அத்தியாயம் 6
“என்ன டீ திருட்டு முழி முழிக்கிற அங்கே என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியாதுனு நினைச்சியா, உன் சித்தியும், தங்கச்சியும்” என்று அவன் ஏதோ சொல்ல வர, “ப்ளீஸ் திலீப் அப்பா கிட்ட எதுவும் சொல்லிராதே சித்தியும், சாம்பவியும் சேர்ந்து தான் என்னை இருட்டு அறைக்குள் தள்ளினாங்கனு தெரிந்தால் அப்பா ரொம்ப கோபம் படுவாங்க என்னால யாருக்கும் எந்த சண்டை சச்சரவு வரக் கூடாது” என்று அவள் கண்ணை மூடிக்கொண்டு கூறிட, “என்னடீ சொல்லுற உன் சித்தியும், அவங்க பொண்ணும் தான் உன்னை இருட்டு அறைக்குள் தள்ளினாங்களா?” என்றான் திலீப் அதிர்ச்சியாக.
“அச்சச்சோ நான் தான் உலறிட்டேனா” என்று நொந்து கொண்டவள், “இல்லையே நான் தான் இருட்டில் தெரியாமல் அந்த ரூமுக்குள்ள போயிட்டேன்” என்று அவசரமாக அவள் சமாளிக்க, “நடிக்காதே பவி உண்மையை சொல்லு எதுக்கு அவங்க உன்னை இருட்டு அறைக்குள் தள்ளி கதவை சாத்துனாங்க” என்றான் திலீப் வர்மன்.
“அதை உன் கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்று அவள் கூறிட அவளை முறைத்தவன் கோபமாக எழுந்து வெளியே சென்று விட்டான்.
அவன் திடீரென வெளியே சென்று விட அவளது மனம் சுனங்கியது.
அவளுக்கு ஏதோ டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று செவிலியர் அழைத்துச் செல்ல அவளது அறைக்குள் வந்தனர் வைதேகி, சாம்பவி இருவரும் .
“எங்கேம்மா போனாள் இவள்” என்ற சாம்பவி, “ஆமாம் யாரு அவன்” என்றாள்.
“தெரியலை சாம்பவி இந்த பல்லவியை ஒரே எட்டில் தூக்கி காரில் படுக்க வைத்து அப்பப்பா காரில் வரும் வழி எல்லாம் பவி ப்ளீஸ் கண்ட்ரோல் பண்ணு உனக்கு ஒன்னும் இல்லை நான் உன் கூடவே இருக்கேன் பயப்படாதே பவி ப்ளீஸ் டீ என்னால முடியாது டீ உனக்கு ஒன்னும் இல்லை டீ நான் இருக்கேன் டீனு புலம்பினான். அண்ணா கொஞ்சம் சீக்கிரம் போங்களேன் டிரைவரை கத்துரான். பவி பவி பவின்னு அவன் துடிச்சதை பார்த்து எனக்கே கண் கலங்கிருச்சுடீ யாரு இவன் நமக்கெல்லாம் தெரியாமல் இவனை லவ் பண்ணுறாளோ?” என்றார் வைதேகி.
“சத்தியமா சொல்றேன் சாம்பவி உன் அப்பா கூட இவளுக்காக இப்படி துடிச்சுருக்க மாட்டாரு அவன் துடிச்ச துடிப்பு இருக்கே ராத்திரி அவன் ஒரு பொட்டு கூட தூங்கவே இல்லை. நான் கூட நல்லா தூங்கிட்டேன் அவன் அவள் இருந்த ஐசியு வாசலிலே தவம் கிடந்தான்.
அவளுக்கு இத்தனை நாளா வந்த வரன் எல்லாம் தட்டிட்டு போனது எல்லாம் அவனுக்காக தானோ?” என்றார் வைதேகி.
“அம்மா என்ன சொல்லிட்டு இருக்கீங்க அப்போ அவளுக்கு இவன் கூட நீங்களே கல்யாணம் பண்ணி வச்சுருவீங்க போல” என்றாள் சாம்பவி.
“அவளுக்கும் கல்யாணம் நடக்கனுமே சாம்பவி” என்று வைதேகி கூறிட , “கல்யாணம் நடக்கனும் இவனை மாதிரி ஒரு அழகன் கூட இல்லை வயசான எதாவது ஒரு கிழவன் கூட அதுவும் இரண்டாம் தாரமா” என்று கூறினாள் சாம்பவி.
“என்ன சாம்பவி இப்படி சொல்லுற” என்ற வைதேகியிடம், “அவனை பார்த்தீங்க தானே ராகவ்வை விட ஸ்மார்ட்டா பர்சனாலிட்டியா இருக்கிறான். இவனை மட்டும் அவள் கல்யாணம் பண்ணிக்கிட்டால் அவள் கிட்ட நான் தோத்துப் போயிடுவேன்” என்று கூறிய சாம்பவி, “அவனையும், அவளையும் கட் பண்ணி விடுங்க” என்றாள் கோபமாக.
“சரி சரி கோபம் படாதே” என்று கூறிய வைதேகி யோசிக்க ஆரம்பித்தார்.
“இப்போ எதுக்கு நீ வந்த” என்ற பல்லவியிடம், “எதுக்கு வருவாங்க உன்னை டெஸ்ட் எடுக்க கூட்டிட்டு போகும் போது அட்டன்டர் கூட வரணும்னு சிஸ்டர் தான் சொன்னாங்க அங்கிளை டிபன் சாப்பிட அனுப்பி இருக்கேன் அதான் நான் வந்தேன்” என்று கூறிய திலீப் அவளையே பார்த்தான்.
“என்ன பார்வை” என்று நினைத்தவளை அந்த அறைக்குள் அழைத்துச் சென்றார் செவிலியர்.
அவள் டெஸ்ட் எல்லாம் எடுத்து வெளியே வரவும் அவளை அவனே அவள் இருந்த அறைக்கு அழைத்து வந்தான்.
“திலீப் எதுக்கு இதெல்லாம் பண்ணுற” என்று பல்லவி கேட்டிட, “அதான் சொன்னேனே பவி வேண்டுதல்” என்றான் திலீப் வர்மன்.
“பச்” என்று அவள் முகத்தை சுளிக்க, “அழகா இருக்க டீ” என்றான். “என்ன விஷயமா நீ இங்கே வந்த” என்றவளிடம், “உன்னால தான் நீ தானே உடம்பு சரியில்லாமல் இருக்க உனக்காக தான் உன்னை தூக்கிட்டு தான் வந்தேன்” என்றான் திலீப்.
அவனை முறைத்தவள் “நான் கேட்டது நீ ஃபாரின்ல தானே வொர்க் பண்ணின இந்தியா ஏன் வந்தன்னு கேட்டேன்” என்றாள்.
“அதுவா நம்ம ராகவ்க்கு மேரேஜ்னு இன்வைட் பண்ணினான் அதான் பவி” என்ற திலீப், “உனக்கும் இன்வைட் பண்ணிருப்பானே” என்றான் திலீப்.
அவள் மௌனமாக தலை கவிழ்ந்தாள். “உனக்காக வந்தேன்னு சொல்லுவான்னு பார்த்தால் ராகவ் கல்யாணத்திற்கு வந்தானாம் இடியட்” என்று மனதிற்குள் நினைத்தவள், “ஆமாம் அவன் எதற்காக நமக்காக வரப் போறான்” என்று யோசித்துக் கொண்டு அவள் இருக்க வாசுதேவன் வந்துவிட்டார்.
“அங்கிள் சாப்பிட்டிங்களா?” என்ற திலீப்பிடம், “சாப்பிட்டேன் தம்பி நீங்க இன்னும் சாப்பிடவில்லை” என்று வாசுதேவன் கேட்டிட, “அங்கிள் நீங்க மாத்திரை போடனும் அதனால் கரெக்ட் டைம்க்கு சாப்பிடனும் எனக்கு பசி இல்லை” என்ற திலீப், “பவி உனக்கு ஜூஸ் வாங்கிட்டு வரவா” என்றான்.
“இல்லை வேண்டாம்” என்று அவள் கூறிட அந்த நேரம் சரியாக மருத்துவர் அந்த அறைக்குள் வந்தார். அவளை பரிசோதித்து பார்த்து விட்டு, “உங்க ரிப்போர்ட் எல்லாம் நார்மலா தான் இருக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்” என்று கூறி விட்டு சென்றார்.
“சரி பவிமா நான் டிஸ்சார்ஜ் பண்ண ஏற்பாடு பண்ணிட்டு வரேன்” என்று கூறிய வாசுதேவன் சென்று விட பல்லவி எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்.
“பவி” என்று அவன் ஏதோ சொல்ல வர, “பல்லவி” என்று அந்த அறைக்குள் வந்தான் ராகவ். அவனுடன் அவனது குடும்பத்தினரும் வந்திருந்தனர்.
“என்ன சொல்லுற வாசு பல்லவிக்கு உடம்பு சரியில்லையா என்னாச்சு” என்று கேட்டார் ராகவ்வின் தந்தை சிவச்சந்திரன். “ஆமாம் சிவா” என்று மகள் மருத்துவமனையில் இருப்பதை வாசுதேவன் கூறிட தன் மனைவி புவனேஸ்வரி, மகன் ராகவ், மகள் பூர்வி மூவரையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.
சிவச்சந்திரன், வாசுதேவன் இருவரும் பால்ய வயதில் இருந்தே சிநேகிதர்கள். ராகவ், பல்லவி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க சிவச்சந்திரன், புவனேஸ்வரி இருவருக்கும் கொள்ளை பிரியம். ஆனால் ராகவ் மனதில் வேறு எண்ணம் இருந்தது.
நண்பன் மகளுக்கு உடல் நிலை சரியில்லை என்று அறிந்ததும் கிளம்பி வந்து விட்டார் சிவச்சந்திரன் தன் குடும்பத்துடன்.
“பல்லவி உனக்கு எப்படி இருக்கு இப்போ” என்ற ராகவ்விடம் , “ஐ யம் ஓகே ராகவ்” என்றவள் அவன் முகத்தை கூட பார்க்க வில்லை.
சிவச்சந்திரன், புவனேஸ்வரி, பூர்வி மூவரிடமும் பிரியமாகவே பேசிக் கொண்டு இருந்தாள் பல்லவி. ராகவ் எதார்த்தமாக திரும்பிட அவனது நண்பன் திலீப் வர்மன் நின்றிருந்தான்.
“திலீப் நீ எங்கே இங்கே” என்று ராகவ் கேட்டிட, அவர் தான் நம்ம பல்லவியை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணினது ராகவ்” என்று வந்தார் வாசுதேவன்.
ராகவ் யோசனையுடன் நண்பனை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான். “ஹாய் சாம்பவி” என்று ராகவ் கூறிட , “ஹாய் ராகவ்” என்றாள் சாம்பவி.
“திலீப் இவள் தான் என் பியான்ஸி சாம்பவி” என்று ராகவ் கூறிட அவளை ஏனோ திலீப்பிற்கு பிடிக்கவே இல்லை. ராகவ்விற்காக “ஹலோ” என்றான்.
“நம்ம பல்லவியோட சிஸ்டர் தான்” என்று ராகவ் கூறிட, “தெரியுமே” என்று கூறிய திலீப் , “பல்லவியோட இந்த நிலைமைக்கு இவங்க தானே காரணம்” என்றான் பட்டென்று.
சாம்பவிக்கு ஒரு நிமிடம் தூக்கிவாரிப் போட்டது. “என்ன சொல்லுற திலீப்” என்ற ராகவ்விடம், “நீ இவங்களை பார்க்கவில்லை என்றால் பல்லவியை மேரேஜ் பண்ணியிருப்பியே அதை சொன்னேன்” என்று திலீப் கூறிட ராகவ்விற்கு தான் சுருக்கென்றது. சாம்பவி நிம்மதிப் பெரு மூச்சு விட்டாள்.
“கவலையே வேண்டாம் உங்க கல்யாணத்திற்கு முன்னமே பல்லவிக்கு கல்யாணம் நடந்துரும்” என்று திலீப் கூறிட, “கனவுலையா இல்லை கற்பனையிலையா” என்றாள் சாம்பவி நக்கலாக.
“நிஜத்திலங்க நீங்க வேணும்னா பாருங்க கட்டாயம் நடக்கும்” என்று கூறிய திலீப், “சரி நான் போயி பல்லவிக்கு ஜுஸ் வாங்கிட்டு வரேன்” என்று கிளம்பி விட்டான்.
“ராகவ் யாரு இந்த அதிகப்பிரசங்கி” என்றாள் சாம்பவி. “என்னோட ஃப்ரெண்ட் பல்லவிக்கும் ஃப்ரெண்ட்” என்றான் ராகவ். “நம்ம மேரேஜ்க்கு அவனை இன்வைட் பண்ணிருந்தேன் அதான் வந்திருக்கிறான்” என்று ராகவ் கூறிட , “இவன் பல்லவியை லவ் பண்ணுறானா?” என்றாள் சாம்பவி.
“வாய்ப்பே இல்லை திலீப்போட டேஸ்ட்டே வேற கட்டாயம் அவன் பல்லவியை லவ் பண்ண மாட்டான். இரண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் அவ்வளவு தான்” என்றான் ராகவ்.
“ஹேய் மச்சான் எப்படிடா இருக்க” என்றான் திலீப் ரஞ்சித்தை பார்த்து. “டேய் நல்லவனே நீயாடா நீ எப்போ டா இந்தியா வந்த ஆமாம் நீ ஹாஸ்பிடலில் என்ன பண்ணுற” என்றான் ரஞ்சித்.
“நான் நைட்டு தான் டா வந்தேன்” என்ற திலீப்பிடம், “நைட்டு வந்தவன் காலையில் ஹாஸ்பிடலில் என்ன பண்ணுற” என்றான் ரஞ்சித்.
“நைட்ல இருந்து ஹாஸ்பிடலில் தான் டா இருக்கேன்” என்ற திலீப் பல்லவியை பார்த்ததில் இருந்து அவளை மருத்துவமனையில் சேர்த்தது வரை எல்லாம் சொன்னான்.
“பாவம் டா பல்லவி” என்று கூறிய ரஞ்சித் , “சரி இப்போ எப்படி உன் லவ் சொல்ல தான் வந்தியா” என்றான். “கல்யாணம் பண்ணி அவள் கூடவே செட்டில் ஆகப் போறேன்” என்று திலீப் கூறிட , “வாழ்த்துக்கள் மச்சான்” என்றான் ரஞ்சித். “நன்றிடா மாப்பிள்ளை” என்று கூறியவன் ஜூஸ் வாங்கிட்டு வர , “கொடுடா” என்று கையை நீட்டினான் ரஞ்சித். அவனது கையில் பட்டென்று அடித்தவன், “வீட்டுல கொட்டிட்டு தானே வந்த” என்றதும் , “ஆம்” என்று தலையாட்டினான் ரஞ்சித். “அப்பறம் என்ன சூஸு வேண்டிக் கிடக்கு சூஸு என் செல்வத்தை கரெக்ட் பண்ண நானே பார்த்து பார்த்து அவளுக்கு ஜுஸ் வாங்கிட்டு போனால் அதை நீ பறிக்க பார்க்கிறியாடா அப்பரசன்டி” என்று திலீப் கூறிட , “ஓவரா போரடா” என்றான் ரஞ்சித்.
(.. அடியே..)