அத்தியாயம் 12

4.9
(15)

சரியாக நண்பகல் வேளையில் கிருஷ்ணகிரியை அடைந்திருந்தாள் மேக விருஷ்டி மணம் முழுவதும் வெறுமை சூழல.

அந்தியூர் உங்களை அன்புடன் வரவேற்கின்றது என்ற மஞ்சள் வண்ண பலகை அவளை வரவேற்க…

காரை செலுத்தாது அவ்வூரினுள் நுழைய இருந்த ஒரே நேரத்தில் ஒரு வாகம் மட்டுமே முன்னும் பின்னும் செல்லும் அளவிற்கு இருந்த பாலத்தில் காரை அணைத்தபடி ஸ்டியரிங்கில் தலைசாய்த்து அமர்ந்தாள் வாடிய முகத்தோடு.

ஒருபுறம் விரும்பியவன் விரும்பிய வேலை என அணைத்தும் இழந்த எண்ணம் ஒருபக்கம் வதைக்க, விருப்பம் இல்லா வாழ்க்கை எண்ணி மனம் மறுபக்கம் பறிதவிக்க ஒரு நிலையில் இல்லாது அமர்ந்திருந்தாள்.

அந்நேரம் அவளை அழைத்த அலைபேசிக்கு உயிர் கொடுத்து சலிப்புடன் காதில் வைத்தவளிடம்,

“ஹிம் சொல்லுங்க மா…”

“மேகா நீ எங்க இருக்க? ரீச் ஆகிட்டியா எப்படி?” கேட்டார் மைதிலி தீவிரமாக எதிர் முனையில் இருந்து.

பெருமூச்சு எடுத்து விட்டவள் “நான் இன்னும் ரீச் ஆகலமா. நான் இன்னும் ரீச் ஆக ரெண்டு மணி நேரம் ஆகும். செம டிராபிக் நான் ரீச் ஆயிட்டு கண்டிப்பா உங்களுக்கு கால் பண்றேன் ப்ளீஸ்” என மேலும் அவர் பேச்சை ஏற்காது அழைப்பை துண்டித்திருந்தாள் மேக விருஷ்டி.

மீண்டும் அவள் ஸ்டியரிங்கில் தலை சாய மீண்டும் அழைத்தது அவள் அலைபேசி அவளை.

இம்முறை பல்லைக் கடித்து பார்த்தவள் கண்கள் சற்று துளிர்விட உடனே அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.

“என்ன சிசி போய் சேர்ந்துட்டியா அங்க?” நிவர்த்தனன் வினவ…

மைதிலி படுத்திய பாட்டில் “ஆமாண்டா போய் சேர்ற நிலைமைல தான் இருக்கேன் சீக்கிரமா பால் ஊத்தவா” என்றாள் சினம் எழும்ப.

விளையாட்டான அவள் பேச்சில் அதிர்ந்தவன் “அக்கா… என்ன வார்த்தை பேசுற நீ” எனப் பல்லை கடித்தான் நிவர்த்தனன் எதிர்முனையில்.

தமையன் அவன் குரல் அதிர்வில் தான் தான் பேசிய வார்த்தையின் கடுமையை உணர்ந்தவள் தலையை அடித்து “சாரி டா… சாரி டா… வெரி சாரி டா…” என்றவள் மன்னிப்பு யாசிக்க

“ஏன் அக்கா இப்படி பேசுற, அந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லி தொலைனாலும் சொல்லி தொலைய மாட்டேங்குற. இப்பிடி உன்னையும் வறுத்திகிட்டு எங்களையும் வருத்திகிட்டு ஏன்கா?” என்றான் விட்டேரியாக.

“சரி சரி அதெல்லாம் பிரீயா விடு. நம்ம வேற பேசலாம்” என்று அவன் பேச்சை திசை திருப்ப, “அதான பார்த்தேன் கல்யாணத்த பத்தி பேசும் போதெல்லாம் என்ன மட்டும் தான் திசை திருப்புற உன்ன எல்லாம் வச்சுக்கிட்டு…” தலையில் அடித்துக் கொண்டவன்,

“சரி போய் அங்க ரீச் ஆயிட்டியா இல்லையா? அம்மா உனக்கு கால் பண்ணாங்களா?”

“இன்னுமா பண்ணாம இருப்பாங்க, கிளம்புன நேரத்துல இருந்து குறைஞ்சது 50 போன் கால் வந்திருச்சுடா. முடியலடா எங்கயாவது ஓடி போயிரலாம் போல இருக்குது”

“இப்பவும் ஒன்னு கெட்டுப் போல அக்கா உன் கையிலேயே பாஸ்போர்ட் இருக்கு தான. காரை திருப்பி ஏர்போர்ட்டு போ உனக்கு நான் டிக்கெட் ரெடி பண்றேன். ஒன்னு ஆஸ்திரேலியாவா இல்ல உனக்கு பிடிச்ச வேற எங்க வேணாலும் போ. இல்ல அமெரிக்காவே போறியா போ. நான் இருக்கேன் அந்த இன்னு…” என்னும் போது

 பின்னோடு இருந்து பலமாக கேட்ட ஹாரன் சத்ததில் அதிர்ந்தவள் கையில் இருந்த போனை நழுவ விட்டிருந்தாள் பட்டென்று.

திடுக்கிட்டவள் யார் என்று உள்ளிருந்து ஜன்னல் வழி பார்க்க, ஐவிரல் பதித்து கார் கண்ணாடியை தட்டும் சத்தம் அவள் செவிமடல் அடைந்தது.

“யாருடா அவன்…?” என்று கார் கண்ணாடிய அவள் இறக்க, அங்கு நின்று கொண்டிருந்தது வேறு யாருமல்ல சாட்சாத் நம் இன்னுழவன் தான்.

அவன் செயலில் திடீரென்று திடுக்கிட்டிருந்தவள்  அவனை முறைக்க, கொளுத்தும் வெயிலில் நெற்றி சுருங்க அவளுக்கு மேல் அவளை முறைத்தவனோ,

“ஏய் இந்தா புள்ள யாருமா நீ. நடுரோட்டில வண்டி விட்டுட்டு தூங்கிட்டு இருக்கிறவ. என் வீட்ல நைட்டு ஃபுல்லா தூங்கலையோ? ஓரமா வண்டிய விட்டுட்டு தூங்கு மா. இல்ல வீட்டுக்கு போய் தூங்கு. இப்படி வண்டிய நெடுவாள நடு ரோட்ல விட்டு நின்னனா மத்தவங்க போக வர வேண்டாமா” என்றான் ஏகத்துக்கு சினம் கொண்டவனாய்.

அவளோ கோவத்தில், “யூ பிளாடி ரஸ்க்கள், ஸ்டுபிட், நோன்சன்ஸ், கவுண்டர்” என்று ஆங்கில வார்த்தைகளால் அவனை அவள் அர்ச்சிக்க…

கையில இருந்து தவறி எதிர்ப்புறம் இருந்த சீட்டில் விழுந்த அலைபேசியில் திடீரென்று ஏற்பட்ட சத்தத்தில் நிவர்த்தனனோ “ஹலோ… ஹலோ சிசி…” என்று விடாது குரல் கொடுத்தான்.

 பைக்கில் அமர்ந்தப்படி அவளின் ஆங்கில பேச்சிலும் அலைபேசியில் கேட்டுக் கொண்டிருந்த நிவர்த்தனன் குரலையும் கேட்டவன், “ஓ வெளியூர் பிள்ளையா நீ. எதுவோ இருந்துட்டு போ… அந்த பக்கம் ஓரஞ்சாரமா போய் கடலை போடுமா.

இனி உன் வண்டி ஊருக்குள்ள நடுரோட்டில் நிக்கிறத பார்த்தேன் நாலு டயரையும் பஞ்சராக்கி போடுவேன் பார்த்துக்கோ. அப்புறம் தள்ளிட்டு தான் போகணும். வீட்டுல மரியாதையா பேச சொல்லி கொடுக்கலையா உனக்கு? முதல்ல வண்டிய எடு” என்று மீண்டும் அவன் கார் கதவில் அடித்தான் பளார் பளாரென்று.

ஏனென்றால் காருக்கு பின்பு மாட்டு வண்டியில் காய்கறிகளை வைத்துக்கொண்டு வயதான முதியவர் ஒருவர் வெயில் பொழுதில் தலையில் துண்டை போட்டு அமர்ந்திருந்தார்.

டவுனில் வேலையை முடித்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தவனுக்கு இந்த காட்சி புலப்பட்டது. அதிலும் எசியில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் மேக விருஷ்டி பார்த்தவனுக்கு கோவம் கொந்தளித்து.

அவன் பேச்சில் மட்டு பட்டிருந்த சினம் மீண்டும் கிளர்த்தெழ மேலும் எரிச்சல் கண்டவள் வேகமாக காரை ஓரமாக செலுத்தி நிறுத்தி கதவை திறந்த படார் என்று அறைந்து இறங்கினாள்.

இன்னுழவனும் பைக்கை ஓரமாக நிறுத்தியவன் இறங்காது திரும்பி, “நீங்க போங்கய்யா முதல்ல. அவங்க நின்னா போக சொல்லாம வெயிலேயே அவங்க போகும் வர கத்துக்கிட்டு நிற்பிரா நீரு… சத்தம் கொடுக்க வேண்டாமா…” என அவரை கடிந்து கொண்டு முதலில் அப்பெரியவரை அனுப்பி வைத்தான்.

இதையெல்லாம் அதன் பின்பு தான் கவனித்திருந்தாள் மேக விருஷ்டி.

தான் செய்த தவறின் விளைவை எண்ணி வருந்தியவள் “சாரி” என அவரிடம் மன்னிப்பு கூற வருவதற்குள் அம்முதியவர் முன்னே செல்ல… அவருக்கு ஓரம் வாங்கி பைக்கில் பறந்திருந்தான் இன்னுழவன்.

வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையில் மிடுக்காக புல்லட்டில் சென்று கொண்டிருக்கும் அவன் பின்புறத்தை தான் பார்த்து நின்றாள் மேக விருஷ்டி.

இங்கோ அலைபேசியில் விடாத அழைத்துக் கொண்டே இருந்தான் நிவர்த்தனன்.

“அச்சோ பாவம் அந்த தாத்தா, எவ்வளவு நேரம் நின்னாரோ இந்த வெயில்ல. எல்லாம் இந்த அம்மா பண்றதால” என மைதிலியை வறுத்தெடுத்து தன் மனம் வருந்தியவள் மீண்டும் காரில் ஏறி அலைபேசியை காதில் வைத்தாள்.

“என்னாச்சு அக்கா எதுவும் ப்ராப்ளம் இல்லையே? யாருக்காக அவன் குறுக்கே ஏதோ ஒரு வாய்ஸ் கேட்டுச்சு” என நிவர்த்தனன் கேட்க, நடந்துவற்றை கூறினாள் மேக விருஷ்டி.

“தப்பு உன் மேல தான் சிசி. ஓகே அந்த தாத்தாகிட்ட சாரி கேட்டியா?”

“எங்க அந்த  தாத்தாவும் போயிட்டாரு. அவருக்காக என்ன திட்டுன அந்த வில்லேஜ் ஜென்ட்டில் மேனும் பைக்குல பறந்துட்டாரு.” என்றாள் மேக விருஷ்டி உதட்டை பிதுக்கி.

 

“சரி அங்க தான ரெண்டு நாள் ஸ்டே. அப்போ பார்த்தா தேங்க்ஸ் அண்ட் சாரி சொல்லிக்கலாம் சிசி. அதெல்லாம் விடு அம்மா கிட்ட என்ன சொல்லி வச்சிருக்க?”

“நான் இன்னும் இங்க வரவே இல்ல, ரெண்டு மணி நேரம் ஆகும்னு சொல்லி இருக்கேன் டா…”

“திரும்பவும் சொல்றேன் கார் திருப்பு… ஏர்போர்ட்டுக்கு போ…” என்றவன் பேச்சை தொடர காரை செலுத்தியபடி அந்தியூர் எல்லையை கடந்து ஊருக்குள் வந்திருந்தாள் மேக விருஷ்டி.

“நீ சீக்கிரம் கிளம்பி வா டா… நான் இங்க வந்துட்டேன், நீ இல்லாம எனக்கு போர் அடிக்கும்” அவள் சாட

“ஏன் அந்த ஷாம்பு பாட்டில் கிட்ட பேச வேண்டியது தானே” நக்கல் பேசினான்.

“டேய் அவன்… சாரி சாரி அவரு நம்பர் கூட என்கிட்ட இல்லடா…”

“அந்த ஷாம்பு பாட்டிலுக்கு மரியாதை ஒன்னு தான் குறைச்சலுலு… அவரு… மண்டையிலயே போட்டுருவேன் சிசி உன்ன” என்றவன்,

“நீ தான் சிசி பேசணும் நீ தான் அவனுக்கு கழுத்தை நீட்ட போற.

ஏன் சிசி வழக்கமான நம்ம பண்பாட்ட மாத்தி வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் இல்ல” என சகோதரியின் மனக்கவலையை போக்க பேச்சை தொடர்ந்தான் நிவர்த்தனன்.

 “எப்படி மாத்தி வெச்சிருக்கணும் நீ சொல்ற?” புரியாதவள் கேட்க,

“இல்லை சிசி மாப்புள தாலி கட்டடுறதுக்கு பதில் பொண்ணு தான் தாலி கட்டணும்னு ரூல்ஸ் இருந்தா தாலி கட்டுற டைம் அத வச்சே அவன் கழுத்தை நெருச்சிடலாம்ல சிசி. அட்லீஸ்ட் அந்த மாதிரி பண்றேன்னு பிளாக் மெயில் ஆவது பண்ணலாம். அப்படியே தான் அந்த ஷாம்பு பாட்டில் ஓடிப் போகலாம்” என்றானவன்.

அதை கேட்டு நகைத்தவள், “இப்போ நீ என்ன அந்த ஷாம்பு பாட்டில கொல்ல சொல்றியா டா…?”

“ஆமா நீ செஞ்சு தள்ளிவிட்டு தான் மறு வேலை பார்ப்ப. அட போ சிசி. நம்ம பிள்ளை பூச்சி மைதிலியையே நீ எதிர்த்து பேச மாட்டேங்க, இதுல ஷாம்பு கழுத்துல நீ கழுத்து நெறிகிறாயாக்கும்” என்றவன் வாதாடிக் கொண்டிருக்க… ஜன்னல் வழியாக தென்றல் அவள் முகமதை தழுவி சென்றது.

அதில் அகம் மலர்ந்தவள் “சரி டா சீக்கிரமா வா, நானும் ஊருக்குள்ள வந்துட்டேன் வைக்கிறேன். வீட்டுக்கு போய் கால் பண்றேன் பார்த்து வா” என அழைப்பை துண்டிக்கவும் காரை நிறுத்தியிருந்தாள், இம்முறை காரை ஓரமாக நிறுத்தியிருந்தாள்.

மனம் வெறுமையாகவும் வெறுப்பாகவும் அவவூருக்கு வந்திருந்தாலும் அவ்வூரின் குளிர்க்காற்றும் அமைதியான சூழலும் மனமுவந்து உள்ளுக்குள் இழுத்து சென்றது என்னவோ அவள் அறியா நிதர்சனம்.

காரைவிட்டு இறங்கியவள் கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும் சுற்றியும் பச்சை வண்ண மகள் நெற்ச்சோலையாய் அசைந்தாடி, தென்றலோடு உறவாடிக் கொண்டிருக்கும் அழகான காட்சியை கண்டவள் மனம் முழுவதும் ரணமும் வெறுமையும் விலகியோட இதம் கண்டது.

“இப்படி ஒரு ஊர்ல வாழனும் தானே நான் ஆசைப்பட்டேன். ஆனா, எனக்கு மட்டும் அது கை சேரா கானல் நீரா போயிடுச்சே…” என குமறியவள் மனதில் நொடி நேரத்தில் வந்து வாசம் செய்யத்தான் செய்தான் இன்னுழவன்.

அவனுடன் தினமும் காற்றலையில் உரையாடும் பொழுது சுற்றி இருந்த இயற்கை எழில் கொஞ்சும் சூழல்களை அவன் வர்ணிக்காத நாளும் இல்லை! அதில் லயித்து அவள் கேட்காத நாளும் இல்லையே!

அதனாலயே அவள் இப்பிடி பட்ட ஊரில் வாழனும் என தனக்குள் ஆசையை வளர்த்தாள். அவள் தாயோ அதற்கு வேலியிட்டார்.

மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியபடி வரப்பில் அவள் நடந்து கொண்டிருந்தாள் இயற்கை சூழலை ரசித்தவாறு மேக விருஷ்டி.

இயற்கை வளத்தை இவள் ரசித்துக் கொண்டிருக்க, அலைபேசியில் தீவிரமாக பேசியபடி நின்று கொண்டிருந்தான் இன்னுழவன் அவளுக்கு முதுகு காட்டியவனாய் வரப்பின் ஓரத்தில் நின்ற தென்னை மரத்தின் அடியில்.

“அகரா எதுக்கும் மாப்பிள்ளை வீட்ல தங்கியிருக்க ஹோட்டலை சுற்றி ஆள போட்டு விடு. எங்கய்யா அங்கேயும் வேலை பார்க்க வழி இருக்கு. மாமா வீட்ட சுத்தியும் ஆள் போட்டு இருக்கேன், இருந்தாலும் ஒரு கவனம் இருக்கட்டும்.” என மாமானவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் தன் தந்தைவனால் விபரீதம் ஏற்பட்டு விடக்கூடாது என அரணாக அவன் திட்டங்களை கூறிக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் ஆளை அசைக்கும் அளவிற்கு காற்று மிகவும் பலமாக அடிக்க தூரத்தில் தென்னை மரத்திற்கு கீழ் நின்று கொண்டிருந்த இன்னுழவனை பார்த்திருந்தாள் மேகவிருஷ்டி.

அவளையும் ஒரு சேர தென்னை மரத்தின் மேல் எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் கொத்தாக ஆடிக் கொண்டிருந்த தென்னங்குலையையும் கண்டவள் அந்த நொடி அதிர்ந்து விட்டாள்.

இன்னுழவன் பின் முதுகையே பார்த்தவளுக்கு சற்று முன் தன்னை திட்டி விட்டுச் சென்றவன் தான் இவன் என அறியாது போனாள்.

அவளோ தூரத்திலிருந்து “ஹலோ… ஹலோ… சார் ஹலோ… இங்க பாருங்க…” எனக் கத்த காற்றடித்ததின் வேகத்தில் அவள் குரல் காற்றோடே கலந்து சென்றது.

அடிக்கும் காற்றில் தன் இமைகளை சுருங்க மூடியபடி போனில் கவனத்தோடு பேசிக் கொண்டிருந்தான் இன்னுழவன் இதை எதையும் கவனிக்காதவனாய்.

சுற்று மூச்சு பார்த்து மேக விருஷ்டி கண்களுக்கு சிறு தென்னங்காய் தென்பட அதை வேகமாக எடுத்து இன்னுழவன் பிடரி மண்டையிலேயே “யோவ் வளர்ந்தவரே…” என பெருங்குரலோடு எறிந்திருந்தாள்   நச்சென்று குறிப்பார்த்து.

தென்னங்காய் பட்ட வலியில் “ஸ்ஸ்ஸ் ஆ… எவண்டா அவன்?” என்றவனாய் இன்னுழவன் அவள் புறம் திரும்பி அதிர்ந்து நகர…

மேல இருந்து தென்னாங்கொலையும் அவிழ்த்து அவன் நின்ற இடம் தன்னில் விழவும் சரியாக இருந்தது.

செங்கோதை மணம் வீசும்…

டியர் ஃப்ரெண்ட்ஸ் story எப்பிடி இருக்குன்னு சொன்னா I’m very Happy 🙂🙂.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!