அத்தியாயம் 8
“இதோ உனக்கு பிடிச்ச பிரியாணி சாம்பவி” என்று ராகவ் கூறிட அவனைப் பார்த்து புன்னகைத்த சாம்பவி சாப்பிட ஆரம்பித்தாள்.
“சும்மா சும்மா அழாதே சாம்பவி நம்ம கல்யாணம் கண்டிப்பா நடக்கும் உன் ஆசைப்படி. அம்மாவை நான் சமாளிச்சுக்கிறேன்” என்ற ராகவ்வை பார்த்து புன்னகைத்தவள், “நான் ரொம்ப லக்கி ராகவ்” என்றாள். அவன் புன்னகைத்து விட்டு தானும் சாப்பிட ஆரம்பித்தான் தனக்கு பிடிக்காத பிரியாணியை அவளுக்காக.
“என்ன பவிமா நேற்று சாயங்காலம் தான் ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு வந்த இப்போ உடனே வேலைக்கு போகனுமா?” என்றார் வாசுதேவன்.
“போகத் தான் வேணும் அப்பா அபி பாவம் தனியா எப்படி வேலை பார்ப்பாள்” என்ற பல்லவி கிளம்பி வேலைக்கு சென்று விட்டாள்.
“என்னாச்சு பல்லவி உனக்கு வலிப்பு வரும் அளவிற்கு என்ன பிரச்சினை” என்று வருத்தப்பட்டாள் அபிநயா.
“என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை பல்லவி அதனால் தான் உன்னை வந்து பார்க்க முடியவில்லை. லீவு சொல்ல ஃபோன் பண்ணினப்ப தான் அப்பா சொன்னாங்க” என்ற அபிநயாவிடம், “அட விடு அபி நான் தான் நல்லா இருக்கேன்ல” என்ற பல்லவி தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
“ஹாய் பவி” என்ற குரலில் அதிர்ந்து போனாள் பல்லவி. “நீ இங்கே என்ன பண்ணுற” என்றாள் பல்லவி தன் எதிரில் அமர்ந்திருந்த திலீப் வர்மனை பார்த்து.
“கெஸ்ட் வந்தால் காஃபி, டீ, கூல் டிரிங்க்ஸ் வாங்கி கொடுக்கனும் அதை விட்டுவிட்டு இங்கே என்ன பண்ணுற ஏன் வந்தன்னா கேட்ப” என்றான் திலீப் கூலாக.
அவனை முறைத்தவள் ஏதோ சொல்ல வர, “யாரு பல்லவி இவரு” என்றாள் அபிநயா. “ஹாய் சிஸ்டர் நான் திலீப் வர்மன். எல்லோரும் திலீப்னு கூப்பிடுவாங்க பல்லவியை தூக்கிட்டு போயி ஹாஸ்பிடலில் சேர்த்ததா அங்கிள் சொல்லி இருப்பாரே அது வேற யாரும் இல்லை அடியேன் தான்” என்று சிரித்தான் திலீப்.
“ஆமாடா என்னை தூக்கி உன் இரண்டு கையையும் பறி கொடுத்துட்ட போதுமா இதை ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சு சொல்லனுமா” என்றாள் பல்லவி கோபமாக.
“ஊரெல்லாம் நான் எங்கே டீ தம்பட்டம் அடிச்சேன். சிஸ்டர் உன் ஃப்ரெண்ட் ஆச்சே அதான் சொன்னேன்” என்றவன், “தப்பா சிஸ்டர்” என்று அபிநயாவிடம் கேட்டிட, “எனக்கு வேலை இருக்கு ப்ரதர்” என்று கூறி விட்டு அவள் சென்று விட்டாள்.
“என்ன வேணும் திலீப் ஏன் வேலை நேரத்தில் தொந்தரவு பண்ணுற” என்று பல்லவி கேட்டிட, “நான் என்ன டீ தொந்தரவு பண்ணுறேன் நீ வேலையை பாரு நான் உன்னை பார்த்துட்டு இருக்கேன்” என்றான் அழகாக புன்னகைத்து.
“நீ இப்படி என்னையவே பார்த்துட்டு உட்கார்ந்து இருந்தால் எப்படி என்னால வேலை பார்க்க முடியும்” என்ற பல்லவியிடம், “நீ ஏன் என்னை பார்க்கிற நீ வேலையை பாரு” என்றான் திலீப்.
அவனை முறைத்தவள் வாயை மூடிக் கொண்டு வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
அவனோ புன்னகைத்து விட்டு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
“என்னாச்சு ராகவ் முகம் எல்லாம் பொரிஞ்சுருக்கு” என்ற ரஞ்சித்திடம் , “பிரியாணி சாப்பிட்டேன் அதுவும் இறால் பிரியாணி அது ஒத்துக்கலை அலர்ஜி மாதிரி இருக்கு” என்றான் ராகவ்.
“டேய் உனக்கு தான் ஷீ ஃபுட் ஒத்துக்காதுல அப்பறம் ஏன் சாப்பிட்ட” என்றான் ரஞ்சித்.
“சாம்பவி தான் கட்டாயப் படுத்தினாள்” என்ற ராகவ்வை முறைத்தான் ரஞ்சித். “அவள் நிஜமாகவே உன்னை லவ் பண்ணுறாளா உனக்கு ஷீ ஃபுட் ஒத்துக்காதுனு அவளுக்கும் தெரியும் தானே தெரிஞ்சும் ஏன் அவள் உன்னை சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கிறாள்” என்று கேட்டான் ரஞ்சித்.
“அவள் சாப்பிடுற எல்லாம் நானும் சாப்பிடனும்னு ஆசைப் பட்டு இருக்கிறாள்டா விடு” என்று ராகவ் கூறிட அவனை முறைத்த ரஞ்சித் , “வா ஹாஸ்பிடல் போகலாம்” என்று தோழனை இழுத்துச் சென்றான்.
“என்ன பண்ணி வச்சுருக்கிற சாம்பவி” என்ற வைதேகியிடம், “என்னம்மா பண்ணினேன்” என்றாள் சாம்பவி.
“ராகவ்வை இறால் பிரியாணி சாப்பிட கட்டாயப் படுத்துனியா?” என்றார் வைதேகி. “ஆமாம் அதனால் என்ன?” என்றாள் சாம்பவி.
“நாசமா போச்சு ஏன் டீ அந்த புவனேஸ்வரிக்கு ஏற்கனவே உன்னை சுத்தமா பிடிக்காது இந்த லட்சணத்தில் நீ ராகவ்வை ஷீ ஃபுட் சாப்பிட கட்டாயப் படுத்தி அவனும் சாப்பிட்டு இப்போ உடம்பு சரியில்லாமல் ஹாஸ்பிடலில் இருக்கிறான்” என்று தலையில் அடித்துக் கொண்டார் வைதேகி.
“அவங்க பையன் சீக்காளியா இருந்தால் அதற்கு நான் என்ன பண்ண முடியும். ஒரு இறால் பிரியாணி கூட ஒத்துக்கலைன்னா என்ன பிள்ளை பெத்து வளர்த்து இருக்காங்க ச்சே அப்போ நாளைக்கு கல்யாணம் முடிஞ்ச பிறகு நான் வெஜிடேரியனா மாறனுமா என்ன?” என்று பற்களைக் கடித்தாள் சாம்பவி.
“சாம்பவி என்ன பேசுற நீ ராகவ் நீ கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளை அவனுக்கு உடம்பு சரியில்லை முதலில் ஹாஸ்பிடல் கிளம்பு” என்ற வைதேகி மகளை அழைத்துக் கொண்டு செல்ல, அவருடன் வேண்டா வெறுப்பாக சென்றாள் சாம்பவி.
“ராகவ் என்னாச்சு உங்களுக்கு” என்று நடிக்க ஆரம்பித்தாள் சாம்பவி. “ஒன்றும் இல்லை சாம்பவி ஷீ ஃபுட் சாப்பிட்டேன்ல அதான் அலர்ஜி மாதிரி ஒன்னும் பிரச்சினை இல்லை” என்ற ராகவ், “நீ ஏன் ஹாஸ்பிடல் எல்லாம் வந்த இன்னும் பத்து நிமிஷத்தில் நானே வீட்டிற்கு போயிடுவேன்” என்று கூறினான் ராகவ்.
“எப்படி ராகவ் என்னால தான் உங்களுக்கு இப்படி” என்று அவள் அழுது நடித்திட அதை பார்த்த ரஞ்சித், பூர்வி இருவருக்கும் தான் எரிச்சலாக வந்தது.
“என்ன ரஞ்சித் அண்ணா இப்படி நடிக்கிறாள்” என்ற பூர்வியிடம், “அது நடிப்புனு உனக்கும், எனக்கும் புரிஞ்சு என்ன ஆகப் போகுது பூர்வி உன் கூடப் பிறந்த முட்டாளுக்கு புரியனுமே” என்றான் ரஞ்சித்.
“அது இந்த ஜென்மத்தில் நடக்காது” என்ற பூர்வி, “உன் கிட்ட ஒரு விஷயம் கேட்கனும் அண்ணா” என்றாள்.
“என்ன விஷயம் பூர்வி” என்ற ரஞ்சித்திடம், “திலீப் அண்ணா பல்லவியை லவ் பண்ணுறானா?” என்றாள் பூர்வி.
“அதை உன் திலீப் அண்ணா கிட்ட தான் நீ கேட்கனும்” என்று கூறிய ரஞ்சித்தை முறைத்தாள் பூர்வி. அவனோ சிரித்து விட்டு நண்பனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.
“என்ன வேணும் திலீப் உனக்கு” என்ற பல்லவியிடம் , “ஒரு பத்து லட்சம் பணம் வேணும்” என்றான் திலீப் கூலாக.
அவனை முறைத்தவள் ஏதோ சொல்ல வர, “பத்து லட்சம் ரொம்ப கம்மியா பவி அப்போ ஒரு கோடி வேணும் கொடுத்துரு” என்றான்.
“தெருக்கோடியில் நின்று இரண்டு பேரும் பிச்சை எடுத்தாலும் ஒரு பைசா கூட வராது” என்றாள் பல்லவி பற்களைக் கடித்துக் கொண்டு.
அவளைப் பார்த்து உதடு மடக்கி சிரித்தவன், “கோபம் படும் போது ரொம்ப அழகா இருக்கடீ என் பெங்களூர் தக்காளி” என்றான் திலீப் வர்மன்.
“அப்படி கூப்பிடாதே திலீப் எரிச்சலா இருக்கு” என்ற பல்லவியை பார்த்து புன்னகைத்த திலீப் , “அப்படித் தான் கூப்பிடுவேன் என்ன பண்ணுவ” என்றான் ஸ்டைலாக கண்களில் கூலிங் கிளாஸை மாட்டிய படி.
அவள் கோபமாக ஏதோ சொல்ல வர அவனது மொபைல் ஃபோன் ஒலித்தது. அதை அட்டன் செய்து பேசியவன், “சரி இப்போவே வரேன்” என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்தான்.
“உன் தங்கச்சி பலே ஆளு போல பவி நேற்று முன்தினம் உன்னை ஹாஸ்பிடலில் படுக்க வைத்தாள். இன்னைக்கு ராகவ்” என்றான் திலீப்.
“என்ன சொல்லுற திலீப்” என்ற பல்லவியிடம், “ராகவ்விற்கு உடம்பு சரியில்லை” என்று கூறினான் திலீப் வர்மன்.
“ஓ ஓகே” என்ற பல்லவி தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள். “சரி பவி நான் ஈவ்னிங் வரேன் நீ வேலையை பாரு” என்று சொல்லி விட்டு அவன் சென்று விட்டான்.
“என்ன நடக்குது இங்கே” என்ற அபிநயாவிடம், “என்ன” என்றாள் பல்லவி.
“யாரு டீ அவன் பவி பவின்னு உரிமையா கூப்பிடுறான். உன்னை வச்ச கண்ணு எடுக்காமல் பார்க்கிறான் இல்லை இல்லை ரசிக்கிறான். என்ன பல்லவி எனக்கு தெரியாமல் லவ்வா” என்ற அபிநயா, “இரு இரு உன்னோட காலேஜ் டேய்ஸ்ல ஒரு லவ் இருந்துச்சுனு சொன்னியே ஒருவேளை அவன் தான் இந்த திலீப் வர்மனா?” என்றாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை போயி வேலையை பார்க்கிறீங்களா மேடம் இன்னும் இரண்டு நாளில் ஆர்டர் எல்லாம் டெலிவரி பண்ணனும்” என்று கூறி தோழியை பத்தி விட்டாள் பல்லவி.
“ஆர்டர் டெலிவரி முடியட்டும் அப்பறம் வச்சுக்கிறேன் உன்னை. என் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறன்னு பார்க்கிறேன்” என்றாள் அபிநயா.
“என்னம்மா நீங்க ஏன் என் கிட்ட பேச மாட்டேங்கிறீங்க” என்ற ராகவ்வை முறைத்த புவனேஸ்வரி , “எதுக்குடா உன் கிட்ட பேசணும். பேசி மட்டும் என்ன ஆகப் போகுது சொல்லு என்றவர் அவளுக்கு தெரியும் தானே ராகவ் உனக்கு கடல் உணவு ஒத்துக்காதுனு , உன் பக்கத்தில் யாரும் சாப்பிட்டால் கூட உனக்கு அலர்ஜி வரும். உனக்காக உன் அப்பா மீன் சாப்பிடுவதையே இத்தனை வருசமா விட்டுட்டாரு. பூர்வி ஏன் நம்ம மாப்பிள்ளைக்கு மீன், இறால், நண்டு எவ்வளவு பிடிக்கும் அவரு கூட நம்ம வீட்டுக்கு வந்தால் உனக்காக அதை சாப்பிட மாட்டாரு ஆனால் அந்த சாம்பவி அவள் தின்னது மட்டும் இல்லாமல் உன்னையும் சாப்பிட வச்சு அவளை எல்லாம் வாசு அண்ணன் முகத்துக்காக தான் ஹாஸ்பிடலில் அவளை பார்த்தும் வாயை மூடிக்கொண்டு இருந்தேன்” என்று பொரிந்து தள்ளினார் புவனேஸ்வரி.
“அய்யோ அம்மா என்ன அப்பளம் மாதிரி பொரிஞ்சுட்டு இருக்கீங்க அப்பறம் அப்பா அப்பளம்னு நினைச்சு சாப்பிடும் போது உங்க கன்னத்தை கடிச்சுற போறாரு” என்று வந்தான் திலீப்.
அவனைக் கண்டு புவனேஸ்வரி சிரித்திட, “ஹான் இப்போ தான் அழகா காலண்டர்ல இருக்கிற மகாலட்சுமி மாதிரி இருக்கீங்க” என்று ஐஸ் வைத்தான் திலீப்.
“உன் நண்பனை நான் திட்டக் கூடாதுன்னு எனக்கு ஐஸ் வைக்கிறியாடா?” என்ற புவனேஸ்வரியிடம், “அப்படி பச்சையா சொல்லிற முடியாது அனாலும் அப்படித் தான்” என்று கூறினான் திலீப்.
அவனைப் பார்த்து சிரித்த புவனேஸ்வரி அவனது காதைத் திருகி “வாலு ,வாலு இவன் கூட பேசிட்டு இரு நான் ஜூஸ் எடுத்துட்டு வரேன்” என்று சென்று விட்டார்.
(…அடியே…)