அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 33🔥🔥

5
(9)

பரீட்சை – 33

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

உன்னிடம் மயங்கி 

விட்டேன்.. 

உயிராக நினைத்து 

விட்டேன்..

 

மனம் கொண்ட 

காதலை 

உதட்டின் வழி 

சொல்லாமல் 

மௌனமாய் இருந்து 

விட்டேன்..

 

பைங்கிளி உந்தன் 

குரலின் 

இனிமையில்

எந்தன்

பெயரையும் மறந்து 

விட்டேன்..

 

செவிகளில் எப்போதும் 

உன் 

சிங்கார குரலே 

ஒலித்து 

என்னை சிலிர்க்க 

வைக்குதடி..

 

ஒரு நாள் 

உன் குரல் 

கேட்கா விடினும் 

உடல் விட்டு

உயிரே நீங்கிடுமடி

என் உயிரே..!!

 

#################

 

என் உயிரே…!!

 

தேஜு பாடிய பாடலில் மெய்மறந்து தன் கையை தட்டிக் கொண்டே இருந்த அருணை அங்கே சுற்றி இருந்த அனைவரும் வினோதமாய் பார்க்க தேஜுவுக்கோ தர்ம சங்கடமாய் இருந்தது..

 

அவள் தர்ம சங்கடமாய் மேடையில் நெளிவதை பார்த்தபோதுதான் தான் தனியே கைதட்டிக் கொண்டிருக்கும் ஒலி அந்த அரங்கத்திலேயே அதிர்ந்து கொண்டிருப்பதை உணர்ந்தவன் சட்டென கைதட்டுவதை நிறுத்திக் கொண்டான்..

 

பிறகு எழுந்தவன் வேகமாக அந்த அரங்கத்தை விட்டு வெளியே சென்று விட்டான்.. தேஜூ மேடையை விட்டு மெதுவாக இறங்கி தன் இருக்கைக்கு வந்தாள்.. கேள்வியாய் அவளை சுற்றி துளைத்துக் கொண்டிருந்த பார்வைகளை தவிர்க்க முடியாமல் அந்த இடத்தில் நெளிந்த படி அமர்ந்திருந்தாள் அவள்..

 

அவளை ரொம்பவும் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்காமல் அடுத்த பத்து நிமிடங்களில் போட்டி முடிவடைந்து வெற்றியாளர்களை அறிவிக்கும் நேரமும் வந்தது..

 

எல்லோரும் எதிர்பார்த்தபடி தேஜூவுக்கே முதல் பரிசு கிடைத்தது.. பரிசு பெற்று இறங்கிய தேஜுவை ஓடிவந்து அணைத்து கொண்டாள் சுமி..

 

“ஏய்.. சூப்பர் டி.. எவ்வளவு சூப்பரா பாடின தெரியுமா நீ? ம்ம் ம்ம்.. அந்த அருண் கலந்து இருந்த தேன் ஊத்துன ஜூஸ் மட்டும் நீ குடிச்சிருந்தேன்னா இன்னும் களை கட்டியிருக்கும்” கண்களில் ஆர்வத்தோடு சொன்னவளை முறைத்தாள் தேஜூ..

 

“அவன் எனக்கு தேன் ஊத்தி ஜூஸ் கொடுக்கவும் வேண்டாம்.. ஏதோ மருந்து ஊத்தி இன்னொருத்தரை பாட முடியாம செய்யவும் வேண்டாம்.. எவ்வளவு கெட்ட எண்ணம்டி அவனுக்கு.. பாவம் அதனாலதான் அந்த நித்திலாவால பாடவே முடியல.. ஒருவேளை இந்த காம்பெடிஷன்ல அவங்க கலந்துட்டு இருந்தாங்கன்னா என்னை விட நல்லா பாடி இருப்பாங்களோ என்னவோ?” என்றவளை இடுப்பில் கையை வைத்து முறைத்தாள் சுமி..

 

“ஏய்.. உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையாடி? உன்னை முதல் நாள் அந்த பாடு படுத்தினா அவ.. அவளுக்கு போய் பாவம் பார்த்துகிட்டு இருக்கே பாரு.. அவளுக்கு இருக்கற கொழுப்புக்கும் திமிருக்கும் இது தேவைதான்.. அவன் பண்ண இந்த வேலைக்காகவே நான் அவனுக்கு பெரிய ஃபேன் ஆயிட்டேன்” என்றாள் சுமி கண்ணில் நித்திலாவின் மேலான வெறுப்போடு..

 

“தப்பு சுமி.. அன்னைக்கு அந்த நித்திலா நடந்துகிட்டது எனக்கும் கோபம் தான்.. ஆனா அந்த அருண் ஒன்னும் அவளுக்கு சளைச்சவன் இல்லையே.. அவனும் ரொம்ப ரூடா தானே அன்னைக்கு நடந்துகிட்டான்..‌ அப்படி பாத்தா உனக்கு அவன் மேலேயும் தானே வெறுப்பு இருக்கணும்.. ஆனா நீ என்னடானா அவனுக்கு மட்டும் ஃபேன் ஆயிட்டேன்கிற.. என்னடி நியாயம் இது..?” தேஜுவை பார்த்து இடவலமாக தலையாட்டினாள் சுமி..

 

“ஏய்.. தேஜூ நீ அந்த அருணையும் ஒழுங்கா புரிஞ்சுக்கல.. இந்த நித்திலாவையும் ஒழுங்கா புரிஞ்சுக்கல.. அந்த அருண் கொஞ்சம் கோவக்காரன் தான்.. திமிரு புடிச்சவன் தான்.. ஆனா அவன் அநியாயமா எதுவுமே பண்ணல டி.. அவன் செய்யற வேலை எல்லாம் நியாயமா தான் இருக்கு.. நீ வேணா யோசிச்சு பாரு.. முதல் நாள் தப்பு உன் மேலயும் அந்த நித்திலா மேலயும் தான்.. அதனால தான் உங்க ரெண்டு பேரையும் அடிச்சான்.. அவன் அடிச்சு இருக்க வேண்டாம்னு தோணுனாலும் அவன் கோபம் நியாயமானது தானே..? அப்புறம் நம்மள அந்த ரோட்ல அந்த குடிகார பசங்க வந்து தொந்தரவு பண்ணும் போது அப்பயும் அவன் நேரா வந்து காப்பாத்தலையே தவிர வேற எதோ செஞ்சு நம்ம அவங்க கிட்ட இருந்து தப்பிக்கறதுறக்கு வழி செஞ்சான் இல்ல.. இப்பவும் அந்த நித்திலா அவன்கிட்ட ஏதாவது வம்பு பண்ணி இருப்பா.. அதனாலதான் அவளுக்கு இந்த மாதிரி பண்ணி இருப்பான்.. நீ தயவு செஞ்சு அந்த நித்திலாக்கு ரொம்ப பாவம் பாக்காத..”  என்றாள் சுமி..

 

“சரி விடு.. இன்னிக்கு அவன் மட்டும் அவ்வளவு நேரம் கிளாப் பண்ணினதுனால எல்லாரும் அவனையும் என்னையும் ஒரு மாதிரி பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.. எனக்கு மானமே போயிருச்சு..”

 

 “உன் பாட்டை அப்ரிஷியேட் பண்ணி அவன் சுத்தி இருக்கிறவங்களை மறந்து கைதட்டி இருக்கான்.. நீ என்னடான்னா அவன் அப்ரிஷியேட் பண்ணதுக்கு அவனை திட்டிக்கிட்டு இருக்கே.. நீ ஏண்டி இப்படி இருக்க..?”

 

“அதான் நீ அவனுக்கு ஃபேன் ஆயிட்டேன்னு சொல்லிட்ட இல்ல..? இனிமே நான் அவனை பத்தி எது சொன்னாலும் நீ அதை ஒத்துக்க போறது கிடையாது.. அவனுக்கு சப்போர்ட் பண்ணி தான் பேசுவே.. சரி விடு.. வா நம்ம மத்த ப்ரோக்ராம் எல்லாம் போய் பார்க்கலாம்..” என்று சொன்னவள் அங்கிருந்து கிளம்பி விட்டாள்..

 

இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை அவர்களுக்கு தெரியாமல் கவனித்துக் கொண்டிருந்தார்கள் சரணும் நித்திலாவும்..

 

தேஜூவை வன்மத்தோடு பார்த்துக் கொண்டிருந்த நித்திலா “ஓ.. அப்படின்னா இந்த தேஜுவுக்கு அந்த அருணை பிடிக்கல.. அவன் ஏதோ எல்லாருக்கும் ரொம்ப கெட்டது பண்றான்னு நினைச்சுகிட்டு இருக்கா.. இவளுக்காகத்தான் நமக்கு அந்த ஜூஸை கொடுத்து பாட விடாம அவன் பண்ணான்றது கூட இவளுக்கு தெரியல.. இவளுக்காக என்னை பாட விடாம செஞ்சான்ல.. இவ பார்வையில அவனை எவ்ளோ கேவலமா காட்ட முடியுமோ காட்டுறேன்..” என்று மனதில் வன்மம் வைத்து கருவினாள்..

 

அந்த மருந்தின் விளைவால் வாயை திறந்து பேச முடியவில்லை அவளால்.. ஆனால் மனதிற்குள் தன் அடுத்த திட்டத்தை வகுக்க ஆரம்பித்து விட்டாள் அவள்..

 

####################

 

அருணின் டைரியிலிருந்து..

 

என் தேவதையின் குயில் போன்ற குரலில் என்னை மறந்து நான் லயித்திருக்க அதை பாடி முடித்த பின் அந்தப் பாடல் இன்னும் கொஞ்சம் நீண்டு கொண்டே இருக்காதா என ஏக்கம் பிறந்தது..

 

சுற்றி இருப்பவர்கள் அனைவரும் கைத்தட்டி ஆர்ப்பரிக்க சுயம் மறந்து சூழ்நிலை மறந்து என் இசை அரசியின் தேன் குரலில் மெய் மறந்து அவள் இசைத்திருந்த அழகிய கீதமே என் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்து கொண்டிருக்க கரவொலியை நிறுத்த மறந்து தனியாவர்த்தனமாய் கை தட்டிக் கொண்டிருந்தேன்..

 

அவள் என்னை வினோதமாய் பார்த்த பார்வையில் தெளிந்த நான் அதற்கு மேல் என்னவளை இன்னும் சங்கடப்படுத்தாமல் அமைதியாய் அங்கிருந்து வெளியேறி வந்து விட்டேன்..

 

அந்த ராட்சசிக்கு நான் வலிய புகட்டிய பழச்சாற்றை மட்டும் என்னவள் குடித்திருந்தால் அவளுக்கு எப்படி ஒரு அவமானம் நேர்ந்திருக்கும் என என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை..

 

என்னவளின் இனிமையான குரலை கேட்கக்கூடிய அதிர்ஷ்டத்தையும் நான் இழந்திருப்பேன்.. இன்னொரு முறை என் தேவதைக்கு அந்த நித்திலா ஏதும் துன்பம் கொடுக்க நினைத்தால் அவளை கொல்லுவதற்கும் நான் தயங்க மாட்டேன்..

 

##################

 

டைரியை படித்த வைஷு “ஐயோ தேஜூக்கா.. நீங்க என் செல்ல குட்டியை புரிஞ்சுக்கவே இல்ல.. உங்களுக்கு எவ்வளவு ஹெல்ப் பண்ணனும்னு நினைச்சிருக்காரு.. நீங்க என்னடான்னா எப்பவும் அவரை திட்டிட்டே இருந்து இருக்கீங்க..” என்றவளை தேஜு முறைத்துக் கொண்டு “நான் தான் அந்த பொண்ணுன்னு முடிவே பண்ணிட்டியா? ஏதோ நான்தான் அங்க இருந்து அவனை கொடுமைப்படுத்தின மாதிரி என்னை கேள்வி கேட்டுட்டு இருக்கே? இங்க பாரு இதுல எவ்வளவு தான் பெருசு பெருசா கதை எழுதினாலும் அதெல்லாம் நான் நம்ப மாட்டேன்..” என்றாள் தேஜு..

 

“ஆனா நான் முழுசா நம்பறேன்க்கா.. இவ்ளோ கோர்வையா யாராலயும் பொய் சொல்ல முடியாது.. அப்படி ஒரு வேளை இதெல்லாம் பொய்யா இருந்ததுன்னா என்னோட அருண் செல்லம் பயங்கர டாலேண்ட்டட்னு அர்த்தம்.. இப்படி நம்பற மாதிரி அழகா ஒரு கதை எழுதி இருக்கான்னா அவன் மேல நான் வெச்சிருக்கிற லவ் இன்னும் கூடி தான் போகும்.. என் செல்..ல குட்டி.. என் புஜ்…ஜு குட்டி..” ன வைஷு அருண் பக்கம் திரும்பி கொஞ்ச ஆரம்பித்ததை பார்த்து விஷ்வாவும் தேஜுவும் தங்கள் தலையில் அடித்துக் கொண்டார்கள்..

 

“அக்கா.. இதுக்கு முழுசா கழண்டுருச்சு.. வாங்க.. நம்ம மேல கதையை படிக்கலாம்..” என்று சொல்லி அவள் கையில் இருந்த டைரியை எடுக்க முடியல அவளோ தன் மார்போடு அந்த டைரியை சேர்த்து அணைத்து கொண்டவள் “நான் தான் படிப்பேன்.. யாருக்கும் கொடுக்க மாட்டேன்..” என்று சொல்லி அடுத்த பக்கத்தை திருப்பி படிக்க ஆரம்பித்தாள்..

 

###################

 

அன்று காலை வகுப்பு முடிந்து மதிய உணவு உண்ண கேண்டின் பக்கம் சுமியுடன் சென்று கொண்டு இருந்தாள் தேஜு… அப்போது எதிர்பக்கமாய் நித்திலா வர அவளை தவிர்க்கும் பொருட்டு விலகி வேறு பக்கமாய் தேஜூவும் சுமியும் செல்ல அப்போது நித்திலா “தேஜூ.. ஒரு நிமிஷம்..” என்று அவளை அழைத்தாள்..

 

சுமி தேஜூவிடம் ரகசியமாக “என்னடி இது..? சூரியன் மேற்கு பக்கம் உதிக்குது..” என்று கேட்க “சும்மா இருடி..” என்று ரகசிய குரலில் சொன்னவள் “சொல்லுங்க நித்திலா.. என்ன விஷயம்? எதுக்கு என்னை கூப்பிட்டீங்க?” என்று கேட்டாள்..

 

“தேஜு.. நீ என்னை பத்தி தப்பா நினைச்சுட்டு இருக்க.. ஒன்ன சொல்லியும் தப்பில்ல.. நான் முதல் நாள் உன்கிட்ட நடந்துகிட்டது அப்படி.. ராகிங் பண்ணா கொஞ்ச நாள்ல அவங்களுக்குள்ள ஃப்ரெண்ட்ஷிப் டெவலப் ஆயிடும்னு பொதுவா சொல்லுவாங்க.. அதுக்காக புதுசா வர்ற பசங்களை நான் ராகிங் பண்ணுவேனே தவிர அதுக்கப்புறம் நான் ஃப்ரெண்ட்லியா தான் இருப்பேன் அவங்களோட.. ஆனா நீ என்னை பார்த்தாலே பயந்து ஓடற.. அன்னைக்கு அந்த அருண் என்னை அடிச்சதுனால தான் எனக்கு கொஞ்சம் கோவம் வந்துருச்சு.. ஆனா அதுக்கப்புறம் நான் யோசிச்சு பார்த்தேன்.. உங்க அப்பா சொன்னதெல்லாமும் கரெக்ட் தானே..? நான் என் லிமிட்டை தாண்டிட்டேன்னு நினைக்கிறேன் உன் விஷயத்துல.. அதனாலதான் அன்னைக்கு அப்படி நடந்தது.. இருந்தாலும் அந்த அருண் ரொம்ப திமிரு புடிச்சவன் தான்.. பாரு.. உன்னையும் அடிச்சு என்னையும் அடிச்சுட்டான்.. பொம்பள பொண்ணுங்க மேல கைய வைக்கிறோமேனு ஒரு எண்ணம் கூட இல்லை அவனுக்கு” என்றவளை வினோதமாக பார்த்தாள் தேஜு..

 

மனதிற்குள் “இதெல்லாம் அனுபவிக்கறதா வேண்டாமா கடவுளே..!!?” என்று சிறிது சந்தேகத்துடனே எண்ணிக் கொண்டவள் “இருக்கட்டும் நித்திலா பரவால்ல.. அதெல்லாம் நான் அன்னைக்கே மறந்துட்டேன்.. யாராவது கைநீட்டி அடிச்சா யாரா இருந்தாலும் கோபம் வரும்.. இட்ஸ் ஓகே..” என்று சொன்னாள் தேஜு..

 

“ஆனாலும் அந்த அருணை பாத்தியா ? வம்படியா அன்னைக்கு எப்படி வந்து அந்த ஜூஸை என் வாயில ஊத்துனான்னு..”

 

 நித்திலா சொல்ல தேஜுவும் “நானும் அதைத்தான் சொல்லிட்டு இருந்தேன்.. அவர் அப்படி முரட்டுத்தனமா பண்ணது எனக்கு கூட ரொம்ப கஷ்டமா தான் இருந்தது.. அந்த பாட்டு போட்டியில கூட உங்களால பார்ட்டிஸிபேட் பண்ண முடியல.. எனக்கு ரொம்ப வருத்தமாயிடுச்சு.. ஒருவேளை நீங்க பாடி இருந்தீங்கன்னா உங்களுக்கு தான் ஃபர்ஸ்ட் ப்ளேஸ் கிடைச்சிருக்குமோ என்னவோ..” என்றாள் தேஜு..

 

“நீ ரொம்ப நல்லா பாடினேன்னு எல்லாரும் சொன்னாங்க தேஜு.. வெளியில் எனக்கும் கேட்டது உன்னோட பாட்டு.. உன் குரல் ரொம்ப நல்லா இருக்கு.. நான் பாடி இருந்தாலும் உனக்கு தான் ஃபர்ஸ்ட் பிரைஸ் கிடைச்சிருக்கும்.. ஆனா அன்னைக்கு அதுக்கப்புறம் என்ன நடந்தது தெரியுமா உனக்கு? இன்னும் கூட அதை என்னால ஜீரணிக்க முடியல.. எப்படி இருந்தாலும் உனக்கு விஷயத்தை சொல்லி உஷார் படுத்தணும்னு தான் நான் இன்னைக்கே வந்து உன்னோட பேசினேன்..” 

 

அவள் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல தேஜு “என்ன சொல்றீங்க நித்திலா?” என்று முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கேட்டாள்..

 

“என் ஃப்ரெண்டு சரண் போய் அந்த அருண் கிட்ட “நீ ஏன் இப்படி பண்ண? நீ இப்படி பண்ணதனால நித்திலாவால அந்த காம்படிஷன்ல கலந்துக்கவே முடியல..”ன்னு கேள்வி கேட்டப்போ அதுக்கு அந்த அருண் என்ன பதில் சொன்னானாம் தெரியுமா?” என்று நித்திலா கேட்க “என்ன சொன்னான்?” என்றாள் தேஜு…

 

“அதுக்கு அந்த அருண் சொல்றானாம்.. இப்பதான் எனக்கு லவ் ப்ரொபோஸ் பண்ண சொல்லி அந்த பொண்ணை அனுப்பிச்சவளுக்கு தண்டனை கொடுத்துருக்கேன்.. கூடிய சீக்கிரம் எனக்கு லவ் ப்ரொபோஸ் பண்ணவளுக்கு இதை விட பெரிய தண்டனை கொடுப்பேன்.. நித்திலாக்கு கொடுத்தது வெறும் டிரைலர் தான்.. அவ செஞ்ச வேலைக்கு நான் கொடுத்த தண்டனை ஒண்ணுமே கிடையாது.. அப்படின்னு சொல்லி சரணை நல்லா அடிச்சு விட்டு அனுப்பி விட்டுட்டான்..” வாய் கூசாமல் பொய்யாக அள்ளிவிட்டுக் கொண்டிருந்தாள் நித்திலா..

 

“அடப்பாவி.. அவன் இவ்வளவு மோசமானவனா? அவன் கொஞ்சம் கோவக்காரன்.. திமிர் பிடிச்சவன்.. ஆனா நல்லவன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேனே நான்” என்றாள் தேஜூ..

 

“இத்தனை நாள் நாங்களும் அப்படித்தான் நினைச்சுட்டு இருந்தோம்.. தேஜு.. இப்பதானே அவன் உண்மையான முகம் கொஞ்சம் கொஞ்சமா வெளிய வருது.. எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ.. அவன் அடுத்து உனக்கு என்ன பண்ணப் போறான்னு தெரியல..”

 

“அடுத்த தடவை அவன் அப்படி ஏதாவது பண்ணுனா நான் சும்மா விட மாட்டேன்.. உடனே போய் பிரின்சிபல் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணி அவனுக்கு நிச்சயமா ஒரு தண்டனை வாங்கி கொடுப்பேன்” 

 

 கண்ணில் கோபத்துடன் தேஜூ சொல்ல நித்திலாவுக்கு வந்த வேலை செவ்வனே முடிந்தததென நிம்மதியாக இருந்தது.. அவள் தன் வலையில் விழுந்து விட்டாள் என உள்ளுக்குள் ஆனந்தம் அடைந்தாள்..

 

அவள் கோபத்தை பார்த்து தன் இதழோரமாய் ஒரு விஷம புன்னகையை உதிர்த்தவள் “நீ என்ன பண்ணுவியோ தெரியாது.. ஆனா உன்னை உஷாரா இருக்க  சொல்லணும்னு எனக்கு தோணுச்சு.. அப்புறம் உனக்கு ஓகேன்னா இனிமே நம்ம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸா இருக்கலாமா?”

 

 தேஜுவின் புறமாய் அவள் கையை நீட்ட புன்னகைத்த தேஜு அவள் கையை குலுக்கி “நிச்சயமா..” என்று சொல்லி அவளை தழுவிக் கொண்டாள்..

 

தேஜுவை தழுவிக் கொண்ட நித்திலா முகத்தில் வில்லத்தனமான புன்னகையோடு “இனிமே உன்னையும் அந்த அருணையும் ஒவ்வொரு நாளும் நல்லா வெச்சு செய்வேன்டி” என்று தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்..

 

தொடரும்…

 

ஹலோ.. என் அன்பு செல்லங்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!!  இந்த யூடி பத்தியும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!