
Tag:
romantic novels
அத்தியாயம் : 06
வீரேந்திர ப்ரசாத் ஸ்டேஷனுக்கு சென்று, அங்கிருந்த ஒரு கான்ஸ்டபிளை அழைத்து, “இங்க பாருங்க இந்த ஸ்கூட்டி யாரோடதுனு விசாரிச்சி உடனே கொடுத்துட்டு வாங்க…. அந்த வண்டியில பாருங்க ஆர்சி புக் ஏதும் இருக்கும் இருந்தா அதுல அட்ரஸ் போட்டு இருப்பாங்க அத உரியவங்ககிட்ட சேர்த்துட்டு வந்துடுங்க….” என்று ஸ்கூட்டி சாவியை அவரிடம் கொடுத்தான்.
“சரிங்க சார் நான் கொடுத்துடறேன்… சார் அப்புறம் உள்ள….” என்று இழுத்தார்.
“அத நான் பாத்துக்குறேன்… நீங்க போயிட்டு வாங்க…” என்று அவரை அனுப்பி விட்டு உள்ளே சென்றான் வீரா.
அங்கே காலுக்கு மேல் கால் போட்டபடி வெள்ளை வேஷ்டி சட்டையில் அமர்ந்திருந்தார் கன்னியப்பன். வீராவைப் பார்த்தும், “என்னை சிப்பி சார் என் பையன கோர்ட்ல நிறுத்தனும்னு ரொம்ப ஆசைப்பட்டீங்க போல இருக்கு…. என்ன பண்றது பாவம் நீங்க… உங்க ஆசை நிறைவேறவே இல்ல…. எப்படி என் பையனை வெளியில் கொண்டு வந்தேன் பாத்தியா…. அந்த ஐஜி உன் அப்பனாமே நேத்து தான் எனக்கு தெரிய வந்துச்சு…. அப்பனும் பையனும் சேர்ந்து டபுள் கேமா ஆடுறீங்க ஏன்கிட்ட…? என்னோட விளையாட்டு எப்படி இருக்கு….?” என்று கன்னியப்பன் பேசிக் கொண்டே சென்றார்.
“ஹலோ நீ வந்த விஷயத்த மட்டும் சொல்லு…. இந்த ஆட்டம் பாட்டமெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்…”
கன்னியப்பன் அவரின் லாயரிடம் கண்ணைக் காட்ட அவர் ஜாமினை வீராவிடம் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த வீரா, “என்ன உன் பையனுக்கு நெஞ்சுவலின்னு போட்டு இருக்கு…. பாத்து பத்திரமா இருக்க சொல்லு உன் பையன… நெஞ்சு வலி அடிக்கடி வந்துடும்…. அப்புறம் ஒரேயடியா அல்ப்பாய்ஸ்ல டிக்கெட் வாங்கிட்டு போக வேண்டியதுதான்…..” என்றான்.
“என் பையன டிக்கெட் போடுறளவுக்கு நீ பெரிய ஆளா…. ஏதோ சொன்ன என் பையன ஜெயில்ல அடைப்பேன் அப்படின்னு…. உன்னால அதைப் பண்ண முடிஞ்சுதா இல்லல… அதுதான் உன்னோட இந்த காக்கிச் சட்டைக்கும் என்னோட இந்த வெள்ளை சட்டைக்கும் உள்ள வித்தியாசம்….”
“என்னடா பெரிய வெள்ளை சட்டை காக்கிச் சட்டை…. இந்த காக்கிச் சட்டை நினைச்சா உன் வெள்ளை சட்டையை அழுக்காகவும் முடியும்… அதே வெள்ளையாகவே வச்சிருக்கவும் முடியும்… நேர்மை இல்லாத உன்னாலதான்டா மக்களுக்கு அரசியல் மேலேயும் அரசியல்வாதிங்க மேலயும் நம்பிக்கை இல்லாம போயிடுச்சு… நீ யாரு உன் பையன் யாருனு இந்த உலகத்துக்கு நிரூபிக்கல நான் வீரேந்திர ப்ரசாத் இல்லடா….”
“ஓ இந்த கன்னியப்பன் கிட்டேயே சவாலா தம்பி…. எனக்கு சவால்னா ரொம்ப பிடிக்கும்…. உன்னோட இந்த சவால நான் ஏத்துக்குறேன்…. முடிஞ்சா எப்படிள முடிஞ்சா நான் யாரு…? என்ன பத்தின விஷயங்களை இந்த மக்களுக்கு சொல்லு பாக்கலாம்… அவங்க இதை நம்பவே மாட்டாங்க…. அதுக்கு முன்னாடி நீ அதை எல்லாம் கண்டுபிடிக்கிறதுக்குள்ள என்ன வேணாலும் நடக்கலாம்….”
“அப்பிடின்ற ஆனா அதையும் பாத்திடலாம்….” என்றான் வீரா. பின்னர் அங்கிருந்து தனது ஆட்களை அழைத்துக் கொண்டு சென்று விட்டார் கன்னியப்பன்.
வீரா சொன்ன மாதிரி அந்த ஸ்கூட்டியை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நினைத்த கான்ஸ்டபிள், ஸ்கூட்டியில் இருந்த ஆர்சி புக்கை எடுத்துப் பார்த்தார். அதில் அட்ரஸ் இருக்க, ‘நல்லவேளை ஆர்சி புக் இருந்துச்சு… இதுல இருக்கிற அட்ரஸ்ல ஸ்கூட்டியை கொண்டு குடுத்துட்டு வந்துடலாம்….’ என்று நினைத்துக் கொண்டு அந்த ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு ஸ்டேஷனில் இருந்து சென்றார்.
சுதர்ஷினியின் வீட்டின் முன்னால் சென்று ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்று சாவியை கொடுக்கலாம் என்று நினைக்கும் போது. வீரேந்திர பிரசாத்திடமிருந்து வாக்கிடாக்கி மூலம் அழைப்பு வந்தது.
“வெளியில இருக்கிற எல்லோரும் சீக்கிரமா ஸ்டேஷனுக்கு வாங்க வெரி அர்ஜென்ட்…” என்று சொன்னான். இதைக் கேட்ட கான்ஸ்டபிள், ‘சரி வீட்டுக்குள்ள போய் கீய கொடுத்து வர லேட்டாயிடும்…. பேசாம இங்க வச்சுட்டு போகலாம்…. அவங்க வரும்போது எடுத்துக்காட்டும்…’ என்றவர், ஸ்கூட்டியை அங்கேயே அப்படியே வைத்துவிட்டு அங்கிருந்த ஆட்டோ ஒன்றைப் பிடித்துச் சென்று விட்டார்.
சரவணன் குளித்துவிட்டு வந்ததும், “அப்பா இவ்வளவு நேரமா… சீக்கிரமா வாங்க அந்த போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணலாம்…. எனக்கு அவனை ரொம்ப நல்லா ஞாபகம் இருக்கு…. எங்க பாத்தாலும் எப்போ பாத்தாலும் அவனை கரெக்டா கண்டு பிடிச்சிடுவேன்….” என்று தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. இருக்காதா பின்ன எந்த ஸ்கூட்டியை காணவில்லை என்று ஸ்டேஷனுக்கு கம்பளைண்ட் பண்ணுவதற்கு தந்தையை அழைத்துக் கொண்டு செல்ல வந்தாளோ அந்த ஸ்கூட்டி அவர்கள் வீட்டு கேட்டின் முன்னால் நின்றது. உடனே தந்தையைப் பிடித்திருந்த கையை விட்டவள், ஸ்கூட்டியிடம் சென்றாள். அதை தொட்டுப் பார்த்தவள், பின்னர் நன்றாக சுற்றி வந்து பார்த்தாள் ஏதாவது உடைந்திருக்கா என்று.
எந்தவித சேதாரமும் இன்றி அவள் கொண்டு செல்லும் போது எப்படி இருந்ததோ அப்படியே திரும்பி வந்திருந்தது.
“அப்பா ஸ்கூட்டி கிடைச்சிடுச்சு…. நல்ல வேளைப்பா போலீஸ் ஸ்டேஷனுக்கு போகல….” என்றவள் தன் தாயை அழைத்தாள்.
“ஏய் எதுக்குடி இப்ப வெளியிலிருந்து இந்த கத்து கத்துற…? ரோட்ல போற வரவங்க எல்லாம் இங்க நின்னு வேடிக்கை பாக்கவா….?” என்றவாறு வெளியே வந்தவர், அங்கே ஸ்கூட்டியை பார்த்து, “நீ என்ன சொன்ன சுதர்… ஸ்கூட்டியை யாரோ திருடிட்டு போயிட்டதாதானே சொன்ன… ஆனா ஸ்கூட்டி இங்க நம்ம வீட்டு வாசல்ல நிக்குது….”
“ஆமாம்மா ஸ்கூட்டி எங்கிட்ட இருந்து புடுங்கிட்டு போனான்…. ஆனா இப்போ இங்க இப்படி வந்துச்சுன்னு தான் எனக்கு தெரியல….” என்றாள்.
அதற்கு சரவணன், “யாரும் அவசரத்துக்கு எடுத்துட்டு போய் இருக்கலாம் இல்ல மா…. உன்னோட ஆர்சி புக் இல்லன்னா லைசன்ஸ் ல இருக்கிற அட்ரஸ பார்த்து கொண்டு வச்சுட்டு போயிருக்கலாம்…. எப்படி இருந்த என்ன ஸ்கூட்டி கிடைச்சிடுச்சு இல்ல…”
“அப்பா அவசரம்னா என்கிட்ட கேட்டு வாங்க வேண்டியது தானே கேக்காம என்னைத் தள்ளி விட்டுட்டு வேற எடுத்துட்டு போனான்… அவனை எங்கேயாவது பார்த்தேன் தொலைச்சிடுவேன் தொலைச்சிட்டு…”
“சுதர் வீணா எந்த பிரச்சினைக்கெல்லாம் போகாத சுதர்… ஆமா இப்ப நீ காலேஜ் போறியா இல்லயா… என்ன பண்ணலாம்னு இருக்க….?”
“ஐயோ அம்மா அத மறந்தே போயிட்டேன்…. ப்ரின்சிப்பால் சாருக்கு நான் இன்பார்ம் கூட பண்ணல…. இருங்க நான் போய் மொதல்ல எங்க ப்ரின்சிப்பாலுக்கு கால் பண்ணிட்டு வரேன்….” என்று உள்ளே ஓடினாள்.
சிரித்துக் கொண்ட சரவணனைப் பார்த்த சுமதி, “ஏங்க நான் சொன்ன விஷயம் என்னாச்சு… தரகர்கிட்ட பேசினீங்களா….?”
“ம்ம்ம் பேசி இருக்கேன் சுமதி நல்ல சம்பந்தம் ஏதாவது வந்தா சொல்றேன்னு சொல்லி இருக்காரு….”
“சரிங்க எதுக்கும் ரெண்டு நாளைக்கு ஒரு தடவை அவருக்கு கால் பண்ணி பாருங்க….”
“நான் பாத்துக்குறேன் மா…” என்றார். இருவரும் உள்ளே வந்தார்கள். இங்கே போனில் பேசிக் கொண்டிருந்தாள் சுதர்ஷினி.
“சார் நெஜமா சார்…. காலைல நான் காலேஜ் வரும்போது ஸ்கூட்டிய ஒருத்தன் திருடிட்டு போயிட்டான்… இப்பதான் ஸ்கூட்டி கிடைச்சது… சார் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் லீவ் கொடுங்க சார் ப்ளீஸ்….”
மறுபக்கம் இருந்த ப்ரின்சிப்பால், “நேத்து தான் வந்து ஜாயின் பண்ணீங்க இன்னைக்கு லீவ் கேக்குறீங்க…?”
“சார் சார் ப்ளீஸ் சார்….”
“சரி இன்னைக்கு ஒரு நாள் மட்டும் உங்களுக்கு லீவு குடுக்கிறன்…. இதுக்கு அப்புறம் இப்படி எல்லாம் லீவ் எடுக்க கூடாது என்ன புரிஞ்சுதா….”
“நல்லாவே புரிஞ்சது சார் ரொம்ப நன்றி…”
“சரி சரி நான் போன வைக்கிறேன் நாளைக்கு வேலைக்கு வந்துடுங்க…” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார் ப்ரின்சிப்பால்.
‘இந்த வீணாப்போன ப்ரின்சிப்பால்கிட்ட இப்படி கெஞ்ச வச்ச அவனுக்கு இருக்கு… என்னைக்காவது ஒருநாள் கையில சிக்குவல அப்போ பாத்துக்கிறன் உன்னை…’ என மனசுக்குள் சபதம் போட்டுக் கொண்டாள்.
சாப்பாட்டு மேசையில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் ஐஜி விநாயக். அவருக்கு சாப்பாட்டை பரிமாறியபடி அருகில் நின்று கொண்டிருந்தார் சுபத்ரா.
“ஏங்க நம்ம வீராக்கு எப்பங்க கல்யாணம் பண்ணி வைக்கிறது….?”
“சுபா என்கிட்ட கேட்டா நான் என்னமா சொல்றது….”
“நீங்க வீராக்கிட்ட பேசலாம்ல இதைப் பத்தி…”
“நீ இப்படி சொன்னனுதான் நான் அன்னைக்கி அவன்கிட்ட கேட்டேன் அவன் என்ன சொன்னான்னு தெரியும்ல…. இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருக்கான்…”
“ஏங்க அவன் அப்படித்தான் சொல்லுவான்… அதுக்காக நம்ம அப்படியே விட்டுட முடியுமா….? நமக்குத் தான் வீரா ஒத்த புள்ளையா போயிட்டான்… பேரன் பேத்தி பாக்கணும்னு எனக்கு ஆசையா இருக்குங்க…. ஏன் உங்களுக்கு மட்டும் அந்த ஆசை இல்லையா என்ன….?”
“அது எப்படிமா இல்லாம இருக்கும்…. எனக்கும் நம்ம பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைதான் எங்க அவன்தான் அந்த பேச்சு எடுத்தாலே கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருக்குறானே என்ன பண்றது….?”
“என்ன பண்றதுன்னா…. ஏங்க நீங்க ஐஜி தானே நீங்க சொன்னா வீரா கேட்கணும்ல்ல….”
“சுபா நான் ஐஜிதான் ஆனா அது போலீஸ் டிபார்ட்மெண்ட்ல…. வீட்ல நான் ஐஜி இல்ல அவனுக்கு அப்பா… நீ நினைக்கிற ஐஜியாலயே அவனை கண்ட்ரோல் பண்ண முடியாது….”
“இங்க பாருங்க நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது…. நம்ம வீராக்கு சீக்கிரமாவே கல்யாணம் பண்ணி வைக்கணும்….. அத நீங்க ஐஜியா இருந்து பண்ணாலும் சரிதான் இல்ல வீராவுக்கு அப்பாவா இருந்து பண்ணாலும் சரிதான்…. எனக்கு வீராவுக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைக்கணும் அவ்வளவுதான்….” என்றவர், விநாயக் கைகழுவிய தட்டை எடுத்துக்கொண்டு சமையலறைக்குச் சென்றார்.
‘இது என்னடா ஐஜிக்கு வந்த சோதனை….?’ என்று தலையில் அடித்துக் கொண்டவர், “சுபா டைமாச்சு என்ன பண்ற சீக்கிரமா வா….”
“இருங்க வந்துடுறேன்….” என்றவர் கையை கழுவிட்டு வெளியே வந்தார். அவர் நெற்றியில் ஒரு முத்தத்தை வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார் விநாயக். சுபத்ராவும் அவருடன் வாசல் வரை சென்று அவரை வழி அனுப்பி வைத்து விட்டு மீதி இருக்கும் வேலையைப் பார்க்க உள்ளே சென்றுவிட்டார்.
ஸ்டேஷனில் இருந்த எல்லோரையும் ஒன்றிணைத்த வீரா, பேச ஆரம்பித்தான். வீரேந்திர ப்ரசாதின் அருகே நின்றிருந்தான் பரத்.
“நான் உங்க எல்லாரையும் எதுக்கு இப்ப அவசரமா இங்க கூப்பிட்டுருக்கேன்னு உங்களுக்குத் தெரியுமா….? நம்மளோட கண்ட்ரோல்ல இருக்கிற அந்த காட்டுப் பகுதியில கள்ளச்சாராயம் காச்சுறதா இன்ஃபார்ம் வந்திருக்கு… அது மட்டும் இல்ல அந்த கள்ளச்சாராயத்தை குடிச்சி நிறையப் பேருக்கு உடம்பு சரியில்லாம போயிருக்கு… அது மட்டும் இல்ல அஞ்சு பேரு அந்த சாராயத்தை குடிச்சு இறந்திருக்காங்க…. அதனால நாம அந்த இடத்தை கண்டுபிடிக்கணும்…. அதுக்காக தான் இந்த அவசரமான மீட்டிங் இன்னைக்கே இப்பவே கிளம்புறோம்….” என்றான். உடனே பரத்,”போலாம் வீரா…. இந்த கள்ளச் சாராயத்தால இன்னும் பல பேரோட உயிர் போகாம இருக்கணும்னா அதை உடனே கண்டுபிடிச்சேயாகணும்….”
“கண்டிப்பா பரத் கிளம்பலாமா…. கான்ஸ்டபில்ஸ் நீங்க எல்லாரும் ரெடியா…?” என்றான்.
எல்லோரும் ஒருமித்த குரலில் யெஸ் சார்…” என்றனர்.
உடனே வீரா, “சரி நம்ம இந்த ஆபரேஷனை நல்லபடியா முடிக்கிறோம்…” என்றவர்கள் வாகனங்களில் ஏறி அந்த காட்டை நோக்கி பயணித்தார்கள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
வாழ்வு : 37
தீஷிதனின் வன்கரம் சம்யுக்தாவின் மெல்லிடையை பற்ற அவளின் உடல் சிலிர்த்தது. அதை உணர்ந்த தீஷிதன் புன்னகையுடன் அவளை மேலும் நெருங்க, அவளின் கரங்களோ அவனின் தலையை துடைப்பதை நிறுத்தின. மெல்ல மெல்ல அவளை தன் அணைப்பினுள் கொண்டு வந்த தீக்ஷிதனின் ஒரு கரம் அவளின் இடையை இறுக்க, மறு கரம் அவள் தலையின் பின்பக்கம் பிடித்தது. அவளது கழுத்தில் புதைந்து வாசம் பிடிக்க, சம்யுக்தாவின் கைகளில் இருந்த டவல் கீழே விழுந்தது. அவள் கரமோ அவனை அணைத்து. அவள் கரம் தன்னை அணைத்தும் குறுநகை பூத்த தீஷிதன் அவளை மெல்ல தனது கைகளில் ஏந்திக் கொண்டு அறைக்குள் வந்து பெட்டில் விட்டான்.
தீஷிதன் பெட்டில் அவளை விட்டதும்தான் சம்யுக்தாவிற்கு நடப்பது புரிய அவனைப் பார்த்தாள். அவள் அருகே குனிந்து அவளை அணைத்துக் கொண்டு, அருகில் படுத்தவன் அவள் முகம் பார்த்தான்.
“யுக்தா…”
“ம்ம்ம்ம்”
“யுக்தா, உன்னை இப்படி பக்கத்துல வச்சிட்டு என்னால அமைதியா இருக்க முடியலடி.. யுக்தா உன்னை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தமாட்டேன்.. உனக்கு சம்மதமா யுக்தா?” என்று ஒரு கண்ணில் காதலும் மறு கண்ணில் தாபத்தையும் வைத்து கேட்பவனிடம் மறுப்பு ஏதும் கூறாமல், அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள் சம்யுக்தா.
சம்யுக்தாவின் சம்மதம் கிடைத்ததும் அவள் மீது படர்ந்தான் தீஷிதன். சம்யுக்தா சம்மதம் சொன்னாலும் அவளை காயப்படுத்தி விடக் கூடாது என்று கண்ணாடி போல அவளை கையாண்டான் தீஷிதன். அவனது தீண்டலில் புதிதாக உயிர் பெற்றாள் மங்கையவள். மனதால் இணைந்த இருவரும் உடலாலும் ஒன்றிணைந்தனர்.
கூடல் முடிந்ததும் சம்யுக்தாவை அணைத்துக் கொண்டு அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டவனின் கண்களில் இருந்து வந்த கண்ணீர் சம்யுக்தாவை தொட்டதும் பதறி அவனின் முகத்தை பார்த்தாள் சம்யுக்தா. ஆனால் அவனோ அவனின் முகத்தை அவளிடம் காட்ட விரும்பவில்லை.
“என்னங்க என்னாச்சு?” என்றவள் அவனின் முகத்தை பார்க்க முயன்றாள்.
“ஒண்ணுமில்லை யுக்தா, உன்னோட காதல், நம்மளோட வாழ்க்கையை ஆரம்பிச்சதுனு மனசுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அதுதான் கண்ல ஆனந்தக் கண்ணீர்..” என்றவன் அவளைப் பார்க்க, அவனின் முகத்தை தனது கரங்களால் ஏந்தியவள், அவள் முகத்தோடு இணைத்து, “உங்களோட எதிர்பார்ப்பில்லா இந்த அன்புக்கு என்ன வேணும்னாலும் பண்ணலாம்ங்க.”
“யுக்தா நான் ஒண்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டல?”
“கேளுங்க..”
“யுக்தா நான் உன்னை கஷ்டப்படுத்திட்டனா?”
“இல்லைங்க… என்னை எப்பவும் உங்களால கஷ்டப்படுத்த முடியாதுங்க.. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்…” என்றவளை இறுக அணைத்து முத்த மழை பொழிந்தான் தீஷிதன். பின்னர் அவளை தனது மார்பின் மீது போட்டு, தலையை வருடிக் கொடுக்க, சிறிது நேரத்தில் கண்ணயர்ந்தாள் சம்யுக்தா.
தூங்கும் தன்னவளை இரசித்துக் கொண்டு இருந்தவன் அவள் உச்சியில் முத்தம் வைத்து, தன்னிடம் இருந்து அவளை பிரித்து பெட்டில் படுக்க வைத்து பெட்ஷீட்டால் போர்த்தி விட்டு, குளியலறைக்குச் சென்று குளித்துவிட்டு, சமையல் அறைக்குள் சென்றான்.
………………………………………………….
பிரகாஷ் அறையில் இருந்து நாளை ஆரம்பிக்கப் போகும் ப்ரொஜெக்ட்டுக்கான வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அப்போது மேடிட்ட வயிற்றுடன் மெல்ல நடந்து வந்தாள் சீமா.
“பிரகாஷ்..”
“சொல்லு சீமா.”
“எனக்கு எப்போங்க வளைகாப்பு பண்ணுற?”
“இப்போ வளைகாப்புக்கு என்ன அவசர சீமா.. உனக்கு இப்பதானே அஞ்சு மாசம், வளைகாப்பு ஒன்பதாம் மாசம் தானே பண்ணுவாங்க..”
“ஆமா, ஆனால் அஞ்சு மாசத்துலயும் பண்ணுவாங்க.. எனக்கு இப்பவே பண்ணணும்னு ஆசையா இருக்கு பிரகாஷ்..”
“சரி நான் நாளைக்கு அம்மாகிட்ட இதைப் பற்றி பேசுறன்..”
“சரி.. நீங்க இப்போ பிஸியா? இல்லைனா ஒரு நைட் ட்ரைவ் போலாமா?”
“அதுக்கென்ன வா போகலாம்”
“உங்களுக்கு வேலை இருக்கே…”
“அதை நான் அப்புறமா பண்ணிக்கிறன் சீமா.. உன்கூட சரியா டைம் ஸ்பென்ட் பண்ணவும் முடியுதுல.. வா போகலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த பார்க்கிற்கு அழைத்துச் சென்றான்.
………………………………………………….
தீஷிதன் சமையல் அறையில் இருந்து நைட் இருவரும் சாப்பிடுவதற்காக தோசை ஊற்றிக் கொண்டு நின்றான். அப்போது அவனின் போன் சத்தமிட எடுத்துப் பார்க்க, துர்கா அழைத்திருந்தார்.
“சொல்லுங்க அத்தை.. என்ன பண்றீங்க? அங்க எல்லோரும் எப்படி இருக்கிறாங்க?”
“தீஷி இங்க எல்லோரும் நல்லா இருக்கிறாங்கபா.. நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கிறீங்க?”
“நாங்க நல்லா இருக்கிறோம் அத்தை.”
“தீஷி சம்மு எங்க? அவளோட நம்பர்க்கு கூப்டேன். ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்னு வருது..” என்றார்.
தீஷிதன்தான் கீழே வரும் போது சம்யுக்தாவின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்று அவளின் போனை ஆஃப் பண்ணி விட்டு வந்தான்.
“ஆமா அத்தை. யுக்தா போன்ல சார்ஜ் இல்லை.. அதுதான் ஆஃபாகிட்டு போல, அவ தூங்கிட்டு இருக்கா அத்தை. நான் யுக்தா எந்திரிச்சதும் கால் பண்ணவா? ஏதும் இம்பார்ட்டனா அத்தை?”
“தீஷி உங்க கல்யாணம் நடந்ததும் குலதெய்வம் கோயிலுக்கு போகணும்.. ஆனால் நீங்க சென்னை போனதால போக முடியல.. ரெண்டு நாள்ல பௌர்ணமி வருது. அப்போ குலதெய்வம் கோயிலுக்கு போகலாம்னு அண்ணா சொன்னாங்க.. நீங்களும் அங்க இருந்து குலதெய்வம் கோயிலுக்கு வந்துடுங்கபா”
“சரி அத்தை.. நான் யுக்தாகிட்டே சொல்லிடுறன்.”
“சரி தீஷி நான் அப்புறமா பேசுறன்..”
“ஓகே அத்தை..” என்றவன் போனை வைத்து விட்டு, ஒரு தட்டை எடுத்து நன்கு முறுகலாக சுட்ட தோசையையும், கடலைக் கறி மற்றும் தேங்காய் சட்னியையும், க்ளாஸ் ஒன்றில் சுடச்சுட பாலையும் எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றான். அங்கே அமைதியான முகத்துடன் தூங்கிக் கொண்டு இருந்த தன்னவளைப் பார்த்து விட்டு, அருகில் இருந்த மேசை மீது தட்டை வைத்தான்.
சம்யுக்தாவின் அருகில் அமர்ந்தவன், அவள் பிறை நுதல் மறைத்த கூந்தலை ஒதுக்கி, அக் கூந்தல் இருந்த இடத்தில் முத்தத்தை கொடுத்தான். அவன் இதழ் தீண்டலில் தூக்கம் கலைய கண்களைத் திறந்த சம்யுக்தா, “என்னங்க” என்றவாறு வேகமாக எழுந்தவள், பின் தனது நிலைகண்டு பெட்ஷீட்டை எடுத்து கழுத்து வரை சுற்றிக் கொண்டு குனிந்திருந்தாள். அதைப் பார்த்து சத்தமாக சிரித்தான் தீஷிதன்.
“ஐயோ சும்மா இருங்க”
“யுக்தா, இப்போ எதுக்கு கீழே பார்த்திட்டு இருக்க, இங்க பாரு.” என்று அவளது முகத்தை பிடிக்க, “போங்க…” என்ற சிணுங்கலுடன் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
“யுக்தா…”
“ம்ம்ம்ம்…”
“எனக்கு பசிக்குது, உனக்கு பசிக்கல..”
“அட ஆமாங்க.. நைட்டுக்கு சாப்பாடு செய்யணும்.. எல்லாம் உங்களாலதான்.. நீங்க பண்ண வேலையால சாப்பாடு எதுவும் செய்யலை.. ஒரு பத்து நிமிஷம் தாங்க.. நான் குளிச்சிட்டு வந்து தோசை ஊற்றித் தாறேன்..” என்று படபடத்தவளை நிறுத்தியவன், “யுக்தா இங்க பாரு.. அமைதியா இரு. நானே சமைச்சிட்டேன்.. நீ நல்லா தூங்கிட்ட, அதனால நானே போய் தோசை ஊற்றி எடுத்திட்டு வந்தேன்.. வா சாப்பிடலாம்..” என்றான்.
“என்னங்க நீங்க.. என்னை எழுப்பியிருக்கலாம்ல.. நீங்க எதுக்கு கஷ்டப்பட்டுட்டு?”
“இதுல கஷ்டப்பட எதுவும் இல்லை.. என்னோட பொண்டாட்டிக்காக நான் பண்றேன்.. சரி எந்திரி..” என்றவன் தனது மார்பில் சாய்ந்திருந்தவளுக்கு சாப்பாட்டை ஊட்டி விட்டான். பின்னர் பாலை எடுத்து அவளிடம் குடிக்க கொடுத்தான்.
பின்னர் அவனும் அதே தட்டில் சாப்பிட, அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தவள் கண்களில் கண் குளம் கட்டியது. சாப்பிட்டு கீழே சென்று தட்டை வைத்து விட்டு, வந்தவனை தனது கைகளை விரித்து அழைத்தாள் சம்யுக்தா. காதலோடு அழைக்கும் அவளின் அழைப்பில் வந்து சேர்ந்தவனை அணைத்துக் கொண்டவள், அவனின் இதழோடு இதழ் சேர்த்தாள் சம்யுக்தா.
மனைவி அவளாக தரும் முத்தத்தில் தன்னை மறந்த தீஷிதன் மீண்டும் அவளுடன் இரண்டறக் கலந்தான். அவர்களின் கூடலைப் பார்த்து வெட்கப்பட்டு மேகத்தினுள் மறைந்தது நிலா..
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்ய சதுர்ஷி💙
வாழ்வு : 36
மணிகண்டனிடம் இருந்து எடுத்துக் கொண்ட கம்பெனிக்கு தீஷிதன் சம்யுக்தாவை அழைத்துக்கொண்டு சென்றான். அங்கிருந்தவர்கள், ‘என்னடா இது? அன்னைக்கு என்னடானா மணிகண்டன் சார்கிட்ட இருந்து விக்டர் சார் கம்பெனியை வாங்கினாரு. இன்னைக்கு சம்யுக்தா மேம் வந்து நிக்கிறாங்க. அவங்க எப்படி இங்க? என்ன நடக்குதுன்னே புரியல.’ என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
அங்கிருந்த எம்டி அறையினுள் இருந்த சுவாமியை மனதார வணங்கி விட்டு சம்யுக்தா வந்ததும் அவளை அழைத்துச் சென்று அந்த எம்டியின் சேரில் உட்கார வைத்தான் தீஷிதன்.
“வேணாம்ங்க இதுல நீங்க இருந்துக்கோங்க. எனக்கு இந்த எம்டி பதவியில எல்லாம் ஆசை இல்லை. அப்படி சொல்லாத யுக்தா, உன்னோட திறமை என்னன்னு நீ மத்தவங்களுக்கு காட்டணும். எனக்காக நீ இதை செஞ்சுதான் ஆகணும்” என்றவன் அந்த சேரில் அவளை உட்கார வைத்தான்.
பின்னர் ஸ்டாப் அனைவரையும் எம்டி அறைக்குள் வரச் சொல்ல, அவர்களும் வந்தனர். வந்தவர்கள் அனைவரையும் பார்த்த தீக்ஷிதன், “குட் மார்னிங் டூ ஆல்.. நான் எதுக்கு உங்களை எல்லாம் இங்க வரச் சொல்லிருக்கேன்னா, இனிமேல் இந்த கம்பனியோட எம்டி மிஸ்ஸிஸ் சம்யுக்தா தீஷிதன் தான். நீங்க இதுவரைக்கும் எப்பிடி வேணும்னாலும் இருந்திருக்கலாம். பட் இனிமே சம்யுக்தா மேடம் சொல்ற மாதிரி இருக்கணும்” என்றான்.
அவன் பேசி முடிந்ததற்கு அடையாளமாக, சம்யுக்தாவின் அருகில் இருந்த சேரில் அமர்ந்தான். அவனைப் பார்த்து விட்டு எழுந்து நின்ற சம்யுக்தா பேச ஆரம்பித்தாள்.
“எல்லோருக்கும் என்னோட வணக்கம்.. இந்த கம்பனியை இன்னைல இருந்து நான் பொறுப்பெடுத்திருக்கேன். நம்மளோட இந்த கம்பனி மேலும் மேலும் முன்னேறணும்னா அது உங்க கைலதான் இருக்கு. ஏன்னா தொழிலாளர்களோட உழைப்பை அதிகமாக நம்புறவ நான். உங்களுக்கு என்ன பிரச்சனைனாலும் எங்கிட்ட தயங்காம சொல்லலாம். உங்களோட உழைப்பிற்கான பலன் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும். எனக்கு நம்பிக்கை துரோகம் பண்றவங்கள பிடிக்காது. நீங்க யாரும் அப்பிடி பண்ண மாட்டீங்கன்னு நினைக்கிறன். இது உங்களோட கம்பனி எல்லோரும் ஒற்றுமையா இருக்கணும். இப்போ நீங்க போய் உங்களோட வேலையை பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு சேரில் அமர்ந்தாள் சம்யுக்தா.
“வாவ் யுக்தா, செம்மையா பேசின டார்லிங்.. கீப் இட் அப்.”
“அட நீங்க வேற உள்ள உதறலா இருந்திச்சு பட் நான்தான் அதை வெளிக்காட்டல.”
“இப்பிடியே இரு யுக்தா.. உன்னோட பயம் எப்பவும் வெளியே தெரியக் கூடாது.”
“கண்டிப்பாங்க, நீங்க கூட இருந்தா நான் தைரியமா இருப்பேன்” என்றவளை உச்சிமோர்ந்தான் தீஷிதன்.
இப்படியாக கம்பனியில் இருந்த வேலையை முடித்து விட்டு வீட்டிற்குச் சென்றனர்.
………………………………………………….
ஊட்டியில் பரந்தாமனும் கிருபாகரனும் அவர்கள் வீட்டில் இருந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
“மச்சான் தீஷிதன் சம்முவோட கல்யாணம் நல்லபடியா நடந்து முடிஞ்சிட்டு, அடுத்ததா புகழ் மதுரா கல்யாணத்தையும் விக்ராந்த் வித்யா கல்யாணத்தையும் ஒண்ணாவே பண்ணிடலாம்.”
“ஆமா மச்சான், அவங்களுக்கும் நேரகாலத்துக்கு கல்யாணம் பண்ணி வைக்கத்தானே வேணும்” என்றார் கிருபாகரன்.
அங்கே வந்த துர்க்கா, “நானும் நீங்க சொல்றது சரிதான் அண்ணா, நம்ம குல தெய்வம் கோயிலுக்கு போகவும் இல்லை. அங்க போயிட்டு வந்த அப்புறம் மற்றவங்களோட கல்யாண வேலையை ஆரம்பிக்கலாம்.”
“அக்கா சொல்றதும் சரிதான் அண்ணா, விக்ராந்தும் இவரும் மலேசியா போயிட்டாங்க.. அவங்க அங்க இருக்கிற வேலைய எல்லாம் முடிச்சிட்டு வரட்டும் அண்ணா. இல்லைனா அவங்க இங்க இருந்து அங்க, அங்க இருந்து இங்கனு அலைஞ்சிட்டு இருப்பாங்க.”
“ஆமா தமயந்தி நீ சொல்றதும் யோசிக்க வேண்டிய விஷயம் தான். சரி அப்போ முதல்ல நாம குலதெய்வம் கோயிலுக்கு போய் பூஜையை முடிச்சிடலாம். தீக்ஷிதன் கிட்டயும் சம்யுக்தாக்கிட்டேயும் சொல்லலாம். அப்போ ரெண்டு நாள்ல பௌர்ணமி வருது அப்போ கோயிலுக்கு போகலாம்” என்று பரந்தாமன் சொல்ல அனைவரும் அதற்கு சம்மதித்தனர்.
………………………………………………….
வீட்டில் இருந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த உமேஸ்வரன், பிரகாஷை அழைத்தார்.
“சொல்லுங்க அப்பா.”
“பிரகாஷ் நீ அந்த ப்ராஜெக்ட்டை இன்னும் ஆரம்பிக்கலயா?”
“டாடி, அந்த ப்ராஜெக்டை சம்யுக்தா சொல்றபடிதான் செய்யணும். அதுதான் யோசிச்சிட்டு இருக்கேன்.”
“இதுல யோசிக்க என்ன இருக்கு? அவளுக்கும் நம்ம குடும்பத்துக்குமான உறவு முறிஞ்சிடிச்சி. நீயும் வேற வாழ்க்கைக்குள்ள போயிட்ட, அவளும் வேற வாழ்க்கைக்குள்ள போயிட்டா சோ, இனிமேல் இதைப் பற்றி பேச வேண்டாம். வேலையில நம்மளோட பெர்சனல் லைஃபை கொண்டு வந்து சேர்க்கக் கூடாது. தீஷிதன் ரொம்ப பெரிய பிஸ்னஸ் மேன். அவன் நினைச்சா நம்ம கம்பனியை ஒண்ணுமில்லாம பண்ணிட முடியும். அதனால நீ அவன் சொல்ற மாதிரி நடந்துக்கிறத்தான் உனக்கும் நல்லது. நம்ம கம்பெனிக்கும் நல்லது”
“இருந்தாலும் அவளுக்கு கீழே நான் வேலை செய்யணும்றது…”
“நிறுத்து பிரகாஷ், நீ அந்த ப்ராஜெக்ட்டை நல்லபடியா முடிப்பேன்னு நம்பினான். நீ இதை முடிச்சிக் கொடு, இல்லைனா அந்த தீஷிதன் உன்னை சும்மா விடமாட்டான். அக்ரீமண்ட்ல சைன் பண்ணதை மறந்திடாத.”
“சரி.. நான் நாளைக்கே போய் அந்த ப்ராஜெக்ட்டை ஸ்டார்ட் பண்றன்” என்றவன் அங்கிருந்து சென்றான்.
………………………………………………….
கம்பனியிலிருந்து வந்ததும் ஃப்ரெஷாகிவிட்டு சமையல் அறைக்குள் சென்றாள் சம்யுக்தா. தீக்ஷிதன் வேலைக்கு ஆட்களை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லியும், அதை சம்யுக்தா ஏற்றுக் கொள்ளவில்லை. “இரண்டு பேர் இருக்கிற வீட்டில எதுக்குங்க வேலைக்கு ஆளுங்க? நானே பாத்துக்கிறேன்” என்று தீஷிதனிடம் உறுதியாக சொல்லிவிட, அவனும் விட்டுவிட்டான்.
சமையல் அறையில் நின்று காப்பி போட்டுக் கொண்டிருந்தவள், அதை எடுத்துக் கொண்டு அறைக்குள் வர, அங்கே ஈரம் சொட்டும் தலையோடு பால்கனியில் நின்று தூரத்தில் தெரிந்த கடலை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் தீஷிதன்.
சம்யுக்தாவின் கொலுசு சத்தம் கேட்க, திரும்பி பார்த்தவனிடம் வந்தவள் காபியை கொடுத்தாள். அதை சிரிப்புடன் வாங்கிக் கொண்டு மீண்டும் கடலை பார்க்க, அவள் அறைக்குள் சென்று துவாலையை எடுத்து வந்து, ஒரு கையால் கம்பியை பிடித்துக் கொண்டு, மறுகையால் காபி குடித்துக் கொண்டு நிற்கும் அவனின் முன்புறம் வந்து நின்றாள்.
“என்ன யுக்தா டவலோட நிற்கிற?”
“சொல்றன் காபியை குடிச்சா கப்பை அங்க வைங்க” என்றாள். அவனும் குடித்து விட்டு காபி கப்பை அருகில் இருந்த சிறிய மேசை மீது வைத்து விட்டு, அவள் புறம் திரும்பி நின்றாள்.
அவளும் டவலை எடுத்து அவன் தலையை துவட்டத் தொடங்கினாள்.
“இந்த டைம்ல குளிச்சிட்டு இப்படி ஈரத்தலையோட நின்னா சளி பிடிக்கும்.” என்றவாறே தலையை துவட்டினாள். அவளுக்கு இசைந்து கொடுத்துக் கொண்டிருந்த தீஷிதன் தனது வலிமையான கைகளை அவளது இடை மீது வைக்க, சம்யுக்தாவின் உடல் சிலிர்த்தது.
உங்கள் அன்புத்தோழி திவ்யசதுர்ஷி 💙
“அருவி போல் அன்பை பொழிவானே “
சின்ஸியரான போலிஸ் ஆபிஸர் நம்ம ஹீரோ.. கிராமத்தில அத்தையிடம் கொடுமைப்பட்டாலும் படிப்பை மட்டும் விடக்கூடாது என்று போராடும் ஹீரோயின். இருவரும் ஒரே கோட்டில் இணையும் போது என்ன நடக்கும்? அன்பிற்கு ஏங்கும் அவளுக்கு திகட்டத்திகட்ட அன்பை வழங்கும் ஹீரோ, இருவரும் எப்படியான வாழ்க்கையை வாழப் போகிறார்கள்?
அத்தியாயம் : 01
அத்தியாயம் : 02
அத்தியாயம் : 03
அத்தியாயம் : 04
அத்தியாயம் : 05
அத்தியாயம் : 06
அத்தியாயம் : 07
அத்தியாயம் : 08
அத்தியாயம் : 09
அத்தியாயம் : 10
அத்தியாயம் : 11
அத்தியாயம் : 12
அத்தியாயம் : 13
அத்தியாயம் : 14
அத்தியாயம் : 15
அத்தியாயம் : 16
அத்தியாயம் : 17
அத்தியாயம் : 18
அத்தியாயம் : 19
அத்தியாயம் : 20
அத்தியாயம் : 21
அத்தியாயம் : 22
அத்தியாயம் : 23
அத்தியாயம் : 24
அத்தியாயம் : 25
அத்தியாயம் : 26
அத்தியாயம் : 27
அத்தியாயம் : 28
அத்தியாயம் : 29
அத்தியாயம் : 30
அத்தியாயம் : 31
அத்தியாயம் : 32
அத்தியாயம் : 33
அத்தியாயம் : 34
அத்தியாயம் : 35
அத்தியாயம் : 36
அத்தியாயம் : 37
அத்தியாயம் : 38
அத்தியாயம் : 39
அத்தியாயம் : 40
அத்தியாயம் : 41
🔒 This is a Paid Content. Subscribe to Read
🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள்👉
View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க✅ If you already have a membership, sign in using the link below:
✅ உங்கள் கணக்கில் ஏற்கனவே உறுப்பினர் இருந்தால், கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி உள்நுழைக:👉
Register/Login / பதிவு/உள்நுழை
🔒 This is a Paid Content. Subscribe to Read
🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள்👉
View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க✅ If you already have a membership, sign in using the link below:
✅ உங்கள் கணக்கில் ஏற்கனவே உறுப்பினர் இருந்தால், கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி உள்நுழைக:👉
Register/Login / பதிவு/உள்நுழை
🔒 This is a Paid Content. Subscribe to Read
🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள்👉
View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க✅ If you already have a membership, sign in using the link below:
✅ உங்கள் கணக்கில் ஏற்கனவே உறுப்பினர் இருந்தால், கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி உள்நுழைக:👉
Register/Login / பதிவு/உள்நுழை
🔒 This is a Paid Content. Subscribe to Read
🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள்👉
View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க✅ If you already have a membership, sign in using the link below:
✅ உங்கள் கணக்கில் ஏற்கனவே உறுப்பினர் இருந்தால், கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி உள்நுழைக:👉
Register/Login / பதிவு/உள்நுழை
🔒 This is a Paid Content. Subscribe to Read
🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள்👉
View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க✅ If you already have a membership, sign in using the link below:
✅ உங்கள் கணக்கில் ஏற்கனவே உறுப்பினர் இருந்தால், கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி உள்நுழைக:👉
Register/Login / பதிவு/உள்நுழை
Newer Posts