அத்தியாயம் 7
“இந்தா பவி” என்று ஜூஸை நீட்டினான் திலீப் வர்மன். அமைதியாக அவன் கொடுத்த ஜூஸை வாங்கி அருந்தினாள் பல்லவி.
பாதி குடித்து விட்டு, “எனக்கு போதும்” என்று ஓரமாக க்ளாஸை வைக்க போக, “ஏய் பவி ஏன் ஜூஸை கீழே வைக்கப் போற குடி” என்றான் திலீப்.
“எனக்கு போதும் திலீப்” என்று அவள் கூறிட, “என்ன போதும் குடி” என்று அதட்டினான். “அதான் சொல்றேன்ல எனக்கு போதும்னு” என்று அவள் அழுத்தமாக கூறிட, “அப்போ சரி” என்று அவள் மிச்சம் வைத்த ஜூஸை ஒரே மடக்கில் குடித்து முடித்தான் திலீப்.
“ஏய் என்ன பண்ணுற” என்றாள் பல்லவி அந்த அறைக்குள் இருந்த நபர்களை பார்த்துக் கொண்டு.
ராகவ்வின் குடும்பத்தினர், வாசுதேவன், வைதேகி, சாம்பவி, ராகவ், ரஞ்சித் என அனைவரும் அந்த அறைக்குள்ளே இருக்க இவன் பாட்டிற்கு அவள் மிச்சம் வைத்த ஜூஸை குடித்து விட்டான்.
பல்லவிக்கு என்ன சொல்வது என்று புரியாமல் தவித்திட , “என்னப்பா எல்லோரும் ஆன்னு பார்க்கிறிங்க பசிச்சது அதான் ஜூஸை குடிச்சுட்டேன் இதில் எதுவும் தப்பு இருக்கா” என்றான் திலீப் வர்மன்.
“தப்பில்லை திலீப்” என்றார் சிவச்சந்திரன். “அப்பாவே சொல்லிட்டாரு” என்று சிரித்தான் திலீப்.
“என்னடா நடக்குது இங்கே” என்ற ராகவ்விடம், “அழகான நர்ஸ், ரொம்ப ரொம்ப அழகான டாக்டர் எல்லாம் நடக்கிறாங்க மச்சி” என்று அசடு வழிய கூறிக் கொண்டு இருந்தான் ரஞ்சித்.
“அலையாதேடா அல்பமே நான் கேட்டது பல்லவி இருந்த அறையில்” என்றான் ராகவ். “அங்கே எல்லோரும் நிற்க தானடா செஞ்சாங்க பல்லவி மட்டும் படுத்திருந்தாள்” என்று நேரம் காலம் தெரியாமல் காமெடி செய்து கொண்டு இருந்தான் ரஞ்சித்.
“அடேய் வெறுப்பேத்துறியா” என்று பற்களைக் கடித்தான் ராகவ். “இல்லை மச்சி பதில் சொல்றேன்” என்றான் ரஞ்சித் அசராமல்.
அவனை முறைத்தவன் “திலீப் ஏன்டா பல்லவி குடிச்ச ஜூஸை குடிச்சான்” என்ற ராகவ்வை ஏற இறங்க பார்த்தவன், “அதை அதோ வரான் பாரு அவன் கிட்ட போயி கேளுடா வந்துட்டான் இப்போ தான்” என்ற ரஞ்சித் அங்கே இருந்த நர்ஸை சைட் அடித்துக் கொண்டு இருந்தான்.
நண்பனை முறைத்து விட்டு திலீப் அருகில் சென்றான் ராகவ். “என்ன பங்கு அப்பா, அம்மா கிளம்பிட்டாங்க நீ கிளம்பலையா?” என்ற திலீப்பிடம், “கிளம்பனும்” என்றவன், “நீ ஏன் டா பல்லவி குடிச்ச ஜூஸை குடிச்ச” என்றான் ராகவ்.
“எனக்கு சாத்துக்குடி ஜூஸ் பிடிக்கும் அதை பவி வேஸ்ட் பண்ண பார்த்தாள். லைட்டா பசி வேறையா அதான் குடிச்சேன்” என்று கூறிய திலீப் , “அப்பா கூப்பிடுறாரு பாரு” என்று ராகவ்வை அனுப்பி வைத்து விட்டு ரஞ்சித் அருகில் வந்தான்.
“என்ன மச்சான் உன் ஃப்ரெண்ட் ரொம்ப கொஸ்டின் பண்ணுறான்” என்றான் திலீப். “காதலி குடித்து வைத்த எச்சில் ஜூல்ஸ் கூட தீர்த்தமாகும்” என்று கூறிய ரஞ்சித்திடம், “அடடே ஆச்சர்யக்குறி கவிதை கவிதை எப்போ இருந்து மச்சான் உனக்குள்ளே கவிஞர் வைரமுத்து இறங்கினார்” என்றான் திலீப்.
“நீ பண்ணுற கூத்தை பார்த்து தானா இறங்கிட்டாரு. ஏன்டா உனக்கு என்ன ஃபர்ஸ்ட் நைட்டா நடக்குது அவள் குடிச்ச மிச்ச ஜூஸை குடிச்சு மோட்சம் அடைய போறியா உன் ரகளைக்கு ஒரு அளவு இல்லையாடா” என்றான் ரஞ்சித்.
“அப்படி இல்லை மச்சி பசி” என்ற திலீப்பை முறைத்தவன், “நாயே நாயே வாயில் அசிங்கமா வந்துட போகுது சொல்லிட்டேன் என் கிட்ட நடிக்காதே” என்றான் ரஞ்சித்.
“வாயில் அசிங்கம் எல்லாம் வராது மச்சி வாயில் வந்தால் வாந்தி” என்ற திலீப்பை முறைத்தவன், “என்னடா உன் சகளையை நான் வெறுப்பேத்துனேன்னு நீ பதிலுக்கு என்னை வெறுப்பேத்தி பார்க்கிறியா?” என்றான் ரஞ்சித்.
“சகளைக்காக எல்லாம் நான் ரகளை பண்ண மாட்டேன் பா” என்றான் திலீப். “மனசுல என்ன டீஆர்னு நினைப்பா சகளை, ரகளைனு எதுகை, மோனைல தான் பேசுவீங்களோ?” என்றான் ரஞ்சித். “மச்சி அது ரைமிங் இல்லை” என்ற திலீப்பிடம் , “வெள்ளைக்கார துரை இங்கிலீஷ்ல தான் பேசுவாரு” என்றான் ரஞ்சித்.
“சரி, சரி ரொம்ப வாராதே உனக்கு என்ன பிரச்சினை” என்றான் திலீப். “ஓவரா போறடா அது எப்படி டா மொத்த குடும்பமும் கூடி இருக்கும் போது அவள் குடிச்சிட்டு வச்ச ஜூஸை எடுத்து குடிக்கிற” என்ற ரஞ்சித்திடம், “மச்சி என் பொண்டாட்டி எச்சில் நான் குடிக்கிறேன் இது தப்பா” என்றான் திலீப்.
“நடத்து நடத்து ஆனால் இந்த ராகவ் பையன் ஏன் கேள்வி கேட்டு குடையிறான்னு தெரியலை” என்றான் ரஞ்சித். “அது எப்படி மச்சி எனக்கு தெரியும் சகளை கிட்டேயே போயி கேட்டுக்கோ” என்று கூறிய திலீப் சென்று விட ரஞ்சித்தும் சென்று விட்டான்.
“என்ன யோசனை பூர்வி” என்ற புவனேஸ்வரியிடம், “எனக்கு என்னமோ பல்லவி சொல்லுற மாதிரி இருட்டுக்குள்ளே அவளா அந்த அறைக்குள் மாட்டி இருப்பான்னு தோனவே இல்லைம்மா” என்றாள் பூர்வி.
“எப்படி சொல்லுற” என்ற ராகவ்விடம், “அவங்க வீட்டில் இன்வர்ட்டர் இருக்கு கரண்ட் போயிருந்தால் கூட வீடு ஒன்றும் இருட்டாக இல்லையே. அப்பறம் ஒரு வேளை அவளே அங்கே போயிருந்தாலும் கதவை திறந்து வந்திருப்பாளே யாரோ உள்ளே வச்சு பூட்டி இருந்தால் தான் வெளியே வர முடியாமல் பயத்தில் வலிப்பு வர வாய்ப்பு இருக்கிறது” என்றாள் பூர்வி.
“வெளியே இருந்து பூட்டி இருப்பாங்கனா நீ யாரை சொல்லுற பூர்வி சாம்பவியையா?” என்றான் ராகவ். “மே பி இருக்கலாம். சாம்பவிக்கு பல்லவியை சுத்தமா பிடிக்காது அதனால் அவளே கூட அப்படி பண்ணி இருக்கலாம்” என்றாள் பூர்வி.
“என்ன பேசுற பூர்வி பல்லவி சாம்பியோட அக்கா” என்றான் ராகவ். “அக்காவா பல்லவியை அவள் நினைச்சுருந்தா அக்காவை வேண்டாம்னு சொன்ன உன்னை கல்யாணம் பண்ணிக்க அவள் சம்மதிச்சுருக்க மாட்டாள்.
பல்லவியை நீ பிடிக்க வில்லை என்று சொன்னதோடு அவளை பிடிச்சிருக்குனு சொன்னதும் அவளோட முகத்தில் இருந்த கர்வத்தை நீ கவனிச்சுருக்க மாட்ட ஆனால் நான் கவனிச்சேன்” என்ற பூர்வி, “சத்தியமா சொல்றேன் அண்ணா சாம்பவி நம்ம குடும்பத்துக்கு கொஞ்சம் கூட செட் ஆக மாட்டாள்” என்றாள்.
“பூர்வி நீ சொல்லுறது அவனுக்கு புரியும்னு நினைக்கிறியா? ஏன் தேவை இல்லாமல் உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ணுற” என்றார் புவனேஸ்வரி.
“என்னம்மா எனக்கு புரியாதுன்னு சொல்லுறீங்க” என்ற ராகவ்விடம், “என்கேஜ்மென்ட்க்கு எதுக்கு இன்விடேசன் ப்ரிண்ட் பண்ண கொடுத்திருக்க” என்றார் புவனேஸ்வரி.
“அதுவும் ஆயிரம் பத்திரிக்கை ஆயிரம் பேரை இன்வைட் பண்ண போறியா? கல்யாணத்திற்கு ஆயிரம் பத்திரிக்கை அடித்தால் கூட ஓகே ஆனால் என்கேஜ்மென்ட்டுக்கு அதிக பட்சம் ஒரு நூறு பேரை கூப்பிட்டால் போதாதா இந்த ஐடியா அந்த சாம்பவியோடது தானே.
பணம் என்ன மரத்திலேயா காய்க்குது உங்க இஷ்டத்துக்கு செலவு பண்ண அவளுக்கு கண்டிப்பா பணத்தோட அருமை தெரியாது. வேலைக்கு போயி சம்பாதிச்சா தானே பணத்தோட அருமை தெரியும்.
நல்லா வாசு அண்ணா சம்பாத்தியத்திலும், பல்லவியோட சம்பாத்தியத்திலும் உட்கார்ந்து திங்கிறாளே எப்படி தெரியும் ஆனால் உனக்கும் தெரியலைங்கிறது தான் வருத்தமா இருக்கு” என்று கூறிய புவனேஸ்வரி சென்று விட ராகவ்விற்கு தான் பைத்தியம் பிடிக்காத குறை.
பல்லவி வீட்டிற்கு அழைத்து வரப் பட்டாள். அவளை வீட்டில் விட்ட பிறகு தான் திலீப் சென்றான். அதுவரை அவளுடன் தான் இருந்தான்.
“பவிமா உண்மையை சொல்லு நீயா தான் அந்த ரூமுக்குள்ள போனியா?” என்ற வாசுதேவனிடம் , “ஆமாம் அப்பா” என்றாள் பல்லவி. “எப்படி பவி நம்ம வீட்டில் இன்வர்ட்டர் இருக்கு கரண்ட் போனால் கூட பிரச்சினை இல்லையே” என்ற வாசுதேவனிடம் , “என்னை நம்பலையாப்பா” என்றாள் பல்லவி.
“உன்னை நம்பாமல் யாரை நம்ப போறேன் பவிமா” என்ற வாசுதேவன் , “திலீப் தம்பிக்கு தான் நன்றி சொல்லனும்” என்று கூறி விட்டு சென்று விட்டார்.
வைதேகி பல்லவியின் அறைக்குள் வந்தார். “யாரு டீ அவன்?” என்ற வைதேகியிடம், “என் ஃப்ரெண்ட் சித்தி” என்றாள் பல்லவி. “லவ் எதாச்சும் இருந்தால் சொல்லு கல்யாணம் பண்ணி வச்சுடுறேன்” என்று வைதேகி கூறிட, “அப்படிலாம் ஒன்றும் இல்லை சித்தி” என்று பல்லவி கூறிட, “சரி இதை சாப்பிடு” என்று சாப்பாட்டை கொடுத்து விட்டு வைதேகி சென்று விட்டார்.
“என்ன ராகவ் இன்விடேசன் ப்ரிண்ட் பண்ண கொடுத்திருக்கேன்னு சொல்லிவிட்டு இப்போ இன்விடேசன் அவசியமான்னு கேட்கிறீங்க” என்றாள் சாம்பவி.
“அம்மா” என்று அவன் ஏதோ சொல்ல வர, “உங்க வீட்டில் எல்லோருக்கும் பல்லவியை தானே பிடிக்கும் அதான் நான் ஆசைப் பட்டு கேட்ட விசயம் உங்க அம்மாவுக்கு பிடிக்க வில்லை போல. ஹாஸ்பிடலில் கூட அத்தையும், பூர்வியும் என் கிட்ட ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என்று வராத கண்ணீரை வர வைத்தாள் சாம்பவி.
“சாம்பவி இப்போ ஏன் அழற” என்ற ராகவ்வை அணைத்துக் கொண்டாள் சாம்பவி. “என்னுடைய ஆசையை உங்க கிட்ட மட்டும் தானே ராகவ் சொல்ல முடியும். என் அப்பாவுக்கு பல்லவி மட்டும் தான் பொண்ணு. அவளுக்கு கிடைக்கிற அன்பு எனக்கு கிடைத்ததே இல்லை” என்று மேலும் மேலும் சாம்பவி நடிக்க ஆரம்பித்தாள்.
“அழாதே சாம்பவி ப்ளீஸ்” என்று அவளது கண்களைத் துடைத்து விட்டவன், “நீ அழுதால் என்னால்
தாங்கிக்க முடியாது ப்ளீஸ் அழாதே” என்று அவளை சமாதானம் படுத்தினான்.
(…அடியே…)