அடியே என் பெங்களூர் தக்காளி…(10)

4.5
(15)

அத்தியாயம் 10

 

“இந்த பஞ்சப் பரதேசி வேற பார்த்துட்டானா ஐய்யய்யோ ஓட்டியே சாவடிப்பானே” என்று நினைத்த திலீப், “அது வந்து மச்சி என் கன்னத்தில் ஒரு கொசு கடிச்சுச்சு அது எப்படி நான் முத்தம் கொடுக்க வேண்டிய இடத்தில் நீ என் திலீப்பை கடிச்சுட்டு இருப்பேன்னு கொசு மேல் கோபப்பட்டு என் கன்னத்தில் இருந்த கொசுவை அடிச்சாடா அதை பார்த்து விட்டு நீ ஏதோ தப்பா புரிஞ்சுகிட்ட போல” என்றான் திலீப்.

 

“நாயி எப்படி எல்லாம் சமாளிக்குது பார்த்தியா” என்று நினைத்த ரஞ்சித், “மச்சான் என் இரண்டு காதையும் நல்லா பாரு” என்றான் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு.

 

“ஏன் நாயே உன் காதில் சீழ் வடியுதா?” என்ற திலீப்பை முறைத்தவன், “எனக்கு காது ஐந்து வயசுலையே குத்தியாச்சு புதுசா நீ ஒன்னும் காது குத்த வேண்டாம்னு சொல்ல வந்தேன்டா” என்றான் ரஞ்சித்.

 

“அப்படியா மச்சி” என்ற திலீப் அசடு வழிய, “என்ன அவள் உன்னை ரிவெஞ்ச் எடுக்கிறாளா?” என்று ரஞ்சித் சிரித்திட, “மே பி இருக்கலாம் சரி வா போகலாம்” என்று தோழனை இழுத்துக் கொண்டு சென்றான் திலீப்.

 

“இவன் என்னடா மந்திரிச்சு விட்டவன் மாதிரியே சுத்திட்டு இருக்கிறான்” என்று நினைத்த ரஞ்சித் ராகவ் அருகில் வந்தான்.

 

“என்ன ராகவ் கல்யாண மாப்பிள்ளை நீ எப்போ பாரு ஏதோ யோசிச்சுட்டே இருக்க” என்ற ரஞ்சித்திடம், “ஒன்றும் இல்லைடா” என்று கூறிய ராகவ் பல்லவியை பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

“இப்போ ஏன் பல்லவியை பார்த்துக் கொண்டு இருக்க” என்ற ரஞ்சித்திடம் , “பல்லவி பாவம் தானே” என்றான் ராகவ்.

 

“என்ன திடீர்னு பல்லவி மேல பாவம் எல்லாம் படுற” என்ற ரஞ்சித்திடம், “இல்லைடா இன்னைக்கு சாம்பவி சந்தோஷமா புடவை செலக்ட் பண்ணுறாளே இப்படித் தானே அன்னைக்கு பல்லவியும் செலக்ட் பண்ணி இருப்பாள்” என்று கூறினான் ராகவ்.

 

“சரி அதுக்கு என்ன பண்ணலாம் பைத்தியமாடா நீ அன்னைக்கு அவளை பிடிக்க வில்லை இவளைத் தான் பிடிச்சிருக்குனு நீ தானே சொன்ன” என்றான் ரஞ்சித்.

 

“ஆமாம்” என்று ராகவ் ஏதோ சொல்ல வர குறுக்கே இந்த கௌசிக் வந்த மாதிரி ராகவ் என்று வழிந்து கொண்டு சாம்பவி வந்து விட்டாள்.

 

“எங்கே நம்ம ஆளைக் காணோம்” என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு இருந்தான் திலீப்.

 

பல்லவி ஓரிடத்தில் அமர்ந்து அழுது கொண்டு இருந்தாள். மற்றவர்கள் பார்க்கும் முன் தன் கண்களை துடைத்துக் கொண்டு அவள் திரும்ப, “ஏய் என்ன இங்கே வந்து ஒளிஞ்சுட்டு இருக்க” என்றவனை அவள் முறைத்து விட்டு கடந்து சென்றாள்.

 

“பாருடா கொழுப்பை அடியே தக்காளி நில்லு டீ” என்றவனை அவள் கோபமாக பார்க்க,  “ரொம்ப முறைக்காத உன் பன்னு கன்னத்திலேயே ரொம்ப ரொம்ப அழகா இருக்கிறதே இந்த முட்டைக்கண்ணு தான். உன் கோப அக்கினி தாங்காமல் கண்ணு இரண்டும் கழன்று விழப் போகுது” என்றவனை முறைத்தவள் , “என்னடா வேண்டும் உனக்கு?” என்றாள் 

 

“நீ தான் டீ வேண்டும்” என்றான் அவன் வெண்பற்கள் தெரிய புன்னகைத்து.

 

“அப்போ அன்னைக்கு ஏன் என்னை வேண்டாம்னு சொன்ன” என்றவளிடம், “அன்னைக்கு நீ ரொம்ப குண்டா இருந்த அதான் வேண்டாம்னு சொன்னேன்” என்றவனைப் பார்த்து பற்களைக் கடித்தவள், “இப்போ மட்டும் நான் என்ன ஒல்லி பெல்லியாவா இருக்கேன் இப்போ மட்டும் ஏன் பிடிச்சுருக்காம்?” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

 

“அதான் டீ பிடிச்சுருக்கு நான் வேண்டாம்னு சொன்ன கோபத்தில் டயட், எக்சர்சைஸ் எல்லாம் பண்ணி உடம்பை குறைப்பன்னு நினைச்சேன் டி ஆனால் நீயோ என் குண்டு தக்காளி கொஞ்சம் கூட உடம்பை குறைக்காமல் அப்படியே இருக்க பார்த்தியா ஐ லவ் யூ” என்றான் கண்களில் காதல் பொங்க.

 

“அசிங்கமா திட்டுறதுக்குள்ள ஓடிப் போயிரு” என்றவளைக் கண்டு, “திட்டுச் செல்லம்.  நீ எவ்வளவு திட்டினாலும் மாமா உன்னை கல்யாணம் பண்ணிக்காமல் விட மாட்டேன்” என்றான் அவன்.

 

அவள் ஏதோ சொல்ல வர அவளைப் பிடித்து தன் பக்கமாக இழுத்தவன், “என்னடி ஒரே இழுப்பில் வந்துட்ட அப்போ வெறும் சதை தான் வெயிட் இல்லை போலையே” என்றவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு , “ஐ லவ் யூ டீ என் பெங்களூர் தக்காளி” என்றான்..

 

“பொறுக்கி” என்று அவள் அவனை அடிக்க கை ஓங்கிட , “என்னடி சும்மா சும்மா கை ஓங்கிட்டே இருக்க” என்ற திலீப், “பல்லவி அன்னைக்கு நான் உன்னை ரிஜெக்ட் பண்ணுனது தப்பு தான் நான் மறுக்கவே இல்லை அதற்கு ரிவெஞ்ச் எடுக்கிறேன்னு இன்னைக்கு நீ என்னை வேண்டாம்னு சொன்னாலும் உன்னை விட்டுருவேன்னு மட்டும் நினைக்காதே இன்னும் பத்து அறை அறைஞ்சாலும் சரி, ஏன் நீ என்னை செருப்பால அடிச்சாலும் சரி உன் கழுத்தில் தாலி கட்டாமல் இந்த ஊரை விட்டு போக மாட்டேன்” என்றான் திலீப்.

 

“பவிமா” என்று வந்தார் செல்வராணி. “இதோ வரேன் அத்தை” என்று அவள் கிளம்பி விட, “தம்பி நீங்க” என்று கேட்ட செல்வராணியிடம், “மாமா சொன்னாங்களேம்மா நம்ம பல்லவியை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணினது இந்த தம்பி தான்” என்று சங்கவி கூறினாள்.

“ரொம்ப ரொம்ப நன்றி தம்பி” என்ற செல்வராணி அவனிடம் பாசமாக பேசிக் கொண்டு இருந்தார்.

 

சாம்பவியும், ராகவ்வும் புடவை எடுத்துக் கொண்டு இருப்பதை பார்த்து “எனக்கு மட்டும் ஒரு பையன் இருந்தால் இந்நேரம் என் தம்பி மகளை அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன் என்ன பண்ண” என்று புலம்பினார் செல்வராணி.

 

“பேசாமல் என்னை உங்க பையனா நினைச்சு உங்க தம்பி பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வைங்களேன்” என்றான் திலீப்.

 

“என்ன சொல்லுற தம்பி” என்ற செல்வராணியிடம், “ஆமாம் அம்மா என்னை உங்க பையனா தத்தெடுத்து கூட உங்க தம்பி பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க சொத்தில் எல்லாம் பங்குக்கு வர மாட்டேன் ஆனால் பல்லவியை மட்டும் எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க” என்றான் திலீப்.

 

“தம்பி என்ன சொல்லுற நீ பல்லவியும், நீயும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புகிறீங்களா?” என்றார் செல்வராணி.

 

அவர்கள் பேசிக் கொண்டு இருப்பதைக் கண்டு “அத்தை” என்று வந்த பல்லவி திலீப்பை முறைத்தவள், “அவன் உங்க கிட்ட விளையாடுகிறான் அத்தை. என்ன திலீப் நீ உன் விளையாட்டுக்கு அளவே இல்லையா ரஞ்சித் உன்னை தேடிட்டு இருக்கான் பாரு” என்று அவனை அனுப்பி வைத்தாள்.

 

“பவிமா அந்த பையன் நிஜமாகவே விளையாட்டுக்கு தான் அப்படி சொன்னானா?” என்ற செல்வராணியிடம், “ஆமாம் அத்தை அவனுக்கு வேற வேலையே இல்லை எப்போ பாரு யாரையாவது ப்ராங்க் பண்ணிட்டே இருப்பான்” என்ற பல்லவி தன் அத்தையை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.

 

இரவு உறக்கம் வராமல் மொட்டை மாடியில் உலாவிக் கொண்டு இருந்தாள் பல்லவி. 

 

திலீப் தன்னிடம் பேசியது, தன் அத்தையிடம் பேசியது என அனைத்தையும் யோசித்துக் கொண்டே அவள் நடந்து கொண்டிருக்க, “ஹாய் பவி” என்று வந்தான் திலீப்.

 

அவள் அதிர்ந்து போய் திரும்ப புன்னகையுடன் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான். “ஏய் நீ என்ன இங்கே” என்ற பல்லவியிடம், “ராமன் இருக்கிற இடம் இல்லை இல்லை என்னோட சீதா இருக்கிற இடம் தானே ராமன் எனக்கு அயோத்தி அதான் வந்தேன்” என்று அவன் கூறிட , “பைத்தியம் மாதிரி பேசாதே திலீப். இங்கே இருந்து போ” என்றாள் பல்லவி.

 

“என்ன டீ எப்போ பாரு என்னை ஏதோ நாயைக் கண்டது போல விரட்டிட்டே இருக்க” என்ற திலீப், “பவி ப்ளீஸ் உனக்கு இதை கொடுக்க தான் வந்தேன்” என்றான் திலீப்.

 

“என்ன இது” என்ற பல்லவியிடம், “புடவை தான் என்றவன் நாளைக்கு இதைத் தான் நீ கட்டிக்கனும்” என்றான்.

 

“அதெல்லாம் முடியாது” என்று அவள் கூறிட, “கட்டித் தான் ஆகனும்” என்று  அழுத்திக் கூறியவன் , “ஐ லவ் யூ பவி” என்றான்.

 

அவனை முறைத்தவள் “தயவு செய்து ப்ராங்க் பண்ணுறதை நிறுத்து திலீப் எரிச்சலா இருக்கு” என்றாள் பல்லவி. “எது பல்லவி ப்ராங்க் நான் உன்னை நிஜமாகவே லவ் பண்ணுறேன்” என்றான் திலீப் வர்மன்.

 

அவள் அவனை நம்பாத பார்வை பார்த்து விட்டு கடந்து செல்லப் போக அவளைப் பிடித்து இழுத்து சுவரோடு தள்ளியவன், “எது டீ ப்ராங்க்” என்று கேட்டுக் கொண்டே அவளது இதழில் தன் இதழைப் பதித்தான்.

 

அவள் திமிர ஆரம்பிக்க ஒரு கையால் அவளது கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு மற்றோரு கையால் அவளது பின்னங் கழுத்தை அழுத்திட அவளால் அவன் பிடியிலிருந்து தப்ப முடியாமல் மௌனமாக கண்ணீர் வடித்தாள்.

 

அவளைப் பிரிந்தவன், “ஐ லவ் யூ பல்லவி இப்போவாச்சும் புரிஞ்சுக்கோ  நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படுகிறேன். இன்ஃபேக்ட் உன்னை கல்யாணம் பண்ணிக்க மட்டும் தான் நான் ஃபாரின்ல இருந்து வந்ததே அது ஏன் டீ உனக்கு புரியவே மாட்டேங்குது தயவு செய்து என்னை புரிஞ்சுக்கோ பல்லவி” என்றவன் , “நாளைக்கு நீ இந்த புடவையை தான் கட்டிக்கனும்.

 

அப்படி நீ கட்டிக்கலைனா இன்னைக்கு மொட்டை மாடியில் நடந்த நம்மளோட மிட்நைட் லிப்லாக் ஸீன் ஃப்ரீ ஷோவா லைவ்வா என்கேஜ்மென்ட்டுக்கு வந்த எல்லோருக்கும் விருந்தா அமையும் வரட்டுமாடீ என் பெங்களூர் தக்காளி” என்று சொல்லி விட்டு அவன் பைப்பை பிடித்து கீழே இறங்க ஆரம்பித்தான்.

 

பல்லவிக்கு தான் ஐயோ என்று இருந்தது. “இவன் நிஜமாகவே என்னை விரும்புறானா?” என்று யோசித்தவளைப் பார்த்து , “அவன் மட்டும் தான் விரும்புறானா? மகாராணி மனசுல அந்த எண்ணம் எல்லாம் இல்லையா?” என்று அவளது மனசாட்சி கேள்வி கேட்டது.

 

“அவனைத் தவிர வேற யாருக்கும் எப்பவுமே என் மனசுல இடம் இருந்ததில்லை ஆனால் அவனை” என்று ஏதோ சொல்ல வந்தவள் மௌனமாக கண்ணீர் சிந்தினாள். 

 

“பவி , பவி” என்ற சங்கவியின் குரல் கேட்டிட , “இதோ வரேன் அத்தாச்சி” என்று அவள் கீழே சென்று விட்டாள்.

 

தன் அறைக்கு சென்று அவன் கொடுத்த புடவையை மறைத்து விட்டு சங்கவியைத் தேடி வந்தாள் பல்லவி.

 

(…. அடியே…)

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!