அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 39🔥🔥

5
(11)

பரீட்சை – 39

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

தவறு செய்யாத 

உன்னை 

தண்டித்த

பிழைக்கு 

பரிகாரமாய்

 

திட்டமிட்டு 

தீங்கு

இழைத்தவர்களை 

திரை மறைவில்

இருந்து

வெட்டவெளிக்கு

கொணர்ந்தேன்..

 

கல்லூரி கல்வியை

நீ தொடர

காரிகை இவள்

ஆவன‌ செய்தேன்..

உன்னை மீண்டும்

காணப்போகும்

இன்பத்தில்

திளைத்திருந்தேன்

ஏனோ 

மனதோரமாய்…!!

 

##################

 

ஏதோ ஒன்று மனதோரமாய்…!!

 

“அப்படி என்ன ஆதாரம் வச்சிருக்கே..?” என்று நித்திலா கேட்க “அப்படி வா வழிக்கு நித்திலா.. எவ்வளவு நேரம் தான் நீ ஒன்னும் தெரியாத மாதிரியே நடிச்சிட்டு இருப்ப..? அது என்னன்னு உன்கிட்ட இப்பவே சொல்லிட்டேன்னா நீ அதை அழிச்சிடுவியே.. அப்புறம் நான் நினைச்ச வேலை நடக்காதே..”  நிலவழகன் பேச பேச நித்திலாவிற்கு பதட்டம் கூடிக்கொண்டே போனது..

 

“அந்த ஆதாரத்தை அழிக்கணும்னா உனக்கு என்ன வேணும்?”

 

நேரடியாக விஷயத்துக்கு வந்தாள் நித்திலா.. 

 

“அதை இப்படி ஃபோன்ல எல்லாம் சொல்ல முடியாதுமா.. இன்னைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு நம்ம காலேஜ் லைப்ரரிக்கு வா.. அங்க வச்சு எனக்கு இந்த ஆதாரத்துக்கு பதிலா என்ன வேணும்னு உனக்கு எக்ஸ்பிளைன் பண்ணி சொல்றேன்.. சரியா..?” என்றான் நிலவழகன்..

 

“சரி.. ஓகே..” என்றவள் அறைக்குள் வர அதற்குள் தேஜூவும் அவள் அமர்ந்திருந்த இடத்தில் போய் அமர்ந்தாள்..

 

“அது.. நான் ஊருக்கு கிளம்புறேன்… ரொம்ப டைம் ஆயிடுச்சு.. எங்க வீட்ல இருந்து இன்னும் கொஞ்ச நேரத்துல கார் வந்துரும்.. நான் போய் அதுக்குள்ள குளிச்சிட்டு கிளம்பணும்.. சோ தேஜு இஃப் யூ டோன்ட் மைண்ட்..” 

 

அவள் இழுக்க.. “புரியுது நித்திலா.. சரி.. இவ்வளவு தூரம் வந்திருக்கோமே.. உங்களை பாத்துட்டு போலாம்னு தான் வந்தோம்.. அப்ப நாங்க கிளம்புறோம்..” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் தேஜூ சுமியோடு…

 

வரும்போது தன் கைபேசியில் இருந்து சுமியின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தாள்.. சுமி அவள் அழைப்பை ஏற்க தன் கைப்பேசியை எதேச்சையாக மறந்தது போல் அப்படியே மேஜையின் மேல் செய்தித்தாள் அடியில் மறைத்து வைத்து விட்டு வந்தாள்..

 

இவர்கள் வெளியே சென்றவுடன் கதவை மூடி தாழிட்ட நித்திலா அவசர அவசரமாக சரணை அழைத்தாள்..

 

“டேய்.. சரண்.. எங்கடா இருக்க நீ?” அவள் குரலில் பதைபதைப்பை உணர்ந்தவன் “என்ன ஆச்சு நித்தி? ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்க?” என்று கேட்டான்..

 

“பின்ன.. உங்களை எல்லாம் ஃப்ரெண்டா வச்சிருந்தா பதட்டமா இல்லாம என்ன பண்றது..? ஒரு வேலை கொடுத்தா உருப்படியா செய்றீங்களா? இப்பதான் அந்த நிலவழகன் ஃபோன் பண்ணாண்டா.. போன முறை மாதிரி இந்த முறையும் அவன் கிட்ட ஒரு வீடியோ சிக்கி இருக்காம்.. அதை போட்டு காமிச்சான்னா நம்ம எல்லாம் மாட்டுவோம்ன்னு சொல்றான்.. அது.. ஏதோ… உன் மூலமா தான் அவனுக்கு ஒரு வீடியோ கிடைச்சிருக்குன்னு சொல்றான்.. நீ ஏதாவது எங்கேயாவது உளறி வச்சியாடா தடிமாடு?” கோவமாக கேட்டாள் அவள்..

 

“இல்ல நித்தி.. அன்னிக்கு பிரின்சிபல் ரூமில் இருந்து வெளியில் வந்ததும் நான் சஞ்சீவ் கிட்ட பிளான் எல்லாம் சக்ஸஸ்னு சொன்னேன்.. அவனும் நானும் கோகுலும் எப்படி டா.. சூப்பரா நடிச்சு அந்த அருணை வசமா மாட்டி விட்டோமான்னு கேட்டான்.. நானும் அவனை தட்டி கொடுத்து “சூப்பர் டா”ன்னு சொன்னேன்.. மத்தபடி நம்ம நடத்தின பிளான் பத்தி நாங்க எதுவுமே வாயை தொறக்கல” பாவமாக சொன்னான் சரண்..

 

“டேய்.. இது போதாதாடா..? நீங்க பேசின வீடியோ அவன்கிட்ட இருந்தா கூட நம்ம மாட்டிக்குவோமேடா.. நம்ம ஏதோ பிளான் பண்ணி இருக்கோங்கறது நிச்சயமா அந்த நிலவழகனுக்கு தெரிஞ்சி இருக்குமே.. ஆனா ஒரே ஒரு விஷயம் என்னன்னா அந்த நிலவழகன் நம்மளை இந்த முறை மாட்டி விடல.. அவன் என்கிட்ட ஏதோ டீல் பேசிட்டு இருக்கான்.. நான் என்னன்னு கேட்கிறேன்.. எப்படியாவது அந்த ஆதாரத்தை வாங்கி அழிக்க பாப்போம்.. அது மட்டும் வெளில வந்துச்சுன்னா நம்ம எல்லாரும் அருண்க்கு பதிலா காலேஜை விட்டு வெளியில போக வேண்டியதுதான்..” கவலையோடு சொன்னாள் நித்திலா..

 

“நித்திலா நீ ஏன் இவ்ளோ கவலை படுற? இதை வச்சு அவனால எதுவுமே ப்ரூவ் பண்ண முடியாது..” 

 

“அக்சுவலா சஞ்சீவும் கோகுலும் அந்த அருணுக்கு கேட்கிற மாதிரி அந்த சேஞ்சிங் ரூம்ல நீ போய் தேஜூவை டிரஸ் சேஞ்ச் பண்ணும் போது கதவிடுக்கு வழியா பாக்க போறே.. அவளுக்கு ப்ரபோஸ் பண்ணி கிஸ் பண்ண போறேன்னு  சொன்னதை அந்த நிலவழகன் ரெகார்ட் பண்ணி இருந்தான்னா .. எனக்கு எதுவும் பிராப்ளம் இல்ல சரண்.. நீ இந்த காலேஜ் விட்டு போறது நிச்சயம்..  சஞ்சீவ் கோகுல் பேசினதை கேட்டு தான் அருண் உன் மேல இருக்குற கோவத்துல அந்த சேஞ்சிங் ரூமுக்கு அவசர அவசரமா வந்தாங்கறது எல்லாருக்கும் தெரிஞ்சது.. அப்புறம் நீ மாட்டுறது 100 பர்சன்ட் நிச்சயம்..” நித்திலா சொல்ல சரண் சிரித்தான்.. 

 

“ஏய் நித்தி.. அப்படி என்னை மட்டும் மாட்டி விட்டு நீ தப்பிச்சிடலாம்னு பார்த்தியா? அவன் வீடியோ எடுத்திருந்தான்னா உன் பேரும் சேர்த்து தான் அதில் வரும்.. ஏன்னா இதுக்கெல்லாம் பிளான் போட்டு கொடுத்தது நீதான்னு அவங்க ரெண்டு பேருமே பேசி இருக்காங்க நித்தி..” என்றான் சரண்..

 

அதைக் கேட்டு திடுக்கிட்ட நித்திலா “சரி நமக்குள்ள மாட்டிக்கறதை பத்தி பேச வேண்டாம்.. இப்போ அவன் என்ன ஆதாரம் வச்சிருக்கான்னு நமக்கு கன்ஃபார்ம்டா தெரியாம அப்படியே விட்டோம்னா நம்ப  சிக்கிக்கறத்துக்கு வாய்ப்பு இருக்கு..” சட்டென தட்டை திருப்பினாள் நித்திலா..

 

“சரி.. அப்படீன்னா நீ அந்த நிலவழகனை பாத்து அவன் என்ன ஆதாரம் வச்சிருக்கான்னு முதல்ல கண்டுபிடி” என்றான் சரண்..

 

அப்போது நித்திலாவின் அறை கதவு மறுபடியும் தட்டப்படும் சத்தம் கேட்கவே நித்திலா கைபேசி இணைப்பை துண்டித்து விட்டு சென்று கதவை திறந்தாள்..

 

அங்கே தேஜூ நின்று கொண்டிருக்கவும் அப்படியே திடுக்கிட்டு பார்க்க “ஒன்னும் இல்ல.. ஃபோனை மறந்து விட்டுட்டு போயிட்டேன்.. அதான் எடுக்க வந்தேன்..” என்று சொன்னவள் வேகமாக உள்ளே சென்று தன் கைபேசியை எடுத்துக்கொண்டு “ஓகே.. பாய்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்..

 

தேஜுவின் அழைப்பை ஏற்ற சுமியும் நித்திலா பேசியது அனைத்தையும் தன் கைபேசியில் பதிவு செய்திருந்தாள்..

 

அதன் பிறகு நிலவழகனை கல்லூரிக்கு அழைத்த தேஜூ அவனிடம் நித்திலாவும் சரணும் பேசிக்கொண்டிருந்த உரையாடலை சுமியின் கைபேசியில் இருந்து போட்டு காண்பித்தாள்..

 

“இப்போ உங்களுக்கு அருண் பத்தி புரிஞ்சிச்சா தேஜூ?”

 

நிலவழகன் கேட்க “நான் அவர்கிட்ட ரொம்ப சாரி கேட்கணும்.. அவர் கொஞ்சம் கோபக்காரரா இருந்தாரு.. அதனால நான் அவரை தப்பா நினைச்சுட்டேன்.. அவர் மேல எந்த தப்பும் இல்லை..ன்னு எனக்கு இப்போ புரிஞ்சிடுச்சு.. எனிவேஸ் எனக்கு நித்திலா பத்தி புரிய வச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ் நிலவழகன்.. நான் ஒரு பெரிய பாவம் பண்றதுல இருந்து என்னை காப்பாத்திட்டீங்க.. இப்போ அருணை எப்படியாவது மறுபடியும் இந்த காலேஜ்ல மேடம் சேர்த்துக்கறதுக்கு வழி பண்ணனும்.. அதுக்கு முதல்ல நம்ப பிரின்ஸ்பல் மேடமை மீட் பண்ணனும்.. வாங்க போலாம்..” என்று சொல்லி நிலவழகனையும் சுமியையும் அழைத்துக் கொண்டு கல்லூரி முதல்வரின் அறைக்கு சென்றாள்..

 

அங்கு அவரிடம் அனுமதி கேட்டு உள்ளே சென்றவர்கள் “மேடம் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.. ஆக்சுவலி ஐ அம் வெரி சாரி மேடம்.. அந்த அருணை பத்தி தப்பு தப்பா சொல்லி அவருக்கு பனிஷ்மென்ட் வாங்கி கொடுத்துட்டேன்.. ஆனா அவர் எந்த தப்பும் பண்ணல மேடம்.. அவருக்கு எதிரா சதி நடந்து இருக்கு…” 

 

தேஜூ சொன்னதை கேட்டவர் புருவம் சுருக்கி “என்ன சொல்ற தேஜஸ்வினி.. நீ சொல்றது எதுவும் எனக்கு புரியல..” என்றார்..

 

“மேடம் நீங்க இந்த ஆடியோ கேளுங்க.. உங்களுக்கு நான் என்ன சொல்ல வரேன்னு புரியும்..” என்று சொல்லி நித்திலா சரணுடன் பேசிக் கொண்டிருந்த உரையாடலை சுமியின் கைபேசியில் இருந்து போட்டு காண்பித்தாள்..

 

அதைக் கேட்ட கல்லூரி முதல்வர் “புரியுது.. இதைதான் உனக்கு புரிய வைக்க நானும் முயற்சி செஞ்சேன்.. அந்த பையன் ரொம்ப நல்லவன்.. இதுல ஏதோ தப்பு நடந்து இருக்குன்னு எனக்கு தெரியும்.. ஆனா சாட்சி எல்லாமே அவனுக்கு எதிரா இருந்ததனால நான் அவனை பனிஷ் பண்ண வேண்டியதா போயிருச்சு.. நான் நிதிலாவையும் சரணையும் கூப்பிட்டு விசாரிக்கிறேன்..” என்று சொன்னவரிடம் “இல்ல மேடம்.. அவசரப்படாதீங்க.. அவங்களை கூப்பிட்டு கேட்டீங்கன்னா இந்த ஆடியோ எல்லாம் ஃபேக்ன்னு சொல்லிடுவாங்க.. அதனால நாங்க ஒரு பிளான் பண்ணி வச்சிருக்கோம்.. எங்களோட நீங்களும் கோஆபரேட் பண்ணனும்..” அவரிடம் தான் போட்ட திட்டத்தை விளக்கினாள்..

 

“ஓகே.. அப்படியே பண்ணுவோம்.. நிலவழகன் ஈவினிங் 4 ஓ கிளாக் அந்த நித்திலாவை மீட் பண்ண போறானா?” என்று கேட்க “ஆமா மேடம் நம்ம காலேஜ் லைப்ரரில தான் மீட் பண்ண போறாரு..” என்றாள் தேஜு..

 

“ஓகே தென்.. கோ அஹெட்.. பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு..” என்றார் கல்லூரி முதல்வர்..

 

மாலை 4 மணிக்கு சொன்னபடி நித்திலா அந்த கல்லூரி நூலகத்திற்கு வந்திருக்க அவள் கூடவே சரணும் வந்து அங்கு ஒரு மேஜை அருகில் கதிரையில் அமர்ந்திருந்தார்கள்.. அங்கு சென்ற நிலவழகன் அவர்களுக்கு எதிரில் இருந்த கதிரையில் அமர்ந்தான்..

 

“அட.. பரவாயில்லையே டைமுக்கு முன்னாடியே வந்து உக்காந்து இருக்கீங்க..” 

 

அவன் கேலியாய் சொல்ல “வெட்டி பேச்சு எல்லாம் வேண்டாம்.. நாங்க அருண் மேல பழி போட்டோம்னு சொல்ற மாதிரி ஏதோ வீடியோ ஆதாரம் வச்சிருக்கேன்னு சொன்னியே.. எங்க அதை போட்டு காட்டு..” படபடவென கேட்டாள் நித்திலா..

 

“எதுக்கு இவ்வளவு அவசரம் நித்துமா.. கொஞ்சம் வெயிட் பண்ணு.. நீ.. சரண்.. ரெண்டு பேரும் அந்த சஞ்சீவ் கோகுலோட சேர்ந்து என்னென்ன வேலை எல்லாம் பண்ணுனிங்கன்னு எல்லாம் அப்படியே சுத்தமா ரெக்கார்டு ஆயிருக்கு.. இதில் இருந்து நீங்க நாலு பேருமே தப்பிக்க முடியாது..” 

 

நிலவழகன் சொல்ல.. “அப்போ சஞ்சீவும் கோகுலும் தேஜூவை பத்தியும் சரண் பத்தியும் அந்த அருண் காதுல விழுற மாதிரி பேசுனதெல்லாம் இந்த வீடியோல ரெக்கார்ட் ஆயிடுச்சா?” என்று கேட்டாள் நித்திலா..

 

“சஞ்சீவும் கோகுலும் அந்த சேஞ்சிங் ரூம்ல சரண் என்னவெல்லாம் செய்யப் போனான்னு புட்டு புட்டு வைக்கிற மாதிரி  அது தவிர இந்த பிளான் எல்லாம் போட்டு கொடுத்தது நீதான்னு சொல்ற மாதிரி எல்லாம் ஒரு வீடியோ ரெகார்ட் ஆயிருக்கு.. சோ.. இப்போ டீல் பேசலாமா?” என்று கேட்டான் நிலவழகன்…

 

“நிலவழகா.. நீ எப்போதிலிருந்தோ என்னோட ஃப்ரெண்டு ஆகணும்னு சொல்லிக்கிட்டு இருக்க இல்ல? நான் உன்னை என்னோட ஃப்ரெண்டா அக்செப்ட் பண்ணிக்கிறேன்.. அதுக்கு பதிலா நீ இந்த ஆதாரத்தை என்கிட்ட கொடுத்து உன் கிட்ட இருக்கிறதை அழிச்சுடு..” 

 

“என்ன.. உன் ஃப்ரெண்டா.. இவ்வளவு கேவலமான குணம் இருக்குற உன்னோட ஃப்ரெண்டாகறதுக்கு இந்த ஜென்மத்துல நான் இனிமே ஆசைப்பட மாட்டேன்.. உன்னை அப்படி கேட்டதுக்காக இப்ப ரொம்ப வருத்தப்படுறேன்.. நான் உன்கிட்ட கேட்க வேண்டியது ஒரே ஒரு விஷயம் தான்.. போன முறை நீ தான் தப்பு பண்ணி இருக்கேன்னு காலேஜ் முழுக்க தெரிஞ்சப்பவும் அருண் உன்னை மன்னிச்சு இந்த காலேஜ்லயே படிக்கிறதுக்கு பிரின்சிபல் மேடம் கிட்ட ரிக்வெஸ்ட் பண்ணி கேட்டுகிட்டான்.. இப்போ உன்னை பத்தி நான் எந்த ஆதாரத்தையும் காலேஜ்ல கொடுக்க கூடாதுன்னா நீ பிரின்சிபல் மேடம் கிட்ட போயி அருணை மன்னிச்சு இந்த காலேஜ்ல கன்டினியூ பண்றதுக்கு கேட்கணும்.. இதுதான் என்னோட கண்டிஷன்.. ஒரு நல்லா படிக்கிற பையனோட படிப்பு கெட்டுப் போறதை நான் விரும்பல.. இந்தக் காலேஜ் சேர்ந்த புதுசுல உன் குணத்தை பத்தி தெரியாம இருந்தப்போ உன்னை எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது.. அந்த ஒரு காரணத்துக்காக தான் நான் இந்த ஆதாரத்தை வெளியில கொடுக்காம இருக்கேன்.. ஆனா அதுக்காக அருண் படிப்பு கெட்டுப் போறதை என்னால அலவ் பண்ண முடியாது.. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது.. இந்த லீவு முடிஞ்சு அருண் மறுபடியும் இந்த காலேஜ்ல அவன் படிப்பை கன்டின்யூ பண்ணனும்.. அதுக்கு நீ தான் பொறுப்பு.. அப்படி அவன் கண்டினியூ பண்ணல ரியோப்பனிங்க் டே அன்னைக்கு நான் இந்த வீடியோவை மேடம் கிட்ட போட்டு காமிச்சுருவேன்.. என்ன நான் சொல்றதை பண்றியா..?” என்று கேட்டான் நிலவழகன்..

 

“முடியாது.. அந்த அருண் எனக்கு செஞ்ச அவமானத்துக்கு தான் அவனை இந்த காலேஜை விட்டு துரத்தி நான் பழி வாங்குனேன்.. என்னால அவன் மறுபடியும் அவனோட படிப்பை கன்டினியூ பண்றதுக்கு எதுவுமே பண்ண முடியாது” என்று சொன்னவள் “டேய் வாங்கடா..” என்று அழைக்க அங்கு புத்தகம் அடுக்கிய அலமாரியின் பின்னிருந்த கோகுலும் சஞ்சீவும் வெளியே வந்தார்கள்.. அவர்கள் இருவரும் நிலவழகனை பிடித்துக் கொள்ள சரண் அவன் சட்டை பையில் இருந்து அவன் கைபேசியை எடுத்தான்..

 

“டேய் அதுல என்ன வீடியோ இருக்குன்னு பார்த்து ஃபுல்லா அழிச்சுடுடா” என்றாள் நித்திலா..  நிலவழகனை முறைத்துக் கொண்டே.. 

 

சரண் அந்த கைபேசியில் காணொளிகளை பார்க்க அதில் அவன் சொன்னது போல் எந்த காணொளியும் இல்லாதது கண்டு “நித்திலா இதுல அப்படி எதுவுமே இல்லை நித்திலா..” என்று சொன்னான்..

 

“டேய் உன்ன கொன்னுடுவேன் டா.. எங்கடா அந்த வீடியோ..?”

 

நித்திலா கேட்க நிலவழகன் சிரித்துக்கொண்டே “வீடியோ தானே.. இதோ அங்க இருக்கு பாரு ஒரு ஹிட்டன் கேமரா.. அதுல நல்லா ரெக்கார்ட் ஆயிருக்கும்.. அந்த வீடியோவை பிரின்ஸ்பல் மேடம் பார்த்துக்கிட்டு இருப்பாங்க.. அனேகமா இங்க வந்துகிட்டே இருப்பாங்க..” என்று சொல்லி வாய் மூடிய நேரம் அந்த நூலகத்திற்குள் நுழைந்தார் கல்லூரி முதல்வர்.. அவர் பின்னே சுமியும் தேஜுவும் புன்னகைத்துக் கொண்டே வந்தார்கள்..

 

தொடரும்..

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!  கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!!  இந்த யூடி பத்தியும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! 

 

உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!