அடியே என் பெங்களூர் தக்காளி…(2)

4.8
(18)

அத்தியாயம் 2

 

“எனக்கு கண்டிப்பா அந்த ராகவ்க்கு சாம்பவியை கல்யாணம் பண்ணி வைக்க இஷ்டமில்லை பல்லவி. நிச்சயதார்த்தம் அப்போ உன்னை பிடிக்கவில்லை உன் தங்கச்சியை தான் பிடிச்சிருக்குன்னு சொல்லி என் பொண்ணோட மனசை கொன்று போட்ட ஒருத்தனை என்னால் எப்படி மருமகனா ஏற்றுக் கொள்ள முடியும் , அது மட்டும் இல்லை உன் மனசுல கூட அவன் மேல் ஒரு அபிப்பிராயம் இருந்துச்சுல பல்லவி நாளைக்கு அவன் சாம்பவியை கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு வரும் போது உன் மனசு எவ்வளவு கஷ்டப் படும் பேசாமல் சாம்பவிக்கு வேற சம்பந்தம் பார்க்கலாம்னு தோனுது” என்று வாசுதேவன் கூறிட, “சபாஷ் டாடி ,சபாஷ் அப்போ இந்த விளங்காதவளை பிடிக்க வில்லை என்று ராகவ் சொன்னதால் தான் என் கல்யாண விஷயம் பற்றி பேசினாலே எரிச்சல் படுறீங்களா?, இவளுக்காக நான் காதலிக்கிறவனை மறந்துட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கனுமா?” என்று கேட்டாள் சாம்பவி.

 

“இவள் அழகா இருந்தால் ஏன் அவன் இவளை பிடிக்கவில்லை என்று சொல்லப் போகிறான். நல்லா தின்னு , தின்னு மலை மாடு மாதிரி உடம்பு வளர்த்து வச்சுருந்தால் எவன் இவளை கல்யாணம் பண்ணிக்க வருவான்.

 

ராகவ் மட்டும் தான் இவளை பிடிக்கவில்லை என்று சொன்னது போல பேசிட்டு இருக்கீங்க அப்பறம் ஏன் டீ விடியா மூஞ்சி உனக்கு என் ராகவ் மேல காதலா உன் உடம்பை என்னைக்காவது கண்ணாடியில் பார்த்து இருக்கியா? நல்லா பூசணிக்காய்க்கு புடவை சுத்தினது போல இருந்துட்டு உனக்கு எல்லாம் என் ராகவ் கேட்குது.

 

அவனோட சிக்ஸ் பேக் உடம்பு என்ன? அவனோட ஸ்டைல் என்ன? அவனோட அழகு என்ன? நீ எல்லாம் அவனை கனவுல கூட ஆசைப் பட தகுதி இல்லாதவள்” என்று சாம்பவி பேசிக் கொண்டே போக , “வாயை மூடு சாம்பவி” என்று அவளது கன்னத்தில் அறைய கையை ஓங்கினார் வாசுதேவன்.

 

“என்ன பேசிட்டு இருக்க நீ அவள் உன்னோட அக்கா அவளை இவ்வளவு மோசமா பேசனுமா” என்று பற்களைக் கடித்தார் வாசுதேவன்.

 

“என் வருங்கால கணவன் மேல அவளுக்கும் ஆசை இருக்குன்னு நீங்கள் சொல்லிக் கொண்டு இருக்கீங்க அதற்கு அவள் மறுப்பே சொல்லாமல் இருக்கா அவளை கொஞ்சனுமா?” என்ற சாம்பவியிடம், “உன் வருங்கால கணவன் மேல எனக்கு எப்போதும் எந்த ஆசையும் இருந்ததில்லை சாம்பவி. இந்த பிரச்சினையை இத்தோட விட்டுரு ப்ளீஸ்” என்று அவளை கையெடுத்து கும்பிட்டாள் பல்லவி.

 

 

அவள் மேலும் ஏதோ பேச வர, பல்லவி அந்த இடத்தில் இருந்து வெளியே சென்று விட்டாள்.

 

“என்ன வைதேகி அவள் அவ்வளவு பேசிட்டு இருக்கிறாள் நீ கொஞ்சம் கூட அவளை கண்டிக்காமல் இருக்க” என்றார் வாசுதேவன்.

 

“என்ன கண்டிக்க சொல்லுறீங்க பல்லவி கிட்ட நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க உங்களுக்கு தெரியும் தானே நம்ம பொண்ணு சாம்பவி அந்த ராகவ் மேல உயிரையே வச்சுருக்கானு தெரிஞ்சும் நீங்க பல்லவி கிட்ட சாம்பவிக்கு வேற மாப்பிள்ளை பார்க்கனும்னு சொன்னால் என்ன அர்த்தம் அப்போ உங்க பொண்ணு மனசு வேதனைப் படும்ங்கிறதால என் பொண்ணோட கல்யாணத்தை கெடுக்க பார்க்கிறீங்களே நாளைக்கு நானும், என் பொண்ணும் உயிரோட இருக்கிறது உங்க பொண்ணுக்கு வேதனையா இருந்தால் என்னையும், என் பொண்ணையும் கொன்று விடுவீங்களா?” என்றார் வைதேகி கோபமாக.

 

“என்ன பேசுற வைதேகி நீ ஒரு அம்மா தானே உன் பொண்ணு யாரை காதலிக்கிறாள் என் பொண்ணு பல்லவியை நிச்சயம் பண்ண வந்த மாப்பிள்ளையை. இதே சாம்பவியை பார்க்க வந்த மாப்பிள்ளை பல்லவியை பிடிச்சிருக்குனு சொன்னால் நீ நல்லா வாழ்ந்துட்டு போ பல்லவினு கல்யாணம் பண்ணி வைத்து அனுப்புவியா உன் மனசை தொட்டு சொல்லு” என்று வாசுதேவன் கேட்டதும் வைதேகி மௌனமாகினார்.

 

“உன் பொண்ணு பண்ணினால் தப்பும் உனக்கு சரி ஏன்னா அவள் உன் இரத்தம் என்ன தான் நீ வளர்த்தாலும் நீ ஒரு போதும் பெத்த அம்மா இல்லையே. உன் மகள் ராகவ்வை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்ன அன்னைக்கு அவளை அடிச்சு அவளுக்கு நல்ல புத்தி சொல்லி இருந்தால் நீ பல்லவிக்கும் நல்ல அம்மா. ஆனால் நீ உன் மகளோட ஆசைக்கு தூபம் தானே போட்ட. ஒருவேளை பல்லவி உன் வயிற்றில் பிறந்த பொண்ணா இருந்தால் அவளோட கல்யாணம் நடக்காமல் சாம்பவியோட கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணுவியா? அப்பவே புரிஞ்சு போச்சு சாம்பவி பேசுற எல்லாமே உன் மனசுல உள்ளது உன்னால வெளிப்படையாக பேச முடியாதே அதனால் தான் உன் மகள் மூலமாக பேச வைக்கிற” என்ற வாசுதேவன் கோபமாக தன் அறைக்கு சென்று விட்டார்.

 

அவர் சென்ற பிறகு பல்லவியை பார்த்த வைதேகி , “இப்போ சந்தோஷமா டீ உனக்கு நான் சாப்பிட சொல்லும் போது நீ சாப்பிட்டிருந்தால் இந்த வீட்டில் இவ்வளவு பிரச்சினை வந்திருக்குமா?” என்று பற்களைக் கடித்தார் வைதேகி.

 

“சித்தி நிஜமாகவே எனக்கு பசி இல்லை அதனால் தான் வேண்டாம்னு சொன்னேன். அப்பா ஊட்டும் போது என்னால மறுக்க முடியலை அதான் சாப்பிட்டேன்” என்று பல்லவி கூறிட, “நல்லா நடிக்கிற பல்லவி” என்று கூறி விட்டு வைதேகி சென்று விட்டார்.

 

 

“ஹாய் பல்லவி” என்ற ரஞ்சித்தை பார்த்து புன்னகைத்த பல்லவி, “சொல்லுங்க ரஞ்சித்” என்றாள். “மேரேஜ் இன்விடேசன் ப்ரிண்ட் செய்ய தான் வந்தேன்” என்றான் ரஞ்சித்.

 

“உங்களுக்கு கல்யாணமா?” என்ற பல்லவியிடம், “கல்யாணம் எனக்கு பல்லவி” என்று வந்தான் ராகவ்.

 

புன்னகையுடன் ரஞ்சித்திடம் பேசிக் கொண்டு இருந்த பல்லவியின் முகம் ராகவ்வை பார்த்ததும் கூம்பிப் போனது.

 

“இன்விடேசன் டிசைன் எல்லாம் பாருங்க இல்லை வேற மாதிரி வேண்டும் என்றால் எப்படி வேண்டும் என்று சொல்லுங்க பண்ணி கொடுக்கிறேன்” என்றாள் பல்லவி தலையை குனிந்த படி.

 

“என்ன பல்லவி அவன் கிட்ட சிரிச்சு பேசிட்டு என்னை பார்த்ததும் சைலண்ட் ஆகிட்ட” என்ற ராகவ்விடம், “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ராகவ் நீங்க டிசைன் பாருங்க” என்ற பல்லவி “அபி” என்று தோழியை அழைத்தாள்.

 

“என்ன பல்லவி” என்ற அபிநயாவிடம் , “சார்க்கு டிசைன் எல்லாம் காட்டு” என்று சொல்லி விட்டு தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள் பல்லவி.

 

“பல்லவி ஒரு நிமிஷம்” என்ற ராகவ்விடம் “என்ன” என்றாள் பல்லவி. “நாம ஃப்ரெண்ட்ஸ் தானே ஏன் என் கிட்ட பேசவே மாட்டேங்கிற” என்றான் ராகவ்.

 

“இப்போ கூட உங்க கிட்ட பேசிட்டு தானே இருக்கேன்” என்ற பல்லவியை முறைத்தவன், “முன்னே மாதிரி ஒரு உரிமையா ஏன் பேச மாட்டேங்கிற வேண்டாத விருந்தாளிகிட்ட பேசுற போல இருக்கு உன்னோட நடவடிக்கை” என்றான் ராகவ்.

 

“ராகவ் நீங்க இன்விடேசன் டிசைன் கொடுக்க தானே வந்தீங்க வந்த வேலையை மட்டும் பாருங்க” என்றாள் பல்லவி. “நான் சாம்பவியை கல்யாணம் பண்ணிக்கிறது உனக்கு பிடிக்கலையா பல்லவி?” என்றான் ராகவ்.

 

“அவளுக்கு பிடிக்க வில்லை என்று சொன்னால் நீங்க கல்யாணத்தை நிறுத்திருவீங்களா மிஸ்டர்?” என்றாள் அபிநயா. “அபி என்ன பேசுற உன் வேலையை மட்டும் பாரு” என்று தோழியை அடக்கினாள் பல்லவி‌.

 

“இல்லை பல்லவி” என்று அவள் ஏதோ சொல்ல வர, “நான் சொல்றேன்ல” என்று அவளை அடக்கியவள், “ராகவ் ப்ளீஸ் என் வேலையை கெடுக்காதீங்க இந்த மந்த் நிறைய இன்விடேசன் ஆர்டர் வந்திருக்கு அதை எல்லாம் நான் முடிச்சு ஆகனும் ஸோ ப்ளீஸ்” என்று கூறிய பல்லவி தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.

 

“சார் உங்க மேரேஜ் டேட், மாப்பிள்ளை, பொண்ணு பெயர் இப்படி எல்லா டீட்டெய்ல்ஸும் கொடுங்க” என்று அபி கேட்டிட , “கல்யாண இன்விடேசன் இல்லைங்க என்கேஜ்மென்ட் இன்விடேசன்” என்று கூறிய ரஞ்சித் டீட்டெய்ல்ஸ் கொடுத்தான்.

 

ராகவ் பல்லவியையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் மறந்தும் அவன் புறம் திரும்பவில்லை.

 

“வரோம் பல்லவி” என்று கூறிய ரஞ்சித்திடம் புன்னகையுடன் பேசி அனுப்பி வைத்தாள் பல்லவி.

 

“அந்த பல்லவிக்கு எவ்வளவு திமிரு உன் கிட்ட எல்லாம் சிரிச்சு பேசுகிறாள் என்னை பார்த்தால் இழப்பமா?” என்று கோபமாக கேட்டான் ராகவ்.

 

“நீ மட்டும் அவளை நிச்சயம் பண்ண போன இடத்தில் அவளை பிடிக்க வில்லை அவளோட தங்கச்சியை பிடிச்சிருக்குன்னு சொன்னீயே அப்போ அவள் என்ன இழப்பமா?” என்றான் ரஞ்சித்.

 

“டேய் எதை எதோட முடிச்சு போடுற” என்று ராகவ் பற்களைக் கடித்தான். “என்ன மச்சான் நீ உனக்கு வந்தால் இரத்தம் அவளுக்கு வந்தால் மட்டும் தக்காளி சட்னி யா” என்று ரஞ்சித் கேட்டிட, “போடா இவனே” என்றான் ராகவ்.

 

“நீ ஏன் பல்லவி அவனை அவாய்ட் பண்ணுற ஒருவேளை உன் மனசுல அவன்” என்று தயங்கினாள் அபிநயா.

 

“ச்சே ச்சே சத்தியமா அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் ராகவ் மேல எனக்கு எந்த ஃபீலிங்ஸுமே கிடையாது. அன்னைக்கு அவன் என்னை பிடிக்கலைன்னு சொன்னப்ப கூட நான் பெரிசா கவலையே படவில்லை. ஒரு மாப்பிள்ளை என்னை ரிஜெக்ட் பண்ணுறது என்ன புதுசா சொல்லு. இருபது வயசுல ஆரம்பித்த ரிஜெக்ஷன் இருபத்தி ஆறு வயசு முடியப் போகுது இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கு அதனால எனக்கு பழகிப் போன ஒரு விஷயம் அதனால் அதை நான் பெரிசா எடுத்துக்கவே இல்லை” என்றாள் பல்லவி.

 

“அப்பறம் ஏன் நீ ராகவ் கிட்ட பேச மாட்டேங்கிற” என்றாள் அபிநயா.

 

“நான் ராகவ் கிட்ட பேசுவது என் சித்திக்கும், சாம்பவிக்கும் பிடிக்காது. ராகவ், சாம்பவியை பிடிச்சிருக்குன்னு சொன்ன மறுநாளே என் சித்தியும், சாம்பவியும் என் கிட்ட சொன்ன ஒரே விஷயம் ராகவ்

கூட எந்த நட்பையும் தொடரக் கூடாதுன்னு தான்” என்றாள் பல்லவி.

 

(அடியே…)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!