அடியே என் பெங்களூர் தக்காளி…(5)

4.8
(18)

அத்தியாயம் 5

 

அந்த அறைக்குள் எந்த வெளிச்சமும் வராது பகலிலே. இப்போது நடுராத்திரி. விளக்கும் கிடையாது. காற்றோட்டமும் இல்லை. பல்லவிக்கு மூச்சு முட்டுவது போல இருந்தது. “சித்தி, சித்தி” என்று அவள் கதவை தட்டி தட்டி ஓய்ந்தவள் ஒரு கட்டத்துக்கு மேல எந்த சத்தமும் போடாமல் இருக்கவும் வைதேகி பதறிட சாம்பவியோ, “விடுங்கம்மா செத்தா போகப் போறாள் அப்படியே செத்தால் செத்து ஒழியட்டும் பீடை” என்று கூறி விட்டு தன் தாயை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

வாசுதேவனுக்கு உறக்கம் வரவே இல்லை. “என்ன இது மனசு கிடந்து அடிச்சுக்குது. பல்லவிக்கு ஃபோன் பண்ணி பார்க்கலாம்” என்று நினைத்து மகளுக்கு ஃபோன் செய்தார் வாசுதேவன். அவளது ஃபோன் தான் சார்ஜ் இல்லாமல் செத்து விட்டதே. “சுவிட்ச் ஆப்” என்று பதில் வரவும் பதறியவர் மனைவிக்கு ஃபோன் செய்தார்.

அவரும் எடுக்காமல் போக பதறியவர் தன் அக்கா செல்வராணியிடம் கூறி விட்டு அந்த இரவு நேரத்தில் கிளம்ப ஆரம்பித்தார்.

“என்னம்மா எழுந்துட்டீங்க” என்ற சாம்பவியிடம், “உன் அப்பா வேற ஓயாமல் ஃபோன் பண்ணிட்டு இருக்காரு நான் எடுக்க வில்லை அதனால் அந்த ஆளு பதறி கிளம்பி வந்தால் என்ன பண்ணுவது இரு வரேன்” என்ற வைதேகி பல்லவியை அடைத்து வைத்த அந்த இருட்டு அறையை திறந்து பார்க்க அங்கே பல்லவி வாயில் நுரை தப்ப உடல் எல்லாம் வலிப்பு வந்தது போல் வெட்டி வெட்டி இழுத்திட துடித்துக் கொண்டு இருந்தாள்.

“சாம்பவி” என்று கத்தினார் வைதேகி. “என்னம்மா” என்று வந்த சாம்பவியும் பயந்து போனாள்.

“ஏற்கனவே ஒரு முறை இப்படி அடைச்சு வச்சப்போ கூட இவளுக்கு வலிப்பு வந்திருக்கே அதை மறந்துட்டு கோபத்தில் இப்படி பண்ணிட்டேனே” என்ற வைதேகி, “சாவிக் கொத்தைக் கொடுடீ” என்றிட சாம்பவியும் தன் அன்னையிடம் சாவிக் கொத்தைக் கொடுத்தாள்.

வைதேகி பல்லவியின் கையில் சாவிக் கொத்தைக் கொடுத்து வலிப்பை கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் போனது. அவர் பதறிப் போய் நிற்க அந்த நேரம் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.

“ஒருவேளை உன் அப்பா வந்துட்டாரா சாம்பவி” என்று பதறிய வைதேகி, “இவளை முதலில் இந்த ரூமை விட்டு வெளியே இழுடீ” என்று அம்மாவும், மகளும் சேர்ந்து பல்லவியை அந்த அறையில் இருந்து இழுத்தனர். அவர்கள் இழுத்த பொழுது அறையின் வாசலில் இருந்த நிலையில் அவளது தலை மோதியதில் நெற்றியில் அடிபட்டு இரத்தம் கசிய ஆரம்பித்தது.

“அறிவு கெட்டவளே இப்படியா இழுப்ப” என்று திட்டிய வைதேகி பதற்றத்துடன் சென்று வாசல் கதவை திறந்தார் திலீப் வர்மன் நின்றிருந்தான்.

“ஆண்ட்டி பல்லவி இருக்காளா?” என்று அவன் கேட்டிட அவர் கேள்வியாக அவனைப் பார்த்தார். “ஸாரி ஆண்ட்டி நான் திலீப் பல்லவியோட ஃப்ரெண்ட் நான் தான் அவளை ட்ரோப் பண்ணிட்டு போனேன் அவளோட ஃபோனை கார்லையே விட்டுட்டாள் அதான் கொடுக்க வந்தேன்” என்று அவன் கூறிட , “தம்பி கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க பல்லவிக்கு” என்று அவர் கூற வர “பல்லவிக்கு என்ன ஆண்ட்டி” என்று அவரைத் தான்டி உள்ளே வந்தான் திலீப்.

பல்லவி வலிப்பு வந்து உடல் வெட்டி வெட்டி இழுக்க தரையில் கிடந்தாள். “பவி , பவி” என்று அவளருகில் வந்தவன் அவளை ஒரே எட்டில் தூக்கி விட்டான்.

“உனக்கு ஒன்னும் இல்லை பவி நான் வந்துட்டேன்ல” என்றவன், “ஆண்ட்டி வாங்க சீக்கிரம்” என்றவன் அவளைத் தூக்கிக் கொண்டு போய் காரில் படுக்க வைத்து , “அண்ணா சீக்கிரம் ஹாஸ்பிடல் போங்க” என்று டிரைவரை அவசரப் படுத்தினான்.

வைதேகி சாம்பவியை வீட்டில் இருக்க சொல்லி விட்டு திலீப் உடன் மருத்துவமனைக்கு சென்றார்.

 

மருத்துவமனை வந்ததும் கூட அவனே அவளை தூக்கிக்கொண்டு, “டாக்டர், டாக்டர்” என்று கத்தினான். பிறகு அவளை ஸ்டெச்சரில் படுக்க வைத்து அவசர சிகிச்சை பிரிவிற்கு கூட்டிச் சென்றனர்.

“என்ன ஆச்சு ஆண்ட்டி நல்லா தானே இருந்தாள்” என்ற திலீப்பிடம் என்ன சொல்வார் வைதேகி.

ஒரு புறம் “இவன் யார்” என்று யோசித்தவர், “அவளை ஒரே எட்டில் தூக்கிட்டான். பவி , பவின்னு வேற அழுதுகிட்டே வந்தான். யார் இவன்” என்று யோசித்துக் கொண்டே, “அவள் கண் விழித்து எழுந்த பிறகு அவளோட அப்பாகிட்ட சொல்லிக் கொடுத்தால் என்ன பண்ணுறது” என்று யோசித்துக் கொண்டு இருந்தார் வைதேகி.

 

“யாரு இவன் அவளை எப்படி தூக்கினான். ஆளு பார்க்க செம்ம ஹேன்ட்சமா இருக்கிறானே” என்று யோசித்துக் கொண்டு இருந்தாள் சாம்பவி.

அவளை இறக்கி விட்டு செல்லும் போது எதார்த்தமாக கவனித்தான் அவளது மொபைல் ஃபோன் சீட்டில் கிடக்க நாளைக்கு அவளிடம் கொடுக்கலாம் என்று தான் நினைத்தான் திலீப் வர்மன்.

அவன் வீட்டில் தனது லக்கேஜ் எல்லாம் இறக்கி வைத்து விட்ட பிறகு ஏனோ அவளை உடனே பார்க்க வேண்டும் என்று மனம் அடித்துக் கொள்ள, “அண்ணா ப்ளீஸ் திரும்ப ஒரு இடத்திற்கு போகனும்” என்று கூறிட டிரைவரும் புன்னகைத்து விட்டு காரை இயக்கினார்.

அவளது வீட்டிற்கு வந்து பார்த்தால் அவளோ வலிப்பு வந்து துடித்துக் கொண்டு கிடக்க அவனுக்கு உயிரே போய் விட்டது.  எப்படி அவளை தூக்கினான் என்று கேட்டால் அவனிடம் பதில் இல்லை. அந்த நேரம் அவன் இருந்த பதற்றம், அவளுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்ற பரிதவிப்பு அவளைத் தூக்கி விட்டான்.

“என்ன சொல்லுற சாம்பவி பல்லவிக்கு உடம்பு சரியில்லையா என்னாச்சு என் பொண்ணுக்கு” என்று பதறினார் வாசுதேவன்.

“அப்பா பதறாதீங்க அவளுக்கு ஒன்றும் இல்லை அதான் அம்மா அவள் கூட ஹாஸ்பிடலில் இருக்காங்களே. நீங்க வரும் போது வீட்டில் ஆள் இருக்கனுமே அதான் நான் இருந்தேன் வாங்க ஹாஸ்பிடல் போகலாம்” என்று தந்தையை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றாள் சாம்பவி.

திலீப் இன்னும் மருத்துவமனையில் இருக்க ,”என்ன இவன் இன்னும் இங்கேயே இருக்கிறான் அப்படி என்ன அந்த குந்தாணி மேல இவனுக்கு பாசம்” என்று நினைத்துக் கொண்டு இருந்தாள் சாம்பவி.

“வைதேகி பல்லவிக்கு என்ன ஆச்சு” என்று பதறினார் வாசுதேவன். “அவளுக்கு ஒன்றும் இல்லைங்க ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு” என்று சொல்லி நீலிக்கண்ணீர் வடித்தார் வைதேகி.

“என் பொண்ணுக்கு வலிப்பு வரும் அளவிற்கு என்ன பிரச்சினை நீ எதுவும் அவளை திட்டுனியா” என்ற வாசுதேவனிடம், “சத்தியமா நான் அவளை எதுவும் சொல்லவே இல்லைங்க” என்று அழுது நடித்தார் வைதேகி.

“இவ்வளவு நேரம் இவங்க கண்ணுல ஒரு பொட்டு தண்ணி வரவில்லை அங்கிளை பார்த்ததும் வாட்டர் ஃபால்ஸ் ஒபன் பண்ணினது போல அழறாங்க” என்று நினைத்துக் கொண்ட திலீப் வாசுதேவனின் அருகில் வந்தான்.

“அங்கிள் அழாதீங்க பல்லவிக்கு ஒன்றும் இல்லை அவள் கண் முழிச்சுருவாள்” என்றான். “தம்பி நீங்க” என்று வாசுதேவன் கேட்டிட, “நான் திலீப் வர்மன் பல்லவியோட ஃப்ரெண்ட். அவளை நான் தான் நைட்டு வீட்டில் ட்ரோப் பண்ணினேன். ஃபோனை காரிலேயே மறந்து வச்சுட்டு போயிட்டாள். அதை கொடுக்க வீட்டுக்கு வந்தேன் அப்போ தான் பல்லவிக்கு வலிப்பு வந்து துடித்துக் கொண்டு கிடந்தாள். அதான் அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்துட்டேன்” என்றான் திலீப்.

“ரொம்ப தேங்க்ஸ் தம்பி” என்ற வாசுதேவனிடம், “அங்கிகள் ப்ளீஸ் தேங்க்ஸ் எல்லாம் சொல்லாதீங்க ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு பல்லவிக்கு ஒன்றும் ஆகாது” என்று அவரை சமாதானம் செய்தான் திலீப் வர்மன்.

அந்த நேரம் மருத்துவர் வெளியே வர , “டாக்டர் பல்லவிக்கு எப்படி இருக்கு” என்றான் திலீப் வர்மன்.

“பேசன்ட்டுக்கு நீங்க யாரு என்று மருத்துவர் கேட்டிட அவளோட ஃப்ரெண்ட்” என்றான் திலீப்.

 

“பயம், அதிர்ச்சி எதோ ஒரு ரீசன் தான் அவங்களுக்கு வலிப்பு வந்து இருக்கு இதற்கு முன்னே வலிப்பு வந்திருக்கா” என்ற மருத்துவரிடம் , “ஒருமுறை வீட்டில் இருக்கிற ஸ்டோர் ரூம்ல மாட்டிக்கிட்டாள். இருட்டில் பயந்து இந்த மாதிரி வந்திருக்கு அதுவும் பத்து வயசு இருக்கும் போது அதற்கு பிறகு வலிப்பு வந்ததில்லை டாக்டர்” என்றார் வாசுதேவன்.

“இப்போ எதனால் வந்துச்சுன்னு தெரியவில்லை பேசன்ட் கண் விழிச்சுட்டாங்க அவங்க கிட்ட பேசி பார்த்ததில் டிப்ரசன்ல இருக்காங்கன்னு மட்டும் புரியுது கொஞ்சம் பார்த்துக்கோங்க” என்று கூறி விட்டு மருத்துவர் சென்று விட திலீப், வாசுதேவன் இருவரும் அவள் இருந்த அறைக்கு சென்றனர்.

“பவிமா உனக்கு ஒன்னும் இல்லையேடா” என்று வாசுதேவன் மகளின் கன்னம் பற்றி கேட்டிட , “ஒன்னும் இல்லப்பா” என்றாள் பல்லவி. “என்னாச்சு டா எதைப் பார்த்து பயந்த” என்று கேட்ட வாசுதேவனிடம் , “நைட்டு கரண்ட் போனப்ப ஸ்டோர் ரூம்ல மாட்டிக்கிட்டேன்பா அதான் இருட்டில் பயந்துட்டேன்” என்ற மகளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவர், “ஒன்றும் இல்லைடா” என்று ஆறுதல் படுத்தினார்.

பல்லவி சொன்னதை திலீப் நம்பவில்லை, “இவள் கண்ணு பொய் சொல்லுதே, அவளோட சித்தியோட ஆக்டிவிட்டீஸ் ஒன்றும் சரியில்லை. நைட்டு முழுக்க அது பாட்டுக்கு ஓரமா நல்லா தூங்கி எந்திரிச்சுட்டு ஹஸ்பண்ட்டை பார்த்தும் என்னம்மா அழுது புலம்புது சம்திங் ராங்க் திலீப்” என்று யோசித்தான்.

“நான் எப்படிப்பா ஹாஸ்பிடல் வந்தேன்” என்று பல்லவி கேட்டிட, “தம்பி தான் பவிமா உன்னை ஹாஸ்பிடலில் சேர்த்தது” என்று கூறிய வாசுதேவன் மருத்துவர் அழைக்கிறார் என்று செவிலியர் கூறவும் அந்த அறையை விட்டு வெளியே செல்ல பல்லவியின் முன் சென்று அமர்ந்தான் திலீப்.

“நீ எப்படி என்னை ஹாஸ்பிடலில் சேர்த்த” என்ற பல்லவியிடம், “தூக்கிட்டு வந்து தான்” என்றவன் , “ஏன்டி வலிப்பு வந்தால் சாவியை பிடிச்சுட்டு கட்டுப்படுத்த மாட்டியா ஆத்தி என் கை இரண்டும் உடைஞ்சே போச்சு டீ என் பெங்களூர் தக்காளி” என்றான் திலீப் வர்மன்.

அவனை முறைத்தவள், “உன்னை யாருடா என்னை தூக்கி கையை உடைச்சுக்க சொன்னது” என்றாள் பல்லவி கோபமாக.

“ஹான் வேண்டுதல் டீ ஆளைப் பாரு நீ வெட்டி இழுத்துட்டு கிடக்கும் போது கை உடையுறதா முக்கியம்” என்றவன், “ஏன் டீ உன் அப்பா கிட்ட பொய் சொன்ன” என்றதும் அவள் அதிர்ந்து போய் திருட்டு முழி முழிக்க ஆரம்பித்தாள்…

 

(…அடியே..)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!