனியைத் தடையின்றி ஸ்பரிசித்தது.
மெல்ல ஏறிட்டு அவளின் மூடிய விழிகளை பார்த்தவன் குனிந்து மென்மையாக அதில் முத்தம் பதித்து சற்றே நெருங்கி “ஐ லவ் யூ லாட்” என்றது தான் தாமதம், சட்டென விழிகளைத் திறந்தாள்.
அவளின் விழிகளில் நம்ப முடியாத ஆச்சர்ய பார்வை தொக்கி நின்றது. அது மட்டுமா என்ன? அவளை அறியாமலேயே ஒற்றை விழியிலிருந்து கண்ணீரும் கன்னத்தை நனைக்க, அவளின் உணர்வுகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன் குனிந்து தன் இதழ்களால் அவளின் விழிநீரை ஒற்றிய படி, “டூ யூ லவ் மீ?” என்றான் மிக மிக மென்மையாக,
‘உங்கள அவ்ளோ டீப்பா லவ் பண்றேன் மாமா’ என்று கத்த வேண்டும் போலிருந்தது.
என்னவோ இவ்வளவு நேரம் மனதின் ஓரத்திலிருந்த படபடப்பு அகன்ற உணர்வு.
தனது பதிலுக்காக தன் உணர்வுகளை உள்வாங்கிய படி பார்த்திருந்தவனை நோக்கியவள் “உங்களுக்கு தெரியாதா என்ன?” என்று கேட்டவள் எம்பி அவனின் இதழ்களை முற்றுகையிட்டிருந்தாள்.
அதன் பின் கேட்கவும் வேண்டுமா?
அவளின் சம்மதம் கிடைத்து விட, அவளின் கூச்சத்தையும் மறுப்பையும் அழகாக கையாண்டு அவன் அடுத்தடுத்து செய்த செயல்களில் தடுக்கும் முயற்சியை கை விட்டு அவனுள் மொத்தமாக புதைந்து கொண்டாள்.
அவனால் உண்டான இன்ப அவஸ்தையிலிருந்து அவளால் வெளி வர முடியாத நிலை.
அவளுக்கு அவன் ஆடையாக படர்ந்திருக்க, அவளின் மேனி முழுதும் தன் இதழ்களால் முத்த ஊர்வலம் நடத்தியவன் ஒரு கட்டத்தில் அவளுள் மொத்தமாக ஊடுருவி விட்டான்.
அவளுக்கோ உயிர் போகும் வலி.
தன்னவனின் தனக்கேயான காதலுக்கும் மோகத்திற்கும் தன் வலியெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என சிந்தித்தவள் இதழ் கடித்து விழிகளை மூடிக் கொண்டாள்.
அவளை ஆட்கொள்ள ஆரம்பித்தவன் அவளின் முகத்தில் வந்து போன வலியின் சாயலை உணர்ந்து கொண்டவனாய் ஆழிப்பேரலையாய் கட்டுக்கடங்காமல் பீறிட்டு கிளம்பிய உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன் அவளை மிக மிக மென்மையாக ஆள ஆரம்பித்திருந்தான்.
தனக்காக உணர்வுகளை அடக்கியவனது செயலில் அவன்மேல் காதல் கரை கடந்து ஊற்றெடுக்க, அவனுக்கு தன்னை முழுதாக கொடுத்தவள் மேனியில் அவனால் உண்டான சிலிர்ப்பு.
அவளின் மேனியிலோடி மறைந்த நொடிநேர சிலிர்ப்பை அவளை மொத்தமாக ஆட்சி செய்து கொண்டிருப்பவன் உணராமல் இருப்பானா என்ன?
அவளின் இதழைக் கவ்வி விடுவித்தவன் “ஆர் யூ ஒகே?” எனக் கேட்டான்.
அவனை பார்க்கவே கூச்சம் நெட்டித்தளியது. என்ன நிலையில் இருந்து கொண்டு என்ன கேட்டுக் கொண்டிருக்கின்றான்? இதில் ‘ஓகேவா’ எனக் கேள்வி வேறு, என்று மனதில் நொந்து கொண்டவள் “ம்ம்” என்றாள்.
அவளையும் மீறி குரலும் முனகலாக ஒலித்திருக்க, அதுவே அவனது உணர்வை மேலும் தூண்டி விட்டு இருக்க, அவளை தடையின்றி ரசித்து மொத்தமாக ஆட்கொள்ள ஆரம்பித்து விட்டான்.
இரு மனங்களிடையே காதலும் விரவிக் கிடக்கும் போது அங்கு தடைகள் ஏது?
நீண்ட நேரம் தொடர்ந்த மேனியின் சங்கமம் நிறைவு பெற்றிருக்க, சற்றே விலகி படுத்தவன் மார்பு வேக மூச்சுக்களால் மேலேறி இறங்கியது.
அவனுக்கே அப்படி என்றால் அவளை கேட்கவும் வேண்டுமா?
அவன் விட்டு விலகினாலும் இன்னுமே அவன் தன்னை ஆட்கொள்வதை போலிருந்தது அவளுக்கு, மேனியில் சொல்ல முடியாத என்னவோ ஓர் உணர்வு.
நிலத்துக்குள் புதைந்து விடலாமா என்கின்ற அளவுக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது.
பக்கவாட்டகத் திரும்பி அவளைப் பார்த்தான்.
வெட்கி சிவந்து போய் படுத்திருந்தவளை ரசனையாக பார்த்தவன் அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டவன் “தேங்ஸ் ஃபோர் எவ்ரிதிங் தியா” என்றவன் குனிந்து அவளின் நெற்றியில் இதழ் பதித்திருந்தான்.
இங்கே இருவரும் இல்லறத்தில் மூழ்கி திளைத்திருக்க, அடுத்த அறையில் பவ்யாவின் நிலையோ படு மோசமாக இருந்தது.
அத்தியாயம் – 13
விபீஷனின் அறைக்குள் பால் செம்புடன் நுழைந்தவள் முதலில் கண்டது என்னவோ சர்வசாதாரணமாக எவ்வித அலட்டலுமின்றி கட்டிலில் சாய்வாக அமர்ந்து அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த விபீஷனைத் தான்.
மெதுவாக கதவினை தாளிட்டு விட்டு கட்டிலின் அருகே வந்தவள் குரலை செருமினாள்.
ம்ஹூம், அவன் கண்டு கொண்ட போலவே தெரியவில்லை.
மெல்ல அவனை ஏறிட்டு பார்த்தவள் “பால்” என்றாள்.
அவள் வந்ததை அவன் உணர்ந்தான் தான். இருப்பினும் அவளை சீண்ட வேண்டுமென முடிவெடுத்து விட்டான் போலும், இதழ்களுக்குள் அவளறியாமல் புன்னகைத்துக் கொண்டவன் அவளை பார்க்காது “ சோ வாட்?” என்றான் வேண்டுமென்றே…
‘என்ன திமிர்? கொஞ்சம் என்னை பார்த்தா தான் என்னவாம்’ என தனக்குள் சொல்லிக் கொண்டவள் “ பால் கொடுக்க சொன்னாங்க” என்றவள் செம்பினை இப்போது அவனை நோக்கி நீட்டியே விட்டாள்.
அவளை ஓர் மார்க்கமாக பார்த்தவன் “டேபிள்ல வச்சிட்டு போய் படு” என்றவன் அலைபேசியை அணைத்து விட்டு கழுத்தில் நெட்டி முறித்த படி படுக்க ஆயத்தமாகவும், ‘இன்னைக்கு நாம கன்னி கழிய மாட்டோம் போல’ என மனதில் கடுப்பாக சொல்லிக் கொண்டவள் “டேபிள்ல வச்சிட்டு தூங்க ஒன்னும் பால் கொண்டு வர்ல. நாம குடிக்கணுமாம்” என்று சொன்னவளுக்கு உண்மையாகவே அதை சொல்லும் போது முகத்தில் வெட்கம் வந்து தானாக ஒட்டிக் கொண்டது.
“அப்போ குடிச்சிட்டு போய் தூங்கு” என்றவன் சிரிக்காமல் பேசியதே அதிசயம் தான்.
சட்டென சுதாரித்தவள் “மாமா” என்று அழைத்தே விட்டாள்.
அவனை முன்பிலிருந்தே ‘மாமா’ என்று அழைத்திராதவள் இப்போது சட்டென அவனை உரிமையாக அழைத்திருக்க, அவனுக்கோ அவளை இறுக அணைத்து முத்தம் கொடுக்க வேண்டுமென்ற பேரவா எழுந்தது.
அடக்கிக் கொண்டான்.
அவளுக்கு தன் மேல் காதல் வந்து விட்டது என எப்போதோ உணர்ந்து கொண்டவனுக்கு உலகையே வென்று விட்ட உணர்வு தான்.
ஆனால், அவளுக்கு இன்னுமே தன் காதலை அருகிலிருந்தே உணர வைக்க வேண்டும் என முடிவை எடுத்திருந்தனுக்கு அடுத்த நாளே ஶ்ரீ நவியிடம் அவள் எப்போதோ கூறிய வார்த்தைகள் அவனை வெகுவாக தாக்கியிருந்தது.
அவனை விட்டு கொடுக்க துணிந்திருந்தால் அவளை முழுதாக அவன் வெறுத்திருப்பான் அல்லவா! அதை நினைக்கும் போது தான் கண்மண் தெரியாத ஆத்திரம் கிளர்ந்தெழுந்தது.
திருமணத்தை வைத்துக் கொண்டு முற்றிலுமாக இருக்கும் மனநிலையை கெடுக்க அவனுக்கு மனமுமில்லை.
நன்றாக யோசித்தான்.
அதனைத் தொடர்ந்து வந்த இரு நாட்களும் அவளை கண்டு கொள்ளாது ஒருவித இறுக்கத்துடனேயே வலம் வந்தவனுடன் அவள் பேச முயன்று கொண்டிருப்பதும் தெரிந்தே தான் இருந்தது. யோசனையாகவே நாளைக் கடத்தியவனுக்கு திருமண நாள் அன்றே, காலையில் தான் மூளையில் மின்னல் வெட்டியதை போல தோன்றிய யோசனையில் அவனின் இதழ்களோ தாராளமாக விரிந்து கொண்டன.
ஆம், அவளைக் கண்டு கொள்ளாமலேயே இருந்து அவளை சீண்டி பார்க்க முடிவெடுத்து விட்டான்.
விழிகளை இறுக மூடித் திறந்து இதழ் குவித்து உஷ்ண பெரு மூச்சை விட்டுக் கொண்டே அவளை ஆழ்ந்து பார்த்தவன் “என்ன என்னை லவ் பண்றியா?” என்று கேட்டவனை சட்டென ஏறிட்டு பார்த்தவளுக்கு காதலை காலம் தாழ்த்தி சொல்லும் எண்ணம் எல்லாம் இல்லை போலும் இதழ் பிரித்து வெட்கப் புன்னகையுடன் “அதான் தெரியுதுல. டுடே நமக்கு என்ன நாள்னு தெரியுமா?” என அவன் இன்னும் தன்னை கண்டு கொள்ளாதது போல இருக்கவும் ஒருவித ஏக்கத்துடன் அவனுக்கு புரிய வைக்கும் நோக்குடன் கேட்டு வைக்க, அவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளை பார்த்தவன் “வொய் நாட் நல்லவே தெரியுது என ஒற்றை புருவத்தை வருடிக் கொண்டே அண்ட் இன்னைக்கு நமக்கு மேரேஜ் ஆகியிருக்கு தட்ஸ் ஆல்” என தோள்களை குலுக்கிக் கொண்டே தன் முன் ஒருத்தி நிற்கின்றாள் என கண்டு கொள்ளாது விழிகளை மூடிக் கொள்ள, பொறுமை இழந்த பெண்ணவளோ “ஓஹ் கோட் விபீஷன்” என்ற படி சலிப்பாக கட்டிலில் அமர்ந்தவள் முயன்று வரவழைத்த பொறுமையுடன் “இந்த ரூம் டிசைன்லாம் எவ்ளோ அழகா ரொமான்டிக்கா என அழுத்தமாக சொன்னவள் செம்மையா அரேஞ்ச் பண்ணியிருக்காங்கல” என்றவள் சற்றே அவனை நெருங்கி அமர்ந்து “மாமா” என்றாள் மிக மிக மென்மையாக,
அவளின் அழைப்பில் சட்டென விழிகளை திறந்தவன் புருவங்கள் உயர ” இந்த சினிமால வர்ற போல லவ்ன்னு சொல்லிட்டு என்னை சீட் பண்ற ப்ரீ- பிளான் ஏதும் இருந்தா இப்பவே சொல்லிடு” என்றானே பார்க்கலாம்.
அவளுக்கோ செருப்பால் அடித்த உணர்வு.
அவனது வார்த்தைகளில் சட்டென விழிகளும் கலங்கி விட, இப்போது பதறுவது அவன் முறையாகி போனது.
அவள் அழுவது கூட அவனுக்கு தான் வலித்தது.
“படுத்துறா…” என இதழ்களுக்குள் சொல்லிக் கொண்டே எழுந்தவன் தலையை தாழ்த்தி வெடித்து வரவிருக்கும் அழுகையை கட்டுப்படுத்த படாத பாடு பட்டுக் கொண்டிருந்தவளை நெருங்கியவன் “இப்போ என்னடி?” என்றான் சலிப்பாக,
அருகில் கேட்ட அவனது குரலில் இவ்வளவு நேரமும் அடக்கி வைத்த அழுகை மொத்தமும் மடை திறந்த வெள்ளம் போல அவன் முன் வெடித்தது.
உடல் நடுங்க அழுதுக் கொண்டிருந்தவளை இழுத்து அணைத்தவன் “அழாதடி, எதுக்கு இப்போ அழற?” என்று கேட்டபடி அவளது தலையை மிக மென்மையாக வருடிவிட, அதிலோ அவளழுகை கூடியது தான் மிச்சம்.
“பவி பிளீஸ் டோண்ட் க்ரை. இட்ஸ் ஹர்டிங் மீ டூ” என்றவன் அணைப்பு கூட இறுகியது.
அவளின் அழுகையில் அவனது மனமோ அவளை கஷ்டபடுத்தி விட்டோமோ என பலவாறு எண்ணி நிலையில்லாமல் தவித்தது.
“சாரி, எனக்கு அப்போ உங்க மேல லவ் இல்ல, அதனால தான் என்னென்னவோ உளறி வச்சிருக்கேன் என மூக்கை உறிஞ்சிவள் உங்களையும் என் பின்னாடி அலையவிட்டு ரொம்பவே கஷ்டபடுத்திட்டேன்ல சாரி….” என அவனது மார்புக்குள் புதைந்து விடுபவள் போல ஒன்றியவளின் கன்னங்களை பற்றி தன்னிலிருந்து பிரித்தெடுத்து அவள் முகத்தை பார்த்தான்.
அழுது அழுது முகம் வீங்கி கண்கள் சிவந்து நின்றவளை ஆழ்ந்து பார்த்த படி “செம்ம டயர்ட்டா இருக்கு தூங்கலாமா?” என்றான் தீவிரமாக,
என்னவோ பேசத் தான் போகின்றான் என நினைத்தவளுக்கு அவனின் பேச்சில் ஒரு கணம் திகைத்து விழித்து பின் நன்றாக முறைத்து வைத்தவள் சட்டென அவனிலிருந்து பிரிந்து முகத்தை அழுந்த துடைத்தவள் “சாரி” என குரல் நடுங்க கூறிவிட்டு திரும்பியவளின் இடையை இறுக பற்றி தன்னை நோக்கி இழுத்திருந்தான்.
அவன் இழுத்த வேகத்தில் மீண்டும் அவன் மார்பில் வந்து மோதியவள், அவனின் எதிர் பாரா இச் செயலில் விதிர்விதித்து போய் நிமிர்ந்து பார்த்து “தூங்கலாம்னு சொன்ன போல ஞாபகம்” என்றாள் வேறெங்கோ பார்த்துக் கொண்டு,
“மை ஸ்வீட் அங்ரி பெர்ட், லுக் அட் மீ” என்றான் அவளை தன் அணைப்பிலேயே வைத்துக் கொண்டு,
“முடியாது நான் பார்க்க மாட்டேன் தூங்கலாம்” என்றாள் பாவை.
“ஓகே தூங்கலாமே என்றவன் அவளின் கன்னங்களை இரு கரங்களாலும் பற்றி தன்னை பார்க்க செய்தவன் பட் வில் ஸ்லீப் லேட் நைட்” என்று சொன்னவன் அவள் சுதாரிக்கும் முதலே தனது இதழ்களை அவளின் இதழ்களில் ஆழப் பொருத்தி இருந்தான்.
அதிர்ந்து விழிகளை விரித்தவளுக்கு அவனை விட்டு விலகும் எண்ணமெல்லாம் துளியும் இல்லை போலும், சுகமாக விழிகளை மூடிக் கொண்டவளோ அவனது இதழ் முத்தத்திற்கு பதில் முத்தம் வழங்க ஆரம்பித்து விட்டாள்.
இருவரும் பரிமாறிக் கொண்ட முதல் இதழ் முத்தம்.
அவனுள் அவளுக்கான காதல் நிரம்பிக் கிடக்க, அவளை வலிக்க வைத்து விட கூடாது என மென்மையாக முத்தம் பதித்துக் கொண்டு இருந்தவனுக்கோ அவளின் பதில் முத்தம் சற்றே இன்ப அதிர்ச்சியை கொடுக்க, அவளுக்காகவே உணர்வுகளை அடக்கி வைத்திருந்தவனின் உணர்வுகளோ அவளாலேயே விமோசனம் அடைந்து விட்டன போலும்,
அதன் பின் கேட்கவும் வேண்டுமா?
இருவரும் கட்டிலின் வசமானார்கள்.
அவனின் காதலில் விழுந்தவள் அவள்.
இப்போது அவனின் சரிபாதியாகியும் விட்டாள்.
அவனின் சிறு சிறு தொடுகைக்கும் அவளின் மேனி உருகிக் குலைய ஆரம்பித்து விட, “மாமா லைட்ஸ் ஆ ஃப் பண்ணுங்க பிளீஸ்” என்றாள் சிணுங்களாக,
“இனிமேல் மறைக்க என்ன இருக்கு?” என்ற அவனது கேள்வியில், முகத்தை பக்கவாட்டாக திருப்பிக் கொண்டவளுக்கு எப்போது தன் மேனியிலிருந்து புடவையை அகற்றினான் என்றே அவளுக்கு தெரியவில்லை.
அவளுக்கு தன்னை நினைத்தே ஆச்சரியமாக இருந்தது.
இதே திருமணம் பேசும் முன்னரே அவள் இருந்த மனநிலையில் நீ அவன் காதலில் உருகி கரைந்து பித்தாகி அலையப்போகின்றாய் என கூறி இருந்தால் வாய்விட்டு சிரித்திருப்பாள்.
ஆனால், இப்போதோ அவன் முன்னிலையில் தான் இருக்கும் நிலை என்ன? அதுவும் அவன் மீது அளவற்ற காதலோடு, நினைக்கவே மொத்த மேனியும் சிலிர்த்து சிவந்து போனது.
விழிகள் மூடி தன்னை பார்க்க வெட்கியவளாய் தான் முன் மலர்ந்து கிடக்கும் தன்னவளை பார்த்தவன் மெலிதாக புன்னகைத்த படியே குனிந்து அவளின் மூடிய விழிகளில் முத்தங்களை பதித்தவன் “ ஷல் ஐ ஸ்டார்ட்?” என இவ்வளவும் செய்து விட்டு கேட்டானே பார்க்கலாம்.
அளவில்லா உணர்ச்சி பெருக்கில் மோன நிலையில் கட்டுண்டு கிடந்தவள் பட்டென விழிகளை திறந்தாள். அவளோ, தயக்கத்தை தாண்டும் நிலையை எல்லாம் எப்போதோ கடந்து விட்டாள்.
கேசம் களைந்து எதுவும் அறியாதவனை போல இவ்வளவு நேரமும் தன்னை அவனில் மயக்கி கரைய வைத்து என்னவெல்லாம் செய்து விட்டு என்ன நிலையில் வைத்துக் கொண்டு என்ன கேட்கிறான்?” என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அவள் ஒன்றும் அவனுக்கு சளைத்தவள் அல்லவே!
அவளின் வழமையான துடுக்குத்தனம் தலை தூக்க, கலைந்த அவனது கேசத்தை மேலும் கலைத்து விளையாடிய படியே “ வேணாம் நாளைக்கு பார்த்துக்கலாம் இப்போ எனக்கு செம்ம தூக்கம்” என்று சொன்னவள் போர்வையை எடுத்து இருவரையும் மறைத்தவள் அவனை அணைத்துக் கொண்டே விழிகளை மூடிக் கொண்டாள்.
அவள் அதை சொல்லும் போதே அவனின் முகத்தில் ஏதேனும் ஏமாற்றம் தெரிகின்றதா? என்று பார்த்தவளுக்கு இறுதியில் அவனது முகத்தில் தோன்றிய கனிவான புன்னகையில் அவள் தான் ஏமாற்றம் கொண்டாள்.
தான் அவனை அணைத்ததும் பதில் வார்த்தை பேசாது அவளை தன் மார்புக்குள் புதைத்து வைப்பவன் போல அவளை இறுக அணைத்துக் கொண்டவன் காதலில் சித்தம் திணறி போனாள் பாவையவள்.
என்ன மாதிரியான ஆணவன்.
அவள் தான் அவனை உணர்ந்தாலே! தன் மீதான அவனது கட்டுக்கடங்கா மோகத்தை, அப்படியென்றால் நான் சொன்னதற்காக தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டானா? என்ற கேள்வி எழவும், அவளுக்கோ குற்ற உணர்வாகி போனது.
“நான் விளையாட்டுக்கு தான் சொன்னேன் நாம லேட்டா தூங்கலாமே” என்றாள்.
“எனக்காக பார்க்காத பவி. எனக்கு உன் ஹெல்த் தான் இம்போர்டன்ட் சோ தூங்கு” என்றவன் அவளின் தலையை வருடி விட, அவளுக்கோ மீண்டும் அழுகை வரும் போலானது.
எச்சிலை கூட்டி அடக்க முயன்றாள். முடியவில்லை.
சரேலென ஒற்றை விழியிலிருந்து கண்ணீர் வழிந்து அவனது மார்பை நனைத்தது.
பதறி போய் அவளை தன்னிலிருந்து பிரித்தவன் “ஏன் அழற? நான் உன்ன ஹர்ட் பண்ணிட்டனா?” என கேட்டுக் கொண்டே அவளது விழிகளில் நில்லாமல் வழிந்த கண்ணீரை துடைத்தவனின் வார்த்தைகளில் உடல் நடுங்க அவனை இறுக அணைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்திருந்தாள் பெண்ணவள்.
“பவி, ஹியர் லுக் அட் மீ” என அவளை தன்னிலிருந்து மெல்ல விலக்க முயன்றான்.
அவளோ அவன் மார்போடு மேலும் ஒன்றிக் கொண்டே “ சாரி மாமா, சாரி… நான் உங்களை புரிஞ்சிக்காம ஹர்ட் பண்ணிட்டேன்” என்று சொன்னவள் மேனியோ அழுகையில் நடுங்கியது.
“இட்ஸ் ஓகேடி அதெல்லாம் பாஸ்ட், இப்போ இந்த செகண்ட் நானும் நீயும் ஜஸ்ட் இமேஜின் தட். சும்மா அழாத இட்ஸ் ஹர்டிங்” என்றவன் குரல் அவனையும் மீறி உடைந்து ஒலித்தது.
“ஐயோ! இப்படி பேசாதீங்க மாமா. எனக்கு இன்னும் அழ தோணுது” என்று குரல் நடுங்க சொன்னவள் நிமிர்ந்து அவன் விழிகளை பார்த்துக் கொண்டே “நான் எப்பவோ இதை உங்ககிட்ட சொல்லியிருக்கணும் மாமா பட் இனியும் லேட் பண்ண விரும்பல என்றவள் மேலும் அவனை நெருங்கி ஐ…” என்று அவன் அவளிடமிருந்து கேட்க தவமாய் கிடந்த அவ் வார்த்தகளை உதிர்க்க முதலே அவளை மேலும் பேச விடாது அவளின் இதழ் மேல் தன் விரல் வைத்தவன் “ நீ சொல்லி தான் எனக்கு தெரியனும்னு இல்லடி ஐ ஆல்ரெடி பீல் யுவர் லவ். என்றவன் அவளின் இரு நீள் விழிகளை பார்த்துக் கொண்டே இங்கிலீஷ்ல அந்த மூணு வார்த்தையை சொன்ன போல லவ் ஆகிடுமா இட்ஸ் அ பீல்டி அதுவும் உன் இந்த ச்சபி கண்ண பார்த்தாலே என்மேல நீ வச்சிருக்க லவ்வ புரிஞ்சிரிக்க மாட்டேன்னா நினைக்கிற?” என்றவனை ஓர் அதிர்வோடு பார்த்தவள் “அதில்ல மாமா” என்று ஏதோ சொல்ல வந்தவள் இதழில் இதழ் பதித்து விலகியவன் “உனக்கு என்மேல கொஞ்சம் கூட ஃபீலிங்ஸ் இல்லனாலும் உன்னோட இப்போ ட்ரெஸ் இல்லாம.. இவ்ளோ கிளோஸ்ல இருந்தும் உன்ன எதுவும் பண்ணாம பீலிங்ஸ கன்ட்ரோல் பண்ணிட்டு இருக்க மாட்டேன் டி. எனக்கு நீ என்னை முழுசா பீல் பண்ணனும். என்னை மொத்தமா உணரணும் அதுவே எனக்கு ஹேப்பி தான்” என்றவன் குனிந்து அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
“தூக்கம் வருதுன்னு சொன்ன போல ஞாபகம்” என்றான் அவளை சீண்டுவதற்கென்றே, “இப்போ இல்ல அஸ் ஆல்வேஸ் யூ கென் டேக் மீ. உங்களுக்கு உரிமையான ஒன்னை இப்படி தான் பெர்மிஷன் கேட்டு வாங்கிட்டு இருப்பீங்களா?” என்று பொறுமை இழந்து சீறினாள்.
“எனக்கு பிடிச்சதே உன்னோட இந்த அங்கிரி பெர்ட் வைப் தான். செம்ம கிக்கா இருக்கும்” என்று சொல்லிக் கொண்டே அவள் நாசியில் மென்மையாக இதழ் பதித்தவன் கரமோ அவளின் மேனியை வருட ஆரம்பித்து விட, அவளுக்கோ உணர்வுகள் எழுந்து பேயாட்டம் போட ஆரம்பித்து விட்டன.
அதனை தொடர்ந்து நடந்தவைகள் அனைத்துக்கும் இருவரும் பொறுப்பாகி போக, அவ் அறை முழுதும் முத்த சத்தங்களும் அவளின் முனகல்களுமே எதிரொலித்துக் கொண்டிருந்தன.
அத்தியாயம் – 14
அடுத்த நாள் கோயிலுக்கு செல்ல வேண்டுமென்று இருக்க, அதிகாலையே விழித்திருந்தாள் ஆஹித்யா.
மேனியெல்லாம் என்னவோ ஓர் பரவச உணர்வு அவளுக்கு,
என்னவெல்லாம் செய்துவிட்டான்? நினைக்கவே வெட்கமாக இருக்க, அதற்கு காரணமானவனை பக்கவாட்டாகத் திரும்பி பார்த்தாள்.
அவனோ, அவளை இறுக அணைத்துக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, ‘உஃப்’ என இதழ் குவித்து ஊதியவளோ ‘எதுவும் தெரியாத பேபி போல தூங்குறதை பாரேன்’ என தனக்குள் சொல்லிக் கொண்டவளோ மெதுவாக அவனின் கரத்தை விலக்கி விட்டு எழுந்து தான் படுத்திருந்த இடத்தை பார்த்தவள் ஒரு கணம் அதிர்ந்தாள்.
ஆம், அவளின் பெண்மைக்கான சுவடு கட்டில் விரிப்பில் இருக்க, அடுத்த கணமே நிறைவாக புன்னகைத்தவள் ‘அப்போ நாம வெர்ஜின் தான். ஹையோ! நான் வேற லூசுத்தனமா செக் பண்ண போனேனே’ என தலையில் தட்டிக் கொண்டே போர்வையை எடுத்து தன்னை சுற்றிக் கொண்டவள் ஹேங்கரிலிருந்த உடையை எடுக்க எத்தனித்த அதே சமயம் அவளை அப்படியே போர்வையோடு அலேக்காக தன் கரங்களில் ஏந்தியிருந்தான் ஜெய் ஆனந்த்.
“மாமா.. என்ன பண்றீங்க? இறக்கி விடுங்க” என்றாள்.
அவனா விடுவான்?
விடாகண்டன் ஆயிற்றே!
“இவ்ளோ ஏர்லியா எழுந்துட்ட?” என்று கேட்டுக் கொண்டே அவளை கட்டிலில் கிடத்தியவன் அவளின் போர்வைக்குள்ளேயே புகுந்துக் கொள்ள, அவளுக்கோ கூச்சம் ஒரு பக்கம் என்றால் இன்று கோயிலுக்கும் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வேறு.
இதில் இவன் வேறு பாடாய் படுத்துகின்றானே! என நொந்து கொண்டவளோ, தன் மேனியில் படர்ந்த அவனது கரத்தை மேலும் முன்னேற விடாது பிடித்துக் கொண்டவள் “ மாமா பிளீஸ் கோவில் போகணும். இப்போ வேணாமே” என்றாள் இறைஞ்சலாக…
அவளின் விழிகள் காட்டிய ஜாலத்தில் என்ன கண்டானோ “ம்ம் ஓகே” என்றவனோ போர்வையை இழுத்து தன் மேல் போட்டுக் கொள்ள, அவளோ அதிர்ந்து போய் அவனோடு ஒன்றியவள் “ அச்சோ என்ன விளையாட்டு இது? பெட்ஷீட்ட தாங்க மாமா” என்றாள் சிணுங்களாக,
“நோ வே” என்றான் அடக்கப்பட்ட புன்னகையுடன்,
“இப்படியே எப்படி போறது? ஹையோ பிளீஸ் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்களேன்” என்றவளை விழுங்குவது போல பார்த்தவன் “நீ என்னை என்னவெல்லாமோ பண்ணிட்ட டி” என கிறக்கமாக சொன்னவன் அவளின் காது மடல்களை தன் இதழ்களால் உரச, அவளுக்கோ நிலை கொள்ளவே முடியவில்லை.
அவளும் பெண் தானே! இப்படியே இருந்தால் தன்னை உருக வைத்தே நினைத்ததை நடத்தி விடுவான் என உள்ளுணர்வு உந்தித் தள்ள, “என்னை மொத்தமா பார்த்துட்டீங்கல, இனி என்ன ப்ராப்ளம் எனக்கு?” என்று சொன்னவளோ மின்னல் வேகத்தில் கட்டிலிலிருந்து பாய்ந்தெழுந்தவள் ஹேங்கரிலிருந்த டவலை எடுத்து தன்னைச் சுற்றி போர்த்திய படி அவனை திரும்பியும் பாராது குளியலறைக்குள் நுழைந்திருந்தாள்.
அவளையே விழி அகலாமல் பார்த்திருந்தவனோ இதழ் பிரித்து சத்தமாக சிரித்துக் கொண்டான்.
அவன் சிரிப்பது குளியலறை கதவில் மெல்லிய படபடப்புடன் சாய்ந்து நின்றிருந்த பெண்ணவளுக்கு கேட்க, “நினைச்சதை பண்ணாம விட மாட்டார்” என முணுமுணுத்துக் கொண்டே தன்னைத் தானே குனிந்து பார்த்தாள்.
அவன் ஸ்பரிசித்த அவளது மேனி.
“ஹையோ கடவுளே! வெட்க வெட்கமா வருதே” என சொல்லிக் கொண்டே இரு கரங்களினை உயர்த்தி அதில் முகத்தை புதைத்து வெட்கப்பட்டுக் கொண்டிருக்க “வாட்டர் சேவ் பண்ணலாமா?” என வெளியில் கேட்ட அவனது குரலில் சட்டென தன்னை மீட்டுக் கொண்டவளோ “ டுடே மட்டும் வாட்டர் வேஸ்ட் ஆகுறதுல தப்பில்ல” என்று வெட்க புன்னகையுடன் சொன்னவளோ ஷவரை திறந்து குளிக்க ஆரம்பித்து விட்டாள்.
அவளின் பதிலில் அவனுக்கோ மேலும் புன்னகை விரிந்தது.
ஹேங்கரிலிருந்த டி ஷர்ட்டை அணிந்துக் கொண்டவனோ கட்டிலின் விரிப்பை அகற்றி விட்டு வேறொன்றை மாற்றியவனோ அவள் வரும் வரை அலைபேசியை பார்த்த படி அமர்ந்திருக்க, அவளோ ஒரு மணிநேரமாகியும் வராது போக அலைபேசியை அணைத்து விட்டு கழுத்தில் நெட்டி முறித்த படியே எழுந்தவன் குளியலறையை நெருங்கி “இவ்ளோ நேரம் என்னடி பண்ணிட்டு இருக்க?” என்றான் பொறுமை இழந்து,
குளித்து முடித்து விட்டு டவலோடு உள்ளே நின்றவளுக்கோ உடையை அவரசத்தில் எடுத்து வராத மடத்தனத்தை நினைத்து நொந்து கொள்ள தான் முடிந்தது.
“ட்ரெஸ் எடுத்திட்டு வரல” என்றாள் குரல் உடைய,
அவளின் குரலில் தெரிந்த நடுக்கம் அவனை என்னவோ செய்ய “சோ வாட் டவல் இருக்கு தானே”
“ நீங்க எதுவும் பண்ண மாட்டீங்கல” என்றாள் மீண்டும் உள்ளே இருந்து கொண்டு,
மென்மையான அவனுக்கே கடுப்பாக இருந்திருக்க வேண்டும் போலும் “உன் சம்மதம் இல்லாம உன்மேல பாஞ்சிற மாட்டேன். கம் அவுட்” என்றான்.
அவளுக்குமே இதற்கு மேலும் இங்கே இருப்பது சரியென்று படவில்லை.
சட்டென கதவினை திறந்தவள் தன்னெதிரே நின்றிருந்தவனை பார்க்க வெட்கியவளாய் தலை தாழ்த்தி வாட்ராப் அருகே சென்றவள் சட்டென பின்னால் திரும்பி பார்த்தாள்.
அவனோ, மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு சுவரில் சாய்ந்து, நின்ற இடத்தில் நின்ற படி அவளை தான் வைத்த விழி அகற்றாமல் பார்வையால் பருகிக் கொண்டிருக்க, “மாமா சொன்னிங்க தானே. என்ன பார்வை இது? இப்படி பார்க்காதீங்க” என்று சொல்ல,
இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவளை நோக்கி அடிகளை வைத்து நெருங்க அவளோ, “ மாமா கோவில் போகணும்” என்று சொல்லிக் கொண்டே ஓரடி பின்னால் நகர்ந்தவள் வாட்ராப்பில் மோதி நிற்க, அவனோ அதற்குள் அவளை நெருங்கியவன் அவளின் பிறை நெற்றியில் உறவாடிக் கொண்டிருந்த முடிக்கற்றையை காதோரமாக ஒதுக்கி விட்டவன் “நான் தான் சொன்னேன்ல உன் பெர்மிஷன் இல்லாமல் உன்ல பாஞ்சிற மாட்டேன்டி அண்ட் மோரோவர் என்கிட்டயிருந்து மறைக்க உன்கிட்ட எதுவும் இல்லன்னு நினைக்கிறேன் என்று சொன்னவனோ சன்னமாக விசிலடித்தபடி பாஞ்சிற மாட்டேன்னு சொன்னேன் பட் அதுக்காக உன்ன பார்க்க வேணாம்னு சொல்ல உனக்கு ரைட்ஸ் இல்ல” என்று சொன்னவன் பார்வை அவளில் வஞ்சனையின்றி அழுத்தமாக படிந்தது.
“அச்சோ மாமா, எனக்கு ஷையா இருக்கு… ப்ளீஸ்” என்றாள் நெளிந்து கொண்டே,
அவளின் அவஸ்தை கூட அவனுக்கு புன்னகையை தோற்றுவிக்க “ட்ரெஸ் பண்ணிட்டு வெயிட் பண்ணு ஃப்ரஷ்ஷாகிட்டு வரேன்” என்றவனோ குனிந்து அவளின் நெற்றியில் இதழ் பதித்து விட்டே சென்றிருந்தான்.
மேனி முழுதும் அவனால் செம்மை பூசிக்கொள்ள, விழிகளை மூடித் திறந்து ஓர் பெரு மூச்சுடன் உடையை எடுத்து அணிய ஆரம்பித்து விட்டாள்.
இங்கு இப்படி இருக்க, பவ்யாவோ விபீஷனை பேசி பேசியே ஒரு வழி செய்து கொண்டிருந்தாள்.
“இப்போ என்னடி பண்ணனும்?” என்றான் நிதானமாக…
“முதல்ல புடவை ப்ளீட்டை சரி பண்ணி விடுங்க மாமா அதுக்கு பிறகு பேசிக்கலாம்” என்றவள் அவனை கேள்வியாக நோக்க, ஷர்ட்டை முட்டி வரை மடித்து விட்டவன் முகமோ சாதாரணமாக இருக்க, அவனோ சர்வ சாதாரணமாக குனிந்து அவளின் புடவையின் மடிப்பை சரிசெய்து விட ஆரம்பித்து விட்டான்.
அவளுக்கு தான் தெரியுமே அவன் அப்படியெல்லாம் நினைக்க மாட்டான் என்று, சீண்ட நினைத்து விட்டாள் போலும்,
“உன் காலை தொட்டு மெட்டி போட்டதா ஞாபகம்” என்றபடி எழுந்தவன் “ வாட் நெக்ஸ்ட்?” என்றான்.
‘ஆடு தானா வந்து சிக்கிடுச்சி சொல்லிடு பவ்யா’ என தனக்குள் சொல்லிக் கொண்டாவளோ “அப்போ நான் சொல்றதை பண்ணுவீங்களா?” என்றாள் பீடிகையாக,
“உனக்காக உயிரை கொடுக்க கூட யோசிக்க மாட்டேன்” என்றவன் காதலில் விழி விரித்தவள் “கோயில் போக ரெடியாகிட்டு என்ன பேச்சு இது?” என முறைத்தவள் அவனை சற்றே நெருங்கி ஷர்ட்டின் பட்டனை திருக, அவனுக்கோ அவளின் அருகாமையில் சித்தம் திணறியது.
“என்னடி என்னை பக்கத்துல வர வேணாம்னு சொல்லிட்டு டெம்ப்ட் பண்ணிட்டு இருக்க?” என்றான் மோகமாக,
“அச்சோ எப்ப பாரு அதே நினைப்பு தான். என்றவள் அதுஊஊ…” என இழுவையாக சொல்ல, “குயிக்கா சொல்லுடி இல்லனா செகண்ட் மார்னிங் ஆக்கிடுவேன்” என்று சொல்ல,
இதழ்களை சுழித்து முறைத்தவள் “பெரிய விஷயம்லாம் இல்ல. நீங்க ஶ்ரீநவி கூட பேச கூடாது தட்ஸ் ஆல்” என்று சொல்லி விட்டு அவன் முகத்தை பார்க்க, “ ரீசன்?” என்றவன் குரலில் என்னவோ மென்மையாக தான் இருந்தது.
ஆனால், அவளுக்கு தான் உள்ளே நடுக்கமாக இருந்தது.
எங்கே மீண்டும் பேசாமல் விட்டு விடுவானோ என்று, அதற்காக மனதின் உள்ளே குறுகுறுத்துக் கொண்டிருந்ததை அவளால் கேட்காமல் இருக்க முடியுமா என்ன?
“எனக்கு பிடிக்கல” என்றாள் ஒற்றை வரியில்,
“என்னை சந்தேகபடறியா?” என்றவனை விழுக்கென நிமிர்ந்து பார்த்தவள் “ என்னை பார்த்தா அப்படியா தெரியுது” என்றவளை விடாது “ அப்போ ஏன் பேச கூடாது?” என்றான் கேள்வியாக,
அவனின் கேள்வியில் எரிச்சலடைந்தவள் “சாருக்கு அவங்க கூட பேசணும்னு ஆசை போல சோ அதான் கேள்வி கேட்டுட்டே இருக்கீங்க. எனக்கு தான் பிடிக்கதுன்னு சொல்றேன்ல அப்புறம் என்ன கேள்வி?” என்றாளே பார்க்கலாம்.
அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவன் அப்போதும் கூட பொறுமையாக அவளை பார்த்தவன் “என்மேல அவ்ளோ பொசசிவ்வா என்ன? என்றான் மெலிதாக புன்னகைத்த படி,
“பேச்சை மாத்த ட்ரை பண்ண வேணாம்”
“ஓகே நான் அவ கூட பேசல பட்” என்று சொல்ல வந்தவனை “ என்ன பட்?” என்றாள் வெடுக்கென்று,
அவளின் இடையை பற்றி தன்னை நோக்கி இழுத்து இறுக அணைத்துக் கொண்டவனோ “அங்க்ரி பெர்ட்” என்று சொல்ல,
“பட் என்ன?” என்றாள் விடாது.
இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவளை ஆழ்ந்து பார்த்த படி “நானா பேச மாட்டேன் ஓகேவா?” என்க,
“ஓகே…” என ஒரு யோசனையுடன் சொன்னவள் பின் ஏதோ புரிவது போலிருக்க, பல்லைக் கடித்தவள் “அப்போ அவ பேசுனா?” என்று கேட்கும் போதே அவனின் அலைபேசி ஒலிக்க, “வெயிட் அ செக்” என்று சொன்னவனோ அலைபேசியை எடுத்து பார்த்தான்.
எடுத்தது என்னவோ அவனின் நண்பன் தான்.
ஒரு பெரு மூச்சுடன் அழைப்பை துண்டித்தவன் நிமிர்ந்து “என்ன கேட்ட?” என்றான் குறும்பாக,
சட்டென அவனின் அணைப்பிலிருந்து திமிறி விலகியவள் “நத்திங், நீங்க பேச கூடாது அவ்ளோ தான்” என்றவளோ கதவைத் திறந்து கொண்டு வெளியில் சென்று விட, இதழ் குவித்து ஊதிக் கொண்டே கேசத்தை கோதிய படி அவளைப் பின் தொடர்ந்து அறையை விட்டு வெளியேறியிருந்தான் விபீஷன்.
***************************
இங்கோ, தனது கரத்திலிருந்த அவளது ரிப்போர்ட்டை வெறித்து பார்த்த படி நின்றிருந்தாள் ஆஹித்யா.
அவளையே கூர்ந்து கவனித்த படி நின்றிருந்த ஜெய் ஆனந்த்தோ அவளின் உணர்வுகளை சரியாக கணித்தவனாய் “என்ன நெகடிவ்ன்னு ரிசல்ட் இருக்கா?” என்றான் சர்வ சாதாரணமாக,
எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே அவனை ஏறிட்டு பார்த்தவள் “பட் நான் வெர்ஜின் தானே” என்றாள் புரியாமல், “நீ டெஸ்ட் பண்ணதுக்கான உண்மையான ரீசன் ஐ டோண்ட் க்னோ” என அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே சொன்னவன் “உன்மேல இல்லாத நம்பிக்கை தான் ஜஸ்ட் சயின்ஸ் மேல வந்துச்சா?” என்ற அவனின் கேள்வியில் அவளுக்கோ கண்கள் கலங்கி விட, அவனோ கொஞ்சம் கூட அசராமல் மேலும் தொடர்ந்து “நான் சொல்லலனா அப்போவே அந்த ரிப்போர்ட்டை ஓபன் பண்ணி பார்த்திருப்ப அண்ட் நெக்ஸ்ட் என்னை மேரேஜ் பண்ணியிருக்க மாட்டல?” என்று சொன்னவன் குரல் கடினமாக ஒலிக்க, அவளுக்கோ உடல் தூக்கி வாரி போட்டது.
ஆம், அவன் சொல்வது உண்மை தானே! இதை நம்பி அவளது காதலை அல்லவா தொலைத்திருப்பாள்.
எதை சொல்வது ? அவனது கேள்விகள் ஒவ்வொன்றும் குத்தீட்டியாக சென்று நேரே அவளது இதயத்தை தாக்கியதை போலிருந்தது.
கனவு கண்டேன். அதில் என் கற்பை இழந்து விட்டேன். இப்போது நான் கற்புடையவளா? என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வந்தேன் என்றா சொல்ல முடியும்? அவசரப்பட்டு தான் செய்த மடத்தனத்தை நினைத்து நொந்து கொண்டவளோ “சாரி மாமா, நான்…” என்று ஏதோ சொல்ல வந்தவளை “வில் யூ பிளீஸ் ஷட்அப் என உச்சகட்ட ஆத்திரத்தில் சீறியவனோ யூ க்னோ? கான்சிஸ்டன்சிலி ஸ்போர்ட்ஸ், சைக்கிலிங் பண்ற பொண்ணுங்களுக்கு கூட ஹைமன் பிரேக் ஆகி இருக்க சான்ஸ் இருக்கும் அதுக்காக இப்படி தான் எல்லாரும் ப்ரூஃப் பண்ணிட்டு இருக்கணுமா?” என்று கேட்டவன் கழுத்து நரம்புகள் புடைத்து கிளம்பின.
அன்றே அவள் மீது கட்டுக்கடங்காமல் பெருகிய ஆத்திரத்தை கட்டுப் படுத்தி கொண்டிருந்தவனுக்கோ, இப்போது கண்மண் தெரியாத ஆத்திரம் அவனையும் மீறி வெடித்திருந்தது.
அவளிடம் இதனை பற்றி ,மென்மையாக பேச வேண்டுமென்று தான் நினைத்திருந்தான் ஆனால் விதி யாரை விட்டது?
என்னவோ அவள் கன்னித்தன்மையை பரிசோதிக்க வந்ததை அவனால் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அவளின் நடுங்கிய குரலில் தன்னை நொடிப்பொழுதில் மீட்டுக் கொண்டவன் இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவளை ஒரு பெரு மூச்சுடன் பார்த்தான்.
அவளோ, ஒருவித இயலாமையுடன் அவனை தவிப்பாக பார்த்துக் கொண்டிருக்க, நொடிப்பொழுதில் மென்மையாக புன்னகைத்த படி அவளின் இடையை பற்றி தன்னை நோக்கி இழுத்து அணைத்திருந்தான்.
அவளின் தவிப்பு அவனைக் கொள்ளாமல் கொன்றது.
அவனின் இறுகிய அணைப்பே அவளை உடைய வைக்க போதுமானதாக இருக்க “சாரி மாமா…சாரி” என்று கலங்யவாறு கூற, அதில் உடல் இறுகினாலும் இதழ் கடித்து தன்னை மீட்டுக் கொண்டவனோ
“ரொம்ப திட்டிட்டேனா?” என்றவனிடம் “ரொம்ப ரொம்ப” என்றால் மூக்கை உறிஞ்சிய படி,
“சாரிடி”
“நான் தான் தப்பு பண்ணிட்டேன் சாரி மாமா” என்றவளிடம் “இப்படியே என்னன்னவோ பீல் பண்ண வைக்கிறடி. ஐம் டெம்ப்டிங்” என்றவன் திடீர் பேச்சில் சட்டென கலக்கம் மறைந்து பதறி விலகியவள் “ மாமா பிளீஸ் இப்படி பேசாதீங்களேன்” என்று சிணுங்கிக் கொண்டே அவன் பிடியிலிருந்து விலகியவள் விட்டால் போதுமென கதவைத் திறந்து கொண்டு வெளியில் ஓடியிருந்தாள்.
போகும் அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் மனம் நினைத்ததை அவன் மாத்திரமே அறிந்திருந்தால் என்னவோ அவன் உடல் சட்டென இறுகி விறைத்து போனது.
அத்தியாயம் – 15
அனைவரும் வந்திறங்கியது என்னவோ அந்த ஊரில் மிகப் பழமையான சிவன் கோயிலுக்கு தான்.
என்ன மனநிலையில் கோயிலுக்கு வந்தாலும் மனம் அமைதி அடைந்து விடும் போலும்,
அந்த அளவுக்கு அக் கோயிலும் சிற்ப வேலைபாடுங்களும் மிகவும் தத்ரூபமாக இருக்க பார்ப்போரின் கண்கள் மட்டுமல்ல மனதையும் இதமாக வருடுவதை போலிருந்தது.
“இவ்ளோ நாளா இங்க வராம மிஸ் பண்ணிட்டேனே சோ சேட்” என்று சொல்லிக் கொண்டே அலைபேசியை எடுத்து புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்திருத்தாள் ஶ்ரீநவி.
அவளை சிறு புன்னகையுடன் பார்த்த சித்ரா, பார்வையை திருப்பி அவளையே விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்த பவ்யாவை ஆராய்ச்சியாக பார்த்தவர் “பூஜை தட்டை என்கிட்ட தந்திட்டு நவிகூட போய் சுத்தி பார்த்திட்டு வா பவ்யா.” என்றிட,
“இல்ல வேண்டாம் அத்த. அக்கா வரட்டும் அப்பறமா பூஜை எல்லாம் முடிய கோயிலை சுத்தி பார்த்துக்கலாம்” என்றவள் பார்வை காரை நிறுத்தி விட்டு கேசத்தை கோதிய படி வந்த விபீஷனின் மீது அழுத்தமாக படிந்தது.
என்னவோ காலையிலிருந்து மனதை பிசையும் வலி உள்ளுக்குள், தவிப்பாக இருந்தது. என்ன முயன்றும் அந்த மனநிலையை விட்டு வெளியில் வர முடியவில்லை பாவையவளுக்கு,
அவளின் பார்வை தன்மேல் அழுத்தமாக படியவும், ‘ஓஹ் கோட் என்ன இப்படி பார்த்திட்டு இருக்கா?’ என இதழ்களுக்குள் முணு முணுத்துக் கொண்டே அவளை நெருங்கியவன் “என்னடி இங்க வச்சி டெம்ப்ட் பண்றியா?” என்றவனை முறைத்தவள் “பண்ணுனா என்ன தப்பு?” என்று கேட்டாலே பார்க்கலாம்.
அவளின் பேச்சில் ஒரு கணம் அதிர்ந்தவன் அப்போது தான் அவள் முகத்தில் நாணத்தை தவிர்த்து எதையோ ஆராயும் முகபாவத்தோடு அவள் நின்றிருந்த தோரணையையே உணர்ந்திருந்தான்.
குரலை செருமிக் கொண்டே “தப்பில்ல தான் அதுக்கு தானே வீட்ல வச்சு கேட்டேன் அப்போ வேணாம் சொல்லிட்டு இங்க வச்சு என்னை விழுங்குற போல பார்க்குற?”
“ஹும் வேண்டுதலாக்கும்” என்று இதழ்களை பிதுக்கி சொன்னவள் சற்று தூரம் சென்று பின்னால் திரும்பி பார்த்தாள்.
அவளை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தவன் புருவங்கள் அவள் தன்னை பார்த்ததும் கேள்வியாக உயர்ந்தன.
அவளோ சற்றும் சளைக்காமல் “ஐம் வாட்சிங்க்” என்று சத்தமாக சொன்னவள் இரு விரல்களால் சைகை செய்து விட்டு கோயில் பிரகாரத்துக்குள் நுழைந்திருந்தாள்.
இதழ் குவித்து ஊதிக் கொண்டே பக்கவாட்டில் வைத்திருந்த திருநீறை எடுத்து நெற்றியில் கீற்றாக பூசிக் கொண்டவன் சித்ராவின் குரலில் திரும்பினான்.
“டேய் ஆனந்த் எங்கடா? கால் பண்ணி கேளு” என சித்ரா பதற, “ ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன் மா ரிங்ஸ் போகல நான் என்னன்னு பார்த்திட்டு வரேன்” என்று சொல்லிக் கொண்டே புறப்பட ஆயத்தமாக, “உங்களுக்காக தான் பூஜையே சீக்கிரமா அவனை எங்கன்னு பார்த்து அழைச்சிட்டு வா” என்றிட, “ ஓகே நான் பார்த்துக்கிறேன் நீங்க பூஜைக்கு அரேஞ்ச் பண்ணுங்க” என்றவன் வேகமாக காரினை நோக்கி சென்றிருந்தான்.
இங்கோ, ஜீப்பினை வேகமாக செலுத்திக் கொண்டிருந்த ஜெய் ஆனந்த்தை பக்கவாட்டாக திரும்பி பார்த்து முறைத்தவள் “ஐயோ மாமா பிளீஸ் ஸ்லோவா போங்க” என்று கத்தினாள் ஆஹித்யா.
“நீ தானே ஸ்பீட் பத்தலன்னு சொன்ன?” என்று அவன் கேட்க…
‘அடேய் மக்கு ஜெய்… சரியான மர மண்டை. நான் கேட்ட ஸ்பீட் என்ன? இவன் புரிஞ்சிக்கிட்டது என்ன?’ என்று மனதில் நன்றாக அவனை வறுத்தெடுத்தவள் நெற்றியை அழுத்தி விட்டபடி அவனை மேலும் முறைத்தவள் “தெரியாம சொல்லிட்டேன் சாரே! கொஞ்சம் ஸ்லோ பண்றீங்களா?” என்று கை கூப்பி அவள் கேட்கவும் அவளறியாமல் இதழ்களுக்குள் புன்னகைத்துக் கொண்டவன் ஜீப்பின் வேகத்தை குறைத்த அதே நேரம், வண்டியோ அதற்கு மேல் நகர மாட்டேன் என்பதைப் போல நடு வீதியில் நின்றே விட்டது.
இதழ் குவித்து ஊதிக் கொண்டே சீட் பெல்ட்டைக் கழற்றியவன் “வெயிட் தியா என்னன்னு செக் பண்ணிட்டு வரேன்” என்றவன் கதவைத் திறந்து கொண்டு இறங்கினான்.
போகும் அவனை விழி அகலாமல் பார்த்தாள். இல்லை இல்லை ரசித்தாள்.
அவன் என்னவோ சாதரணமாக தான் இருந்தான்.
ஆனால் அவள் தான் அவனின் ஒவ்வொரு அசைவையும் ஆளுமையையும் அணுவணுவாக ரசித்துக் கொண்டிருந்தாள்.
காதலில் அவனையே மிஞ்சிவிடும் அளவு மொத்தமாக காதலிக்கிறாள்.
காதல் வந்தால் கள்ளமும் சேர்ந்து விடும் அல்லவா!
இதழ்களுக்குள் புன்னகைத்துக் கொண்டவள் ஜீப்பின் கதவை திறந்து கொண்டு அவளும் இறங்கி விட்டாள்.
இறங்கி வந்தவளை பார்த்தவன் “மழை வர்ற போல இருக்கு தியா. உள்ள போ” என அவன் கடிய, “முடியாது நானும் இங்க தான் நிட்பேன்” என்றாள் பிடிவாதமாக…
“டயர் சேஞ்ச் பண்ண லேட் ஆகும் சோ சொல்றதை கேளுடி”
அவளோ, அவன் சொல்வதை காதில் கூட வாங்காது அப்படியே நின்றிருக்க, ‘ராட்சசி’ என்று சொல்லிக் கொண்டே அவசரமாக டயரினை மாற்றிக் கொண்டு இருந்தான்.
அவன் தன்னைப் பார்க்கவில்லை என்று தெரிந்ததும் அவளின் பார்வையோ அப்பட்டமாக அவனை தலை முதல் கால்வரை வஞ்சனையின்றி வருடியது.
கருப்பு நிற ஆர்ம் கட் அணிந்து இருந்தான். சற்று முன்னர் அவனின் மேனியை தழுவி இருந்த வெண்ணிற ஷர்ட்டினை இடையில் இறுக கட்டி முடிச்சிட்டு இருந்தான்.
‘ஹையோ… மேன்லி மாமா கொல்றியேடா’ என மனதில் சொல்லிக் கொண்டவள் பார்வையோ அவனின் நெற்றியில் இருந்து வழிந்த வியர்வை கழுத்தினூடு கீழிறங்க, அதை பார்த்தவள் ஓர் உஷ்ணப் பெரு மூச்சை விட்டுக் கொண்டே ‘ ரொம்ப காஜியா திங்க் பண்றடி’ என தனக்குத்தானே எச்சரித்துக் கொண்டவள் அவனின் ஆளுமையை நட்ட நடு வீதியில் நின்று வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டவள் கரங்களோ தானாக உயர்ந்து முகத்தை மூடிக் கொள்ள, மீண்டும் அவனை ரசிக்க உந்திய தன் மனதை அடக்க வழியறியாது வெட்கம் பிடுங்கித் தின்ன தன் விரல்களை மெல்ல விலக்கி அவ் இடைவெளியில் மீண்டும் அவனை சைட் அடித்தாள்.
நடு வீதியில் நின்று தன்னவள் தன்னை விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று அறியாமலேயே டயரை மாற்றிக் கொண்டு இருந்தவன் ஏதோ ஓர் உந்துதலில் சட்டென பக்கவாட்டாக திரும்பி பார்த்தான்.
அவன் இப்படி சட்டெனத் திரும்பி பார்ப்பான் என்று எதிர் பாராதவள் திகைத்து தன் கரங்களை கீழே இறக்கிக் கொண்டே’ ஹி ஹி ஹி’ என சிரித்து வைத்தவள் “செம்ம வெயில் மாமா அதான் முகத்தை மூடிட்டு இருந்தேன்” என்று சொல்ல…
அவளை ஒரு மார்க்கமாக பார்த்த படி கழுத்தில் நெட்டி முறித்துக் கொண்டே எழுந்தவன் “ ஓஹோ வெயிலா?” என்று கேட்டுக் கொண்டே அவளை நெருங்கியவன் “நான் உன்கிட்ட எக்ஸ்ப்ளானேஷன் கேட்கவே இல்லையே” என்று தன்னை விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் சொல்ல…
அவனின் நெருக்கத்தில் அவளுக்கோ அவஸ்தையா இருக்க, “கேட்கலைனா என்…என்ன நான் சொல்லுவேன்” என வார்த்தைகள் தந்தியடிக்க சொன்னவள் துப்பட்டாவில் அவனின் நெற்றியில் படிந்து இருந்த கிரீஸினை துடைத்து விட்டாள்.
“தேங்க்ஸ்” என புன்னகைத்தவன் அவள் சுதாரிக்கும் முன்னரே அவளைத் தன் கரங்களில் ஏந்தியிருக்க, “மாமா என்னை இறக்கி விடுங்க” என்றவளின் சிணுங்கல்களை எல்லாம் அவன் காதில் வாங்கிக் கொண்டது போலவே இல்லை. அவளை ஜீப்பின் உள்ளே அமர வைத்து விட்டு கதவினை லாக் செய்து விட்டு விலக,
“பிளீஸ் மாமா நானும்” என்றவளை “ஆல்மோஸ்ட் பின்னிஷ் பண்ணிட்டேன் வெளில வராத தியா” என்று சொல்லிக் கொண்டே திரும்பியவனின் ஆர்ம் கட் டீஷர்ட்டினை பிடித்து இழுத்தவள் எம்பி அவனின் இதழ்களைக் கவ்வி சுவைக்க ஆரம்பித்திருந்தாள்.
ஒருகணம் அவளின் அதிரடியில் திணறியவன் பின் அவளது முத்தத்தை விரும்பியே தனதாக்கி இருந்தான்.
அவனும் உணர்வுகள் கொண்ட ஆண் தானே!
நேற்றைய இரவில் அவளுடன் கலந்ததிலிருந்து அவளது அருகாமை அவனை பாடாய் படுத்தியெடுத்துக் கொண்டிருக்க, இப்போது அவளாக கொடுக்கும் முத்தம் கசக்குமா என்ன?
உணர்வுகளின் ஆர்ப்பரிப்பில் ஓர் ஆழ்ந்த இதழ் முத்தம்.
இருவரும் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பதையே மறந்து விட்டிருந்தனர்.
எவ்வளவு நேரம் இருவரும் ஒருவரிதழ்களுக்குள் ஒருவர் புதைத்திருந்தனரோ, விபீஷனின் ஹார்ன் ஒலியில் சட்டென பிரிந்தனர்.
அவளுக்கோ கூச்சம். “ ஐயோ மாமா விபீஷன் பார்த்துட்டாரோ?” என்று புலம்பிக் கொண்டே கரங்களில் முகத்தை புதைத்துக் கொள்ள, “எதுக்கு டென்ஷன் ஆகுற? அவனும் இதை தான் நேத்து பண்ணிருப்பான்” என்றவன் பேச்சில் சட்டென முகம் சிவக்க நிமிர்ந்தாள்.
“பீல் ப்ரீ. பார்த்துக்கலாம்” என்று சொன்னவன் பிடரியை வருடிக் கொண்டே பின்னால் திரும்பினான்.
“கரடி போல வந்துட்டேனா?” என்றவன் அடக்கப்பட்ட புன்னகையுடன் கேட்க,
லேசாக இதழ் கடித்து புன்னகைத்தவன் “சத்தமா பேசாத அவளுக்கு அன்காம்பர்ட்டபிளா இருக்கும் என்றவன் பட் கொஞ்சம் லேட்டா வந்திருக்கலாம்”
“அங்க எல்லாம் உனக்காக தான் வெயிட்டிங் பட் நீ…” என்று சொல்லிக் கொண்டே குனிந்து டயரினை சரிபார்க்க,
“வெயிட்… வெயிட் , நானே செக் பண்றேன் விபீஷன்” என்றவன் குனிந்து பார்க்க ஆரம்பித்து விட, “காரை எடுத்துட்டு கிளம்பு. நான் ஜீப்பை எடுத்துட்டு வரேன்” என்ற விபீஷனிடம் “நோ நீட் எல்லாமே பிக்ஸ் பண்ணிட்டேன் சோ கிளம்பிடலாம்” என்று சொல்லிக் கொண்டே எழுந்தவனோ “நீ முன்னாடி போ. நான் வரேன்” என்று சொல்ல, “ நான் எதுக்கு வந்தேன்னு தெரியுமா உனக்கு?” என்று விபீஷன் கேட்க,
“ஓஹ் ஷிட் என்ன விஷயம்?” என்று கேட்டவனை ஒரு மார்க்கமாக பார்த்தவன் “நத்திங் சீக்கிரமா கிளம்பு” என்றவன் காரில் ஏறிக் கொள்ள, “சாரிடா” என்றான் கேசத்தை கோதிய படி, “ம்ம், இப்படியே வந்துடாத லிப்ஸ்ல இருக்க லிப்ஸ்டிக்க க்ளியர் பண்ணிட்டு வா” என்ற சொல்லி விட்டு காரை கிளப்ப, உள்ளே அமர்ந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்த பெண்ணவளுக்கோ இதற்கு மேல் விபீஷனை எப்படி எதிர் கொள்ளவது என்ற தயக்கம் ஒருபுறம் என்றால் மறுபுறம் தன்னவனை பார்க்கவே வெட்கமாக இருந்தது.
எதிலும் மனம் லயிக்கவில்லை.
தலை தாழ்த்தி பேசாமல் அமர்ந்திருந்தாள்.
அவளை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே ஜீப்பை ஸ்டார்ட் செய்தவன் “தியா” என்றான் மென்மையாக,
“ம்ம்” என்றவள் குரல் மெலிதாக ஒலிக்க,
“இன்னொரு கிஸ் கிடைக்குமா?” என்றான் கிண்டலாக,
அதிர்ச்சியாக அவனை திரும்பி சட்டென பார்த்தவள் அவனது அடக்கப்பட்ட சிரிப்பில் “கொன்னுடுவேன்” என்றாள் முறைத்துக் கொண்டே,
“சந்தோஷமா செத்துடுவேன்” என்றான் இதழ் பிரித்து சிரித்த படி,
“வாட்? என்ன பேச்சு இது?” என்றாள் சீறலாக,
இவ்வளவு நேரமும் அவளின் முகத்தில் குடி கொண்டிருந்த அதீத வெட்கமும் தடுமாற்றமும் எங்கு சென்றது? என்று கேட்டால் அவளுக்கே தெரியாது.
இறந்து விடுவேன் என்றதும் காணாமல்தெரியாத ஆத்திரம் சிந்தையை ஆட்கொண்டது.
அவனோ அவளின் கோபத்தை ரசித்த படி “பொண்டாட்டி கையால சாகுறதெல்லாம் வரம் டி” என்க, மெதுவாக அவனின் அருகில் தோள்கள் உரச நெருங்கி அமர்ந்தவள் “இஸ் இட்?” என்றாள் ஒற்றை புருவம் உயர்த்தி,
தன்னவளின் விழிகள் உணர்த்திய மொழியில் தன்னை சுகமாக தொலைத்தவன் “யாஹ்” என்று கண் சிமிட்டிய அதே கணம் கண நேரத்தில் எம்பி அவனது இடது கன்னத்தை வலிக்க கடித்திருந்தாள் அவனின் ராட்சசி.
அத்தியாயம் – 16
கன்னத்தை வருடிக் கொண்டே கோயில் பிரகாரதினுள்ளே வந்தவனிடம் “அம்மா கொடுத்து விட்டாங்க போய் குளிச்சு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா” என்று சொல்லிக் கொண்டே உடையை கொடுத்த விபீஷனிடம் “இந்த ட்ரெஸ் நல்லா தானே இருக்கு” என்றவன் ஷர்ட்டினை கழட்ட ஆரம்பிக்கவும் “என்னவோ சம்பிரதாயமாம்டா” என்றவன் “என்னடா கன்னம் சிவந்து ரெட்டிஷ்ஷா இருக்கு?” என அதிர்ச்சியாக கேட்டான் விபீஷன்.
இதழ் குவித்து ஊதிக் கொண்டே “தெரிஞ்சிட்டு நீ என்ன பண்ண போற?” என்றவன் கேள்வியில் “ஜஸ்ட் ஜெனரல் னோலேஜ்காக தான் கேட்டேன் அதுக்கு ஏன் முறைக்கிற?” என்றான்.
“மார்னிங் ரூம் விட்டு வரவே அவ்ளோ லேட் ஆச்சு நீ என்ன பண்ண? என்றவனோ நீ ஒன்னும் தப்பா நினைக்காத ஜஸ்ட் ஜெனரல் னோலேஜ் தான்” என்றானே பார்க்கலாம்.
“நீயெல்லாம் ஒரு அண்ணாவா?” என சலித்துக் கொண்டவனை ஒரு மார்க்கமாக பார்த்தவன் “ அத நீ சொல்றியா?” என்றவன் குரலை செருமிக் கொண்டே “ஶ்ரீநவி கூப்டுறா என்னன்னு கேளு” என்க.
“அவ அழைச்சது எனக்கே கேட்கல உனக்கு மட்டும் எப்படி கேட்கும்?” என்றவன் பின்னால் திரும்பி பார்க்க,
“கண்ணால கூட உன்ன காட்டி ஆக்ஷன் பண்ணலாம்” என்றவன் அவன் கையிலிருந்த உடையை வாங்கிக் கொண்டு “இதுவும் ஜெனரல் னோலேஜ் தான்” என நக்கலாக சொன்னவன் குளக்கரை நோக்கி சென்று விட,
ஶ்ரீநவி என்றதும் முதலில் அதிர்ந்தவன் விழிகள் சுற்றிலும் தேடியது என்னவோ பவ்யாவை தான்.
சுற்றிலும் விழிகளை சுழல விட்டவனுக்கு தன்னவள் தன் பார்வை வட்டத்தில் விழாது போக ‘ இவ வேற எதுக்கு அழைச்சிட்டு இருக்கானு தெரியலையே’ என இதழ்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டே அவள் தன்னை நோக்கி வரும் வரை அப்படியே நின்றிருந்தான்.
அவனுக்கு அவளுடன் பேச பிடிக்கவில்லை என்றாலும் அதையும் தாண்டி தன்னிடம் ஏதோ பேச வரும் பெண்ணை எவ்வாறு கடந்து செல்வது என்ற எண்ணம் வேறு அலைக்கழிக்க என அமைதியாக அவள் வரும் வரை காத்திருந்தான்.
“மாமா எனக்கு இந்த கோயிலை சுத்தி காட்ட முடியுமா?” என்று கேட்டாள்.
அவளின் கேள்வியில் பல்லைக் கடித்தவன் முயன்று வர வரவழைத்த பொறுமையுடன் “ஏன் வேற யார்கிட்டயும் இந்த கேள்வியை கேட்கலையா?” என்றவன் தொனியில் இருந்த பிடித்தமின்மையை புரிந்து கொண்டவளோ “பவ்யா பிசியா இருக்கேன்னு வரலணு சொல்லிட்டா அண்ட் ஆஹி அக்காவும்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே “வா நானே சுத்தி காட்டுறேன்” என்ற பவ்யாவின் குரல் அவளின் பின்னால் ஒலித்தது.
இப்போது தான் அவனுக்கு மூச்சே வந்தது.
இனிமேல் தான் பிரச்சனையே ஆரம்பிக்க போகின்றதென பாவம் அவன் அறியவில்லை…
சட்டென பின்னால் திரும்பி பார்த்தவள் “பிசினு சொன்ன ?” என்றவளிடம் “இப்போ இல்ல” என்று சொன்னவள் குரல் கடினமாக ஒலிக்க, ‘நாசமாபோச்சு’ என மனதுக்குள் சொல்லிக் கொண்டவன் “பவி” என்றான்.
அவனது அழைப்பில் அவனை தீயாக முறைத்தவள் விழிகள் கலங்கி சிவந்திருக்க, ‘கன்பார்ம்’ என மனதுக்குள் சொல்லிக் கொண்டவன் “சுத்தி பார்த்திட்டு வா பேசலாம்” என்றவன் வார்த்தகளை கூட காதில் வாங்கிக் கொள்ளாது ஶ்ரீநவியின் கரத்தை பற்றி பிடித்திழுத்த படி “வா போகலாம்” என்க,
“கை வலிக்குது பவ்யா” என ஶ்ரீநவி முனக, “ஏன் இவ்ளோ வல்கரா பிஹேவ் பண்ற பவி” என்ற விபீஷனின் சீறலில் “வாரே வா இவளுக்கு வலிச்சா உங்களுக்கு வலிக்குதோ?” என்று கேட்டாளே பார்க்கலாம்.
அவனுக்கோ எங்கயாவது சென்று முட்டிக் கொள்ளலாமா என்று தான் தோன்றியது.
அவளும் உணர்ந்தாள் தானே அவள் மீது நான் எவ்வளவு காதலை வைத்திருக்கிறேன் என்று தெரிந்திருந்தும் இப்படி ஒரு கேள்வி கேட்கின்றாளே என்ற ஆத்திரம் தலைக்கு ஏறியது.
“சாரி நான் தெரியாம கேட்டுட்டேன் ரியலி சாரி பவ்யா” என்று சொன்ன ஶ்ரீநவி பாவ்யாவின் கரத்திற்குள் அகப்பட்டிருந்த தனது கரத்தை உருவி எடுத்துக் கொண்டே நகர, “வந்த வேலை சிறப்பா முடிஞ்சிடுச்சுல” என்றாள் குத்தலாக, அவளோ, அதற்கு மேலும் அங்கு நிற்க திராணியற்று சென்று விட, இவ்வளவு நேரம் தன் பொறுமையை கட்டுப்படுத்தி வைத்திருந்தவன் அவளை உறுத்து விழித்தான்.
அவனின் கேள்விக்கு பதில் கூறாது அவளோ “ நான் சொன்னேன் தானே அவ கூட பேச வேணாம்னு பட் நீங்க?” என்று சொல்லி க் கொண்டிருக்கும் போதே
“ஜஸ்ட் ஷாட் அப்”என குரலை உயர்த்தி அடக்கப்பட்ட சினத்துடன் சீறியவன் அவளின் நடுங்கிய தோற்றத்தை கண்டு ஒரு கணம் சுதாரித்தவன் கேசத்தை கோதிக் கொண்டே “வெல், இப்போ இங்க என்ன நடந்துச்சுனு இவ்ளோ கோபப்படற?” என்று கேட்டான் நிதானமாக,
“என் பேச்சுக்கு உங்ககிட்ட எந்த வேல்யூவும் இல்லனு இப்போ புரிஞ்சிகிட்டேன்” என்று சொன்னவளை “அவளா வந்து கதைச்சா எப்படி அவாய்ட் பண்ண சொல்ற?”
“ஐ டோண்ட் க்னோ, பட் நீங்க அவாய்ட் பண்ணி இருக்கணும். ஒரு வார்த்தை கூட பேசி இருக்க கூடாது” என்று சொல்ல,
இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவளை பார்த்தவன் “ ஃபோர் ஷோர், அவ கூட நான் போயிருக்க மாட்டேன் அண்ட் நெஸ்ட்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே “விபீஷன்” என்ற சித்ராவின் குரல் கேட்க, “ப்ச்ச, வா பேசிட்டே போலாம்” என்றவன் அவளின் கையை அவன் பற்றி பிடிக்கவும், அவளோ அவனின் கரத்தை உதறி விட்டு ஓரடி பின்னால் விலகி நிற்கவும் சரியாக இருந்தது.
ஒன்றும் பேசாது இறுகிப் போய் அவன் நின்றிருக்க, அவளோ எதுவும் பேசாது முறைத்துக் கொண்டே திரும்பி நடந்தாள்.
போகும் அவளை வெறித்தவன் என்ன நினைத்தானோ, சட்டென ஓர் எண்ணம் துளிர்க்க குளக்கட்டினை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினான்.
அங்கோ, குளித்து விட்டு வேஷ்டியை கட்டிக் கொண்டு வெற்று மார்புடன் நின்றிருந்தான் ஜெய் ஆனந்த்.
“அண்ணா” என்றான் குரலை செருமிக் கொண்டே,
“என்ன பண்ணும்?” என்றான் நேரடியாகவே,
“அம்மா என்ன கூட்டங்க. என்னன்னு தெரியல சோ கொஞ்சம் போய் என்னன்னு பாரு” என்க,
“நான் ஏன் போகணும் நீயே போகலாமே” என்க,
அவனது வெறித்த பார்வையில் என்ன கண்டானோ? “ஓகே நான் பார்த்துக்கிறேன் நீ கிளம்பு” என்று விட, அதற்கு மேலும் ஒரு நொடியும் தாமதிக்காமல் பவ்யா நடந்து சென்ற திசையை நோக்கி விரைந்திருந்தான்.
அவள் தன்மேல் தேவையில்லாமல் கோபப்படுகின்றாள் என தெரிந்தது. ஆனாலும் அவளின் அநாவசிய உதாசீனத்தால் என்னவோ கட்டுக்கடங்கா கோபம் வந்தது.
இப்போதோ, அவள் தன்னை ஓர் ஆழ்ந்த பார்வை பார்த்து விட்டு சென்ற அந்த தோரணை அவனின் மனதை உறுத்த, இதயமோ படு வேகமாக துடிக்க ஆரம்பித்திருந்தது.
அவள் சென்ற திசையில் சென்றவன் கோயிலுக்கும் வெளியில் வந்தும் விட்டான் ஆனால் அவளை தான் காணவில்லை.
அலைபேசியை எடுத்து அவளுக்கு தொடர்ந்து அழைத்தான்.
அவளுக்கு அதீத கோபம் வரும் என்று தெரியும் இதை வைத்தே என்னை வெறுத்து விடுவாளோ என்ற ஐயம் நெஞ்சை கவ்வ, விடாது மீண்டும் மீண்டும் அழைப்பை எடுத்தான்.
அந்த பக்கம் அழைப்பு போனதே தவிர அவள் தான் எடுத்த பாடு இல்லை.
வண்டி நிறுத்தி வைத்திருந்த இடத்திற்கு வந்து மீண்டும் அழைப்பை எடுத்தான்.
பலன் பூச்சியம் தான். மீண்டும் மீண்டும் அழைத்து விடாது முயற்சித்தான். அவளோ எடுக்காது போக, வேகமாக நுழைவாயிலை நோக்கி சென்றவன் வீதியின் இரு மருங்கிலும் பார்த்தான்.
அவளொருத்தி அங்கே இருப்பதாக தென் படாது போக, அப்படியே ஓய்ந்து போன தோற்றத்தில் விழிகள் கலங்க நின்றவன் தோற்றம் அந்த இறைவனையே அசைத்திருக்க வேண்டும் போலும்,
வீதியில் பூக்கடை வைத்திருந்த பெண்மணியோ “உன் பொஞ்சாதி கோயிலோட தோட்டத்து பக்கம் இந்த வழியா போனாப்பா. அவளையா தேடுற?” என அவர் கேட்ட கேள்விக்கு கூட பதில் கூறாது பக்கவாட்டிலிருந்த மதிலில் பாய்ந்து ஏறி மறு பக்கம் குதித்திருந்தான்.
பதற்றத்துடன் வேகமாக பாய்ந்தேறி குதித்தவன் கண்டது என்னவோ முகத்தில் மென் புன்னகை தவிழ காற்றில் அசைந்தாடிய கூந்தலை அள்ளி கொண்டை போட்டுக் கொண்டு, புடவையை இடையில் சொருகி விட்ட படி மரத்தில் கட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருந்த ஊஞ்சலை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தவளைத் தான்.
“அதை ஏன் வெறிச்சு பார்த்திட்டு இருக்கா?” என இதழ்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டே அவளை நோக்கி மெல்ல நடந்தான்.
அவளை நெருங்க நெருங்க அவள் தனியாக பேசிக் கொண்டிருந்தது கூட அவன் காதில் தெள்ளத்தெளிவாக கேட்க, ‘ஒருத்தன் வர்றது கூட தெரியாம தனியா பேசிட்டு இருக்கா?’ என்ற யோசனையுடன் அவளுக்கு பின்னே போய் சத்தம் எழுப்பாது மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியபடி நின்றிருந்தான்.
“எந்த புண்ணியவான் பண்ண வேலையோ தெரியல. டெய்லி இங்க வந்துட வேண்டியது தான்” என்று சொல்லிக் கொண்டே அதில் ஏறி அமரப் போனவளை பார்த்தவனுக்கோ தூக்கி வாரி போட்டது.
அவன் அவளை எச்சரிக்கும் முன்னரே, மரத்தில் அறை குறையாக தொங்கிக் கொண்டிருந்த ஊஞ்சலில் ஆர்வக் கோளாறில் பாய்ந்து ஏறி அமர்ந்த பவ்யா, சகதி மண்டிக் கிடந்த சேற்று நிலத்தில் சடார் என ஊஞ்சலோடு சேர்ந்து வீழ்ந்த மறுநொடி “அம்மாமாஹ்ஹ்” என்ற அழறலோடு இடையை பற்றிக் கொண்டே ஏழ முயன்றவள் மீண்டும் சேற்றில் வழுக்கி தரையில் விழ, அவளுக்கோ அழுகை வரும் போல இருந்தது.
அப்போது தான், தன் முன் நின்றிருந்த உருவத்தை பார்த்தாள்.
அங்கே நின்றிருந்த தன்னவனைக் கண்டதும் அவளுக்கோ பேரதிர்ச்சி.
அவன் முன் இப்படியாகி விட்டதேயென அவமானமாக இருக்க, வாய் விட்டு கத்த வேண்டும் போல இருந்தது.
குனிந்து தன்னை பார்த்தாள்.
மேனி முழுதும் சேற்றில் குளித்திருந்தது.
அவளின் நிலையை பார்த்து பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவன் ‘சிரிச்சிடாத விபீஷன் கொல காண்டுல இருக்கா’ என தன்னை தானே எச்சரித்துக் கொண்டவன் வலியில் முகம் சுருங்க இடையை பிடித்துக் கொண்டு எழ முயன்றவளிடம் “வெயிட் பேபி நான் ஹெல்ப் பண்றேன்” என்றான்.
“நோ, கிட்ட வராதீங்க. உங்க ஹெல்ப் எனக்கு தேவையில்ல” என்றாள் இதழ்கள் துடிக்க,
“ஹேய் எழுந்து வந்து சண்டை போட்டுக்கோடி. பிளீஸ், லெட் மீ ஹெல்ப்” என்றான் சற்றே குரல் தாழ்த்தி,
“ஐ டோண்ட் மைண்ட்” என்றவன் மெதுவாக கால் வைத்து அவளை நெருங்க, “என் பேச்ச கேட்கவே மாட்டீங்கல” என்று குரல் தழுதழுக்க சொன்னவள் இதழ் பிதுக்கி ‘ஆஆஆஆஹ்ஹ்ஹ்ஹ்’ என்று ஹை டெசிபலில் வேண்டுமென்றே சத்தமாக கத்த ஆரம்பித்து விட்டாள்.
அவள் கத்தவும் அரண்டு போனவன் “கத்தாதடி” என்று சொல்லிக் கொண்டே அவளின் வாயை பொத்தி பிடிக்க முயன்றவன் சேற்றில் வழுக்கி அவள் மீதே சரிந்திருந்தான்.
இருவருமே சற்றும் இதனை எதிர் பார்க்கவில்லை.
“பொறுக்கி” என்று சீறியவள் தரையிலிருந்த சேற்றை அள்ளி அவன் முகத்தில் பூசி விட, அவனுக்கோ அவள் தன்னை பொறுக்கி என்றதும் உடல் இறுக அவளின் இரு சிவந்த கன்னங்களையும் தாங்கி தன் முகத்தில் அவள் பூசிய சேற்றை அவளின் முகத்திற்கே இடம் பெயர்த்திருந்தான்.
விளைவு, அவளின் இதழ்கள் கூட அவன் வசமானது.
அத்தியாயம் – 17
தன்னவனின் ஆழமான இதழணைப்பில் முதலில் திமிறி விடுபட போராடியவள் கொஞ்சம் கொஞ்சமாக அவனது ஆளுகையின் கீழ் அவளும் ஒத்துழைக்க ஆரம்பித்து விட, நீண்ட நேரமாக தொடர்ந்த இதழ் யுத்தம் முடிவுக்கு வந்தது என்னவோ கோயிலிலிருந்து கேட்ட மணியோசையில் தான்.
அவனின் ஷர்ட்டின் காலரை இறுக பற்றி இருந்தவளின் கரம் தளர, அவளின் விழிகளோ அவனின் விழிகளை நாணத்துடன் நோக்கியது. அவளையே ரசனையாக பார்த்திருந்தவனோ “ஆர் யூ ஒகே?” என்று கேட்டான்.
“ம்ம்” என்று சொன்னவளுக்கு வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் சிக்கிக் கொண்டன போலும், “ சோ வொய் இவ்ளோ மூச்சு வாங்குது?” என்றவனின் பார்வை செல்லும் திசையை பார்த்து அதிர்ந்தவள் “விபீஷன் இப்படி பார்க்காதீங்க ப்ளீஸ் வாங்க போலாம்” என்றாள் தடுமாற்றமாக,
அவன் கொடுத்த இதழ் முத்தத்தின் போதையில் அவன்மேல் கோபமாக இருக்கின்றோம் என்பதை முற்றிலுமாக மறந்தவளோ, மெதுவாக எழ முயன்றாள்.
முயன்றவளுக்கு ஒன்று அப்போது தான் புத்தியில் நன்றாக உரைத்தது.
பின்ன முயன்று என்ன பயன்? அவன் தான் அவள் மீது படர்ந்திருக்கின்றானே!
அவனின் மெனரிசத்தில் மயங்கிய தன் மனதை கட்டுக்குள் கொண்டு வந்தவளோ, “பிளீஸ் போகலாமா” என்றாள்.
“அப்போ மாமான்னு கூப்டு போகலாம்” என்றான்.
“மாமான்னு தானே கூப்பிடுறேன்” என்று சொன்னவளுக்கு அப்போது தான் விபீஷன் என்றழைத்தது நினைவுக்கு வரவும் வெட்கத்தில் தன் இதழை லேசாக கடித்து விடுவித்தவள் சாதாரணமாக அன்று அவனை மாமா என்றழைத்த போது வராத வெட்கமோ, இப்போது எங்கிருந்து தான் வந்து தொலைத்ததோ “வீட்ல போய் சொல்றேன்” என்றாள் விழிகள் தாழ்த்தி,
“நோ வே… வீட்டுக்கு போன பிறகு வேற பிளான் இருக்கு” என்றதும் “வாட்? பிளானா?” என அவள் கேட்கவும் “சர்ப்ரைஸ்” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்,
“பிளீஸ் சொல்லுங்க மாமா” என்றாள்.
இவ்வளவு நேரம் வெட்கத்தில் வரமறுத்த வார்த்தை தடையின்றி அவள் உச்சரித்திருக்க, இனி கேட்கவும் வேண்டுமா என்ன?
எப்போது அவள் மேலிருந்து எழுந்து அவன் கரங்களில் அவளை ஏந்திக் கொண்டான் என்று கேட்டால் அது அவளுக்கே தெரியாத புதிர் தான்.
“ஹையோ இறக்கி விடுங்க” என்றாள் திமிறிக் கொண்டே,
“இப்படியே நடந்து வர போறியா என்ன?” என்றவன் குரல் கடுமையாக ஒலித்தாலும் அவனின் பார்வை சென்ற இடத்தை பார்த்து அப்படியே தன்னை குனிந்து பார்த்தவள் அதிர்ந்து போனாள்.
ஆம், அவளின் மார்பை மறைத்திருந்த சேலை மெல்லியதாக இருக்க, சேற்று நீர் பட்டு அவளின் அங்க வனப்புக்கள் தெரிந்தும் தெரியாத போலும் இருக்க அவள் தான் தன் நிலையை நினைத்து நொந்து போனாள்.
இவ்வளவு நேரமும் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தவளுக்கு அங்கு செல்லவே என்னவோ போலிருந்தது.
எல்லாருக்கும் காட்சி பொருளாக வேண்டுமா? என்ற எண்ணம் மனதில் துளிர் விட, “அத்தைக்கு கால் பண்ணி சொல்லிட்டு வீட்டுக்கு போயிடலாமா? எனக்கு என்னவோ போல இருக்கு” என்றாள் பரிதவித்து போய்,
அதற்குள் அவனோ கோயிலுக்குள் நுழைந்திருக்க, சுற்றம் மறந்து கேட்டுக் கொண்டிருந்தவளின் கேள்வியில் மெலிதாக புன்னகைத்தவன் “ நமக்காக வந்துருக்கோம் சோ முடிச்சிட்டே போயிடலாம் பவி” என்றவன் அவளை இறக்கி விட முயல,
அவளோ “ஹையோ நான் இறங்க மாட்டேன்” என்று சொன்னவள் அவன் மார்போடு ஒன்றி விட, அவனுக்கோ சங்கடமான நிலையாகிப் போனது.
அவனும் ஆண் தானே!
இதழ் குவித்து ஊதிக் கொண்டே விழிகளை மூடித் திறந்தவன் “ட்ரஸ்ட் மீ இங்க யாருமே இல்ல டி இறங்கு” என்றான் இழுத்து பிடித்த பொறுமையுடன்,
“மாட்டேன்” என்றாள் பிடிவதாய்,
“பவி, கோயில்ல வச்சு உன்மேல பாய வச்சிடாத யூ ஆர் டெம்ப்டிங் மீ” என்றவன் பிடி கூட ஒரு கணம் இறுகியதோ என்னவோ,
அவனின் மார்போடு ஒன்றி போய் முகம் புதைத்திருந்தவள் சட்டென ஏறிட்டு அவனை பார்த்தாள்.
அவனோ, அவளை தான் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“ சாரி, இறக்கி விடுங்க” என்று சொன்னவளோ அப்போது தான் சுற்றிலும் தான் பார்வையை சுழல விட்டாள்.
கோயிலின் குளக்கட்டில் தான் இருவரும் நின்றிருந்தனர்.
அவன் சொன்னது போல அந்நேரத்திற்கு சுற்றி யாரும் இருக்கவில்லை.
நல்லவேளை அதற்கு எந்த சேதாரமும் ஏற்படாமல் இருக்க, ஒரு பெரு மூச்சுடன் ஜெய் ஆனந்திற்கு அழைப்பினை எடுத்தான்.
ஒரே ரிங்கில் அழைப்பினை ஏற்றவன் “எங்கடா போன? பவ்யா எங்க?” என கேட்க,
“ இப்போ தான் போனை பார்த்தேன் டா. சாரி எனக்கு கொண்டு வந்த ட்ரெஸ் அண்ட் கூடவே அண்ணிக்கிட்ட சொல்லி பவியோட ட்ரெஸ் அஹ்யும் எடுத்திட்டு கோயிலுக்கு பின்னாடி வந்துடு” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே “வாட்? என்னடா பண்ண?” என்றான் அதிர்ச்சியாக,
“ஓஹ் கோட், நீ தப்பா நினைக்கிற போல ஒன்னும் நடக்கல டா” என்றான் கேசத்தை கோதிக் கொண்டே,
“இட்ஸ் ஓகே” என்றவன் கண நேரத்தில் அவளின் இடையை பற்றி தன்னை நோக்கி இழுத்தவன் குனிந்து அவள் நெற்றில் முத்தம் பதித்திருக்க, “ஆத்தாடி” என்ற ஆஹித்யாவின் குரலில் சட்டென அவனை விட்டு பிரிந்தவள் சங்கடமாக விபீஷனின் முதுகின் புறம் ஒன்றி மறைந்து நின்று கொண்டாள்.
ஆஹித்யாவுக்கோ, இருவரின் கோலத்தை பார்த்து என்னவோ புரிவதை போலிருக்க, சட்டென பொங்கி வந்த சிரிப்பை அடக்கும் வழியறியது வாய் விட்டு சிரித்து விட, “சிரிக்காத டி” என்ற ஜெய் ஆனந்த் விபீஷனை நெருங்கி இருக்க, அதற்குள் பவ்யாவை நெருங்கிய ஆஹித்யா “சாரி டி ஒரு ஃப்ளோல பார்த்ததும் சிரிச்சுட்டேன்” என்றவள் அவளை தோளோடு அணைத்த பெண்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த குளக்கட்டினை நோக்கி அழைத்து சென்று விட, “பூஜைக்கு லேட் ஆகிடுச்சு டா அம்மாவை அத்த தான் சமாளிச்சு வச்சிருக்காங்க” என்றவனிடம் “அது என்னவோ நீ லேட் பண்ணா மட்டும் கேட்கவே மாட்டாங்க போல” என்றிட, “என்னை காணும்னு தானே தேடிட்டு வந்த அப்புறம் என்ன தேடலைன்னு சொல்ற” என்று கேட்க,
“ம்ம் என புன்னகைத்தவன் பிளான் எல்லாம் செட் தானே” என்றான் ஷர்ட்னை கழற்றிய படி,
“பூஜை முடிஞ்சதும் கிளம்பிடலாம்” என்றான் கேசத்தை கோதிய படி,
“தென் ஓகே” என்றவன் குளத்தில் குளிக்க ஆரம்பித்து விட்டான்.
அப்படியே குளக்கட்டில் அமர்ந்து அவனை வெறிக்க ஆரம்பித்த ஜெய் ஆனந்த்தை ஓர் மார்க்கமாக பார்த்தவன் “இங்க என்னடா பார்வை? நான் உன் தம்பி மைண்ட் இட்” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்,
“நான் என்ன சின்ன பையனா என்னன்னு சொல்லு புரிஞ்சிடும்”
“ஒரு சில விஷயங்கள் தெரியாம இருக்கதே நல்லது விபீஷன். அதை தெரிஞ்சிக்கணும்னு நினைச்சா நிம்மதி போய்டும்”
“என்னவோ என்கிட்ட இருந்து மறைக்கிற போல இருக்கே” என்று சொல்லும் போதே ஜெய் ஆனந்தின் அலைபேசி விடாமல் ஒலித்தது.
சட்டென அலைபேசியின் திரையை பார்த்தான்.
இம்முறை அழைப்பை எடுத்துக் கொண்டிருந்தது என்னவோ வித்யா தான்.
அழைப்பை ஏற்று காதில் வைத்த அடுத்த நொடியே “கோயிலுக்கு வந்து நாலு பேரும் விளையாடிட்டு இருக்கீங்களா? நல்ல நேரம் முடியப்போகுது சீக்கிரம் வாங்க” என்று சொல்லவும் அலைபேசியை சற்று தள்ளி பிடித்த ஜெய் ஆனந்த் “விபீஷன் ஹரிஅப்” என்றான் ஹஸ்கி குரலில்,
“அங்க யாரோட பேசிட்டு இருக்க?” என்று கேட்ட வித்யாவின் குரல் சத்தமாக கேட்க,
“என் பொண்டாட்டி கூட பேசுறேன்” என்றான் இதழ் குவித்து ஊதிக் கொண்டே,
“ஓஹோ பொண்டாட்டி கூட பேசுறீங்களா? என்று நக்கலாக கேட்டவர் வெயிட் ஒருத்தர் உன்னோட பேசணும்னு கேட்டாங்க” என்றவர் அலைபேசியை கொடுத்தது என்னவோ ஆஹித்யாவிடம் தான்.
“அத்த உள்ள தான் வந்துட்டு இருக்கேன்” என்று சொன்னவனிடம் “உங்களுக்கு நான் தானே பொண்டாட்டி என்னை தவிர வேற சைட்செட்டப் வச்சிருக்கீங்களோ?” என தன்னவளின் குரல் கேட்கவும்,
“அதுக்குள்ள நீ எப்போ உள்ள போன?” என்றான் அதிர்ச்சியாக,
“என்னவோ உங்க தம்பிகிட்ட உருகி போய் தேங்க்ஸ் கேட்டுட்டு இருந்தீங்கல. அப்போ தான்”
“அவன் நீ போனதா சொல்லவே இல்லையே” என்று கேட்டுக் கொண்டே பக்கத்தில் வேஷ்டியை கட்டிக் கொண்டிருந்த விபீஷனை தீயாக முறைத்தான்.
“ஸ்மார்ட் மூவ்” என்றவன் குரல் அவளின் அருகாமையில் ஒலிக்க,
சட்டென கேட்ட அவளவனின் குரலில் திடுக்கிட்டு திரும்பியவள் “என்ன ?” என்றவள் தடுமாற்றம் கூட எப்போதும் போல அவனை ஈர்த்தது.
அவளுக்கு பக்கவாட்டாக வந்து நெருங்கி நின்றவனோ சற்றே குனிந்து “நல்லா பேச்சை மாத்த ட்ரை பண்றடி” என்றவனிடம் “நான் எதுக்கு மாத்தணும்?” என அவனின் விழிகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே கேட்டவள் நெற்றி வகிட்டில் குங்குமத்தை வைத்த அதே நேரம், அவர்கள் நின்றிருந்த இடத்தின் எதிர் புறத்தில் மணியோசை ஒலிக்க இனிதே பூஜையும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
எதிர்பாராத அவனின் செயலில் அவளோ வெட்கத்தில் சிவந்து போனாள்.
அத்தியாயம் – 18
அதனைத் தொடர்ந்து நடந்த பூஜைகளில் அவளுக்கோ கொஞ்சம் கூட கவனம் செலுத்தவே முடியவில்லை.
“மாமா கொஞ்சம் கையை எடுங்க அத்த பார்க்க போறாங்க” என்றாள் கிசுகிசுப்பாக,
“நான் இருக்கப்போ அவங்க ஏன்டி உன் ஹிப்ப பார்க்க போறாங்க?” என இதழ்களுக்குள் புன்னகைத்துக் கொண்டவனை பார்த்தவளுக்கு ஏகத்துக்கும் வெட்கம் தான் பிடுங்கித் தின்றது.
“அட்லீஸ்ட் நம்ம பின்னுக்கு நிற்கிற சின்ன பசங்க நம்மள பார்த்திட போறாங்க சோ ஹிப்ல…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளின் இடையை அழுந்த பற்றி தன்னோடு நெருக்கிக் கொண்டவன் தன்னை அதிர்ந்து போய் பார்த்தவள் முகத்தை மறு கரத்தால் பற்றி முன்னே பார்க்க செய்தவன் “ப்ரே பண்ணுடி” என்றவன் பார்வை நோக்கியது என்னவோ சுவாமியை தான்.
ஒருவழியாக பூஜை வழிபாடும் முடிந்து விட, அன்று அனைவரும் வீட்டுக்கு வந்து சேரவே மதியத்தை எட்டி இருந்தது. ஒருவித சோர்வோடு உள்ளே வந்த நால்வரையும் பார்த்து சித்ராவோ “நாலு பேரும் கோயிலுக்கு தானே வந்தீங்க என்னவோ பிக்னிக் வந்த போல ரெண்டு ரெண்டு பேரா காணாம பொய்ட்டீங்க” என்று வைய ஆரம்பித்து விட,
அவரின் கடுமையில் பவ்யாவுக்கு தான் தண்ணீர் குடிக்காமலேயே புரை ஏறியது.
“சும்மா தான் கோயிலை சுத்தி பார்க்க” என்ற ஜெய் ஆனந்தை முறைத்தவர் “சரி இருக்கட்டும் கோயிலோட புனித தீர்த்ததுல குளிக்காம எந்த சேத்துல விழுந்து வாரிட்டு வர்ற விபீஷன்?” என்க,
குரலை செருமிக் கொண்டே அவரை பார்த்தவன் “வாட் சேரா? என்றான் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாது,
“போதும் ரொம்ப நடிக்காத நான் உனக்கு அம்மாடா” என்று சித்ரா சொல்ல, “ தெரியாம விழுந்துட்டேன் மா அப்பறம் தான் கோயில் பின்னாடி போய் குளிச்சேன்ல” என்றவனிடம் மீண்டும் சித்ரா ஏதோ பேச வருவதற்குள் “மா” என்றழைத்த ஜெய் ஆனந்திடம் “வாப்பா வா.. நீ என்ன சொல்ல போற?” என்றதும் “இப்போ ஏன் புள்ளைங்கள நிற்க வச்சு கேள்வி கேட்டுட்டு இருக்க?” என்ற பிரதாபனை முறைத்தவர் “ எல்லாருக்கும் கடவுள் விஷயத்துல விளையாட்டு தான். நிற்க வச்சி பேச கூடாதாமே அப்போ உட்காருங்கடா நிதானமா பேசலாம்” என்று பிரதபனுக்கும் சேர்த்து வாய்க்குள் திட்டிக் கொண்டே சமையல் கட்டிற்குள் நுழைந்திருக்க, இவ்வளவு நேரமும் சிரிப்பை முயன்று கட்டுப்படுத்திக் கொண்டிருந்த ஆஹித்தியாவோ வெடித்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
அவள் சிரிப்பதை பார்த்த பிரதாபனோ சிறு புன்னகையுடன் கடந்திருக்க “ எட்டி அவளின் வாயை மூடிய ஜெய் ஆனந்தோ “கடிச்சு வச்சிடுவேன்” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்,
அனைவருக்கும் முன் அவன் செய்தாலும் செய்வான் என்று தான் அவளறிவாளே! விழிகள் விரிய அவனை பார்த்து கொண்டே அவனது கரத்தினை தனது வாயிலிருந்து விலக்கியவள் “சிரிக்க மாட்டேன்” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னவள் சற்றே பின்னோக்கி நகர்ந்து “ ஆனா சத்தமா கத்துவேன்” என்று கேலியாக சொல்லிவிட்டு இதழ்களை சுளித்தவள் “அத்தத… உங்க பையன் என்னை…” என்றவள் மேலும் மீதி வார்த்தைகளை கூறும் முன்னரே நொடி பொழுதில் சுதாரித்து அவளை தன் கரங்களில் ஏந்திக் கொள்ளவும் அவளின் சத்தம் அடங்கிப் போகவும் சரியாக இருந்தது.
வேகமாக சமையலறையிலிருந்து வெளியில் வந்த சித்ராவுக்கோ, இக்காட்சியை கண்டு தூக்கி வாரிப் போட்டது.
‘பகவானே!’ என்று தலையில் தட்டிக் கொண்டு மீண்டும் சமையலறைக்குள் புகுந்து கொள்ள, அங்கே எஞ்சி நின்றது என்னவோ பவ்யாவும் விபீஷனும் தான்.
தனது தமக்கையை ஏந்திச் செல்லும் ஜெய் ஆனந்த்தையே திறந்த வாயை மூடாமல் ஆவென்று பார்த்துக் கொண்டிருந்த பவ்யாவின் முகத்தின் முன்னே சொடக்கிட்ட விபீஷன் “என்னடி நானும் உன்ன…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “ஆளை விடுங்க” என்று சொன்னவளோ விறுவிறுவென சமையலறையை நோக்கி சென்றிருந்தாள்.
போகும் அவளை மென் புன்னகையுடன் பார்த்தவனோ என்ன நினைத்தானோ மெல்ல சமையலறையை நோக்கி நடையிட்டான்.
அவன் இங்கே தான் வருகின்றான் என அறியாத பெண்ணவளோ சமையல் கட்டில் அமர்ந்து சித்ரா சமைக்கும் விதத்தை நாடியில் கை குற்றி பார்த்துக் கொண்டிருக்க, அவளின் தோரணையில் அவனுக்கோ சிரிப்பு பீறிட்டது.
அடக்கிக் கொண்டே மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு சுவரில் சாய்ந்து நின்றுந்தவனை தாண்டி சமையலறைக்குள் வந்த வித்யாவுக்கோ பவ்யா சட்டமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையை பார்த்து அதிர்ந்தவருக்கு கோபம் தாறு மாறாக பெருகியது.
“அடியே பவ்யா” என்று ஹை டெசிபலில் கத்திக் கொண்டு அவளை நெருங்கிருக்க அவளுக்கோ அதிர்ச்சியில் மயக்கமே வந்துவிட்டது.
அது மட்டுமா என்ன தன்னவன் வேறு நிற்கின்றனே! இவன் எப்போது வந்தான் என்று யோசித்துக் கொண்டிருந்தவள் சுட்டாரிக்கும் முன்னரே எட்டி அவளின் காதை நன்றாக திருகிய வித்யா “கல்யாணம் பண்ணி வச்சாலாவது திருந்துவன்னு பார்த்தேன்.. ம்ஹூம் நீ இன்னும் திருந்தல” என்றவர் முறைக்க,
“ஆஹ்ஹ்… அம்மா பிளீஸ் வலிக்குது விடுங்க நான் அத்தைக்கு ஹெல்ப் பண்றேன்” என்று கெஞ்ச,
“வித்யா விடு நான் தான் அவளை வேலை எதுவும் பண்ண வேணாம்னு சொன்னேன்” என்று சித்ரா சொல்ல,
அவரோ மேலும் காதில் அழுத்தம் கொடுத்து திருக அவளுக்கோ வலியில் அழுகை வந்துவிடும் போலானது. நடிக்கின்றாளோ என ஒரு சந்தேகத்துடன் பார்த்திருந்தவன் அவளின் முக மாற்றத்தில் உடல் இறுக ரெண்டே எட்டிலில் அவளை நெருங்கியவன் சமையல் கட்டிலமர்ந்திருந்த தன்னவளை அப்படியே கரங்களில் ஏந்திக் கொள்ள, இதனை சற்றும் எதிர் பாரத வித்தியாவோ சங்கடமாக கரத்தை எடுத்துக்கொள்ள, அங்கு வாயடைத்து போய் நின்றது என்னவோ சித்ரா தான்.
“என்ன அண்ணி இதுக்கே இப்படி பண்றான் ? இன்னும் பத்து மாசத்துல நார்மல் டெலிவரியா இருந்தா டாக்டரை மேல அனுப்பிடுவான் போல” என்று சலித்துக் கொண்ட வித்யா, சிலை போல நின்ற சித்ராவை உலுக்க…
சட்டென சுயம் அடைந்தவரோ, “டாக்டர் போறதுக்குள்ள இவனுங்க ரெண்டு பேரும் சேர்ந்து நம்ம ரெண்டு பேரையும் அனுப்பிடுவாங்க போல” என நொந்துக்கொண்டார்.
இங்கோ, இதழ்கள் விரிய புன்னகைத்துக் கொண்டே தன்னவனின் கழுத்தை சுற்றி கரங்களை கோர்த்துக் கொண்டவளோ “டேய் கணவா நான் ஏன் உன்ன முன்னவே லவ் பண்ணிருக்க கூடாது?” என்று கேட்டாள் ஆழ்ந்த குரலில்,
தன்னவளின் ‘டேய்’ என்ற அழைப்பில் அவளை பார்த்தவன் “ரொம்ப வலிக்குதா?” எனக் கேட்டான் அவளின் சிவந்திருந்த காதை பார்த்து,
“ப்ச்ச… நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே” என்றாள் சிணுங்களாக,
“நான் கேட்டதுக்கும் இது ஆன்சர் இல்லையே” என ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டவனை “அப்போ வலிச்சது பட் இப்போ வலிக்கல” என்று சொன்னவளை கட்டிலில் கிடத்தியவன் “வெயிட் ஆயில்மென்ட் எடுத்திட்டு வரேன்” என்று விட்டு விலகியவனின் ஷர்ட்டை பற்றி தன்னை நோக்கி இழுத்திருந்தாள் பெண்ணவள்.
அவளின் இந்த எதிர் பாரா செயலில் “என்னடி இப்போ?” என்றான் தாபமாக,
“இப்படியே என் கூடவே இருங்க” என்று சொன்னவளோ மேலும் நெருங்கி அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.
அவனின் தன்மீதான சிறுசிறு அக்கறை கூட அவளுக்கு தான் என்னவோ அவனை இவ்வளவு நாள் தவிக்கவிட்டதற்காக மனம் குற்ற உணர்வில் தவிக்க ஆரம்பித்திருந்தது.
தன்னை அணைத்துக் கொண்டவளின் பிறை நுதலில் குனிந்து முத்தம் பதித்தவன் “என்ன பீலிங்கா?” என்று கேட்டான்.
தன்னவனின் முத்தத்தில் கிறங்கிப் போய் இருந்தவள் அவனது கேள்வியில் விழுக்கென ஏறிட்டு பார்த்து “சாரி” என்றாள்.
“ஃபோர் வாட்?” என்றவனிடம் “போசசிவ்நஸ் கொஞ்சமா அதிகமாகி ஶ்ரீநவி கூட உங்கள சேர்த்து வச்சு பேசிட்டேன்”
“ ஐ க்னோ” என்றவன் மென் புன்னகையுடன் “அவ்ளோ தானா? என்ன இப்படி ரியாக்ட் பண்றீங்க?” என்றவளிடம்,
“வேற எப்படி ரியாக்ட் பண்ணும்? என்று நாவால் உள் கன்னத்தை வருடிய படி கள்ளப் புன்னகையுடன் அவன் கேட்க,
“நத்திங், ஒன்னும் ரியாக்ட் பண்ண தேவையில்ல” என்று சொன்னவள் வேகமாக அவனிலிருந்து விலகி எழ முயன்றவளுக்கோ கொஞ்சம் கூட எழ முடியவில்லை.
ஆம், அவன் தான் அவளின் இடையை அழுந்த பற்றி தன்னுடன் பிணைத்திருந்தானே பின் எங்கிருந்து தான் விலகுவது?
“இந்த ரியாக்ட் போதுமா பேபி?” என்றான் ஒற்றை புருவம் உயர்த்தி,
“பத்தாதுன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?” என்றவளை இழுத்து மீண்டும் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டவன் அவளின் இரு கன்னங்களையும் பற்றி அவளின் துடித்துக் கொண்டிருந்த இதழ்களை முற்றுகையிட்டிருந்தான் அவளவன்.
அதனைத் தொடர்ந்து அன்றைய நாள் இரவு அனைவரும் நேரத்திற்கே படுத்திருக்க அஹித்யாவுக்கோ தூக்கம் தான் வர மறுத்தது.
என்னவோ மனம் முற்றிலும் லேசாக இருந்தது.
அறையின் பால்கனியில் நின்று இருண்ட வானில் வெண் வெளிச்சக்கீற்றினை பரப்புக் கொண்டிருந்த பூரண நிலவை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் பாவை.
எத்தனை எத்தனை தான் தன் வாழ்வில் அதுவும் கனவில் நடந்து விட்டன.
அதை இப்போது நினைக்கும் போதே திக்கென்று இருந்தது.
காரிருள் சூழ்ந்த வாழ்க்கையில் பேரொளி வீசும் பௌர்ணமி நிச்சயம் உண்டு தான் போலும், என யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அவளின் பின் கழுத்தில் முகம் புதைத்திருந்தான் அவளவன்.
அவனின் அருகாமையில் என்றும் போல மயங்கி கிறங்கியவள் மெதுவாக விழிகளை மூடிக்கொண்டாள்.
“தியா” என்றான் ஹஸ்கி குரலில்,
“ம்ம்” என்றவள் குரல் அவளையும் மீறி குழைவாக ஒலித்தது.
“லவ் யூ” என்றவனின் இதழ்கள் காது மடலை உரச, அவளுக்கோ மேனியெல்லாம் சிலிர்த்தடங்கியது.
“லவ் யூ டூ மாமா” என சொன்னவள் மெல்ல திரும்பி அவனின் முகம் பார்த்து நின்றாள்.
அவனின் விழித்திரையில் அவள் நிறைந்திருக்க, எம்பி தன்னவனின் இதழை தீண்டி விலகியவள் “என்கிட்ட எதாச்சும் சொல்லணுமா மாமா?” எனக் கேட்டிருந்தாள்.
அவனுக்கோ அவள் கேட்ட கேள்வியில் அதிர்ச்சி தான்.
ஆம், அவளுடன் பேசியாக வேண்டும் என்று தான் நினைத்திருந்தான் ஆனால் தானே இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை எனும் போது அவளுக்கு தான் பேச நினைத்திருந்ததை கண்டு கொண்டது அதிர்ச்சி தராதா பின்ன,
“தப்பா ஏதும் கேட்டுட்டேனா மாமா. ஏன் இவ்ளோ ஷாக்? “
“நத்திங், அக்குரேட்டா நான் பேச நினைச்சேன்னு உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டவன் கரங்கள் அவளின் இடையை வருட ஆரம்பித்து விட,
சங்கடமாக நெளிந்து கொண்டே “உள்ள போலாமா?” என்றாள் சுற்றிலும் விழிகளை சுழல விட்ட படி,
“நோ நீட் பேபி” என ஆழ்ந்த குரலில் சொன்னவன் அவளின் முன்னுச்சு முடியை காதுக்கு பின்னால் ஒதுக்கி விட்டபடி “இப்போ இந்த செகண்ட் நீ யாரை மிஸ் பண்ற?” என்று கேட்டவன் குரலில் என்ன இருந்தது என்று அவளுக்கே பிரித்தறிய முடியவில்லை.
அவனின் கண்களில் சட்டென தோன்றிய தவிப்பை கண்டு கொண்டவள் “நான் யாரை மிஸ் பண்ணனும்? நீங்க பவ்யா அப்புறம் நம்ம ஃபேமிலி எல்லாம் என்ன சுத்தி கூட இருக்குறப்போ எனக்கு யாரையும் மிஸ் பண்ற பீல் எப்படி வரும்?” என்று அவனிடமே புருவ முடிச்சுடன் கேட்டாள்.
தொண்டை குழி ஏறி இறங்க அவளை ஆழ்ந்து பார்த்தவன், அவளின் மெல்லிடையில் பதிந்த தன் கரத்தை மெல்ல நகர்த்தி பெண்ணவளின் மணிவயிற்றில் பதித்தான். “மாமா, என்ன பண்றீங்க?” என்று கேட்டுக் கொண்டே அவஸ்தையுடன் நெளிந்தவள் அவனது கரத்தை மேலும் நகர விடாது பற்றிக் கொண்டாள்.
“இட்ஸ் அவர் பேபி” என்றவன் குரல் கரகரத்து ஒலிக்க,
அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
“வாட் பேபியா? … என்ன மாமா உளறிட்டு இருக்கீங்க? இப்போ எப்படி பேபி?” என்று கேட்டவள் அவனின் விழிகளிலிருந்து சட்டென வழிந்த ஒருசொட்டு கண்ணீரில் பதறிப் போனாள் பேதை.
“மாமா, என்னாச்சு?” என அவனது இரு கன்னங்களையும் தாங்கி பரிதவிப்போடு கேட்டாள்.
அவளின் ஸ்பரிசம் பட்டு என்னவோ ஓர் சூழலுக்குள் இருந்து மீண்டவன் போல சுயத்திற்கு வந்தவன் “சாரிடி” என்றவன் தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டே “வா உள்ள போலாம்” என்று அவள் கையை பற்ற, அவளோ வெடுக்கென அவன் பற்றிய கையை உதறி விட்டவள் “எதுக்காக இப்போ இப்படி நடந்துகிட்டீங்க மாமா? அழற அளவுக்கு என்னாச்சு?”
“ப்ச்… நத்திங் தியா. உள்ள வா” என்றான் நிதானமாக,
“கொஞ்சம் முதல் உள்ள போக நோ நீட்ன்னு சொன்னதா ஞாபகம்” என்றாள் அவளும் விடாது.
“இப்போ என்னடி?” என்றான் இதழ் குவித்து ஊதிக் கொண்டே,
“எதுக்காக அழுதிங்க?” என கேட்டாள் அழுத்தம் திருத்தமாக,
“என் குழந்தைக்காக தான். போதுமா?” என்று பொறுமையிழந்து சீறியவனிடம் “நமக்கு தான் குழந்தை இல்லையே” என்றாள் அவனுக்கு குறையாத சீற்றத்தோடு,
விழிகளை அழுந்த மூடித் திறந்தவன் ஆழ்ந்த பெரு மூச்சுடன் விலகி நின்றிருந்தவளை இழுத்து அணைத்து நெற்றியில் முத்தம் பதித்தவன் “உனக்கு மட்டும் தான் கனவு வருமா என்ன?” என்று கேட்டானே பார்க்கலாம்.
அத்தியாயம் – 19
அவளுக்கோ தன் காதில் வந்து வீழ்ந்த வார்த்தைகளில் உலகமே ஸ்தம்பித்து விட்டது போலும் , மின்னல் வேகத்தில் அவனின் பிடியிலிருந்து பிரிந்தவளோ ஒருவித நடுக்கத்தோடு சுவரோடு ஒன்றி நின்றிருந்தாள்.
அவளை அக்கோலத்தில் காண முடியாது “பேபி” என்றவன் குரல் கூட தழுதழுத்து ஒலிக்க,
இதயம் தொண்டைக்குழிக்குள் வந்து துடிக்க, அதிர்ச்சி தாளாமல் இறந்து விடுவோமோ என்ற பயம் கூட அவளுக்கு மனதில் வந்து போக, அப்படியே சரிந்து நிலத்தில் அமர்ந்தாள்.
விழிகளிலிருந்து கண்ணீரோ அருவியாக கொட்டியது.
“பேபி அழாதடி” என்று சொல்லிக் கொண்டே மண்டியிட்டு அமர்ந்தவன் அவளின் முகத்தை தாங்கி தன்னை பார்க்கச் செய்தான்.
ஆனால் அவள் தான் அவனை ஏறிட்டு பார்க்க கூட திராணியற்றவளாய் பார்வையை தாழ்த்திக் கொள்ள, அதுவே அவனுக்கு தான் தாளாத வலியைக் கொடுத்தது.
“தியா என்னை பாருடி . நான் வான்டட்டா மறைக்கல. இது பத்தி உன்கிட்ட பேசலாம்னு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” என்றான் தன்னை புரிய வைத்து விடும் நோக்கில்,
அவளோ மௌனமாக வெறித்த பார்வையுடன் வேறெங்கோ பார்வை பதித்திருக்க, அவளின் இந்த அநாதரவான தோற்றம் அவனை ஆட்டம் காண வைத்தது என்னவோ உண்மை தான்.
அடுத்த நொடியே தன்னை நிதானித்தவன் சுவரில் சாய்ந்து அவளருகிலமர்ந்தவன் அவளை இழுத்து தூக்கி தன் மடியில் வைத்தான்.
அவனது நொடி நேர செயலில் அவள் அதிர்ந்து விலகும் முன்னரே அவளின் மலர் வதனத்தை தாங்கி இடைவிடாது மூச்சு முட்ட முத்தம் பதித்தவன் “சாரி மா சாரி, கனவுக்கும் நிதர்சனத்துக்கும் டிப்ரன்ட் தெரியாம… ஐ ஜஸ்ட் லொஸ்ட் மை மைண்ட்” என்றவன் அவள் விழிகளை நோக்கி மன்னிப்பை யாசிக்க, “அப்போ என..எனக்கு வந்த போல உங்களுக்கும் கனவு வதுச்சா? என்னால இப்பவும் நம்ப முடியல மாமா” என்றவளின் உணர்வை புரிந்து கொண்டவன் “சில் பேபி, இட்ஸ் ஹாப்பினிங் வெரி ரேர் தியா.ஒருத்தர் பண்ற செயலை நம்ம பார்த்தாலோ இல்ல அவங்க என்ன பண்றாங்கன்னு நீ நோட் பண்ணலனாலும் கூட நமக்கே தெரியாம அது மைண்ட் ல ரெஜிஸ்டர் ஆகும். இட் மீன்ஸ் எம்பதிக் ரெஸ்பான்ஸ்” என்றவனை பார்த்து மலங்க மலங்க விழித்தவள் “சத்தியமா எனக்கு ஒன்னும் புரியல” என்றாள் பாவமாக,
அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டவனோ “இந்த குட்டி மூளைக்குள்ள கண்டதையும் திங்க் பண்ணிக்காத பேபி. இட்ஸ் ஓவர். இப்போ இந்த நொடி நானும் நீயும் மட்டும் தான். இதான் நிதர்சனம்” என்றான் ஸ்திரமாக,
“எல்லாம் ஒகே, எனக்கு கனவு வந்துச்சினு நான் சொல்லவே இல்லையே உங்களுக்கு எப்படி தெரியும்? அப்புறம் இது எல்லாம் கனவுன்னு தெரிஞ்ச பிறகு உங்க ரியாக்ஷன் என்ன? என்றவளோ விடாது ஹான், அப்போ நீங்க…” என்று அவள் அடுத்த கேள்வியை கேட்கும் முதலே “ஓஹ் மை கோட்! நிறுத்து டி, வன் பை வன் ஆஹ் கேளு”
இதழ் குவித்து ஊதிக் கொண்டே ஒரு பெரு மூச்சுடன் தொடர்ந்தான்.
“ஃபர்ஸ்ட் சைட் ஐ மீன் நான் வீட்டுக்கு ரிட்டர்ன் வந்த அந்த நாள் நீ விபீகூட என்னவோ கோபமா பேசிட்டு ஸ்லோ மோஷன் ல திரும்பி என்ன பார்த்த அந்த பார்வை ஓஹ் கோட் அன்பிலீவபல் மொமெண்ட் பேபி என்று அவன் சிலாகித்து கொண்டிருக்கும் போது அவன் மேனியில் உண்டான மெலிதான சிலிர்ப்பை உணர்ந்து கொண்டவளோ விழிகள் இரண்டும் பெரிதாக விரிய “ஹையோ!” என்ற படி வெட்கத்தில் முகத்தை தன்னவன் மார்பில் புதைத்தவள் “சோ அப்போவே என்மேல உங்களுக்கு லவ்வா?” என்று கேட்டவள் குரலில் தெரிந்த உற்சாகத்தில், அவனுக்கே அவளின் செயலில் வெட்கத்தில் முகம் சிவந்து போனது.
“எஸ், அம் மேட்லி இன் லவ் வித் யூ பேப்” என்றவன் வார்த்தைகளை கேட்டு சிணுங்கியவள் மேலும் அவன் மார்புக்குள் புதைந்து போனவள் “நான் அப்போ எவ்வளவு தவிச்சு போனேன்னு தெரியுமா உங்களுக்கு? உங்களுக்கு என் மேல பிடித்தம் இருக்குமா? இல்லனா எல்லாமே வெறும் கனவா மட்டும் போய்டுமானு எனக்குள்ள நானே கேட்டு லூசு போல சுத்திட்டு இருந்தேன். அட்லீஸ்ட் ஒரு ஹிண்ட்டாச்சும் கொடுத்திருக்கலாம்” என்று சலித்துக் கொள்ள,
“ஐ கெஸ்ட் இட் பட் நீ வெர்ஜினிட்டி டெஸ்ட் பண்ண கேட்டு வர்ற அளவுக்கு ஸ்ரெஸ் ஆகி இருப்பனு ஐ டிட் நாட் எக்ஸ்பெக்ட். ஐ ஜஸ்ட் ஷாக்ட்”
“ஷாக் ஆகுவீங்க சார், உங்களுக்கு என்ன? செம்ம என்டர்டிமெண்டா இருந்திருக்கும்” என்றவளிடம் “லைட் ஆஹ்? என்று புன்னகைத்தவன் அப்படியே நீ வெர்ஜினா இல்லனாலும் யூ ஆர் மைன் ஒன்லி. பட் சம்டைம்ஸ் ப்ரீஸ் மோட்கு போய் தப்பு தப்பா இந்த லிப்ஸ் பேசுறப்போ என அவளின் பவள செவ்விதழ்களை வருடியவன் பனிஷ் பண்ண தோணும்” என்றிட,
“வாட்? தப்பு தப்பாவா? நான் எப்போ அப்படி பேசினேன்?” எனப் புரியாது மலங்க மலங்க விழித்தவளிடம் “என்னை பார்த்தாலே ஸ்டக் ஆகி வாய்க்கு வந்ததை உளறிட்டு பைனல் ஆஹ் என்கிட்ட மாட்டிட்டு பார்க்குற அந்த பார்வை வாவ், இட்ஸ் ஸ்டன்னிங் பேபி” என்று சிலாகித்தவனை, “ஹாங், போதும் போதும் பட் எனக்கு ஒன்னு மட்டும் இல்ல நிறையவே இடிக்குதே” என்று நெற்றியை நீவிக் கொண்டே சொன்னவளை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்தவன்,
“ஒன் பை ஒன் ஆஹ் கேளு க்ளியர் பண்றேன்” என்றது தான் தாமதம். அடுத்த கணமே “ கொஸ்டின் நம்பர் ஒன், ஃபர்ஸ்ட் சீன்ல ஐ மீன் உங்க எண்ட்ரி சீன்ல உங்க தம்பி கூட கேட்டாரே லவ் பத்தி அதுக்கு சார் என்ன பதில் சொன்னீங்கன்னு ஞாபகம் இருக்கா?” என்று சற்றே முறைத்த படி அவள் கேட்க,
“ஆஃப் கோர்ஸ்,நான் யாரையும் லவ் பண்ணல வீட்ல பார்த்து கட்டி வைக்கிற பொண்ணை தான் கட்டிப்பேன்னு சொன்னேன்” என்று ஒற்றை புருவம் உயர்த்தியவனிடம் “என்னை லவ் பண்றீங்கன்னா எதுக்காக அப்படி சொல்லணும்?”
“நீ என்னையே பார்த்திட்டு இருந்தனு எனக்கு தெரியும் சோ கொஞ்சமே கொஞ்சம் உன்னை டீஸ் பண்ணலாம்னு தோணிச்சு”
“ஓஹ்ஹ் ஓகே… என இழுவையாக சொன்னவள் இது கனவுல வந்த டவுட்” எனும் போதே “டுமாரோ கன்டினியூ பண்ணலாமா?” என்றவன் நொடியில் அவளை ஏந்திக் கொண்டு எழுந்து விட,
“ஹையோ, எனக்கு டவுட் க்ளியர் பண்ணலனா தூக்கமே வராது ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கெஞ்ச,
இதழ் குவித்து ஊதிக் கொண்டே “யூ ஆர் டெம்ப்டிங் மீ பேட்லி தியா” என்றவனின் குரலில் என்ன நினைத்தாளோ ஜஸ்ட் ஒரே ஒரு டவுட் தான் லெட் மீ க்னோ தி ஆன்சர் ?” என்று கேட்டவளின் விழிகளில் தெரிந்த தவிப்பை கண்டு கொண்டவன் “ம்ம் கேளு” என்றான்.
“என்னை பெட் ல விடுங்க. எனக்கே உங்களோட ஆன்சர் என்னவா இருக்கும்னு இப்போவே உடம்பெல்லாம் புல்லரிக்குது” என்று சொன்னவளை முறைத்தவனுக்கு ஐயோடா என்று தான் இருந்தது.
அவளை கட்டிலில் கிடத்தி விட்டு அவளருகில் அமர்ந்தவன் அவளைக் கேள்வியாக நோக்க, “அப்போ உங்களுக்கு கனவுல போல நிஜத்துல கவிதை எல்லாம் எழுத வருமா என்ன?” என்று கேட்டாளே பார்க்கலாம்.
“வாட் கவிதையா?” என்று அதிர்ச்சியாக கேட்டவன் அவளின் முகம் போன போக்கில் இதழ் பிரித்து சத்தமாக சிரித்தான்.
“மாமா வேணாம் எனக்கும் கோவம் வரும்” என்றிட,
“ஓஹ் கோட், எனக்கு சுத்தமா தமிழ் எழுதவே வராது டி” என்று சொல்ல அவளுக்கோ பேரதிர்ச்சி.
“ஹேய் தியா..” என்று சிரிப்பதை நிறுத்தி விட்டு அவளின் கன்னத்தை தட்ட,
“அப்போ த…தமிழ் நல்லா பேசுறீங்களே” என மழலை போல அவள் கேட்க,
“பேசுறது வேற எழுதுறது வேற.. டச் விட்டு போச்சுடி ஒன்லி இங்கிலீஷ் ஐ க்னோ” என்று சொல்ல, அவளுக்கோ சப்பென்று இருந்தது.
“அப்போ கனவுல போல என்னை கண்ணே மணியேனு கொஞ்சி எழுத மாட்டீங்களா?” என அழுகைக்கு தயாரானவளிடம் இதற்கு மேல் அவளிடம் மறைத்து பயனில்லை என்று நினைத்தவன் குரலை செருமிய படி “தியா லிசின், நான் சொல்லப்போறதை டென்ஷன் ஆகாம கேளு. ஐ அம் ஹியர் வித் யூ” என்றவனோ “கனவுல மட்டும் தான் நான் உன்ன லவ் பண்ணேன் பட்..” என்று அவன் மேலும் தொடர்ந்து பேசுவதற்கு முன்னரே அவனின் கரத்தை தட்டி விட்டு தள்ளி அமர்ந்தவள் விழிகளில் கண்ணீர் முட்டி நின்றது.
“தியா, லிசின் டு மீ” என்று அவளை நெருங்கியவனை கண்டு கொள்ளாது அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொள்ளவும், அவளை அணைப்பதைப் போல பின்னாலிருந்து அணைத்து கொண்டான்.
அவ்வளவுதான் அவனின் இறுகிய அணைப்பில் இவ்வளவு நேரமும் கட்டுப்படுத்தி வைத்திருந்த அழகை வெடிக்க, அவனோ பதறி போனான்.
“ப்ளீஸ் லீவ் மீ” என்று அழுகையோடு சீறினாள் அவள்.
அதையெல்லாம் அவன் கண்டு கொள்வானா என்ன?
அவளின் விலகல் அவனை வதைக்க, ஓர் முடிவை எடுத்தவனாய் இழுத்து பிடித்த பொறுமையுடன் “என்ன தான்டி உனக்கு பிரச்சனை? எஸ், அந்த கனவுக்கு பிறகு தான் உன்மேல லவ் வந்தது. நீ எனக்கு வேணும். எனக்கு மட்டும்தான்னு எனக்குள்ள ஒரு வெறி. சோ உனக்காக… உனக்காக மட்டும் தான் நான் யூ. எஸ் ல இருந்து ரிட்டர்ன் வந்தேன்” என்று சொன்னவன் அவளை தன்னை நோக்கி இழுத்து அணைத்திருந்தான்.
அத்தியாயம் – 20
தன்னவனின் மார்புக்குள் புதைந்து விடுபவள் போல ஒன்றிக் கொண்டவளின் அழுகை மேலும் மேலும் அதிகரிக்க, “அழாத பேபி ப்ளீஸ்” என்று கெஞ்சினான் அவளவன்.
“எப்படி மாமா அழாம இருக்க முடியும்? என்று கேட்டவளின் குரலில் அப்பட்டமான நடுக்கம்.
“ஹேய்! தியா நான் உன்ன தான் டி லவ் பண்றேன். என் லவ் உனக்கு மட்டும் தான்” என அழுத்தம் திருத்தமாக சொன்னவன் அவளின் நெற்றியில் முத்தம் பதித்தான்.
“எனக்கு இங்க என்னவோ போல வலிக்குது மாமா” என்று தன் ஏறி இறங்கிய தொண்டைக் குழியை சுட்டிக் காட்டி இதழ்களை பிதுக்கினாள் பேதையவள்.
அவளின் அவஸ்தையை பார்க்க முடியாது “தியா இப்போ அழறதை நிறுத்த போறியா இல்லையா?” என்று சற்றே குரல் உயர்த்தியவனை ஓர் அதிர்வுடன் ஏறிட்டவள் “ஒரு …ஒருவேளை இந்த கனவு வரலைனா என்…என்னை நீங்க லவ் பண்ணிருக்க மாட்டிங்கல” என்று திணறி வார்த்தைகளைக் கோர்த்தவள் மீண்டும் கதறி அழ ஆரம்பித்து விட,
அவளின் கேள்வியில் அதிர்ந்து போனவனுக்கு யாரோ தன் இதயத்தை உருவி எடுத்து கசக்கி பிழிவதை போல நெஞ்சம் முழுதும் அதீத வலி பரவியது.
“கனவு வர்லனா என்ன? எனி ஹவ் உன்ன தான் மேரேஜ் பண்ணியிருப்பேன்” என்றவனை வெறித்து பார்த்தவளோ “கனவு வந்தனால தானே நான் வேணும்னு வந்தீங்க” என்று விம்மலுடன் அவள் கூறவும், “ஷட் அப் தியா” என்று தன் பொறுமை மொத்தமும் இழந்து சீறி இருந்தான்.
அவனும் என்ன தான் செய்வான்.
அவள் வேண்டும். அவள் அருகாமை வேண்டும் என காதல் கொண்டு அவளைக் கரம் பிடித்தவனுக்கு அழுதழுது அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமாக்கிக் கொண்டிருந்தாள்.
இதழ் கடித்து அழுகையை அடக்கிக் கொண்டவள், அவனின் முகத்தை பார்க்க பிடிக்காது மீண்டும் முதுகு காட்டி திரும்பிப் படுக்க முயன்றவளை வலுக்கட்டாயமாக தன் புறம் திருப்பி தன்னைப் பார்க்கச் செய்தவன் “என்னடி இப்போ நான் செத்துடட்டுமா?” என்று கேட்டவனுக்கு அவளின் நொடிநேர விலகல் கூட ரணமாக வலித்தது.
“என்ன பேசுறீங்க மாமா?” என்றவள் குரல் ஈனமாக ஒலிக்க, அவளின் குரலே அவனை உடைத்து நொறுக்கப் போதுமானதாக இருந்தது.
“ப்ளீஸ் டோண்ட் ஹர்ட் மீ தியா. என்னால உன்ன போல இவ்ளோ டீப்பா எல்லாம் யோசிக்க முடியாது. இப்போ நம்ம வாழ்ந்திட்டு இருக்க வாழ்க்கை தான் நிஜம்” என்றவனின் குரலில் தவிப்பு அப்பட்டமாக வெளிப்பட்டது.
அவனின் வார்த்தைகளில் சற்றே தெளிந்தவள் அழுகை மட்டுப்பட “சாரி” என்றாள் மூக்கை உறிஞ்சிய படி,
“ராட்சசி…” என இதழ்ககளுக்குள் முணுமுத்தவனை செல்லமாக முறைத்தவள் “இன்னொரு டவுட் என்று கேட்க முனைந்தவளின் செவ்விதழ்கள் அவன் வசமாகியிருக்க, அவளோ அவனுடைய பின்னந் தலையில் தன கரத்தை நுழைத்து சிகையை இருக்கமாகப் பற்றிப் பிடித்தவள் அவனுக்கு இணையாக முத்தமிட, அவனுக்கோ சுர்ரென்று காதல் பித்து தலைக்கேறியது.
இருவரின் காதலும் காட்டாற்று வெள்ளம் போல உடைப்பெடுக்க, அங்கே அழகான இல்லறம் மலர்ந்தது.
அவளின் மனநிலை அறிந்து தலையை வருடியவனின் வருடலும், இறுகிய அணைப்பும் அவனின் எல்லையில்லா காதலை உணர்த்திட, அவளோ அவனின் மார்புக்கூட்டில் தலை சாய்த்து நிம்மதியாக உறங்கிப் போனாள்.
எபிலாக்
இரண்டு வாரங்களுக்கு பிறகு…..
சுவிட்சர்லாந்து, இன்டர்லேக்கன்.
அங்கு நிலவிக் கொண்டிருந்த தட்பவெட்ப காலநிலைக்கும் அதற்கும் மனதுக்கு இதமாக இருக்க “செம்ம கிளைமட்ல” என்று சொன்ன படி தன்னவளை ஓரிடத்திற்கு கூட்டி வந்திருந்தான் ஜெய் ஆனந்த்.
“மாமா, இப்போவாவது கண்ணை திறந்து விடுங்க பிளீஸ்” என்றாள்.
ஆம், அவளுக்கு மிகவும் பிடித்த இடத்திற்கு அதுவும் அவளின் விழிகளை மூடியே கூட்டி வந்திருந்தான்.
தன்னவன் தனக்காக என்னவோ செய்யப் போகின்றான் என உள்ளே ஆர்வம் எழுந்தாலும், விழிகளை மூடியிருந்த மெல்லிய திரையினை எப்போது விலக்கி விடுவான்? என்று காத்திருந்தவளுக்கு நேரம் போகப் போக அவனோடு தான் வந்திருக்கும் இடத்தை காண உள்ளம் முழுதும் பேரவா கொண்டது.
“லெட்ஸ் பீல் டுகெதர் பேபி” என மெல்ல குனிந்து அவளின் காதில் கிசுகிசுத்தவன் அவளின் விழிகளை மூடிய மெல்லிய திரையை மெதுவாக கழட்டி விட்டான்.
அவன் கழட்டி விட்டதும் தான் மேனி உணர்ந்த அவ்விடத்தில் நிலவிய காலநிலையை தன் விழிகளில் பார்த்தாள்.
சுற்றிலும் விழிகளை சுழல விட்டவளுக்கோ ஆனந்த அதிர்ச்சியாக தான் இருந்தது.
ஆம், அவளுக்கு பிடித்த இடம் தான் என்றாலும் காதல் ஜோடிகளாக வானத்தில் பறந்து கொண்டிருபவர்களை பார்ப்பதற்கு ஆசையாக இருந்த அடுத்த நொடியே சட்டென என்னவோ ஞாபகம் வந்தவளாய் கீழே பார்த்தவளுக்கோ தலையை சுற்றிக் கொண்டு வந்தது.
ஆம் பின்ன கிட்டத்தட்ட தரையிலிருந்து 13000 மீட்டர் உயரத்தில் நின்றுக் கொண்டு இருந்தால் தலையை சுற்றாமல் இருந்தால் தான் அதிசயம்.
“ஆத்தி” என்று மார்பில் கையை வைத்து கொண்டவளோ “அழகா இருக்கேன்னு போட்டோல பார்த்து ஆசை பட்டிருக்கேன் பட் நேர்ல செம்ம டேஞ்சரா இருக்கு” என்று சொன்னவளோ பக்கவாட்டாக திரும்பி “சோ பார்த்தாச்சு கிளம்பலாமா?” என்றாள் கேள்வியாக,
தலை கிறுகிறுக்க, மேனியோ வியர்க்க ஆரம்பித்து விட்டது. “மாமா எனக்கு பயமா இருக்கு வேண்டாம்” என்றாள் கெஞ்சுதலாக…
“உனக்கு பிடிக்கும் தானே ஜஸ்ட் ட்ரை தான்” என்றான் பறப்பதற்கு தயாராக வைத்திருந்த உடையை சரி செய்து கொண்டே, அவளை நெருங்கி ஆழ்ந்து பார்த்துக் கொண்டே அவளுக்கும் தனக்குமான உடையை ஆடையோடு பொறுத்த ஆரம்பித்தும் விட்டான்.
அனைவரும் நின்றிருக்க அவளுக்கோ அவனை அவமதித்து விட்டு செல்ல முடியாத நிலை.
வேறுவழி இல்லை. பேசி பார்க்கலாம் என நினைத்தவள் ஓர் ஆழ்ந்த பெருமூச்சுடன் “ஹையோ… மாமா லிசின், எனக்கு கண்ணால பார்க்க தான் பிடிக்கும் பட் ட்ரை பண்ற அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை வேண்டாம் பிளீஸ்” என்றவளின் பிறை நெற்றியில் அழுத்தமாக முத்தம் பதித்தவன் அடுத்த கணமே, அவளின் இடையில் தன் கரத்தை வைத்து தன்னோடு இறுக அணைத்து கொண்டவன் அவ் உயரமான மலையிலிருந்து கீழே குதித்திருந்தான் ஜெய் ஆனந்த்.
ஏதாவது பேசி அவன் முடிவை மாற்றிக் விடலாம் என்று நினைத்திருந்தவள் இவன் அதிரடியாக குதிப்பான் என்று அவளே எதிர் பார்க்கவில்லை அல்லவா?
இருவரையும் பிணைத்திருந்த சாதாரண கயிற்றை நம்பி குதித்து விட்டானே!
விழிகளை இறுக மூடிக் கொண்டவள் அதிர்ச்சி தாளாமல் “ஐ ஹேட் யூயூயூயூ” என ஹை டெசிபலில் அலறியவள் குரலோ, அம் மலை முகடுகளில் பட்டு எதிரொலித்தது.
அவனுக்கோ, சிரிப்பை அடக்க முடியவில்லை. அவளை தன்னோடு இறுக அணைத்துக் கொண்டவன் “ஃபைனலி என்னை ஹேட் பண்ணிட்ட மை டியர் பொண்டாட்டி” என்று சொல்லிக் கொண்டவன் அவளின் உடல் நடுங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து அந்நிலையில் இருந்த படியே, மறு கரத்தால் அவளின் கன்னத்தை பற்றி தன்னை பார்க்க செய்தவன் அவளின் இதழ்களை ஆழமாகவும் அழுத்தமாகவும் பாரபட்சம் இன்றி சுவைக்க ஆரம்பித்திருக்க, ஒரு கட்டத்தில் சட்டென விலகியவன் “ஐ லவ் யூயூயூ சோ மச் தியா” என்று சத்தமாக இதழ் பிரித்து கத்தியவன் குரலும் எதிரொலிக்க, பெண்ணவள் மேனியோ சிலிர்த்துப் போனது.
அந்தரத்தில் அதுவும் காற்றில் மிதந்த படி தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இப்படி அவன் காதலை வெளிப்பதுத்துவான் என்று கிஞ்சித்தும் நினையாதவள், அவனின் இதழ்களில் மாறாமல் இருந்த புன்னகையை கண்டு கொண்டவள் விழிகளில் கண்ணீர் வழிய, அவளும் இதழ் பிரித்து “லவ் யூ மாமா” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்,
இதழ் கடித்து தன் சிரிப்பை அடக்கிக் கொண்டவன் “வாட்?” என்றான்.
“லவ் யூ”. என்றாள் மீண்டும்,
“கேட்கல டி என்ன சொன்ன?” என்று மீண்டும் அவன் கேட்க,
‘கேடி’ என உள்ளுக்குள் திட்டியவள் பதட்டம் எங்கே போனதென்று அவளுக்கே தெரியவில்லை.
அவனை முறைத்து விட்டு விழிகளை அழுந்த மூடித் திறந்தவள் “ஐ லவ் யூயூயூயூயூ ஜெய் மாமாஹ்ஹ்ஹ்ஹ்” என்று உரக்க கத்தியவள் இதழ்களை மீண்டும் சிறை செய்திருந்தான் அவளவன்.
அவன் அவளை பேச விடாது சிறை செய்தாலும், அவனது செவியில் அவளின் “ஐ லவ் யூ ஜெய் மாமா” என்ற வார்த்தைகள் அடுத்தடுத்து எதிரோலித்துக் கொண்டே இருந்தது.